newsinlanka.com

newsinlanka.com WhatsaApp 0710770539 website
https://newsinlanka.com

மாத்தளை வீர கெப்பெட்டிபொல மண்டபத்தில் இன்று (12) முற்பகல் நடைபெற்ற மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தி...
12/05/2026

மாத்தளை வீர கெப்பெட்டிபொல மண்டபத்தில் இன்று (12) முற்பகல் நடைபெற்ற மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

'டித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல், வீடுகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டதுடன், மாத்தளை நகர அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட 2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்

'டித்வா' பாதிப்புகளுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள 500 பில்லியன் ரூபாய் நிதியை, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் அப்பிரதேசங்களையும் மேம்படுத்துவதற்காகப் பயனுள்ள முறையிலும் வினைத்திறனாகவும் பயன்படுத்துவது அரசியல் அதிகாரத்தினதும் அரச அதிகாரிகளினதும் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டியதுடன், அந்த அனைத்துத் திட்டங்களையும் இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறுஜனாதிபதி வழியுறுத்தினார்.

அதேபோல், நீண்டகாலப் பிரச்சினையாகக் காணப்படும் கலேவெல - மாத்தளை வீதி நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்துமாறும், சூறாவளியினால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை வழங்கினேன். அத்துடன், உற்பத்திப் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு மாவட்டத்தின் கிராமிய விவசாயத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்த ஜனாதிபதி

நாடென்ற வகையில் முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால் அனைவரும் சட்டத்தின் முன் சமமாக இருக்க வேண்டும் என்பதையும், அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும் என்பதோடு சட்டத்திற்கு அஞ்ச வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டினேன். இது அரச அதிகாரிகள் தமது எல்லைக்குள் நின்று கடமைகளை ஆற்றுவதற்கு எவ்விதத்திலும் தடையாக அமையாது என்றும், தேவைக்கேற்ப சட்டங்களைத் திருத்த முடியும் என்றும் குறிப்பிட்டேன். நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்பிற்குள் இருந்து மக்களுக்கு உச்ச அளவில் சேவையாற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

12/05/2026

#இலங்கை முன்னாள் #அதிபர் #மஹிந்தராஜபக்ஷ விமான கொள்வனவில் இடம்பெற்ற #ஊழல் #மோசடி தொடர்பான #விசாரணையில் இரண்டு மணி நேர அறிக்கை அளித்த பின்னர் புறப்பட்டுச் #சென்றபோது அவருக்கு #ஆதரவாக வெளியூர்களிலிருந்து வந்து கொழும்பில் கூடிய மக்கள்!

12/05/2026

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும் விசேட அதிரடி நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

​வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை 206A ஸம் ஸம் வீதியில், பல வீடுகளின் நுழைவாயில் கதவுகளுடன் (Gate) சேர்த்து, வீதி வரை நீட்டித்து அனுமதியின்றி படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் அவ்வீதியால் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன நெரிசல்கள் ஏற்பட்டு பெரும் அசெளகரியங்கள் நிலவி வந்தன.

​இது குறித்துக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து, கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் அவர்களின் தலைமையில் நேரடியாக கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

வீதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள் அனைத்தும் தவிசாளரின் முன்னிலையில் உடனடியாக அகற்றப்பட்டதுடன்.

​சிதைவடைந்த வீதிப் பகுதிகளைச் செப்பனிடும் பணிகளும் தவிசாளரின் வழிகாட்டலில் உடனே ஆரம்பித்து வைக்கப்பட்டன.

​இந்த நடவடிக்கையின் போது கருத்துத் தெரிவித்த தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன்

​"பிரதேச சபையின் முறையான அனுமதி இன்றி வீதிகளை ஆக்கிரமித்து எவ்வித கட்டுமானங்களையும் முன்னெடுக்கக் கூடாது. இனிவரும் காலங்களில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் தங்களது எல்லைக்குள் நின்றவாறு ஏனையவர்களுக்கு, குறிப்பாக பாதசாரிகளுக்கு இடையூறு இல்லாமல் கட்டுமானங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்," என வேண்டுகோள் விடுத்தார்.

ந.குகதர்சன்

கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது கடற்பரப...
12/05/2026

கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது கடற்பரப்பில் தொடர்ந்து இடம்பெற்று வரும் கடல் வள கொள்ளை மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறிய கொள்ளை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் இன்று படகுகளுடன் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாய்ந்தமருது பிரதான கடற்கரை வீதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது, பல மீன்பிடி படகுகள் வீதிக்கு கொண்டு வரப்பட்டு போக்குவரத்து ஒரு காலப்பகுதிக்கு பாதிக்கப்பட்டது. “எமது கடல் வளங்களை பாதுகாக்க வேண்டும்”, “உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள்”, “சட்டவிரோத கடல் கொள்ளையை உடனடியாக நிறுத்துங்கள்” போன்ற கோசங்களை வெளியிட்டு மீனவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட மீனவர்கள் தெரிவிக்கையில், வெளிப்பகுதிகளில் இருந்து வரும் சிலர் சட்டவிரோதமான முறையில் மீன்களை சூறையாடுவதால், உள்ளூர் மீனவர்களின் நாளாந்த வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர். மேலும், பல முறை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நிரந்தர தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையீடு செய்து கடல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் மேலும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர். பொலிசார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
12/05/2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

  | 717 மதுபான கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு  |   |
12/05/2026

| 717 மதுபான கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு

| |

12/05/2026

"சலுகை வேண்டாம்,நிலவுரிமையே வேண்டும் எனும் கோஷத்துடன் "
மலையக தியாகி சிவனு லெட்சுமணன் நினைவு தின நிகழ்வு

ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஏற்பாட்டில் மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளி சிவனுலெச்சுமணனின் 49ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று டெவன் தோட்ட லெச்சமணன் நினைவிடத்திலும் அவரின் பிறப்பிடமான யோக்ஷ்போர்ட் தோட்டத்திலும் நடைபெற்றது

முதல் நிகழ்வாக சிவனு லெச்சுமணனின் உடலம் புதைக்கப்பட்ட இடத்தில் செவ்வஞ்சலி நிகழ்வும் நினைவுத்தூபி அமைப்பதற்கான அடிக்கலும் நாட்டப்பட்டது

அதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு ஈடகைச்சுடர் ஏற்றப்பட்டது பிரதான ஈகைச்சுடரை ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் மற்றும் லெச்சுமணனின் சகோதரி சிவனு ராஜகுமாரி இனைந்து ஏற்ற தொடர்ந்து மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் மு.சிவலிங்கம் கல்வியளாளர் சிவ.இராஜேந்திரன் சுயசக்தி நிறுவனத்தின் நிறுவனர் அழகர் செல்வராஜ் சிவனுலெச்சுமணன் நினைவுக்குழு இணைப்பாளர் ப.திருச்செல்வம் பிரதேசசபை உறுப்பினரும் "ஜனநாயகத்திற்கான மக்கள் குரல்" அமைப்பின் உறுப்பினருமான சுரேஸ்குமார் புரடெக் யூனியன் இணைப்பாளர் மைதிலி ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் கொட்டகலை கிளை தலைவர் கமல் டெவன் தோட்டத்தொழிலாளர் உட்பட பலரும் ஈகைச்சுடர் ஏற்றினர்.

"சலுகை வேண்டாம்,நிலவுரிமையே வேண்டும் எனும் கோஷத்துடன் " மலையக தியாகி சிவனு லெட்சுமணன் நினைவு தின நிகழ்வு ஈரோஸ் ஜனநாயக மு...
12/05/2026

"சலுகை வேண்டாம்,நிலவுரிமையே வேண்டும் எனும் கோஷத்துடன் "
மலையக தியாகி சிவனு லெட்சுமணன் நினைவு தின நிகழ்வு

ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஏற்பாட்டில் மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளி சிவனுலெச்சுமணனின் 49ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று டெவன் தோட்ட லெச்சமணன் நினைவிடத்திலும் அவரின் பிறப்பிடமான யோக்ஷ்போர்ட் தோட்டத்திலும் நடைபெற்றது

முதல் நிகழ்வாக சிவனு லெச்சுமணனின் உடலம் புதைக்கப்பட்ட இடத்தில் செவ்வஞ்சலி நிகழ்வும் நினைவுத்தூபி அமைப்பதற்கான அடிக்கலும் நாட்டப்பட்டது

அதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு ஈடகைச்சுடர் ஏற்றப்பட்டது பிரதான ஈகைச்சுடரை ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் மற்றும் லெச்சுமணனின் சகோதரி சிவனு ராஜகுமாரி இனைந்து ஏற்ற தொடர்ந்து மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் மு.சிவலிங்கம் கல்வியளாளர் சிவ.இராஜேந்திரன் சுயசக்தி நிறுவனத்தின் நிறுவனர் அழகர் செல்வராஜ் சிவனுலெச்சுமணன் நினைவுக்குழு இணைப்பாளர் ப.திருச்செல்வம் பிரதேசசபை உறுப்பினரும் "ஜனநாயகத்திற்கான மக்கள் குரல்" அமைப்பின் உறுப்பினருமான சுரேஸ்குமார் புரடெக் யூனியன் இணைப்பாளர் மைதிலி ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் கொட்டகலை கிளை தலைவர் கமல் டெவன் தோட்டத்தொழிலாளர் உட்பட பலரும் ஈகைச்சுடர் ஏற்றினர்

அதைத்தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வு மாலை 5.00 மணிக்கு யோக்ஷ்போர்ட் தோட்டத்தில் நடைபெற்றது

இந்நிகழ்வில் தோழர் இரா.ஜீவன் இராஜேந்திரன் பிரதான நினைவுரை நிகழ்த்த தொடர்ந்து "என்ன நினைத்தாய் லச்சுமணா" என்ற எழுச்சிபாடலை சிவ.இராஜேந்திரன் பாட அதைத்தொடர்ந்து அழகர் செல்வராஜ் பிரதேசசபை உறுப்பினர் கணேசன் இராஜேந்திரன் கே.சுரேஸ்குமார் தோட்ட இளைஞர் புவனேஸ் உட்பட பலரும் நினைவுரை நிகழ்த்தினார்கள்

சுரேஸ்

11/05/2026

அட்டன் லெதண்டி யூர் தேர்திருவிழாவின் போது..

11/05/2026

இன்று பண்டாரவளையில் பெய்த பலத்த மழையினால் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய்!
11/05/2026

அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய்!

Address

Kandy

Alerts

Be the first to know and let us send you an email when newsinlanka.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to newsinlanka.com:

Share