மலையோரம் செய்திகள்

  • Home
  • மலையோரம் செய்திகள்

மலையோரம் செய்திகள் நம்பகமான செய்திகள்

அன்புள்ள வாசகர்களே!
நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது மலையோரம் செய்திகள் நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது.அது உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

மஸ்கெலியா நகரில் உள்ள அனைத்து நடை பாதைகள் பாதசாரிகள் பாவனைக்கு திறந்து விட ஏற்பாடு.இதற்கான ஏற்பாடுகளை மஸ்கெலியா பிரதேச ச...
16/07/2025

மஸ்கெலியா நகரில் உள்ள அனைத்து நடை பாதைகள் பாதசாரிகள் பாவனைக்கு திறந்து விட ஏற்பாடு.

இதற்கான ஏற்பாடுகளை மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளரும் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் இன்று மஸ்கெலியா நகரில் மேற் கொண்டனர்.

இன்று 16ம் திகதி காலை முதல் பேருந்து நிலைய வீதி, தபால் கந்தோர் வீதி, 7ம் வீதி, பிரதான வீதி,2 ம் வீதி ஆகிய வீதிகளில் உள்ள அனைத்து மக்கள் நடமாடும் வீதியோரங்களில் வர்த்தக நிலையங்கள் ஆக்கிரமிப்பு செய்து இருந்தவற்றை மக்கள் நடமாடும் வகையில் திறந்து வைக்கப்பட்டது.

ஒரு சில வர்த்தக நிலையங்களுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் நகரில் உள்ள பல பிரச்சனைகள் கேட்டு அறியபட்டு அதற்கான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்க படும் என தவிசாளர் க.இராஜ்குமார் தெரிவித்தார்.
நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபை செயலாளர் மற்றும் அலுவலக மேற்பார்வையாளர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி பொது சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மஸ்கெலியா
நிருபர்.

தலவாக்கலை பகுதியிலுள்ள தமிழ்ப் பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த - உடலுக்கு...
16/07/2025

தலவாக்கலை பகுதியிலுள்ள தமிழ்ப் பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த - உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய இரசாயனங்களைக் கொண்ட வாசனை திரவியங்களை முகர்ந்ததால் திடீர் சுகவீனம் அடைந்து லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டனர்.

வெவ்வேறு இடங்களில் குளவி கொட்டுக்கு இலக்காகி 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்புஅக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் குளவ...
16/07/2025

வெவ்வேறு இடங்களில் குளவி கொட்டுக்கு இலக்காகி 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 8 பேர் அனுமதி

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊட்டுவள்ளி தோட்டத்தில் இன்று 11 மணியளவில் தேயிலை மலையில் தொழில் செய்து கொண்டிருந்த போது 8 பேர் குளவி தாக்குதலுக்கு உள்ளாகிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதில் அனைவரும் ஆண் தொழிலாளர்கள் ஒருவர் மீது அதிகமான குளவிகள் தாக்கியதால் தப்பித்து கொள்வதற்காக ஓடிய போது தவறிய கீழே விழுந்ததால் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை அக்கரப்பத்னை ‌டொரிங்டன் தோட்டத்தில் இன்று 16 தேயிலை மழையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியதால் பாதிக்கப்பட்ட ஐவரும் அக்கரப்பத்னை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தின் பர்பானியில் ஓடும் பேருந்தில் 19 வயது யுவதி ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்த நிலையில், அவர...
16/07/2025

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தின் பர்பானியில் ஓடும் பேருந்தில் 19 வயது யுவதி ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்த நிலையில், அவரும் அவரது கணவர் என்று கூறிக்கொள்ளும் ஒரு ஆணும் புதிதாகப் பிறந்த குழந்தையை ஜன்னலுக்கு வெளியே வீசியதில் குழந்தை இறந்துள்ள பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது .

