Fastnews1st முதல்வேகச்செய்தி

Fastnews1st முதல்வேகச்செய்தி Fastnews1stமுதல்வேகச்செய்திපළමුවේගපුවත්
மக்கள் மனம் கவர்ந்த முதல்தர செய்திச் சேவை!..
உடனடி நிகழ்வுகள் உடனுக்குடன்..

24/05/2025

ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவையும் உள்ளடக்கும் வகையில் பொதுப் பாதுகாப்புக் குழு நிறுவப்படும்!- தவுலகளை OIC
--------------------------------------------------------
நாடு பூராகவும் அரசினால் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவையும் உள்ளடக்கும் வகையில் பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளமை தொடர்பில் தவுலகளை பொலிஸ் பொறுப்பதிகாரி விளக்கமளித்தார்.

සෑම ග්‍රාම නිලධාරී වසමක් ආවරණය වන පරිදි මහජන ආරක්ෂක කමිටු පිහිටුවීම පිළිබඳ විස්තර දවුලගල පොලිස් ස්ථානාධිපතිවරයා විසින් පැහැදිලි කළේය.

படுபிடிய பகுதிக்கான அரசின் விசேட டெங்கு ஒழிப்பு நிகழ்வு மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மக்கள் சந்திப்பு கூட்டமும் 23)நேற்று காலை படுபிடிய கலாசார மண்டபத்தில் இடபெற்றது.

நிகழ்வில் டெங்கு ஒழிப்பு சம்பந்தமான விசேட கூட்டத்துக்கு தவுலகளை பொலிஸ் பொறுப்பதிகாரி கலந்து கொண்டு மக்கள் பாதுகாப்பு,சூழல் பராமரிப்பு சம்பந்தமான அரசின் புதியகொல்கைகளை பற்றி விளக்கமளித்ததோடு;

நாடு பூராகவும் அரசினால் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவையும் உள்ளடக்கும் வகையில் பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விளக்கமளித்தார்.

இந்தக் குழுக்களை நிறுவுவதன் மூலம் காவல்துறை பொது உறவுகளை வலுப்படுத்துதல், அமைதியைப் பேணுதல், குற்றம் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுதல் மற்றும் மத நல்லிணக்கத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட பல நோக்கங்களை கொண்டு இதனால் மக்கள் பயனடைய முடியும் என தெரிவித்திருந்தார்.

இம்மாத 20 ஆம் திகதிக்கு முன்னர் பொது பாதுகாப்பு குழுக்களை நிருவுமார் காவல்துறைக்கு பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-Fastnews1st முதல்வேகச்செய்தி පළමුවේගපුවත්-

22/05/2025

ஊரின் பிரதிநிதி ஹஜ் புனித யாத்திரைக்காக இன்று சவூதி நோக்கி பயணம்!..
-------------------------------------------------------------

உடுநுவர பிரதேச சபை கெட்டகும்புர பிரிவின் புதிய பிரதிநிதி அல்ஹாஜ் மதீனம் அவர்கள் தனது தேர்தல் வெற்றியை அடுத்து முதல் வெளிநாட்டு பயணமாக இன்று மாலை ஹஜ் புனித யாத்திரைக்காக சவூதி அரேபியா நோக்கி செல்கிறார்!..

උඩුනුවර ප්‍රාදේශීය සභාවේ කැටකුම්පුර නියෝජිතයා අල්හාජ් මදීනම් මහතා, තම ජයග්‍රහණයෙන් පසු ඔහුගේ පළමු විදේශ සංචාරය වන හජ් වන්දනාව සඳහා අද සෞදි අරාබිය බලා පිටත්ව යයි!

இவர் நாளை ஜித்தா விமான நிலையத்தை அடைந்து ஹஜ் புனித யாத்திரைக்காக மக்காசென்று அங்கு 25 நாட்கள் தங்கி இருந்து அங்கு ஹஜ் கடமைகளை முடித்து கொண்டு நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது..

அதுவரையில் அவரது ஊரின் சமூக பணிகளுக்காக படுபிடிய ALM நலீம் (JP)
தற்காலிக பிரதிநிதியாக அல்ஹாஜ் மதீனம் அவா்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.


==•••===•••===•••===•••===
மேலும் புதுப்புது செய்திகளை அறிந்துகொள்ள உங்கள் நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்கும் எங்கள் WhatApp செய்தி பக்கத்துடன் இணைந்திருக்க கோருங்கள்!..

