Rif Media Network

Rif Media Network News Media local and international
(1)

கொக்காவிலில் கோர விபத்து ஒரு மணிநேரப் போராட்டத்தின் பின் மீட்கப்பட்ட சாரதி.!!முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் யாழ்ப்பாண...
09/08/2026

கொக்காவிலில் கோர விபத்து ஒரு மணிநேரப் போராட்டத்தின் பின் மீட்கப்பட்ட சாரதி.!!

முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08.08.2026) அதிகாலை மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தியும், மகேந்திரா ரக வாகனமும் ஒன்றுடனொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பாரவூர்திச் சாரதி சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்தின் பின்னரே மீட்கப்பட்டுள்ளார். விபத்தில் இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன. மகேந்திரா ரக வாகனத்தில் விற்பனைக்காகப் பெருமளவு இளநீர்கள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அவை வீதியிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் விழுந்து கிடப்பதைக் காண முடிகின்றது.

08/08/2026

⚠️ Light கம்பத்தை பிடிச்சு ரோடு கிராஸ் பண்றீங்களா? இந்த வீடியோ முக்கியம்!

"அமெரிக்கவில் 13 மாகாணங்கள் இருந்த போது எவ்வளவு MPக்கள் எண்ணிக்கை இருந்ததோ, அதே தான் 50 மாகாணங்களாக உயர்ந்த பின்னும் தொட...
08/08/2026

"அமெரிக்கவில் 13 மாகாணங்கள் இருந்த போது எவ்வளவு MPக்கள் எண்ணிக்கை இருந்ததோ, அதே தான் 50 மாகாணங்களாக உயர்ந்த பின்னும் தொடர்ந்தது. அதே முறை இந்தியாவிலும் தொடர வேண்டும், 543 என்ற எண்ணிக்கை உயர்த்த பட கூடாது என்பதே இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு.."

- திருமாவளவன் MP

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2 ஆயி...
08/08/2026

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.



நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2 ஆயிரத்து 723 பரீட்சை நிலையங்களில் இந்தப் பரீட்சை இடம்பெறவுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

தரம் 05 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்,



இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 2,94,089 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் சிங்கள மொழியில் 2,20,366 விண்ணப்பதாரர்களும், தமிழ் மொழியில் 73,723 விண்ணப்பதாரர்களும் பதிவு செய்துள்ளனர்.

இப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் காலம் ஓகஸ்ட் 05 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதுடன், பரீட்சை முடியும் வரை அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் வாயிலாக புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பரப் பணிகளை மேற்கொள்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திகா குமாரி லியனகே குறிப்பிட்டார்.

மேலும், பெற்றோர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் மன ஒருமைப்பாட்டைப் பேணி, கவனத்துடன் பரீட்சையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், அது காலை 9.30 மணிக்குத் தொடங்கி காலை 10.45 மணிக்கு நிறைவடையும்.

அதன்பின்னர் கிடைக்கும் சிறிய இடைவேளைக்குப் பிறகு, காலை 11.15 முதல் நண்பகல் 12.15 வரை ஒரு மணி நேர காலம் முதல் வினாத்தாளுக்காக ஒதுக்கப்படும்.

பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசித்து, தங்களது பரீட்சை இலக்கத்தை சரியாகக் குறிப்பிட்டு, தெளிவான கையெழுத்தில் வினாத்தாளிலேயே பதிலளிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது ஏனைய இலத்திரனியல் சாதனங்கள் எதையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான G.C.E உயர்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் 10, திங்கட்கிழமை அன்று தொடங்கி செப்டம்பர் 5 வரை நடைபெறும். இத்தேர்வை...
08/08/2026

2026 ஆம் ஆண்டுக்கான G.C.E உயர்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் 10, திங்கட்கிழமை அன்று தொடங்கி செப்டம்பர் 5 வரை நடைபெறும். இத்தேர்வை நாடு முழுவதும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

தேர்வுகள் திணைக்களத்தின் கூற்றுப்படி, நாடு முழுவதும் 2,532 தேர்வு மையங்களும், 326 ஒருங்கிணைப்பு மையங்களும், 32 மண்டல சேகரிப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 264,496 பள்ளி மாணவர்களும், 17,814 தனித்தேர்வர்களும் தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ள நிலையில், மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 282,310 ஆக உயர்ந்துள்ளது.

