SL1st Tamil News

SL1st Tamil News உண்மைக்கு முதலிடம்
வாய்மையே வெல்லும்
ஒற்றுமையே எமது பலம்

10/05/2025
02/03/2025
22/12/2024

மலிவான விமான டிக்கெட்டுகளை வாங்க 7 குறிப்புகள்

1. செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பதிவு செய்யுங்கள்

செவ்வாய் மற்றும் புதன் ஆகியவை விமான டிக்கெட்டுகளை வாங்க சிறந்த நாட்கள் ஆகும். பெரும்பாலான விமான நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை மாலை 7:00 மணிக்கு தங்கள் முன்பதிவு அமைப்புகளை அமைக்கின்றன. ஏனென்றால், பெரும்பாலான பயணிகளுக்கு வார நாட்களில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய நேரம் கிடைக்கும் என்பது விமான நிறுவனங்களுக்குத் தெரியும். புள்ளிவிவரங்களின்படி, நம்மில் பெரும்பாலோர் வெள்ளி, சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே டிக்கெட் விலைகளை உலாவுகிறோம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

2. முன்பதிவு செய்யுங்கள், ஆனால் மிக விரைவாக இல்லை

அனுபவத்தின் அடிப்படையில், உங்கள் பயணத் தேதிக்கு குறைந்தது 21 நாட்களுக்கு முன்னதாக நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். பெரும்பாலான விமான நிறுவனங்கள் முடிந்தவரை அதிக டிக்கெட் விற்பனையை அடைய தங்கள் அமைப்புகளை அமைத்துள்ளன. எனவே, கணினி மிகவும் மலிவான டிக்கெட்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது. உதாரணமாக, அமைப்பில், கோலாலம்பூரில் இருந்து லண்டன் செல்லும் விமானங்களுக்கு, முதல் 20 பயணிகளுக்கு மட்டுமே குறைந்த விலை கிடைக்கும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த 200 பயணிகளுக்கு நடுத்தர விலை கிடைக்கும், மீதமுள்ளவை அதிக விலை கொண்டதாக இருக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், கோலாலம்பூரில் இருந்து லண்டனுக்குப் பறக்கும்போது அவர்கள் விரும்பும் மார்ஜின் அடிப்படையில் விமானச் சேவையின் அமைப்பு டிக்கெட் விலையை நிர்ணயிக்கும்.

3. பொருத்தமான பறக்கும் நாட்கள்

செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிக்கவும். பெரும்பாலான விமான நிறுவனங்கள் இந்த இரண்டு நாட்களையும் முன்பதிவு அமைப்புகளுக்கு 'குறைவான பிஸியான நாட்கள்' என அமைக்கின்றன. முன்பதிவு அமைப்பு மற்றும் விமான நிலையங்கள் மிகவும் பிஸியாக இருக்கும் போது வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுடன் ஒப்பிடும்போது இந்த இரண்டு நாட்களில் விமான நிலையங்களும் பொதுவாக குறைவாகவே இருக்கும்.

4. சர்வதேச விமானங்களுக்கான 'சிறந்த ஒப்பந்தத்தை' தேடுங்கள்

பெரும்பாலான விமான நிறுவனங்கள் சர்வதேச விமானங்களுக்கு 11 முதல் 12 வாரங்களுக்கு முன்னதாகவே 'சிறந்த ஒப்பந்தத்தை' வழங்கும். எனவே, இந்த காலக்கட்டத்தில் டிக்கெட் விலையை நீங்கள் தவறாமல் சரிபார்க்க வேண்டும்.

5. சிறிய விமான நிலையங்களில் தரையிறங்க தேர்வு செய்யவும்

அந்த இலக்குக்கான 'முக்கிய விமான நிலையம்' இல்லாத விமான நிலையத்தில் தரையிறங்கும் இந்த நுட்பத்தை நீங்கள் முயற்சி செய்யலாம். உதாரணமாக, நீங்கள் லண்டனுக்குச் செல்ல விரும்பினால், பலர் பொதுவாக ஹீத்ரோவில் தரையிறங்குவதைத் தேர்ந்தெடுப்பார்கள். அடுத்த முறை, ஹீத்ரோவில் தரையிறங்க வேண்டாம், ஆனால் மான்செஸ்டரில் உள்ள விமான நிலையம் போன்ற ஹீத்ரோவுக்கு அருகிலுள்ள 'சிறிய' விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சிக்கவும். பிறகு, மான்செஸ்டரிலிருந்து லண்டனுக்கு ரயிலில் செல்லலாம். இந்த முறையை முயற்சிக்கவும். இது மலிவானதாக இருக்க வேண்டும்!

