Ashroff Ali-அஷ்ரப் அலீ

Ashroff Ali-அஷ்ரப் அலீ Media Consultant/Media Secretary/Journalist/ Announcer/ Asst.Director In Film Industries/ Documentary Director/ Translator/Web Designer/Digital Marketer

நாளைய விடியல் நமக்கானது என்கின்ற எந்த உத்திரவாதமும் இல்லாதபோது .

நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்?
பூமியில் வாழும் காலத்தில் சந்தோஷமாக
வாழுங்கள்.....

நேற்று மாலை யெமன் கிளர்ச்சிப்படையின் (ஹூதி) தாக்குதலுக்கு இலக்கான "MAGIC SEAS" எனும் பாரிய சரக்குக் கப்பல் ஆழ்கடலில் மூழ...
06/07/2025

நேற்று மாலை யெமன் கிளர்ச்சிப்படையின் (ஹூதி) தாக்குதலுக்கு இலக்கான "MAGIC SEAS" எனும் பாரிய சரக்குக் கப்பல் ஆழ்கடலில் மூழ்கிக்கொண்டிருக்கிறது.

நேற்று பிற்பகல் செங்கடலில் ஹூத்தி போராளிகளின் ஆயுதமேந்திய படகுகள், ஆர்பிஜிகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி குறித்த கப்பல் தாக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் நிதி ரீதியாக, கப்பலின் இழப்பு தோராயமாக $50-100 மில்லியன் டொலர்களாகும். மற்றும் சரக்குகளுக்கான இழப்பு கணக்கெடுக்கப்படவில்லை .

அவற்றுக்கான காப்புறுதித் தொகை கிடைத்துவிடும் என்பதால் சரக்கு அனுப்பியவர்கள் இதனால் பாதிக்கப்படப் போவதில்லை.

தாக்கப்பட்ட கப்பல், இஸ்ரேலுக்குச் சொந்தமானது . இஸ்ரேலின் ஏனைய கப்பல்கள் போன்றே "MAGIC SEAS" எனும் குறித்த கப்பலும் கிரேக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கப்பல் மூழ்கத் தொடங்கியதும் அதன் மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கடல் ஊடாகப் பயணிக்கும் இஸ்ரேலின் எந்தவொரு கப்பலும் தாக்குதலுக்கு இலக்காகும் என்று முன்னதாகவே யெமனிய கிளர்ச்சிப் படையினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

06/07/2025

இனியபாரதி கைது

கருணா அம்மானின் முக்கிய தளபதிகளில் ஒருவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளில் ஒருவருமான இனிய பாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், முனைக்காடு பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

முனைக்காடு பகுதியில் இனிய பாரதி தங்கியிருந்த பிரதேசத்தை இன்று அதிகாலை சுற்றி வளைத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்துள்ளனர்.

எனினும் இனியபாரதியின் கைதுக்கான காரணம் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்....கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்று முடிந்த பிறகு தேசிய மக்கள் ச...
06/07/2025

நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்....

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்று முடிந்த பிறகு தேசிய மக்கள் சக்தி அறுதிப் பெரும்பான்மை பெறாத கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களில் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள், சுயேட்சைக் குழுக்களின் ஆதரவுடன் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

அதற்காக ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் பெருந்தொகை கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். அவ்வாறு ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் உறுப்பினர்களை விலைக்கு வாங்க பிரபல வர்த்தகர் இசார நாணயக்கார உள்ளிட்ட முக்கிய வர்த்தகர்கள் பலரும் கோடிக் கணக்கான பணத்தை அள்ளி இறைத்திருந்தனர்.

அதன் மூலம் தான் பெரும்பான்மை பெறாத இடங்களிலும் குறுக்குவழியில் அதிகாரத்தைக் கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி மீது மக்கள் வெளிக்காட்டிய அதிருப்தி எனும் அவமானத்தை ஓரளவுக்கு துடைத்துக் கொள்ள முடிந்தது.

இந்நிலையில் அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் இணையத்தளம் வழியாக பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குவதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் தற்போது முன்மொழிந்துள்ளது. அதற்காக கம்பியூட்டர் மற்றும் பிரிண்டர் உள்ளிட்ட அதன் துணை சாதனங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் இரண்டு மல்டி பிளக் வயர்கோட் ( மின் இணைப்பு வயர் சாதனம்) கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் டெண்டர் கோரியிருந்தது.

பொதுவாக மிகச் சிறந்த மல்டி பிளக் வயர்கோட் ஒன்றை ஒரு வருட உத்தரவாதத்துடன் ஆர்பிகோவில் வாங்கினால் கூட 5500 ரூபாவிற்கு கொள்வனவு செய்யலாம்.