தனிப்பட்ட முறையில் எமது செய்திகளை பெற்றுக்கொள்ள எமது WhatsApp *Channel* பக்கத்தை Follow செய்து வைத்துக்கொள்ளுங்கள்!.👇👇

Follow WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029Vapb2N05fM5ccsegFq1Q

Join WhatApp group :
https://chat.whatsapp.com/FcJH9fgC1257wTsqGg2P1e

Like page :
https://www.facebook.com/Fastnews1st?mibextid=LQQJ4d

11/05/2025

வெலம்பொடை பிரபல வியாபாரியின் 21கோடி ரூபாய் பணம் கொள்ளை!..அதிர்ச்சி சம்பவம்!.. கொள்ளையர்களை கைதுசெய்ய பொலிஸாரின் விரிவான விசாரணை ஆரம்பம்!..
----------------------------------------------------------

உடுநுவர,வெலம்பொடையை சேர்ந்த பிரபல கோடீஸ்வர வியாபாரி ஒருவரிடமிருந்து சுமார் 210 மில்லியன் ரூபாய்களை கொள்ளையிட்டு தப்பியோடிய ஒரு சூத்திரதாரி கும்பலைக் கைது செய்வதற்காக விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெலம்பொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

වෙලම්බොඩ ප්‍රදේශයේ කෝටිපති ව්‍යාපාරිකයෙකුගෙන් රුපියල් කෝටි 21 කට ආසන්න මුදලක් කොල්ලකා පලා ගිය සංවිධානාත්මක කල්ලියක් අත්අඩංගුවට ගැනීම සඳහා පුළුල් පරීක්ෂණ ආරම්භ කර ඇති බව වෙලම්බොඩ පොලිසිය පවසයි.

රුපියල් කෝටි 28 කට රත්තරන් කිලෝ 5.5 ක් ලබා දෙන බවට එම පුද්ගලයා පොරොන්දු වීමෙන් පසු මෙම කොල්ලය සිදු කර ඇති බව පොලිසිය පවසයි.

280 மில்லியன் ரூபாய்களுக்கு 5.5 கிலோ தங்கத்தை வழங்குவதாக கோரி இந்தக் பணக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தங்கம் சம்பந்தமான ஒப்பந்தம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நபர் மூலம் பல மாதங்களாகப் பேசப்பட்டு வந்ததாகவும்,அந்த கையிருப்பில் இருந்து வந்ததாகக் கூறி, ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் மாதிரியாகக் காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், மறுநாள், 7 பேர் கொண்ட குழு பரிவர்த்தனையை மேற்கொள்வதற்காக பிரபல வியாபாரியின் வீட்டிற்கு வந்து,மீன் லாரியில் மறைத்து தங்கத்தை கொண்டு வருவதாகவும், பரிவர்த்தனையின் போது வியாபாரியும் அவரது மூத்த மகனும் மட்டும் இருந்தால் போதுமானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அந்த நேரத்தில் பிரபல வியாபாரியான ஹாஜியார், அங்கு வந்த நான்கு பேருடன் தனக்குச் சொந்தமான வேறொரு வீட்டிற்குச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட நேரத்தில் வீட்டில் தந்தையும் மகனும் மாத்திரம் இருந்ததனால்,அங்கு வந்த கும்பல், பிரபல வியாபாரியான ஹஜியரையும் அவரது மகனின் கை, கால்களையும் பிளாஸ்டர்களால் கட்டி, அறைகளுக்குள் தள்ளி, அடித்து, அவர்களிடம் இருந்த பணத்தையும் பறித்துள்ளனர்.

அந்த நான்கு பேரும் பைகளில் இருந்து பணத்தை எடுத்து மற்ற வேறொரு பையில் வைத்து எடுத்துக் கொண்டு ஒரு வாகனத்தில் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் வியாபாரியும் அவரது மகனும் பிளாஸ்டரை அகற்றி, இது குறித்து தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அவர்கள் வந்த (வேகன் ஆர்) வாகனமும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்.
கண்டியின் பல்லேகலே மற்றும் பொல்கம்விட்ட பகுதிகளைச் சேர்ந்த மற்ற இருவரும், அவர்கள் வந்த முச்சக்கர வண்டியுடன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலம்பொடை வியாபாரி இவ்வளவு பெரிய தொகையைப் பெற்றது குறித்து பொலிஸாரின் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

குறித்த பிரபல வியாபாரி, தனியார் வங்கியின் நண்பர் ஒருவரிடமிருந்து 150 மில்லியன் ரூபாயையும், மாவன்னல்லயில் உள்ள ஒரு தங்க நகைக்கடை உரிமையாளரிடமிருந்து 1 மில்லியன் ரூபாயையும் பெற்றதாகக் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் தனது தங்கத்தையும் 7 மில்லியங்களுக்கு அடமானம் வைத்து,அவரது சகோதரரிடமிருந்து 5 மில்லியன் மற்றும் அவரது மகனிடமிருந்து 1 மில்லியன்யும் எடுத்து தனது ஜீப்பையும் அடகு வைத்து 3 கோடி ரூபாய் பெற்றதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

