Rif Media Net

Rif Media Net Media

25/06/2025

#மோட்டார் #சைக்கிள் ஒன்றை இனந்தெரியாத இரண்டு நபர்கள் சாகசமான முறையில் #திருடிச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

#இந்தத் திருட்டுச் சம்பவம் #கிரிபத்கொட மஹர சந்திக்கு அருகில் இன்று மாலை (24) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் அந்தப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த - 6732 என்ற பல்சர் கருப்பு நிற மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றுள்ளனர்.

இந்தத் திருட்டுச் சம்பவம் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

சிசிடிவி காணொளியில் இளைஞர் ஒருவர் மோட்டார்சைக்கிளுக்கு அருகில் வந்து மிகவும் நுட்பமான முறையில் மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றுள்ளமை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

சிசிடிவி பதிவுகளை வைத்து சந்தேகநபர்களைத் தேடுவதற்கான விசாரணைகள் கிரிபத்கொட பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

25/06/2025

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளுட்டுமானோடை வயல் பகுதியில் வேளாண்மை காவலுக்குச் சென்ற இருவருக்குள் ஏற்பட்ட வாய் தர்க்கத்தையடுத்து, கோடரியால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.

இச் சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாகவும், தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி ஓடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கரடியனாறு உசனார்மலை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய வீரையா விஜயகாந் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

மச்சான் மச்சான் உறவுமுறை கொண்ட இருவரும் நேற்று (24) மாலை வீட்டை விட்டு வெளியேறி புளுட்டுமானோடை பகுதியில் வேளாண்மை காவலுக்காக வயலுக்கு சென்றுஅங்கு சம்பவதினமான இரவு 10 மணியளவில் வாடியில் தங்கியிருந்துள்ள நிலையில், மதுபானம் அருந்திய இருவருக்கும் இடையே வாய்தர்கம் ஏற்பட்டதையடுத்து மனைவியின் சகோதரியின் கணவன் மீது கோடரியால் தாக்குதலை மேற்கொண்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தையடுத்து, அங்கு பொலிஸார் தடயவியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டு, விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் ஒப்படைப்பதற்காக, நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#மாட்டு

25/06/2025

ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டு விட்டது. கொடும் யுத்தம் நடந்த போது ஐ.நா சபை வடக்கில் இருந்து முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, அங்கே சாட்சியம் இல்லாத யுத்தம் (War without Witness) நடக்க காரணமாக அமைந்து விட்டது. இன்று யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகியும், கொலையானோர், காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்பு கூறல் நடைபெறவில்லை. அரசியல் கைதிகள் பிரச்சினை முழுமையாக முடிவுக்கு வரவில்லை. யுத்தம் நடைபெற மூல காரணமாக அமைந்துள்ள இனப்பிரச்சினை தீர்வுக்கு வரவில்லை. ஆகவேதான், ஈழத்தமிழ் உடன் பிறப்புகள் ஐநா சபை தங்களை கைவிட்டு விட்டதாக நினைக்கிறார்கள். ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் கைவிட்டு விட வேண்டாம் என உங்களை கோருகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் நேரடியாக தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்கும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இலங்கையில் மக்கள் மத்தியில் மிகவும் பின் தங்கிய பிரிவினராக வாழ்கிறார்கள். காணி உரிமை, வீட்டு உரிமை, வறுமை, சிசு மரணம், சுகாதாரம். தொழில் நிலைமைகள் என்ற எதுவாக இருந்தாலும், அவை அனைத்திலும் மிகவும் குறை வளர்ச்சி கொண்ட மக்களாக இலங்கையில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள், இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் இலங்கை வந்த ஐ.நா விசேட அறிக்கையாளர் டொமொயா ஒபொகடா, தனது அறிக்கையில் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் காத்திரமாக குறிப்பிட்டு உள்ளார். அந்த அறிக்கையை அவர் உங்கள் ஐநா மனித உரிமை ஆணையகத்தின் 51ஆவது அவைக்கு சமர்பித்தார். அதை கவனத்தில் கொள்ளுமாறு உங்களை கோருகிறேன்.

இலங்கையை பற்றி அறிக்கை சமர்பிக்கும் போது, தவறாமல் இலங்கையின் வடகிழக்குக்கு வெளியே வாழும் மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் தொட ர்பில் கவனம் செலுத்தும் படி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் உங்களை மேலும் கோருகிறேன்.

