KKYxpress

KKYxpress KKYxpress Media Network

உள்ளூர், உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகள் அனைத்தையும் முகநூல் ஊடாக சுமந்து வரும் செய்திச் சேவை.

முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் ஈரான் தூதரகத்திற்கு நல்லெண்ண விஜயம்.....(எஸ். சினீஸ் கான்)இலங்கை ஈரானிய தூதரகத்திற்கு ...
04/07/2025

முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் ஈரான் தூதரகத்திற்கு நல்லெண்ண விஜயம்.....

(எஸ். சினீஸ் கான்)

இலங்கை ஈரானிய தூதரகத்திற்கு நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு முஸ்லிம் சிவில் சமூக சேவை அமைப்பின் பிரதிநிதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தனர்.

இதன் போது ஈரான் குடியரசின் தூதுவரை சந்தித்த முஸ்லிம் பிரதிநிதிகள் தாக்குதலுக்குள்ளான ஈரான் நாட்டின் நிலவரங்களையும், அங்குள்ள மக்களின் நிலைமைகளையும் கேட்டறிந்து கொண்டதோடு அவர்களின் மன அமைதிக்கும் நிம்மதிக்கும் பிராத்திப்பதாக தெரிவித்திருந்தனர்.

இதன் போது அங்கு சென்றிருந்த, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் உப தலைவர் எம்.எப்.றிபாஸ், தேசிய அமைப்பாளர் இர்ஷாத் ஏ காதர் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் செயலாளர் எம்.ரீ.எம். றிஸ்வி, மற்றும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் ஸாம் நவாஸ் ஆகியோர் ஈரான் இஸ்ரேல் மோதலின் போது ஈரானில் உயிரிழந்தவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள அனுதாப பதிவேட்டில் கையொப்பமிட்டு அனுதாபத்தையும் தெரிவித்தனர்

சவூதி தூதுவருக்கும் தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்திற்குமிடையில் சந்திப்பு....(எஸ். சினீஸ் கான்)இலங்கைக்கான சவூதி அரேப...
04/07/2025

சவூதி தூதுவருக்கும் தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்திற்குமிடையில் சந்திப்பு....

(எஸ். சினீஸ் கான்)

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் கௌரவ காலித் ஹமூத் அல்கஹ்தானி மற்றும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் (NCE) தலைவர் திரு. இந்திரா கௌஷல் ராஜபக்ஷ, சம்மேளத்தின் செயலாளர் திரு. எம். ஷிஹாம் மரிக்கர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (03) இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, ​​இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பரிமாற்றத்தை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

காத்தான்குடியில் விபத்து. 17 வயது சகோதரர் வபாத்.....இன்று(04) அதிகாலை  காத்தான்குடி கடற்கரையில் நடந்த மோட்டார் சைக்கிள் ...
04/07/2025

காத்தான்குடியில் விபத்து. 17 வயது சகோதரர் வபாத்.....

இன்று(04) அதிகாலை காத்தான்குடி கடற்கரையில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் முஹம்மட் என்ற 17 வயது சகோதரர் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கத்தினால் கிராம சேவகருக்கான வரவேற்பு மற்றும் பிரியாவிடை நிகழ்வு!(சம்மாந்துறை தில்சாத் ப...
03/07/2025

புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கத்தினால் கிராம சேவகருக்கான வரவேற்பு மற்றும் பிரியாவிடை நிகழ்வு!

(சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்)

கடந்த 5 வருடங்களாக புளக் ஜே கிழக்கு 03 கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றிய எம்.ஏ.சித்தி பஸ்றியாவின் பிரியாவிடை நிகழ்வும், புளக் ஜே கிழக்கு 03 பகுதிக்கு புதிய கிராம சேவகர் ஏ.எல்.அப்துல் றசூல் அவர்களை வரவேற்கும் நிகழ்வும் இன்று வியாழக்கிழமை (03) புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கத்தின் தலைவி ஏ.கே.றஸ்மினாவின் தலைமையில் புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்க காரியத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், புளக் ஜே கிழக்கு 03 பகுதியில் கிராம சேவகராக கடமையாற்றிய சித்தி பஸ்றியாவிற்கான நினைவுச் சின்னம் மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பும் வழங்கப்பட்டது.

மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் சம்மாந்துறை பிரதேச சபைக்கு தெரிவான தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், பிரதேச சபை உறுப்பினர் பஹ்மி சுலைமான் லெப்பை ஆகியோருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.டி.றோசான், ஏ.எல்.அஸ்ரப், எஃப்.ஜே.நிலாந்தி, சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.அஹமட் சபீர், சமூர்த்தி உத்தியோகத்தர் எம்.டி.பௌசியா, அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.எஃப்.சகீலா, குடும்ப நல உத்தியோகத்தர் ஏ.லதா, தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.வாஜித் அலி, புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஊடகவியலாளர் மீது வெறித்தனமான தாக்குதல். காத்தான்குடி மீடியா போரத்தின் கண்டன அறிக்கைஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது கடந்...
03/07/2025

ஊடகவியலாளர் மீது வெறித்தனமான தாக்குதல். காத்தான்குடி மீடியா போரத்தின் கண்டன அறிக்கை

ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது கடந்த 2025 ஜூலை 02ஆம் திகதி இரவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா மசூர் என்பவர் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, காத்தான்குடி மீடியா போரம் சார்பில் கடுமையான அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஊடகவியலாளர் மப்றூக் காத்தான்குடி சார்ந்த நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் தனது ஊடகப் புலமை மூலம் அவற்றை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கும் நியாயம் பெற்றுக் கொடுப்பதற்கும் காரணமாக செயற்பட்டவர்.

சமூகத்திற்காக பொறுப்பபுவாய்ந்த தருணங்கள், அனர்த்தங்கள் மற்றும் சவால்களின் போதெல்லாம் தனது ஊடக கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றிவரும் இவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஊடக சுதந்திரத்தையும், ஜனநாயக நெறிமுறைகளையும் மீறுகின்ற தீவிரமான செயற்பாடாகும்.

இது, ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட கொடூர நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.

மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதி என்பவர் விமர்சனங்களை எதிர்கொள்ளும் திராணியுள்ளவராக இருக்க வேண்டுமேயொழிய இவ்வாறு வன்முறை சார்ந்த தாக்குதல்களை மேற்கொள்ளும் கீழ்தரமான செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவராகவும் தவறான முன்மாதிரியை எதிர்கால சமூகத்திற்கும் வழங்குபவராகவும் இருக்கக் கூடாது.

இவ்வாறான தாக்குதல்கள் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேள்வி எழுப்பும் விடயமாகவும் அமைகின்றது.

சம்பந்தப்பட்ட பாதாள குழுவினரையும், அவர்களை ஊக்குவித்த அரசியல்வாதியையும் உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் கொண்டு செல்ல வேண்டும். விசாரணைகள் நேர்மையாகவும் விரைவாகவும் நடைபெற வேண்டும். ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கும், சட்டத்தை அமுலாக்கும் நிறுவனங்களுக்கும் இருக்கின்றது என்பதை இத்தருணத்தில. சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஊடக சுதந்திரம் ஜனநாயகத்தின் முகவரியாகும். அதை பாதிக்கும் எவ்வித முயற்சிகளையும் காத்தான்குடி மீடியா போரம் வன்மையாக கண்டிக்கின்றது.

தரம் ஒன்றில் மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் வெளியீடு..... 2026 ஆம் ஆண்டு பாடசாலைகளில் தரம் 1 இற்கு மாணவர்களை இணைத்துக...
03/07/2025

தரம் ஒன்றில் மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் வெளியீடு.....



2026 ஆம் ஆண்டு பாடசாலைகளில் தரம் 1 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (03) வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விண்ணப்பங்களை ஆகஸ்ட் 4 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலம் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
(தமிழன்)

11 பேரின் உயிரிழப்புக்கு ஆர்.சி.பி அணியே காரணம் - வெளியான அதிரடி தீர்ப்பு.....முதல் முறையாக ஐ.பி.எல் சம்பியன் பட்டம் வென...
03/07/2025

11 பேரின் உயிரிழப்புக்கு ஆர்.சி.பி அணியே காரணம் - வெளியான அதிரடி தீர்ப்பு.....

முதல் முறையாக ஐ.பி.எல் சம்பியன் பட்டம் வென்ற ஆர்.சி.பி அணியின் கடந்த ஜூன் 4ஆம் திகதி நடைபெற்ற வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்புக்கு அவ்வணியே காரணம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறித்த விவகாரத்தில், போதிய பாதுகாப்புகளை மேற்கொள்ளவில்லை என்ற காரணத்துக்காக ஐந்து உயர் அதிகாரிகளை முதல்வர் சித்தராமையா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிராக மத்திய நிர்வாக நீதிமன்றத்தில் ஆணையர் விகாஷ் குமார் மனு அளித்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ஆர்சிபியே பொறுப்பேற்க வேண்டும் என்றும், விகாஷ் குமாரின் இடைநீக்கத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.சி.பி அணி திடீரென்று சமூக ஊடகங்களில் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சி பற்றி பதிவிட்டதால், பொதுமக்கள் ஒரே நேரத்தில் அந்த இடத்தில் ஒன்று கூடினர்.

