Malwana News

Malwana News மள்வானையின் முதற்தர செய்தி வழங்குனர்

ஜும்ஆ முபாரக் ……!
05/06/2026

ஜும்ஆ முபாரக் ……!

மள்வானையை சேரந்த ஹசீன் ஹுஸைன் நடைபெற்று முடிந்த CA Srilanka- Best Public Speaker போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் வெற...
03/06/2026

மள்வானையை சேரந்த ஹசீன் ஹுஸைன்
நடைபெற்று முடிந்த CA Srilanka- Best Public Speaker போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் Bangladesh- Daka நகரில் இடம்பெறவுள்ள போட்டிகளில் CA srilanka சார்பாக இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தி போட்டியிட உள்ளார்.

வாழ்த்துக்கள்

வதந்திகளுக்கு முற்று..அஷ் ஷேக் அர்கம் நூரமித்சவூதி அரேபியாவில் இடம்பெற்ற விசாரணை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தா...
02/06/2026

வதந்திகளுக்கு முற்று..அஷ் ஷேக் அர்கம் நூரமித்

சவூதி அரேபியாவில் இடம்பெற்ற விசாரணை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தாயகம் திரும்பிய பின் வெளியிட்ட உத்தியோகபூர்வ தெளிவுபடுத்தல் மற்றும் நன்றியுரை!

அல்ஹம்துலில்லாஹ்! புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக நான் சவூதி அரேபியாவிற்குச் சென்றிருந்த போது ஏற்பட்ட சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் விசாரணைகள் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் இத்தெளிவுபடுத்தலை வெளியிடுகின்றேன்.

📌 என்ன நடந்தது? (உண்மைப் பின்னணி)
விசாரணைக்கான காரணம்: புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நூல் ஆய்வுச் சபையின் (Book Review Committee) உறுப்பினர் என்ற ரீதியில் எனது பணி நிமித்தம் நபர் ஒருவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே, மினா பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு நான் கேட்டுக்கொள்ளப்பட்டேன்.

பரவிய வதந்திகள்: துரதிர்ஷ்டவசமாக, இந்த வழக்கமான நடைமுறைகள் பல்வேறு தவறான வதந்திகளுக்கும் அனுமானங்களுக்கும் வழிவகுத்தன.

உண்மை நிலை: சவூதி அரேபியாவில் நான் தங்கியிருந்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சவூதி அதிகாரிகளால் நான் கைது செய்யப்படவோ, தடுத்து வைக்கப்படவோ அல்லது எனது கடவுச்சீட்டு (Passport) பறிமுதல் செய்யப்படவோ இல்லை.

அல்லாஹ்வின் பேரருளால், அனைத்து விசாரணைகளும் சுமுகமாக நிறைவடைந்து 2026 மே 31 அன்று நான் பாதுகாப்பாக இலங்கை வந்தடைந்தேன்.

🤝 இராஜதந்திர உதவிகளும் நன்றிகளும்
இந்த இக்கட்டான சூழ்நிலையில் எனக்காக உடனடியாகக் குரல் கொடுத்து, அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்:

இலங்கை அரசு மற்றும் தூதரகம்: தனிப்பட்ட ரீதியில் கவனம் செலுத்திய கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பதில் வெளியுறவு அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திர, சவூதிக்கான இலங்கை தூதுவர் அதிமேதகு அமீர் அஜ்வத் மற்றும் ஓய்வுபெற்ற நீதியரசர் எம். எம். லஃபார் தாஹிர் ஆகியோருக்கு எனது விசேட நன்றிகள்.

ஹஜ் தூதுக்குழு: இலங்கை ஹஜ் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய பிரதி அமைச்சர் கௌரவ ஷேக் முனீர் முஸாபர், ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலார் மற்றும் அதிகாரிகள்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU): எனது பாதுகாப்பு குறித்து பிரதமர் அலுவலகம் மற்றும் வெளியுறவு அமைச்சுடன் மிக விரைவாகத் தொடர்புகொண்டு இராஜதந்திர உதவிகளை உறுதி செய்த ACJU தலைவர் ஷேக் ரிஸ்வி முஃப்தி மற்றும் அதன் உறுப்பினர்கள்.

