KKYxpress

KKYxpress KKYxpress Media Network

உள்ளூர், உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகள் அனைத்தையும் முகநூல் ஊடாக சுமந்து வரும் செய்திச் சேவை.

ஆபத்தாக மாறியுள்ள சாய்ந்தமருதின் பிரதான பாதைகளில் ஒன்று : உடனடி தீர்வை ஆதம்பாவா எம்.பி பெற்றுத்தர மக்கள் கோரிக்கை!.........
21/09/2025

ஆபத்தாக மாறியுள்ள சாய்ந்தமருதின் பிரதான பாதைகளில் ஒன்று : உடனடி தீர்வை ஆதம்பாவா எம்.பி பெற்றுத்தர மக்கள் கோரிக்கை!......

(நூருல் ஹுதா உமர்)

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சுனாமி வீட்டுத்திட்டங்கள் அமைந்துள்ள சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள மக்களின் பிரதான பாதை மண்சரிவில் சிக்கி அபாய நிலையில் உள்ளது. இது தொடர்பில் பல தடவைகள் உரிய அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அறிவித்தும் பயனில்லை என அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.

அரச நிறுவனங்கள் அமுல்படுத்தும் வழமையான வேலைத்திட்டங்களுக்கு தனது பெயரை வைக்க முந்தியடிக்கும் அரசியல்வாதிகள் இந்த பிரச்சினைகளை தீர்த்துவைக்க முன்வராமை அவர்களின் இயலாமையை காட்டுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.

பாடசாலை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பெண்கள் மதரஸா, கலாச்சார மண்டபம், பள்ளிவாசல், பொது விளையாட்டு மைதானம், பல்வேறு அரச காரியாலயங்கள், முக்கிய திணைக்களங்கள், பொதுமக்கள் செறிந்து வாழும் குடியிருப்பு ஆகியன உள்ள இந்த பிரதேசத்தின் பிரதான பாதை முற்றாக சிதைவடைந்து பாவனைக்கு ஆபத்தாக மாறியுள்ளது. இதனை சீரமைக்க பல்வேறு அரச காரியாலயங்களை மக்கள் நாடியும் இதுவரை பொருத்தமான தீர்வு கிட்டவில்லை.

இந்த பிரச்சினையை உடனடியாக கவனத்தில் கொண்டு தீர்வை பெற்றுத்தருமாறு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ஏ. ஆதம்பாவா அவர்களிடமும், உரிய அதிகாரிகளிடமும் மக்கள் கோரிக்கை முன்வைக்கிறார்கள்.

நிவாரண மையங்களுக்கு பாதுகாப்பு கிடையாது - பயங்கரவாத இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை.....காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்...
21/09/2025

நிவாரண மையங்களுக்கு பாதுகாப்பு கிடையாது - பயங்கரவாத இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை.....

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில், வைத்தியசாலைகள் தவிா்த்து நிவாரண மையங்கள் உள்ளிட்ட மற்ற எந்தப் பகுதிக்கும் தங்கள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடையாது என்று பயங்கரவாத இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.

இது குறித்து நிவாரண அமைப்புகளிடம் இராணுவம் கூறியுள்ளதாவது:

காஸா சிட்டியில் வைத்தியசாலைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட இடங்களாகக் கருதப்படும். எனவே, மற்ற அனைத்து நிவாரண உட்கட்டமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகலாம். எனவே, அங்கிருந்து அனைவரும் உடனடியாக வெளியேறவேண்டும் என்று பயங்கரவாத இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

ஏற்கெனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று எச்சரித்துள்ள பயங்கரவாத இஸ்ரேல் இராணுவம், தற்போது நிவாரண கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது.

இதேவேளை காஸாசிட்டியில் வசித்து வந்த சுமாா் பத்து இலட்சம் பேரில் கணிசமான எண்ணிக்கையிலானவா்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனா். ஆனால், உடல் மற்றும் பொருளாதார பிரச்சினை காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாதவா்களுக்கு பயங்கரவாத இஸ்ரேல் இராணுவத்தின் முன்னேற்றம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

காத்தான்குடியில் கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற அதி சொகுசு பேருந்து லொறியுடன் மோதி விபத்து.....கொழும்பில்...
21/09/2025

காத்தான்குடியில் கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற அதி சொகுசு பேருந்து லொறியுடன் மோதி விபத்து.....