புகார் அளிக்கப்பட்டு, பணப் பைகள் மாற்றப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வெலம்பொடை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

-Fastnews1st முதல்வேகச்செய்தி පළමුවේගපුවත්-


09/05/2025

ஊரின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு ஒரு
பொதுக் குழுவை நியமிப்பதாக அல்ஹாஜ் மதீனம் அவர்கள் நன்றி உரையில் உறுதி!..
---------------------------------------------------------

படுபிடிய,கெட்டகும்புர வாட்டாரத்துக்கான உடுநுவர பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக புதிய பிரதிநிதியாக மீண்டும் தெரிவாகியுள்ள அல்ஹாஜ் மதீனம் அவா்களின் வெற்றிக்கான நன்றி உரை நிகழ்வு இன்று ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து ஊரில் இடம்பெற்றது.

ඉදිරියේදී ගමේ පොදු සංවර්ධන ව්‍යාපෘති ක්‍රියාත්මක කිරීම සඳහා කමිටුවක් පත් කරන බව නියෝජිතයා අල්හාජ් මදීනම් මහතා පැවසීය.

இதன் போது உரையாற்றிய வட்டாரத்துக்காண பிரதிநிதி அல்ஹாஜ் மதீனம் அவர்கள் ஊரின் அபிவிருத்திக்கான பொது வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் செய்வதற்குத் தாம் ஒரு குழுவொன்றை நியமிக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் முழு ஊரையும் ஒன்றிணைக்கும் வகையில் ஒவ்வொரு பகுதிக்கான உறுப்பினர்களை நியமித்து அன்றைய ஊரின் நிலவரங்களை அறிந்து கொள்ளல், ஊருக்குத் தேவையான சமூகப் பணிகளை துரிதப்படுத்தல், ஊர் பிள்ளைகளின் பாடசாலை பிரச்சினைகள் போன்ற பல பிரச்சினைகள் இருப்பின் உரியவர்களோடு கலந்து ஆலோசனை செய்து என்னால் முடியுமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

அது மாத்திரம் இன்றி Whatsapp ஊடாகவும் குழு ஒன்று திறக்கப்பட்டு அதன் ஊடாகவும் பொதுக்குழு உறுப்பினர்களின் சேவைகள் இயங்கும் எனவும், இதன் மூலம் ஊரின் சூழலைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் வகையில் குப்பை வண்டி வருவது பற்றிய சமிக்ஞை அறிவித்தல்களைப் பகிர்தல்,மற்றும் பாதைகளில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் சரியாக எரிகிறதா என்ற போன்ற பல விடயங்களை இதன்மூலம் மக்களுக்கு தமக்கு அறியப்டுத்திகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

-Fastnews1st முதல்வேகச்செய்தி පළමුවේගපුවත්-



07/04/2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 4ஆவது இலங்கைக்கான விஜயம் வெற்றிகரமாக நிறைவு!..
-----------------------------------------------------

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) முற்பகல் அநுராதபுரம் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்தியாவிற்குப் புறப்பட்டுச் சென்றார்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்த நான்காவது தடவை இதுவாகும் என்பதுடன், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தினால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார, கலாசார மற்றும் வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கிடையிலான பன்முக ஒத்துழைப்புகளும் பலப்படுத்திக்கொள்ளப்பட்டன.

அத்துடன், அயலவருக்கு முதலிடம் என்ற இந்திய வெளிவிவகாரக் கொள்கை மற்றும் மஹாசாகர் நோக்குக்கு அமைவாக, இராஜதந்திர விவகாரங்களில் இலங்கைக்கு சிறப்பிடம் உண்டு என்பதையும் இந்தியப் பிரதமரின் விஜயத்தினால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த விஜயம் பல முக்கியமான பல்வேறு எதிர்கால ஒத்துழைப்புகளுக்கு உடன்பாடுகளை எட்டக்கூடியதாக அமைந்ததுடன், இந்த ஒத்துழைப்புகளின் வெற்றிகரமான பலன்களை இலங்கை மக்கள் விரைவில் அனுபவிக்க முடியும். மேலும், மக்களுக்கான நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் அரசாங்கத்தின் பயணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் முக்கிய மைல்கல்லாக அமையும்.



Address

Kandy

Alerts

Be the first to know and let us send you an email when Fastnews1st முதல்வேகச்செய்தி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fastnews1st முதல்வேகச்செய்தி:

Share