KKYxpress

KKYxpress KKYxpress Media Network

உள்ளூர், உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகள் அனைத்தையும் முகநூல் ஊடாக சுமந்து வரும் செய்திச் சேவை.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான Z புள்ளி இன்று வெளியாகும்.....2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக...
25/08/2025

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான Z புள்ளி இன்று வெளியாகும்.....

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான Z புள்ளி இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 06 மணிக்கு பின்னர் குறித்த Z புள்ளி வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
(தமிழன்)

காசாவில் இஸ்ரேல் கடும் தாக்குதல் – பஞ்சம் அறிவிப்பு – போசணை குறைபாட்டால் மேலும் எட்டுப் பேர் பலி.....காசா நகரின் புறநகரங...
25/08/2025

காசாவில் இஸ்ரேல் கடும் தாக்குதல் – பஞ்சம் அறிவிப்பு – போசணை குறைபாட்டால் மேலும் எட்டுப் பேர் பலி.....

காசா நகரின் புறநகரங்களில் இஸ்ரேலிய விமானங்கள் மற்றும் டாங்கிகள் கடந்த சனிக்கிழமை (23) இரவு தொடக்கம் கடும் தாக்குதல்களை நடத்தி கட்டடங்கள் மற்றும் வீடுகளை அழித்து வருவதாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில் காசா நகரை கைப்பற்றும் திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதில் இஸ்ரேலிய தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.

செய்தூன் மற்றும் ஷெஜையா பகுதிகளில் இரவு முழுவதும் இடைவிடாது வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக பார்த்தவர்கள் விபரித்திருக்கும் அதேநேரம் அருகாமையில் உள்ள சப்ரா பகுதியில் செல் குண்டுகள் வீடுகள் மற்றும் வீதிகளை தகர்த்து வருகின்றன.

வடக்கே சிறு நகரான ஜபலியாவிலும் இஸ்ரேலிய குண்டுகளால் பல கட்டடங்களும் அழிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜபலியா பகுதியில் போராளிகளின் சுரங்கப்பாதைகளை அகற்றி அங்கு கட்டுப்பாட்டை பலப்படுத்துவதற்காக அந்த பகுதியில் படையினர் மீண்டும் போருக்கு திரும்பியதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று (24) குறிப்பிட்டது.

இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கை மூலம் போரை மேலதிக பகுதிகளுக்கு விரிவுபடுத்த முடியுமாவதோடு இங்கு ஹமாஸ் ‘போராளிகள்’ போர் நடவடிக்கைக்கு திரும்புவதை தடுக்க முடியுமாவதாகவும் இஸ்ரேல் இராணுவம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

காசா நகரை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் இந்த மாத ஆரம்பத்தில் ஒப்புதல் அளித்திருந்தது.

அதனை ஹமாஸின் கடைசி கோட்டை என்றும் இஸ்ரேல் கூறியது. எனினும் போர் நிறுத்தம் ஒன்றுக்கு மத்தியஸ்த நாடுகளான கட்டார் மற்றும் எகிப்து முயன்று வரும் நிலையில் இந்த படை நடவடிக்கை அடுத்த சில வாரங்களில் இடம்பெறாது என்று நம்பப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடும் எதிர்ப்புகள் வெளியாகும் நிலையில், தாக்குதலை தொடர்வதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் நேற்று (24) வலியுறுத்தி இருந்தார்.

வெடிப்புச் சத்தங்கள் மற்றும் வானில் தீப்பிழம்புகள் வெளியாகும் நிலையில் மக்கள் அச்சத்தில் வெளியேறி வரும் அதேநேரம் மேலும் சிலர் வெளியேறுதை விட மரணிப்பது மேல் என்று குறிப்பிட்டுள்ளனர்.

காசாவின் இரண்டு மில்லியன் மக்களில் சுமார் பாதி அளவானவர்கள் தற்போது காசா நகரிலேயே தங்கியுள்ளனர். சில ஆயிரம் பேர் தமது உடைமைகளை சுமந்தபடி ஏற்கனவே நகரை விட்டு வெளியேறி உள்ளனர்.

‘நாட்களை எண்ணுவதை நிறுத்தி விட்டு எனது மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் காசா நகரில் எனது வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன்’ என்று 40 வயதான மொஹமட் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

எந்த இடமும் பாதுகாப்பானதல்ல, ஆனால் அபாத்தில் இறங்க முடியாது. அவர்கள் திடீரென்று ஆக்கிரமிப்பை ஆரம்பித்தால், கடுமையான சூடு நடத்துவார்கள்’ என்று சாட் செயலி வழியாக அவர் குறிப்பிட்டார்.