6. 'குக்கீகளை' அழி

பலருக்கு இது தெரியாது. நீங்கள் 30 நாட்களுக்கு முன்பு விமானத்தின் இணையதளத்திற்குச் சென்றிருந்தால், உங்கள் லேப்டாப், ஸ்மார்ட்போன் மற்றும் பிசியில் உள்ள குக்கீகளை அழிக்கவும். ஏனென்றால், இந்த குக்கீகள் மூலம், விமானத்தின் முன்பதிவு அமைப்பு நீங்கள் அவர்களின் இணையதளத்தை மீண்டும் மீண்டும் பார்வையிட்டதாகக் கருதும். எனவே, இணையதளத்தை பலமுறை பார்வையிட்டாலும், முன்பதிவு முறை ஒரே விலையை நிர்ணயிக்கும். சில சமயம் விலை கூட அதிகரிக்கலாம்! எனவே, உங்கள் இணைய உலாவியில் குக்கீகளை அழிக்கும் பழக்கத்தை நடைமுறைப்படுத்துங்கள். அவற்றை எப்படி நீக்குவது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், திரு. கூகுளிடம் கேளுங்கள்!

7. விலைகளை ஒப்பிடுக

மற்ற இணையதளங்களில் நீங்கள் விரும்பும் டிக்கெட் விலைகளை கூகிள் செய்து ஒப்பிட்டுப் பார்க்க சோம்பேறியாக இருக்காதீர்கள். ஒரு இணையதளத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டாம். நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், ஏனெனில் சில சமயங்களில் அதே விமான நிறுவனத்திலிருந்து மலிவான டிக்கெட் விலைகளைக் காணலாம். பயணத்திற்கு அடிக்கடி பயன்படுத்தப் படும் சில தேடுபொறிகள் இங்கே:

1. Skyscanner
2. CheapFlight
3. Momondo
4. Kayak
5. Google Flight
6. Ita Software

ஏறாவூர் மண்ணில் மாபெரும் பொதுக்கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து ஏறாவூர் மண்ணில் மாபெரும் பொதுக்கூட்டம் கௌ...
12/08/2024

ஏறாவூர் மண்ணில் மாபெரும் பொதுக்கூட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து ஏறாவூர் மண்ணில் மாபெரும் பொதுக்கூட்டம் கௌரவ வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 23.08.2024 திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. அனைத்து ஆதரவாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

ஏற்பாட்டுக் குழு

"சுபிட்சமான வாழ்விற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் எமது ஒரே தெரிவு RW"

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இடம் பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற நியமனங்களில் ஓட்டமாவடி பிரதேச சபையில் மிக நீண்ட காலங்க...
17/07/2024

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இடம் பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற நியமனங்களில் ஓட்டமாவடி பிரதேச சபையில் மிக நீண்ட காலங்களாக நிரந்தர நியமனமற்று கடமையாற்றிய பல ஊழியர்கள் புறக்கணிப்பு.

பல ஆண்டு காலங்களாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் கடமையாற்றிய நிரந்தரமற்ற ஊழியர்களான 17 பேர்களுக்கு நியமனங்கள் வழங்காமல் இன்றைய தினம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்தது ஒரு சில வாரங்களுக்கு முன்னர் இவர்கள் திருகோணமலையில் இடம்பெற்ற நேர்முக பரிட்சையில் தோற்றி எவ்வித பிரச்சினைகளும் அற்று நேர்முக பரீட்சையை சிறப்பான முறையில் தோற்றி இருந்தார்கள். இருந்தபோதிலும் இவர்களை பிரதேசத்தில் காணப்படும் அரசியல் வாங்குரத்து நிலைமை காரணமாக பழிவாங்கப்பட்டு இவர்களின் நியமனங்கள் பிற் போடப்பட்டுள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதனால் மிக நீண்ட காலங்களாக வேறு எவ்வித தொழில்களிலும் ஈடுபடாமல் தற்போது வழங்கப்பட இருக்கும் நிரந்தர நியமனத்தினையே! இந்த 17 பேர் எதிர்பார்த்து இருந்தார்கள் இவர்களுக்கு இணைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் பரிசீலனை செய்து உடனடியாக இவர்களுக்கான நியமனங்களை வழங்க துரிதகதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊடக வெளியீடு – 27.11.2023சுற்றாடல் அமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் தனக்கு பயன்படுத்த வழங்கப்பட்டிருந்த சுமார் 20 கோட...
28/11/2023

