மலையோரம் செய்திகள்

மலையோரம் செய்திகள் நம்பகமான செய்திகள்

அன்புள்ள வாசகர்களே!
நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது மலையோரம் செய்திகள் நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது.அது உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

06/09/2025

கிண்ணியாவில் சுற்றுலா வந்த பேருந்தும் எரிபொருள் பவுசரும் நேருக்கு நேர் மோதல்

இன்று மாலை திருகோணமலை கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் தனியார் பேருந்து ஒன்றும் எரிபொருள் பவுசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் எவருக்கும் காயம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது

மழையுடமான வானிலை நிலவும் சந்தர்ப்பத்தில் இவ் விபத்து சம்பவித்துள்ளது விபத்து தொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

06/09/2025

மனைவியின் தகாத உறவு காரணமாக மனமுடைந்த கணவர் விஷம் அருந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் வீட்டில் இருந்த பணம் உட்பட அனைத்து விலையுயர்ந்த பொருட்களையும் எடுத்துக்கொண்டு மனைவி காதலனுடன் தலை மறைவு - களுத்துறையில் சம்பவம்

நாளை நிகழ்கிறது  #சந்திர  #கிரகணம்இலங்கையிலும் தாக்கம் உண்டு ஆவணி மாதம் 22 ஆம் தேதி 07/09/2025 இந்திய நேரப்படி ஞாயிற்றுக...
06/09/2025

நாளை நிகழ்கிறது #சந்திர #கிரகணம்
இலங்கையிலும் தாக்கம் உண்டு


ஆவணி மாதம் 22 ஆம் தேதி 07/09/2025 இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணி முதல் இரவு 1:26 மணி வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் ராகு கிரகம் சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணம் நடைபெற உள்ளது

🌑கிரகண தோஷம் உள்ள நட்சத்திரங்கள் சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, புனர்பூசம், விசாகம், முழு கிரகண பாதிப்பு உண்டு.
🌹இந்த நட்சத்திரக்காரர்கள் கிரகண தோஷம் சாந்தி செய்து கொள்ளவும்.

💐ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று பகல் 12 மணிக்குள் போஜனம் செய்து கொள்ளவும் அதன் பின் கிரகண முடிந்தபின் புதிதாக சமைத்த உணவை உட்கொள்ளலாம்

❤️பழைய உணவை உட்கொள்ளக் கூடாது.
லேசான பாதிப்பு உள்ள நட்சத்திரங்கள் 🌒திருவாதிரை, சுவாதி ,பூசம் ,அனுஷம், உத்திரட்டாதி ஆயில்யம் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு சிறிதளவு மட்டுமே பாதிப்பு உண்டு.

🌻மேலே குறிப்பிட்டு உள்ள நட்சத்திரக்காரர்கள் அதாவது அதிகமான பாதிப்பு உள்ள நட்சத்திரக்காரர்கள் இரவு உணவருந்த கூடாது.

🌟 குளித்து முடித்து கிரகணம் ஆரம்பிக்கும் போது ஒரு சுத்தமான அறையில் தங்களுக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரங்களை உச்சரிக்கலாம்.

❤️அதிகாலை எழுந்து குளித்துவிட்டு உங்கள் குலதெய்வக் கோயில் அல்லது உங்களுக்கு விருப்பப்பட்ட துஷ்ட தெய்வங்களுக்கு ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது மிக அவசியம்
இன்னும் ஒரு மாதத்திற்கு எந்த ஒரு முடிவும் முக்கிய முடிவும் எடுக்காமல் தவிப்பது நல்லது.

💥அடுத்த பௌர்ணமிக்கு ஏதாவது ஒரு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று தங்கள் பெயரில் ஒரு அர்ச்சனை செய்து கொண்டு சந்திரனை பார்த்து வழிபடுவது சிறப்பு.

🌑அம்மாவாசை திதி வரையிலும் மனக்குழப்பம் இருக்கும் மன நிம்மதி இல்லாம இருக்கும் அதற்கு தினமும் காலை ஒரு பத்து நிமிடம் தியானம் செய்யலாம் இல்லையென்றால் ராமாயணம் மகாபாரதம் இதிகாசம் போன்றவற்றை படிக்கலாம் கேட்கலாம்.

🌖ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரக்காரர்கள் மற்றும் கடக ராசி மற்றும் கடக லக்கனம் தங்களுக்கும் மனது சம்பந்தமான பிரச்சனை இருக்கும் எந்த ஒரு முக்கிய முடிவுகளும் அடுத்த அம்மாவாசை திதிக்கு பின் எடுப்பது நலம் நீங்களும் கிரகணம் முடிந்தபின் குளித்துவிட்டு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வழிபடு செய்யவும்.

வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாய🙏🙏🙏

மிகவும். ஆபத்தான மோசடி இந்த லிங்க்கை யாரும் அனுக வேண்டாம்.இலங்கை பொலிஸார்
06/09/2025

மிகவும். ஆபத்தான மோசடி இந்த லிங்க்கை யாரும் அனுக வேண்டாம்.

இலங்கை பொலிஸார்

06/09/2025

ஹப்புகஸ்த்தன்னதோட்டத்தில் அடிக்கல் நாட்டிய இடம் அடையாளம் தெரியாமல் போய்விட்டது
நீதி கோறும் பிரதேச மக்கள்

மஸ்கெலிய பிரதேச சபைக்கு உற்ப்பட்ட ஆர் பி கோ கம்பனிக்கு உரித்தான ஹப்புகஸ்த்தன தோட்டத்தில் கடந்த அரசாங்கத்தின் மூலமாக 2017 ஆம் ஆண்டு ஹப்புகஸ்த்தன மேல் பிரிவு கீழ் பிரிவு ஆகிய இரு பிரிவுகளுக்கும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கே. கே பியதாச அவர்களினால் ஐம்பது வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
குறித்த வீடுகளை நிராமாணிக்க பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு ஒன்பது லட்சம் ரூபாய் வைப்பிலிடப்படுவதாகவும் குறித்த வீடுகளுக்கு அடித்தளம் இடுவதற்கு ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா நாற்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த வீடுகளுக்கு அடித்தளம் இடுவதற்கு மட்டும் தேசிய கட்டிட ஆய்வு நிலைய சான்றிதழ் பெகோ இயந்திரம் போன்றவற்றுக்கு சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேலான பணம் சிலவாகியுள்ளதாகவும் ஆனால் இன்று வரை தமக்கு உறுதி வழங்கிய ஒன்பது இலட்சம் ரூபாய் பணத்திற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்தனர்

வீடுகள் அமைக்க அடித்தளம் இடப்பட்ட இடம் தன் வனப்பகுதியாக காணப்படுகிறது வீடுகள் கிடைக்கும் எ நம்பிக்கையில் தமது சொந்த பணத்தையும் இழந்து கடனாலிகளாக்கபட்டுள்ள நிலையில் இதுவரை தமக்கான உரிய தீர்வு கிடைக்கவில்லை எனவும் குறித்த விடயம் சம்பந்தப்பட்ட தமக்கான உரிய தீர்வை பெற்று தர தற்போதைய ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த மக்கள் தெரிவித்துள்ளனர்

செய்தி. ஞானராஜ்

பஞ்சிகாவத்தை துப்பாக்கிச் சூடு! முக்கிய சந்தேக நபர் கைதுகொழும்பு, மருதான, பஞ்சிகாவத்தை பகுதியில் இன்று(6) காலை இடம்பெற்ற...
06/09/2025

பஞ்சிகாவத்தை துப்பாக்கிச் சூடு! முக்கிய சந்தேக நபர் கைது

கொழும்பு, மருதான, பஞ்சிகாவத்தை பகுதியில் இன்று(6) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடந்த சில நிமிடங்களில் மோதர பொலிஸார் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாளிகாவத்தை போதிராஜ மாவத்தை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என்றும், அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெசல்வத்த கவியின் நெருங்கிய நண்பர் என்றும் தெரியவந்துள்ளது.

தேடுதல் நடவடிக்கை

துப்பாக்கிச் சூடு தொடர்பான முறைப்பாட்டை தொடர்ந்து, இரவு மோட்டார் சைக்கிள் பணியில் ஈடுபட்டிருந்த மோதர பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரண்டு பொலிஸ் சார்ஜென்ட்கள், மற்றொரு பொலிஸ் அதிகாரியுடன் சேர்ந்து தப்பி ஓடிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை சுற்றி வளைத்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றவரின் மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்ததை அடுத்து, சந்தேக நபர் கிம்புல எல வத்த பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பந்தப்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகள் அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியிருந்தனர். அங்கு மறைந்திருந்த சந்தேக நபர் தப்பிச் சென்று, சாலையில் வந்து முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபர் கைது

அதன்படி, சம்பந்தப்பட்டபொலிஸ் சார்ஜென்ட்கள், மாதம்பிட்டிய பொலிஸ்துறையின் நடமாடும் சுற்றுலா ஜீப்பில் இருந்து ஒரு அதிகாரியின் உதவியுடன், முச்சக்கர வண்டியை நிறுத்தி சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை, கெசல்வத்த கவி என்ற ஒரு திட்டமிட்ட குற்றவாளியின் அறிவுறுத்தலின் பேரில், கெசல்வத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, அவர் புறக்கோட்டை வனப்பகுதிக்கு அருகில் இறங்கிச் சென்றதாகவும், அவரைப் பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

