Malwana News

Malwana News மள்வானையின் முதற்தர செய்தி வழங்குனர்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக தலைமையில்   அரச இலக்கிய விருது விழா 2026 இன்று இடம் பெற்றது.இலங்கை இலக்கியத் துறையைத் தமது உ...
09/09/2026

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக தலைமையில் அரச இலக்கிய விருது விழா 2026 இன்று இடம் பெற்றது.
இலங்கை இலக்கியத் துறையைத் தமது உன்னதமான இலக்கியப் படைப்புக்களால் வளப்படுத்திய இலக்கியவாதிகளை கௌரவிக்கும் அரச இலக்கிய விருது விழா 2026, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக் கழகம் மற்றும் அரச இலக்கிய குழு ஆகியவை இணைந்து 67 ஆவது முறையாக அரச இலக்கிய விருது விழாவை ஏற்பாடு செய்ததுடன், 2025 ஆம் ஆண்டில் இலங்கை இலக்கியத் துறைக்குத் தமது சிறந்த படைப்புகளினால் ஆற்றிய சேவையைப் பாராட்டி, 50க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பல எழுத்தாளர்கள் இந்நிகழ்வில் அரச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், இலங்கை இலக்கியத் துறைக்கு உன்னதமான சேவையாற்றிய சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிமூல மூன்று இலக்கியப் படைப்பாளிகளுக்கு வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகின்ற "சாஹித்யரத்ன" கெளரவ விருதுகள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன. சிங்கள மொழிப் பிரிவுக்காகப் பராக்கிரம கொடித்துவக்குவும் தமிழ் மொழிப் பிரிவுக்காகக் கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதனும் ஆங்கில மொழிப் பிரிவுக்காகப் புகழ்பெற்ற பேராசிரியர் ஈ. ஏ. காமினி பொன்சேகாவும் இந்த விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

2026 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதுக்குரிய நூற்தொகுதி, நினைவுமலர் மற்றும் சிங்கள, தமிழ், ஆங்கில ஆகிய மும்மொழிகளிலும் எழுதப்பட்ட 2026 இலக்கிய இதழும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடிந்ததுடன், கடந்த இரு ஆண்டுகள் சமூக மாற்றத்திற்கான காலமாகும் என்று இங்கு கருத்துத் தெரிவித்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி குறிப்பிட்டார். நாகரிக ரீதியான மாற்றம் மற்றும் முதலீடாகவும் விளங்கும் அத்தகைய சமூக மாற்றத்திற்காக, கலை மற்றும் கலாசாரத் துறை வழங்கிய பங்களிப்பு அளப்பரியது என்றும் குறிப்பிட்ட அமைச்சர், அதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் கலை மற்றும் கலாசாரத் துறையில் பல வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும், நீண்டகாலத் தேவையாக இருந்த சமகாலக் கலையின் மேம்பாட்டுக்காக தேசிய நிதி ஒதுக்கீடு ஒன்றைத் உருவாக்கிக் கொள்ளல், தொலைதூரக் கிராமங்களில் வசிக்கும் கலை ஆர்வம் கொண்ட மக்களுக்காகப் கலாசார மையங்களின் வசதிகளை மேம்படுத்துதல், இலங்கை கலைக் கழகச் சட்டத் திருத்தம் உள்ளிட்ட அமைச்சின் கீழ் மேலும் 05 சட்டங்களைத் திருத்துதல் அல்லது புதிதாக வகுத்தல் அவற்றுள் முன்னுரிமை பெறுவதாகவும், இந்நாட்டின் கலை, கலாசாரத் துறையை தடைகளின்றி நவீன தேவைகளுக்கு பொருத்தமாக முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அது அவசியமானது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி

கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல எம்மால் முடிந்தது. கடந்த இரண்டு வருடங்களை சமூக மாற்றத்திற்கான இரு ஆண்டுகளாகவே நாம் கருதுகிறோம். அத்துடன், அச்சமூக மாற்றத்தை ஒரு நாகரிக மாற்றமாகவும் முதலீடாகவும் நாம் பார்க்கிறோம். அதற்காக கலை, கலாசாரத் துறை வழங்கிய பங்களிப்பு அளப்பரியது.

