18/05/2024
இது ‘COMFORT ZONE’ எனப்படும் பிரபலமான பொறி பற்றிய கதை.
ஓர் ஊரில் ராமு மற்றும் சோமு இரண்டு எலிகள் வாழ்ந்துவந்தது.
இருவருக்குமே தானியம் நிரப்பப்பட்ட ஜாடி கொடுக்கப்பட்டது. ராமு அதைச் சுற்றி இவ்வளவு உணவைக் கண்டதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.
சில நாட்களில், அது ஜாடியின் அடிப்பகுதியை அடைந்தது. இப்போது அது சிக்கிக்கொண்டது.
சோமுவும் மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் அது தன்னைச் சுற்றி உணவை வேட்டையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறது (ரிஸ்க் எடுப்பது ). அதனால் பாதியிலேயே சாப்பிட்டு விட்டுச் செல்கிறது.
நமது வாழ்க்கையிலும் இதேதான் நடக்கிறது.
சிலர் நிறுவனங்களில் வேலை கிடைத்ததும், சவால் இல்லாத வேலை, மிகவும் சொகுசாக உணர்கின்றனர் ஆனால் தனிப்பட்ட வளர்ச்சி இல்லை. காலாவதியான தொழில்நுட்பங்கள் / கருவிகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
அவர்கள் வெளியேற விரும்பும் ஒரு புள்ளி இருக்கும், ஆனால் அவர்களும் காலப்போக்கில் காலாவதியானதால் அவர்களால் வேறு வேலைக்கு மாற்றமுடியவில்லை.
மறுபுறம், சில இடங்களில் சவாலான சற்று அதிகமான வேலை உள்ளது. கற்றுக்கொள்ள நிறைய புதிய விஷயங்கள் உள்ளன. நிச்சயமாக, வேலை எளிதானது அல்ல, ஆனால் நீண்ட காலத்திற்கு, இது வாழ்வதற்கான வழி.
படிப்பினை என்னவென்றால், வேலை மிகவும் சொகுசாக இருந்தால், தாமதமாவதற்கு முன் வெளியேறவும்.
சொகுசான வேலை ஒரு புதைகுழி ,குறிப்பாக IT தொழில் நுட்ப துறையில் உள்ளவர்களுக்கு சவாலான காலம் காத்திருக்கிறது AI , CHAT GPT , மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் !