Rif Media Network

Rif Media Network News Media local and international

  தமிழ்நாட்டில் நடிகர் விஜயின் கரூர் அரசியல் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி  30 இற்கு மேற்பட்டோர் உயிரிழப்பு!            ...
27/09/2025


தமிழ்நாட்டில் நடிகர் விஜயின் கரூர் அரசியல் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 30 இற்கு மேற்பட்டோர் உயிரிழப்பு!

க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில்  நாமலுக்கு எதிரான வழக்கின்  முதன்மை அறிக்கையை பெறுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தர...
26/09/2025

க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாமலுக்கு எதிரான வழக்கின் முதன்மை அறிக்கையை பெறுமாறு
கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு..

வௌிநாட்டில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி  நிதிமோசடியில் ஈடுபட்ட மூவர்  பம்பலப்பிட்டியில் கைது..
26/09/2025

வௌிநாட்டில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி நிதிமோசடியில் ஈடுபட்ட மூவர் பம்பலப்பிட்டியில் கைது..

பண்டாரகம - களுத்துறை வீதியின்  கல்துனே முச்சந்தியில்  லொறி,வேன்,முச்சக்கரவண்டி  ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 2 பேர் காயம...
26/09/2025

பண்டாரகம - களுத்துறை வீதியின் கல்துனே முச்சந்தியில் லொறி,வேன்,முச்சக்கரவண்டி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 2 பேர் காயம் - பொலிஸ்

26/09/2025
ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் மோதவுள்ள இந்தியா - பாகிஸ்தான்
26/09/2025

ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் மோதவுள்ள இந்தியா - பாகிஸ்தான்

ஒதுக்கீட்டு சட்டமூலம் எனப்படும் 2026 வரவு - செலவுத்திட்டம் பாராளுமன்றில் முன்வைப்பு
26/09/2025

ஒதுக்கீட்டு சட்டமூலம் எனப்படும் 2026 வரவு - செலவுத்திட்டம் பாராளுமன்றில் முன்வைப்பு

இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் சீனாவின் மூலோபாயப் பங்களிப்புஎம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.இலங்கையின் நீண்ட ...
26/09/2025

இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் சீனாவின் மூலோபாயப் பங்களிப்பு

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

இலங்கையின் நீண்ட வரலாற்றிலும் அண்மைய தேசிய அபிவிருத்தியிலும் சீனா ஒரு முதன்மையான மூலோபாயப் பங்காளியாகத் திகழ்கிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்திருக்கும் இரு நாடுகளின் வரலாற்று மற்றும் கலாசாரத்தொடர்புகள், நவீன காலத்தில் பொருளாதார முதலீடுகள் மற்றும் பாரிய உட்கட்டமைப்புத்திட்டங்கள் மூலம் ஆழமடைந்துள்ளன.

குறிப்பாக, சீனாவின் 'ஒரு பட்டை ஒரு சாலை முன்னெடுப்பு' (Belt and Road Initiative - BRI) இலங்கையின் புவியியல் அமைப்பைச்சாதகமாகப் பயன்படுத்தி, பல பாரிய அபிவிருத்தித்திட்டங்களை இங்கு முன்னெடுக்க வழிவகுத்துள்ளது.

1. உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுத்திட்டங்கள்

சீனாவின் பங்களிப்பு இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்தக முகப்பையே மாற்றியமைக்கும் வகையில் அமைந்துள்ளன. இத்திட்டங்கள் இலங்கையின் அபிவிருத்திக்கு மிக முக்கியமானவை.

அ. கொழும்புத்துறைமுக நகரம் (Colombo Port City)
கொழும்புத் துறைமுக நகரம், இலங்கையின் அபிவிருத்தியில் முன்னெப்போதுமில்லாத வகையில் பாரிய முதலீட்டையும், பொருளாதார மாற்றத்தையும் கொண்டு வரக்கூடிய ஒரு திட்டமாகும்.

*திட்டத்தின் நோக்கம்:
கொழும்பின் மத்திய வணிக மாவட்டத்தையொட்டி 269 ஹெக்டேர் கடற்பரப்பை நிலமாக மீட்கும் (Land Reclamation) இந்த மெகா திட்டம், சர்வதேச நிதிச் சேவைகள், சுற்றுலா மற்றும் தகவல் தொழிநுட்ப மையங்களைக்கொண்ட சிறப்புப்பொருளாதார மண்டலமாக (Special Economic Zone) உருவாக்கப்படுகிறது.

*சீனப் பங்களிப்பு:
இத்திட்டத்தில் ஆரம்ப முதலீடு சுமார் $1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். நிலத்தை மீட்கும் மற்றும் கட்டுமானப்பணிகளில் பிரதானமாகச் சீன அரசு நிறுவனமான சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி (CHEC) ஈடுபட்டுள்ளது.

