Osisnews

Osisnews உண்மைகள் தோற்பதில்லை. அவைகள் நிரூபிக்கப்படுகின்றன. Facts never fail. They are proven.

முஸ்லிம் தனித்துவ அரசியலின் வீழ்ச்சியும் தேசிய நீரோட்டத்தின் எழுச்சியும்.මුස්ලිම් පුද්ගලවාදී දේශපාලනයේ පරිහානිය සහ ජාතික...
03/06/2026

முஸ்லிம் தனித்துவ அரசியலின் வீழ்ச்சியும் தேசிய நீரோட்டத்தின் எழுச்சியும்.
මුස්ලිම් පුද්ගලවාදී දේශපාලනයේ පරිහානිය සහ ජාතිකවාදයේ නැගීම.
නැඟෙනහිර පළාතේ මුස්ලිම්වරුන්ගේ දේශපාලන පරිවර්තනය සහ පරාජිත ‘රහස්’ උපාය මාර්ග.

පසුගිය ආණ්ඩු සමයේ විපක්ෂයේ දේශපාලනඥයන් භුක්ති විඳි මුදල් හා බලය සම්බන්ධයෙන් මේ වන විට විපක්ෂයේ දේශපාලනඥයන් සම්පූර්ණයෙන්ම සීමා වී ඇති අතර ඔවුන් ජනතාව අතරට ප්‍රක්ෂේපණය කිරීමට පවා නොහැකි වී තිබේ.

අද දිනකරන් පත්‍රයේ පළවූ මගේ ලිපිය.03-06-2026

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் மாற்றமும் தோற்கடிக்கப்பட்ட 'மறைமுக' வியூகங்களும்.

முந்தைய அரசாங்களின் காலத்தில் எதிர்கக்கட்சி அரசியல்வாதிகள் அனுபவித்த வரப்பிரசாரங்கள் மற்றும் அதிகார பலம் தற்பொழுது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களால் மக்களிடையே தங்களை முன்னிலைப்படுத்தவும் முடிவதில்லை.
++++++++++++++++++++++

இலங்கையில் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பதவியேற்றதைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் புதிய பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்களும் இச்சூழலில் அரசுக்கு எதிராக எதனை கையிலெடுப்பது என்ற திண்டாட்டத்தில் உள்ளனர்.

NPP அரசாங்கம் கடந்த காலங்களில் இடம் பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் அரசியல் களத்தில் செல்வாக்கை இழந்துள்ளனர். பாரம்பரியமான குடும்ப அரசியல் மற்றும் அதிகார துஷ் பிரயோகங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில், இளைஞர் சமூகத்தின் மத்தியிலும் பெரும் விளிர்ப்புணர்வு எழுந்துள்ளது. இதனால், எதிர்க்கட்சிகளுக்கு வழக்கம் போல் மக்களை அணிதிரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அனுபவித்த வரப்பிரசாதங்கள் மற்றும் அதிகார பலம் தற்போது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களால் மக்களிடையே தங்களை முன்னிலைப்படுத்தவும் முடிவதில்லை.

நாட்டில் எது நடந்தாலும், இணக்கப்பாட்டு அரசியலை முன்னெடுத்த பாரம்பரிய முஸ்லிம் கட்சித் தலைவர்கள் NPP யின் அலையால் பாராளுமன்றத்தில் நேரடி அதிகாரத்தை இழந்தனர். மேலும், இந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை என்பது அந்த பாரம்பரியக் கட்சிகளாலும், அவர்களுக்கு சார்பாக செயற்படும் சமூக அமைப்புகளாலும் விமரிசிக்கப்பட்டு வருகின்றமை வேடிக்கையான விடயமாகவும் பார்க்கப்படுகின்றது.

கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முஸ்லிம் மக்கள், இனவாத அரசியலைத் தாண்டி நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் ஊழலற்ற ஆட்சி மாற்றத்தை வேண்டி தேசிய மக்கள் சக்திக்கு (NPP)க்கு கணிசமான வாக்குகளை அளித்திருந்தனர்.