ஆகஸ்ட் 4 ஆம் தேதி நள்ளிரவு முதல் தேர்வு முடியும் வரை, தேர்வு தொடர்பான அனைத்துப் பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பிற செயல்பாடுகள், அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் மூலம் முன்கணிப்பு வினாக்களை விவாதிப்பது அல்லது விநியோகிப்பது உட்பட, தடை செய்யப்பட்டுள்ளன.

இலங்கை காவல்துறை, முப்படைகள், பேரழிவு மேலாண்மை மையம், வானிலை ஆய்வுத் துறை, தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம், மின்சார அதிகார அமைப்புகள், போக்குவரத்து சேவைகள் மற்றும் சுகாதார அதிகார அமைப்புகளுடன் பாதுகாப்பு மற்றும் அவசரகால ஏற்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

பள்ளி மாணவர்களுக்கு அவர்களது முதல்வர்கள் மூலமாக அனுமதி அட்டைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன, அதேசமயம் தனித்தேர்வர்களுக்கான அட்டைகள் அவர்களது பதிவு செய்யப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள், தங்களது அனுமதி அட்டையில் உள்ள கையொப்பம் முறையாகச் சான்றளிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளவும், தேர்வு மையத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டையைக் கொண்டு வரவும் நினைவூட்டப்பட்டுள்ளனர். தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவை அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும்.

தங்களது நுழைவுச் சீட்டுகளைத் தொலைத்த தேர்வர்கள், தேர்வுகள் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் புதிய நகலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆனால், அதனைத் தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்வதற்கு முன்பு, தேவையான கையொப்பம் சான்றளிக்கப்பட வேண்டும்.

தேர்வர்கள், திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை, அதாவது ஒவ்வொரு தேர்வுத் தாளுக்கும் காலை அல்லது பிற்பகல் அமர்வு ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாகச் சரிபார்த்து, தேர்வு தொடங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு வந்து சேருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வு அறைகளுக்குள் கைபேசிகள், ஸ்மார்ட்வாட்சுகள், புளூடூத் சாதனங்கள் மற்றும் பிற மின்னணு உபகரணங்கள், அத்துடன் குறிப்புகள், புத்தகங்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்படாத பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

தேர்வு முழுவதும், தேர்வு அதிகாரிகளால் வழங்கப்படும் அனைத்து தேர்வு விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுமாறு தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று மதியம் முதல் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது.நீர் ஏந்து பகு...
08/08/2026

இன்று மதியம் முதல் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது.

நீர் ஏந்து பகுதிகளான மவுஸ்சாகலை காசல்ரீ கென்யோன் புரோட்லேன்ட் லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல விமலசுரேந்திர மேல் கொத்மலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது இதனால் மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டி வண்ணம் உள்ளது

அதேபோல் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது கென்யோன் புரோட்லேன்ட் லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல விமலசுரேந்திர மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப் படுகிறது.

இதன் காரணமாக மகாவலி கங்கை களனி கங்கையின் கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் தாழ் நில பகுதியில் இருந்து வேறு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெருந் தோட்ட தொழிலாளர்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது மேலும் பண்ணையாளர்கள் விவசாயிகள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்

அத்துடன் சிவனடி பாத மலை பகுதியில் மண் திட்டுகள் சரிந்து விழுந்ததால் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மலைக்கு செல்ல வேண்டாம் என ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாமி மலை ஓயா மரே ஓயா காட்மோர் ஓயா சியத்தலகங்குல ஓயா கெசல்கமு ஓயா ஹட்டன் ஓயா போடைஸ் ஓயா டயகம பகுதியில் ஆரம்பிக்கும் மகாவலி கங்கை மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் வீழ்ச்சிகள் ஏனைய ஓடைகள் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது

அதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி துஷாரி தென்னகோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொடைக்கானலில் பரவலாக மழை
08/08/2026

கொடைக்கானலில் பரவலாக மழை

08/08/2026

2026 ஆகஸ்ட் 7 அன்று ராஞ்சியில் நடைபெற்ற மாணவர்கள் பேரணியின் போது, AISA தேசியத் தலைவர் நேஹா போராவின் முகத்தில் அமர்நாத் பாண்டே என்ற ஆர்.எஸ்.எஸ் குண்டர் கருப்பு மை ஊற்றியது ஆர்.எஸ்.எஸ்-காரர்களின் கோழைத்தனத்தையே வெளிப்படுத்துகிறது.

​வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி, JPSC/JSSC தேர்வுகளை ரத்து செய்யக் கோரி ஜார்க்கண்டில் நடைபெற்ற போராட்டத்தில் AISA/CPI(ML) இடதுசாரி மாணவர் செயற்பாட்டாளரான நேஹா போரா பங்கேற்றிருந்தார்.

நேஹா திறமையான பெண்.... உமர் காலிதை வெளிப்படையாக ஆதரித்துப் பேசுகிறார் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் கும்லை கோபப்படுத்தியது..... மோடி வாய் திறக்க வேண்டும் என்றால் டெலிப்ராம்ப்டர் (Teleprompter) வேண்டும் என்று கூறிய தைரியசாலி இந்த மாணவி.

​சற்று நேரத்திற்கு முன்பு, 'நடிப்புச் சக்கரவர்த்தி' மோடி குழந்தைகளை மன்னித்துவிட்டார் என்பது போன்ற காட்சியை நடித்ததை நாம் பார்த்தோம்...
​இன்றைய செய்தித்தாள்கள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாகவத் JNC குழந்தைகளிடம் அனுதாபம் தெரிவித்து கருத்துக்களைக் கூறியிருப்பதாகப் பறைசாற்றுகின்றன...

​சங்க பரிவாரங்கள் பொய்களை மட்டுமே பேசுவார்கள் என்பது மட்டுமன்றி, தங்களது கோழைத்தனத்தினால் இந்த குழந்தைகளை பெல்லட் குண்டுகளாலும் ஆணிகள் அடிக்கப்பட்ட லத்திகளாலும் தாக்கியது போல, தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்திக் கொண்டே இருப்பார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் தேவையில்லை...
​சங்கிகளைத் தள்ளி வையுங்கள்... சங்க்பரிவார பாசிச ஆட்சியை தூக்கி எறியுங்கள்...

Jayarajan C N

இஸ்ரேலில்' இந்த பருவ காலத்தில் உறுதிப்படுத்தப்பட்ட 10 பாதிப்புகளில் ஒன்றான வெஸ்ட் நைல் (West Nile) வைரஸ் தொற்றால் பாதிக்...
08/08/2026

இஸ்ரேலில்' இந்த பருவ காலத்தில் உறுதிப்படுத்தப்பட்ட 10 பாதிப்புகளில் ஒன்றான வெஸ்ட் நைல் (West Nile) வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 70 வயதுடைய 'இஸ்ரேலிய' முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.

அரசாங்கம் வீழ்ந்த பின்ராஜபக்ஷக்களை குறை சொல்லவேண்டாம். பின்கதவால் வெளியேறுபவர்கள் நாங்கள் அல்ல - நாமல் ராஜபக்ஷ
08/08/2026

அரசாங்கம் வீழ்ந்த பின்
ராஜபக்ஷக்களை குறை சொல்ல
வேண்டாம். பின்கதவால் வெளியேறுபவர்கள் நாங்கள் அல்ல - நாமல் ராஜபக்ஷ

Address

Kahatovita
Nittambuwa
11144

Alerts

Be the first to know and let us send you an email when Rif Media Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share