மராட்டியத்தில் உள்ள பர்பானியை சேர்ந்தவர் அல்தாப் ஷேக். இவரது மனைவி ரித்திகா தேரே. நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

நேற்று தம்பதியினர் காலை 6.30 மணியளவில் புனேயில் இருந்து பர்பானிக்கு, ஸ்லீப்பர் வசதி கொண்ட தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பத்ரி-சேலு வீதியில் அந்த பஸ் சென்றபோது, ரித்திகா தேரேவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு ஓடும் பேருந்தில் ஆண் குழந்தை பிறந்தது.

அந்த தம்பதியினர் பச்சிளம் குழந்தையை யாருக்கும் தெரியாமல் ஒரு துணியில் போட்டு ஜன்னல் வழியாக வெளியே வீசியதாக கூறப்படுகிறது. இதில் அந்த குழந்தை இறந்தது.

இதற்கிடையே பேருந்துன் சாரதி, ஜன்னலுக்கு வெளியே ஏதோ வீசப்பட்டதை கவனித்தார். அதைப்பற்றி சாரதி, அல்தாப் ஷேக்கிடம் விசாரித்தபோது, பயணத்தின்போது தனது மனைவிக்கு குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுத்ததாக கூறினார்.

அந்த நேரத்தில் வீதியில் நின்று கொண்டிருந்த ஒருவர் பஸ் ஜன்னல் வழியாக குழந்தை வீசப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உடனடியாக அவர் இதுபற்றி பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதுபற்றிய தகவல் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அந்த சொகுசு பேருந்தை துரத்தி பிடித்தனர்.

பின்னர் பொலிஸார் அந்த பஸ்சில் ஏறி சோதனை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் குறிப்பிட்ட தம்பதியை பிடித்து விசாரணை நடத்தியதில், இருவரும் உல்லாசமாக இருக்கும்போது உண்டாகிவிட்டது, வளர்க்க முடியாது என கருதி குழந்தையை வீசி கொன்றதாக அவர்கள் தெரிவித்தனர். இதனைகேட்டு பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

பொலிஸாரின் தொடர் விசாரணையில், அல்தாப் ஷேக், ரித்திகா தேரே ஆகியோர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புனேயில் ஒன்றாக வசித்து வருவது தெரியவந்தது.

அவர்கள் கணவன்-மனைவி என்று கூறிக்கொண்டனர். ஆனால் அதனை நிரூபிக்க எந்த ஆவணத்தையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை எனவும் தெரியவந்தது.

குழந்தையின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபர

உலகம் முழுவதும் 2024 இல் 1.4 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படவில்லை - ஐ.நா சுகாதாரத்துறை தெரிவிப்பு!உலகம் முழுவது...
16/07/2025

உலகம் முழுவதும் 2024 இல் 1.4 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படவில்லை - ஐ.நா சுகாதாரத்துறை தெரிவிப்பு!

உலகம் முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டு 1.4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை என்று ஐ.நா.சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2020 இல் கொரோனா பெருந் தொற்று பாதிப்பின்போது அமுல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின்போது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது தடைப்பட்டது.

அதன் பின்னர் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தப்படுவது முந்தைய நிலைக்கு இன்னும் திரும்பவில்லை.

சா்வதேச அளவில் தடுப்பூசி அளிக்கப்பட்டது தொடா்பான ஆய்வு அறிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

அதுகுறித்து உலக சுகாதார அமைப்பு, யூனிசெப் அமைப்பு அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘கடந்த ஆண்டு ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளில் 89 சதவீதத்தினர் டிப்தீரியா, டெட்டானஸ், கக்குவான் இருமல் ஆகியவற்றின் முதல் தவணை தடுப்பூசியைப் பெற்றனர்.

85 சதவீதத்தினர் மூன்று தவணை தடுப்பூசிகளைப் பெற்றனர்.

இதே அளவிலேயே 2023 இல் தடுப்பூசி செலுத்தப் பட்டிருந்தது.

இந்த வகை தடுப்பூசிகள் ஆண்டுதோறும் 35 இலட்சம் முதல் 50 லட்சம் மரணங்களைத் தடுக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தட்டம்மை தடுப்பூசிகள் உலகம் முழுவதும் 76 சதவீதம் செலுத்தப் பட்டுள்ளன.