ஊடக வெளியீடு – 27.11.2023

சுற்றாடல் அமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் தனக்கு பயன்படுத்த வழங்கப்பட்டிருந்த சுமார் 20 கோடி ரூபா பெறுமதியான 02 அதிசொகுசு வண்டிகளை அமைச்சுப்பதவியை இழந்ததை தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைத்து விட்டதாக முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

அமைச்சராக பதவி வகித்த போது தனக்கு பயன்படுத்தவென வழங்கப்ட்டிருந்த 02 அதி சொகுசு ஜீப் வண்டிகளை மீள் ஒப்படைக்காது தாம் பயன்படுத்துவதாக சிங்கள மொழி பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இவ்விரு ஜீப் வண்டிகளையும் ஜனாதிபதி செயலகத்திடம் தாம் கையளித்து இருப்பதாக உறுதிப்படுத்தினார். ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் (போக்குவரத்து) புத்திக ஜெயதிஸ்ஸ 2023.11.02ம் திகதி எழுத்து மூலம் தனக்கு அனுப்பியிருந்தார். (ஆவணம் இணைக்கப்பட்டுள்ளது.)

இது தொடர்பாக மேலதிக தகவல்களை ஜனாதிபதி செயலகத்தின் போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் அவர்களிடம் கேட்டறிய முடியும் என தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரின் ஊடகப்பிரிவு

08/09/2023
26/08/2023

2022 ஆண்டு ஹஜ் குழுவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட அமைச்சர் நஸீர் அஹமட் அவர்கள் தனது சொந்த நிதியிலேயே! ஹஜ்ஜுக்கு பயணித்துள்ளார்.

2022 ஆண்டு ஹஜ் பயணம் சம்பந்தமாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் அவர்கள் உரையாற்றிய காணொளி (2022.07.31)

பொய்களைப் பரப்புபவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்

 #சிரேஷ்ட பேராசிரியராக பதவியுயர்வு பெறுகிறார் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தவிசுப் பேராசிர...
26/08/2023

#சிரேஷ்ட பேராசிரியராக பதவியுயர்வு பெறுகிறார் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தவிசுப் பேராசிரியராக கடமையாற்றும் றமீஸ் அப்துல்லா அவர்கள் சிரேஷ்ட பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறையில் 1969 இல் பிறந்த இவர், தனது ஆரம்பக் கல்வியை சம்மாந்துறை அல் -மர்ஜான் வித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை சம்மாந்துறை மகாவித்தியாலயத்திலும் கற்றார். இளமைக்காலத்தில் இலக்கிய ஈடுபாடும், வாசிக்கும் ஆர்வமும் இவரிடம் இயற்கைப் பண்புகளாக இருந்தன.

இதற்கேற்றாற்போன்ற நண்பர்களும் இலக்கிய ஆசிரியர்களும் இவருக்குக் கிடைத்தார்கள். உயர்தரத்தில் ஒரு வருடம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்றதனால் இவர் அறிவியல் ஊட்டம் பெற்றதோடு, மன்சூர் ஏ. காதிர், பஸீல் காரியப்பர்; முதலிய ஆசிரியர்களின் நிழலில் இலக்கியத்தையும் கற்றுத் தேர்ந்தார். தனது பல்கலைக்கழகக் கல்வியை பேராதனையில் தொடர்ந்த றமீஸ் அப்துல்லா, 1995 இல் தமிழ் சிறப்பு இளங்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுகொண்டார். கற்கை முடிவில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் உதவி விரிவுரையாகக் கடமையாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

1995 இல் தென்கிழக்குப் பல்கலைக்கழத்தில் விரிவுரையாளராக கடமையேற்ற றமீஸ் அப்துல்லா, தனது முதுதத்துவமாணிப் பட்டத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களான சி. தில்லைநாதன், எம்.ஏ. நுஃமான் ஆகியோரின் வழிகாட்டலில் 2003 இல் பெற்றுக்கொண்டார். மேலும் பேராசிரியர் திஸ்ஸ காரியவசம், பேராசிரியர் சி. தில்லைநாதன் ஆகியோரின் கீழ் பொதுசனத் தொடர்பாடல் துறையில் கலாநிதிப் பட்டத்தை சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் 2010 இல் பெற்றதோடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறை தலைவர், இணைப்பாளர் போன்ற உயர் பதவிகளை வகித்து, பின் 2014 இல் பேராசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார்.

