Social TV

Social TV செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள குழுமத்தில் இணையுங்கள் 👇🏻 : https://chat.whatsapp.com/ISt6ycp7HkK0PcGi48oMEy

1750 ரூபாயாக சம்பளம் அதிகரிக்கப்பட்டதை பால்சோறு பொங்கியும் பட்டாசு கொழுத்தியும் கொண்டாடிய பதுளை தோட்டத் தொழிலாழர்கள்.202...
08/11/2025

1750 ரூபாயாக சம்பளம் அதிகரிக்கப்பட்டதை பால்சோறு பொங்கியும் பட்டாசு கொழுத்தியும் கொண்டாடிய பதுளை தோட்டத் தொழிலாழர்கள்.

2026 பட்ஜெட்டில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 ரூபாயாக உயர்த்தப்பட்டதை அடுத்து, பதுளை தோட்ட தொழிலாளர்கள் பட்டாசு கொளுத்தியும், பால் சோறு சமைத்தும் கொண்டாடினர்.

இதுவரை தோட்டத் தொழிலாளர்கள் பெற்ற நாளாந்த சம்பளம் ரூ.1350 ஆகும். நேற்று (07) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் காரணமாக, நாளாந்த சம்பளம் ரூ.1750 ஆக உயர்த்தப்பட்டது.

அதன்படி, தோட்டத் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ரூ.200 அடிப்படை சம்பளத்தைப் பெறுகிறார்கள், அதே நேரத்தில் அரசாங்கம் ஊக்கத்தொகையாக மேலும் ரூ.200 சேர்க்கிறது. அதன்படி, மாதத்திற்கு 25 நாட்கள் வேலை செய்யும் ஒரு தொழிலாளிக்கு மாதாந்திர சம்பள உயர்வு ரூ.10000 ஆகும். இது வரலாற்றில் மிகப்பெரிய சம்பள உயர்வு ஆகும்,

சாணக்கியன் எம்.பி அவர்களின் தந்தையாருக்கு இறுதி அஞ்சலி – பல எம்.பி.க்கள் பங்கேற்புதமிழரசுக் கட்சியின் கௌரவ பாராளுமன்ற உற...
08/11/2025

சாணக்கியன் எம்.பி அவர்களின் தந்தையாருக்கு இறுதி அஞ்சலி – பல எம்.பி.க்கள் பங்கேற்பு

தமிழரசுக் கட்சியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் தந்தையாரும், வைத்தியருமான இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் அவர்களின் பூதவுடலுக்கு, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (08) இறுதி அஞ்சலி செலுத்தினர்.

​சமூகப் பணியிலும், வைத்தியத் துறையிலும் ஆற்றிய பங்களிப்பிற்காக அனைவராலும் மதிக்கப்பட்ட திரு. இராஜபுத்திரன் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், அஷ்ரப் தாஹிர், மற்றும் முத்து முஹம்மது ஆகியோர் நேரில் சென்று தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் நோக்கி புறப்பட்ட  இலங்கை அணி!இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று முன்தினம் (06) எதிர்வரும் பாகிஸ்தான் சுற்றுப்ப...
08/11/2025

பாகிஸ்தான் நோக்கி புறப்பட்ட இலங்கை அணி!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று முன்தினம் (06) எதிர்வரும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி குழாமை அறிவித்தது.

இந்தத் தொடரில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடர் மற்றும் சிம்பாப்வேயும் பங்கேற்கும் ஒரு T20 முத்தரப்புத் தொடர் ஆகியவை அடங்கும்.