சம்பவ தினமன்று நேர பற்றாக்குறை இருந்ததால், உரிய ஏற்பாடுகளைச் செய்ய போதுமான நேரம் வழங்கப்படவில்லை. ஆர்.சி.பி அணி எந்த முன் அனுமதியும் இல்லாமல் இந்த விடயத்தைச் செய்துள்ளது.

பாதுகாப்பு ஊழியர்களும் மனிதர்கள் தான்;. அவர்கள் கடவுள் அல்ல, மந்திரவாதியும் அல்ல. மேலும் ஒரு விரலை தேய்த்தால் மட்டுமே விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய அலாவுதீன் போன்ற மந்திர சக்திகளும் அவர்களிடம் இல்லை,' என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(தமிழன்)

பிரதான வீதி மின்விளக்குகளை உடனடியாக ஒளிரவையுங்கள் நகர முதல்வர் உத்தரவு.....பிரதான வீதி மின்விளக்குகளை ஒளிரச் செய்வதற்கான...
03/07/2025

பிரதான வீதி மின்விளக்குகளை உடனடியாக ஒளிரவையுங்கள் நகர முதல்வர் உத்தரவு.....

பிரதான வீதி மின்விளக்குகளை ஒளிரச் செய்வதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மின் விளக்குகளை ஒளிர வைப்பதில் காணப்படுகின்ற பிரச்சனைகளை நேற்று 02.07.2025 புதன்கிழமை நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுடன் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் கலந்துரையாடப்பட்டு தீர்வு எட்டப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்துக்குள் மின்விளக்குகளை உடனடியாக ஒளிரவைக்குமாறு நகர முதல்வர் உத்தரவிட்டார்.
(ஊடகப் பிரிவு)

காஸா மீது இஸ்ரேல் வான்தாக்குதல் - இந்தோனேசிய வைத்தியர் உயிரிழப்பு...... காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குத...
03/07/2025

காஸா மீது இஸ்ரேல் வான்தாக்குதல் - இந்தோனேசிய வைத்தியர் உயிரிழப்பு......



காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் உள்ள இந்தோனேசிய வைத்தியசாலை இயக்குநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

வைத்தியசாலை இயக்குநரின் வீடு தாக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் வைத்தியரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் உயிரிழந்தனர்

காஸாவில் உள்ள வைத்தியர்கள் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு பதிலளித்த இஸ்ரேல், இந்த தாக்குதல் ஒரு மூத்த ஹமாஸ் பயங்கரவாதியை இலக்காகக் கொண்டதாகத் தெரிவித்துள்ளது.

🔸மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!➡️ பல முன்மொழிவுகளை முன்வைத்த கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்...
02/07/2025

🔸மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

➡️ பல முன்மொழிவுகளை முன்வைத்த கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்....

மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (02) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோரது பங்கேற்புடன் இக் கூட்டம் இடம் பெற்றது.

இக்கூட்டத்தில் விஷேட அதிதியாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க கலந்துகொண்டார்.

இதன்போது, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சிற்குட்பட்ட திணைக்களங்களின் ஊடக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ரூபா. 450 மில்லியன் கிராமிய வீதி அபிவிருத்திக்திக்கும், மேலதிகமாக ரூபா 250 மில்லியன் இந்த வருடத்திற்குள் செலவு செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்தார்.

1 - கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதான வீதியில் சனநெரிசல் மிக்க சா சந்தியிலௌ வீதி சமிக்கை விளக்கு அமைத்தல்.

2 - ஏறாவூர் பஸ் டிப்போவிற்கான நிருவாகம் கட்டிடம் அமைத்தல்.

3 - மூடப்பட்ட றிஜிதென்ன பஸ் டிப்போவினை மீள திறத்தல்.

4 - காத்தான்குடி பிரதேசத்தில் இயங்காமல் இருக்கின்ற வீதி சமிக்கை விளக்கு தொகுதியினை இயங்க வைத்தல்.