பாடசாலைக் காலத்தில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் நாட்டம் கொண்டிருந்தாலும் பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்திலேயே இவரது இலக்கிய அறிவு செழுமையுற்றது எனலாம். முதுபெரும் எழுத்தாளர் கே. கணேஷ் தமிழாக்கம் செய்த, சீன எழுத்தாளர் "லாவ் ஷ" வின் 'கூனற்பிறை' எனும் நாவலை திறனாய்வு செய்து இவர் ஆற்றிய உரை மிகுந்த பராட்டையும், இலக்கிய அடையாளத்தையும் இவருக்குப் பெற்றுத்தந்தது. பேராசிரியர் சி. தில்லைநாதனின் உறவால் கம்பர் மீது ஈடுபாடுகொண்ட இவர், சிறந்த தமிழ்த்துறை மாணவருக்கான ஆறுமுக நாவலர் விருதினையும் 1995 இல் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

றமீஸ் அப்துல்லாவின் ஆரம்பகாலக் கட்டுரைகள் 1990 களில் நேசன், தினகரன் முதலிய பத்திரிகைகளில் வெளிவந்தன. ஜே. பௌஸ்தீனை ஆசிரியராகக் கொண்டு கொழும்பிலிருந்து வெளிவந்த நேசன் பத்திரிகையில் 'கீழ்வானில்' என்ற மகுடத்தின் கீழ் ஈழத்து இலக்கிய உலகிற்கு வளம்சேர்த்த ஈழமேகம் பக்கீர்த்தம்பி, ஆ.மு. ஷரிபுத்தீன், அ.ஸ. அப்துஸ் ஸமது, மருதூர்க் கொத்தன், பஸீல் காரியப்பர் ஆகியோரின் பங்களிப்புக்கள் குறித்து இவர் எழுதிய தொடர் பலரது கவனத்தையும் ஈர்த்ததொன்றாகும். தினகரனில் வெளிவந்த பேராசிரியர்களான க. கைலாசபதி, எம்.எம். உவைஸ் குறித்து எழுதிய கட்டுரைகளும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், நாட்டாரியல் குறித்த கட்டுரைகளும் இவரது ஆளுமையின் வெளிப்பாடுகளாக அமைந்தன.

பேராசிரியர் கா. சிவத்தம்பி, வீ. ஆனந்தன் போன்றோரின் வழிகாட்டலில் நாட்டாரியல், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் மீதான இவரது ஆர்வம் பலதளங்களிலும் வெளிப்பட்டது. தனது இளங்கலைமாணிப் பட்டத்திற்காக "கிழக்கிலங்கை கிராமிய இலக்கியத்தில் முஸ்லிம் பண்பாட்டுச் செல்வாக்கு" என்னும் தலைப்பில் சமர்ப்பித்த ஆய்வேடு, நூல்வடிவம் பெற்று மல்லிகைப் பந்தல் வெளியீடாக "கிழக்கிலங்கைக் கிராமியம்" (2001) என்ற தலைப்பில் வெளியானது. இவரது நாட்டாரியல் ஆய்வார்வம் குறித்து சி. தில்லைநாதன் (2009: iX) கூறும் கருத்தொன்று பின்வருமாறு அமைகின்றது :

"றமீஸ் அப்துல்லா பல கிராமங்களுக்குச் சென்று தம் ஆய்வுக்கு வேண்டிய தரவுகளைத் திரட்டிக் கொண்டார். ஏலவே வெளியிடப் பட்டவையும் வெளியிடப்படாதவையுமான நாட்டார் பாடல்களையும், பழமொழிகளையும், விடுகதைகளைகளையும் ஆதாரங்களாகக் கொண்டார். கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாடு, உலகநோக்கு, மதிநுட்பம், அழகியலுணர்வு, மொழிவழக்கு, தொடர்பாடல், நயம் முதலானவற்றை ஓரளவுக்காயினும் எடுத்துக் காட்டுவதாக அவரது ஆய்வு அமைந்தது. இஸ்லாமியர் பண்பாட்டிலும், தமிழ் மொழியிலும் அவருக்குள்ள ஆர்வமும், அறிவும் ஒருபுறமாக, அவரது நிதானமும் சமநோக்கும் உற்சாகமளிக்கும் வகையில் வெளிப்பட்டன"

