Velli Velichcham

Velli Velichcham Media

03/09/2026
*மர்ஹும் மௌலவி அல்-ஹாபிழ் M.H. வலீத் பலாஹி அவர்களுக்கான இரங்கல் நிகழ்வு* அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – காத்தான்குடி க...
03/09/2026

*மர்ஹும் மௌலவி அல்-ஹாபிழ் M.H. வலீத் பலாஹி அவர்களுக்கான இரங்கல் நிகழ்வு*

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – காத்தான்குடி கிளையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும், ஆலிம்கள் விவகாரக் குழுவின் செயலாளருமான மர்ஹும் மௌலவி அல்-ஹாபிழ் M.H. வலீத் பலாஹி அவர்களின் மறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரங்கல் நிகழ்வு, 29.08.2026 சனிக்கிழமை இஷாத் தொழுகையைத் தொடர்ந்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – காத்தான்குடி கிளை காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – காத்தான்குடி கிளையின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜம்இய்யத்துல் உலமாவின் நிர்வாக சபை உறுப்பினர்கள், உலமாக்கள், மர்ஹூமின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு, அன்னாரின் மறைவினால் ஏற்பட்ட துயரத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வில் மர்ஹூம் மௌலவி அல்-ஹாபிழ் M.H. வலீத் பலாஹி அவர்களின் மார்க்க, கல்வி மற்றும் சமூகப் பணிகள், ஜம்இய்யத்துல் உலமா மற்றும் பள்ளிவாயல் பணிகளில் அவர் ஆற்றிய பங்களிப்புகள், மூத்த உலமாக்களுடனான அவரது அன்பும் மரியாதையும், சமூக சேவையில் அவர் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு மற்றும் எளிமையான பண்புகள் நினைவுகூரப்பட்டன.

மேலும், அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை வழங்க வேண்டியும் விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

அல்லாஹுத்தஆலா மர்ஹூம் வலீத் பலாஹி அவர்களின் அனைத்து நற்காரியங்களையும் ஏற்றுக்கொண்டு, அவருடைய பாவங்களை மன்னித்து, கப்ரை விசாலமாக்கி, ஜன்னத்துல் ஃபிர்தௌஸில் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக.

ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – காத்தான்குடி கிளை

பாலமுனை 152 கிராம உத்தியோகத்தர் பிரிவை 157B செல்வாநகர் கிழக்குடன் இணைக்கும் நடவடிக்கையை மீள்பரிசீலிக்க கோரிக்கைஎன்.எம்.எ...
03/09/2026

பாலமுனை 152 கிராம உத்தியோகத்தர் பிரிவை 157B செல்வாநகர் கிழக்குடன் இணைக்கும் நடவடிக்கையை மீள்பரிசீலிக்க கோரிக்கை

என்.எம்.எம். அஜ்மல்கான்

மண்முனைப்பற்று பிரதேச சபையின் இன்றைய அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு (DCC) கூட்டத்தில், பாலமுனை 152 கிராம உத்தியோகத்தர் பிரிவை 157B செல்வாநகர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் சியாத் அவர்களினால் முக்கிய விடயம் ஒன்று முன்வைக்கப்பட்டது.

மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை 152 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்கள், தங்களது கிராம உத்தியோகத்தர் பிரிவை 157B செல்வாநகர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் தங்களது நிர்வாக மற்றும் அடையாள உரிமைகள் பாதிக்கப்படக்கூடும் என கவலை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

பாலமுனை 152 கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், இப்பிரிவின் பூர்வீகத்தைச் சேர்ந்த 140 குடும்பங்களைச் சேர்ந்த 247 வாக்காளர்கள் அங்கு வசித்து வருகின்றனர் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாலமுனை 152 கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் 140 குடும்பங்களையும் 157B செல்வாநகர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுடன் இணைக்கும் நடவடிக்கையை மீள்பரிசீலனை செய்து, அப்பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் சியாத் கோரிக்கை விடுத்தார்.

மேலும், குறித்த நடவடிக்கையை குறைந்தபட்சம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்து, மக்களின் கருத்துக்களைப் பெற்று உரிய தீர்வொன்றை எட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், இவ்விடயம் காரணமாக எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய நிர்வாக மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும் பிரதேச சபை உறுப்பினர் சியாத் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், குறித்த மக்களுக்கு மிக அவசரமாக உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், சுமார் 200 மீற்றர் தூரத்தில் உள்ள கிராம உத்தியோகத்தரை சந்தித்து தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய மக்கள், சுமார் 2 கிலோமீற்றர் தூரம் சென்று தமது தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்படக்கூடாது எனவும், இதன் மூலம் பொதுமக்களை தேவையற்ற சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் அவர் தனது கருத்தை முன்வைத்தார்.

இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், குறித்த மக்களின் பிரச்சினையை கருத்திற்கொண்டு அவர்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த பிரதேச செயலாளர், இது மண்முனைப்பற்று பிரதேச சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல எனவும், தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை தொடர்பான விடயம் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த மண்முனைப்பற்று அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, இவ்விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி, அதன் பின்னர் அவர்களது தீர்மானத்திற்கு அமைவாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

பாலமுனை 152 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்களின் நிர்வாகத் தேவைகள் மற்றும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, உரிய தீர்வொன்று கிடைக்கும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் இந்த நான்கு பாடசாலைகளிலும் வரலாற்று சித்தி01. மஞ்சந்தொடுவாய் மட்/மம/அமீரலி வித்தியாலயம்...
03/09/2026

காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் இந்த நான்கு பாடசாலைகளிலும் வரலாற்று சித்தி

01. மஞ்சந்தொடுவாய் மட்/மம/அமீரலி வித்தியாலயம்.
03 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று வரலாற்று சித்தி..

02. மஞ்சந்தொடுவாய் மட்/மம/ஹுஸைனியா வித்தியாலயம்.
01 மாணவன் 149 புள்ளிகளுடன் சித்தி..

03. ஹைறாத் நகர், ஆரையம்பதி மட்/மம/ ஹைறாத் வித்தியாலயம்.
01 மாணவன் 167 புள்ளிகளுடன் சித்தி..

04. புதிய காத்தான்குடி, மட்/மம/அல்- இக்பால் வித்தியாலயம்.
03 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி..
Noordeen Msm

📌வலயத்தில் தொடர்ந்தும் முதலிடத்தில்...
03/09/2026

📌வலயத்தில் தொடர்ந்தும் முதலிடத்தில்...

டெக்ஸ்டைல் துறையில் மூன்று தசாப்த அனுபவம் வாய்ந்த   TEX`````````````````````````````````````````````````````````````````...
03/09/2026

டெக்ஸ்டைல் துறையில் மூன்று தசாப்த அனுபவம் வாய்ந்த TEX
```````````````````````````````````````````````````````````````````
வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட ஆண்,பெண் இருபாலருக்குமான தரமான துணி வகைகள்.

பெண்களுக்கான அனைத்து விதமான துணி வகைகள், அபாயா துணி வகைகள், மற்றும் ஏனைய துணி வகைகளையும் சில்லறையாகவும், மொத்தமாகவும் நியாய விலையில் பெற்றிடலாம்.

TEX
159 ,டீன் வீதி(மத்திய பகுதியில்) காத்தான்குடி-06 தொடர்புகளுக்கு அழையுங்கள் 0772220526, 0740486683

மேலதிக விபரங்களுக்கு whatsapp உடன் இணைந்திடுங்கள்.
https://chat.whatsapp.com/DiCYx0RUFuL4QlguMPPnb6

இன்றைய வானிலை 2026.09.03வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு பிற...
03/09/2026

இன்றைய வானிலை
2026.09.03

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுகின்றது.

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.09 மணியளவில் மாதம்ப, தோரயாய, தொட்டகமுவ, ரத்தோட்ட மற்றும் களுவாஞ்சிக்குடி போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
********************

சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியத்தில் கடல் அலையானது சுமார் 2.0 - 2.5 m உயரத்திற்கு மேலெளக்கூடும்.

சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.

📌காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் CIG கெஸ்ட் ஹவுஸ் முன்பாக தரமான 🐟 மீன்  களைப் பெற்றிடலாம்.1Kg கணவா- 1100/-1Kg சூடை-...
03/09/2026

📌காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் CIG கெஸ்ட் ஹவுஸ் முன்பாக தரமான 🐟 மீன் களைப் பெற்றிடலாம்.

1Kg கணவா- 1100/-
1Kg சூடை- 500/-

03.09.2026
காலை 7.45

அழையுங்கள்-0771735838

✨சரி பார்ப்போம்.
02/09/2026

✨சரி பார்ப்போம்.

நாட்டின் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக 27,475 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 88,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த மு...
02/09/2026

நாட்டின் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக 27,475 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 88,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

ஆறு மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 27 பிரிவுகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி அதிகளவானோருக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் மாவட்டமாக மொனராகலை விளங்குகிறது.

அங்கு 11751 குடும்பங்களைச் சேர்ந்த 37,890 பேருக்கு உதவி வழங்கப்பட்டு வருகிறது. மட்டக்களப்பில் 9547 குடும்பங்களைச் சேர்ந்த 28523 பேருக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது.

அத்துடன் அம்பாறை, பதுளை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் 5750 குடும்பங்களைச் சேர்ந்த 14,955 பேருக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

Address

4th Cross Road
Kattankudi

Alerts

Be the first to know and let us send you an email when Velli Velichcham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Velli Velichcham:

Shortcuts

Share

Category