5 - முன்னைய அரசில் ஐ வீதி திட்டதில் முடிக்கப்படாத வீதிகளை இணம்கண்டு, தற்போதை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் T5 வேலைத்திட்டத்தில் உள்வாங்கி, மட்டக்களப்பு மாவட்டத்தில் புணரமைக்கப்படாத அனைத்து வீதிகளையும் T5 திட்டத்தில்உள்வாங்குதல்.

6 - மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய இலங்கை போக்குவரத்து சபையில் நவீன புதிய பஸ்கள் பாவனையில் இல்லாமல் இருப்பதால் புதிய பஸ்களை வழங்குதல்.

7 - மட்டக்களப்பு - கொழும்பு பிரதான புகையிரத பெட்டிகளிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்தல்.

8 - தற்போது நிறுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு - யாழ்பாணம் புகையிரத சேவையை மீள ஆரம்பித்தல்.

9 - வெளிநாட்டு சுற்றுலாப்பணிகள் பார்வையிட வரும் கல்லடி பாலத்தினை பாராமரித்தல்.

10 - வீதி அபிவிருத்தி அதிகார சபை பராமரிப்பிலுள்ள மின் விளக்குகளை மாற்றுதல்.

11 - ரத்மலான - மட்டக்களப்பு விமான சேவையை மீள ஆரம்பித்தல்.

போன்ற பல்வேறு முன்மொழிகள் முன்வைக்கப்பட்டதுடன் அனைத்தும் விடயங்ளுடம் விரிவாக பரிசீலிக்கப்பட்டு கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர், போக்குவரத்து அமைச்சில் செயலாளர்,போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், அமைச்சின் உயர் அதிகாரிகள், முப்படை உயர் அதிகாரிகள் ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் திணைக்களங்கள் சார் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

- ஊடகப்பிரிவு

காஸாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் - ட்ரம்ப் அறிவிப்பு...... காஸாவில் 60 நாட்கள் போர் நிறுத்தம் செய்வதற்கான ...
02/07/2025

காஸாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் - ட்ரம்ப் அறிவிப்பு......


காஸாவில் 60 நாட்கள் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது குறித்து, சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஸா விவகாரத்தில் இஸ்ரேலியர்களுடன் எனது பிரதிநிதிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். 60 நாட்கள் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.

அதேநேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வர அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவோம். அமைதியைக் கொண்டுவர வேண்டும். மத்திய கிழக்கின் நன்மைக்காக, ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்.
(தமிழன்)

"இலங்கை பைத்துல்மால் நிதியம்" என்ற பெயரில் நிதியமொன்றை அமைக்க அங்கிகாரம் தாருங்கள்.- கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ...
02/07/2025

"இலங்கை பைத்துல்மால் நிதியம்" என்ற பெயரில் நிதியமொன்றை அமைக்க அங்கிகாரம் தாருங்கள்.

- கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தனிநபர் பிரேரணை சமர்ப்பிப்பு..!

(எஸ். சினீஸ் கான்)

இலங்கையில் பைத்துல்மால் நிதியமொன்றை உருவாக்க அங்கிகாரம் தருமாறு தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இன்று (2) ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'பைத்துல்மால் நிதியம்' என்ற பெயரிலான நிதியம் உலகிலுள்ள முஸ்லிம் நாடுகள் மற்றும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற நாடுகளிலும் பல ஆண்டுகாலமாக இயங்கிவருகிறது.

இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் கல்வி, கலாச்சாரம், தொழில் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அன்றாட வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்வதற்கான ஒரு நிதியம் தற்சமயம் முஸ்லிம் சமய, கலாச்சார அலுவலக திணைக்களத்தில் இல்லாமல் உள்ளது.

இங்கையிலும் இவ்வாறதொரு நிதியம் ஆரம்பிக்கப்படுமானால் இவ்வாறதொரு நிநியத்தினை இலங்கையில் ஆரம்பிப்போமானால் பல்வேறு உதவித்திட்டங்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

முஸ்லிம் சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களதின் கீழ் "இலங்கை பைத்துல்மால் நிதியம்" என்ற பெயரில் நிதியம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், நிதியத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான நிதியினை வெளிநாடுகளிலிருந்து பெற்றுத்தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று, பா.56/2025 இலக்க பாராளுமன்ற விஷேட ஒழுங்குப் பத்திரத்தின் மூலமும் இது அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதுடன், இப்பிரேரணைக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கப்பபால் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Address

75/9, Raasa Aalim Road
Kattankudi
30100

Telephone

+94779133003

Website

Alerts

Be the first to know and let us send you an email when KKYxpress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KKYxpress:

Share