பேராசிரியர் எம்.எம். உவைஸ் அவர்களின் மறைவினைத் தொடர்ந்து அவரது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களும், ஆராய்ச்சி நூலகமும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டதன் காரணமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்கும் நிலை உருவானது. இக்கற்கை நெறியில் றமீஸ் அப்துல்லா அவர்களின் பணி காத்திரமானதாகும். முதன்நிலை விரிவுரையாளராக இருந்து "இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்" இப்பல்கலைக்கழகத்தில் போதிக்கப்படுவதோடு, இவ்விலக்கியம் தொடர்பான ஆய்வுப் பணிகளும் இவரால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. இத்துறை சார்பான ஆய்வுக் கட்டுரைகள் பலவும் தேசிய, சர்வதேச மாநாடுகளில் இவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வகையில் க. இரகுபரனுடன் இணைப் பதிப்பாளராக இருந்து தொகுக்கப்பட்ட "தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் அடையாளம்" (2017) என்ற நூல் மிகுந்த கவனயீர்ப்பைப் பெற்றதொன்றாகும்.

நவீன இலக்கியப் பரிச்சயம் கொண்டவராக அறியப்படும் றமீஸ் அப்துல்லாவினால் அவ்வப்போது எழுதிய நவீன கவிதைகளின் தொகுப்பாக ~வாஸ்தவம்| 2011 இல் வெளியாகியது. சிறுகதைகள் மீது இவருக்கிருந்த நாட்டம் பின்னர் சிறுகதை ஆய்வாளராகவும் இவரை பரிணமிக்கச் செய்தது. இவ்வகையில் திறனாய்வுப் பார்வைகளுடன் கூடியதாக இவரால் எழுதப்பட்ட "அம்பாறை மாவட்ட சிறுகதை ஆளுமைகள்" என்னும் நூல் 2012 இல் வெளிவந்தது. இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய பேராசிரியர் அ. சண்முகதாஸ், "ஒரு பிரதேசத்தின் சிறுகதை ஆய்வின் வகை மாதிரிக்கு இந்நூல் முன்னுதாரணமாககத் திகழ்கிறது" எனக் குறிப்பிடுவது கவனம் கொள்ளத்தக்கதொன்றாகும்.

பத்திரிகை மற்றும் இதழியல் துறைகளில் ஆர்வத்துடன் இயங்கும் றமீஸ் அப்துல்லா, அவை தொடர்பான ஆய்வுகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருபவர் ஆவார். இவ்வகையில் வெளிவந்த "இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் (1841-1950)" (2012) என்னும் நூல், இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் தொடர்பாக இதுவரை வெளிவந்த நூல்களிலிருந்து வேறுபட்டு பல்வேறு புதிய தகவல்களையும், அறியப்படாத பத்திரிகைகள் பற்றிய விபரங்களையும் தருவதாகும். தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊடகவியல்துறை டிப்ளோமா கற்கைநெறியின் வளவாளராகவும், இணைப்பாளராகவும் இவர் தொடர்ந்தும் கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

தினகரன் நாளிதழில் றமீஸ் அப்துல்லாவால் எழுதப்பட்ட பத்தி எழுத்துக்களின் தொகுப்பு "எண்ணப் பெருவெளி" (2018) என்னும் நூலாக வெளிவந்தது. சமூகம், அரசியல், கலை, இலக்கியம் என்றவாறாக எழுதப்பட்ட 102 பத்திகள் இந்நூலில் காணப்படுகின்றன. இவ்விதமான எழுத்துக்களுக்குப் பின்னால் இருக்கும் றமீஸ் அப்துல்லாவின் சமூக அக்கறை பலராலும் விதந்து கூறப்பட்டதொன்றாகும். உமா வரதராஜன் (2018) இதுபற்றி :

