MEGA TV

MEGA TV இது உங்களின் குரல்
***********************

நிகழ்வுகளை தொகுத்திட, போட்டிகளுக்கான வர்ணணை,ஔிப்பதிவு செய்திட, அறிவிப்பாளர்களை பெற்றிட ( 0742392323,0715441444)
(2)

14/08/2026
குறுகிய இனவாத, மதவாத சிந்தனைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாகும் – ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சிநூருல் ஹுதா உமர் குறுகிய ...
14/08/2026

குறுகிய இனவாத, மதவாத சிந்தனைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாகும் – ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி

நூருல் ஹுதா உமர்

குறுகிய இனவாத மற்றும் மதவாத சிந்தனைகள் நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடியவை எனவும், கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு சகல இன மக்களும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் உயர்பீட கூட்டத்தின் பின்னர் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சி பிரதிநிதிகள், 1980களில் ஆரம்பித்து 2009ஆம் ஆண்டு வரை நீடித்த இனப்பிரச்சினை மற்றும் ஆயுத மோதலால் இலங்கை எதிர்கொண்ட அழிவையும், அதன் காரணமாக மக்கள் அனுபவித்த துயரங்களையும் மறந்துவிட முடியாது.

“இனவாதமும் மதவாதமும் எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும் அது இறுதியில் முழு நாட்டையும் பாதிக்கும். ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக உருவாக்கப்படும் குறுகிய சிந்தனை, நாளை இன்னொரு சமூகத்தையும் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தக்கூடும். எனவே, கடந்த காலத் தவறுகளை மீண்டும் செய்யாமல் அனைவரையும் சமமாக மதிக்கும் அரசியல் மற்றும் நிர்வாக கலாசாரத்தை உருவாக்க வேண்டும்”.

அரச அலுவலகங்களில் அரசியலமைப்பு, சட்டங்கள் மற்றும் அரச சுற்றுநிருபங்கள் இன, மத, மொழி வேறுபாடுகளின்றி சமமாக நடைமுறைப்படுத்தப்படும்போது தேவையற்ற முரண்பாடுகளுக்கு இடமிருக்காது. அரச நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அல்லது இன, மத அடிப்படையிலான பார்வைகளின் அடிப்படையில் பயன்படுத்தாமல், சட்டம் மற்றும் நடைமுறைகளுக்கு அமைவாக செயல்படுவது அவசியம்.

கல்முனை ஆதார வைத்தியசாலையைச் சுற்றி அண்மையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளும் இதற்கு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாகும் எனத் தெரிவித்த கட்சி பிரதிநிதிகள், அரச நிறுவனங்களில் ஏற்படும் இவ்வாறான சம்பவங்கள் தனிப்பட்ட நிர்வாகப் பிரச்சினைகளாக மட்டுப்படுத்தப்படாமல், சமூக நல்லிணக்கத்தையும் அரசாங்கத்தின் மாற்றத்திற்கான வேலைத்திட்டங்களையும் பாதிக்கும் வகையில் வளரக்கூடாது.

“நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அரச நிறுவனங்களுக்குள் உருவாகும் இன, மத அடிப்படையிலான தேவையற்ற முரண்பாடுகள் அந்த மாற்றப் பயணத்திற்கு தடையாக அமையக்கூடாது. சட்டத்தையும் சுற்றுநிருபங்களையும் சரியாக நடைமுறைப்படுத்தினால் பல பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தவிர்க்க முடியும்”.

இலங்கையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக ஊழலும், அதனுடன் இணைந்த குறுகிய இனவாத மற்றும் மதவாத சிந்தனைகளும் காணப்படுவதாகவும் கட்சி தெரிவித்தது. பொருளாதார வளர்ச்சியுடன் சமூக நல்லிணக்கமும், சட்டத்தின் ஆட்சியும், சமத்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைத்து மக்களும் சம உரிமையுடனும் கௌரவத்துடனும் வாழும் நாடாக இலங்கை தொடர வேண்டும். நாம் அனைவரும் ஒருதாய் மக்களாக சகோதரத்துவத்துடன் முன்னோக்கிச் சென்றால் மட்டுமே நாட்டை உண்மையான அர்த்தத்தில் கட்டியெழுப்ப முடியும்.

இயற்கை வளங்கள், மனித வளம் மற்றும் புவியியல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வளங்களால் இலங்கை ஆசீர்வதிக்கப்பட்ட நாடாக இருந்தாலும், மனிதர்களுக்கிடையிலான பிரிவினைகள் மற்றும் ஊழல் போன்ற காரணிகளே நாட்டின் முன்னேற்றத்தை தாமதப்படுத்துகின்றன. எனவே, அரசியல் கட்சிகள், அரச நிறுவனங்கள், மதத் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டு, இன மற்றும் மத வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய நலனை முன்னிலைப்படுத்த வேண்டும்.

