Aram Tv

Aram Tv அறம் அது அறிவு..... அதன் தெரிவு உண்மை....
உண்மைக்கு முதலிடம்

மலையகத்தின் பல பகுதிகளில் 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும் நாட்களில் மதுபான விற்பனை முன்னெப்போதும் இல்லாத ...
25/02/2026

மலையகத்தின் பல பகுதிகளில் 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும் நாட்களில் மதுபான விற்பனை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக மதுபானசாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய நாட்களை விடவும், அரசாங்கத்தினால் அஸ்வெசும கொடுப்பனவு வங்கிகளில் வைப்புச் செய்யப்படும் நாட்களில் இந்த நிலைமை காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலைமையானது நகரப்பகுதிகளில் மட்டுமன்றி, தொலைதூர கிராமப்புறங்களிலும் ஒரே மாதிரியாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அஸ்வெசும கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளும் பல பயனாளிகள், தமது குடும்பத் தேவைகள் அல்லது அத்தியாவசியப் பொறுப்புகள் குறித்துக் கவலைப்படாமல், அத்தொகையை மதுபானத்திற்காகச் செலவிடுவதாக மதுபானசாலை உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

"அஸ்வெசும பயனாளிகள் எமது வாடிக்கையாளர்கள். அவர்கள் அந்தப் பணத்தை எங்கிருந்து கொண்டு வருகிறார்கள் என்பது எமது வியாபாரத்தைப் பொறுத்தவரை முக்கியமல்ல என்பதால், இது குறித்து எம்மால் முறைப்பாடு செய்ய முடியாது" என உரிமையாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் வழங்கும் நிதி, முறையற்ற விதத்தில் செலவிடப்படுவது குறித்துச் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

25.02.2026 புதன்

   #பொது_அறிவு
25/02/2026


#பொது_அறிவு

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாக, வீதியோரங்களில் உள்ள சிறிய கடைகளிலும் இனி QR குறியீடு (QR Cod...
25/02/2026

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாக, வீதியோரங்களில் உள்ள சிறிய கடைகளிலும் இனி QR குறியீடு (QR Code) மூலம் பணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இந்த ஆண்டிற்குள் நாடு முழுவதும் இந்த டிஜிட்டல் கட்டண முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி இந்தச் சேவையை வழங்குவதற்கு வங்கிகள் உடன்பாடு தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் சாதாரண சில்லறை விற்பனை நிலையங்கள் முதல் வீதியோரக் கடைகள் வரை வாடிக்கையாளர்கள் தங்களது கைபேசி ஊடாக மிக எளிதாக பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். இலங்கையின் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் இலக்கின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. பணப் புழக்கத்தைக் குறைத்து, பாதுகாப்பான மற்றும் நவீன தொழில்நுட்ப முறையிலான கொடுக்கல் வாங்கல்களை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

25.02.2026 புதன்

இந்நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்த...
24/02/2026

இந்நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸாநாயக அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

கியூபா குடியரசின் புதிய தூதுவராக Patricia Lázara Pego Guerra, கத்தார் நாட்டின் புதிய தூதுவராக Hamad Mohammed Abdullah Al – Sanad Al – Dosari, ஸ்லோவேனியா குடியரசின் தூதுவராக Tomaž Mencin ஆகியோர் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்ததுடன், அவர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார்கள்.

24.02.2026 செவ்வாய்

Address

Kalmunai
32280

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aram Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share