"நண்பர் றமீஸின் இத்தொகுப்பு தகவல்கள், ரசனை, வரலாறு, நடப்பு அரசியல் ஆகிய தளங்களில் பயணித்தாலும் இதன் உள்ளொளியாக நான் கண்டுணர்வது இந்நாட்டின் இனங்களுக்கிடையே நிலவவேண்டிய ஐக்கியத்தின் மீதான அவரது தீராத காதலையே. இத்தொகுப்பின் பல பத்திகளிலும் இது சார்ந்த கனவுகளும், அபிலாஷைகளும், வெப்புசாரங்களும், ஏக்கமும் வெவ்வேறு விதங்களில் வெளிப்படுகின்றன. இந்தத் 'தீராக் காதலே" அவரையும் என்னையும் நெருங்க வைத்தது. பல மேடைகளிலும் அவரைப் பேச வைக்கத் தூண்டியது. இனங்களுக்கிடையே நிலவவேண்டிய நல்லுறவு பற்றியும், பிரிக்க முடியாத பாரம்பரியம் பற்றியும் அண்மையில் ஒரு மேடையில் நண்பர் றமீஸ் உரையாற்றிய போது மண்டபத்தில் குழுமியிருந்த மக்கள் கரகோஷம் செய்து வரவேற்றார்கள். அது உணர்த்திய செய்தி ~மனிதர்கள் இன்னமும் மனிதர்களாகவே இருக்கிறார்கள்| என்பதாகும்"

எனக் குறிப்பிடுகின்றார். இவ்வகையில் முஸ்லிம் அரசியல், நல்லிணக்கம், சமூக இணக்கப்பாடு முதலிய எழுத்துச் செயற்பாடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபாடு காட்டி வருபவராக றமீஸ் அப்துல்லா அறியப்படுகின்றார். இவை குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் தனிக்கவனம் பெறுவதாகும்.

பதிப்புப் பணியிலும் இவரது பங்களிப்பு குறிப்பிட்டுச்சொல்லக்கூடியதாகும். பல்கலைக்கழக வெளியீடுகளான இளங்கதிர், பிரவாகம், கலம் முதலிய இதழ்களின் பதிப்பாசிரியராக கடமையாற்றிய இவர், "கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் நினைவுப் பகிர்வு" (2016), "அப்துல் மஜீத் ஆளுமையின் அடையாளம்"| (2012), "சம்மாந்துறை வரலாறு (2019)", "கிழக்கு வாசல்" (2017) போன்ற நூல்களின் பதிப்பாசிரியராகவும், இணைப் பதிப்பாசிரியராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை ஆய்வரங்குகள், தமிழ்ச்சங்க செயற்பாடுகள் பலவற்றிலும் றமீஸ் அப்துல்லாவின் பங்காற்றுதல்கள் குறிப்பிடத்தக்கனவாகும். கிழக்கிலங்கையின் அடையாளம், இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய பார்வை, நாட்டாரியல் கூறுகள் முதலிய ஆய்வரங்குகளை நெறிப்படுத்துவதில் இருந்து, கட்டுரை சமர்ப்பித்தல், தொகுதியாக்கம் செய்தல் என்பன வரையான இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கதாகும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதல் பேராசிரியரான இவர், முதலாவது சிரேஷ்ட பேராசிரியராகவும் பதவியுயர்வு பெறுவது மகிழ்ச்சிக்குரியது. அவருக்கு எம் வாழ்த்துக்கள்.

எம். அப்துல் றஸாக்,
விரிவுரையாளர்,
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.

♦️இலங்கை விஞ்ஞானி ஜவாஹிருக்கு அமெரிக்காவில் விருது.!♦️அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்அனுராதபுர மாவட்டத்திலுள்ள  நாச்சியாதீவை...
26/08/2023

♦️இலங்கை விஞ்ஞானி ஜவாஹிருக்கு அமெரிக்காவில் விருது.!

♦️அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்

அனுராதபுர மாவட்டத்திலுள்ள நாச்சியாதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் - விஞ்ஞானி இப்ராஹிம் ஜவாஹிர் அவர்களுக்கு 'அமெரிக்க இயந்திர பொறியியலாளர் சமூகம்' (The American Society of Mechanical Engineers) இன் 2023ம் ஆண்டுக்கான சிறந்த விருது அமெரிக்காவில் வழங்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சி தருகிறது.

அவர் எமது ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதனால் ஊர் சார்பாக அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சிடைகிறேன்.