சவூதி அரேபிய அரசு: இலங்கைக்கான சவூதி தூதுவர் அதிமேதகு ஷேக் காலித் அல்-கஹ்தானி மற்றும் சவூதி வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள்.

உறவுகள் மற்றும் நலன்விரும்பிகள்: ட்ரெவலர் குளோபல் நிறுவனத்தின் திரு. ரிஸ்மி ரியால், எனது ஹஜ் குழுவினர், பொறுப்புடன் செயற்பட்ட சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து எனக்காக பிரார்த்தனை (துஆ) செய்த எண்ணற்ற அறிஞர்கள், நண்பர்கள் மற்றும் இஸ்லாமிய நெஞ்சங்கள்.

📢 எனது வேண்டுகோள்:
நான் தற்போது பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளதால், இது குறித்து மேலும் வதந்திகளைப் பரப்புவதையோ அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வதையோ தவிர்க்குமாறு அனைவரையும் அன்பாய் வேண்டிக்கொள்கிறேன். எஞ்சிய விவகாரங்கள் ஏதேனும் இருப்பின், அவை தகுந்த சட்ட மற்றும் நிர்வாக வழிமுறைகளின் ஊடாகக் கையாளப்படும்.

இந்நிகழ்வுகளால் எவருக்கேனும் சிரமங்களோ அல்லது மனவேதனையோ ஏற்பட்டிருந்தால் அதற்காக நான் பணிவுடன் மன்னிப்புக் கோருகிறேன்.

பிரார்த்தனை: அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் நடத்துவானாக, நமது ஒற்றுமையைப் பலப்படுத்துவானாக, தவறான புரிதல்கள் மற்றும் பிளவுகளில் இருந்து நம்மைக் காப்பானாக! ஆமீன்.

படித்ததில் பிடித்தது DR. APJ ABDUL KALAMநவீன மனிதர்களுக்கு முன்மாதிரியாக நடந்து வழிகாட்டி எளிமையான மா மனிதர், வாழ்க்கை எ...
31/05/2026

படித்ததில் பிடித்தது

DR. APJ ABDUL KALAM

நவீன மனிதர்களுக்கு முன்மாதிரியாக நடந்து வழிகாட்டி எளிமையான மா மனிதர், வாழ்க்கை என்றால் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக வாழ்ந்து காட்டிய ஒரு அணு விஞ்ஞானி - சகலருக்கும் எதிர்கால வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிமுறையை நவீன உலகில் காட்டிச் சென்ற சிறந்த தலைவர்.

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் காலமானபோது, ​​உலகம் முழுவதும் துக்கம் அனுஷ்டித்தது. ஆனால், உண்மையான கதை அடுத்த நாள் டெல்லியில்தான் வெளிச்சத்திற்கு வந்தது.

அவருடைய நெருங்கிய சகாக்கள் அவரது அறையைத் திறக்க வந்தனர். 40 ஆண்டுகள் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் பணியாற்றி, ரைசினா மலையில் உள்ள கம்பீரமான ராஷ்டிரபதி பவனில் 5 ஆண்டுகள் கழித்த அத்தகைய ஒரு மாபெரும் விஞ்ஞானி, என்ன செல்வத்தை விட்டுச் சென்றிருக்கிறார் என்பதைப் பார்க்க அனைவரும் ஆவலாக இருந்தனர்.

ஆனால், அறை திறக்கப்பட்டபோது, ​​அங்கு அமைதி நிலவியது.

அங்கு லாக்கர் இல்லை. சொகுசு கார் சாவிகள் இல்லை. வெளிநாட்டு வங்கிக் கணக்கு பாஸ்புக் இல்லை.

அறையின் மூலையில் கிடந்த ஒரு சிறிய பெட்டியில், அவர்கள் இதைக் மட்டுமே கண்டனர்:

6 கிழிந்த சட்டைகள் மற்றும் 4 கால்சட்டைகள் (அவற்றை அவரே துவைத்துக் கொள்வார்)
3 பழைய சூட்கள் (அவற்றில் ஒன்று அவர் ஜனாதிபதியானபோது தைக்கப்பட்டது, அது அவருக்கு 5 ஆண்டுகளும் பயன்பட்டது)

1 கைக்கடிகாரம் — நேரந்தவறாதது, ஆனாலும் பகட்டிலிருந்து வெகு தொலைவில் இருந்தது
1 பழைய மடிக்கணினி மற்றும் 1 வீணை
மற்றும் எல்லாவற்றிலும் மிகவும் மதிப்புமிக்க உடைமை: 2,500 புத்தகங்கள்
இந்தியாவை ஒரு அணுசக்தி நாடாக மாற்ற உதவிய அந்த மனிதரின் மொத்தச் செல்வம் இதுதான்.

இதைவிடவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

PURA நிறுவனம், தனது முழு சம்பளத்தையும் ஓய்வூதியத்தையும் நன்கொடையாக அமைதியாகப் பெற்றுக்கொண்டது. பில்லியன் கணக்கான மதிப்புள்ள வரவு செலவுத் திட்டங்களில் செல்வாக்கு செலுத்தக்கூடிய கையொப்பத்தைக் கொண்ட அந்த மனிதர், தனக்கென ஒரு அங்குல நிலத்தைக்கூட வாங்கவில்லை.

இன்று, நாம் ₹2,000 மதிப்புள்ள காலணிகளையும் ₹5,000 மதிப்புள்ள கண்ணாடிகளையும் அணிந்துகொண்டு நம்மைப் பணக்காரர்களாகக் கருதுகிறோம். ஆனால் அந்த மாபெரும் ஆன்மா, எந்த பிராண்டுகளோ ஆடம்பரமோ இன்றி, ஒட்டுமொத்த உலகின் போற்றுதலையும் வென்றார்.

மரணத்திலும்கூட, டாக்டர் கலாம் நாம் பார்த்துக்கொள்ள ஒரு கண்ணாடியை விட்டுச் சென்றிருக்கிறார் — அது நமக்குக் கற்பிப்பது இதுதான்:

“ஒருவர் தனது அந்தஸ்துக்காக நினைவுகூரப்படுவதில்லை, மாறாக அவரது விழுமியங்களுக்காகவும் தொலைநோக்குப் பார்வைக்காகவும் நினைவுகூரப்படுகிறார்.”

இன்று உங்களுக்குத் தங்குவதற்கு ஒரு கூரையும், உடுத்த ஆடையும் இருந்தால், பொருள் ரீதியாக நீங்கள் ஒரு காலத்தில் ஜனாதிபதியை விட செல்வந்தராக இருக்கலாம். ஆனால், அவரைப் போன்ற இதயம் உங்களிடம் உள்ளதா?

இந்த மகான் மற்றும் அவரது எளிமைக்கு எண்ணற்ற வணக்கங்கள்.

-மள்வானை நியூஸ்-

2026 IPL தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30க்கு பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது.
31/05/2026

2026 IPL தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு
7.30க்கு பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது.

*சவூதி அரேபிய வாழ் மள்வானை முஸ்லிம்கள் ஒன்றியம் 4 ஆவது வருடமாகவும் ஏற்பாடு செய்திருந்த மள்வானை ஹாஜிகளை வரவேற்று கௌரவிக்க...
31/05/2026

*சவூதி அரேபிய வாழ் மள்வானை முஸ்லிம்கள் ஒன்றியம் 4 ஆவது வருடமாகவும் ஏற்பாடு செய்திருந்த மள்வானை ஹாஜிகளை வரவேற்று கௌரவிக்கின்ற நிகழ்வுகள்*

நேற்று 30.05.2026 இரவு நிகழ்வுகள் ஜித்தாவில் இடம்பெற்றது

இதற்காக ஹாஜிகள் ஒன்றாக விசேட பேரூந்து மூலம் ஒன்றாக அழைத்துவரப்பட்னர்.