* ஒப்பந்தச்சாரம்:
முதலீட்டுக்கு ஈடாக, மீட்கப்பட்ட நிலப்பரப்பின் ஒரு பகுதி CHEC நிறுவனத்திற்கு 99 வருட காலக்குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

* எதிர்பார்க்கப்படும் தாக்கம்:
இது பூர்த்தி செய்யப்படும் போது, துபாய் அல்லது சிங்கப்பூர் போன்ற பிராந்திய நிதி மையமாகச் செயற்பட்டு, கணிசமானளவு அந்நிய முதலீட்டையும், சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆ. ஹம்பாந்தோட்டை துறைமுகம் (Hambantota Port)

இலங்கையின் தென்பகுதியில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம், சர்வதேச கடல்வழி வர்த்தகப்பாதையில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டமாகும்.

* திட்டச்சவால்:
இத்துறைமுகம் இலங்கையின் சொந்தக் கடனுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அதன் கட்டுமானத்திற்கான பாரிய சீன வங்கிக் கடனைத் திருப்பிச்செலுத்த முடியாததால் இலங்கை அரசு நெருக்கடிக்குள்ளானது.

* சீனப்பங்களிப்பு:
கடன் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, 2017ம் ஆண்டு, துறைமுகத்தின் 70% பங்கு சீன அரசு நிறுவனமான சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் (China Merchants Port Holdings) நிறுவனத்திற்கு 99 வருட காலக்குத்தகை ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டது.

* பொருளாதார விளைவு:
துறைமுக நிர்வாகத்தை சீன நிறுவனம் ஏற்றதன் மூலம், அது வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதிலும், சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதிலும் முக்கியத்துவம் செலுத்தி வருகிறது.

இ. ஏனைய உள்கட்டமைப்புத்திட்டங்கள்
மேற்கூறிய பிரதான திட்டங்கள் மட்டுமன்றி, சீனா இலங்கையின் பல முக்கிய தேசிய உள்கட்டமைப்புத் திட்டங்களிலும் பங்களித்துள்ளது.

* நெடுஞ்சாலைகள்:
தென் அதிவேக நெடுஞ்சாலை (Southern Expressway - E01) மற்றும் ஏனைய முக்கிய வீதி அபிவிருத்திகள்.

* துறைமுக முனையங்கள்:
கொழும்புத் துறைமுகத்தின் தெற்கு முனையம் (South Container Terminal) கட்டுமானப் பணிகள்.

* கட்டிடங்கள்:
கொழும்பிலுள்ள தாமரைக்கோபுரம் (Lotus Tower) போன்ற முக்கிய அடையாளச்சின்னங்கள்.

2. அரசியல், வர்த்தகம் மற்றும் தூதரகப்பணிகள்
பொருளாதாரத் திட்டங்களுக்கப்பால், சீனா பல ஆண்டுகளாக இலங்கையுடன் நெருக்கமான அரசியல் மற்றும் வர்த்தக உறவைப் பேணி வருகிறது.

அ. அரசியல் உறவுகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு

* வர்த்தகப்பங்காளி:
சீனா, இலங்கையின் பிரதான வர்த்தகக்கூட்டாளிகளில் ஒன்றாகும். இலங்கையின் தேயிலை, ஆடை போன்றவற்றை சீனா இறக்குமதி செய்கிறது.

* கடன் உதவி:
அண்மைக்கால பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கைக்குக் கடன் மறுசீரமைப்பு வழங்குவதில் சீனா ஒரு முக்கியப் பங்களிப்பாளராகச் செயல்பட்டு வருகிறது.

ஆ. சீனத்தூதரகத்தின் செயற்பாடுகள்
இலங்கையிலுள்ள சீனத்தூதரகம், இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர மற்றும் மக்கள் மட்ட உறவுகளைப் பலப்படுத்துவதில் முக்கியப் பணிகளை ஆற்றுகிறது.

* கொள்கை ஒருங்கிணைப்பு:
இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையேயான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் மற்றும் மூலோபாயக் கூட்டணிகளைத் தொடர்ந்து ஒருங்கிணைத்தல்.

* மனிதாபிமான உதவி:
அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவம் மற்றும் பிற மனிதாபிமான உதவிகளை விரைவாக வழங்குவதில் முக்கியப் பங்காற்றுதல்.

* கலாசாரப்பரிமாற்றம்:
புலமைப்பரிசில்கள் (Scholarships) வழங்குதல் மற்றும் சீனக்கலாசார நிகழ்ச்சிகள், கலை விழாக்களின் மூலம் இரு நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தைப் பேணுதல்.

* குடியினர் பாதுகாப்பு:
இலங்கையில் பணி புரியும், வாழும் சீனக்குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல்.

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் பங்களிப்பு மிக முக்கியமானதும், அதன் உட்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத் திறனைப் பலப்படுத்துவதுமான ஒரு அங்கமாகவுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்புத் துறைமுக நகரம் போன்ற பாரிய முதலீடுகள், இலங்கையைப் பிராந்தியத்தின் கடல்சார் மற்றும் நிதி மையமாக மாற்றும் ஆற்றல் கொண்டவை.

இந்த உறவு எதிர்காலத்திலும் நிலைத்தன்மையுடன் தொடர வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா நாட்டின் 76வது founding day நேற்று (25) கெழும்பு City of Dream ஹோட்டலில் இடம்பெற்றது.