அவர் தற்போது ஐக்கிய அமெரிக்காவின் University of Kentucky ல் பொறியியல் துறைப் பேராசிரியராகவும் விஞ்ஞான ஆராய்ச்சி ஆய்வு கூடத்தின் தலைவராகவும் இருப்பது இலங்கை மக்களுக்கும் பெருமை சேர்க்கிறது. அவர் சர்வதேசங்களில் பல முக்கிய விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றிருப்பதுடன் அமெரிக்காவிலுள்ள முக்கியமான நிறுவனங்களுக்கு பல மில்லியன் டொலர் செலவிலான திட்டங்களை (Projects) நிறைவேற்றிக் கொடுத்து தனது பல்கலைக் கழகத்துக்கும் ஆராய்ச்சி நிலையத்துக்கும் பாரிய வருமானத்தையும் பெருமையையும் தேடிக்கொடுத்துள்ளார்.

அவர் உலகில் உள்ள பல முன்னணி பல்கலைக் கழகங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருவதுடன் அங்கு பல சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வருகிறார். பொறியியல் முதுமாணி மாணவர்களுக்கான பல ஆராய்ச்சிப் புத்தகங்களை அவர் எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

👉கல்விப் பயணம்

ஜவாஹிர் அவர்கள் தனது இரண்டாம் வகுப்பு வரையுள்ள ஆரம்பக் கல்வியை அனுராதபுர மாவட்ட நாச்சியாதீவு இக்பால் மகாவித்தியாலயத்தில் பெற்றுக் கொண்டதுடன் க.பொ.த. (சா/த) வரை Irukkalampiddy Muslim Madhya Maha Vidyalaya த்தில் கற்ற அவர், தனது க.பொ.த.(உ/த) கல்வியை யாழ்ப்பாணம் Sri Skandavarodaya College லும் பெற்றார். பின்னர் அவர் Bachelor of Mechanical Engineering Degree யையும் Master of Science in Mechanical Engineering ஐயும் மாஸ்கோவில் உள்ள Patrice Lumumba University லும் பெற்றார்.

ஜவாஹிர் அவர்கள் அவுஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் அமைந்துள்ள New South Wakes University ல் Mechanical Engineering எனும் துறையில் தனது கலாநிதி(PhD) கற்கை நெறியை பூர்த்தி செய்தார்.

அதன் பின்னர் அவர் அவுஸ்திரேலிய நாட்டின் Wollongong University இல் Mechanical Engineering துறை விரிவுரையாளராக கடமையாற்றிமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஜவாஹிர் அவர்கள் பொறியியலாளராக பட்டம் பெற்ற பின்னர் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையிலும் National Engineering Research and Development Centre( NERD) ல் ஆய்வுக்கான பொறியியலாகவும் கடமைபுரிந்து நாட்டுக்கான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

👉நாச்சியாதீவுத் தொடர்பு

இவரது பெற்றோர் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து தமது பிள்ளைகளை வளர்த்தார்கள். தந்தை இப்ராஹீம் ஸாஹிப் மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டியையும் தாய் பாத்திமா பீவி அனுராதபுர மாவட்ட நாச்சியாதீவையும் பிறப்பிடமாகக் கொண்டவர்களாவர்.

பேராசிரியர் ஜவாஹிர் அவர்களது சகோதரரான இப்ராஹீம் அன்ஸார் அவர்கள் எகிப்து, மலேசியா, சவூதி அரேபியா,ஓமான் ஆகிய நாடுகளில் இலங்கை நாட்டின் தூதுவராக கடமையாற்றியிருப்பதுடன் சிறிது காலம் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

முன்னை நாள் தூதுவர் இப்ராஹீம் அன்ஸார் தனது குடும்பத்தின் நிலை பற்றி குறிப்பிடுகையில் "நாம் அடிப்படையில் எருக்கலம்பிட்டியில் தான் வசித்து வந்தோம்.
எமது குடும்பத்தில் ஒவ்வொரு பிள்ளையும் தாயின் வயிற்றில் தரித்த பின்னர் பிரசவத்திற்காக இன்னும் 40 நாட்கள் இருக்கின்றன என்ற நிலை வந்தால் எமது தகப்பன் எமது தாயை நாச்சியாதீவுக்கு அழைத்துச் செல்வார்.
அங்கு தான் நாம் ஒவ்வொருவரும் பிறந்தோம். எனவே எமது பிறந்தகம் நாச்சியாதீவு தான். எனது சகோதரர் ஜவாஹிர் அவர்கள் இரண்டாம் வகுப்பு வரை நாச்சியாதீவு இக்பால் மகாவித்தியாலயத்தில் தான் கல்விகற்றார்" எனக் கூறுகிறார்.

