
16/07/2025
மஸ்கெலியா நகரில் உள்ள அனைத்து நடை பாதைகள் பாதசாரிகள் பாவனைக்கு திறந்து விட ஏற்பாடு.
இதற்கான ஏற்பாடுகளை மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளரும் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் இன்று மஸ்கெலியா நகரில் மேற் கொண்டனர்.
இன்று 16ம் திகதி காலை முதல் பேருந்து நிலைய வீதி, தபால் கந்தோர் வீதி, 7ம் வீதி, பிரதான வீதி,2 ம் வீதி ஆகிய வீதிகளில் உள்ள அனைத்து மக்கள் நடமாடும் வீதியோரங்களில் வர்த்தக நிலையங்கள் ஆக்கிரமிப்பு செய்து இருந்தவற்றை மக்கள் நடமாடும் வகையில் திறந்து வைக்கப்பட்டது.
ஒரு சில வர்த்தக நிலையங்களுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் நகரில் உள்ள பல பிரச்சனைகள் கேட்டு அறியபட்டு அதற்கான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்க படும் என தவிசாளர் க.இராஜ்குமார் தெரிவித்தார்.
நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபை செயலாளர் மற்றும் அலுவலக மேற்பார்வையாளர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி பொது சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மஸ்கெலியா
நிருபர்.