இதில் கம்பஹா மாவட்டத்தில் இருந்து இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் ,மள்வானையை சேர்நத நிதியரசர் ,ஜித்தாவுக்கான இலங்கை துனைத்தூதுவர் அல்-ஹாஜ் லபர் தாஹிர் ,தொழிலதிபர் சர்வதேச சமூக செயற்பாட்டாளர் கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பசூல் ஜிப்ரி மற்றும் மற்றும் மள்வானையில் இருந்து இம்முறை புனித ஹஜ் கடமைகளுக்கு சென்ற 27 ஹாஜிமார்களும் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதி அமைச்சர் அவர்கள் இம்முறை ஹஜ்ஜின் போது ஏற்பட்ட குறைபாடுகளை தான் நேரடியாக கண்டதால் எதிர்காலத்தில் அவற்றை முடிந்தவரை சரிசெய்ய முயற்சிப்பதாக குறிப்பிட்டார் மேலும் இங்கு நீதியரசர் துனைதூதுவர் (consul General) லபர் தாஹிர் அவர்கள் உரையாற்றும் போது இலங்கையில் இருந்து பணிநிமித்தம் இங்கு வருகின்றவர்களின் நலன்குறித்து தான் கவனம் செலுத்துவதாகவும் அது தொடர்பில் ஏதும் பிரச்சினைகள் இருந்தால் தன்னை நேரடியாக தொடர்பு கொள்ளுமாரும் கூறினார் .
ஜிப்ரி ஹாஜியார் உரையாற்ற்றய போது தான் தனக்கு உள்ள தொடர்புகளின் மூலம் எதிர்காலத்தில் மினாவில் இம்முறை ஹாஜிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க முயற்சிப்பதாக கூறினார்
நிகழ்வுகள முஹம்மத் சாகிர் அவர்களின் கிராத்துடன் ஆரம்பிக்கப்பட்டதோடு வரவேற்புரையை சகோதரர் இம்மியாஸ் ஜாபிர் நிகழ்த்தினார் ,ஹாஜிகள் சார்பில் அல்-ஹாஜ் அஜ்மல் நாசிர் ஹாஜிகள் சார்பாக அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் ,நன்றியுரையை அல்-ஹாஜ் ஹஸன் இம்தியாஸ் அவர்கள் நிகழ்தியதோடு நிகழ்ச்சிகளை நளீப் முஹம்மத் தொகுத்து வழங்கினார்

நிகழ்வுகளின் இறுதியில் ஹாஜிகளுக்கு விருந்தும் வழங்கப்பட்டது

நிகழ்வுகள் துஆ ஸலவாத்துடன் இனிதே நிறைவு பெற்றது

-மள்வானை நியூஸ்-

மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையில் உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கல்வி புலமை பரிசில் ,மடிக்க...
30/05/2026

மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையில் உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கல்வி புலமை பரிசில் ,மடிக்கணணிகள்,நினைவுச்சின்னம் கௌரவிக்கப்பட்டனர்

கடந்த வருடத்தில் உயர்தர பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 26.5.2026 செவ்வாய்க்கிழமை மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.

அல்ஹாஜ் இஸ்மாயில் கேட்போர் கூடத்தில் அதிபர் முஹம்மத் நயீம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக பாடசாலையின் பழைய மாணவர் அல்ஹாஜ் முஹம்மத் இஷ்ஃபாக் (CEO - DYNAWASH)*
அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

இதன் போது மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக *விஞ்ஞான துறையில் 3A* சித்தி பெற்ற மாணவிகளுக்கு DYNAWASH நிறுவனத்தின் அனுசரணையில் சுமார் 9 லட்சம் ரூபா பெறுமதியான புலமைப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு இந்த மாணவிகளுக்கான 02 அதிநவீன மடிக்கணணிகளை *சஹாரா நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி அல்ஹாஜ் பாஸுல் ஜிப்ரி* அவர்கள் சார்பாக அவர்களின் குழுவினர் வழங்கி வைத்தார்கள்.

மேலும் கடந்த வருடங்களில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த சகல மாணவர்களுக்குமான நினைவுச் சின்னங்கள் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கு மேலதிகமாக கடந்த வருடங்களில் அந்த மாணவர்களுக்கு உயர்தர வகுப்பில் கற்பித்த ஆசிரியர்களுக்கான பரிசில்களையும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் வழங்கி வைத்தது.

நிகழ்வுகளில் கலந்துகொண்ட அதிதிகள் ,பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் மாணவர்களையும் காணலாம்.

ஜும்ஆ முபாரக்……!
29/05/2026

ஜும்ஆ முபாரக்……!

தியாகத்தினதும் சகோதரத்துவத்தினதும் ஈதுல் அல்ஹா (ஹஜ் பெருநாள்) வாழ்த்துகள்!உலகெங்கிலும் வாழும் மற்றும் இலங்கையிலுள்ள ஒட்ட...
28/05/2026

தியாகத்தினதும் சகோதரத்துவத்தினதும் ஈதுல் அல்ஹா (ஹஜ் பெருநாள்) வாழ்த்துகள்!