உன்னதமான கலாசார வாழ்க்கை - ஒத்துணர்வுடைய மக்கள் என்பதே எமது கலை, கலாசாரக் கொள்கையாகும். அதன்போது இலங்கை கலைக் கழகமும் அதன் கீழ் செயற்படும் 09 உப கழகங்களும் பாரிய பணிகளை முன்னெடுக்கின்றன.

இன்றைய தினம் மூன்று சிரேஷ்ட இலக்கியவாதிகள் “சாஹித்ய ரத்ன” விருதினால் கௌரவிக்கப்பட்டமை நம் அனைவருக்கும் மாபெரும் பெருமையாகும். மகா கவிஞர் பராக்கிரம கொடித்துவக்கு 1973 இல் “பொடி மல்லியெ” கவிதைத் தொகுப்பை இயற்றினார். அன்று முதல் 2026 வரை “சந்த எளியெஹி வரதக் நெஹெ” எனும் புதிய கவிதைத் தொகுப்பு வரை இலங்கைக் கலைதுறைக்காக அவர் ஆற்றிய சேவை அளப்பரியது. அத்துடன் ஒரு சமூக செயற்பாட்டாளராகவும் வழிகாட்டியாகவும் அவர் ஆற்றிய சேவையை மறக்க முடியாது.

விருது பெற்ற பேராசிரியர் ஈ.ஏ. காமினி பொன்சேகா அவர்களுடன் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்களாகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் தனது முழு வாழ்வையும் ஆங்கில மொழியையும் ஆங்கில இலக்கியத்தையும் கற்பிப்பதற்கே அர்ப்பணித்தார். அத்துடன் கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன் அவர்கள் யாழ் விருது, சிவ தமிழ் விருது, யாழ் முத்து விருது போன்ற பல விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் கலை மற்றும் கலாசாரத் துறையில் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. நீண்டகாலத் தேவையாகவிருந்த சமகாலக் கலையின் மேம்பாட்டிற்காக தேசிய நிதி ஒதுக்கீடு ஒன்றைத் உருவாக்கிக்கொள்ள முடிந்தமை அதில் குறிப்பிடத்தக்கது. அத்துடன், அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, இலக்கியத் துறைக்காக கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 50 மில்லியன் ரூபாவை ஒதுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். பல்லின கலாசார மையங்களுக்குத் தேவையான உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அந்த நிதி பயன்படுத்தப்படுகின்றது. தூர பிரதேசங்களில் வசிக்கும் கலை ஆர்வம் கொண்ட மக்களுக்காகவே அந்த நிதிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு ஆகும்.

இலங்கை கலைக் கழகச் சட்டம் திருத்தப்பட்டு, தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதன்படி, எமது அமைச்சின் கீழ் மேலும் 05 சட்டங்கள் திருத்தப்பட்டு வருகின்றன அல்லது புதிதாகத் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் துறைகளை தடைகளின்றி நவீன தேவைகளுக்கு பொருத்தமாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இது மிக அவசியமாகும். மேலும், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒஸ்கார் விருதுக்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பதில் திரைப்படக் கூட்டுத்தாபனம் வெற்றியடைந்துள்ளது. இந்தச் சிறப்பான வெற்றிகளுடன் எமது கலை, கலாசாரத் துறை தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்கிறது.
இன்று அரச விருதுகளைப் பெற்றுக்கொண்ட அனைத்து இலக்கியவாதிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டுமொருமுறை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

மகா சங்கத்தினர் உட்பட அனைத்து மதத் தலைவர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, கலாசார அலுவல்கள் பணிப்பாளர் கே.எஸ். தில்ஹானி, இலங்கை கலைக் கழகத்தின் தலைவர் கீர்த்தி வெலிசரகே, தேசிய இலக்கிய உப கழகத்தின் தலைவர் கமல் பெரேரா ஆகியோருடன், நிபுணர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

5 Sep 2026*Feed A Family &  Humanitarian Project-2026 in Gaza Strips*மீண்டும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீன காஸா...
05/09/2026

5 Sep 2026

*Feed A Family & Humanitarian Project-2026 in Gaza Strips*

மீண்டும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீன காஸா மக்களுக்காக கரம் கொடுத்த ஸஹரா நிதியம்

