MEGA TV

MEGA TV இது உங்களின் குரல்
***********************

நிகழ்வுகளை தொகுத்திட, போட்டிகளுக்கான வர்ணணை,ஔிப்பதிவு செய்திட, அறிவிப்பாளர்களை பெற்றிட ( 0742392323,0715441444)
(2)

  Team captain.......! congratulation umar ali jareeth ...........!
12/05/2026

Team captain.......!
congratulation umar ali jareeth ...........!

அம்பாரை மாவட்ட நிருபர் றிபாஸ்சவுதி அரேபியாவின் ஜித்தாவில்  புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான கவுன்சில் ஜெனரல் ஓய்வு...
12/05/2026

அம்பாரை மாவட்ட நிருபர் றிபாஸ்

சவுதி அரேபியாவின் ஜித்தாவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான கவுன்சில் ஜெனரல் ஓய்வுநிலை நீதியரசர் எம். ரி. மொஹமட் லஃபார் தாஹிர் திங்கட்கிழமை [11] தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

நீதியரசர் லஃபார் தாஹிர் நீதித்துறை சேவையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான சேவை அனுபவத்தைக் கொண்டவர். பல்வேறு பதவிகளில் பணியாற்றிய அவர், அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக பணியாற்றினார். நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராகவும், இலங்கை சட்டக் கல்லூரியின் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

நீதித்துறையில் காலதாமதங்களை குறைப்பதற்காக தனது நடவடிக்கைகளால் 2007 ஆம் ஆண்டில் ஒரே நாளில் 120 வழக்குகளுக்கான தீர்ப்புகளை வழங்கி நீதித்துறை நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவதற்கு கால்கோளாக அமைந்தார் .

கவுன்சில் ஜெனரல் லஃபார் தாஹிர் கொழும்பு விவேகானந்தா தேசிய பாடசாலை மற்றும் மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தையும் பெற்றவராவார்.

இக்கடமைப்பு நிகழ்வில் கவுன்சிலர் ஜெனரல் லாபர் தாஹிர் உரையாற்றுகையில்,
"ஜித்தா மற்றும் சவுதி அரேபியாவின் மேற்கு பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு தூதரகம் திறமையான மற்றும் பயனுள்ள தொழில் நல சேவையை வழங்குவதுடன், இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்த தூதரகத்தின் புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள் துணை புரியும்" என தெரிவித்தார்.

எந்த அரசியல் அதிகாரங்களும் தங்கத் தட்டில் வைத்து இலவசமாக  தரப்பட மாட்டாது என்பதை புரிந்து கொண்டு உள்ளூராட்சி அதிகாரம் தொ...
12/05/2026

எந்த அரசியல் அதிகாரங்களும் தங்கத் தட்டில் வைத்து இலவசமாக தரப்பட மாட்டாது என்பதை புரிந்து கொண்டு உள்ளூராட்சி அதிகாரம் தொடர்பில் #மருதமுனைத் தாய் பெற்றெடுத்த பிள்ளைகள் தாங்கள் சிரமேற் கொண்டு செயற்படுதல் காலத்தின் கட்டாயமாகும்
******************************************
(எம்.பி.எம்.றாஜிட்)

#உள்ளூராட்சி அதிகாரத்திற்கான சாய்ந்துமருது மக்களின் நீண்ட காலப்போராட்டம் வெற்றியடைந்திருக்கிறது. ஜனநாயக ரீதியாக ஒன்றிணைக்கப்பட்டஇப் போராட்டம் உயர்நீதிமன்றத் #தீர்ப்பின் மூலம் சட்ட அங்கீகாரத்தினை பெற்றுக் கொண்டுள்ளது.

மக்கள் மயப்படுத்தப்பட்ட இடையறாத போராட்டத்தின் மூலம் பெற்ற #வரலாற்று வெற்றி இது. அதற்காக தம்மை அர்ப்பணித்து செயற்பட்டவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

இரண்டு மாதங்களுக்குள் சாய்ந்தமருது நகரசபைக்கும், #கல்முனை மாநகர சபைக்குமான எல்லைகள் தனித்தனியாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட கையோடு விரைவில் சாய்ந்தமருது நகர சபைக்கான தேர்தல் நடைபெறும். #சாய்ந்தமருது மக்கள் இழந்த உள்ளூராட்சி அதிகாரத்தினை மீண்டும் பெற்றுக் கொள்வர்.

