Velli Velichcham

Velli Velichcham Media

📌காத்தான்குடிக் கடற்கரையில் குப்பைகளை இடுபவர்களுக்கு எதிராக இன்று(01) முதல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கௌரவ நகர மு...
01/06/2026

📌காத்தான்குடிக் கடற்கரையில் குப்பைகளை இடுபவர்களுக்கு எதிராக இன்று(01) முதல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கௌரவ நகர முதல்வர் அல்ஹாஜ் SHM.அஸ்பர் JP தெரிவிப்பு.

01/06/2026

📌காத்தான்குடிக் கடற்கரையிலிருந்து
நகர சபையின் கெளரவ நகர முதல்வர் அல்ஹாஜ் SHM. அஸ்பர் JP அவர்கள்.

📌காத்தான்குடிக் கடற்கரையில் குப்பைகளை இடுபவர்களுக்கு எதிராக இன்று(01) முதல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கௌரவ நகர முதல்வர் அல்ஹாஜ் SHM.அஸ்பர் JP தெரிவிப்பு.

டெக்ஸ்டைல் துறையில் மூன்று தசாப்த அனுபவம் வாய்ந்த   TEX`````````````````````````````````````````````````````````````````...
31/05/2026

டெக்ஸ்டைல் துறையில் மூன்று தசாப்த அனுபவம் வாய்ந்த TEX
```````````````````````````````````````````````````````````````````
வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட ஆண்,பெண் இருபாலருக்குமான தரமான துணி வகைகள்.

பெண்களுக்கான அனைத்து விதமான துணி வகைகள், அபாயா துணி வகைகள், மற்றும் ஏனைய துணி வகைகளையும் சில்லறையாகவும், மொத்தமாகவும் நியாய விலையில் பெற்றிடலாம்.

TEX
159 ,டீன் வீதி(மத்திய பகுதியில்) காத்தான்குடி-06 தொடர்புகளுக்கு அழையுங்கள் 0772220526, 0740486683

மேலதிக விபரங்களுக்கு whatsapp உடன் இணைந்திடுங்கள்.
https://chat.whatsapp.com/DiCYx0RUFuL4QlguMPPnb6

டீ, காப்பி, கிரீன் டீ, லெமன் வாட்டர், பால், தண்ணீர், இளநீர் போன்றவற்றை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் என தெரியுமா!     ...
31/05/2026

டீ, காப்பி, கிரீன் டீ, லெமன் வாட்டர், பால், தண்ணீர், இளநீர் போன்றவற்றை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் என தெரியுமா!

இன்றைய வானிலை 2026.05.31சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவரெலியா ம...
31/05/2026

இன்றைய வானிலை
2026.05.31

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும் , வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
**************************

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

முல்லைத்தீவு தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையான அத்துடன் ‌காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 - 65 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழ உள்ள ஏனைய பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

கல்பிட்டி தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.0 - 2.5 m உயரத்திற்கு மேலெளக்கூடும். ஆனால் இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.

பத்து வயது தங்கையை, பதினைந்து வயது சகோதரன் கழுத்து நெரித்து  கொலை!கைத்தொலைபேசியினால்  வந்த வினை!! ஏறாவூர் -05 யில் சம்பவ...
31/05/2026

பத்து வயது தங்கையை, பதினைந்து வயது சகோதரன் கழுத்து நெரித்து கொலை!

கைத்தொலைபேசியினால் வந்த வினை!! ஏறாவூர் -05 யில் சம்பவம்.

( MSM. நஸீர் - ISD, ஏறாவூர்)

நாட்டில்
ஏற்பட்டிருந்த யுத்த சூழ்நிலை காரணமாக திருகோணமலையிலிருந்தும் ,யாழ்ப்பாணத்திலிருந்தும் முறையே 1990, 2000ம ஆண்டுகளில் இரு வெவ்வேறு குடும்பங்கள் படகு மூலம் இந்தியா தமிழ்நாட்டுக்கு சென்று கண்ணியாகுமரி ,பெருமாள்நகர அகதிமுகாமில் தங்கியிருந்த வேளை இவ்விரு குடும்பங்களிலிருந்தும் திருகோணமலை மாப்பிள்ளையும், யாழ்ப்பாண பெண்ணுமாக திருமணம் செய்து ஒரு ஆண் மகனையும், ஒரு பெண் மகளையும் பெற்றெடுத்திருக்கின்றனர்.
1990 யில் இந்தியாவுக்கு அகதியாக வரும்போது திருகோணமலையை சேர்ந்த சகோதரருக்கு 07 வயது. யாழ்ப்பாண பெண் 2000 ஆண்டு இந்தியா வரும்போது 11 வயதாகவும் இருந்திருக்கிறது.

