Rif Media Network

Rif Media Network News Media local and international

இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் இன்று ஈரான் மீது  தாக்குதல்களை நடத்தி, இ...
22/06/2025

இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் இன்று ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி, இஸ்பஹான், புஷேர், அஹ்வாஸ் மற்றும் யாஸ்டில் உள்ள இராணுவ தளங்களை குறிவைத்ததாக தெரிவித்தார்.

யாஸ்டில் நடந்த தாக்குதல் கோர்ராம்ஷஹர் பாலிஸ்டிக் ஏவுகணைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்தைத் தாக்கியதாகவும், இஸ்ஃபஹான், புஷேஹர் மற்றும் அஹ்வாஸில் நடந்த தாக்குதல்கள் ஏவுகணை ஏவுதளங்கள், வான் பாதுகாப்பு பேட்டரிகள் தயாரிக்கப்படும் தளங்கள் மற்றும் ஒரு ட்ரோன் கிடங்கை குறிவைத்ததாகவும் அவர் கூறினார்.

சில தாக்குதல்களில் ஏவுதளங்களில் செயல்பட்டு வந்த ஈரானிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் ஹொக்கைடோ கடற்கரையில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு 6.0 மெக்னிடியுட் அளவில் பதிவாகியுள்ளது....
22/06/2025

ஜப்பானின் ஹொக்கைடோ கடற்கரையில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வு 6.0 மெக்னிடியுட் அளவில் பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திரு...
22/06/2025

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப் ,

"ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிப்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதும் எங்கள் நோக்கமாகும்.

தாக்குதல்கள் அற்புதமானவை, இராணுவ வெற்றி. ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கின் மிரட்டலான ஈரான் இப்போது சமாதானத்தை ஏற்க வேண்டும், இல்லையென்றால், எதிர்கால தாக்குதல்கள் மிகப் பெரியதாக இருக்கும்" என்று கூறினார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் தொடர்பில் சவுதிஅரேபியா ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக தெரிவிப்பு - ச...
22/06/2025

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் தொடர்பில் சவுதிஅரேபியா ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக தெரிவிப்பு - சர்வதேச ஊடகங்கள்

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி, நாளை திங்கட்கிழமை ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஈரான் மீ...
22/06/2025

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி, நாளை திங்கட்கிழமை ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் தொடர்பாக நேரலையாக கருத்து வௌியிட்ட ஈரான் வெளியுறவு அமைச்சர், இன்று மாஸ்கோவிற்கு விமானம் மூலம் சென்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

"ரஷ்யா ஈரானின் நண்பன். நாங்கள் எப்போதும் எங்கள் நிலைப்பாடுகளை ஒருவருக்கொருவர் விவாதித்து ஒருங்கிணைக்கிறோம். நாளை நான் ரஷ்ய ஜனாதிபதியுடன் தீவிர ஆலோசனைகளை நடத்துவேன், நாங்கள் தொடர்ந்து ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்றுவோம்" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் கூறினார்.

இதேவேளை, இஸ்தான்புல்லில் நடைபெற்ற இந்த விசேட நேரலையில், ஈரான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், அணு ஆயுதங்களைத் தேடுவதாகப் பொய்யாகக் குற்றம் சாட்டி ஈரான் மீது ஏன் தாக்குதல் நடத்த வேண்டும் என்று தனக்குப் புரியவில்லை என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு, ராஜதந்திரம் என்பது ஒரு விருப்பமல்ல என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் கூறினார். "டிரம்ப் அமெரிக்க வாக்காளர்களுக்கு துரோகம் இழைத்தார்" இன்றைய அமெரிக்க தாக்குதல்கள் டிரம்ப் ஈரானுக்கு மட்டுமல்ல, அவரது சொந்த ஆதரவாளர்களுக்கும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் கூறினார்.

