TTD update

TTD update இலங்கையின் உடனுக்குடனான உண்மைச் செய்திகள் மற்றும் முக்கிய விழிப்புணர்வு தகவல்கள்👍
(8)

29/07/2026

பெட்ரோல் செலவை எவ்வாறு குறைப்பது

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு - பிலக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ர.ரதன் (வயது 17) என்ற சிறுவன் கடந்த 26ஆம் திகதி இரவு ம...
29/07/2026

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு - பிலக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ர.ரதன் (வயது 17) என்ற சிறுவன் கடந்த 26ஆம் திகதி இரவு முதல் காணாமல்போயுள்ளார்.

யுத்தத்தில் தந்தையையும், பின்னர் தாயையும் இழந்து அத்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்த இச்சிறுவன், வீட்டில் ஏற்பட்ட சிறு மனவருத்தம் காரணமாகச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாகக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

📞 தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 0764643116

(குறிப்பு: இது குறித்து முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.)

🙏 ஒரு சிறிய ஷேர் ஒரு உயிரைக் காப்பாற்ற உதவும். தயவுசெய்து அனைவரும் பகிருங்கள்!

28/07/2026

வெற்றிலை பழக்கத்திலிருந்து விடுபட வீட்டில் செய்யக்கூடிய எளிய வழிமுறைகள்

சிகரெட் மற்றும் புகையிலை விற்பனைக்கு முற்றுப்புள்ளி? இலங்கையில் வரவிருக்கும் புதிய கடுமையான சட்டம்!புகையிலை மற்றும் சிகர...
27/07/2026

சிகரெட் மற்றும் புகையிலை விற்பனைக்கு முற்றுப்புள்ளி? இலங்கையில் வரவிருக்கும் புதிய கடுமையான சட்டம்!

புகையிலை மற்றும் சிகரெட் விற்பனையை முற்றாகத் தடை செய்யும் வகையிலான புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் விசேட மருத்துவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முக்கிய அறிவிப்புகள்:

* 2010-க்கு பின் பிறந்தவர்களுக்கு தடை: 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆயுட்காலம் முழுவதும் சிகரெட் விற்பனை செய்வதையோ அல்லது கொள்முதல் செய்வதையோ தடை செய்யும் 'To***co Free' அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

* வெற்றிலைப் புகையிலைக்கு கடும் தடை:

வெற்றிலையுடன் புகையிலை கலந்து விற்பனை செய்தல் மற்றும் பாபுல், மாவா போன்ற புகையிலை சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை கடுமையாக்கப்படுகிறது. (குறிப்பு: சாதாரண வெற்றிலை, பாக்கு விற்பனைக்கு தடை இல்லை).

* கடுமையான தண்டனை:

இந்த விதியை மீறி புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு ரூ. 2,000-க்கு குறையாத அபராதமும், 1 வருடத்திற்கு குறையாத சிறைத்தண்டனையும் (அல்லது இரண்டும் சேர்த்து) விதிக்கப்படும்.

* சோதனை நடத்தும் அதிகாரிகள்: பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI), உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், மதுவரி திணைக்களம் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு இதற்கான முழு சட்டப்பூர்வ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சியளிக்கும் சுகாதாரப் புள்ளிவிவரம்:
* நாட்டில் புகையிலை மற்றும் பாக்கு மெல்லுவதால் ஆண்டிற்கு புதிதாக 3,808 வாய் புற்று நோயாளர்கள் கண்டறியப்படுகின்றனர்.

* வாய் புற்றுநோயால் நாளொன்றில் சராசரியாக 3 பேர் உயிரிழக்கின்றனர்.

* வெற்றிலையுடன் புகையிலை பயன்படுத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் இதில் 80% உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக விழிப்புணர்வுக்காக இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

27/07/2026

மது பழக்கத்தில் இருந்து வெளிவர வீட்டில் செய்யக்கூடிய எளிய வழிமுறைகள்

26/07/2026

தொலைபேசியில் சிக்னல் பிரச்சனைக்கான எளிய தீர்வு

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் கணிசமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாடு பிரிவ...
25/07/2026

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் கணிசமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாடு பிரிவு எச்சரித்துள்ளது.

உயிரிழப்புகள் & பாதிப்புகள்:

நாட்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 80,905 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜூலை மாதத்தில் மட்டும் (நேற்று - 24 ஆம் திகதி வரை) 25,530 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்:

1. கம்பஹா - 17,135 நோயாளர்கள்
2. கொழும்பு - 16,140 நோயாளர்கள்
3. மாத்தறை - 5,574 நோயாளர்கள்

மாகாண வாரியான தரவுகள்:

மேல் மாகாணம்: 42,835 நோயாளர்கள் (மிகவும் அதிக பாதிப்பு)
தென் மாகாணம்: 12,260 நோயாளர்கள்
மத்திய மாகாணம்: 6,924 நோயாளர்கள்

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த நாம் செய்ய வேண்டியவை:

நீர் தேங்குவதைத் தடுத்தல்: வீடுகள், தோட்டங்கள், அலுவலகங்கள் மற்றும் பாடசாலை சூழலில் தண்ணீர் தேங்கி நிற்கும் பாத்திரங்கள், டயர்கள், இளநீர் கூடுகள் போன்றவற்றை உடனடியாக அகற்றுங்கள்.

வாராந்த சுத்தம்: வாரம் ஒருமுறையாவது கொசுக்கள் உருவாகக் கூடிய இடங்களைச் சோதித்து சுத்தப்படுத்துங்கள்.

சுய பாதுகாப்பு: பகல் வேளையில் கடிக்கும் 'ஏடிஸ்' (Aedes) கொசுக்களிடம் இருந்து தப்பிக்கக் கொசு விரட்டிகளைப் (Mosquito repellents) பயன்படுத்துங்கள் அல்லது உடல் முழுவதையும் மூடும் ஆடைகளை அணியுங்கள்.

அறிகுறிகள் கண்டால் எச்சரிக்கை: அதிக காய்ச்சல், தலைவலி, தசை/மூட்டு வலி, கண் பின்புற வலி அல்லது வாந்தி போன்றவை இருந்தால், சுய சிகிச்சை பெறாமல் உடனடியாக மருத்துவரை நாடுங்கள் (குறிப்பாக என்.எஸ்.1 - NS1 பரிசோதனை அல்லது இரத்தப் பரிசோதனை செய்வது அவசியம்).

25/07/2026

மன அழுத்தத்திற்கு எளிய தீர்வுகள் 👍



25/07/2026

பெண்களுக்கான அரிய வாய்ப்பு தவறவிடாதீர்கள்🥰

⭕️paid ad

24/07/2026

அல்சருக்கான எளிய வீட்டு வைத்தியம்

Address

Kilinochchi
44000

Alerts

Be the first to know and let us send you an email when TTD update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share