The Nation

The Nation மாற்றத்திற்கான மாற்று எழுத்துக்களின் தளம்!..

29/03/2026

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

 #சுயாதீன பொது வழக்கறிஞர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படும் – சமூக நீதிக் கட்சி வரவேற்பு சமூக நீதிக் கட்சியின் நீண்ட கால கோரிக்க...
10/02/2025

#சுயாதீன பொது வழக்கறிஞர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படும் – சமூக நீதிக் கட்சி வரவேற்பு

சமூக நீதிக் கட்சியின் நீண்ட கால கோரிக்கையான "சுயாதீன பொது வழக்கறிஞர் அலுவலகத்தை" (Office of Independent Public Prosecutor) ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதையீட்டு,

சட்டம், நீதி, ஜனநாயக நெறிமுறைகள் ஆகியவை உறுதியாக நிலைத்திருக்க, அரசின் சட்ட ஆலோசகர் (State Attorney) மற்றும் பொது வழக்கறிஞர் (Public Prosecutor) என்ற இரண்டு பணிகளும் தனித்தனியாக இயங்குவது அவசியமாகும். தற்போது இரண்டும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கீழ் செயல்படுவதால், முறையான நீதியாற்றலில் அடிப்படை முரண்பாடுகள் உருவாகுகின்றன. இதனை மாற்றிக்கொண்டு, சுயாதீன பொது வழக்கறிஞர் அலுவலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே சமூக நீதிக் கட்சியின் நிலைப்பாடு.

அண்மைய வரலாற்றில், அரசியலுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்ததற்கான காரணங்களில் ஒன்று, இந்த அலுவலகத்தின் சுயாதீனமின்மையே. எனவே, அரசியல் தலையீடுகள் இல்லாத நீதிமுறையை உருவாக்க, சுயாதீன பொது வழக்கறிஞர் அலுவலகம் அவசியம் என்று சமூக நீதிக் கட்சி வலியுறுத்துகிறது.

இதற்கான கோரிக்கை 2024 ஆகஸ்ட் 16ம் தேதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டிலும், 2025 பெப்ரவரி 4ம் தேதி சமூக நீதிக் கட்சியின் மூன்றாம் ஆண்டு நிறைவுவிழா தீர்மானத்திலும் வலியுறுத்தப்பட்டது. இந்த முயற்சிக்கு இப்போது அரசாங்கத்திடம் இருந்து நேர்மையான பதில் கிடைத்துள்ளது என்பதில் சமூக நீதிக் கட்சி மகிழ்ச்சி தெரிவிக்கிறது.

அரசாங்கம் இதற்காக நியமிக்கப்படும் குழுவில், நீதித்துறை, சட்டமா அதிபர் திணைக்களம், நீதியமைச்சு, சட்டத்தரணிகள் சங்கம், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இடம்பெற வேண்டும் என்ற சமூக நீதிக் கட்சியின் கோரிக்கையை வலியுறுத்துகிறது.

இதற்காக நீண்ட காலமாக போராடிய ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரதிநிதிகள் அனைவருக்கும் சமூக நீதிக் கட்சி தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

மாபெரும் தலைவர் மர்ஹூம் கலாநிதி . எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஒலுவில் அமைந்துள்ள  உத்தியோகபூர்வ இல்லத்தை தென்கிழக்கு ப...
27/01/2025

மாபெரும் தலைவர் மர்ஹூம் கலாநிதி . எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஒலுவில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக வழங்குவதற்கு விருப்பம் தெரிவிப்பு

இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி. எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களால் உருவாக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம் தற்பொழுது 28 வருடங்களை பூர்த்தி செய்துள்ளநிலையில் அதன் பயணத்தின் ஒரு மைற்கல்லாக, ஒலுவில் வெளிச்ச வீட்டு வீதியில் அமையப்பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவரும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிறுவனருமான மறைந்த மாபெரும் தலைவர் அல்ஹாஜ் எம்.எச். அஷ்ரப் (ஜனாதிபதி சட்டத்தரனி) அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தை, அவரது பாரியார் , கௌரவ . பேரியல் அஷ்ரப், மற்றும் அவரது அன்பு புதல்வர் அமான் அஷ்ரப் அவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழத்திற்க்கு நன்கொடையாக வழங்க தமது பூரண விருப்பத்தினை தெருவித்துள்ளனர் மேலும் தெரியவருவது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தற்போதைய உபவேந்தர் கலாநிதி UL. அப்துல் மஜீட் அவரது முயற்சியால் கடந்த 21 ஆம் திகதி ஜனவரி மாதம் 2025 ல் நாரயாம்ம்பிட்டியவில் உள்ள தலைவரின் இல்லத்தில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ கலந்துரையாடலின் போது தலைவரின் உத்தியோகபூர்வ ஒலுவில் இல்லத்தை தென்கிழக்கு பல்கலைகழகத்துக்கு வழங்குவதற்கான விருப்பத்தினை வெளிப்படுத்திய கடிதத்தை அவரது பாரியாரும் மகனும் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் அவர்களிடம் கையளித்தனர்.

