02/02/2026
*காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு மாத்திரமின்றி காத்த நகரின் கல்வி வளர்ச்சியில் கலைப்பிரிவில் அசைக்க முடியாத ஆளுமைகளில் ஒருவர்– ஆசிரியர் M. H.A.றசூல் M.A. அவர்கள் இன்றுடன் ஓய்வு பெறுகின்றார்.*
பேராதனை பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் விசேட துறையில் சிறப்பு பட்டம் பெற்று இலங்கை ஆசிரியர் சேவையில் 06.10.1994 ல் இணைந்து கொண்ட எமது ஆசிரியர் காத்தான்குடி மத்திய கல்லூரியில் கலைப் பிரிவு, தொழில்நுட்பவியல் பிரிவு உட்பட உயர்தர பிரிவின் வளர்ச்சியில் சுமார் 20 வருட காலம் பங்காற்றியிருந்தார். பின்னர் பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று அங்கு பணியாற்றிய பின்னர் 04.01.2021 ல் எமது மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றார். எமது பாடசாலையின் கலைப் பிரிவின் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார்.
எமது ஊரின் கல்வி வளர்ச்சியில் எமது ஆசிரியரின் கற்பித்தல் மற்றும் வழிகாட்டுதலில் பல நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக் கல்லூரிகளில் பட்டம் பெற்று சட்டத்தரணிகளாகவும் கல்வி நிர்வாகிகளாகவும் அதிபர்களாகவும்ஆசியர்களாகவும்மற்றும் முகாமையாளர்களாகவும் கடமையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது ஊரின் கல்விவளர்ச்சியில் இலைமறை காயாக பல அதிபர்களின் வெற்றிச் செயற்பாடுகளுக்கு பங்காற்றியவர் எமது ஆசான் என்றால் அது மிகையாகாது.
ஒழுக்கம் பண்பாடு விழுமியங்கள் பற்றி போதிப்பதும் மாணவர்களை வழிப்படுத்துவதும் அவரின் சிறப்பம்சமாகும்.
கல்வி ,அரசியல் மற்றும் சமூகப் பற்றிய தெளிவான பார்வை அவருக்கே உரியதாகும்
இன்று எமது ஆசிரியர் ஓய்வு பெறுவதை முன்னிட்டு மீரா பாலிகா தேசிய பாடசாலையில் திங்கள் காலை ஒன்று கூடலின் போது வாசிப்பின் முக்கியத்துவம் தொடர்பாக விசேட உரை ஒன்றை நடாத்தியதுடன் அதிபர் ஆசிரியர்கள் மாணவிகள் பாடசாலை கல்வி அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து எமது ஆசிரியருக்கு விசேட கெளரவம் வழங்கினர்.
*APM. Jalaaldeen BBA*
*Assistant Principal,*
*BT/BC/MEERA BALIKA NATIONAL SCHOOL*
*Kattankudy*