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற அதிசொகுசு பேருந்து இன்று (21) அதிகாலை காத்தான்குடி பிரதான வீதியில் லொறி மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொறி பிரதான வீதியின் ஓரமாக உள்ள உணவகம் ஒன்றில் நிறுத்துவதற்காக வீதி ஓரமாக நிறுத்த முற்பட்டபோது பேருந்து வேகக் கட்டுப்பாட்டினை இழந்து லொறியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தின் போது முச்சக்கரவண்டி மற்றும், அதி சொகுசு பேருந்தின் முன் பகுதி பாரிய சேதத்துக்குள்ளானதுடன் லொறியின் பின் பகுதியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படாத நிலையில் பேருந்தின் சாரதி நடத்துனர், மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஐ.நா. பொதுச் சபையில் புதன்கிழமை ஜனாதிபதி உரை......நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79 ஆவது கூட்டத்...
21/09/2025

ஐ.நா. பொதுச் சபையில் புதன்கிழமை ஜனாதிபதி உரை......

நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79 ஆவது கூட்டத் தொடரில் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார்.

ஐ.நா. வெளியிட்ட திருத்தப்பட்ட தற்காலிக பேச்சாளர்களின் பட்டியலின்படி, குறித்த தினத்தில் ஜனாதிபதி பிற்பகல் அமர்வில் உரையாற்றவுள்ளார்.

எதிர்வரும் 23 முதல் 29 ஆம் திகதி வரை இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.

அரச தலைவராக தனது முதல் ஐ.நா. பொதுச் சபை உரை யில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரல், பொருளாதார மறுமலர்ச்சி முயற்சிகள் மற்றும் காலநிலை நடவடிக்கை, நிலையான வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்து அரசின் நிலைப்பாட்டைச் சுட்டிக் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
(தமிழன்)

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர மாநாடு : சவூதி உட்பட்ட நாடுகள் இஸ்ரேல் மீது கண்டனம்.......(எம்.என்.எம்.யஸீர் அறபாத் ...
21/09/2025

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர மாநாடு : சவூதி உட்பட்ட நாடுகள் இஸ்ரேல் மீது கண்டனம்.......

(எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.)

கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) அவசர மாநாட்டில் கடந்த செப்டெம்பர் 9ம் திகதி ஹமாஸ்–கத்தார் தலைவர்கள் பேச்சுவார்த்தை ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் அவர்களது அரசியல் செயற்பாட்டுக் காரியாலயத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்ததுடன், இது சர்வதேச சட்டத்தையும் மனிதாபிமான ஒப்பந்தங்களையும் மீறும் செயலாகும் எனத்தெரிவித்தது.

இஸ்ரேல் கத்தாரிலுள்ள ஹமாஸ் அரசியல் தலைமையகத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு அரபு தேசத்தின் பலமான நாடான சவூதி அரேபியாவும் உடனடியாக தனது கண்டனத்தைத் தெரிவித்தது.

“கத்தாருக்கெதிரான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் இறையாண்மையை வெளிப்படையாக மீறிய செயலை சவூதி அரேபியா கடுமையாகக்கண்டிக்கிறது. சவூதி அரேபியா தன்னுடைய அனைத்து திறன்களையும் கத்தாருக்கு வழங்கும்” என அறிவிப்பும் செய்தது.

அதன் பின்னர் கத்தாரில் செப்டம்பர் 15ல் அவசரமாக கூடிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) மாநாட்டின் அவசரத்தையும், அவசியத்தையும் உணர்ந்த சவூதி அரேபியா இம்மாநாட்டில் முதல் ஆளாகக்கலந்து கொண்டு, மாநாட்டிற்கு தலைமை வகித்தது.

இம்மாநாட்டில் பேசிய கத்தார் நாட்டின் அதிபர் ஷேக் தமீம் அல் தானி
"தாக்குதல் ஏற்க முடியாது, சமாதானப் பேச்சுவார்த்தையை குழப்பும் செயல்”.

பேச்சுவார்த்தை நடத்தும் ஒரு தரப்பினரை குறிவைக்க யார் விடாப்பிடியாகவும் முறையாகவும் பாடுபடுகிறாரோ, அவர் தோல்வியுற்ற பேச்சுவார்த்தைக்காகப் பாடுபடுகிறார்.

