Velli Velichcham

Velli Velichcham Media

டெக்ஸ்டைல் துறையில் மூன்று தசாப்த அனுபவம் வாய்ந்த   TEX`````````````````````````````````````````````````````````````````...
09/10/2025

டெக்ஸ்டைல் துறையில் மூன்று தசாப்த அனுபவம் வாய்ந்த TEX
```````````````````````````````````````````````````````````````````
வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட ஆண்,பெண் இருபாலருக்குமான தரமான துணி வகைகள்.

பெண்களுக்கான அனைத்து விதமான துணி வகைகள், அபாயா துணி வகைகள், மற்றும் ஏனைய துணி வகைகளையும் சில்லறையாகவும், மொத்தமாகவும் நியாய விலையில் பெற்றிடலாம்.

TEX
159 ,டீன் வீதி(மத்திய பகுதியில்) காத்தான்குடி-06 தொடர்புகளுக்கு அழையுங்கள் 0772220526, 0740486683

மேலதிக விபரங்களுக்கு whatsapp உடன் இணைந்திடுங்கள்.
https://chat.whatsapp.com/DiCYx0RUFuL4QlguMPPnb6

காத்தான்குடி பிரதேச செயலக கணக்காளராக ARA முப்லி இன்று (08) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.காத்தான்குடி பிரதேச செயலகத்தி...
08/10/2025

காத்தான்குடி பிரதேச செயலக கணக்காளராக
ARA முப்லி இன்று (08) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கணக்காளராக கடமையாற்றிய சித்ராவின் இடமாற்றத்தையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ARA முப்லி கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரியா விடை நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2016.02.19 -2025.10.07  வரை சுமார் 09   வருடங்கள்  கணக்காளராக கடமையா...
08/10/2025

பிரியா விடை நிகழ்வு

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2016.02.19 -2025.10.07 வரை சுமார் 09 வருடங்கள் கணக்காளராக கடமையாற்றிய செல்வி. கே.சித்ரா அவர்கள் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று செல்லும் முகமாக அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது (07) பிரதேச செயலாளர் திருமதி .நிஹாறா மௌஜுத் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம். எஸ்.சில்மியா , நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ். றஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம். எம்.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி. பீ.ஜெயராஜ் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் போது பிரதேச செயலாளரினால் கணக்காளர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

🔸ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்..!ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸின் கொழும...
07/10/2025

🔸ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பொன்று கட்சியின் தேசியத்தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஞாயிற்றுக்கிழமை (5) முஸ்லிம் காங்கிரஸ், தலைமையகமான தாருஸ்ஸலாமில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிஸாம்தீனின் தலைமையில். கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் சுஹைர் அத்தாசின் வழிநடத்தலில் இளைஞர் காங்கிரஸ் புதிய பரிமாணம் பெற்றுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் சிறப்பு பேச்சாளராக புத்தளம் மாவட்ட முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கல்வியின் மூலம் சமுதாயத்தை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை பெற வழிகாட்டுதல், சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறையை மேம்படுத்துதல், இளைஞர்களை ஆபத்தான போதைப் பொருள்களிலிருந்து பாதுகாத்தல் போன்ற இன்னோரன்ன வேலைத் திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்த இவ்வமைப்பு திடசங்கட்பம் பூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-- ஊடகப்பிரிவு

பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு புதிய நிரந்தர கணக்காளராக ஒலுவில் சபானா நியமிக்கப்பட்டுள்ளார் ; வாழ்த்துக்கள் Oluvil - Me...
07/10/2025

பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு புதிய நிரந்தர கணக்காளராக ஒலுவில் சபானா நியமிக்கப்பட்டுள்ளார் ; வாழ்த்துக்கள்

Oluvil - Media | 07-10-2025

ஒலுவில் பிரதேசத்தினைச் சேர்ந்த செல்வி.எஸ். பாத்திமா சபானா அவர்கள் கணக்காளராக இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய கணக்காளர் வாழ்த்தி வரவேற்கப்பட்டதுடன் அவருக்கான வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வணிக நிர்வாக இளங்கலை பட்டதாரியான செல்வி.எஸ். பாத்திமா சபானா இலங்கை கணக்காளர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து

ஒலுவிலில் சித்தியடைந்த முதல் பெண்மணி என்ற பெருமையையும் தனதாக்கி கொண்டவராவார்.

ஜனாப். ஐ.எல். சகாப்தீன் திருமதி. எம்.ஐ. ஜாரியா தம்பதிகளின் ஏக புதல்வியான கணக்காளர் செல்வி.எஸ். பாத்திமா சபானா அரச நிர்வாக சேவையில் தனது முதலாவது நியமனத்தினை பொத்துவில் பிரதேச செயலகத்தில் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம். சுபைர், நிதி உதவியாளர் ஜனாப். சுபைர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஜனாப். அமானுல்லாஹ் பிரிவுகளின் தலைவர்கள் உத்தியோகத்தர் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் மூன்று நிகழ்வுகள் எஸ்.எம்.எம்.முர்ஷித்.ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சிறுவர் தினம்...