ஆனால் இலங்கையில் உள்ள சகல பிரதேச செயலகங்களுக்கும் வழங்குவதற்காக அரசாங்கம் கொள்வனவு செய்துள்ள மல்டி பிளக் வயர் கோட் ஒன்றின் விலை 75 ஆயிரம் ரூபாவாகும். சுமார் 750 அளவிலான வயர்கோட்கள் இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

தங்கத்தினால் செய்த மல்டி பிளக் வயர் கோட் ஆக இருக்குமோ தெரியாது. ஏனெனில் சந்தையில் விற்பனை செய்யப்படும் விலையை விட அரசாங்கம் பத்து மடங்கு அதிக விலையில் இதனைக் கொள்வனவு செய்யவுள்ளது.

அதுவும் இந்தக் கொள்வனவுக்கான டெண்டர் இசார நாணயக்காரவின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளமையே இதில் ஹைலைட்டான விடயமாகும்.

ஒரு சாதாரண டெண்டரிலேயே இந்தளவு பாரிய ஊழல் நடைபெறுகின்றது என்றால் இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள மிகப் பெரும் டெண்டர்களில் இந்த அரசாங்கம் எந்தளவு ஊழல்களை மேற்கொள்ளப் போகின்றதோ..??

இதையெல்லாம் அறியாத எருமைக் கூட்டம் தான் மறுமலர்ச்சி யுகம் என்ற பேரில் அடிமுட்டாள்களை ஆட்சிக்குக் கொண்டுவந்து நாட்டை மீண்டும் இருண்ட யுகம் நோக்கி திசைதிருப்பிவிட்டுள்ளார்கள்.

இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள்.. தேசிய மக்கள் சக்தி எனும் பசுத்தோல் போர்த்திய புலியின் சுயரூபம் வெளிப்படும்...ஆனால் அதற்குள் நாடு நாசமாகிப் போயிருக்கும்...

தௌஹீதின் பேரில் சில தவளைகள்இலங்கை மற்றும் இந்தியாவில் சில தௌஹீத் பேர் தாங்கிகள் இஸ்லாம் என்றால் சவூதி அரேபிய மன்னர்களின்...
05/07/2025

தௌஹீதின் பேரில் சில தவளைகள்

இலங்கை மற்றும் இந்தியாவில் சில தௌஹீத் பேர் தாங்கிகள் இஸ்லாம் என்றால் சவூதி அரேபிய மன்னர்களின் மனம் கோணாமல் நடப்பது என்று புரிந்து வைத்துள்ளார்கள் போலும். அதன் காரணமாக இஸ்லாம் என்ற பேரிலும், தௌஹீத் என்ற பேரிலும் இந்தத் தவளைகள் கத்தும் காட்டுக் கத்தல் காதுக்கு நாராசமாக இருக்கின்றது.

அண்மைக்காலமாக இஸ்ரேல்-ஈரான் போரிலும் இந்தத் தவளைகள் தங்கள் கிறுக்குத்தனமான உளறல்களை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஈரான் சீயா கொள்கை கொண்ட நாடாம். அதன் காரணமாக இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானை ஆதரிக்க முடியாதாம். இஸ்ரேலுடனான போர் நிறுத்தம் தொடர்பான நிபந்தனைகளில் காசாவில் தாக்குதலை நிறுத்தும் வகையில் ஈரான் நிபந்தனை எதையும் முன்வைக்கவில்லையாம்.

முதலில் இந்தத் தௌஹீத் தவளைகளுக்கு சர்வதேச சட்டங்கள் , ராஜதந்திர நடைமுறைகள் குறித்து பாடம் எடுக்க வேண்டியுள்ளது. மோதல் நடைபெற்றது இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையில். அவ்வாறான சந்தர்ப்பத்தில் காசா என்பது பலஸ்தீனம் என்றொரு இன்னொரு நாட்டின் பிரதேசம். அதனை முன்னிறுத்தி எந்தவொரு நிபந்தனையும் முன்வைக்கும் உரிமை ஈரானுக்கு இல்லை. ஏனெனில் ஈரான் பலஸ்தீனத்தின் அண்டை நாடு கிடையாது. அதுவும் தவிர பலஸ்தீனம்-ஈரானுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களும் கிடையாது.