இஸ்ரேல் பலஸ்தீன மக்களை வெளியேற்றுவதற்கு ஒரு முன்நிபந்தனையாக காசாவை வாழத்தகுதியற்றதாக மாற்ற விரும்புகிறது. இஸ்ரேல் ஒவ்வொரு முறையும் அரேபியர்களை புதிய அடக்குமுறைக்குள் வைக்க நினைக்கிறது.

மேலும், அவர்கள் ஆபத்தானவர்கள். இஸ்ரேல் சிரியாவைப்பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, அதன் திட்டங்கள் நிறைவேறாது. அரபுப்பகுதி இஸ்ரேலிய செல்வாக்கின் பகுதியாக மாறும் என்ற நெதன்யாகுவின் கனவுகள், இது ஒரு ஆபத்தான மாயை.

அமைதி முயற்சியை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டிருந்தால், அது அதன் சிறைப்பிடிக்கப்பட்டவர்களுடன் எண்ணற்ற பேரழிவுகளைக் காப்பாற்றியிருக்கும். இஸ்ரேலிலுள்ள தீவிரவாத அரசாங்கம் இனவெறி பயங்கரவாதக் கொள்கைகளைப் பின்பற்றுகிறது. நமது இறையாண்மையைப் பாதுகாக்கவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளவும் தேவையான அனைத்தையும் செய்ய கத்தார் தீர்மானித்துள்ளது எனக்குறிப்பிட்டார்.

*பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான்,
"கத்தாரின் பாதுகாப்பு என்பது அனைத்து வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளின் பாதுகாப்பே எனவும் இஸ்ரேலின் தாக்குதல் சட்டவிரோத, ஆபத்தான மீறல். வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் ஒற்றுமை அடிப்படையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும்" என உறுதியளித்தார்.

*துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், “இஸ்ரேல் அரசின் செயல்கள் மனிதநேயத்துக்கு எதிரானவை. அவர்கள் சட்டங்களை மதிக்காமல், கொடூரமான முறையில் செயல்படுகின்றனர்.”

“பாலஸ்தீன மக்களை இடமாற்றம் செய்யும் முயற்சியையும் இன அழிப்பு செயல்பாடுகளையும் ஒருபோதும் ஏற்க முடியாது.”

இஸ்ரேல் "இரத்தவெறி மனநிலை”யில் (bloodthirsty mentality) உள்ளது. பொருளாதார அழுத்தங்களை கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

*எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா எல்-சிசி,
“இஸ்ரேல் நடத்திய தாக்குதல், சர்வதேச சட்டங்களையும் மனித உரிமைகளையும் மீறுகிறது. இது பகைமையை அதிகரிக்கும்.”

“சுயாதீனமும் பாதுகாப்பும் காக்கப்பட வேண்டும். அதற்காக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.” என வலியுறுத்தினார்.

*ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன்:
“பலஸ்தீன மக்களின் சுயநிலைக்கும் சுதந்திரத்திற்கும் ஈரான் எப்போதும் உறுதியான ஆதரவாக இருக்கும்.”

ஒருங்கிணைந்த அரபு-இஸ்லாமிய ஒன்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இஸ்ரேலின் செயற்பாடுகள் எந்த வகையிலும் அனுமதிக்கப்படக்கூடாது. அத்தகைய செயற்பாடுகளை தடுப்பதற்கு நாடுகள் செயற்பட வேண்டுமென்று கூறினார்.

*ஜோர்தான் மன்னர் அப்துல்லாஹ்,
“இஸ்ரேலின் தாக்குதல் எல்லைக்கடந்த ஆக்கிரமிப்பாகும்.”

“இதற்கு எமது பதில் தெளிவானதும் வலுவானதும் இருக்க வேண்டும். அது பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.”

“இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இரு-நாட்டு தீர்வை கடுமையாக பாதிக்கின்றன” என குறிப்பிட்டார்.

