Bingo International Media Network

Bingo International Media Network Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bingo International Media Network, News & Media Website, Wanguwakada, Madawala bazaar, Kandy, Madawala.

17/08/2025
11/08/2025

கொழும்பில் இன்று முதல் 155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆனந.....

11/08/2025

காலி மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான இலவங்கப்பட்டை பதப்படுத்தும் மையங்களுக்கு 2.1 மில்லியன் ரூபாய் ...

புதிய கல்விச் சீர்திருத்தம் ஜனாதிபதி அனுரவினுடையதோ அல்லது பிரதமர் ஹரிணியினுடையதோ அல்ல.அனைவரும் முன்வைக்கும் தெளிவான கருத...
04/08/2025

புதிய கல்விச் சீர்திருத்தம் ஜனாதிபதி அனுரவினுடையதோ அல்லது பிரதமர் ஹரிணியினுடையதோ அல்ல.

அனைவரும் முன்வைக்கும் தெளிவான கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு ஏற்ப நேர்மறையான மாற்றங்களைச் செய்வதன் மூலம், பிள்ளைகளுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பே இது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய -

புதிய கல்விச் சீர்திருத்தம் என்பது கல்வி அமைச்சினுடையதோ, ஜனாதிபதி அனுரவினுடையதோ அல்லது பிரதமர் ஹரிணியினுடையதோ அல்ல. மாறாக, அனைவரின் தெளிவான பங்களிப்புடனும், முன்வைக்கப்படும் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு ஏற்பவும் நேர்மறையான மாற்றங்களைச் செய்து, நம் பிள்ளைகளுக்காக ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பாகும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து வட மாகாண கல்வி அதிகாரிகளுக்கு விளக்கும் வகையில், வட மாகாண தலைமைச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (02) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்ததாவது,

"தற்போதைய கல்வி முறையில், முதலாம் ஆண்டில் நுழையும் ஒரு பிள்ளை, எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையுடனோ மகிழ்ச்சியுடனோ பாடசாலைக் கல்வியை நிறைவு செய்வதில்லை. பிள்ளைகளுக்கு உகந்த பாடசாலைச் சூழலும், இணக்கமான கற்பித்தல் முறையும் உருவாக்கப்பட வேண்டும். பாடசாலைகள் ஊடாக மருத்துவர்கள், பொறியியலாளர்கள், தொழில்முனைவோர், கலைஞர்கள் மற்றும் பல்வேறு தொழிற்திறன் கொண்ட நிபுணர்களையும் நாம் உருவாக்க வேண்டும்.

புதிய கல்விச் சீர்திருத்தத்தில், ஒரு ஒவ்வொரு மாகாணமும், மாவட்டமும், வலயமும் முக்கியமானது. சமத்துவம் அங்கிருந்துதான் தொடங்குகிறது. நம் நாட்டில் உள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும் சம வாய்ப்புகளை வழங்க நாம் விரும்பினால், அனைத்து வளங்களையும் ஒரு பிராந்தியத்திற்கோ அல்லது ஒரு மாவட்டத்திற்கோ மட்டும் ஒதுக்க முடியாது. அவை நியாயமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

இதில், பின்தங்கிய மற்றும் வளங்கள் குறைந்த பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். பின்தங்கிய பாடசாலைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர் வெற்றிடங்களுக்குத் தீர்வு காண்பதுடன், அனைத்துப் பாடசாலைகளிலும் இலக்கமுறை (டிஜிட்டல்) வசதிகள், கற்றல் வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், சுகாதார வசதிகள், குடிநீர், விளையாட்டு மைதானங்கள், ஆய்வுகூடங்கள், ஆக்கத்திறனை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் கலை, அழகியல் பிரிவுகள் ஆகியவை உருவாக்கப்பட வேண்டும்.

அதற்கான ஒரு சிறந்த திட்டம் எங்களிடம் உள்ளது. மேலும், மதிப்பீட்டு முறையும் மிகவும் முக்கியமானது. பிள்ளைகளுக்கு நட்புறவான கற்றல்-கற்பித்தல் சூழல் நமக்குத் தேவை. பிள்ளைகளுக்கு இவற்றை உறுதிசெய்து, சமூகப் பொறுப்புள்ள ஒரு குடிமகனைப் பாடசாலையிலிருந்து உருவாக்க வேண்டும்.
அதற்காகவே, நாங்கள் இந்தப் பொது உரையாடலையும் கலந்துரையாடலையும் முன்னெடுத்து வருகிறோம். ஏனெனில், இது கல்வி அமைச்சின் சீர்திருத்தமோ, ஹரிணி அமரசூரியவினுடைய சீர்திருத்தமோ, அல்லது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினுடைய சீர்திருத்தமோ அல்ல. இது இலங்கையின் தேசிய கல்விச் சீர்திருத்தம். நாம் அனைவரும் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்;

நாம் அனைவரும் இதில் ஈடுபட வேண்டும்.
இந்தச் சீர்திருத்தத்தை நாங்கள் படிப்படியாக மேற்கொள்வதால், இந்தக் கலந்துரையாடல் தொடரவேண்டியது அவசியம். எல்லாவற்றையும் தயார்படுத்திக்கொண்டு தொடங்க வேண்டுமென்றால், இந்தச் சீர்திருத்தங்களுக்காகக் குறைந்தது இன்னும் பத்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். எனவே, 2026 ஆம் ஆண்டில் 1 ஆம் மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு இந்தச் சீர்திருத்தங்களைத் தொடங்குகிறோம்.
உங்கள் பின்னூட்டங்கள், முன்மொழிவுகள் மற்றும் கருத்துகளை நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.