அண்மையில் பெரிய நீலாவணையில் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட  குடும்ப பெண்ணின் படுகொலையில்  பிரதான சூத்திரதாரியான களுவாஞ்சிகுடி ...
06/09/2025

அண்மையில் பெரிய நீலாவணையில் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட குடும்ப பெண்ணின் படுகொலையில் பிரதான சூத்திரதாரியான களுவாஞ்சிகுடி நகைக்கடை முதலாளியின் சகோதரன் உட்பட பணியாளர் கைது . நகைக்கடைக்காரன் தலைமறைவு

குடும்ப பெண் படுகொலையில் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகி உள்ள நிலையில் குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்காக D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் யாழ்ப்பாணம் நோக்கி பயணமாகியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி மனோதர்ஷன் விதுஷா என்ற குடும்பப்பெண் கடந்த மே மாதம் வெள்ளிக்கிழமை(30) படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் கடந்த ஜுன் மாதம் 25 ஆந் திகதி சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் குறித்த குடும்பப் பெண்ணின் வீட்டியில் பணிப்பெண்களாக பணியாற்றிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.குறித்த கைது நடவடிக்கை படுகொலை நடைபெற்று 24 நாட்களின் பின்னர் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு குறித்த படுகொலை தொடர்பில் 34 வயதுடைய இரட்டையரான சகோதரிகளை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த விசாரணையில் ஏதோ ஒரு அடிப்படையில் தொய்வு ஏற்பட்டதை உணர்ந்த படுகொலை செய்யப்பட்ட குடும்பப்பெண்ணின் கணவர் நாட்டின் ஜனாதிபதி உட்பட பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வு பிரிவினர் என பல தரப்பினருக்கு உரிய நீதி கோரி கடிதம் ஒன்றினை எழுதி உரிய படுகொலையின் சூத்திரதாரிகள் என நம்பப்படும் பலரது பெயரினை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி இருந்தார்.

இதற்கமைய மீண்டும் துரிதமாக செயற்பட்ட D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் நீண்ட பல்வேறு வடிங்களில் விசாரணைகளை முன்னெடுத்து களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் தான் இப்படுகொலையின் பிரதான சூத்தரதாரி என கண்டறிந்துள்ளதுடன் குறித்த கடையில் பணியாற்றிய உரிமையாளரின் சகோதரர் உட்பட அக்கடையின் நம்பிக்கைக்குரிய பணியாளரையும் வெள்ளிக்கிழமை(05) கைது செய்தனர்.

இக்கைது நடவடிக்கையை அறிந்த பிரதான சந்தேக நபர் தற்போது அவரது சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு தப்பி சென்ற நிலையில் அச்சந்தேக நபரை தேடி D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை தப்பி சென்ற பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டதுடன் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரின் தங்கையை திருமணம் செய்து பெரிய நீலாவணையில் வசித்து வந்தவராவார்.இச்சந்தேக நபரே நீண்ட காலமாக குறித்த கொலை திட்டம் தீட்டி அரங்கேற்றியுள்ளதை ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் 94 நாட்களின் பின்னர் கைதான பிரதான சூத்தரதாரியின் கடையில் பணியாற்றிய சூத்தரதாரியின் சகோதரர் உட்பட அக்கடையின் நம்பிக்கைக்குரிய பணியாளரையும் அம்பாறைக்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் மீது கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்படக் கூடிய வகையில் வெட்டப்பட்டு தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்திருந்தது.மேலும் இப்படுகொலை இடம்பெற்ற வேளை மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கி இருந்ததுடன் சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர படுகொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணின் கடந்த கால கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மிக நீண்ட விசாரணை மேற்கொண்டு அவற்றை மீள தன்னிடம் பெற்று வழங்கியதற்காகவும் துரித கதியில் கொலையாளிகளை இனங்கண்டு பாதிக்கப்பட்ட எங்கள் தரப்பினருக்கு பல்வேறு உதவிகளை வழங்கியதற்காக படுகொலையான பெண்ணின் கணவர் உருக்கமாக நன்றிகளை கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாருக்கு தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

புலனாய்வு செய்தியாளர்-பாறுக் ஷிஹான்

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக குழு தெரிவும் இன்று இடம்பெற்றது.காப்பாளர் ; டக்ள...
06/09/2025

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக குழு தெரிவும் இன்று இடம்பெற்றது.

