15/08/2026
முல்லைத்தீவு கடற்கரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
🌊 கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்களின் கவனத்திற்கு!
இன்று 15.08.2026 மாலை 4.24 மணியளவில், இந்தோனேசியாவின் Medan நகருக்கு அருகிலுள்ள பகுதியில், 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 168 கிலோமீற்றர் என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
⚠️ இலங்கைக்கு தற்போது சுனாமி ஆபத்து இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடற்கரைப் பகுதிகள் பாதுகாப்பானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு – முல்லைத்தீவு கேட்டுக்கொண்டுள்ளது.
🔔 மக்கள் கவனிக்க வேண்டியவை:
• கடற்கரைக்கு அருகில் தேவையற்ற முறையில் செல்வதைத் தவிர்க்கவும்.
• கடல் மற்றும் கடற்கரையில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களை அவதானிக்கவும்.
• அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
• வதந்திகளை நம்ப வேண்டாம்.
• சுனாமி எச்சரிக்கை அல்லது வெளியேற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டால், உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும்.
• குடும்பத்தினருடன் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பாதுகாப்பான இடம் மற்றும் அங்கு செல்லும் பாதையை அறிந்து வைத்திருக்கவும்.
🔔 இந்த அறிவிப்பு மக்களை அச்சுறுத்துவதற்காக அல்ல; முன்னெச்சரிக்கையாக மக்களைத் தயார்படுத்துவதற்காக மட்டுமே.
📌 மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு – முல்லைத்தீவு
வினோ பொத்தகசாலை முல்லைத்தீவு வினோ பொத்தகசாலை புதுக்குடியிருப்பு
ிழ்