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு உண்ண உணவு இன்றி இடம்பெயர்ந்துள்ள சுமார் 2000 மேற்பட்ட பலஸ்தீன காஸா குடும்பங்களுக்கு சமைத்த உனவு ,உலர் உணவு ,தைத்த ஆடைகள் வகைகள் ,குடி நீர் என்பன வழங்கப்பட்டுவருகின்றன
மேலும் அவர்களுக்கான தைத்த ஆடைவகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன

இலங்கையை சேர்ந்த *கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பசூல் ஜிப்ரி (Dr Al-Haj Mohamed Fazul Jifry PhD)* அவர்களின் ஸஹரா நிதியம் தொடர்ந்து காலத்தின் தேவைக்கேற்ப அவர்களுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றதோடு உலகலாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இம்மனிதாபிமன பணிகளை தொடர்ந்து செயற்படுத்த அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவனாக
ஆமீன்

அவர்களின் பணிகள் உலகலாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

🏏 **Join us for the Grand Opening Ceremony of the Mubarakians Champion Trophy 2026!** 🏆Al Mubarak Central College (Natio...
04/09/2026

🏏 **Join us for the Grand Opening Ceremony of the Mubarakians Champion Trophy 2026!** 🏆

Al Mubarak Central College (National School), Malwana, warmly invites all students, alumni, parents, and cricket enthusiasts to witness the grand kickoff of this prestigious tournament organized by the Old Boys Association (OBA).

Come and experience the thrilling atmosphere, and celebrate the spirit of sportsmanship!

**Event Details:**

* 📅 **Date:** Sunday, 06th September 2026
* 🕒 **Time:** 3:00 PM Onwards
* 📍 **Venue:** Al Mubarak National School Playground, Malwana

Your gracious presence will add honour and joy to this memorable occasion. See you there!

ஜும்ஆ முபாரக்………!
04/09/2026

ஜும்ஆ முபாரக்………!

🕌 ஜும்ஆ அறிவிப்பு ☪️இன்ஷா அல்லாஹ் – இவ்வார ஜும்ஆசெப்டம்பர் 04, 2026(1ஆம் வாரம்)🎙️ அஷ் ஷைக் முர்ஷித் முலஃப்ஃபர் (ஹுமைதி)🕌...
03/09/2026

🕌 ஜும்ஆ அறிவிப்பு ☪️

இன்ஷா அல்லாஹ் – இவ்வார ஜும்ஆ

செப்டம்பர் 04, 2026
(1ஆம் வாரம்)

🎙️ அஷ் ஷைக் முர்ஷித் முலஃப்ஃபர் (ஹுமைதி)

🕌 ஸலிஹீன் ஜும்ஆ மஸ்ஜித் – மல்வானை.

🤲 அல்லாஹ் இந்த ஜும்ஆவை ஏற்றுக்கொண்டு, குத்பாவின் மூலம் அனைவருக்கும் பயனளிப்பானாக. ஆமீன்.

கம்பஹா மாவட்ட பாடசாலைகளின் பெறுபேறுகள் ஒரே பார்வையில் ……….மள்வானை அல்-முபாரக் கனிஷ்ட வித்தியாலம் முதல் இடத்தில் வரலாற்று...
03/09/2026

கம்பஹா மாவட்ட பாடசாலைகளின் பெறுபேறுகள் ஒரே பார்வையில் ……….

மள்வானை அல்-முபாரக் கனிஷ்ட வித்தியாலம் முதல் இடத்தில் வரலாற்றுச் சாதனை
வாழ்த்துக்கள்….

வாழ்த்துக்கள் மள்வானை யடிஹேன அல் முஸ்தபா பாடசாலை மாணவர்களின் பெறுபேறுகள் ………
03/09/2026

வாழ்த்துக்கள்
மள்வானை யடிஹேன அல் முஸ்தபா பாடசாலை மாணவர்களின் பெறுபேறுகள் ………

வாழ்த்துக்கள்……..மள்வானை அல்-முபாரக் கனிஷ்ட வித்தியாலய மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் ……..
02/09/2026

வாழ்த்துக்கள்……..
மள்வானை அல்-முபாரக் கனிஷ்ட வித்தியாலய மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் ……..