👉நாச்சியாதீவில் உறவுகள்

நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமை புரிந்து தற்போது ஓய்வு பெற்றிருக்கும் AHA Azeez அவர்களது தாயார் அதே ஊரைச் சேர்ந்த Mr. Yakoob, Mr. Seinulabdeen,Mr. Habeeb Mohamed, Mr. Ibramsa ஆகியோர் பேராசிரியர் ஜவாஹிர் அவர்களது தாயாரின் உடன்பிறப்புக்களாவர். இவர்கள் அனைவரதும் பிள்ளைகள் தற்போது நாச்சியாதீவிலேயே வசித்து வருகிறார்கள்.

👉மூளைசாலிகள் வெளியேற்றம்

இலங்கை மண் ஈன்றெடுத்த இத்தகைய விஞ்ஞானிகள் பலர் வெளிநாடுகளில் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் தொழில் செய்வதும் பாராட்டுக்களை பெறுவதும் மகிழ்ச்சி தரும் செய்தியாக இருப்பினும் இன்னொரு வகையில் அவர்களது சேவை இந்நாட்டுக்கு கிடைக்கவில்லை என்ற விடயம் கவலை தருகிறது.

எமது இலங்கை நாடு வளமான புத்திஜீவிகளை கொண்ட நாடு. ஆனால் அவர்கள் உயர்ந்த கல்வித் தகைமைகளை அடைகின்ற பொழுது அத்தகைய திறமைசாலிகளை நாட்டில் தக்க வைத்துக் கொள்வதற்கான பொறிமுறை இந்த நாட்டில் இல்லாமல் இருப்பது கண் கூடு.

குறிப்பாக அண்மைக் காலத்தில் இனவாதம், அரசியல் நெருக்கடிகள், யுத்தங்கள், பொருளாதார நெருக்கடிகள் போன்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட காரணிகளால் இந்நாடு பல புத்திஜீவிகளையும் விஞ்ஞானிகளையும் துறை சார் நிபுணர்களையும் இழந்திருக்கிறது. அவர்கள் புலம்பெயர்ந்து சென்று விட்டார்கள்.

பல்கலைக்கழகங்களில் 50% விரிவுரையாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் கூறுகின்றன. வைத்தியத்துறையிலும் இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப் போனால் இந்த நாட்டின் நிலை என்னவாகும்?

மேற்கத்திய நாடுகள் எம் போன்ற நாடுகளைச் சேர்ந்த புத்திஜீவிகளுக்கு கவர்ச்சியான சலுகைகளையும் கொழுத்த சம்பளங்களையும் வழங்கி அவர்களை உள்வாங்கி தமது நாடுகளை முன்னேற்றி இருப்பதை நாம் அறிவோம். ஆனால் துரதிஷ்டவசமாக எமது நாடு இத்தகைய புத்திஜீவிகளை தொடர்ந்து இளந்துவருகிறது. இன்னும் ஓரிரு வருடங்களில் இதன் பயங்கரமான பாதிப்பை நாம் அனுபவித்தே தீருவோம்.இப்போதே அனுபவிக்கிறோம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

துறை சார் நிபுணர்களை உருவாக்குவது 'பர்ளு கிபாயா' என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். அந்த வகையில் இஸ்லாமிய உணர்வுள்ள, சமூக சேவை மனப்பாங்கு கொண்ட புத்திஜீவிகள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் வைத்தியர்கள், நிபுணத்துவ அறிவு கொண்டவர்கள் என்று ஒவ்வொரு துறைக்கும் உரியவர்களை தேவையான அளவு எண்ணிக்கையில் உருவாக்கி அவர்களை தக்க வைத்துக் கொள்வது சமூகத்தின் கடமையாகும். ஆனால் தற்போதைய நிலை மிக கவலைக்கிடமாக இருக்கிறது. இது பற்றி நாட்டுத் தலைவர்களும் பொறுப்பான பதவிகளில் அமர்ந்திருப்பவர்களும் அதிகமதிகம் சிந்திக்க வேண்டும். பேராசிரியர் ஜவாஹிர் போன்றவர்கள் இந்த நாட்டில் இருந்திருந்தால் நிலை எப்படி இருக்கும் என்று சிந்தித்து பார்ப்போம்.

எனவே எதிர்காலத்தை திட்டமிடுவதற்கான வழிமுறை ஒன்று இந்த நாட்டுக்குத் தேவைப்படுகிறது

Address

Kandy

Alerts

Be the first to know and let us send you an email when SL1st Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SL1st Tamil News:

Share