ஆனால் ஈரானிய ஆதரவாளர்களான ஹமாஸ் மற்றும் லெபனானிய ஹிஸ்புல்லாக்கள் அடித்த அடியில் தான் இன்றைக்கு இஸ்ரேல் , ஹமாஸுடன் போர்நிறுத்தம் என்று இறங்கி வருகின்றது. அதுவும் தவிர சுன்னி பிரிவைச் சேர்ந்த ஹமாஸ் போராளிகளுக்கு ஆகட்டும், லெபனானிய ஹிஸ்புல்லாக்களுக்கு ஆகட்டும், அசாத்தின் ஆட்சிக்காலத்தில் சிரியாவின் வழியாக ஏராளம் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்ததில் ஈரான் தான் முன்னின்று செயற்பட்டது.

இன்றைக்கு வரைக்கும் ஹமாஸ் மற்றும் லெபனானிய போராளிகளுக்கு எல்லா வகையான உதவிகளையும் ஈரான் செய்து கொண்டிருக்கின்றது. அவர்கள் சீயாக்களா? சுன்னிகளா என்று ஈரான் பாகுபாடு பார்க்கவில்லை..

இப்படியான நிலையில் இஸ்ரேல்- ஈரான் மோதலின் போது இஸ்ரேலின் தாக்குதல்களை ஒப்புக்கு கண்டித்த சவூதி , இரகசியமாக இஸ்ரேலின் பாதுகாப்புக்கு தேவையான ஒத்துழைப்புகளை செய்துள்ளது. இஸ்ரேலின் Israel hayom செய்திச் சேவையின் தகவல்களின் பிரகாரம் சவூதி தனது புலனாய்வுத் தகவல்கள் மற்றும் ரேடார் தகவல்களை இஸ்ரேலுடன் பரிமாறிக் கொண்டுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறிப்பதில் ஒத்தாசைகளை வழங்கியுள்ளதுடன், இஸ்ரேலிய விமானங்களுக்கு சவூதி தனது வடக்கு வான்பரப்பையும் திறந்து கொடுத்துள்ளது.

அதற்குப் பதில் உபகாரமாக அமெரிக்கா தனது ஏவுகணை இடைமறிப்பு கட்டமைப்பை (THAAD) இஸ்ரேலுக்கு அடுத்ததாக தற்போது சவூதி அரேபியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது

சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி கொண்ட இந்த பாதுகாப்பு உபகரணக் கொள்வனவின் ஊடாக 07 தாட் (THAAD) பற்றரிகள், 44 ஏவுகணை செலுத்தும் கருவிகள் 44, இடைமறிப்பு ஏவுகணைகள் 360 என்பன சவூதி அரேபியாவுக்கு கிடைக்கப் பெறவுள்ளது.

இவ்வாறான ஆயிரக்கணக்கான உபகரணங்களை இஸ்ரேலுக்கு நன்கொடையாகவே அமெரிக்கா அள்ளிக் கொடுத்துள்ளது. அதற்கான செலவுகளை ஈடுகட்டிக் கொள்ளத் தான் ட்ரம்ப் தனது மத்திய கிழக்கு சுற்றுலாவின் போது சவூதி மற்றும் கட்டாரிடம் இருந்து பல்லாயிரம் பில்லியன் டொலர்களை நன்கொடையாகப் பெற்றுக் கொண்டிருந்தார்.

காசாவில் அப்பாவி குழந்தைகளை கொல்வதற்கு இஸ்ரேலிய அரக்கர்களுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு பெரும் தொகைகளை அள்ளிக் கொடுத்த சவூதியை எல்லாம் இந்த தௌஹீத் தவளைகள் தவறியும் கூட வாய்திறந்து கண்டிக்க மாட்டார்கள்.

போங்கய்யா..நீங்களும் உங்கள் அரைவேக்காட்டுத் தௌஹீத் கொள்கையும்..

04/07/2025

பிரபல பாதாள உலகப் புள்ளியான ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக, சிறுநீரக தொற்று காரணமாக தற்போதைக்கு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் , முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கு எதிராக ஹரக் கட்டா அண்மையில் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில் தற்போதைக்கு அவன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

அதற்கடுத்து அவன் தப்பிச் செல்ல முயற்சி என்றும் அதன் போது பொலிசாரால் சுடப்பட்டு இறந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை

04/07/2025

சர்வதேச அணுசக்தி முகவராண்மை தனது முகவர்களை ஈரானில் இருந்து உடனடியாக வெளியேற அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்காவின் போர்த்தளபாடங்களை ஏற்றிச் செல்லும் விமானங்கள் வரிசையாக இஸ்ரேலிய விமான நிலையத்தில் தரையிறங்கிக் கொண்டிருக்கின்றன.

இஸ்ரேலிய அரசியல்வாதிகள் அரபு நாடுகளின் முக்கியஸ்தர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஏதோ நடக்கின்றது.. அது என்ன என்றுதான் புரியவில்லை..