02/09/2026
🇱🇰 விண்வெளிக் கனவுடன் இந்தியா சென்ற மள்வானை மாணவி முஸ்னா முபாரக் ,பாத்திமா நூரி இலங்கை திரும்பினார்கள்! 🇮🇳🌏 சர்வதேச விண்...
31/08/2026

🇱🇰 விண்வெளிக் கனவுடன் இந்தியா சென்ற மள்வானை மாணவி முஸ்னா முபாரக் ,பாத்திமா நூரி இலங்கை திரும்பினார்கள்! 🇮🇳

🌏 சர்வதேச விண்வெளி அரங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இளம் சாதனையாளர்ள்

31 Aug 2026

இந்தியாவில் நடைபெற்ற Mission ShakthiSAT – Phase II (India Programme) சர்வதேச STEM தலைமைத்துவம், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்று, சர்வதேச அரங்கில் கௌரவிக்கப்பட்ட மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலை மாணவி முஸ்னா முபாரக், மற்றும் கிண்ணியா பாத்திமா நூரி இன்று மாலை இலங்கையை வந்தடைந்தார்.

இவர்களை ஸஹரா நிதியம் சார்பாகவும் மள்வானை மக்கள் சார்பாகவும் விமானநிலையத்தில் மலர் மாலை அணிந்து வரவேற்கப்பட்டனர்

உலகளாவிய ரீதியில் பெண் மாணவிகள் இணைந்து விண்கலத்தை உருவாக்கி, அதனை விண்வெளிக்கு பரீட்சார்த்தமாக அனுப்பும் இலக்கை நோக்கி முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில், 108 நாடுகளைச் சேர்ந்த 14 முதல் 18 வயதுக்குட்பட்ட சுமார் 200 மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த சர்வதேச பயிற்சித் திட்டத்தின் நிறைவு நிகழ்வில் மாணவி முஸ்னா முபாரக் ,பாத்திமா நூரி உள்ளிட்ட மாணவிகள் கௌரவிக்கப்பட்டதுடன், Indian Women Pilots Association (IWPA) அமைப்பின் தலைவி Dr. Harpreet A. De Singh, FAeSI அவர்களினால் இவர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

🎓 கல்வியில் சிறந்த சாதனை

மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்றுள்ள முஸ்னா முபாரக், தற்போது உயர்தர விஞ்ஞானப் பிரிவில் MASDA கல்வியைத் தொடர்ந்து வருகின்றார்.

🇱🇰 மள்வானையிலிருந்து சர்வதேச விண்வெளி அரங்கம் வரை...

இளம் வயதிலேயே சர்வதேச விண்வெளி மற்றும் STEM தளத்தில் பங்கேற்று, இலங்கையின் திறமையை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தியுள்ள முஸ்னா முபாரக்கின் இந்தப் பயணம், அவரது தனிப்பட்ட சாதனை மட்டுமல்லாது மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலைக்கும், மள்வானை மக்களுக்கும், இலங்கைக்கும் பெருமை சேர்க்கும் ஒரு முக்கியமான தருணமாகும்.

இந்த அரிய சர்வதேச வாய்ப்பை மாணவி முஸ்னா முபாரக்கிற்கு பெற்றுக்கொடுக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு, முழுமையான அனுசரணையையும் வழங்கி, அவரது பயணத்தை தொடர்ந்து கண்காணித்து ஊக்கமளித்து வந்த சர்வதேச செயற்பாட்டாளர் அல்-ஹாஜ் கலாநிதி முஹம்மத் பசூல் ஜிப்ரி (PhD, JP) அவர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் இப்பயணத்தில் மாணவிகளுடன் இணைந்து அவர்களிக்காக முழுமையாக ஈடுபட்டிருந்த இந்தியா அல்-ஹாஜ் எம்.ஜே பாரூக் அவர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகிறோம்

சர்வதேச விண்வெளி அரங்கில் இலங்கையின் பெயரை உயர்த்தி, புதிய தலைமுறைக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழும் மாணவி முஸ்னா முபாரக்கிற்கு சார்பில் எமது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் விண்வெளிக் கனவுகள் மேலும் உயரங்களைத் தொடட்டும்...
மள்வானையின் மண்ணிலிருந்து விண்வெளி வரை உங்கள் பயணம் தொடரட்டும்!

Address

Malwana

Alerts

Be the first to know and let us send you an email when Malwana News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Malwana News:

Shortcuts

Share