07/10/2025

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் மூன்று நிகழ்வுகள்

எஸ்.எம்.எம்.முர்ஷித்.

ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சிறுவர் தினம், முதியோர் வாரம் மற்றும் மாதாந்தம் நடாத்தும் பௌர்ணமி தின நிகழ்வு என்பன நேற்று திங்கட்கிழமை (06.10.2025) மாலை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேசத்தின் மூத்த கல்விமான் ஏ.எம்.ஏ.காதர், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

சிறுவர் கழக உறுப்பினர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, பாடசாலை மாணவர்களுக்கிடையில் விவாதப்போட்டி, முதியோர்களின் கலை நிகழ்ச்சிகளும் என்பன இடம்பெற்றன.

சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கோறளை மத்தியில் திண்மக்கழிவகற்றல் ஆரம்பம்காதர் ஏ.சீ.எம் கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபையின் நான்காவது அமர்வில் எடுக்...
07/10/2025

கோறளை மத்தியில் திண்மக்கழிவகற்றல் ஆரம்பம்

காதர் ஏ.சீ.எம்

கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபையின் நான்காவது அமர்வில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானத்திற்கமைவாக கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டாரங்களில் திண்மக்கழிவகற்றும் நடவடிக்கை இன்று (06) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இம்முக்கிய திட்டத்திம் முதற்கட்டம் செம்மண்ணோடை, மாவடிச்சேனைப் பிரதேசங்களில் கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திண்மக்கழிவகற்றும் இச்செயற்பாடு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை குறித்த வட்டாரங்களில் தவறாமல் இடம்பெறுமெனவும் படிப்படியாக கோறளை மத்தியிலுள்ள ஏனைய அனைத்து வட்டாரங்களிலும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுமென்றும் மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தைச்செயற்படுத்தித் தந்த பிரதேச சபைத்தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் அவர்களுக்கு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட செம்மண்ணோடை மற்றும் மாவடிச்சேனை வட்டாரத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதேச சபை உறுப்பினர்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.

இந்நிகழ்வில், அதிதிகளாகக் கலந்து கொண்ட தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன், வாகனங்களுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் முஹம்மது ரஹீம் மற்றும் சுகாதார விடயங்களுக்குப் பொறுப்பான பிரதேச சபையின் உறுப்பினர் எம்.அனஸ் ஆகியோருக்கு பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

மக்களின் சுகாதாரத்தைப்பேணும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கை, அப்பிரதேச மக்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி எம்.ஏ.முஹம்மது நிப்ராஸ் மொழிபெயர்ப்பாளராக நியமனம்மட்டக்களப்பு மாவட்டம், ஓட்டமாவடியைப் பிறப்பிடமாகக் கொண்ட முஹம...
07/10/2025

ஓட்டமாவடி எம்.ஏ.முஹம்மது நிப்ராஸ் மொழிபெயர்ப்பாளராக நியமனம்

மட்டக்களப்பு மாவட்டம், ஓட்டமாவடியைப் பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மது அபூபக்கர் முஹம்மது நிப்ராஸ், 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் நீதியமைச்சினால் நடாத்தப்பட்ட மொழிபெயர்ப்பாளரைத்தெரிவு செய்வதற்கான போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து இன்று 07.10.2025ம் திகதி செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ரதீப் அஹமட் முன்னிலையில் (தமிழ்/சிங்களம்) மொழிபெயர்ப்பாளராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் பழைய மாணவராவார். தனது உயர் கல்வியை இலங்கை களனி பல்கலைக்கழகத்திலும் மும்மொழி உயர்தேசிய டிப்ளோமா,(தமிழ்/சிங்களம்) மொழிபெயர்ப்பு டிப்ளோமா, இரண்டாம் மொழி கற்பித்தல் பயிற்சி டிப்ளோமா போன்ற பாடநெறிகளையும் பூர்த்தி செய்துள்ளார்.

தற்போது சட்டமாஅதிபர் திணைக்களத்தில் பணியாற்றி வருவதுடன், இவர் 2023ம் ஆண்டு முதல் அகில இலங்கை சமாதான நீதவானாகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Thehotlinelk

அதான் கூறுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற றிப்கி நேற்று (2025.10.06) திருகோணமலை, மூதூர் மத்திய கல்லூரியில் நடைபெற்ற ம...
07/10/2025

அதான் கூறுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற றிப்கி

நேற்று (2025.10.06) திருகோணமலை, மூதூர் மத்திய கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட இஸ்லாமிய கலாசார போட்டியில் அதான் கூறுதல் 2ம் பிரிவில்
இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலய மாணவன் முஹம்மது றிப்கி முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று தேசிய போட்டிக்குத்தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தங்கப்பதக்கம் வென்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த மாணவனுக்கு பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.