மருதமுனை சார்பில் தோழர் A C.M.அல்தாப் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு #ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்களினால் ஆற்றுப்படுத்தப்பட்டது, இவ்விடையீட்டு மனுவினை உயர்நீதிமன்றம் கருத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கரைவாகு-வடக்கு கிராம சபை மூலம் மருதமுனை மக்கள் அனுபவித்த மருதமுனைக்கான உள்ளூராட்சி அதிகாரத்தினை மீண்டும் பெற்றுக் கொள்வதா? அல்லது கல்முனை மாநகர சபையில் #இணைந்து பயணிப்பதா? எனும் கேள்விக்கு மருதமுனை கற்றமருதமுனை மக்களுக்கான உள்ளூராட்சி அதிகாரம் தங்கத்தட்டில் வைத்து இலவசமாக தரப்பட மாட்டாது.

உள்ளூராட்சி அதிகாரத்திற்கான சாய்ந்துமருது மக்களின் நீண்ட காலப்போராட்டம் வெற்றியடைந்திருக்கிறது. #ஜனநாயக ரீதியாக ஒன்றிணைக்கப்பட்டஇப் போராட்டம் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் சட்ட அங்கீகாரத்தினை பெற்றுக் கொண்டுள்ளது.

மக்கள் மயப்படுத்தப்பட்ட இடையறாத போராட்டத்தின் மூலம் பெற்ற வரலாற்று வெற்றி இது. அதற்காக தம்மை அர்ப்பணித்து செயற்பட்டவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

இரண்டு மாதங்களுக்குள் சாய்ந்தமருது நகரசபைக்கும், கல்முனை மாநகர சபைக்குமான எல்லைகள் தனித்தனியாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்லை #நிர்ணயம் செய்யப்பட்ட கையோடு விரைவில் சாய்ந்தமருது நகர சபைக்கான தேர்தல் நடைபெறும். சாய்ந்தமருது மக்கள் இழந்த உள்ளூராட்சி அதிகாரத்தினை மீண்டும் பெற்றுக் கொள்வர்.

மருதமுனை சார்பில் தோழர் A C.M.அல்தாப் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு #ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்களினால் ஆற்றுப்படுத்தப்பட்டது, இவ்விடையீட்டு மனுவினை உயர்நீதிமன்றம் கருத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#கரைவாகு-வடக்கு கிராம சபை மூலம் மருதமுனை மக்கள் அனுபவித்த மருதமுனைக்கான உள்ளூராட்சி அதிகாரத்தினை மீண்டும் பெற்றுக் கொள்வதா? அல்லது #கல்முனை மாநகர சபையில் இணைந்து பயணிப்பதா? எனும் கேள்விக்கு மருதமுனை கற்றறிந்த சமூகம் முதலில் விடை காண வேண்டும். தீர்க்கமான ஒரு முடிவினை எட்டவேண்டும்.

மருதமுனைக்காக ஒதுக்கப்பட்ட வட்டாரங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். புதிதாக எல்லைப்படுத்தப்படும் வட்டாரங்களை பெயரிடுட வேண்டிய முக்கிய வேலைகளை காலதாமதமின்றி மருதமுனை மக்கள் தொடங்க வேண்டும். வெள்ளம் வருமுன் அணையை கட்டி கொள்ள வேண்டும்.

எந்த அரசியல் அதிகாரங்களும் தங்கத் தட்டில் வைத்து தரப்பட மாட்டாது என்பதை மருதமுனைத் தாய் பெற்றெடுத்த பிள்ளைகள் சிரமேற் கொண்டு செயற்படுங்கள். பிள்ளைகள் சிரமேற் கொண்டு செயற்படுங்கள்............!

சமூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் மக்கள் பிரதிநிதிகளை அணுகல்” எனும் கருப்பொருளின்கீழ் மக்களுடனான திறந்த கலந்து...
11/05/2026

சமூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் மக்கள் பிரதிநிதிகளை அணுகல்” எனும் கருப்பொருளின்கீழ் மக்களுடனான திறந்த கலந்துரையாடல்

கே எ. ஹமீட்

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், இணைந்து ஏற்பாடு செய்திருந்த “சமூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் மக்கள் பிரதிநிதிகளை அணுகல்” எனும் கருப்பொருளின்கீழ் மக்களுடனான திறந்த கலந்துரையாடல் நேற்று விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்டத் தலைவர் திருமதி இந்துமதி ஹரிகரதாமோதரன் தலைமையில் மட்டக்களப்பு கிறீன் கார்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், இளையதம்பி சிறிநாத், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சட்ட உருவாக்கம் மற்றும் கொள்கை மாற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் சட்டத்தரணி குகதாசன் ஐங்கரனின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது. பெண்கள் நுண்கடன்களால் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சட்ட ஏற்பாடுகளிலுள்ள பாதுகாப்பின்மை தொடர்பாக தனது அனுபவங்களை மட்டக்களப்பு மாவட்ட அமரா பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் ஒன்றியத்தின் சார்பாக மதனா பாலகிருஷ்ணராஜா பகிர்ந்து கொண்டார்.