சுமார் 35 வருடமாக அகதி முகாமிலேயே காலத்தை கடத்திய இவர்களுக்கு குடியுரிமை கிடைக்காததால், சொந்த நாட்டுக்கு செல்வோம் என முடிவெடுத்து, எங்கு போகலாம் என்று யோசிக்கும்போது, குறித்த முகாமிலிருந்த மட்டக்களப்பு சகோதர் ஒருவரின் ஆலோசனைப்படி ,07 -02-2026 அன்று தாய்நாட்டுக்கு வந்து செங்கலடியில் ஒருமாதமளவில் தெரிந்தவரின் வீட்டில் தங்கியிருந்த வேளை இரு பிள்ளைகளையும் செங்கலடி மத்திய கல்லூரியில் சேர்த்திருக்கின்றனர்.

அதன் பின்னர் ஏறாவூர், ஐந்தாம் குறிச்சி வெற்றிவேல் வீதியில் வீடொன்றை கொள்வனவு செய்து நான்குபேரும் 05-04-2026 தொடக்கம் அங்கேயே தங்கியிருந்துள்ளனர்,

குழந்தைகளின் தந்தைக்கு STUDIO வேலை தெரிந்திருந்ததால் அதன் முயற்சியில் அவர் ஈடுபட, குழந்தைகளின் தாய், அவரது அம்மாவுக்கு சுகமில்லையென அறிந்து 19-05-2026 அன்று இந்தியா சென்றிருக்கிறார்.

தற்போது வீட்டில் தந்தையும் இரு பிள்ளைகளுமே இருந்துள்ளனர்.

28-05-2026 அன்று வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு 15 வயது மகனை தனியார் வகுப்புக்கு அனுப்பி வைத்துவிட்டு , மகளை அழைத்துக்கொண்டு பிறந்தநாள் நிகழ்வொன்றின் படப்பிடிப்புக்காக தந்தை சென்றிருக்கிறார்.

மகன் பாடமுடிந்து வீட்டுக்கு வந்திருப்பதை அறிந்த தந்தை, தன்னுடன் அழைத்துச்சென்ற மகளை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து, "இருவருமாக வீட்டில் கவனமாக இருந்துகொள்ளுங்கள் ,பகல் சாப்பாடு சமைத்து வைத்திருக்கிறேன், உரிய நேரத்திற்கு சாப்பிடுங்கள் ,நான் வேலைக்கு சென்று வருகிறேன் , சிலவேளை அம்மா இந்தியாவிருந்து Call எடுத்தால் பேசுங்கள் எனக்கூறி அவரது கைத்தொலைபேசியையும் பிள்ளைகளிடத்தில் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.

வேலைக்கு சென்றிருந்த தந்தை பிற்பகல் 01.30 மணியளவில் Call எடுத்தபோது , பேசிய பிள்ளைகள் பிற்பகல் 03.15 மணியளவில் Call எடுத்த போது எவருமே பேசவில்லையென்ற கவலையுடன் வேலைமுடிந்து பிற்பகல் 04.30 மணிக்கு வீடுவந்தபோது, தனது மகள் குளியலறையில் நீர்நிறைந்த பிளாஸ்டிக் வாளியினுல் தலை அமிழ்ந்த நிலையில் உணர்வற்றுக்கிடப்பதை கண்டதும் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது "மகள் மரணமடைந்திருப்பதை " வைத்தியர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
தங்கையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது, அண்ணனும் கூடவே சென்றுமிருக்கிறார்.

உடனடியாக ஏறாவூர் பொலிசாரின் வேண்டுகோளின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற. மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர், சம்பவ இடம்பெற்ற இடத்திலுள்ள ஆதாரங்களை பார்வையிட்டு பின்னர் வைத்தியசாலை சென்று சிறுமியின் பிரேதத்தை பார்வையிட்ட போது , சிறுமியின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக கண்டறிந்து, மேற்கொண்டு விசாரணைகளை தொடர, கௌரவ நீதிபதிக்கு விடயத்தை தெரியப்படுத்துமாறு பொலிசாரை பணித்தார்.

விடயமறிந்து 29-05-2026 நாடு திரும்பிய சிறுமியின் தாய், மாலை 06.45 க்கு வீடு வந்தபோது, " குழந்தையின் மரணத்தில் மகனில்தான் சந்தேகமிருப்பதாக விசாரணையாளர் தெரிவித்திருப்பதால், தயவுசெய்து நீயாவது மகனை தனியாக வைத்து கேள் " என்று கணவர் சொன்னதும், திடுக்கிடும் உண்மை வெளியானது.

கைத்தொலைபேசியை தன்னிடம் தருமாறு தங்கையுடன் சண்டைபோட்ட எனக்கு, தங்கை கையில் அடித்ததால், கோபமடைந்த நான் பதிலுக்கு நானும் அடித்து ,கீழே தள்ளி கைகளால் கழுத்துத்தை நெரித்து பிடித்தபோது மயக்கமாகிவிட்டார். அதன் பின்னர் பயம் காரணமாக நானே தங்கையை தூக்கிக்கொண்டு குளியலறையில் பிளாஸ்டிக் வாளிக்குள் தண்ணீரை நிரப்பி, அதனுல் சோப் ஒன்றையும் போட்டு தங்கையை நீரில் அமிழ்ந்தவாறு வைத்துவிட்டு, பாடத்துக்கு செல்வதுபோல் சென்றுவிட்டேன் ...என்ற அதிர்ச்சி தகவலை சொன்னதும் ஏறாவூர் பொலிசாருக்கு பெற்றோர் விடயத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டு விசாரணைகளை பொலிசார் தொடங்கினர்.

