12/07/2026
பீச்சாங்கையின் கிறுக்கல்கள் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு
மூதூர் இலக்கியப் பேரவையின் இரண்டாவது வெளியீடாக இன்று வெளியீடு காண்கின்றது பாவலர் சாகுல் ஜூஹைம் அவர்களின் "பீச்சாங்கையின் கிறுக்கல்கள்" கவிதைத் தொகுப்பு நூல்
மூதூர் 3CD Muneer Memorial மண்டபத்தில் காலை 9.30 மணி அளவில் மூதூர் இலக்கியப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷேக் எம்.மனாசீர் நத்வி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்வெளியீட்டு வைபவத்தில் முதன்மை அழைப்பாளராக அனைத்துப் பள்ளிவாயல் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் எம்.எம்.றபீக் மற்றும் இலக்கியவாதி கலாபூஷணம் ப.மதிபாலசிங்கம் கலந்து சிறப்பித்ததோடு முதல் பிரதியை முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஜே.எம்.லாஹீர் அவர்களும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இலக்கிய ஆர்வலர்கள், மூதூர் இலக்கியப் பேரவையின் உறுப்பினர்கள், வாசகர்கள் மற்றும் நூலாசிரியர் குடும்ப உறவுகள், நண்பர்கள் என்று பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.