Lanka Today 1st

Lanka Today 1st Local News & Ads

இப்பக்கத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்களை வெளியிட FB மெசேஜ் ஊடாக புகைப்படத்துடன் எமக்கு அனுப்பி வையுங்கள்.

உடனுக்குடன் வெளியிடப்படும்.
நன்றி
Admin

2025/2026 ஆம் ஆண்டுக்கான பொத்துவில் பிரதேச இளைஞர் கழக சம்மேளன பொதுக் கூட்டமும் நிருவாக தெரிவும்.தேசிய இளைஞர் சேவைகள் மன்...
26/07/2025

2025/2026 ஆம் ஆண்டுக்கான பொத்துவில் பிரதேச இளைஞர் கழக சம்மேளன பொதுக் கூட்டமும் நிருவாக தெரிவும்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை
நடைமுறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம்
புனரமைக்கப்பட்டு வருகின்றது. அதன் பிரகாரம் பொத்துவில் பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிர்வாகத் தெரிவும், பொதுச் சபைக கூட்டமும். 2025.07.25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொத்துவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் AG.அன்வர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் அதிதிகாளாக பொத்துவில் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திரு. ராமக்குட்டி அவர்களும், பொத்துவில் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் சுபையிர் அவர்களும், நிந்தவூர் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி MIM. பரீட் அவர்களும், கிராமா நிலதாரி அல் அமீன் அவர்களும், சிசிரா வானு Do (NDDCB ) அவர்களும், முன்னாள் சம்மேளனத் தலைவைர் நௌபல் அவர்களும் மற்றும் சமூக செயற்பாட்டாளர் அரபாத் அவர்களும் என பலரும் கலந்து கொண்டனர்.

தலைவர் : ACM. இர்பாஸ்கான்
செயலாளர் : AG. அன்வர் ( இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்)
பொருளாளர் : MNM. சம்றத்
அமைப்பாளர் : AM. றிப்லான்
உப தலைவர் : K.விஜினி காந்த்
உப செயலாளர் : NA. பஹத்
உப அமைப்பாளர் : K. ஐனரந்தன்

ஆகியோரும் பிரிவுக்கான செயலாளர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

காலியான தண்ணீர் பாட்டில்களில் அரிசி, பருப்பு மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை நிரப்பி - கடலில் வீசும் மக்கள்....!!!எகிப்து, லிபி...
25/07/2025

காலியான தண்ணீர் பாட்டில்களில் அரிசி, பருப்பு மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை நிரப்பி - கடலில் வீசும் மக்கள்....!!!

எகிப்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த மக்கள் காலியான தண்ணீர் பாட்டில்களில் அரிசி, பருப்பு மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை நிரப்பி - கடலில் வீசுகிறார்கள், நீரோட்டம் அவர்களை காஸாவுக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறார்கள்.

அது ஒருபோதும் எட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும் - ஆனாலும் அவர்கள் அதை செய்கிறார்கள்.

ஏனென்றால் அரசாங்கங்கள் தோல்வியடையும் போது, மக்கள் எழுச்சி பெறுகிறார்கள்.

ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் சேர்ந்துகொண்டு உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புகாரி (6011)

கவனிக்கப்படவேண்டிய நபர்⭕️⭕️⭕️🔴🚫🚫புகைப்படத்தில் உள்ள இந்த நபரை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று...
08/07/2025

கவனிக்கப்படவேண்டிய நபர்⭕️⭕️⭕️🔴🚫🚫

புகைப்படத்தில் உள்ள இந்த நபரை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்க முடியவில்லை,

சாய்ந்தமருதில் நடந்த சம்பவம்....

ஒவ்வொரு வீடாக செல்கிறார் .
அந்த வீட்டில் ஆண்கள் இருக்கின்றார்களா இல்லையா என்று அறிந்து, தனது மொபைல் ஊடாக இன்னும் ஒருவருக்கு அறிவித்தல் கொடுக்கின்றார் அதே இடத்தில் இருந்து.

ஆண்கள் இல்லாத வீடுகளை பார்த்து அங்கே சென்று அதிகமாக பணம் கேட்கின்றார்.
அவர்கள் Rs20 Rs50 அல்லது Rs10 என்று கொடுத்தாலும் கூட அதை வாங்காமல் அவர்களுக்கு தூசன வார்த்தைகளால் ஏசுகின்றாராம்.

இவர் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை செய்யப்படுகிறது.

இஸ்ரேலின் அடுத்த இலக்கு இலங்கையா? கட்டாயம் எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒரு கட்டுரை!முக்கியமான கட்டுரை என்பதால் அனைவருக்கும...
30/06/2025

இஸ்ரேலின் அடுத்த இலக்கு இலங்கையா?

