26/08/2026
கிளிநொச்சியில் புகையிரதத்துடன் கார் மோதி 17 வயது மாணவி ப*லி இருவர் படுகாயம்
=================================
கிளிநொச்சி – யாழ். பல்கலைக்கழக வீதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவையில் இன்று (26.08.2026) இடம்பெற்ற கோர விபத்தில் 17 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து இன்று முற்பகல் சுமார் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதம், குறித்த புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான காரில் பயணித்த கிளிநொச்சி, செல்வாநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய தினேஸ்குமார் டிலானி (அக்சயா) என்ற மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், காரில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.