உலகெங்கிலும் வாழும் மற்றும் இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் மிகுந்த இறை நம்பிக்கையோடு கொண்டாடும் சிறப்பானதொரு மத விழாவான "ஈதுல் அல்ஹா" ஹஜ் பெருநாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈதுல் அல்ஹா அல்லது "தியாகத் திருநாள்" என்பது வெறும் கொண்டாட்டத்திற்கும் அப்பால், ஆழமான மத மற்றும் சமூக செய்தியை உலகிற்கு பறைசாற்றும் ஒரு நாளாகும். இப்றாஹிம் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் அல்லாஹ் மீதான அசைக்க முடியாத இறை நம்பிக்கை, கீழ்ப்படிதல் மற்றும் உன்னதமான தியாகம் ஆகியன இந்நாளில் நினைவு கூறப்படுகின்றது.

அதேபோல், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் இலட்சக்கணக்கான ஹாஜிகளின் இனம், குலம் அல்லது வர்க்க வேறுபாடுகளின்றி ஒரே வெள்ளை ஆடையை அணிந்து, புனிதமிக்க மக்கா பூமியில் நிறைவேற்றும் ஹஜ் வழிபாடானது, ஒட்டுமொத்த உலகிற்கும் மனிதநேயத்தின் ஒருமைப்பாட்டையும் சமத்துவத்தையும் பறைசாற்றுகின்றது.

தன்னிடமுள்ளவற்றில் ஒரு பகுதியை பிறருக்காகத் தர்மம் செய்து, ஏழை எளிய மக்களின் பசியைத் தீர்த்து, சகோதரத்துவத்துடன் கைகோர்ப்பதற்கே இந்த உன்னதமான நாளில் இஸ்லாம் நமக்குக் கற்றுத்தருகிறது.

புனிதமிக்க மக்கா பூமியிலிருந்து இம்முறை ஹஜ் வழிபாட்டில் ஈடுபடும் இலங்கை ஹாஜிகள் உட்பட ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் இறை அருள் நிறைந்த பயனுள்ள ஈதுல் அல்ஹா திருநாளாக அமையப் பிரார்த்திக்கிறேன்!

ஈத் முபாரக்!

முனீர் முளப்பர்
மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர்.

පරිත්‍යාගයේ සහ සහෝදරත්වයේ ඊදුල් අල්හා (හජ්) දින සුබ පැතුම්!

​ලොව පුරා මෙන්ම ශ්‍රී ලංකාවාසී සමස්ත ඉස්ලාම් භක්තිකයන් මහත් හරසරින් සමරන සුවිශේෂී ආගමික උත්සවයක් වන "ඊදුල් අල්හා" හජ් උත්සවය වෙනුවෙන් මාගේ හෘදයාංගම සුබ පැතුම පිරිනමමි.


ඊදුල් අල්හා නැතහොත් "පරිත්‍යාගයේ උත්සවය" යනු හුදු සැමරීමකට එහා ගිය ගැඹුරු ආගමික සහ සමාජයීය පණිවිඩයක් ලොවට කියාපාන දිනයකි. ඉබ්‍රාහිම් නබිතුමාණන් (අලෛහිස්සලාම්) සහ එතුමාගේ පවුලේ උදවිය අල්ලාහ් දෙවියන් කෙරෙහි දැක්වූ අචල භක්තිය, කීකරුකම සහ උත්තරීතර පරිත්‍යාගය මෙම දිනයේදී සමරනු ලබයි.

​එමෙන්ම, ලෝකයේ විවිධ ප්‍රදේශවලින් පැමිණෙන ලක්ෂ සංඛ්‍යාත බැතිමතුන් ජාති, කුල හෝ පන්ති භේදයකින් තොරව එකම සුදු වස්ත්‍රයකින් සැරසී, ශුද්ධ වූ මක්කම භූමියේදී ඉටුකරන හජ් වන්දනාව මගින් සමස්ත ලෝකයාටම කියාපාන්නේ මනුෂ්‍යත්වයේ ඒකාත්මිකභාවය සහ සමානාත්මතාවයයි.