“கடந்த காலத்தில் நாம் இழந்தவற்றை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு நமக்கு உள்ளது. அதற்கு இனவாதம் தேவையில்லை; மதவாதம் தேவையில்லை; ஒருவரை ஒருவர் சந்தேகிக்கும் அரசியல் தேவையில்லை. சட்டத்தின் ஆட்சி, சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவமே புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான அடித்தளமாக இருக்க வேண்டும்” என கட்சியின் ஊடக சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

 #சர்வதேச அரங்கில் காலடி வைக்கும் சிலோன் மீடியா போரம்  #கட்டார் நாட்டில் புதிய கிளை விரைவில் தொடக்கம்*******************...
12/08/2026

#சர்வதேச அரங்கில் காலடி வைக்கும் சிலோன் மீடியா போரம்
#கட்டார் நாட்டில் புதிய கிளை விரைவில் தொடக்கம்
********************************
(எம்.பி.எம்.றாஜிட்)

#இலங்கையில் இயங்கிவரும் 'சிலோன் மீடியா போரம்' (Ceylon Media Forum) தனது அமைப்பின் சேவைகளை சர்வதேச ரீதியில் விரிவுபடுத்தும் நோக்கில், கட்டார் நாட்டில் புதிய கிளையொன்றை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பான விசேட சிநேகபூர்வ சந்திப்பொன்று அமைப்பின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில், கட்டாரில் வசிக்கும் சிலோன் மீடியா போரத்தின் சிரேஷ்ட உறுப்பினரும் 'ஸ்கை தமிழ்' ஊடக வலையமைப்பின் பணிப்பாளருமான ஜே.எம். வாஸித் மற்றும் கட்டார் 'ஷப்போ' நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அக்ரம் ஹாபிஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கட்டாரில் வாழும் இலங்கை ஊடகவியலாளர்கள், ஊடகத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கலைஞர்களை ஒன்றிணைத்து புதிய கிளையை உறுதியாகக் கட்டியெழுப்புவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

வரும் அக்டோபர் மாதம் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் அவர்களுக்கு கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் #மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதுடன், அவ்விஜயத்தின் போது கட்டார் கிளையை உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைக்குமாறும் #கேட்டுக்கொள்ளப்பட்டது.

எதிர்காலத்தில் கட்டார் நாட்டில் மட்டுமன்றி, ஏனைய சர்வதேச #நாடுகளிலும் சிலோன் மீடியா போரத்தின் கிளைகளை விரிவுபடுத்துவது தொடர்பான மூலோபாயத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கட்டாரில் நடைபெறவுள்ள சர்வதேச மட்டத்திலான பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்வுகளில் சிலோன் மீடியா போரத்தின் உறுப்பினர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் இதன்போது #ஆலோசிக்கப்பட்டது.

நிகழ்வின் நிறைவில், இச்சந்திப்பில் கலந்துகொண்ட விருந்தினர்களான ஜே.எம். வாஸித் மற்றும் அக்ரம் ஹாபிஷ் #ஆகியோருக்கு, சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத்தினால் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 #தாயாக  #தந்தையாக  #பிள்ளையாக   #சகோதரனாக  #சகோதரியாக உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்.............!
11/08/2026

#தாயாக #தந்தையாக #பிள்ளையாக #சகோதரனாக #சகோதரியாக உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்.............!

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc65dznApsd9pZB0wh71_Vkdd_c4wK2mtp_paAwOFo5LemwJw/viewform?usp=header✨ உங்கள் ம...
10/08/2026

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc65dznApsd9pZB0wh71_Vkdd_c4wK2mtp_paAwOFo5LemwJw/viewform?usp=header

✨ உங்கள் முடிக்கு ஒரு புதிய தொடக்கம்! ✨

முடி உதிர்வா............?
முடி மெலிதலா..............?
அல்லது ஆரோக்கியமான, அடர்த்தியான முடியை விரும்புகிறீர்களா...........?

💚 Royal Wellness Center வழங்குகிறது:

🔥 KILLER OFFER – PRP Treatment
👨 ஆண்களுக்கு | 👩 பெண்களுக்கு

PRP சிகிச்சை உங்கள் உடலிலிருந்து பெறப்படும் Platelet Rich Plasma மூலம் முடி வளர்ச்சி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு நவீன சிகிச்சையாகும்.

✨ PRP மூலம்:
✅ முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்
✅ முடி உதிர்வை குறைக்க உதவும்
✅ முடியின் அடர்த்தியை மேம்படுத்த உதவும்
✅ சருமத்தின் Glow & Texture-ஐ அதிகரிக்க உதவும்.

💰 முன்னைய விலை: ரூ. 20,000
🔥 இப்போது சிறப்பு விலை: ரூ. 12,500 மட்டும்!

⏰ இந்த சிறப்பு சலுகை 28ஆம் தேதி வரை மட்டுமே!

📍 Royal Wellness Center – Maruthamunai

📩 இன்று எங்களை தொடர்பு கொண்டு உங்கள் ஆலோசனையை பதிவு செய்யுங்கள்.

10/08/2026

🔴 #நீங்கள் நம்பிக்கை நாணயம் மிகு நிறுவனத்தின் ஊடாக வெளிநாடு ஒன்றிற்கு தொழில் வாய்ப்பை பெற்று செல்ல எண்ணி உள்ளீர்களா........?