இலங்கையில் வாழும் மலையக மக்கள் இன்னமும் முழுமையான குடி மக்களாக இந்நாட்டில் வாழ வில்லை. இரண்டாம் தர பிரஜைகளாகவே வாழ்கிறார்கள். காணி உரிமை உட்பட உரிமைகள் உரித்தாகும் போதுதான், அவர்களது குடி உரிமை முழுமை அடையும். அதை ஐ.நா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

#செம்மணி Mano Ganesan MP

25/06/2025

செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அணையா விளக்கு போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவையும் வழங்குகின்றோம். அதேபோல நீதிக்கான இப்போராட்டத்தை ஒரு சில கும்பல் சுயநல அரசியலுக்காக பயன்படுத்த முற்படுகின்றன." - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

செம்மணி போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையிலேயே சம்பவ இடத்துக்கு சென்றிருந்தேன் எனவும் அவர் கூறினார்.

செம்மணி போராட்டம் தொடர்பில் யாழில் இன்றைய தினம் (25) ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், செம்மணி புதைகுழிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாரென்பது மக்களுக்கு தெரியும். இந்த கொலைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் மக்கள் எம்மிடமும் கூறியுள்ளனர். எனவே, எங்களுக்கும், அதற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.

செம்மணியில் இன்று குழப்பம் விளைவித்த இளைஞர்கள் சிலர், செம்மணி புதைகுழி சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் பிறந்திருந்தார்களா என்பதுகூட தெரியாது. இப்படியானவர்களே அரசியல் வாதிகளை விரட்டியடிக்கும் செயலில் ஈடுபட்டனர்.

அணையா விளக்கு போராட்டத்தை ஆரம்பிக்கின்றோம், அதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர். ஆளுங்கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என சமூகவலைத்தளங்கள் ஊடாக மக்கள் கருத்துகளை முன்வைத்து வந்தனர்.

ஒரு அமைச்சராக நான் போராட்டத்தில் பங்கேற்பது அப்போராட்டத்தக்கு வலுசேர்க்கும் என்பதே உண்மை. அந்த செய்தி சர்வதேசம் வரை செல்லும். அந்தவகையில் மக்களை சந்திப்பதற்காக இன்று நான் செம்மணிக்கு வந்தபோது ஒரு சில கும்பல், தமது அரசியல் இலாபத்துக்கு குழப்பம் விளைவித்தனர். இது தொடர்பில் மக்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. மக்களின் மனநிலை என்னவென்பதும், அவர்களின் வலி வேதனையும் எங்களுக்கு தெரியும்.

செம்மணியில் குழப்பம் விளைவிக்கப்பட்ட சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். செம்மணியில் மட்டும் அல்ல நாட்டில் மேலும் பல இடங்களிலும் புதை குழிகள் உள்ளன. எமது கட்சி தலைவர் உட்பட தோழர்களும் கொன்று புதைக்கப்பட்டனர். இப்படியான சம்பவங்களுக்கு நீதி வேண்டும். அதற்கான தேடலை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.

இனவாதம், மதவாத மற்றும் பிரதேச வாதத்துக்கும், பிரித்தாளும் சூழ்ச்சிக்கும் எமது ஆட்சியில் முடிவு கட்டப்பட்டுள்ளது.

ஒரு சிறு கும்பல் எம்மை, விரட்ட முற்பட்டாலும் நாம் குரோத மனப்பான்மையுடன் செயற்படப்போவதில்லை. ஒரு அமைச்சராக நான் பாதுகாப்பு தரப்புடன் சென்றிருக்கலாம். சம்பவத்தின் பின்னர் நடவடிக்கை எடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை. தனி மனிதனாகவே நான் வந்தேன். ஏனெனில் மக்கள் எம்முடன் இருக்கின்றனர்.

செம்மணியில் முன்னெடுக்கப்படும் அணையா விளக்கு போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவையும் தெரிவிக்கின்றோம்." - என்றார்.

#செம்மணி

25/06/2025

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என சிலரை இன்று (25) இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

25/06/2025

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்று ஐந்தாவது நாளாக காணி உறுதிகளுடன் உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வந்தனர்.