இந்த விடயத்தினை உபவேந்தர். கலாநிதி யு.எல். அப்துல் மஜீத் அவர்கள் கடந்த 25 ஆம் திகதி ஜனவரி 2025 ல் நடை பெற்ற பல்கலைக்கழக பேரவையின் கூட்டத்தொடரில் கவனத்திற்குக் கொண்டு வந்ததுடன் இது தொடர்பில் சிறப்புஉரையையும் நிகழ்த்தினார்

பேரவை உறுப்பினர்கள் உபவேந்தரைப் பாராட்டியதுடன், மேலும் இது தொடர்பில் பேரவையினால் அங்கீகாரமும் வழங்கப்பட்டது . இந்த காணியின் மொத்த பரப்பளவு 01 ஏக்கர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பான அபிவிருத்தி பணிகள் இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தினால் எதிர் காலத்தில் நடை முறைப்படுத்தப்படும்.

இலங்கையின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ACHIEVERS நடாத்தும் சர்வதேச கணக்கியல் தகைமையான ACCA + B.Sc (Hons) in Applied Accou...
07/01/2025

இலங்கையின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ACHIEVERS நடாத்தும் சர்வதேச கணக்கியல் தகைமையான ACCA + B.Sc (Hons) in Applied Accounting Degree தொடர்பான இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு.

📆 Date: 15.01.2025 (Wednesday)

🕒 Time: 11.00am to 01.00pm

📍 Venue: ICST University Park, Punanai.

கலந்து கொள்வோருக்கு பல்வேறு புலமைப்பரிசில்களும் (Scholarship) காத்திருக்கின்றன!

REGISTER NOW: https://forms.gle/x7gHEg5KjYAoc2VUA

📞 மேலதிக தகவல்களுக்கு : 0761487511

பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் துரித நடடிக்கையினால் கல்முனை கடற்கரைப் சிறுவர் பூங்கா அருகில் கடலரிப்பு தடுப்புக்கற்க...
03/01/2025

பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் துரித நடடிக்கையினால் கல்முனை கடற்கரைப் சிறுவர் பூங்கா அருகில் கடலரிப்பு தடுப்புக்கற்கள் இடும் பணி ..!

(எம்.என்.எம்.அப்ராஸ்)

பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் துரித நடடிக்கையினால் கல்முனை கடற்கரைப் சிறுவர் பூங்கா அருகில் கடலரிப்பு தடுப்புக்கற்கள் இடும் பணி நேற்று(02) இடம்பெற்றது.

கல்முனை கடற்கரை சிறுவர் பூங்கா அருகில் கடலரிப்பு மேலும் உக்கிரமடைந்த நிலையில் அங்கு உள்ள சுவர்கள் கடலரிப்பின் காரணமாக மிகவும் அதிகமாக பாதிப்படைந்துள்ளது. கடலரிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் கல்முனை சிறுவர் பூங்கா பாதிப்புகுள்ளாகும் நிலை காணப்பட்டது இதற்கமைய குறித்த பகுதி பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய கல்முனை பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரும் அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கல்முனை கடற்கரை சிறுவர் பூங்காவின் பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டார். இதன் போது நிலைமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா பார்வையிட்டதுடன் உரிய அதிகாரிகளை குறித்த இடத்திற்கு வரவழைத்து,மக்களால் முன்வைக்கப்பட்ட மேற் குறித்த பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை மேற்கொண்டார் இதன் போது கடல் அரிப்பினை தடுக்கும் வகையில் கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகளினால் தடுப்பு கற்க்கள் இடும் பணிகள் உடனடியாக மேற் கொள்ளப்பட்டது .