தேசிய மக்கள் சக்தி ஊடாக முஸ்லிம் பிரமுகர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், சர்வமத நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இனவாதத்திற்கு அப்பால் தேசிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

மத மற்றும் இன அடையாளங்களை முன்னிறுத்திப் பேரம்பேசும் பாரம்பரிய அரசியல் தளம் மாற்றப்பட்டு, அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய 'ஒரே இலங்கை' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பிராந்திய அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் தனித்துவக் கட்சிகளின் பிடி தளர்ந்து, முஸ்லிம் மக்கள் தேசியக் கொள்கை சார்ந்த மாற்று அரசியலை நோக்கி நகர்வதை இந்த ஆட்சிப் மாற்றம் நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக்காட்டியுள்ளது.

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமது தனித்துவக் கட்சிகளை வெறுப்பதற்குக் காரணம், அக்கட்சிகள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறியமையும், தலைவர்கள் ஆட்சியாளர்களுடன் இணைந்து சுயநலன்களை மாத்திரம் முன்னெடுத்துச் சென்றமையாகும்.

முஸ்லிம் மக்களின் பூர்வீகக் காணிகள் அபகரிக்கப்படுகின்றன மற்றும் எல்லை நிர்ணயப் பிரச்சினைகள் என தேர்தல்கால முழக்கங்களில் ஈடுபவர்களின் நோக்கம் வாக்கு சேகரிப்பதிலும் இன்னொரு சமூகத்திற்கு எதிரான உணர்ச்சிகளை தூண்டுகின்ற வீர வசனங்களாகவுமே இருந்தன. தேர்தலுக்கு பிற்பாடு பாராளுமன்றத்தில் சமூகத்துக்கு தேவையான விவாதங்களிலோ அல்லது அவை தொடர்பான ஆக்கபூர்வமான செயற்பாடுகளிலோ அவர்கள் ஈடுபடுவதில்லை என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் எழத் தொடங்கி இருந்தது.

வீரவசனங்கள் ஊடாக மக்களின் ஆதரவைப் பெற்று அதிகார கதிரையில் உட்கார்ந்த அவர்களினால், தங்களின் பேரம் பேசும் சக்தியைப் பயன்படுத்தி மக்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கத் தவறியுள்ளனர்.

தேர்தல் காலங்களில் மாத்திரம் கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்தைப் பேசி வாக்குக் கேட்கும் தலைவர்கள், தேர்தல் முடிந்தவுடன் கொழும்புக்குச் சென்று மக்களை மறந்து விட்ட வரலாறுகள்தான் மீதமாக உள்ளது. வடக்கு - கிழக்கு இணைப்பு போன்ற தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் பேசப்படும் போது, அவற்றிற்கு எதிராகக் குரல் கொடுப்பதுடன், முஸ்லிம்களின் இருப்பைப் பாதுகாப்பதற்கான சரியான தீர்வோ அல்லது அது சார்ந்த கொள்கை அரசியலோ அவர்களிடத்தில் மருந்துக்கும் இல்லை என்பதில் கிழக்கு இளைஞர் சமூகம் தெளிவடைந்த சமூகமாக மாறியுள்ளது.

முஸ்லிம் அல்லாத பிற தேசியக் கட்சிகளின் உறுப்பினர்கள் கூட சில நேரங்களில் தங்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பதை அவதானிக்கும் முஸ்லிம் சமூகம், இனவாத அரசியலையும் தாண்டி அபிவிருத்தி மற்றும் ஜனநாயக மாற்றங்களை வேண்டி தனித்துவக் கட்சிகளை வெறுக்கத் தொடங்கியுள்ளனர்.

கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பேரினவாத நெருக்குதல்கள், கொவிட்-19 உடல்கள் கட்டாயத் தகனம், மற்றும் ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான அச்சுறுத்தல்களின் போது இந்தத் தனித்துவக் கட்சிகள் அவர்களைப் பாதுகாப்பதில்தான் கவனம் செலுத்தினார்களே தவிர, மக்களின் நலன்களையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் விடயங்களில் செயற்படவில்லை என்பது முஸ்லிம் சமூகத்தின் உள்ளங்களில் ஆறாத வடுவாக இன்னுமுள்ளது.

அந்த நேரத்தில் முஸ்லிம் அல்லாத பிற தேசியக் கட்சிகளின் உறுப்பினர்கள் என்ற வகையில் பாராளுமன்றத்தில் அதிகமாக முஸ்லிம் சமூகத்தினுடைய பாதுகாப்பு பற்றியும், அச்சமூகத்துக்கு இழைக்கப்படும் திட்டமிடப்பட்ட அரசியல் ரீதியான அநீதிகளை சுட்டிக்காட்டி எதிராக குரல் கொடுக்க முன்வந்தது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஜே.வி.பி மட்டுமே.

முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த திட்டமிட்ட அநீதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் பகிரங்கமாக செயற்பட்ட அரசியல் சக்தியாக இருந்ததும் மக்கள் விடுதலை முன்னணியே ஒன்றே.

தேர்தல் சமயத்தில் மாத்திரம் இன, மத உணர்வுகளைத் தூண்டி, "சமூகப் பாதுகாப்பு" என்ற கோஷத்தை முன்வைத்து வாக்குகளைப் பெற்றுக்கொண்டு, தேர்தல் முடிந்ததும் மக்களைக் கைவிடுவதை தனித்துவ கட்சிகள் வாடிக்கையாக கொண்டிருந்தனர். கிழக்கின் பெரும்பாலான முஸ்லிம் கிராமங்கள் முறையான வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின்றி இன்னும் அவல நிலையில் காணப்படுகின்றன.

காலங்காலமாக இன அடையாளத்தை மட்டும் வைத்து அரசியல் செய்த கட்சிகளை விடுத்து, தற்போதுள்ள இளைய தலைமுறையினர் இன, மத எல்லைகளைக் கடந்து தேசிய அரசியல் நீரோட்டத்தை (உதாரணமாக தேசிய மக்கள் சக்தி - NPP) ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். ஊழலற்ற, பொதுவானதொரு அரசியல் மாற்றமே தங்களின் வாழ்வை மேம்படுத்தும் என அவர்கள் நம்புகின்றனர். சுருக்கமாகக் கூறின், "உரிமைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி உசுப்பேற்றி, வாக்குகளைப் பெற்று, அதன் மூலம் தங்களின் பதவிகளைத் தக்கவைக்கும்" முஸ்லிம் தனித்துவ கட்சிகளின் தேர்தல்கால ஓரங்க நாடகங்களில் தெளிவடைந்த சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறத்தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், தோற்கடிக்கப்பட்ட பல பாரம்பரிய அரசியல்வாதிகள், கடந்த காலங்களைப் போலவே தற்போதைய NPP அரசாங்கத்துடன் ஏதேனும் ஒரு வழியில் இணைந்து கொள்ளலாம் அல்லது ஆதரவு வழங்கி தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற பகற்கனவு காண்பதில் நேரத்தை அதிகம் செலவு செய்ய தொடங்கியுள்ளார்கள்.