இதேவேளை, பிரதமர் நரேந்திர மோடி ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தற்போதைய நிலைமை குறித்து ஈரான் ஜனாதிபதியிடம் பேசினேன். சமீபத்திய மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தேன். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கும், பதற்றத்தை உடனடியாகக் குறைப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தினேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் ஈரான் இடையே நிலவி வந்த மோதலில் அமெரிக்கா தலையிட்ட பிறகு அங்கு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. ஒரு பக்கம் இஸ்ரேலுக்க...
22/06/2025

இஸ்ரேல் ஈரான் இடையே நிலவி வந்த மோதலில் அமெரிக்கா தலையிட்ட பிறகு அங்கு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. ஒரு பக்கம் இஸ்ரேலுக்குப் பதிலடி கொடுக்கிறோம் என ஈரான் சரமாரியாகத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில் போரில் தாங்களும் நுழைந்துவிட்டதாக ஏமனைப் பெரும்பகுதி கட்டுப்படுத்தும் ஹவுதி படை அறிவித்துள்ளது.

இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே மோதல் தொடர்ந்து வந்தது. ஒரு பக்கம் ஈரானின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதலை நடத்தியது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வந்தது. இரு நாடுகளும் இதுபோல மாறி மாறியே தாக்குதல் நடத்தி வந்தன.

உள்ளே வந்த அமெரிக்கா

இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென இந்த மோதலில் அமெரிக்கா வந்தது. ஈரானின் முக்கியமான அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து இன்று அதிகாலை அமெரிக்கா திடீரென தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானுக்குச் சேதம் சற்று அதிகமாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், அமெரிக்கா இப்போது இந்த மோதலில் உள்ளே வந்துள்ளது நிலைமை மொத்தமாக மாற்றுவதாக இருக்கிறது. அமெரிக்காவின் தலையீட்டால் இது பிராந்திய போராக வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இங்கு மற்ற நாடுகளும் தீவிரவாத குழுக்களும் கூட மோதலில் வர வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஏமன் ஹவுதி

இதற்கிடையே இந்த போரில் நுழைவதாக இப்போது ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி படை அறிவித்துள்ளது. ஏமன் நாட்டை பொறுத்தவரை அங்குப் பல காலமாகவே உள்நாட்டுக் குழப்பம் நிலவி வந்தது. இப்போது ஏமன் நாட்டில் தலைநகர் சனா உட்பட வடக்கின் பெரும்பகுதியை ஹவுதி படையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சவுதி அரேபியாவின் ஆதரவுடன் தெற்கு மற்றும் கிழக்கு ஏமனில் ஒரு சில பகுதிகளை மட்டுமே அதிபர் தரப்பு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

இந்தச் சூழலில் தான் ஏமனின் ஹவுதி படைப் போரில் நுழைவதாக அறிவித்துள்ளது. ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஹவுதி படை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும், உங்கள் கப்பல்களை எங்கள் கடல் எல்லையில் இருந்து வெளியேற்றுங்கள்.. இல்லையென்றால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் ஏமனின் ஹவுதி எச்சரித்துள்ளது.

அச்சம்

ஏமன் இப்போது இந்த போரில் குதிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இதுபோல நடக்கக்கூடாது என்றே பலரும் அஞ்சினர். ஒருவேளை ஏமன் சர்வதேச கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தினால் அது சங்கிலி விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், இதனால் பல்வேறு நாடுகளும் கூட இந்த மோதலில் உள்ளே வரும். இது உலகப் போர் அல்லது குறைந்தது பிராந்திய போரை உருவாக்கும் ஆபத்து இருப்பதாகவே உலக நாடுகள் அஞ்சுகின்றன.

உலக நாடுகள்

தற்போதைய சூழலில் பெரும்பாலான நாடுகள் இந்த விவகாரத்தில் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்துள்ளன. சீனா, ரஷ்யா, பெலாரஸ் உட்பட ஒரு சில நாடுகள் மட்டுமே ஈரான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இந்தியா போன்ற சில நாடுகள் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அதேநேரம் இந்த மோதல் தொடர்ந்தால் அது இந்தியா உட்படச் சர்வதேச அளவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆய்வுகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீட மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராக ...
22/06/2025

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆய்வுகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீட மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராக முபாரக் அன்சைப் (கஹடோவிடா) நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று பீட அறையில் நடைபெற்ற ஒரு விழாவில், பீடாதிபதி அஷ்-ஷேக் எம்.எச்.ஏ. முனாஸிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றார்.

வாழ்த்துக்கள் 🎊

Rif Media Net Kahatowita

22/06/2025

22/06/2025

புதுமை என்னவென்றால் இவர்களுக்கு அனுதாபம் காட்டவோ? இரக்கம் காட்டவோ? பிரார்த்தனை செய்யவோ யாரும் தயாரில்லை.