கட்டாயம் எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒரு கட்டுரை!
முக்கியமான கட்டுரை என்பதால் அனைவருக்கும் பகிருங்கள்!!

பள்ளிவாசல் சூழலை அவமதிக்கும்,
இலங்கை வியாபாரிகளின் வியாபாரத்தை தட்டிப் பறிக்கும் யூதர்கள். இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் யூத மத ஸ்தளங்கள்.

மலைநாடு எல்ல (Ella) நகரம்.
பிரதான வீதியில் chill cafe என்ற ஒரு உணவகம் உள்ளது. அதற்குப் பக்கத்தில் சலவை செய்யும் கடைக்கு திசைகாட்டும் ஒரு அறிவிப்புப் பலகை உள்ளது. அந்த திசை நோக்கி போனால் அது காடுகளுக்குள் செல்லும் ஒரு ஒடுங்கிய பாதை.

ஐந்து நிமிடங்கள் நடை தூரத்தில் ஒரு இசை கேட்கும். இலங்கைக்கு பொருத்தமில்லாத ஒரு இசை. அந்த வீதியில் கடைசியாக ஒரு வீடு உள்ளது. அதன் முன் ஒரு மஞ்சள் நிற கொடி பறக்கும். அதுவும் இலங்கைக்குப் பொருத்தமில்லாத ஒரு கொடி.

அங்கே உள்ள வீட்டில் ஒரு சலவை இயந்திரம் உள்ளது. அங்கே சுற்றுலா பயணிகள் ஆடைகளை கழுவி எடுக்கலாம். அதுதான் அந்த சலவை செய்யும் இடம் என்று நினைக்கிறீர்களா ?

அதுதான் இல்லை!
அது ஒரு சபாத் இல்லம்.

இப்போது கீழே உள்ள முதலாவது புகைப்படத்தில் மேல்பகுதியில் உள்ள பெயர் பலகையின் முதலாவது பெயரை கொஞ்சம் உற்றுப் பாருங்கள். அது ஹுப்ரு மொழியில் உள்ளது.

அது :בית חב
தமிழில்: சபாத் இல்லம்

சபாத் இல்லம் என்றால் யூதர்கள் மதம் வளர்க்கும் ஒரு யூத அறநெறி பாடசாலை. அங்கே சத்தமாக ஒலிக்கும் இசை யூத மத இசை. அந்தக் கொடி யூத மதம் சார்ந்த கொடி. அந்த வீட்டின் உள்ளே ஒரு நூலகம் உள்ளது. அங்கே யூத மத நூல்கள் உள்ளன. அந்த வீட்டுக்கு பொறுப்பாக ஒரு யூத மத போதகர் உள்ளார்.

அப்படியே சீனை கட் பண்ணி அறுகம்பை நகருக்கு செல்லுங்கள்.

அங்கே மபாசா என்ற பள்ளி வாசல் உள்ளது. அதற்குப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் போனால் அதிகாலை வரை பெரிய சனக்கூட்டமும் இரைச்சலும் கேட்கும். ஆனால் அந்த இரைச்சல் மொழி எதுவும் உங்களுக்கு புரியாது. ஏனென்றால் அவர்கள் பேசுவது யூதர்களின் மொழி.

ஆம் அறுகம்பை பள்ளிவாசலுக்கு பக்கத்தில் இருப்பது ஒரு யூத மத பிரார்த்தனையும் போதனையும் செய்யும் சபாத் இல்லம்.

அப்படியே சீனை கட் பண்ணி,
வெலிகம கடற்கரைக்குப் போனால் அங்கே சுற்றுலா ஹொட்டல்கள் இருக்கும் இடத்திலே ஒரு ரெஸ்டேரன்ட் உள்ளது. (புகைப்படம் இல 02)

அந்த ரெஸ்டோரன்டின் இரண்டாம் தளத்தில் உள்ளது சினோக் synagogue. சினோக் என்றால் யூத கோயில்.
அதற்கு பொறுப்பாக யூத மத தலைவர்களான ஒரு தம்பதி உள்ளனர். அங்கே உணவு மட்டும் பறிமாறப்படாது. அங்கே ஞாயிறு தோறும் யூத மத வகுப்புக்கள் நடைபெறும்.