கௌரவ பதில் நீதிபதியின் கட்டளைக்கமைவாக சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று நடைபெற்ற போது (30/05) ," கைகளால் கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட மரணமே " என கண்டறியப்பட்டு , சிறுமியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுவன் , "சிறுவர் நன்னடத்தை பிரிவில்" ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

கைத்தொலைபேசிக்காக. முரண்டு பிடிக்கும் நமது குழந்தைகள் விடயத்திலும் கவனமாகயிருப்போம்.

ஜனாஸா பற்றிய அறிவித்தல்காத்தான்குடி 2 மெத்தை பள்ளி வீதி இப்றாலெப்பை மரைக்கார் ஒழுங்கையைச் சேர்ந்த ஹாஜியாணி. பாத்தும்மா அ...
31/05/2026

ஜனாஸா பற்றிய அறிவித்தல்

காத்தான்குடி 2 மெத்தை பள்ளி வீதி இப்றாலெப்பை மரைக்கார் ஒழுங்கையைச் சேர்ந்த ஹாஜியாணி. பாத்தும்மா அவர்கள் இன்று காலை 6 மணி அளவில் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் மர்ஹும்களான முஹம்மது இஸ்மாயில் மற்றும் அவ்வாப்பிள்ளை(செய்னம்பு)ஆகியோரின் அன்பு மகளும் மர்ஹும் அல்ஹாஜ்.M.L.அப்துல் மஜீட் அவர்களின் அன்பு மனைவியும் மர்ஹும் அல்ஹாஜ். ஆதம்பாவா, வெள்ளைத்தம்பி(Radio shop) மற்றும் மர்ஹும்களான , ஹனிபா மற்றும் ஆமினா ஆகியோரின் சகோதரியும் பேராசிரியர்.AMM. முஸ்தபா ( இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்), AM. அன்வர் சதாத் (Amro Photocopy Shop), AM.சித்தி றபா(ஓய்வு பெற்ற ஆசிரியை), AM. சித்தி மர்ஜான்( ஓய்வு பெற்ற ஆசிரியை),AM. சித்தி அனூபா( காத்தான்குடி பிரதேச செயலகம்), பாத்திமா சில்சியா ( ஆசிரியை, மெத்தை பள்ளி வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத்தாயாரும் CM.ஆதம்லெப்பை ( ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்) மர்ஹும் I. ஜுனைதீன்(ஆசிரியர்), MY. ஆதம்(மாவட்ட செயலகம், மட்டக்களப்பு) ABM.மாஹிர்(The Acaddemey) பரீதா முஸ்தபா ( இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்) மற்றும் மாஹிரா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்று 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகையின் பின்னர் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் நடத்தப்பட்டு அதே பள்ளி மையவடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

“புகையிலையற்ற வாழ்க்கை – ஆரோக்கியமான எதிர்காலம்”ஒவ்வொரு ஆண்டும் மே 31 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச புகையிலை ஒழிப்பு ...
31/05/2026

“புகையிலையற்ற வாழ்க்கை – ஆரோக்கியமான எதிர்காலம்”
ஒவ்வொரு ஆண்டும் மே 31 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச புகையிலை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது
புகையிலைப் பயன்பாட்டினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், புகையிலையற்ற சமுதாயத்தை உருவாக்குவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
புகைப்பிடித்தல் மற்றும் புகையிலைப் பொருட்களின் பயன்பாடு புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய்கள் உள்ளிட்ட பல தீவிர நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமன்றி, அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் இரண்டாம் நிலைப் புகை (Second-hand Smoke) மூலம் பாதிக்கப்படுகின்றனர்.
புகையிலை ஏன் ஆபத்தானது?
புகையிலையில் 7000 க்கும் மேற்பட்ட இரசாயனப் பொருட்கள் உள்ளன. அவற்றில் பல புற்றுநோய் உண்டாக்கக்கூடியவை.
புகையிலைப் பயன்பாட்டினால்
* நுரையீரல் புற்றுநோய்
* வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய்
* இதய நோய் மற்றும் பக்கவாதம்
* சுவாசக் கோளாறுகள்
* கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பா திப்புகள் ஏற்படுகின்றன. இரண்டாம் நிலைப் புகை (Second-Hand Smoke)
