02/06/2026
நாட்டில் மெனிஞ்ஜைட்டிஸ் நோய் தொற்று தொடர்பாக சந்தேகிக்கப்படும் 237 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 33,572 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, கொசு பெருக்கம் ஏற்படும் இடங்களை அகற்றுதல், சுற்றுப்புறச் சுகாதாரத்தை பேணுதல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுதல் ஆகியவற்றின் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.