தமது உரிமைக் காணி தொடர்பில் இன்றுடன் ஐந்தாவது நாளாக கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், வலிக்காமல் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் மக்களோடு மக்களாக போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

காணிகளை விடுவிக்க கோரி கடந்த சனிக்கிழமை மயிலிட்டி சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் இன்றும் 500இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு உணவு சமைத்து அவ்விடத்தை விட்டு நகராமல் அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் மயிலிட்டி, பலாலி, அன்ரனிபுரம், காங்கேசன்துறை உள்ளிட்டவர்களும் கத்தோலிக்க மதகுருமார்களும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் பொது அமைப்புகள் உட்பட மலையக மக்கள் சார் பொது அமைப்புக்களைச் சேர்ந்த சிலரும் காணி விடுவிப்பைக் கோரி கவனயீர்ப்பை முன்னெடுத்தனர்.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து போன மக்கள் யுத்தம் நிறைவடைந்து தமது காணிகளுக்கு வந்த பின்னரும் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் காணிகளை விடுவிப்பதாக கூறி சிறு சிறு இடங்களை மாத்திரம் விடுவித்துள்ளன.

ஆனால் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இதனால் வாடகை வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் முகாம்களிலும் இன்றுவரையும் காணி சொந்தக்காரர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக காணிகள் வைத்திருப்பதாக கூறுகின்ற இராணுவம் தற்போது மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகிய நிலையிலும் அவர்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் வைத்திருப்பது மக்கள் தொடர்ந்தும் அகதிகளாகவே வாழும் நிலைக்கு உட்படுத்துவதாகவே தாம் உணர்வதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

எனவே தமிழ் மக்கள் மத்தியில் அதிக அக்கறை கொண்டுள்ளோம் எனக் கூறுகிற புதிய அரசாங்கம் இதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வரையில் குறித்த போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

25/06/2025

வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் எசல பெரஹெரவின் போது பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்காக மொத்தம் 1,050 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த டி சொய்சாவின் நேரடி மேற்பார்வையின் கீழ் ஐந்து உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களும் மூன்று பொலிஸ் பொறுப்பதிகாரிகளும் இதற்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பானம பொலிஸ் பிரிவிலிருந்து யால சரணாலயம் வழியாக பெரஹெர நிகழ்வுக்கு கால்நடையாக வரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக முப்படை அதிகாரிகளின் உதவியைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் வருடாந்த பெரஹெர நிகழ்வு நாளை (26) முதல் ஜூலை 10 வரை நடைபெறும்.

#

25/06/2025

பல உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை கைப்பற்றிய கட்சிகளின் விபரம்
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நாவலப்பிட்டி நகர சபையின் தலைவர் பதவயை இன்று (25) சுயேச்சைக் குழுவொன்று கைப்பற்றியது.

அதேபோல, மாத்தறை - முலட்டியன பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்றியது.

முந்தைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேட்சைக் குழுவோ பெரும்பான்மையைப் பெறாத உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை நிறுவுவதற்கான நடவடிக்கை இன்று (25) உள்ளூராட்சி ஆணையாளர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, நாவலப்பிட்டி நகர சபை இன்று மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சமிலா அத்தபத்து தலைமையில் கூடியது.

அங்கு நடைபெற்ற திறந்த வாக்கெடுப்பில், ஒரு சுயேட்சைக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமல் பிரியங்கர 9 வாக்குகளைப் பெற்று தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் அவருடன் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் திலக் சிறிசேனவினால் 5 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமல் பிரியங்கர, முன்னர் நாவலப்பிட்டி நகர சபையின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

உப தலைவர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியும் ஒரு சுயேட்சைக் குழுவும் போட்டியிட்டன. இதில் சுயேட்சைக் குழுவிலிருந்து போட்டியிட்ட கே. சுரேஷ்வரன் பெரும்பான்மை வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதேவேளை, மாத்தறை - முலட்டியன பிரதேச சபையின் தவிசாளர் பதவியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது.

தலைவர் பதவிக்கு இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது, அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பாகப் போட்டியிட்ட ரேணுக கோமசாரு 13 வாக்குகளைப் பெற்றார், அதே நேரத்தில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் 10 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

உப தலைவர் பதவி ஐக்கிய மக்கள் சக்தியின் மகேந்திர லியனகேவுக்கு வழங்கப்பட்டது.

