CMCMN-Mannar

CMCMN-Mannar Organization:

Centre for Mass Communication and Media Network - Mannar

நாடாளுமன்ற சூழலில் உள்ளாடை போராட்டம்...
06/05/2022

நாடாளுமன்ற சூழலில் உள்ளாடை போராட்டம்...

பதவி விலகியது தேசிய விளையாட்டு கவுன்சில்
06/04/2022

பதவி விலகியது தேசிய விளையாட்டு கவுன்சில்

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன் தலைமையிலான இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.

நாமல் ராஜபக்ஸ விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, அவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2020-ல் தேசிய விளையாட்டு கவுன்சில் அமைக்கப்பட்டது.

எனினும் நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலை, மற்றும் அமைச்சர்களின் இராஜினாமாவை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம்...

Mahela Jayawardene
Julian Bolling
Kumar Sangakkara
Dilantha Malagamuwa
Kasturi Chellaraja Wilson
Supun Weerasinghe
Rohan Fernando
Ruwan Keragala
Sanjeewa Wickramanayake
Major General Rajitha Ampemohotti
Lieutenant General Shaveendra Silva
Rowena Samarasinghe
Yaswanth Muttetuwegama
A.J.S.S Edirisooriya
Thiyumi Abeysinghe ஆகியோர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹர்ஷ டி சில்வாவை ஜனாதிபதியாக்குவோம்...
06/04/2022

ஹர்ஷ டி சில்வாவை ஜனாதிபதியாக்குவோம்...

கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பொருளாதாரம் தொடர்பில் நன்கு கற்ற ஹர்ஷ டி சில்வாவை தற்காலிகமாக ஜனாதிபதியாக்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,இந்த நாடாளுமன்றில் எத்தனையோ நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் ஆனால் 225 உறுப்பினர்களையும் மக்கள் வெறுக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன? இதுதான் இந்த நாட்டின் நிலைமை எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரு வருடத்திற்கு சம்பளம் வேண்டாம் எனவும், நாடாளுமன்றில் உள்ள உணவகத்தில் உணவு உட்கொள்ள மாட்டேன் என தெரிவித்த ஹரின், அனைத்து எம்.பிக்களுக்கும் இவ்வாறு கூற முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

நாடு இப்போது பாரிய பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ கௌரவமாக பதவி விலக வேண்டும். மக்களும் அதையே கோருகிறார்கள். கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பொருளாதாரம் தொடர்பில் நன்கு கற்ற ஹர்ஷ டி சில்வாவை தற்காலிகமாக ஜனாதிபதியாக்குவோம்.

அவருக்கு தெரியும் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு தீர்க்க வேண்டுமென்பது. அதை விட்டுவிட்டு பதவிக்காகவோ, தேர்தலுக்காகவோ போட்டியிடவேண்டிய நேரம் இது இல்லை எனவும் குறிப்பிட்டார்.

அப்படி இல்லையென்றால், மக்கள் விடுதலை முன்னணியாவது ஒரு அணியாக திரட்டிக்கொண்டு தற்காலிகமாக அரசை பொறுப்பேற்று செய்து காட்டுவதற்கு வாய்ப்பளிப்போம்” என தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.4% ஆக குறையும்..
06/04/2022

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.4% ஆக குறையும்..

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2022 ஆம் ஆண்டில் 2.4% ஆக குறையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி கணித்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 1.3 சதவீதம் சரிவாகும். 2021 இல், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.7 சதவீதமாக இருந்தது.

கடன்கள், குறைந்த வெளிநாட்டு கையிருப்பு மற்றும் கொரோனா தொற்று ஆகியவை வீழ்ச்சிக்கு காரணம் என கூறப்படுகின்றது.

இதேவேளை அடுத்த ஆண்டில் 2.5% ஆக சிறிதளவு முன்னேற்றம் காணும் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது.

பாடசாலைகள் அனைத்துக்கும் விடுமுறை ...
06/04/2022

பாடசாலைகள் அனைத்துக்கும் விடுமுறை ...

நாடளாவிய ரீதியிலுள்ள அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற பாடசாலைகள் அனைத்துக்கும் இன்று (06) முதல், தவணை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அடுத்த தவணை எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அறிவித்துள்ளது.