*குவைத் பட்டத்து இளவரசர் – ஷேக் சபாஹ் காலித் அல்-ஹமத் அல்-சபாஹ்,

"கத்தாரின் பாதுகாப்பு, அரபு மற்றும் இஸ்லாமிய உலகின் நிலைத்தன்மைக்கு அடித்தளம்.
இஸ்ரேலின் தாக்குதல் நியாயமற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததும்".

"கத்தாரின் சுயாதீனம் மற்றும் குடிமக்கள் பாதுகாப்பிற்கு குவைட் முழு ஆதரவு" எனக் குறிப்பிட்டார்.

*பலஸ்தீன் – ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ்,

“சர்வதேச சமூகம் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். இஸ்ரேலின் குற்றங்களைத் தடுக்க வேண்டும்.”

“இஸ்ரேலின் தீவிரவாத அரசு எங்கள் பிராந்தியத்தில் சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒருபோதும் கூட்டாளியாக இருக்க முடியாது.” என குறிப்பிட்டார்.

*பாகிஸ்தான் – பிரதமர் ஷஹ்பாஸ் ஷரீஃப்,

“பாகிஸ்தான், இஸ்ரேலின் தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறது. நாங்கள் கத்தாருடன் முழுமையான ஒற்றுமையில் நிற்கிறோம்.”

“பாலஸ்தீனப் பிரச்சினைக்கு நிலையான தீர்வாக இரு-நாட்டு தீர்வே முன்னேற்றப்பட வேண்டும்.” என வலியுறுத்தினார்.

*மலேசியா பிரதமர் – அன்வர் இப்ராஹிம்,

“ஒரு சுயாதீன நாட்டின் தலைநகரைத் தாக்குவது மிகக் கடுமையான குற்றம். இது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.”

“இந்த தாக்குதல், உலக மக்கள் முன்னேற்றம் மற்றும் ஒற்றுமைக்கு எதிரானது.” எனக் கண்டித்தார்.

இவ்வாறு கலந்து கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) நாடுகளின் தலைவர்கள் தங்களின் கருத்துக்களையும், கண்டனங்களையும் பதிவு செய்து கொண்டனர்.

குறித்த மாநாட்டில் பின்வரும் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்:

சர்வதேச சட்ட நடவடிக்கைகள்:

இஸ்ரேலின் தாக்குதல்கள் ஜெனீவா ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறும் செயல்.

ஐநா மற்றும் சர்வதேச நீதி அமைப்புகளின் மூலம் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பலஸ்தீன நாடு அமைப்பு:
1967 எல்லைகளை அடிப்படையாகக்கொண்டு, கிழக்கு ஜெரூசலேமை தலைநகராகக்கொண்ட சுயாதீன பலஸ்தீன நாடு உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

மனிதாபிமான அவசர உதவி:
போர்ச்சூழலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு, மருந்து, மருத்துவ உதவி உடனடியாக அனுப்பப்பட வேண்டும்.

கைதிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

அரபு–இஸ்லாமிய ஒற்றுமை:
அரபு நாடுகளும், OIC உறுப்பு நாடுகளும் ஒன்றிணைந்து இஸ்ரேலின் தாக்குதல்களுக்கெதிராக செயற்பட வேண்டும்.

ஒற்றுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் (joint defence measures) மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நடைமுறைப்படுத்துவதிலுள்ள சவால்கள்:
மாநாட்டின் தீர்மானங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதில் பல சவால்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது.

சில முஸ்லிம் நாடுகளுக்கிடையேயான அரசியல் முரண்பாடுகள்.

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பெரிய சக்திகளின் அழுத்தங்கள்.

இஸ்ரேலுடன் சில நாடுகள் வைத்திருக்கும் இருதரப்பு நட்பு மற்றும் வர்த்தக உறவுகள்.

சர்வதேச நீதிமன்ற நடவடிக்கைகளின் நடைமுறைச்சிக்கல்கள்.

அதேநேரம் கத்தார் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் நிலைப்பாடு:

இஸ்ரேல், 2025 செப்டம்பர் 9 அன்று, தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை இலக்காகக்கொண்டு மேற்கொண்ட விமானத்தாக்குதலைத்தொடர்ந்து, மேலும் தாக்குதல்களை மேற்கொள்ளத்தயாராகவிருப்பதாக அறிவித்துள்ளது.