காப்பாளர் ; டக்ளஸ் நாயனயகார

ஆலோசகர் : கமினி இலங்கன்திலக

தலைவர் ; சுப்ரமணியம் தியாகு

செயலாளர் ; எம்.எஸ். செல்ஹேவா

பொருலாளர் ; நோட்டன்ராம்.

உப தலைவர் : வீரக்கொடி

உப செயலாளர் : சந்திரமோகன்

தேசிய அமைப்பாளர் : சிவலிங்கம் சிவகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாககுழு உறுப்பினர்கள்.

சி.டி பொருமாள்.
பானா தங்கம்.
இந்திக்க ரொசான்.
சதீஸ்குமார்.
சுஜித் சுரேன்.

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஏனையவர்கள் ஊடகவியலாளர்கள் அங்கத்தவர்கள் .

இதுவரை
நுவரெலியாவில் ஊடக மையம் காரியாலயம் இல்லை இனி வரும் காலங்களில் திறக்கப்படவுள்ளாதாக சில ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் அறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பில் இர...
06/09/2025

கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் அறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து கொட்டகலைக்கு சுற்றுலா சென்ற 60 வயதுடைய ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமது நண்பருடன் குறித்த சுற்றுலா விடுதிக்கு சென்ற அவர், நண்பருடன் நேற்று (5) மது அருந்திவிட்டு விடுதியில் கிழே விழுந்து கிடந்துள்ளார்.

பின்னர், கீழே விழுந்த நபர் மீண்டும் அறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

எனினும், குறித்த நபர் இன்று விடுதியை விட்டு வெளியில் வராமையினால், விடுதி ஊழியர் ஒருவர் இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து பொலிஸார் அந்த விடுதிக்கு வந்து சோதனையிட்ட போது, குறித்த நபர் அறைக்குள் உயிரிழந்தமையை உறுதி செய்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

✨💍 Hatton, get ready! For the first time ever, a grand Bridal Workshop is happening in your town! 💄👰From Hindu & Indian ...
06/09/2025

✨💍 Hatton, get ready! For the first time ever, a grand Bridal Workshop is happening in your town! 💄👰

From Hindu & Indian bridal dressing to HD makeup, hairstyles, skin prep, eye looks, and international techniques — learn it all, from basic to advanced 🌍✨

🎓 Get 2 certificates – TVEC Registered Academy 🇱🇰 + UK & Canadian Registered Academy 🇬🇧🇨🇦

📅 Date: 27th September 2025
📍 Natchathra Wedding Hall, Hatton

👩‍🏫 Facilitated by Dr. Haseena Kaleel —
✅ Board of Director – International Human Rights of Women & Children Affairs
✅ Chairman – Al Haseena Bridals & Academy | National Director – GIWA
✅ Academic Background: Associate Degree in Cosmetology | BSc in Cosmetology | NVQ Level 4 Qualified | HND UK | HMUA New Delhi | GD Level 6 Cosmetologist UK | USA Certified
🏆 Mrs. Sri Lanka Official Makeup Artist 2022 | Asian Excellence Award Winner 2022 | Outstanding Women Icon 2022 | International Business Award Winner 2024 (India)

🍴 Bonus: Welcome drink, lunch & evening snacks will be provided!
💰 Fee: LKR 10,000 only

Organized by 👉 Sangeetha Beauty Care & Rudhra Event Management

📞 Call to register now: 0763924293 | 0512244481

💎 Don’t miss Hatton’s biggest bridal learning experience - limited seats only! ✨👑

ஹட்டன் தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.தவகுமார் அவர்கள் நுவரெலியா பொலிஸ் பிரிவின் உடப...
06/09/2025

ஹட்டன் தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.தவகுமார் அவர்கள் நுவரெலியா பொலிஸ் பிரிவின் உடபுஸ்ஸெல்லால பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக (OIC) நியமனம் பெற்றுள்ளார்.

மலையோரம் செய்திகள் சார்பாக எமது வாழ்த்துக்கள்

இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான 'மிதிகம சூட்டி' என அழைக்கப்படும் பிரபாத் மதுஷங்க ஓமானில் வைத்து கைது செய்ய...
06/09/2025

இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான 'மிதிகம சூட்டி' என அழைக்கப்படும் பிரபாத் மதுஷங்க ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் உறுப்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க பிரபாத் மதுஷங்கவை கைது செய்வதற்கான சிவப்பு அறிக்கையை இன்டர்போல் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், முதலில் டுபாய்க்கு தப்பிச்சென்று அதன் பின்னர் ஓமானில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த மதுஷங்கவை ஓமான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Address

Nuwara Eliya

Website

Alerts

Be the first to know and let us send you an email when மலையோரம் செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மலையோரம் செய்திகள்:

Share