அவ்வப்போது விசேட பிரச்சார வகுப்புக்கள் நடைபெறும். பெண்கள் மட்டும் பங்குபெறும் யூத மத பயிற்சிகள் கூட அங்கே உள்ளன. அண்மைய யூத மத கொண்டாட்டத்தில் 200 யூதர்கள் சேர்ந்து கொண்டாடினார்கள். விரைவில் 500 பேரை கூட்டி கொண்டாடுவதே இலக்கு என்று அதற்கு பொறுப்பான மத போதகர் சொல்கின்றார்.

கொழும்பு கூட விதிவிலக்கு அல்ல.
சினமென் ரெட் ஹொட்டலுக்கு அருகில் உள்ள வீடு ஒரு சபாத் இல்லம். அதுதான் இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது யூத மத பிரச்சார போதனை நிலையம். இலங்கையின் மையப்பகுதியில் ஒன்று, கடலோர நகரங்களில் இலங்கையை சுற்றி மூன்று என நான்கு யூத மத போதனை நிலையங்கள் இலங்கையில் எதற்கு? அதுவும் வியாபார நிலையங்கள் என்ற பொய்யான போர்வையில் ?

எப்படி இஸ்ரேல் நாட்டவர் இலங்கையில் தங்கி இருந்து உணவகங்களை நடத்துவதாக சொல்லி யூத மத நிலையங்களை அமைக்கிறார்கள் ?

அறுகம்பே ஒரு முக்கிய சுற்றுலா மையம். கடல் சறுக்கு விளையாட்டுக்கு பெயர் போன இடம். சில மாதங்களுக்கு முன் அங்கே இஸ்ரேலியர்களை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக சிலர் கைதான செய்தியை கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

அந்தளவு யூதர்கள் அறுகம்பையில் உள்ளார்களா? ஆம் யூதர்கள் இரவில் பிரார்த்தனைக்காக கூடி அதிக இரைச்சலை ஏற்படுத்தி தொந்தரவு செய்கிறார்கள் என்று பொலிசில் முறைப்பாடு செய்யும் அளவுக்கு யூதர்கள் அங்கே உள்ளார்கள்.

அதைவிட முக்கியமாக யூதர்களால் தங்களுடைய சுற்றுலா துறை சார்ந்த வியாபாரம் பறிக்கப்படுவதாக, அங்கே காலாகாலமாக ஹொட்டேல், உணவகம் போன்ற தொழிலை நடத்தும் உள்ளூர் வியாபாரிகள் அழ வேண்டிய அளவு யூதர்களின் ஆதிக்கம் அங்கே உள்ளது.

யூதர்களால் உள்ளூர் வியாபாரம் எப்படி பாதிக்கப்படுகிறது ?

யூதர்கள் பெருமளவு கூட்டமாக வரும்போது யூதர்களால் நடத்தப்படும் சேவைகளையே பெறுகிறார்கள். அவர்களுக்கு தேவையான மருத்துவர்களை கூட இஸ்ரேலில் இருந்து அழைத்து வருகிறார்கள். சொந்தமாக வாகனங்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். ஆட்டோ , ஸ்கூட்டர் கூட யூதர்களிடையே சொந்தமாக உள்ளது.

யூதர்கள் உள்ளூர் ஆட்களின் பெயரில் வியாபாரங்களை தொடங்கி நடத்துகிறார்கள். இதனால் அறுகம்பையின் சுற்றுலா வணிகம் உள்ளூர் வாசிகளிடமிருந்து கை நழுவி போவதாக உள்ளூர் வர்த்தகர்கள் அழவேண்டிய நிலமை வந்துள்ளது.

கீழே உள்ள 03ம் இலக்கமிட்ட படத்தில் அறுகம்பையில் உள்ள வியாபார தளமொன்றில் ஆங்கிலத்தில் offer என்பதன் கீழே "ஆம் நண்பா உனக்கு விலைக்கழிவு உள்ளது" என்று ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டுள்ளது எமக்கு பல சேதிகளை சொல்கிறது.

கடந்த ஒக்டோபர் மாதம் அறுகம்பேயில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா தூதரகம் அறிவித்த பின் அங்கே பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ளதால் அறுகம்பையின் சுற்றுலா வியாபாரத்தை அது கடுமையாக பாதித்துள்ளதுடன், பாதுகாப்பு கெடுபிடிகள் இஸ்ரேலியர்களுக்கு சார்பானதாக இருப்பதால் மற்றைய சுற்றுலா பயணிகளும் உள்ளூர் வியாபாரிகளும் பாதிக்கப்படுவதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக முஸ்லிம்கள் கணிசமாக செறிந்து வாழும் பகுதி மற்றும் அவர்களின் பள்ளிவாசலை அண்டி அமைக்கப்பட்ட யூத மதத்தளம் போன்றவை முஸ்லிம்களின் எதிர்கால இருப்புக்கு ஆபத்தாக மாறிவிடும் என்ற அச்ச நிலை தோன்றியுள்ளது.