🔵அப்படியாயின் இந்தக் காணொளி உங்களுக்கானது.............!
#𝐁𝐀𝐓𝐓𝐈𝐂𝐀𝐋𝐎𝐀 #𝗞𝗮𝗹𝗺𝘂𝗻𝗮𝗶 #𝗠𝗮𝗿𝘂𝘁𝗵𝗮𝗺𝘂𝗻𝗮𝗶

 / *********** #இன்று திங்கட்கிழமை  பி.ப 01.00 மணியளவில் கல்முனை சாஹிறா தேசியபாடசாலை வளாகத்தில் வைத்து    015 pro  கையடக...
10/08/2026

/
***********
#இன்று திங்கட்கிழமை பி.ப 01.00 மணியளவில் கல்முனை சாஹிறா தேசியபாடசாலை வளாகத்தில் வைத்து 015 pro கையடக்க தொலைபேசி காணாமல் போய்விட்டது.....!

#கண்டெடுத்தவர்கள் 0777328903 இலக்கத்திற்கு அறியத்தரவும் ........!

நடைபெறுகின்ற A/L பரீட்சைக்கான கற்றல் தொடர்பான முக்கிய #ஆவணங்கள் அதில் உள்ளமையால் தயவு செய்து #கண்டெடுத்தவர்களை ஒப்படைக்குமாறும் அவர்களுக்கு தகுந்த #சன்மானங்களையும் வழங்கவும் காத்திருக்குறோம்........!

10/08/2026

#உங்களது நிகழ்வுகளை உலகறியச் செய்திட எம்மை அழையுங்கள்........................!
0742392323/0752392325

 #உங்களது முயற்சி இறைவனிடத்தில் வெற்றியைப் பெற்றுத்தரட்டும்....................!
09/08/2026

#உங்களது முயற்சி இறைவனிடத்தில் வெற்றியைப் பெற்றுத்தரட்டும்....................!

நாடு முழுவதும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கோலாகலம்-அம்பாறை மாவட்ட  மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு பொலிஸ் பாதுகாப்புட...
09/08/2026

நாடு முழுவதும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கோலாகலம்-அம்பாறை மாவட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

பொலிஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் ஆரம்பமானது பரீட்சை

பாறுக் ஷிஹான்


இலங்கை முழுவதும் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) காலை நாடு தழுவிய ரீதியில் அமைதியாகவும், சுமுகமான முறையிலும் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை நிலையங்களில் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றனர். வினாத்தாள்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் எவ்வித பதற்றமுமின்றி நம்பிக்கையுடன் பரீட்சை எழுதுவதை அவதானிக்க முடிந்தது.

பரீட்சை நடவடிக்கைகளை எவ்வித இடையூறுகளுமின்றி மிகவும் நேர்த்தியாக நடத்துவதற்காக, நாட்டின் அனைத்துப் பரீட்சை நிலையங்களுக்கும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகளின் போக்குவரத்துச் சௌகரியங்கள் மற்றும் நிலையங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் பொலிஸார் தீவிரக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.பரீட்சை காலை 09.30 மணிக்கு ஆரம்பமானதுடன் பரீட்சார்த்திகள் அனைவரும் உரிய ஒழுங்கமைப்புடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றதை காண முடிந்தது.

இன்று காலை ஆரம்பமான குறித்த பரீட்சைக்கு கல்முனை கல்வி வலயம் சம்மாந்துறை கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு சமூகமளித்திருந்தனர்.

மேலும் பரீட்சை இடம்பெற்ற நிலையங்களில் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது பரீட்சையை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடைபெறுவதற்கு பெற்றேர்கள் உள்ளிட்ட தரப்பினர்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

அத்துடன், பரீட்சை திணைக்கள அதிகாரிகள் மற்றும் கல்வி அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், மாணவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தங்குதடையின்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளைகளின் மன ஏகாகிரதையைப் பேணி, கவனத்துடன் பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்கு இலகுவாக இருக்கும் வகையில், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களைச் சென்றடையுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்துகிறது.

இதற்கமைய, காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், அனைத்து மாணவர்களும் காலை 09.00 மணிக்கு பரீட்சை மண்டபத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.

முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், அது காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 10.45 மணிக்கு நிறைவடையவுள்ளது.

பின்னர் வழங்கப்படும் சிறு இடைவேளையின் பின்னர், காலை 11.15 முதல் நண்பகல் 12.15 வரை ஒரு மணித்தியால காலம் முதல் வினாத்தாளுக்காக வழங்கப்படும்.

பரீட்சைக்குத் தோற்றும் அனைத்துப் பிள்ளைகளும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசித்து, தங்களது பரீட்சை இலக்கத்தை சரியாகக் குறிப்பிட்டு, தெளிவான கையெழுத்தில் வினாத்தாளிலேயே விடையளிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது ஏனைய இலத்திரனியல் சாதனங்கள் எதனையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Address

Maruthamunai
Maruthamunai

Telephone

+94742392323

Website

Alerts

Be the first to know and let us send you an email when MEGA TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category