08/04/2026
கேகாலை மாவட்டத்தில் உயிரியல், கணித பிரிவுகளில் City College மாணவர்கள் சாதனை
– நஸ்லின் அமதுல்லாஹ் 3A சித்திகளைப் பெற்று கேகாலை மாவட்டத்தில் இரண்டாம் இடம் -
கேகாலை மாவட்டத்தில் வெளியான உயர்தரப் பரீட்சையில், தமிழ் மொழி மூலம் உயிரியல் பிரிவில் தோற்றிய நஸ்லின் அமதுல்லாஹ் (Nazlin Amathullah) என்ற மாணவி 3A சித்திகளைப் பெற்று கேகாலை மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
குறித்த மாணவி மாவனல்லை சாஹிரா தேசிய கல்லூரியில் கல்வி கற்று வந்ததுடன் , கடந்த 15 வருட காலமாக கல்வி துறையில் பாரிய பங்களிப்பை வழங்கி வரும் மாவனல்லை City College ல் தனது உயர் தர கல்வியை தொடர்ந்தார்.
தனது அயராத உழைப்பிலும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் குறித்த மாணவி கேகாலை மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
மேலும், மாவனல்லை City Collegeல் கணித மற்றும் உயிரியல் பிரிவில் பல மாணவர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர். அந்த வகையில் கணித பிரிவில் ஆதிப் அலி மாவட்டத்தில் 9 ஆவது இடத்தையும், உயிரியல் பிரிவில் பாத்திமா றிதா 10 ஆவது இடத்தையும், மொஹமட் முபீஸ் 16 ஆவது இடத்தையும் மொஹமட் ஆமிர் 23 ஆவது இடத்தையும் பெற்று கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இம்மாணவர்களை பாராட்டும் நிகழ்வொன்று இம்மாதம் முதலாம் திகதி மாவனல்லை City College வளாகத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் இம்முறை உயர்தரம் எழுதி பல்கலைக்கழகத்திதிற்கு தெரிவா மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் City College நிருவாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வில் திறமையான சித்திகளை பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்ட்டதுடன் கேகாலை மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற நஸ்லின் அமதுல்லாஹ் மற்றும் ஏனைய மாணவர்களும் தமது வெற்றிக்குக் காரணமாக அமைந்த பெற்றோர், கற்பித்த ஆசிரியர்களான Dr Hifraz , Fazil Sir Sajeen Sir, Dr Shakir, Nafras Sir, Fasmin Sir ஆகியோருக்கும் தமது கல்விக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்,
அத்துடன் , கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்திரம் உயர்தர பரீட்சையில் கேகாலை மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முதல் மூன்று இடங்களையும் மாவனல்லை City College மாணவர்கள் பெற்று கொண்டமை குறிப்பிடத்க்கது.