நெகிழ்வுத்தன்மையுடன் நேர்மறையான மாற்றங்களைச் செய்துவருகிறோம். இதற்கான ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வை எங்களிடம் உள்ளது.

நம் நாட்டில் உள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். எனவே, சீர்திருத்தத்தின் ஒரு அங்கத்தை பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம். இது முழுமையான கல்வி கட்டமைப்பிற்கான ஒரு சீரமைப்புத் தொகுப்பு.
மத்திய அமைச்சுப் பாடசாலைகள், மாகாணப் பாடசாலைகள் என்று பிரிப்பதன் மூலம் இதைச் செய்ய முடியாது. நாட்டின் அனைத்துப் பிள்ளைகளும் எங்கள் பிள்ளைகள். எனவே, நாம் தனித்தனியாகச் செயல்பட முடியாது; ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாம் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும். பிள்ளைகளுக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்.

கல்விச் சீர்திருத்தம் குறித்து ஒரு உரையாடலை ஏற்படுத்துங்கள். ஆசிரியர் சங்கங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் நாங்கள் ஏற்கெனவே கலந்துரையாடியுள்ளோம். நாங்கள் தொடர்ந்து அதைச் செய்வோம். இதில் பெற்றோர்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஈடுபட வேண்டும்." இவ்வாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம், பரீட்சைத் திணைக்களம் மற்றும் வட மாகாண கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

க.பொ.த . சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம்!2024 ஆம் ஆண்டுக்கான கல்விபொதுதராதரப்பத்திர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவு...
17/03/2025

க.பொ.த . சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விபொதுதராதரப்பத்திர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.

குறித்த பரீட்சைக்காக 4 இலட்சத்து 74, 147 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், 3, 663 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 3 இலட்சத்து 98, 182 பேர் பாடசாலை பரீட்சாத்திகள் எனவும், 75, 965 பேர் தனியார் பரீட்சார்த்திகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஏதுவான வகையில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இரத்மலானை, தங்காலை, மாத்தறை மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மெகசின் சிறைச்சாலை மற்றும் வட்டரக்க சுமேதா வித்தியாலயத்தில் சிறைக்கைதிகள் மற்றும் புனர்வாழ்வு பெற்றுவருவோருக்காக பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையிலும் பரீட்சை நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது சீரற்ற காலநிலையினால் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமாயின் அது தொடர்பில் அறிவிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசேட தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளது.

அதன்படி, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் துரித இலக்கமான 117க்கு அல்லது 0113 668 020 அல்லது 0113 668 100 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பரீட்சைகள் தொடர்பில் ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்படுமாயின் பரீட்சார்த்திகள் அது குறித்து 1911 என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறியப்படுத்துமாறும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேநேரம், சகல பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையத்துக்கு உரிய நேரத்துக்கு வருகைத்தர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குக் கடந்த வருடம் ஆய்வு பணிக்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் சென்றிருந்...
17/03/2025

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குக் கடந்த வருடம் ஆய்வு பணிக்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் சென்றிருந்தனர்.

ஒரு வார காலம் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி ஸ்டார்லைனர் விண்கலம் வெறுமையாகப் பூமிக்குத் திரும்பியது.

இந்தநிலையில் கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நாளை (18) பூமிக்குத் திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது.

நேற்று அதிகாலை சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர், ரஷ்ய விண்வெளி வீரர் ஆகியோரும் பூமிக்குத் திரும்பவுள்ளனர்.

இந்தநிலையில், நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி விண்வெளி குறித்த விண்வெளி வீரர்கள் அந்நாட்டு நேரப்படி நாளை மாலை 5.57 க்கு ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSI campus  இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  ஊடக கற்கை பாடத்தினை உயர் தரத்தில் கற்கும் மற்றும் கற்கும் நோக்கம் கொண்டவர்களு...
24/02/2025

BSI campus இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடக கற்கை பாடத்தினை உயர் தரத்தில் கற்கும் மற்றும் கற்கும் நோக்கம் கொண்டவர்களுக்கான இலவச ஆன்லைன் (online) வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் புதன்கிழமை 2025.02.25 ஆம் திகதி இரவு 8 .00 மணியளவில் நடைபெற உள்ளது ஆகவே இதில் கலந்து பயன்பெற்றுக்கொள்ளுங்கள்