Thehotlinelk

ஆசிரியர் தினத்தில் கல்வியலாளர்களுக்கு மகுடம் சூட்டிய மீஸான் பௌண்டஷன் : பல கட்சி பிரமுகர்களும் பங்கெடுப்பு !கடந்த 20 வருட...
07/10/2025

ஆசிரியர் தினத்தில் கல்வியலாளர்களுக்கு மகுடம் சூட்டிய மீஸான் பௌண்டஷன் : பல கட்சி பிரமுகர்களும் பங்கெடுப்பு !

கடந்த 20 வருடங்களாக சாதனையாளர்களை பாராட்டி கௌரவித்து வரும் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா அதன் தொடர்ச்சியாக சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலய ஆசிரியர்கள் கௌரவிப்பும், சாதாரண தர மாணவிகளுக்கான பாராட்டும் நிகழ்வான "Constellations Awards - 2025" கௌரவிப்பு நிகழ்வை ஆசிரியர் தினமான நேற்று (2025.10.06) மாளிகைக்காடு வாவா றோயளி மண்டபத்தில் கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலய அதிபர் ஏ.எச். அலி அக்பர் அவர்களின் நெறிப்படுத்தலில் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளர் சபை முன்னாள் உறுப்பினருமான யூ.எல். நூருல் ஹுதா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.ஏ. அப்துல் ரஸாக் (ஜவாத்), கல்முனை கல்வி வலய நிர்வாக பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர், ஓய்வு பெற்ற பிரதிக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர் தின சிறப்புரை நிகழ்த்தினர்.

மேலும் இந்நிகழ்வில் அல் அஸ்ஹர் வித்தியாலய பிரதி அதிபர் எஸ்.எம்.எஸ். ரிசானா, உதவி அதிபர்களான திருமதி ஏ.பி.என். ஜஸீல், எம்.எச்.ஐ. இஸ்ஸத், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஆளுநர் சபை உறுப்பினர்கள், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டதுடன் கடந்த சாதாரண தர பரீட்சையில் சிறப்பு சித்தியெய்திய மாணவிகள், ஆசிரியர்கள், கல்வியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

காத்தான்குடி அல்ஹிரா மாணவன் நஸீம் ஸைதின் முன் மாதிரியும் பிரமாண்ட சதுரங்கப் போட்டியும்..காத்தான்குடி அல்ஹிரா வித்தியாலயத...
07/10/2025

காத்தான்குடி அல்ஹிரா மாணவன் நஸீம் ஸைதின் முன் மாதிரியும் பிரமாண்ட சதுரங்கப் போட்டியும்..

காத்தான்குடி அல்ஹிரா வித்தியாலயத்தில் தரம் 10ல் கல்வி கற்று வரும் மாணவன் நஸீம் ஸைத் தனது இளம் வயதிலேயே பல்வேறு சதுரங்க போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களையும் கேடயங்களையும் சான்றிதழ்களையும் பெற்றிருக்கின்றார். மேலும் தனது சொந்த முயற்சியில் Royal Chess Club என்ற பெயரில் சதுரங்க அணி ஒன்றினை உருவாக்கி தொடர்ச்சியாக பயிற்றுவிப்புகளை வழங்கி வருகின்றார். மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு போட்டிகளுக்கும் தனது அணிப் போட்டியாளர்களை அழைத்துச் சென்று வெற்றிகளையும் பெற்றிருக்கின்றார்.

அந்தத் தொடரில் கடந்த 2025.10.06 திங்கட்கிழமை தனது Royal Chess Clubன் ஏற்பாட்டில் பிரம்மாண்டமான சதுரங்க போட்டி ஒன்றினை காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் நடாத்தி முடித்திருக்கின்றார். காத்தான்குடி, காங்கேயனோடை, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் இருந்து 29 மாணவ மாணவிகள் மேற்படி சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.

போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பங்கு பற்றியமைக்கான சான்றிதழ்களும் சிறந்த முறையில் விளையாடிய 10 மாணவர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டதோடு அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மூன்று மாணவர்களுக்கு நினைவுக் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு மிகச் சிறிய வயது விளையாட்டு வீரர் ஒருவருக்கு விஷேட விருது ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய மாணவர் சமுதாயத்துக்கு மத்தியில் பல மாணவர்கள் தமது ஓய்வு நேரங்களை வீணாக கழித்துக் கொண்டிருக்கும் நிலையில் தனக்கு வருமானம் தரக்கூடிய சதுரங்கப் பயிற்சியாளராக கடமையாற்றுவதோடு தரம் 10 கல்வி கற்கும் நிலையில் ஒரு பிரமாண்டமான சதுரங்க சுற்றுப்போட்டியையும் ஏற்பாடு செய்தமை இன்றைய மாணவர் சமுதாயத்துக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.

Address

4th Cross Road
Kattankudi

Alerts

Be the first to know and let us send you an email when Velli Velichcham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Velli Velichcham:

Share

Category