ஆனால், இதை 95 சதவீதத்தை எட்டினால்தான் அதிகபடியான பரவல் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடிவும். கடந்த ஆண்டு 60 நாடுகளில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்திருந்தது.

அமெரிக்காவில் தட்டம்மை பாதிப்பு கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது.

ஐரோப்பாவில் கடந்த ஆண்டு சுமார் 1,25,000 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டனர்.

உலகில் தடுப்பூசி செலுத்தப்படாத மொத்த குழந்தைகளில் 52 சதவீதத்தினர் இந்தியா, நைஜீரியா, சூடான், காங்கோ, எத்தியோபியா, இந்தோனேசியா, ஜேர்மன், ஆப்கானிஸ்தான், அங்கோலா ஆகிய 9 நாடுகளில் உள்ளனர்.

உலக சுகாதார அமைப்புக்கு அளிக்கப்பட்டு வந்த மனிதாபிமான நிவாரண நிதி நிறுத்தப்பட்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளதால், நிகழாண்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் சதவீதம் மேலும் மோசமாக இருக்கும் என்று ஐ.நா. அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் 'ரு சிரி' என்ற நவீன அழகு கலை நிலையம் திறக்கப் பட்டுள்ளது. பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் ம...
16/07/2025

பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் 'ரு சிரி' என்ற நவீன அழகு கலை நிலையம் திறக்கப் பட்டுள்ளது.

பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இது, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் சிகை அலங்கார இடமாக நேற்று (15) திறந்து வைக்கப்பட்டது.

சிறிது காலமாக பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே இங்கு சலுகை விலையில் சேவையைப் பெற முடிந்தாலும், இனிமேல், பெண் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இங்கு வருகை தரும் வெளி தரப்பினருக்கும் அழகு கலையை சலுகை விலையில் செய்ய முடியும்.

பொலிஸ் அதிகாரிகளின் குடும்பங்களைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களுக்கு இங்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படுவது சிறப்பம்சமாகும்.

பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் பதில் தலைவர் நில்மினி சமரதுங்க, அந்த சங்கத்தின் உறுப்பினர் சந்தீபா செவ்மினி மற்றும் பொலிஸ் களப் படை தலைமையகத்தின் கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின் கீழ் இந்த அழகு கலை நிலையம் வெற்றிகரமாக மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளை கைது செய்வதற்கு அலகாபாத் மேல் நீதிமன்றம் தடை விதித்த...
16/07/2025

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளை கைது செய்வதற்கு அலகாபாத் மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் மீது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரினால் காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப் பட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, யாஷ் தயாள் தன்னிடம் பாலியல் அத்து மீறல்களில் ஈடு பட்டதாகக் குறித்த பெண் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அத்துடன் அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தன்னை மிரட்டி வருவதாகவும் குறித்த பெண் காவல் நிலையத்தில் முறைப் பாடளித்திருந்தார்.

இதற்கமைய குறித்த முறைப்பாடு தொடர்பில் உத்தரப்பிரதேச காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து யாஷ் தயாள் மீது உத்தரப்பிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் யாஷ் தயாளை கைது செய்ய அலகாபாத் மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன

அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 8 பேர் அனுமதிஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊட்ட...
16/07/2025

அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 8 பேர் அனுமதி

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊட்டுவள்ளி தோட்டத்தில் இன்று 11 மணியளவில் தேயிலை மலையில் தொழில் செய்து கொண்டிருந்த போது 8 பேர் குளவி தாக்குதலுக்கு உள்ளாகிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதில் அனைவரும் ஆண் தொழிலாளர்கள் ஒருவர் மீது அதிகமான குளவிகள் தாக்கியதால் தப்பித்து கொள்வதற்காக ஓடிய போது தவறிய கீழே விழுந்ததால் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

06 மாத காலப்பகுதியில் 1,44,379 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு பயணம்2025ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 1,44,379 இலங்கை...
16/07/2025

06 மாத காலப்பகுதியில் 1,44,379 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு பயணம்

2025ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 1,44,379 இலங்கையர்கள் வேலை வாய்ப்பிற்காக வெளி நாடுகளுக்குப் பயணித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் 88,684 ஆண் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு புறப் பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் 55,695 பெண் தொழிலாளர்களும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்காக சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வேலை வாய்ப்பிற்காக குவைத் நாட்டிற்கு சென்றுள்ளனர்.