இதற்கிடையில், வலல்லாவிட்ட பிரதேச சபையின் முதலவாது கூட்டம் இன்று காலை மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தர தலைமையில் ஆரம்பமானது.

தவிசாளர் பதவிக்கு மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்டன, அதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சுனில் அபயசிறி, ஐக்கிய மக்கள் சக்தியின் இந்திக மல்லவராச்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த உதேனி அதுகோரல ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.

இதனையடுத்து நடந்த இரகசிய வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி 16 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 5 வாக்குகளையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3 வாக்குகளையும் பெற்றன.

இதற்கிடையில், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற களுத்துறை-பலிந்தநுவர பிரதேச சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

23 உறுப்பினர்களைக் கொண்ட பிரதேச சபையில், ஐக்கிய மக்கள் சக்தி 9 உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி 7 உறுப்பினர்கள், மற்ற கட்சிகளுக்கு 7 உறுப்பினர்களும் உள்ளனர்.

இந்நிலையில், தவிசாளர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் சனத் ஜீவந்தவின் பெயரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நிஹால் ஜயசிங்கவின் பெயரும் முன்மொழியப்பட்டன.

இதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதில் தேசிய மக்கள் சக்தி 12 வாக்குகளைப் பெற்றதோடு, ஐக்கிய மக்கள் சக்தி 11 வாக்குகளை மட்டுமே பெற்றது.

சுயேச்சைக் குழுவிலிருந்து போட்டியிட்ட மல்காந்தி குமாரசிங்க, இரகசிய வாக்கெடுப்பு மூலம் அதன் உப தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும், நாவிதன்வெளி மற்றும் காரைதீவு பிரதேச சபைகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும், வெங்கலச்செட்டிகுளம் மற்றும் அயகம ஆகிய பிரதேச சபைகளில் ஐக்கிய மக்கள் சக்தியும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி கட்சி இன்று கொத்மலை, நானாட்டான், முசலி, வலல்லாவிட்ட, பாலிந்தநுவர மற்றும் குருவிட்ட ஆகிய உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளன.

அதன்படி, உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 151 உள்ளூராட்சி சபைகள் உட்பட 209 உள்ளாட்சி சபைகளின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை 30 சபைகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 4 சபைகளையும், இலங்கை தமிழ் அரசு கட்சி 18 சபைகளையும் வென்றுள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 சபைகளையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 3 சபைகளையும் வென்றுள்ளன.

மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களால் நிர்வகிக்கப்படும் உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கை 16 ஆகும், மேலும் கருத்து மோதல்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கை 10 ஆகும்.

25/06/2025

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அரச அதிகாரி ஒருவருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தம்புத்தேகம மகாவலி மண்டலத்தில் மரம் வெட்டுவதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு 100,000 ரூபா லஞ்சம் பெற்றதற்காக

முன்னாள் நில அதிகாரி ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணையகத்தால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டார்.

விசாரணைகளை எடுத்துக்கொண்ட கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க, குறித்த அதிகாரிக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்ததுடன் 30,000 ரூபா அபராதமும் விதித்து, இலஞ்சத் தொகையை இலஞ்சச் சட்டத்தின் கீழ் கூடுதல் தண்டனையாக வசூலிக்க உத்தரவிட்டார்.

அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு வருடம் எளிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டது.

25/06/2025

நியூயார்க் நகரத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முஸ்லிம் மேயரான ஜோஹ்ரான் மம்தானி, தனது பிரச்சாரத்தின் போது, ​​இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகருக்கு வந்தால், போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி கைது செய்வேன் என்று கூறியிருந்தார். தேர்தலுக்கு முன்பு அவர் வெளியிட்ட அறிக்கை, அவரது வெற்றியைத் தொடர்ந்து இப்போது மீண்டும் வெளிப்படுகிறது.

25/06/2025

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்திற்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஜூன் 26 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசித்து விண்ணப்பிக்கலாம்.

2025 ஜூலை 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது எனவும், எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

25/06/2025

எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணம் 2.5 வீதத்தால் குறைப்பு - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

Address

Kahatowita
Nittambuwa
11144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rif Media Net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share