இறுதியாக இலங்கை அணி பாகிஸ்தானை ஆசியக் கிண்ணத்தின் சுப்பர் ஃபோர்ஸ் சுற்றில் எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதற்கிடையில், பாகிஸ்தான் அணி இந்தத் தொடருக்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவுடன் இரண்டு டெஸ்ட் (1-1 சமநிலை) மற்றும் மூன்று T20 போட்டிகளில் (2-1 வெற்றி) விளையாடியது. அதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் தற்போது 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

இலங்கை அணிக்காக இரு வடிவப் போட்டிகளுக்கும் (ஒருநாள் மற்றும் T20) சரித் அசலங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் குழாமில் ஏற்பட்ட பெரிய மாற்றத்தின்படி, முதலில் பெயரிடப்பட்டு முழங்கால் காயம் காரணமாக விலகிய தில்ஷான் மதுஷங்கவிற்குப் பதிலாக ஈஷான் மாலிங்க சேர்க்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், மத்தீஷ பத்திரன மேல் சுவாசக்குழாய் தொற்றுநோயிலிருந்து மீண்டு வருவதால் அவர் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அசித பெனாண்டோ சேர்க்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

நிந்தவூர் கலாச்சார மண்டபம் பூர்த்தி செய்ய நிதி ஒதுக்கீடு!Social TV ​​சுமார் 29 வருடங்களாக பாழடைந்த நிலையில் காணப்பட்ட நி...
08/11/2025

நிந்தவூர் கலாச்சார மண்டபம் பூர்த்தி செய்ய நிதி ஒதுக்கீடு!

Social TV

​சுமார் 29 வருடங்களாக பாழடைந்த நிலையில் காணப்பட்ட நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்காக, 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை வரவேற்று, தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆதரவாளர்கள் இன்று 08.11.2025) மகிழ்ச்சியுடன் பாற்சோறு வழங்கி துஆப் பிரார்த்தனை செய்தனர்.

​இந்த நீண்ட காலப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அக்கரைப்பற்று பஸ் தரிப்பு நிலையம் சுத்திகரிப்பு செய்யப்பட்டதுஊர் மீது அக்கரை கொண்டு கவனயீர்ப்பு செய்த சகோதரர்களுக்கு நன்...
08/11/2025

அக்கரைப்பற்று பஸ் தரிப்பு நிலையம் சுத்திகரிப்பு செய்யப்பட்டது

ஊர் மீது அக்கரை கொண்டு கவனயீர்ப்பு செய்த சகோதரர்களுக்கு நன்றிகள்.

கௌரவ மாநகர முதல்வர் நமது தேசிய தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.எம் அதாஉல்லா சேர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று அக்கரைப்பற்று பஸ் தரிப்பு நிலையம் சுத்திகரிப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கௌரவ மாநகர சபை உறுப்பினர்களான ஏ.கே.எம் பாஹிம், ஏ.சி.எம் நுஃமான், ஏ.எச் ஹனீப், என்.ரீ அஸ்மத், அக்கரைப்பற்று சாலை கணக்காளர் ஏ.கே மிர்ஷாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு உதவியும் ஒத்துழைப்பும் வழங்கிய மாநகர ஊழியர்கள், தீயணைப்புப் படை ஊழியர்கள், வர்த்தக சங்க தலைவர் சலாம் அவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.


தாதியர் வெற்றிடங்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தீர்வுதாதியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் வகையில்,  உடனடியாக த...
08/11/2025

தாதியர் வெற்றிடங்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தீர்வு

தாதியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் வகையில், உடனடியாக தேர்வுகளை நடத்தி, விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்களை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பணியமர்த்துமாறு , ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாதியர் பாடசாலைகளில் காணப்படும் தொழில் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை ஆராய்வதற்கு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கும் தாதியர் பாடசாலை அதிபர்களுக்கும் இடையே விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில்,