​තමන් සතු දෙයින් කොටසක් අන් අය වෙනුවෙන් පරිත්‍යාග කරමින්, දුප්පත් සහ අසරණ ජනතාවගේ කුසගින්න නිවාලමින් සහෝදරත්වයෙන් අත්වැල් බැඳගැනීමට ඉස්ලාමය අපට කියාදෙන්නේ මෙම උතුම් දිනයේදීය.

​ශුද්ධ වූ මක්කම භූමියේ සිට මෙවර හජ් වන්දනාවේ නිරත වන ශ්‍රී ලාංකික බැතිමතුන් ඇතුළු සමස්ත මුස්ලිම් ප්‍රජාවටම සාමය, සතුට, සෞභාග්‍යය සහ ආශිර්වාදය පිරි අර්ථවත් ඊදුල් අල්හා දිනයක් වේවායි ප්‍රාර්ථනා කරමි!

​ඊද් මුබාරක්!

​මුනීර් මුලෆ්ෆර්
ආගමික හා සංස්කෘතික කටයුතු නියෝජ්‍ය අමාත්‍යය.

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகிறார்கள்.  முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, ...
28/05/2026

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகிறார்கள்.

முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும், இணையற்ற தியாகத்தையும் அடையாளப்படுத்தும் இந்த ஹஜ் கொண்டாட்டமானது, இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் யாத்திரையின் காரணமாக தனித்துவம் பெறுகின்றது.

நெருக்கடிக்கு மேல் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இவ்வுலகில், மனிதர்களுக்கிடையில் நிலவ வேண்டிய பிணைப்பின் மகத்துவத்தைப் பற்றிய பரந்ததொரு முன்மாதிரியை ஹஜ் பெருநாள் வழங்குகின்றது. தனிப்பட்ட அந்தஸ்துகளுக்கு அப்பாற்பட்டு, உலகின் நாலாதிசைகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து மத வழிபாடுகளை நிறைவேற்றும் இச்சந்தர்ப்பமானது, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் குறித்த சிறந்ததொரு முன்மாதிரியை உலகிற்கு எடுத்துச் சொல்கிறது என்று நான் நம்புகிறேன்.

மேலும், மத்திய கிழக்கின் யுத்த சூழ்நிலை காரணமாக முழு உலகமும் எதிர்நோக்கியுள்ள கடினமான சவால்களுக்கு மத்தியிலும், மக்கா நகருக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்கள் இப்ராஹீம் நபி அவர்கள் தனது வாழ்நாளில் செய்த எல்லையற்ற தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறார்கள்.

சுயநலத்திற்குப் பதிலாகப் பொதுநலம் மேலோங்கிய, அமைதியும் ஒற்றுமையும் நிறைந்த, ஒத்துணர்வுள்ள மனித சமூகத்தைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்தப் பயணத்தில், அமைதி, சகோதரத்துவம் மற்றும் தியாகத்தைப் பிரதிபலிக்கும் ஹஜ்ஜுப் பெருநாளின் வழிகாட்டல்களை எமது வாழ்க்கைக்கு மென்மேலும் நெருக்கமாக்கிக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

ஆன்மீக விழுமியங்களால் இலங்கைச் சமூகத்தை மேலும் போஷித்து, அனைவருக்கும் பயன் கிடைக்கக்கூடிய அபிவிருத்தியடைந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காகச் சகோதரத்துவத்துடன் முன்னோக்கிச் செல்லுமாறு சகலருக்கும் அழைப்பு விடுப்பதோடு, இந்நாட்டிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு இனிய ஈதுல்-அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஈத் முபாரக்!

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2026 மே 28ஆம் திகதி

ලොව පුරා ඉස්ලාම් භක්තිකයින් මහත් බැතියෙන් සමරන ඊදුල් අල්හා හජ් උත්සවය අදට යෙදී තිබේ. ඉස්ලාම් බැතිමතුන්ගේ විශ්වාසයට අනුව අල්ලාහ් දෙවියන් කෙරෙහි ඊබ්‍රාහිම් නබිතුමන්ගේ භක්තිය සහ අසමසම පරිත්‍යාගය සංකේතවත් කරන හජ් සැමරුම සුවිශේෂ වන්නේ ඉස්ලාම් දහමේ පංච මහා වගකීම්වලින් පස්වැන්න ලෙස සැලකෙන මක්කම වන්දනාව හේතුවෙනි.