இன்னொரு பக்கத்தில் இவர்களுக்கு நேரடி அரசியல் களத்தில் செல்வாக்கு குறைந்துள்ளதால், ஜம்மியத்துல் உலமா, தேசிய சூறா கவுன்சில் (NSC) போன்ற சிவில் மற்றும் மத அமைப்புகளின் பின்னால் ஒழிந்து கொண்டு தங்களது அரசியல் கருத்துக்களை சமூக மயமாக்க முயற்சிக்கின்றார்கள். இதன் மூலம் தேசிய மக்கள் சக்தியினுடைய( NPP ) முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மறைமுக நெருக்கடிகளை கொடுக்கவும் முற்படுகின்றனர். ஆகவே முஸ்லிம் சமூகத்தில் உள்ள நடுநிலை சிந்தனையாளர்களும், இளைஞர் சமூகமும் இவர்கள் விடயத்தில் மிகக் கவனமாக செயற்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

70%-க்கும் அதிகமான முஸ்லிம்கள் தேசிய மக்கள் சக்திகக்கு NPP வாக்களித்தும் முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து, தங்களின் இழந்த வாக்கு வங்கியை இவர்கள், மீண்டும் சரிசெய்து கொள்ள முயற்சிக்கின்றனர். இதன் மூலம் முகவரி இழந்துள்ள "முஸ்லிம் தனித்துவ அரசியல் கட்சிகள்" சமூகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் நிரூபிக்க அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சுதந்திர விடுதலைக்குப் பின் இலங்க வரலாற்றில் முதன்முறையாக தேசிய மக்கள் சக்தியின்( NPP) புதிய அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்திற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்பதை தோற்கடிக்கப்பட்ட முஸ்லிம் தலைவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் ஆயுதமாக மாற்றியுள்ளார்கள். இவர்களைப் போன்றவர்கள் கடந்தகால அரசாங்கங்களில் அமைச்சரவை அந்தஸ்த்துடன் இருந்த பொழுது முஸ்லிம் சமூகத்துக்கு என்ன நடந்தது என்பது தற்பொழுது இவர்களுக்கு மறந்து போய்யுள்ளது

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் மாற்றம் என்பது, தேசிய கட்சிகளிடம் தமது பேரம் பேசும் சக்தியை இழந்து நிற்கும் தற்போதைய நிலையில், சுயநல அரசியலைத் தாண்டி சமூகத்தின் நிரந்தரப் பாதுகாப்பு, இழந்த காணிகளை இன்னுமொரு தரப்பினருக்கு பாதிப்பில்லாமல் நியாயமான முறையில் மீட்டெடுத்தல் மற்றும் சுயநிர்ணய உரிமைகளை மையப்படுத்திய உறுதியான புதிய தலைமைத்துவத்தை உருவாக்குவதில்தான் தங்கியுள்ளது.

1980களில் உருவான தனித்துவ அரசியல் தற்காலத்தில் அதன் வீச்சை இழந்துவிட்ட நிலையில், புத்திஜீவிகள் மற்றும் புதிய சிந்தனையாளர்களைக் கொண்ட ஒரு புதிய, நேர்மையான தலைமைத்துவத்தை அல்லது சரியான தேசிய கொள்கை சார் அரசியலை நோக்கி முஸ்லிம் இளைஞர் சமூகத்தை வழி நடாத்துவது முஸ்லிம் புத்திஜீவிகளின் மிகப் பெரும் கடமையாக உள்ளது.

இது கிழக்கில் பெரும் பான்மையாக வாழும் தமிழ் மக்களோடு குறுகிய அரசியல் இலாபங்களுக்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட முரண்பாடுகளைக் களைந்து, இரு சமூகங்களுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைகள் மற்றும் நிர்வாகச் சிக்கல்களைப் பேசித் தீர்த்துக்கொள்ளும் அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடு தேசியத்துக்கு நன்மையளிக்கும் சந்தர்ப்பமாக அமையும்.

கிழக்கு சூழலில் தமிழ் பேசும் மக்கள் என்ற பொதுவான தளத்தில் நின்று, சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக இரு சமூகத் தலைமைகளும் புரிந்துணர்வுடன் செயற்படுவது எந்த அளவு காலத்தின் தேவையாக உள்ளதோ; அந்தளவு இரு சமூகங்களும் அதில் வெற்றி காண்பதற்காக சரியான தேசிய கொள்கை அரசியலில் பயனிப்பதாற்காக தேசிய மக்கள் சக்தியுடன்(NPP) கைகோர்த்து ஒற்றுமையுடன் தங்களை நிலைநிறுத்திக் கொள்வது மிக முக்கிய தேவையாகவே உள்ளது.