இதன்படி, குவைத் சென்றுள்ள இலங்கை தொழிலாளர்களின் எண்ணிக்கை 38,806 ஆகும்.

28,973 தொழிலாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கும், 21,958 பேர் கட்டார் நாட்டிற்கும் வேலை வாய்ப்பிற்காக இந்த காலப்பகுதியில் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், ஜப்பான் நாட்டிற்குச் 6,073 இலங்கை தொழிலாளர்கள், மற்றும் தென் கொரியா நாட்டிற்குச் 3,134 தொழிலாளர்கள் வேலை வாய்பிற்காக சென்றுள்ளனர்.

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்ட இலங்கை தொழிலாளர்கள் அமெரிக்க டொலர் 3.73 பில்லியன் அளவிலான பணப்பரிமாற்றங்களை (remittances) நாட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் அமெரிக்க டொலர் 635.7 மில்லியன் பணப்பரிமாற்றம் இலங்கை தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு, 2025 ஆம் ஆண்டில் மொத்தமாக அமெரிக்க டொலர் 7 பில்லியன் பணப்பரிமாற்ற வருவாயை நாடு பெற்றுக்கொள்ளும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

பிரபுத்தகம, அங்குருவ தோட்டையைச் சேர்ந்த 88 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை கே. மிசலின் நோனா அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தர ...
16/07/2025

பிரபுத்தகம, அங்குருவ தோட்டையைச் சேர்ந்த 88 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை கே. மிசலின் நோனா அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில், தமிழ் மொழியில் தோற்றி, C தர சித்தியை பெற்றுள்ளார்.

நான் சிறந்த பெறுபேறு ஒன்றை எதிர்பார்த்தேன்.

குறைந்தபட்சம் B சித்தி கிடைக்கும் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன்.

இப்போது, நான் மீண்டும் தமிழ் மொழி பரீட்சையில் A சித்தியை பெறுவதற்கு பெறத் தயாராகி வருகிறேன்.

அதுதான் எனது திட்டம் என்று தெரிவித்துள்ளார்.

1937 இல் பிறந்த மிசலின் நோனா தனது மூத்த மகள் மற்றும் பேத்தியுடன் வசிக்கிறார்.

அவர் ஏழு குழந்தைகளின் தாய், அவர்கள் அனைவரும் இப்போது பெரியவர்கள்.

அவரது மகன்கள் ஆயுதப்படைகளில் பணியாற்றி இப்போது ஓய்வு பெற்றுள்ளனர்.

எங்கள் சமூகத்தில், தமிழ் என்பது நமக்குத் தேவையான மொழி.

நான் அதை இன்னும் ஆழமாகப் படிக்க விரும்பினேன் என்று அவர் கூறினார்.

நாள் ஆசிரியரிடம் கற்கவில்லை.

தமிழ் புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்து நானே படித்தேன்.

என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

16/07/2025
சரோஜாதேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்இறுதி ஊர்வலத்தில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்புமறைந்த நடிகை சரோஜா தேவியின் ...
16/07/2025

சரோஜாதேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

இறுதி ஊர்வலத்தில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு

மறைந்த நடிகை சரோஜா தேவியின் (87) உடல் சொந்த ஊரில் நேற்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப் பட்டது.

தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை சரோஜாதேவி, பெங்களூருவில் நேற்று முன்தினம் காலமானார்.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when மலையோரம் செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மலையோரம் செய்திகள்:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share