என்ன நடந்தாலும் வெளியேறப்போவதில்லை என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார். ‘நாம் வெளியேறப்போவதில்லை, அவர்கள் எமது வீடுகளுக்கு குண்டு வீசட்டும்’ என்று எட்டுப் பேர் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த 31 வயது அயா என்ற பெண் தெரிவித்துள்ளார்.

தமக்கு கூடாரம் வாங்குதவதற்கு, போக்குவரத்துக்கு, உணவு வாங்குவதற்கு பணம் இல்லை என்றும் என்று குறிப்பிட்டிருக்கும் அவர், ‘நாம் பட்டினியிலும் பயத்திலும் இருக்கிறோம், எம்மிடம் பணம் இல்லை’ என்றார்.

காசா நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் உத்தியோகபூர்வமாக பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அது பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சர்வதேச பட்டினி கண்காணிப்பு நிறுவனம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.

காசாவில் போசணை குறைபாட்டால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று குறிப்பிட்டது.

இதன்மூலம் போர் ஆரம்பித்தது தொடக்கம் காசாவில் பட்டினியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 289 ஆக அதிகரித்திருப்பதோடு அவர்களில் 115 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இந்நிலையில் 22 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் காசா போரில் உயிரிழந்த பலஸ்தீனர் எண்ணிக்கை 62,686 ஆக அதிகரித்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 67 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையிலேயே உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக உதவிக்கு காத்திருந்த நிலையில் இஸ்ரேலிய படை நடத்திய தாக்குதல்களில் மேலும் 19 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன் இவ்வாறான தாக்குதல்களில் பலியான பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 2,095 ஆக அதிகரித்திருப்பதாக பலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.நா மற்றும் பிரதான தொண்டு அமைப்புகளுக்கு மாற்றாக இஸ்ரேல் ஆதரவில் முன்னெடுக்கப்படும் உதவி விநியோக இடங்களில் கூடும் மக்கள் மீதே இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
(UTV)

24/08/2025

பெண்களுக்கான இலவச நிகழ்வு.....

காத்தான்குடியின் முதலாவது பெண் நோயியல் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் டொக்டர் மஸாஹிமா பங்கேற்கும்

Live Talk Show.

24-08-2025 (இன்று)
இரவு 8.30 மணிக்கு
காத்தான்குடி Nass Campus மண்டபத்தில்...

அனைத்துப் பெண்களும் தவறாது கலந்து பயன் பெற்றுக் கொள்ள அழைக்கின்றது
Nass Campus.

சர்வதேச மனித உரிமை அமைப்பின் அறிமுக நிகழ்வும், மாணவர்களுக்கான கருத்தரங்கும்.....சர்வதேச மனித உரிமை அமைப்பின் ஏற்பாட்டில்...
23/08/2025

சர்வதேச மனித உரிமை அமைப்பின் அறிமுக நிகழ்வும், மாணவர்களுக்கான கருத்தரங்கும்.....

சர்வதேச மனித உரிமை அமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் முதலாவது நிகழ்வாக இன்று (23.08.2025) சனிக்கிழமை சர்வதேச மனித உரிமை அமைப்பு அறிமுக நிகழ்வும் மற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்கும்
மட்டக்களப்பு பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தில் சர்வதேச மனித உரிமை அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் NMM. அஜ்மல்கான் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சர்வதேச மனித உரிமை அமைப்பின் தேசிய மற்றும் சர்வதேச பணிப்பாளர் DR. அப்துல் ரசீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக மண்முனை பற்று பிரதேச சபை தவிசாளர் K.செந்தில்குமார் பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தின், அதிபர் MAM.பரீட், பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தின் அதிபர் SAM. றிஸ்வி அஸ்மியா, கெளரவ அதிதிகளாக மண்முனை தென்மேற்கு பிரதேச உறுப்பினர் சபை MAM.சியாத் (JP),
SM.ரம்சீன் (JP) கல்விமான்கள் சமூக சேவை அமைப்புகளின் தலைவர்கள் பாலர் பாடசாலை தலைவர்கள் நலம் விரும்பிகள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பேராசிரியர், கலாநிதி எஸ்.எல். றியாஸ் எழுதிய 65 நூல்களின் அறிமுகமும், கண்காட்சியும்!.....(நூருல் ஹுதா உமர்)இலங்கை சமாதான ...
23/08/2025

பேராசிரியர், கலாநிதி எஸ்.எல். றியாஸ் எழுதிய 65 நூல்களின் அறிமுகமும், கண்காட்சியும்!.....