ஹமாஸ் தலைவர்கள் எங்கிருந்தாலும் தாக்குவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நிலைப்பாடு:

அமெரிக்கா, இஸ்ரேலின் இத்தாக்குதலைத் தொடர்ந்து, அதனை "தவறான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை" எனக்கண்டித்து, அடுத்தடுத்து இப்படியான தாக்குதல்கள் நடைபெறாது என உறுதியளித்துள்ளது. அமெரிக்கா, கத்தாருடன் தனது பாதுகாப்பு ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஹமாஸ் மற்றும் பலஸ்தீனின் நிலைப்பாடு:

ஹமாஸ், இஸ்ரேலின் இத்தாக்குதலை "கொடூரமான மற்றும் துரோகமான தாக்குதல்" எனக்கண்டித்து, இதற்கெதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் எனத்தெரிவித்துள்ளது. பலஸ்தீனத்தலைவரும் இந்த தாக்குதலைக்கண்டித்து, சர்வதேச சமுதாயத்திடம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, கத்தார் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, பலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி, இஸ்ரேலின் தாக்குதலுக்கெதிராக ஒற்றுமையான முஸ்லிம் குரலை வெளிப்படுத்தியது.

ஆனால், அத்தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சவால்கள் காரணமாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமுல்படுத்தப்படப் போகின்றது என்பதை உலக உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது. இந்த விவகாரங்களில் சவூதி அரேபியா தனது பங்களிப்புகளை காத்திரமாக வழங்கி வருகின்றது.

அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்..!(எழுத்து: கலித் ஹமூத் ...
21/09/2025

அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்..!

(எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்)

அமைதி மதிப்புகளுக்கான உலகளாவிய அர்ப்பணிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் திகதி, உலகளாவிய மக்கள், உலக அமைதி தினத்தை கொண்டாடுகின்றனர். இது மக்களிடையே சகவாழ்வு மற்றும் புரிந்துணர்வின் மதிப்புகளுக்கான சர்வதேச சமூகத்தின் அர்ப்பணிப்பை புதுப்பிக்கவும், உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையின் அடித்தளங்களை நிறுவுவதற்குமான சந்தர்ப்பமாகும்.

இந்த நாளில், உரையாடல் மற்றும் அமைதியான தீர்வுகளை மேம்படுத்துவதற்காக நாடுகள் எடுக்கும் முயற்சிகள் வெளிப்படுகின்றன. இவற்றில் முன்னணியில் நிற்கும் சவூதி அரேபிய அரசு, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் உரையாடல், மனிதாபிமான மற்றும் அரசியல் ஒத்துழைப்பின் மதிப்புகளை ஆதரிக்கும் அமைதிக்கான குரலாக எப்போதும் இருந்து வருகிறது.

சவூதி அரேபிய அரசின் வரலாற்று ரீதியான முன்முயற்சிகள்:
சவூதி அரேபியா, அது நிறுவப்பட்டதிலிருந்து, சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான சிறந்த வழிமுறையாக உரையாடல் மற்றும் புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அது, 2002ஆம் ஆண்டில் அரபு அமைதி முன்முயற்சியை தொடங்கியது, இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நியாயமான மற்றும் விரிவான அமைதியை அடைவதற்கான அடிப்படை கட்டமைப்பாக இன்றும் திகழ்கிறது. மேலும் 1989ஆம் ஆண்டில் தாயிஃப் உடன்படிக்கை லெபனானுக்கு நிலைத்தன்மையை மீட்டெடுத்து உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர உதவியது, இது அமைதியான தீர்வுகளை ஆதரிப்பதில் அரசின் ஆரம்பகால பங்கை பிரதிபலிக்கிறது.

சர்வதேச மத்தியஸ்த முயற்சிகளில் சவூதி அரேபியாவின் வகிபாகம்:
சர்வதேச அளவில், யெமென் மற்றும் சூடான் போன்ற நாடுகளில் ஏற்பட்ட பல நெருக்கடிகளில் நம்பகமான மத்தியஸ்தராக சவூதி அரேபிய அரசு செயல்பட்டது. மனிதாபிமான மத்தியஸ்தங்கள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் மூலம் ரஷ்ய-உக்ரேனிய போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளில் திறம்பட பங்களிப்புச்செய்தது, அமைதி என்பது தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டிய மூலோபாய தேர்வு என்பதை அது உறுதிப்படுத்துகிறது.