04/07/2025

க்ளீன் போல்ட் ஆகிப் போன க்ளீன் ஸ்ரீலங்கா

அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்ட பின்னர் ஆரம்பித்த வேலைத்திட்டங்களில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் பிரதானமானது.

அதற்காக பாரிய ஊடக மற்றும் பிரச்சார செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இலங்கையின் அரசியல் கலாச்சாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் க்ளீன் ஸ்ரீலங்கா உருவாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆயினும் இதுவரை க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஊடாக எந்தவொரு குறிப்பிடத்தக்க செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவோ, மாற்றங்கள் ஏற்படுத்தப்படவோ இல்லை

அதற்குப் பதிலாக க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தற்போது ஒவ்வொருவராக ராஜினாமாச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களின் ராஜினாமாக் கடிதம் நேரடியாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் குறிப்பிடப்படும் விடயங்கள் குறித்து ஜனாதிபதி தரப்பில் இருந்து இதுவரை பதில் வழங்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

01/07/2025

யெமன் நோக்கித் திரும்பும் இஸ்ரேல்- அமெரிக்க கூட்டணி

ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மற்றும் அடாவடி அமெரிக்க கூட்டணி மிக விரைவில் யெமன் மீதான கூட்டுத் தாக்குதல் ஒன்றை ஆரம்பிக்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன.

மத்திய கிழக்கில் ஈரானைத் தனிமைப்படுத்தி அழிப்பதில் இஸ்ரேல் நீண்டகால இலக்குடன் செயற்பட்டு வருகின்றது.

அதற்குத் தடையாக லெபனானிய ஹிஸ்புல்லாக்கள் மற்றும் யெமனிய அன்சாருல்லாக்கள் (ஹுதிகள்) செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டணி ஹுதிக்களை இலக்கு வைத்து பாரிய தாக்குதல் ஒன்றை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

அதே போன்று ஈரான் மீது மீண்டுமொரு தாக்குதலை மேற்கொள்ளவும் இருநாடுகளும் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

29/06/2025

சிரியாவின் கோலான் மலைக்குன்றை உத்தியோகபூர்வமாக இஸ்ரேலுக்கு விட்டுக் கொடுக்க தீர்மானம்

சிரியாவில் ஆட்சியில் இருக்கும் முன்னாள் ஐ.எஸ். தீவிரவாதி, அஹமட் அல் ஷரா தலைமையிலான அரசாங்கம் , இஸ்ரேலுடனான ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த தீர்மானித்துள்ளது.

அத்துடன் இஸ்ரேல் பலவந்தமாக கைப்பற்றி வைத்துள்ள கோலான் குன்றுப் பிரதேசத்தையும் உத்தியோகபூர்வமாக இஸ்ரேலுக்கு விட்டுக் கொடுக்கவும் சிரியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகள் என்போர் அமெரிக்க-இஸ்ரேலின் வளர்ப்புக் குழந்தைகள் என்பதற்கு இதைவிட சான்றுகள் தேவையா?

28/06/2025

மின்தூக்கியினுள் சிக்கி மீட்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்றத்தின் நான்கு உறுப்பினர்கள் இன்றைய தினம் கொழும்பில் மின்தூக்கியொன்றில் சிக்கி பத்திரமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்திரானி கிரியெல்ல, சித்ரால் பெர்னாண்டோ, சதுர கலப்பத்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நிலந்தி கொட்டஹச்சி ஆகியோரே இவ்வாறு மின்தூக்கியில் சிக்கிச் கொண்டுள்ளனர்.

கொழும்பில் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பயிலரங்கு ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிச் செல்லும்போது மேற்குறித்த சம்பவத்துக்கு அவர்கள் முகம் கொடுத்துள்ளனர்.

அதனையடுத்து பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப ஊழியர்கள் , மேற்குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பத்திரமாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

28/06/2025

சின்ன சஹ்ரான் கொழும்பில் கைது

சின்ன சஹ்ரான் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபரொருவர் கொழும்பு பம்பலப்பிட்டியில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டிப்பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல் அருகே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

போரா பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய குறித்த நபர், அப்பிரதேசத்தை தனது ஸ்மார்ட் போன் ஊடாக காணொளிப் பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

போரா பள்ளிவாசலை இலக்கு வைத்து நாசகார செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கிலேயே அவர் குறித்த காணொளிகளைப் பதிவு செய்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனனர். அவரிடம் இருந்த கைத்தொலைபேசியும் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

24/06/2025

ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தமொன்றுக்கு இணக்கம்

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Ashroff Ali-அஷ்ரப் அலீ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashroff Ali-அஷ்ரப் அலீ:

Share