(நூருல் ஹுதா உமர்)

இலங்கை சமாதான கற்கைகள் நிலைய பணிப்பாளர் பேராசிரியர், கலாநிதி எஸ்.எல். றியாஸ் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளில் எழுதிய 65 நூல்களின் அறிமுகமும், கண்காட்சியும் பன்னூலாசிரியர் கலாபூசணம் ஏ. பீர் முஹம்மது தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கடந்த 1996 ஆம் ஆண்டு நவமணி பத்திரிகையில் கிழக்கு மாகாண செய்தியாளராக இணைந்ததன் மூலம் தனது எழுத்துகளால் பிரகாசித்த எஸ்.எல். றியாஸ் 1996 இல் இலங்கை கிரிக்கெட் அணியின் உலக கிண்ண வெற்றியை தொடர்ந்து ஊடகவியலாளர் எம்.எம். ஜெஸ்மினும் இணைந்து சர்வதேச கிரிக்கெட் நிகழ்வுகள் என்ற தலைப்பில் டெஸ்ட் விளையாடும் அனைத்து கிரிக்கெட் அணிகளினதும் சாதனைகளை தொகுத்து ஒரு நூலை 2001 ஆம் வருடம் வெளியிட்டார். அதுவே அவரின் முதலாவது நூலாகும்.

அன்று ஆரம்பித்த அவரின் எழுத்துப் பணி இன்றும் தொடர்கிறது. குழந்தை உளவியல் பற்றி 1400 பக்கங்கள் கொண்ட தனது ஆய்வு நூலை (Understanding and supporting Children Psychological Needs) எனும் தலைப்பில் 2 பாகங்களாக வெளியிட்டிருந்தார். மேலும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டங்கள் பற்றிய ஆய்வு சுமார் 1100 பக்கங்கள் கொண்ட ஒரே நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இடம் பெறும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் Violence Against Muslims in Independent India என்ற ஆய்வு 1700 பக்கங்கள் கொண்டது. அவை 3 பாகங்களாக தொகுக்கப்பட்டுள்ளது.

The Evolution of Muslim Political Aspirations in Sri Lanka என்ற இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் கட்சி ஏன் தேவைப்பட்டது என்ற ஆய்வு ஆதிகாலம் முதல் இன்று வரை ஆய்வு செய்து சுமார் 750 பக்கங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் 21st Century Romeo and Juliet என்ற கதையானது William Shakespeare இன் Romeo Juliet கதையை அடியொற்றி எழுதப்பட்டது. Romeoவும் Juliet உம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால் சமூக ஊடகங்கள் இவர்கள் வாழ்க்கையில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தியிருக்கும் என்ற ஒரு கற்பனை நூலை உட்பட தேசிய இனப்பிரச்சினைக்கான காரணங்கள் பற்றிய பல நூல்கள் அடங்களாக 65 நூல்கள் இந்த கண்காட்சியில் இடம் பிடித்திருந்தது.

இந்நிகழ்வில் மூத்த உலமா "வரலாற்றில் ஒரு ஏடு புகழ்" மௌலவி ஏ.சி.எம். புகாரி, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. அஸ்ரப் தாஹிர், ஏ. ஆதம்பாவா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எம். நௌசாத் உட்பட நிர்வாக சேவை அதிகாரிகள், சமூக அமைப்புக்களின் பிரதானிகள், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், கலாநிதி எஸ்.எல். றியாஸ் அவர்களின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

14 கோடி பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!(தில்சாத் பர்வீஸ்)ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருள...
23/08/2025

14 கோடி பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!

(தில்சாத் பர்வீஸ்)

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அத்தோடு ஹெரோயின், ஐஸ் போதைப் பொருள், பணம் மற்றும் வாகனம் போன்றவற்றை கைப்பற்றி உள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (21) வியாழக்கிழமை இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு மாவட்டம், ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ராகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உஹனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேக நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் இருந்து 8 கிலோ 168 கிராம் ஹெரோயின், 666 கிராம் ஐஸ் போதைப் பொருள், ரூபாய் 8 இலட்சத்தி 23 ஆயிரம் (823,000.00) பணம், மின்னணு தராசு 03, கையடக்கத் தொலைபேசி 04, வாகன போலி எண் தகடுகள் 06, ஒரு கார், ஒரு வேன், ஒரு முச்சக்கர வண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக பி.என்.பீ. எனப்படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த கைது நடவடிக்கையானது, கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக வர்ண ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சுஜித் வெதமுல்லவின் கட்டளையின் பிரகாரம், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச்.கலனசிறியின் மேற்பார்வையில், அம்பாறை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்கிரமரத்னவின் வழிகாட்டுதலில், அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி கே.ஏ.எம்.பிரியங்கரவின் தலைமையிலான குழுவினர் இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பி.என்.பீ. எனப்படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அவசர சிகிச்சைப் பிரிவில் ரணில்....தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவசர சிகிச்சை ப...
23/08/2025

அவசர சிகிச்சைப் பிரிவில் ரணில்....

தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவசர சிகிச்சை பிரிவில் (ICU) சேர்க்கப்பட்டுள்ளார் .
(தமிழன்)

காத்தான்குடியில் வெகு சிறப்பாக இடம்பெற்ற ஸாஸ் பியூட்டி சலூன் அன்ட் அகடமி மற்றும் ஷாஸ் இன்டர்நேஷனல் அகாடமியின் 2025ம் ஆண்...
23/08/2025

காத்தான்குடியில் வெகு சிறப்பாக இடம்பெற்ற ஸாஸ் பியூட்டி சலூன் அன்ட் அகடமி மற்றும் ஷாஸ் இன்டர்நேஷனல் அகாடமியின் 2025ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு நிகழ்வு...

பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பங்கேற்பு....

(செய்தியாளர், பாத்திமா ஸஹ்னா)

காத்தான்குடி ஸாஸ் பியூட்டி சலூன் அன்ட் அகடமி மற்றும் ஷாஸ் இன்டர்நேஷனல் அகாடமியின் 2025ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு நிகழ்வுகள் காத்தான்குடி மத்திய கல்லூரி பரீட் மண்டபத்தில் வெகு சிறப்பாக நேற்று மாலை இடம் பெற்றது.

காத்தான்குடி, ஸாஸ் பியூட்டி சலூன் அன்ட் அகடமி மற்றும் ஷாஸ் இன்டர்நேஷனல் அகாடமியின் பணிப்பாளர் முனஸ்ஸா முனீர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு பங்கேற்று சிறப்பித்தார்.

இதன் போது டிப்ளோமா இன் மேகப், டிப்ளோமா இன் டைலரிங், டிப்ளோமா இன் ஆரி வேர்க், டிப்ளமோ இன் ப்ரீ ஸ்கூல் டீசிங், டிப்ளமோ இன் கேக் மேக்கிங் மற்றும் டிப்ளோமா இன் ஹெனா ஆகிய கற்கைகளை நிறைவு செய்த 35 மாணவிகள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன் போது ஸாஸ் பியூட்டி சலூன் அன்ட் அகடமி மற்றும் காத்தான்குடி பதுறியா வித்தியாலய மாணவிகளின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் அதிதிகளும் அனுசரணையாளர்களும் நிகழ்வின் பிரதம அதிதியினால் கௌரவிக்கப்பட்டனர்.

கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்படும் ரணில்... வீட்டிலிருந்து உணவு பெறவும் அனுமதி.....குற்றப் புலனாய்வுத் திணைக்கள...
23/08/2025

கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்படும் ரணில்... வீட்டிலிருந்து உணவு பெறவும் அனுமதி.....

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது.

இதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் உடல்நிலை பிரச்சினைகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்ற சிறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மூன்று வேளையும் வீட்டிலிருந்து உணவு பெற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் அனுமதி.....விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகால...
22/08/2025

ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் அனுமதி.....

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை 12:22 மணிக்கு சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் ரணில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(தமிழன்)

இலங்கையில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு தேசிய இனங்களே உள்ளன - பாராளுமன்றில் சர்ச்சையை ஏற்படுத்திய ஶ்ரீதரனின் கருத்து....(...
22/08/2025

இலங்கையில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு தேசிய இனங்களே உள்ளன - பாராளுமன்றில் சர்ச்சையை ஏற்படுத்திய ஶ்ரீதரனின் கருத்து....

(கே எ ஹமீட்)

இன்று (22) சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஶ்ரீதரன் இலங்கையில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு தேசிய இனங்களே உள்ளன என்று கூறிய கருத்து பாராளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எஸ். உதுமாலெப்பை எம்.பி உரையாற்றுகையில்….

இன்றைய தினம் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள ஆகிய இரு தேசிய இனங்களே உள்ளன என்று குறிப்பிட்டனர். ஆனால், முஸ்லிம் இனத்தவர்களை எவரும் நினைவுபடுத்தவில்லை,” என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், “தமிழ் இனத்தவர்களுக்கு பிரச்சினைகள் உள்ளன என்பதை நாங்களும் எங்கள் முஸ்லிம் சமூகமும் ஏற்றுக்கொள்கிறோம். அவற்றிற்கு தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் இன மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில், இனவாத பேச்சுகளை இவ் உயரிய சபையில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதை நிறுத்த வேண்டும்” என உதுமாலெப்பை எம்.பி வலியுறுத்தினார்.

கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பதற்றநிலை – களத்தில் கலகமடக்கும் படையினர்.....முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ...
22/08/2025

கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பதற்றநிலை – களத்தில் கலகமடக்கும் படையினர்.....

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அருகே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும், ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்களும் கூடியுள்ளதால் இவ்வாறு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற வளாகத்திற்கு கலகமடக்கும் படையினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.
(UTV)

Address

Kattankudi

Telephone

+94779133003

Website

Alerts

Be the first to know and let us send you an email when KKYxpress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KKYxpress:

Share