உச்சி மாநாடுகள் மற்றும் சர்வதேச சந்திப்புக்கள்:
சவூதி அரேபியாவின் பங்களிப்பு இருதரப்பு மத்தியஸ்தத்துடன் நின்றுவிடவில்லை, மாறாக அமைதியை மேம்படுத்துவதற்கான உச்சி மாநாடுகள் மற்றும் சர்வதேச சண்டிகாப்புக்களுக்கு தலைமை தங்குவது வரை விரிந்து சென்றது.

• 2017 ஆம் ஆண்டு ரியாத் அரபு-இஸ்லாமிய-அமெரிக்க உச்சி மாநாடு, இது 50க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களை அமெரிக்காவுடன் ஒன்றிணைத்து பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கும் அமைதியான சகவாழ்வை மேம்படுத்துவதற்குமான ஒத்துழைப்பை வலுப்படுத்தியது.

• 2020 ஆம் ஆண்டு, G20 குழுவிற்கு சவூதி அரேபியா தலைமை வகித்தது, இங்கு உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான சர்வதேச ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் மற்றும் சுகாதார பாதுகாப்பை அமைதி மற்றும் நிலைத்தன்மையுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.

• 2023 ஜெட்டா அரபு உச்சி மாநாடு, இது அரபு ஒற்றுமையை உறுதிப்படுத்தியது மற்றும் பிராந்திய நெருக்கடிகளுக்கான அரசியல் தீர்வுகளை ஆதரித்தது.

• 2023 ஆம் ஆண்டில் ஜெட்டா அரபு உச்சி மாநாட்டை நடத்தியது, இம்மாநாடு அரபு ஒற்றுமையை உறுதிப்படுத்தியதோடு பிராந்திய நெருக்கடிகளுக்கான அரசியல் தீர்வுகளை ஆதரித்தது.

• 2023 ஆம் ஆண்டில் உக்ரேனிய நெருக்கடி தொடர்பான ஜெட்டா சர்வதேச சந்திப்புக்களை நடாத்தியது, இதில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன, இச்சந்திப்புக்கள் அமைதியான தீர்வுகளுக்கான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியது.

• 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ரியாத் நகரில் அமெரிக்க-ரஷ்ய அமைதி உச்சி மாநாட்டை நடாத்தடியாது, இங்கு ரஷ்ய-உக்ரேனிய போர் வெடித்ததிலிருந்து முதல் முறையாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மற்றும் அவரது ரஷ்ய அதிகாரிகள் சந்தித்ததுக்கொண்டனர். அங்கு இரு தரப்பும் தூதரக பணிகளை தொடர்வதற்கும் உரையாடலை மீண்டும் தொடங்குவதற்கும் ஒப்புதல் அளித்தனர், இது பெரும் சக்திகளுக்கிடையே தொடர்புக்கான தளமாக சவூதி அரேபியாவின் வகிபாகத்தில் சர்வதேசம் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

• பாலஸ்தீன பிரைச்சினைக்கு அமைதித்தீர்வு மற்றும் இரு-அரசு தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கான உயர்மட்ட சர்வதேச மாநாடு, இந்த மாநாடு நியூயார்க்கில் இவ்வாண்டு ஜூலை 28-29 ஆம் திகதிகளில் சவூதி அரேபிய அரசு மற்றும் பிரான்சின் கூட்டு தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் விளைவாக செப்டம்பர் 12 ஆம் திகதி அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பின் முடிவுகள் இந்தப்பிரகடனத்துக்குச் சார்பாக 142 நாடுகள் வாக்களித்தன.

அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் அரசின் முயற்சிகள்:
மிதமான மையம் (மர்கஸ் இஃதிதால்) மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான இஸ்லாமிய இராணுவ கூட்டணியின் தலைமை போன்ற முன்முயற்சிகள் மூலம் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், மக்களிடையே உரையாடல் மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கும் சவூதி அரேபியா தொடர்ந்து முயற்சி செய்து வருவதை அது உறுதிப்படுத்துகிறது, இது சர்வதேச மட்டத்தில் அமைதியான மற்றும் நிலையான சூழலை ஏற்படுத்திடுவதற்குப் பங்களிக்கிறது.