இஸ்ரேல் யூதர்கள் ஏன் இலங்கை மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்று தேடியபோது இன்னும் பல ஆச்சரியமான விடயங்கள் தெரியவந்தது.

ஒரு உலகப்பிரபலமான யூத இணையத்தளம் இலங்கைக்கு யூதர்கள் ஏன் செல்லவேண்டும் என்று எழுதிய கட்டுரையில் இலங்கையின் பூர்வ குடிகள் யூதர்கள் என்ற அர்த்தத்தை மறைமுகமாக நிறுவ முனைவது புரிகிறது.

ஆதாம், ஏவாளின் தோட்டமாக பைபிளில் குறிக்கப்படும் இடமே இலங்கை, அதனால்தான் மகத்தான தீவு என்ற அர்த்தப்படும் srilanka என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள். பெருவெள்ளத்தின் பின் நோவாவின் கப்பல் வந்து தங்கியதாக பைபிளில் குறிப்பிடப்படும் ஆரட் மலைதான் சிவனொளிபாத மலை என்கிறார்கள்.

பைபிளில் டார்சியா என்று சொல்லப்படும் துறைமுகம்தான் காலி துறைமுகம் என்கிறார்கள் .

படம் இலக்கம் 04 பைபிளில் உள்ள டார்சி துறைமுகம் என யூதர்கள் சொல்கின்ற இடம். இது காலி துறைமுகமாகும்.

ஆக பைபிளில் குறிக்கப்படும் யூதர்களுக்கு சொந்தமான நிலம்தான் இலங்கை என்கிறார்களா ?
யூதர்களின் பைபிளின் படி இரண்டாவது கோயில் காலமான கி.மு 560 யில் இலங்கைக்கு வந்த பீனிசியன் கப்பலில் யூதர் ஒருவர் இருந்ததாக அந்த கட்டுரை சொல்கிறது.

கி.பி 1154 ஆம் ஆண்டு சிங்கள மன்னனின் அரச சபையில் 16 மந்திரிகளில் 4 பேர் யூதர்கள் என்றும்,
ஒன்பதாம் நூற்றாண்டில் இலங்கையில் 3000 யூத குடும்பங்கள் இருந்ததாகவும் அதன்பிறகு போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் யூதர்கள் சடுதியாக அதிகரித்ததாகவும் இலங்கையை கட்டி எழுப்பியதே யூதர்கள் என்றும் சொல்கிறார்கள்.

பொய்யை சொன்னாலும் அதில் கொஞ்சம் உண்மையை கலந்து சொல்கிறார்கள். ஆங்கிலேயர் காலத்தில் சில யூதர்கள் வந்து வியாபாரம் செய்தனர்.
ஆங்கிலேயர் காலத்தில் மூன்று யூத சகோதரர்கள் தேயிலை தோட்டம் செய்தது உண்மை. ஆனால் யூதர்கள் தான் இலங்கையில் தேயிலையை அறிமுகப்படுத்தி இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த காரணமானவர்கள் என்று பொய்யை அடித்து விடுகிறார்கள்.

கொழும்பில் பிரதான பாடசாலையான Musaeus பாடசாலையின் முதல் அதிபர் Marie Musaeus Higgins ஒரு யூதர் என்பது உண்மை. ஆனால் யூதர்கள் எந்தளவு தங்கள் அடையாளத்தை காப்பாற்றுவதில் முக்கியமாக உள்ளார்கள் என்பதற்கும் அந்த பாடசாலை உதாரணமாக உள்ளது.

அந்த பாடசாலையின் பெயர் பலகையில் ஹிட்லரின் நாசி படைகளின் அடையாளத்தை ஒத்த அடையாளம் இருப்பதை அறிந்த சமகால யூத ஊடகவியளாளர் தற்போதைய அதிபருடன் பேசி அது நாசிகளின் அடையாளம் இல்லை பெளத்த மதத்தின் அடையாளமான சுவஸ்திகா என்பதை உறுதி செய்து கட்டுரை எழுதி உள்ளார். (படம் 05)

பெளத்த மதத்தின் சுவஸ்திகா மீதே சந்தேகப்பட்டு ஆய்வு நடத்தும் நிலை இலங்கைக்கு வந்துள்ளதும் இங்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்லி நிற்கிறது .