Zoom link
https://us05web.zoom.us/j/82128478841?pwd=YXolrdGfjL5MuEy997tYbY3qXOMFGt.1

Facebook link

https://www.facebook.com/share/1C4EDsFpuE/

Season ticket வைத்திருப்பவர்களை பேருந்துகளில் ஏற்றி செல்ல மறுப்பது கடுமையான குற்றமாகும்பவபருவகால சீட்டை (Season ticket) ...
19/02/2025

Season ticket வைத்திருப்பவர்களை பேருந்துகளில் ஏற்றி செல்ல மறுப்பது கடுமையான குற்றமாகும்

பவபருவகால சீட்டை (Season ticket) வைத்திருக்கின்ற பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோரை, இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஏற்றிச் செல்வதைக் கட்டாயமாக்கியுள்ளது. யாரேனும் ஊழியர் ஒருவர் இந்த பவபருவகால சீட்டை (Season ticket) வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுத்தால், அது இலங்கைப் போக்குவரத்து சபை கொள்கையின்படி கடுமையான குற்றமாகும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பவபருவகால சீட்டை (Season ticket) வைத்திருப்பவர்கள் அனைவரையும் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவர்களை ஏற்றிச் செல்ல மறுக்கும் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் பருவகால சீட்டை (Season ticket) வைத்திருப்பவர்கள், 1958 என்ற எண்ணை அழைத்து SLTB தகவல் மையத்திற்கு தெரிவிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர் கருத்தரங்கும் கண்காட்சியும்                           கிழக்கு மாகா...
19/02/2025

கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர் கருத்தரங்கும் கண்காட்சியும்

கிழக்கு மாகாணத்திற்கான தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தர இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் நேற்று (18) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜயசிங்க தலைமையில் கிழக்கு பல்கலைக்கழக Techno Park நிலையத்தில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

இந் நிகழ்விற் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக துறையின் பீடாதிபதி பேராசிரியர் என்.ராஜேஸ்வரன் உள்ளிட்ட ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன் போது தொழில் முயற்சியாளர்களை ஏற்றுமதி சந்தையினுல் இணைத்து அவர்களை அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனைகள், மற்றும் வழிகாட்டுதல்கள் இதன்போது வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை சர்வதேச தரத்தில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு எற்றுமதி செய்து அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்வதற்கான விழிப்புணர்வுகள் இதன் போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த வருடம் இலங்கையில் இருந்த 12 பில்லியன் அமெரிக் டொலர் பெறுமதியான பொருட்கள் எற்றுமதி செய்யப்பட்ட போதிலும் 19 பில்லியன்

அமெரிக் டொலர் பெறுமதியான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதனால் இந் நிலையை மாற்றுவதற்கான செயற்றிட்டங்கள் மற்றும் முயற்சியாளர்களுக்கான வங்கி கடன்கள் வழங்குதல், குத்தகைக்கு காணி வழங்குதல் போன்ற மேலும் பல விடையங்கள் இதன் போது உயரதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.

அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து ஆரம்ப நிகழ்வாக கண்காட்சியினை பிரதமபிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகள் பார்வையிட்டு, அதனை ஆரம்பித்து வைத்ததனைத் தொடர்ந்து, அதிதிகள் உரை மற்றும் தெளிவு படுத்தல்கள் என்பன இடம்பெற்றது.

உணவு வகைகளின் விலையை திடீரென அதிகரிப்போர் மீது சட்ட நடவடிக்கை!உணவு வகைகளின் விலையை திடீரென அதிகரிக்குமாறு கோருகின்ற சங்க...
19/02/2025

உணவு வகைகளின் விலையை திடீரென அதிகரிப்போர் மீது சட்ட நடவடிக்கை!

உணவு வகைகளின் விலையை திடீரென அதிகரிக்குமாறு கோருகின்ற சங்கங்களின் சட்டத் தன்மை தொடர்பில் ஆராயப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போது பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும் திடீரென உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த முறை அரசாங்கம் சமர்ப்பித்துள்ள பாதீட்டில் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளுக்கு நிவாரணம் வழங்கப்படாமையினால் தேநீர், பால் தேநீர் உள்ளிட்டவற்றின் விலையை அதிகரிப்பதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த உணவு வகைகளின் விலையை அதிகரிப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

உப்பு, தேங்காய், முட்டை, கோழி இறைச்சி உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் தங்களது தொழிற்துறை வெகுவாக பாதிப்படைவதாகவும் அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

பொதுவான வானிலை முன்னறிவிப்புஇலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பி...
19/02/2025

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

2025 பெப்ரவரி 19 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2025 பெப்ரவரி 19 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பிற்பகலில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அம்பாறை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், பதுளை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேலைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Address

Wanguwakada, Madawala Bazaar, Kandy
Madawala
20260

Telephone

+94755579997

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bingo International Media Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bingo International Media Network:

Share