புகைப்பிடிக்காதவர்களும் புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் புகையை சுவாசிக்க நேரிடுகிறது. இது குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் ஆபத்தானதாகும். 1. பொருளாதார பாதிப்பு
ஒரு நபர் தினமும் சிகரெட் அல்லது புகையிலைப் பொருட்களுக்காக செலவிடும் பணம், மாதாந்திரமாகவும் வருடாந்திரமாகவும் பெரும் தொகையாக மாறுகிறது. அந்த பணத்தை குடும்ப நலன், கல்வி அல்லது சேமிப்புக்காக பயன்படுத்த முடியும்.
புகையிலையைத் தவிர்ப்பதன் மூலம்:
* நுரையீரல் மற்றும் இதய ஆரோக்கியம் மேம்படும்.
* புற்றுநோய் அபாயம் குறையும்.
* குடும்பத்தின் பொருளாதார சுமை குறையும்.
* ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.
* சுவாசம் சீராகும்
* இதய நோய் அபாயம் குறையும்
* உடல் சக்தி அதிகரிக்கும்
* குடும்பத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்
* பணச் சேமிப்பு அதிகரிக்கும்
* ஆயுள் நீடிக்கும்
நமது பொறுப்பு
புகையிலையை விடுவோம் – உயிர்களைக் காப்போம்!"
இன்றே புகையிலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்; நாளைய தலைமுறையை பாதுகாப்போம்!
இந்த சர்வதேச புகையிலை ஒழிப்பு தினத்தில், நாமும் நமது குடும்பத்தினரும் புகையிலையற்ற வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க உறுதிபடுவோம். பொதுமக்கள் இடங்களில் புகைப்பிடித்தல் தடை
பின்வரும் இடங்களில் புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது:
* வைத்தியசாலைகள்
* பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்
* அரச அலுவலகங்கள்
* பேருந்துகள், தொடருந்துகள் மற்றும் பொது போக்குவரத்து
* உணவகங்கள் மற்றும் பல மூடப்பட்ட பொதுமக்கள் இடங்கள்
சட்டத்தை மீறுவோருக்கு அபராதம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.
21 வயதிற்குக் குறைந்தவர்களுக்கு விற்பனை தடை
21 வயதிற்குக் குறைவான நபர்களுக்கு சிகரெட் அல்லது வேறு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது சட்டவிரோதமாகும்.
4. விளம்பரங்கள் முழுமையாக தடை
சிகரெட் அல்லது புகையிலைப் பொருட்களுக்கான
* தொலைக்காட்சி விளம்பரம்
* வானொலி விளம்பரம்
* பதாகை மற்றும் போஸ்டர் விளம்பரம்
* விளையாட்டு மற்றும் நிகழ்ச்சி அனுசரணை
என அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன.
4. சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை படம் கட்டாயம்
2015 திருத்தச் சட்டத்தின் படி, சிகரெட் பெட்டியின் முன் மற்றும் பின்புறத்தின் 80% பகுதியை சுகாதார எச்சரிக்கை படங்கள் ஆக்கிரமிக்க வேண்டும்.
மெல்லும் புகையிலை மற்றும் சில புதிய புகையிலைப் பொருட்கள்
மெல்லும் புகையிலைப் பொருட்கள் (Smokeless To***co) விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மின்னணு புகையிலை (E-cigarette) மற்றும் Heated To***co Products தொடர்பான விற்பனை, இறக்குமதி மற்றும் சந்தைப்படுத்தலுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன.
சட்டத்தின் முக்கிய நோக்கம்
* இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கங்கள்:
* புகையிலையால் ஏற்படும் நோய்களை குறைத்தல்
* இளைஞர்களை புகையிலையிலிருந்து பாதுகாத்தல்
* பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தல்
* புகையிலைப் பயன்பாட்டை குறைத்தல்
புகையிலை ஒரு தனிப்பட்ட பழக்கம் மட்டுமல்ல; அது சமூகத்தையும் பாதிக்கும் ஒரு பொதுச் சுகாதார பிரச்சினை.
இலங்கை சட்டமும் புகையிலைக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக புகையிலையற்ற வாழ்வை தேர்வு செய்வோம்.
RDHS Batticaloa

30/05/2026

மட்டக்களப்பில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வெசாக் பண்டிகையின் சில காட்சிகள்.

Address

4th Cross Road
Kattankudi

Alerts

Be the first to know and let us send you an email when Velli Velichcham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Velli Velichcham:

Share

Category