06/04/2022

அரசாங்கத்தின் செயற்பாடுகளால்தான் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருள்களுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் வைத்திய சேவைகளை முழுமையாக முன்னெடுக்க முடிவில்லை எனவும், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்பாக இன்று (06) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நிலைய வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் தாதிய உதவியாளர்கள் இணைந்து நண்பகல் 12 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தில் இப்போராட்டத்தை ஆரம்பித்து, பிரதான வீதி வரை சென்று அங்கு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வைத்தியர்கள், “தற்போது மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்குத் தேவையான பொருள்கள் பற்றாக்குறையாக உள்ளன. இருப்பதைக் கொண்டு மக்களுக்கு சேவையை வழங்கி வருகின்றோம். சிக்கனமாக பயன்படுத்துகின்றோம்.

“இந்த நிலை தொடருமானால் வைத்திய சேவையை மக்களுக்கு தொடர்ச்சியான வழங்க முடியாத நிலை ஏற்படும். இதனால் மக்கள் பெரும் சவால்களுக்கு முகங் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும்” என்றனர்.

வீட்டுக்கு முன்னால் போராடுங்கள்..
06/04/2022

வீட்டுக்கு முன்னால் போராடுங்கள்..

ராஜபக்சக்களின் வீட்டுக்கு முன்னால் சென்று போராட்டம் நடத்துங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேட்டுக்கொண்டுள்ளார்.


இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், மக்கள் தமது போராட்டத்தை கைவிடக்கூடாது என்பதே தனது வேண்டுகோள் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அரசாங்கத்தின் பிரதம கொறடாவான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தீவிரவாதிகள் என கூறியமைக்கும் அவர் கடும் கண்டனத்தை வெளியிட்டார்.

பால் பக்கெட் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 89 வயதான தாய் ஒருவரும் தீவிரவாதியா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

225 பேரும் வெளியேற வேண்டும் என மக்கள் கூறுவதன் அர்த்தம் அமைப்பில் மாற்றம் வேண்டும், நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும் என்பதே என்றும் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றே இந்த தலைமுறை விரும்புகிறது என்றும் அது நடக்கும் வரை போராட்டம் ஓயாது என்றும் அவர் தெரிவித்தார்.

அவசரகால நிலை இரத்து..
06/04/2022

அவசரகால நிலை இரத்து..

அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட பிரகடனத்தை இரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

இன்று(செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

போராட்டங்களில் கொழும்பு பேராயர்
05/04/2022

போராட்டங்களில் கொழும்பு பேராயர்

பொருளாதார நெருக்கடிக்கு நிலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் இணைந்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேராயருடன் அருட்தந்தையர்கள்இ கன்னியாஸ்திரிகள் கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து கொண்டன.

இந்த பேரணி பொரளை பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவசரகாலச் சட்டம்.
05/04/2022

அவசரகாலச் சட்டம்.

அவசரகாலச் சட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்திருந்தார்.


அவசரகாலச் சட்டம் தொடர்பான அறிவிப்பு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, கூடிய விரைவில் அனுமதிக்கப்பட வேண்டும் அல்லது நிராகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேற்படி அறிவித்தலை நாடாளுமன்றம் அங்கீகரிக்குமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் வகையில் நாளை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இல்லையேல் 14 நாட்கள் இருக்க அனுமதித்து, பின்னர் காலாவதியாகி அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்த வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது கூட, நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, அவசரகால பிரகடனத்தை வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியும் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானம்
05/04/2022

பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானம்

பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானம்

40க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (5) முதல் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானத்தை பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளைச் சேர்ந்த 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக பாராளுமன்றத்தில் செயற்பட தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 12 ஆளும் கட்சி எம்பிக்களும் இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தீர்மானங்களை அறிவித்துள்ளனர்.

இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று காலை ஊடகங்களுக்கு அறிவித்தது.

113 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை வெளிப்படுத்தும் எந்தவொரு குழுவிற்கும் ஆட்சி அமைக்க அதிகாரத்தை வழங்கத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளமைக்காக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கம் பதவி விலகுமாறு கோரி நாடு முழுவதும் பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Address

"Stella Villa", Pesalai-06, Mannar
Mannar Town
41000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when CMCMN-Mannar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CMCMN-Mannar:

Share

Category