இவர்களுக்கு இதை விட பெரிய அழிவு வராதா என்று தான் முழு உலகும் ஆசையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிரது.

ஈரானில் அமைந்துள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி ...
22/06/2025

ஈரானில் அமைந்துள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி செய்தார். இந்நிலையில், இது தொடர்பாக ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக உள்ள அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஐ.நா சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் அணுக்கரு பரவாமை ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை மீறியுள்ளது.

இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு கடும் விளைவுகள் ஏற்படும். ஐ.நா உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இந்த சட்டவிரோத மற்றும் குற்றவியல் நடத்தை மீறல் குறித்து விழிப்போடு இருக்க வேண்டும். ஐ.நா சாசனம் மற்றும் அதன் விதிகளின்படி, சுய பாதுகாப்பு சார்ந்து சட்டபூர்வமான பதிலடி மூலம் ஈரானின் இறையாண்மை மற்றும் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தது. “ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிப்பதும், அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாத அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் தான் அமெரிக்காவின் முதல் நோக்கம். அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டன. ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம்.

மத்திய கிழக்கு பகுதியின் கொடுங்கோல் நாடான ஈரான் இப்போது அமைதிக்கான உடன்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் அடுத்தடுத்த தாக்குதல் மிக பெரியதாகவும், மிக எளிதாகவும் இருக்கும் என எச்சரிக்கிறேன்.

கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் ஈரான் பேசி வருகிறது. வெடி குண்டுகள் மூலம் நம் மக்களின் உயிரை அவர்கள் பறிக்கின்றனர். அப்படி இலட்சக்கணக்கானவர்களை நாம் இழந்துள்ளோம். பல பேரை கொன்றவர் ஜெனரல் காசிம் சுலைமானி என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடரக் கூடாது என பல ஆண்டுகளுக்கு முன்பு நான் முடிவு செய்தேன்.

அதனால் தான் சொல்கிறேன் இனி இது தொடரக்கூடாது. ஒன்று ஈரானில் அமைதி ஏற்பட வேண்டும். அல்லது அங்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும். இந்த பாதிப்பின் தாக்கம் கடந்த 8 நாட்களாக ஈரான் சந்தித்து வரும் நிலையை காட்டிலும் மோசமாக இருக்கும். அங்கு தாக்குதல் நடத்துவதற்கான நமக்கு ஏராளமான இலக்குகள் உள்ளன. அமைதி ஏற்படவில்லை என்றால் அந்த இலக்குகளை துல்லியமாக, துரிதமாக, திறம்பட தாக்குவோம்.

இந்த நேரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அணியாக இணைந்து செயல்பட்டோம். இதற்கு முன்பு யாரும் இப்படி இணைந்து செயல்பட்டது கிடையாது. இஸ்ரேல் ராணுவத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மாதிரியான வெற்றிகர இராணுவ நடவடிக்கையை உலகம் கண்டதில்லை. அதை செய்து காட்டிய அமெரிக்க படையினருக்கு வாழ்த்துகள். இது மாதிரியான ராணுவ நடவடிக்கையை உலகில் வேறு எந்த நாடும் மேற்கொண்டது இல்லை. அப்படியொரு தாக்குதலை நாம் நடத்தியுள்ளோம்.

நான் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். கடவுளுக்கு நன்றி. கடவுளே நாங்கள் உங்களை நேசிக்கிறோம். எங்கள் மிகப்பெரிய இராணுவத்தை நேசிக்கிறோம். அவர்களை காக்கவும். கடவுள் மத்திய கிழக்கு, இஸ்ரேல், அமெரிக்காவை ஆசீர்வதிப்பார். நன்றி” என்றார்.

🚨BREAKING: Strait of Hormuz has been closed down by Iran officially.
22/06/2025

🚨BREAKING: Strait of Hormuz has been closed down by Iran officially.

22/06/2025

இன்று காலை ஈரானிலிருந்து இஸ்ரேலுக்கு 40 மிசைல்கள் வரை ஏவப்பட்டுள்ளது.

Address

Kahatovita
Nittambuwa
11144

Alerts

Be the first to know and let us send you an email when Rif Media Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share