වියවුලෙන් වියවුලට පත් ලොවක අන්‍යෝන්‍ය වශයෙන් මිනිසුන් තුළ පැවැත්විය යුතු බැඳීමේ මහිමය පිළිබඳ පුළුල් ආදර්ශයද හජ් උත්සවයෙන් සැපයේ. ජාතිය සහ පුද්ගල තරාතිරම් නොතකා ලොව නන් දෙසින් පැමිණෙන සියලු ඉස්ලාම් බැතිමතුන් එක්ව ආගමික වතාවත් ඉටු කරන මෙම අවස්ථාව සමානාත්මතාවය සහ සහෝදරත්වය පිළිබඳ මහඟු ආදර්ශය ලෝකයට ගෙන යන බව මම විශ්වාස කරමි.

එමෙන්ම, මැද පෙරදිග යුද තත්ත්වය හේතුවෙන් ලෝකයම මුහුණදී සිටින අසීරුතාව හමුවේ පවා මක්කම වන්දනාවේ යන ඉස්ලාම් බැතිමතුන් එක්ව සමරන්නේ ඊබ්‍රාහිම් නබිතුමාණන් සිය දිවිය තුළ සිදු කළ අසීමිත පරිත්‍යාගය සහ කැපකිරීමයි.

අප රජයේ අරමුණ වන්නේද ආත්මාර්ථකාමීත්වය වෙනුවට පරාර්ථකාමීත්වය රජයන සාමයෙන්, සමගියෙන් පිරි සහකම්පනයෙන් යුත් ජන සමාජයක් ගොඩනැගීමයි. එම ගමනේදී සාමය, සහෝදරත්වය සහ පරිත්‍යාගය සංකේතවත් කරන හජ් සැමරුමේ මගපෙන්වීම් තව තවත් අප ජීවිතවලට සමීප කර ගනිමු'යි මම සියලු දෙනාගෙන් ඉල්ලා සිටිමි.

ආධ්‍යාත්මික වටිනාකම්වලින් ශ්‍රී ලාංකික සමාජය තව තවත් පෝෂණය කොට සැමට ප්‍රතිලාභ හිමි වන සංවර්ධිත රටක් ගොඩනැගීමට සහෝදරත්වයෙන් පෙරට යාමට සියලු දෙනාට ආරාධනා කරමින් මෙරට සහ ලෝකවාසී මුස්ලිම් ප්‍රජාවට උතුම් ඊදුල් – අල්හා සැමරුමක් වේවා'යි ප්‍රාර්ථනා කරමි.

ඊද් මුබාරක්!

අනුර කුමාර දිසානායක
ජනාධිපති
ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජය
2026 මැයි 28 දින

Today, 28th May 2026, marks the observance of the sacred festival of Eid al-Adha, celebrated with deep devotion by Muslims across the world.

According to Islamic belief, the Hajj commemoration symbolises the unwavering faith and unparalleled sacrifice of Prophet Ibrahim in devotion to Almighty Allah. The observance holds special significance as the pilgrimage to Mecca is regarded as the fifth of the five great obligations of Islam.

In a world increasingly affected by conflict and division, the Hajj festival offers a profound example of the importance of human solidarity and mutual compassion. I firmly believe that this gathering, where Muslims from all corners of the world come together irrespective of race, nationality or social standing to perform religious rites in unity, conveys to humanity a powerful message of equality and brotherhood.

Furthermore, even amidst the difficulties currently faced by the world due to the conflict situation in the Middle East, Muslim devotees undertaking the pilgrimage to Mecca continue to commemorate the immense sacrifice and devotion demonstrated by Prophet Ibrahim throughout his life.

The vision of our Government, too, is to build a compassionate and harmonious society founded on peace, unity and selflessness rather than selfishness. As we pursue this journey, I urge all citizens to embrace more closely in their lives the values embodied by the Hajj celebration, peace, brotherhood and sacrifice.

As we continue to enrich Sri Lankan society with spiritual values and move forward together in a spirit of brotherhood towards building a developed nation where the benefits of progress are shared by all, I extend my heartfelt wishes to the Muslim community in Sri Lanka and across the world for a blessed Eid al-Adha.

Eid – Mubarak!

Anura Kumara Dissanayake
President
Democratic Socialist Republic of Sri Lanka
28 May 2026

Address

Malwana

Alerts

Be the first to know and let us send you an email when Malwana News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Malwana News:

Share