பெண்களுக்கெதிரான பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைத் தீர்ப்பதற்கான சட்ட வழிமுறைகளில் மட்டுப்படுத்தல்கள், அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம், மக்கள் பிரதிநிதிகளின் தொடர் செயற்பாடுகள் தொடர்பான திறந்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

 #சம்பியனாக ஜீனியஸ் கழகம் ******************************(நற்பிட்டிமுனை மேலதிக செய்தியாளர்) #கல்முனை பிரசே செயலக பிரதேச ம...
11/05/2026

#சம்பியனாக ஜீனியஸ் கழகம்
******************************
(நற்பிட்டிமுனை மேலதிக செய்தியாளர்)

#கல்முனை பிரசே செயலக பிரதேச மட்ட விளையாட்டுப்போட்டிகளின் கிறிக்கட் போட்டிகள் #நற்பிட்டிமுனை அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் பிராந்திய விளையாட்டதிகாரி #றபியுடீன் றப்ஷான் அஹமட் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10-05-2026) அன்று இடம்பெற்றது .................!

மொத்தமாக எட்டு அணிகள் பங்குகொண்ட இம் மென் பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் #கல்முனை ஜீனியஸ் மற்றும் லெஜன்ஸ் கழகங்கள் களம்கண்டது.............!

இப் போட்டிக்கு #பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் முகம்மட் பழீல் கலந்து சிறப்பிக்க தொடரின் சம்பியனாக கல்முனை ஜீனியஸ் கழகம் தடம்பதித்திருந்தமை விஷேட அம்சமாகம் ........!

தொழில் வழிகாட்டல் செயலமர்வு********************************** #உங்க_எதிர்காலத்திற்கு #நாம_Guarantee!சாய்ந்தமருது பிரதேச ...
11/05/2026

தொழில் வழிகாட்டல் செயலமர்வு
**********************************
#உங்க_எதிர்காலத்திற்கு
#நாம_Guarantee!

சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி அல்லது அஸ்வெஸ்வ நலனுதவி பெறும் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் மற்றும் பாடசாலை விட்டு விலகிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வு இடம்பெறவுள்ளது.

இச்செயலமர்வு நாளை 12.05.2026 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இச்செயலமர்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுவதோடு தொழில் பயிற்ச்சி கற்கை நெறிக்கான (NVQ Level) புலமைபரிசில்களும் வழங்கப்படும்

இதில் கலந்து கொள்ள விரும்புவோர் உங்களது பதிவுகளை உங்கள் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் அல்லது 067 22 25 266 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேற்கொள்ள முடியும்.

#நல்லதே #நடக்கும்

சமுர்த்தி திட்ட முகாமையாளர்
பிரதேசே செயலகம்
சாய்ந்தமருது
067 22 25 266

மருதம் கலைக்கூடல் மன்றத்தினால் வித்தகர், இளங்கலைஞர் விருது பெற்றோர் கௌரவிப்பு !**************************(நூருல் ஹுதா உம...
10/05/2026

மருதம் கலைக்கூடல் மன்றத்தினால் வித்தகர், இளங்கலைஞர் விருது பெற்றோர் கௌரவிப்பு !
**************************
(நூருல் ஹுதா உமர்)

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் மாதாந்த அமர்வு சனிக்கிழமை இரவு சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலய கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு அமைப்பின் தலைவர் கலைஞர் அஸ்வான் எஸ். மௌலானா தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் சாய்ந்தமருது கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஸ்மி மூஸா, ஓய்வு பெற்ற அதிபர் யூ.எல். நஸார், கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நௌசாத் உள்ளிட்ட கலை, இலக்கிய மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய கலாசார விழாவில் 2025 ஆம் ஆண்டிற்கான “வித்தகர் விருது” பெற்ற ஓய்வு பெற்ற கலாசார உத்தியோகத்தரும் எழுத்தாளருமான எம்.ஐ. அஸ்ரப் அவர்களும், “இளம் கலைஞர் விருது” பெற்ற சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். நௌபீல் அவர்களும் விசேடமாக கௌரவிக்கப்பட்டனர்.

கலை மற்றும் கலாசார துறைகளில் இவர்களின் நீண்டகால பங்களிப்புகள் பாராட்டப்பட்டதுடன், இளம் தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழ்வதாகவும் நிகழ்வில் கருத்துகள் வெளியிடப்பட்டன.