(சீன மக்கள் குடியரசின் 76வது ஆண்டு நிறைவு முன்னிட்டு பிரசுரமாகும் கட்டுரை)

புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆ...
26/09/2025

புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்று (26) பாராளுமன்றத்தில் வாய்மூல வினாக்களுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க,

தற்போது சந்தையில் வாகன இலக்கத்தகடுகள் இல்லாத பெருமளவான வாகனங்கள் உள்ளன.

முந்தைய வர்த்தக நிறுவனங்களுடன் அரசியல் நடவடிக்கை, ஊழல் மற்றும் பொறுப்பற்ற தன்மையால் மோட்டார் வாகனத் திணைக்களம் சுமார் 10 ஆண்டுகளாக முன்னேறவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

புதிய சாரதி அனுமதிப் பத்திரம் தயாரிக்கப்படும் என்றும், வாகன இலக்கத்தகடுகள் இல்லாத வாகனங்களுக்கு அடுத்த வாரம் தற்காலிக தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவின், மலச்சல கூடத்தில் குழந்தையை பிரசவித்து குழந்தையை கட்டிலின் க...
25/09/2025

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவின், மலச்சல கூடத்தில் குழந்தையை பிரசவித்து குழந்தையை கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த, 35 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான சுகாதார சிற்றூழியர் ஒருவர், நேற்று முன்தினம் (23) கைது செய்யப்பட்டுள்ளார்.



குறித்த வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வரும் சிற்றூழியரான இந்தப் பெண், திருமணமான இரண்டு பிள்ளைகளின் தாயார் என தெரிவிக்கப்படுகிறது.



சம்பவத்தன்று ( 22), அவர் வழமைபோல் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்தார். இதன் போது, வயிற்று வலி ஏற்பட்டதால் அங்குள்ள மலச்சல கூடத்திற்குச் சென்று, யாருக்கும் தெரியாமல் ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்தார்.



பிறகு, அக்குழந்தையைப் பெட்டி ஒன்றில் மூடி, கட்டிலின் கீழ் மறைத்து வைத்துவிட்டு, தனது கடமைகளைத் தொடர்ந்தார்.



இந்நிலையில், அவருக்கு இரத்தப்போக்கு அதிகரித்ததை அவதானித்த தாதியர் ஒருவர், அவரை வார்டில் அனுமதிக்கச் செய்தார்.



அங்கு சோதனை செய்த வைத்தியர்கள், அவர் குழந்தைப் பெற்றுள்ளதை கண்டறிந்தனர்.



அதனையடுத்து, தேடியபோது, பெட்டியில் போடப்பட்டு கட்டிலின் கீழ் மறைக்கப்பட்டிருந்த குழந்தை, உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.



குறித்த சிற்றூழியரின் கணவரும், குறித்த வைத்தியசாலையில் சிற்றூழியராகவே கடமையாற்றி வருகிறார்.



இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, கணவன் கடந்த ஜூன் மாதத்திலிருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.



இந்நிலையில், அவர் கர்ப்பம் தரித்திருந்தது வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கோ அல்லது யாருக்கோ தெரியவில்லை.



38 வாரங்கள் முழுமையான கர்ப்பத்தில், 2 கிலோ 485 கிராம் எடையுள்ள பெண் குழந்தையை அவர் பிரசவித்திருந்தார்.



இச்சம்பவத்தையடுத்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அவரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.



பொதுமக்கள் இச்சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



இதேவேளை, உயிரிழந்த குழந்தையின் மாதிரிகள், மேலதிக பரிசோதனைக்காக கொழும்பு பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.



பிரிந்த கணவன் "அக்குழந்தை தனக்குப் பிறக்கவில்லை" எனத் தெரிவித்ததையடுத்து, குழந்தையின் மற்றும் தந்தையின் இரத்த மாதிரிகளைப் பெற்று, டிஎன்ஏ பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு (CID) பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குருணாகலை - மெல்சிரிபுரவின் பன்சியாகமவில் உள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் கேபிள் கார் அறுந்து விழுந்த வ...
25/09/2025

குருணாகலை - மெல்சிரிபுரவின் பன்சியாகமவில் உள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் ஐந்து பௌத்த பிக்குகள் உயிரிழந்துள்ளனர்.



இந்த விபத்தில் மேலும் சில பிக்குகள் காயமடைந்துள்ள நிலையில், உடனடியாக குருணாகலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.



விபத்து இடம்பெற்ற போது கேபிள் காரில் 13 பிக்குகள் இருந்துள்ளனர்.



இந்த விபத்து நேற்றிரவு (25) 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஜனாதிபதி அனுரக...
25/09/2025

ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.



ஊழலுக்கு எதிரான போராட்டம் உலகின் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.



ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.



போதைப்பொருள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் இன்று உலகின் புதிய பிரச்சினையாக மாறிவிட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.



ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாகவும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் மேலும் கூறினார்.

Address

Kahatovita
Nittambuwa
11144

Alerts

Be the first to know and let us send you an email when Rif Media Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share