இலங்கை யூதர்களுக்கும் உரிமை உள்ள இடமென நிறுவ அவர்கள் காட்டுகிற அடுத்த முக்கிய உதாரணம் பொரளை மயானம். அங்கே கடந்த யூத நூற்றாண்டில் புதைக்கப்பட்ட யூத மதத்தவரின் கல்லறைகளில் உள்ள ஹுப்ரு மொழிகளை வைத்து அந்த கல்லறைகளை அடையாளப்படுத்துகிறார்கள். (படம் 06)

மிக முக்கியமாக இலங்கையில் போன நூற்றாண்டில் உயர் பதவி வகித்த யூதர்களின் விபரங்கள் ஒன்றுவிடாமல் அத்தனையும் அவர்கள் வசமுள்ளது. எந்தளவு அவர்கள் திட்டமிட்டு தங்கள் அடையாளங்களை ஆவணப்படுத்துகிறார்கள் என்பதற்கு இது சான்றாக இருக்கின்றது.

இலங்கையின் கடைசி யூதராக இருந்து 2016 உயிரிழந்த Anne Ranasinghe வின் வீடு அதற்குரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருப்பதாக யூதர்கள் கவலைப்படுகிறார்கள்.

சபாத் இல்லங்களுக்கு பணம் கொடுப்பது யார் ?

பிரதானமாக 1700களில் ஆரம்பிக்கப்பட்ட சபாட் லுவாவிட்ச் என்ற ஒரு செயற்றிட்டமே கிட்டத்தட்ட 300ஆண்டுகள் தாண்டியும் வெற்றிகரமாக இலங்கையில் யூத மத போதனை நிலையங்களை அமைத்துள்ளது. அந்த செயற்திட்டத்தின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ளது.

அவர்களின் குறிக்கோள் யூதர்களான சுற்றுலா பயணிகளுக்கு யூத போதனையும், யூத உணவும் கொடுப்பது என்று சொன்னாலும் அவர்கள் அந்த சபாத் இல்லங்களை மையமாக வைத்து வியாபாரங்களை விருத்தி செய்வது சந்தேகத்திற்கிடமானது. இந்தியா தாய்லாந்து போன்ற நாடுகளிலும் சபாத் இல்லங்கள் உள்ளன.

எது எப்படியோ யூதர்களின் கவனம் இலங்கையின் பக்கம் சாய்ந்துள்ளது. இலங்கையை பூர்வீக யூத நிலமாக அடையாளப்படுத்த, அவர்களது பைபிளில் உள்ள இடங்களை யூத இடங்களாக அடையாளம் செய்கிறார்கள். இப்போது முக்கிய சுற்றுலா மையங்களில் தங்கள் வியாபாரங்களையும், மத தளங்களையும் விரிவு செய்கிறார்கள்.

2023 யின் கடைசி பகுதியில் இஸ்ரேலில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேரடி விமானம் விடுமளவு அவர்கள் இலங்கை மீது அக்கறை காட்டுகிறார்கள். முக்கியமாக உள்ளூர் வியாபாரிகளுடன் பார்ட்னர் என்று வியாபாரங்களை ஆரம்பிக்கிறார்கள்.

இப்படித்தான் ஒரு காலத்தில் பாலஸ்தீனம் என்ற இடத்திலும் இஸ்ரேலியர்கள் சிறிது சிறிதாக வியாபாரத்தை ஆரம்பித்தார்கள்.
...... முற்றும்!
இந்த முற்றும் இந்த கட்டுரைக்கு மட்டுமல்ல!

நன்றி
தமிழ் சந்தி இணையம்.

23/06/2025

💥Breaking Just Now : அமெரிக்க தளங்களுக்கு ஈரானின் தாக்குதல் அபாயம் இருப்பதனால் கட்டார் தனது வான் பரப்பை மூடியுள்ளது!

20/06/2025

இந்தியர்களை விரட்டும் இஸ்ரேலியர்கள்.

இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீதான போரில் அமெரிக்கா நேரடியாக பங்கேற்பது குறித்து டொனால்ட் ட்ரம்ப் அடுத்த இரண்டு கிழமைகளில் ம...
19/06/2025

இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீதான போரில் அமெரிக்கா நேரடியாக பங்கேற்பது குறித்து டொனால்ட் ட்ரம்ப் அடுத்த இரண்டு கிழமைகளில் முடிவெடுப்பார் என வெள்ளை மாளிகை அறிவித்தது.

18/06/2025
17/06/2025
17/06/2025
16/06/2025

Address

Colombo Road
Kandy
2714

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lanka Today 1st posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

www.kalmunaitoday.com

எமது செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள், அத்துடன் உங்கள் செய்திகள் மற்றும் ஆக்கங்களை எமக்கு பேஸ்புக் ஊடாக அனுப்பி வையுங்கள்.