நாடு முழுவதும் உள்ள 17 தாதியர் பாடசாலைகளின் அதிபர்கள் இந்த விசேட கலந்துரையாடலில் பங்கேற்றனர். தாதியர் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை, செவிலியர் முதல்வர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகளை அணுகுதல், தேர்வு கட்டணங்களை திருத்துதல், செவிலியர் பள்ளிகளின் முதல்வர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரித்தல், பொருத்தமான சம்பள அளவை நிர்ணயித்தல், செவிலியர் பள்ளிகளின் உள் வசதிகள் மற்றும் பௌதீக வளங்களை அதிகரித்தல், மனித வளங்களை வலுப்படுத்துதல் மற்றும் பல பிரச்சினைகள் குறித்து விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நாட்டில் 17 தாதியர் பாடசாலைகள் உள்ளன, மேலும் தற்போது அந்த தாதியர் பாடசாலைககளில் 216 தாதியர் ஆசிரியர்களும் 5,000 மாணவர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர், மேலும் எதிர்வரும் டிசம்பரில் லும் 2,650 மாணவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

அதிக பணிச்சுமை காரணமாக தற்போதைய செவிலியர் ஆசிரியர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று தாதியர் பாடசாலைகளின் முதல்வர்கள் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

ஒப்புதல் வழங்கப்பட்ட தாதியர் ஆசிரியர்களின் எண்ணிக்கை 395 என்றும், அதன்படி, மேலும் 175 தாதியர் ஆசிரியர்கள் தேவை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இது குறித்து கவனம் செலுத்திய அமைச்சர், உடனடியாக தேர்வுகளை நடத்தி, விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்களை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பணியமர்த்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

செவிலியர் அதிபர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவது தொடர்பான சிக்கல்களை அதிபர்கள் சுட்டிக்காட்டினர், மேலும் அடுத்த ஆண்டு இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளை மையமாகக் கொண்டு உயர்கல்வி வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

தேர்வு கட்டணங்களை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும், பொது நிர்வாக அமைச்சின் ஒப்புதலின் கீழ் உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

2000 ஆம் ஆண்டு முதல் தாதியர் அதிபர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1,500 கொடுப்பனவை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் தாதியர் அதிபர்கள் சுட்டிக்காட்டினர், மேலும் எதிர்காலத்தில் இது குறித்து கவனம் செலுத்துவதாக அமைச்சர் கூறினார்.

மேலும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, தாதியர் கல்லூரிகளில் பராமரிப்பு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படும் என்றும், சிறு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தாதியர் கல்லூரிகளை புதுப்பிப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

தாதியர் கல்லூரி அதிபர்களின் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தி உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்ததற்காகவும் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு தாதியர் அதிபர்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர் சாமிக கமகே, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் அதிகாரிகள், தாதியர் அதிபர்கள் சங்கத்தின் தலைவர் செனரத் ஜெயசேன மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த வருடத்தில் 27,000 புதிய வீடுகள்!அடுத்த வருடத்தில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் அடங்கலாக 27,000 புதிய ...
08/11/2025

அடுத்த வருடத்தில் 27,000 புதிய வீடுகள்!

அடுத்த வருடத்தில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் அடங்கலாக 27,000 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

சகோதரரின் உயிரைக் காப்பாற்ற அவசர உதவி வேண்டப்படுகிறது!எதை எதையோ சமூக வலைத்தளங்களில்பார்க்கின்றீர்கள் சிரிக்கின்றீர்கள்  ...
08/11/2025

சகோதரரின் உயிரைக் காப்பாற்ற அவசர உதவி வேண்டப்படுகிறது!

எதை எதையோ சமூக வலைத்தளங்களில்
பார்க்கின்றீர்கள் சிரிக்கின்றீர்கள் பகிர்ந்து மகிழ்கின்றீர்கள் ஒருவரது உயிரைக் காப்பாற்ற உங்களால் முடியாவிட்டால் மற்றவர்கள் உதவ முடிந்தவர்கள் பார்க்கும் வரை பகிர்ந்து உதவுங்கள்.

556, கபூர் வீதி சாய்ந்தமருது -16 யில்
வசித்து வந்து தற்போது மாவடிப்பள்ளியில் திருமணம் செய்துள்ள முஹம்மட் றிஸ்னி அஸாம்

(ZAHIRA COLLEGE KALMUNAI 2011 O/L BATCH)
(சுக்க்ஷர் டிரைவரின் மகன்) ஆகிய எனக்கு நாள் பட்ட சிறுநீரக செயலிழப்பு
(chronic kidney disease)
நோயினால் பாதிக்கபட்டுள்ளேன் .
தற்போது எனது இரண்டு சிறுநீரகங்களும் 70 சதவீதம் பாதிக்கப்பட்டு விட்டது.