பல்வேறு துறைகளில் சவூதி அரேபியாவின் முயற்சிகள், சர்வதேச உச்சி மாநாடுகள் மற்றும் மன்றங்களின் தலைமைத்துவத்துடன் சேர்ந்து, அமைதி என்பது தற்காலிக தேர்வு அல்ல, மாறாக அதன் தேசிய மற்றும் இராஜதந்திர அடையாளத்தின் ஒரு பகுதியை உருவாக்கும் நிலையான செய்தி என்பதை உறுதிப்படுத்துகிறது.

வீரமுனையில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார்; ஒருவர் கைது!.....(தில்சாத் பர்வீஸ்)அம்பாறை மாவட்டம் சம்மா...
20/09/2025

வீரமுனையில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார்; ஒருவர் கைது!.....

(தில்சாத் பர்வீஸ்)

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை 03 பகுதியில் சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று (20) சனிக்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரினால் முற்றுகையிடப்பட்டது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.

வீரமுனை 03 பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 60,000 மில்லிலிட்டர் கோடா, கசிப்பு 4,000 மில்லிலிட்டர், ஏ சி கேஸ் சிலிண்டர் 2, ஒரு தொகை ரப்பர் மற்றும் செப்பு குழாய் என்பன மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.பிரதிப்குமார தலைமையிலான குழுவினரினால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்(கே எ ஹமீட்) அம்பாறை மாவட்டத்திற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்...
20/09/2025

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

(கே எ ஹமீட்)

அம்பாறை மாவட்டத்திற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்களின் தலைமையில் பாராளுமன்றச் சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களின் பங்குபற்றலுடன் இன்று (20.09.2025) அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ.விக்கிரம கேட்போர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், அஷ்ரஃப் தாஹிர், அபூபக்கர் ஆதம்பாவா, கே.கோடிஸ்வரன், மஞ்சுல சுகத் ரத்நாயக, ஏ.எம்.எம்.எம்.ரத்வத்தே, சட்டத்தரணி பிரியந்த விஜேரத்ன உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் திணைக்களத் தலைவர்கள் , உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தரம் 10, 11 மாணவர்களுக்கான விஷேட கௌரவிப்பு நிகழ்வு...காத்தான்குடி மத்திய கல்லூரியின்  தரம் 10, 11 பிரிவில் பாடசாலைக்கு ச...
20/09/2025

தரம் 10, 11 மாணவர்களுக்கான விஷேட கௌரவிப்பு நிகழ்வு...

காத்தான்குடி மத்திய கல்லூரியின் தரம் 10, 11 பிரிவில் பாடசாலைக்கு சீரான வரவுள்ள மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு,
நேற்று (19.09.2025) வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் ஆலோசனையும் வழிகாட்டலுக்கு பொறுப்பான ஆசிரியர் திருமதி. வினோதினி அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய பகுதித் தலைவர் திருமதி. சஞ்ஜுவிதா ஜெயக்காந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்காலை ஒன்று கூடலில் ஒவ்வொரு தவணையிலும் பாடசாலைக்கு தொடர்ச்சியாக வருகை தந்த மாணவர்களுக்கான விசேட கௌரவிப்பும் பரிசில்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாடசாலையில் கற்கும் மாணவர்களில் தரம் 10, 11 பிரிவுகளில் கற்கும் 40 மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியான விடயமாக பரிசளிப்பு வைபவம் காணப்படுகின்றது என்பதை அதிபர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தரம் 10,11
இடைநிலைப் பிரிவு.

சூடானில் பள்ளிவாயல் மீது தாக்குதல் - 70க்கும் அதிகமானோர் உயிரிழப்பு......சூடானில் துணை இராணுவப் படை, பள்ளிவாயல் மீது நடத...
20/09/2025

சூடானில் பள்ளிவாயல் மீது தாக்குதல் - 70க்கும் அதிகமானோர் உயிரிழப்பு......

சூடானில் துணை இராணுவப் படை, பள்ளிவாயல் மீது நடத்திய ட்ரோன் தாக்குதலில் 70 ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

சூடானில் இராணுவத்தினருக்கும், துணை இராணுவத்தினருக்கும் இடையில் கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

இதனால் பல பேர் உயிரிழந்துள்ளதோடு, இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் வடக்கு டார்பூரிலுள்ள எல் ஃபாஷர் நகரில் அமைந்துள்ள பள்ளிவாயலில் நேற்று (19) மக்கள் கூடியிருந்த வேளை ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது.