மிக நீணடகாலமாக சிறுவர் பூங்கா பராமரிப்பு இன்றி காணப்படுவதாகவும் மக்களுக்கு பயன் உள்ள வகையில் இதனை ஏற் படுத்தி தருமாறு மேலும் இதன் போது பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர் இதனையடுத்து கடற்கரைப் சிறுவர் பூங்கா சுற்று சூழலினை பாராளுமன்ற உறுப்பினர் அவதானித்ததுடன் பூங்காவின் ஒரு பகுதியில் வளர்ந்து காணப்படும் புற்கள் மற்றும் ஒளிரமாமல் காணப்படும் மின் குமிழ்கள் இதர அபிவிருத்தி தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அறிவுறுத்தினார்.

The Nation

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர,  கிண்ணியா நகரில் உள்ள மஸ்ஜிதுல் புகாரி பள்ளிவாசலுக்கு விஜயம்.The N...
03/01/2025

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர, கிண்ணியா நகரில் உள்ள மஸ்ஜிதுல் புகாரி பள்ளிவாசலுக்கு விஜயம்.

The Nation

 #சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது  தாக்குதல் - ஆறு சந்தேக நபர்கள் கைது!(பாறுக் ஷிஹ...
03/01/2025

#சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல் - ஆறு சந்தேக நபர்கள் கைது!

(பாறுக் ஷிஹான்)

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கிய 6 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கி ஊடக உபகரணங்கள் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்று (2) இடம்பெற்றுள்ளது.

விவசாயிகளிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் அச்சல உபேந்திர(வயது-50) மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளரின் புகைப்படகருவி தொலைபேசி ட்ரோன் கமெரா ஆகியவை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினர் செயற்பட்டு ஊடகவியலாளர் வசம் இருந்து சந்தெக நபர்களினால் அபகரித்து செல்லப்பட்ட ட்ரோன் கமெரா புகைப்படகருவி மற்றும் தொலைபேசிகள் மீட்கப்பட்டன.

அத்துடன் ஆறு சந்தேக நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனம் என்பன மீட்கப்பட்டுள்ளன.இது தவிர தாக்குதலுக்குள்ளான குறித்த ஊடகவியலாளர் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CID இல் ஆஜரான யோஷித ராஜபக்ச; அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பில் வாக்குமூலம்!முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜப...
03/01/2025

CID இல் ஆஜரான யோஷித ராஜபக்ச; அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பில் வாக்குமூலம்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச இன்று (03) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

கதிர்காமத்தில் அமைந்துள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று காலை 10.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பழுதடைந்த மகுல்பொகுண - கலிங்கவில வீதி இராணுவத்தினரால் புனரமைப்பு; வழமைக்கு திரும்பியது வீதி போக்குவரத்து!2025 ஜனவரி 02 ஆ...
03/01/2025

பழுதடைந்த மகுல்பொகுண - கலிங்கவில வீதி இராணுவத்தினரால் புனரமைப்பு; வழமைக்கு திரும்பியது வீதி போக்குவரத்து!

2025 ஜனவரி 02 ஆம் திகதி பெய்த கடும் மழை காரணமாக பொலன்னறுவை மாவட்ட, வெலிகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள மகுல்பொகுண குளம் நிரம்பி வழிந்ததை தொடர்ந்து, அப்பிரதேச மக்களின் வீடுகள் மற்றும் பயிர்கள் சேதத்திற்குள்ளாகின.

அத்துடன், மகுல்பொகுணயில் இருந்து கலிங்கவிலவை இணைக்கும் பிரதான வீதி பாரியளவில் சேதமடைந்திருந்தது.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் 23ஆவது காலாட் படைப்பிரிவின் கீழ் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் மண்மூட்டைகளை அடுக்கி வான் பகுதியினை மீளமைத்ததுடன், பிரதேச மக்களின் பாதுகாப்பையும் போக்குவரத்தையும் வழமைக்கு கொண்டுவந்தனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் திரு.ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் கந்தளாய் வெலுன்ன ரஜமஹா விகாரையின் விகாராதிபதி  வணக்கத்திற்குரிய அக...
03/01/2025

கிழக்கு மாகாண ஆளுநர் திரு.ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் கந்தளாய் வெலுன்ன ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய அக்போபுர பியரதன அவர்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

Address

Nintavur

Alerts

Be the first to know and let us send you an email when The Nation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share