மேலும், கலை மற்றும் இலக்கிய செயற்பாடுகளை சமூக மட்டத்தில் வலுப்படுத்தும் நோக்கில் மருதம் கலைக்கூடல் மன்றம் முன்னெடுத்து வரும் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. நிகழ்வு கலாசார மற்றும் கலை ஆர்வலர்களின் உற்சாகமான பங்கேற்புடன் நிறைவுற்றது.

10/05/2026
 #சிறந்த ஊடக ஆளுமைக்கான விருது பெற்றார் Rifas jp*************************  media விருதுவழங்கல் விழாவில்  நீண்ட கால ஊடகத்...
09/05/2026

#சிறந்த ஊடக ஆளுமைக்கான விருது பெற்றார்
Rifas jp
*************************

media விருதுவழங்கல் விழாவில் நீண்ட கால ஊடகத்துறை மற்றும் திகாமடுல்ல மீடியா போரத்தை ஸ்தாபித்து ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து பயனித்தமைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் முன்னாள் Srilanka muslim media forum தின் பிரதித்தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான JP Rifas அவர்கள் ........!

விருது பெற்றார் Abdul Majeed Mohamed Riyadh ************************** #தனது ஊடகப் பணிக்காகவும் ஊடகவியலாளர்களின் நலன்கள்...
09/05/2026

விருது பெற்றார் Abdul Majeed Mohamed Riyadh
**************************
#தனது ஊடகப் பணிக்காகவும் ஊடகவியலாளர்களின் நலன்கள் மற்றும் உரிமைகளுக்காக சிலோன் மீடியா போரத்தினை ஸ்தாபித்து பணியாற்றியதையிட்டும் சிட்டிசன் மீடியா நிறுவனத்தினால் இன்றைய தினம் கௌரவிப்புப் பெற்றார் சிரேஷ்ட ஊடகவியலாளர் Abdul majeed mohamed Riyadh..........!

18 வயதை எட்டியவுடன் முதலாவது இரத்ததானம்: சம்மாந்துறை மாணவி மனிதாபிமான முன்மாதிரிதில்சாத் பர்வீஸ், மஜீட் ARMஇன்றைய இளைய ச...
09/05/2026

18 வயதை எட்டியவுடன் முதலாவது இரத்ததானம்: சம்மாந்துறை மாணவி மனிதாபிமான முன்மாதிரி

தில்சாத் பர்வீஸ், மஜீட் ARM

இன்றைய இளைய சமுதாயத்திற்கு முன்மாதிரியாக, சம்மாந்துறை அல்-மர்ஜான் பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது 18 ஆவது வயதைப் பூர்த்தி செய்தவுடன் முதலாவது இரத்ததானத்தை வழங்கி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர இரத்தத் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில், அம்பாறை மாவட்ட உயிர் பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்பு குழுவின் ஏற்பாட்டில் இன்று சம்மாந்துறையில் மாபெரும் மனிதாபிமான இரத்ததான முகாம் நடைபெற்றது.

இம்முகாமில், அல்-மர்ஜான் பாடசாலையில் உயிரியல் பிரிவில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி, இரத்ததானம் செய்யத் தகுதியான 18 வயதை அடையும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்து, இன்று தனது முதலாவது இரத்ததானத்தை வழங்கினார்.

மேலும், இரத்ததானத்திற்கு அவசியமான குறைந்தபட்ச 50 கிலோ உடல் எடையை எட்டிய பின்னரே ஆரோக்கியமான முறையில் இரத்ததானத்தில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்களின் பங்கேற்பு குறைவாகக் காணப்படும் இரத்ததான முகாம்களில், சமூகப் பொறுப்புணர்வுடன் முன்வந்து மனிதாபிமான சேவையில் ஈடுபட்ட இம்மாணவியை பலரும் “இளம் சிங்கப்பெண்” என பாராட்டி வருகின்றனர்.

அவரது உயரிய மனிதாபிமான செயலைக் கௌரவிக்கும் வகையில், அம்பாறை மாவட்ட உயிர் பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்பு குழுவினரால் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

மனிதநேயம், சமூகப் பொறுப்பு மற்றும் உயிர் காக்கும் பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் இம்மாணவியின் செயற்பாடு சமூக வலைத்தளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், இளைஞர்கள் பலரையும் இரத்ததானம் செய்ய ஊக்குவிக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகப் பார்க்கப்படுகிறது.

Address

Maruthamunai
Maruthamunai

Telephone

+94742392323

Website

Alerts

Be the first to know and let us send you an email when MEGA TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category