இத் தாக்குதலின் பின்னர் பள்ளிவாயலின் இடிபாடுகளுக்கு நடுவில் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
(தமிழன்)

காஸா போர் நிறுத்தத்திற்கு எதிராக வாக்களித்த அமெரிக்கா - உலக நாடுகள் கண்டனம்......ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டுவந்த க...
19/09/2025

காஸா போர் நிறுத்தத்திற்கு எதிராக வாக்களித்த அமெரிக்கா - உலக நாடுகள் கண்டனம்......

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டுவந்த காஸா போர் நிறுத்த தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்ததால் காஸாவில் போர் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காஸாவில் இம்பெறுவது இனஅழிப்பு என்று ஐ.நா. அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், காஸாவில் போரை நிறுத்துவதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தது. தற்காலிக 10 உறுப்பு நாடுகள் இணைந்து கொண்டு வந்த இந்த தீர்மானத்தின்படி காஸாவில் உடனடி போர் நிறுத்தம், ஹமாஸ் பிடியில் உள்ள அனைத்துப் பணயக் கைதிகளையும் உடனடியாக விடுவிப்பது, காஸாவிற்குள் மனிதாபிமான உதவிகளுக்கு அனுமதியளித்து உள்ளிட்டவை அடங்கும்.

இந்த தீர்மானத்தின் மீது நிரந்தர உறுப்பு நாடுகள் ரஷ்யா, பிரான்ஸ், பிரித்தானியா, சீனா ஆதரவு தெரிவித்த நிலையில், அமெரிக்கா மட்டும் தனது வீட்டோ சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.

இதனால் தீர்மானம் தோல்வி அடைந்தது. மொத்தமுள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் அமெரிக்கா மட்டும் எதிராகவும் வாக்களித்துள்ளன.

அமெரிக்கா 6 ஆவது முறையாக இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தால் மட்டுமே அது வெற்றி பெறும். இந்நிலையில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதற்கு இஸ்ரேல் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன

காஸாவில் உள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் இஸ்ரேல் இராணுவம் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. காஸாவில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
(தமிழன்)

சம்மாந்துறையில் பலஸ்தீன் மக்களுக்காக மகஜர் கையளிப்பும், துஆ பிரார்த்தனையும்......(தில்சாத் பர்வீஸ்)பலஸ்தீன் மக்களுக்கு ஆ...
19/09/2025

சம்மாந்துறையில் பலஸ்தீன் மக்களுக்காக மகஜர் கையளிப்பும், துஆ பிரார்த்தனையும்......

(தில்சாத் பர்வீஸ்)

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக "FREE PALESTINE" எனும் தொனிப்பொருளில் துஆ பிரார்த்தனையும், மகஜர் கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் இன்று (19) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை ஹிஜ்றா ஜூம்ஆ மஸ்ஜித் முன்றலில் இடம் பெற்றது.

பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் இடம்பெற்று வருகின்ற நிலையில் யுத்தத்தினால் இதுவரையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் .

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினரினால் கொடுக்கப்பட்ட மகஜரை வெளிப்படையாக பொதுமக்களுக்கு வாசித்துக்காட்டியதுடன், ஒன்று கூடிய பொதுமக்கள் அனைவரும் ஹிஜ்றா ஜூம்ஆ மஸ்ஜித் முன்றலில் துஆ பிராத்தனையில் ஈடுபட்டு அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.

இதேவேளை, குறித்த மகஜரை சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ். எல். முஹம்மது ஹனீபாவிடம் கையளிக்க சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உப தலைவர் அல்ஹாஜ் கே. எம். கே. ஏ.ரம்சீன் காரியப்பர், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறா தலைவர் அல்ஹாஜ் டாக்டர் ஏ. எம். எம். ரஷீத், சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எம். எல். எச். பசீர் மதனி, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ. எம் நௌபர் மற்றும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Address

75/9, Raasa Aalim Road
Kattankudi
30100

Telephone

+94779133003

Website

Alerts

Be the first to know and let us send you an email when KKYxpress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KKYxpress:

Share