அதனால் எனக்கு மூன்று மாத காலத்துக்குள் அவசர சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை (kidny transplant)
செய்ய வேண்டும் என்று வைத்திய ஆலோசகர் கூறியுள்ளார்.

இதற்கு பெருந்தொகையான பணமாக
( 1 கோடி 20 லட்சம் ) தேவைப்படுகிறது.
இதனை சாதாரண சாரதி தொழில் செய்யும் என்னால் இப்பெருந்தொகையான பணத்தை திரட்ட முடியவில்லை.

ஆகவே குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள், நல்லுள்ளம் கொண்ட சகோதர சகோதரிகள் பணம் படைத்தவர்கள் உங்களால் ஒரு சிறிய தொகையேனும் தந்து என் உயிரை காப்பாற்ற உதவுமாறு மிகவும் அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு உங்களது அன்புக்குரிய சகோதரர் நான்
அஸாம்....

தொலைபேசி இலக்கம் ;
077 210 5988

வங்கிக் கணக்கு:
A.S.R.AZAM
AC NO:112654964191
SAMPATH BANK
SAINTHAMARUTHU

மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி வவுச்சர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு...       250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பா...
08/11/2025

மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி வவுச்சர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு...


250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப் பதிலாக, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட, உயர்தர பாதணிகளை வழங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள 1,266 பாடசாலைகளைச் சேர்ந்த 145,723 மாணவர்களுக்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பாதணிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு ஜோடி உள்ளூர் பாதணியை 2,100 ரூபாய் செலவில், ஒரு வருட உத்தரவாதத்துடன் வழங்க உள்ளூர் உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதன் ஊடாக அரசாங்கத்திற்கு சுமார் 140 மில்லியன் ரூபாய் இலாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனூடாக குறித்த இரண்டு மாகாணங்களிலுமுள்ள மேலும் 62,481 மாணவர்களுக்கு பாதணிகளை பெற்றுக் கொடுக்க முடியும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இன்றைய வானிலை 2025.11.08நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய...
08/11/2025

இன்றைய வானிலை
2025.11.08

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய , சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
***************************

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து அல்லது வடமேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.

சம்மாந்துறை அல் மதீனா வித்தியாலய ஐந்தாம் தர புலமைப்பரிசில் வெற்றியாளர்களுக்குக் கௌரவம்!✍️மஜீட். ARM​​சம்மாந்துறை அல் மதீ...
07/11/2025

சம்மாந்துறை அல் மதீனா வித்தியாலய ஐந்தாம் தர புலமைப்பரிசில் வெற்றியாளர்களுக்குக் கௌரவம்!

✍️மஜீட். ARM

​சம்மாந்துறை அல் மதீனா வித்தியாலயத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் பிரமாண்டமான நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. அதிபர் ரனீஷா அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு இனிதே இடம்பெற்றது.


​இந்தக் கௌரவிப்பு நிகழ்வின் பிரதம அதிதியாகச் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். மகேந்திர குமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
​மேலும், கௌரவ அதிதிகளாகச் சிறப்பு சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.எம். ஃபஹூமி மற்றும் ஏ.சி.எம். நயீம் .
​ அம்பாறை மாவட்ட நீர்வளங்கள் வடிகாலமைப்பு சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஜவாஹிர்,
​அல்மாஸ் ஜுவல்லரி நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஷாத் மற்றும்
ஆர்.ஜே. கோல்ட் ஹவுஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாயா
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Address

Nintavur

Alerts

Be the first to know and let us send you an email when Social TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Social TV:

Share