தென்னிலங்கை அரசியல் மாற்றங்களைச் சரியாகக் கணித்து, முஸ்லிம்கள் தங்களின் தனித்துவத்தினையும்,அடையாளத்தினையும், பாதுகாத்துக் கொண்டே தேசிய அரசியலில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய வியூகங்களை வகுக்க வேண்டும். அரசியல் பதவிகளை மட்டும் நம்பியிருக்காமல், கிழக்கு பிராந்தியத்தின் கல்வி மற்றும் சுயதொழில் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமே நீடித்த அரசியல் மாற்றத்தை உருவாக்க முடியும்.

அதற்கு சரியான பாதை என்பது, தேசிய மக்கள் சக்தி எனும் ஜனநாயாக வட்டத்துக்குள் சமத்துவ அரசியல் கொள்கை ஊடாக ஒருங்கிணைந்த இலங்கைத் தேசத்தினை கட்டியெழுப்புவதை இலக்காக கொண்டு செயற்படும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆல விருட்சமான தேசிய மக்கள் சக்தி, ஜனாதிபதி அநுர குமார திசா நாயக்கவின் கரங்களை பலப்பபடுத்தும் விடயத்தில் தோழமையாக இறுதி வரைக்கும் ஒருமித்து செயற்படுவதில் முஸ்லிம் சமூகம் நிலைதவறாமல் இருப்பதே தெளிவான பாதையாக அமையும்.

அஹமட் இர்ஷாட்.
இன்றைய தினகரன்,
03-06-2026

03/06/2026

ஓட்டமாவடியில் தேசிய மக்கள் சக்தி செயற் குழுவினால். தென்னை மரக்கன்றுகள் வழங்கி வைப்பு.ඔට්ටමාවාඩි හි ජාතික ජන බලය ක්‍රියාකාරී කමිටුව විසිනි. පොල් පැළ තැන්පත් කිරීම.

ஓட்டமாவடியில் தேசிய மக்கள் சக்தி செயற் குழுவினால். தென்னை மரக்கன்றுகள் வழங்கி வைப்பு.ඔට්ටමාවාඩි හි ජාතික ජන බලය ක්‍රියාක...
03/06/2026

ஓட்டமாவடியில் தேசிய மக்கள் சக்தி செயற் குழுவினால். தென்னை மரக்கன்றுகள் வழங்கி வைப்பு.ඔට්ටමාවාඩි හි ජාතික ජන බලය ක්‍රියාකාරී කමිටුව විසිනි. පොල් පැළ තැන්පත් කිරීම.

இலங்கை முழுவதும் வறுமையைக் குறைப்பதற்கும், தேசிய அளவில் தென்னை உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் தென்னை பயிர்ச்செய்கை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாட்டினை முன்னோக்கி நகர்த்துவதில் ஓர் அங்கமாக உள்ளது. அந்த அடிப்படையில் நாட்டின் தெங்கு உற்பத்திகள் கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்ததையடுத்து, வீடுகளிலும் தோட்டங்களிலும் தென்னை மரக்கன்றுகளை இலவசமாக வழங்கும் தேசிய நிகழ்ச்சி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஓர் அங்கமாக 03-06-2026 புதன்கிழமை தேசிய மக்கள்சக்தியின் ஓட்டமாவடி நிறைவேற்றுக் குழுவினால் கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் உள்ள பிரஜாசக்தி தவிசாளர்களின் பிரிவிலிருந்து இருந்தும் தலா இருபது பயனாளிகள் என ஒருவருக்கு இரண்டு தென்னைக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஓட்டமாவடி இஸ்மாயில் சென்டர் கட்டத்தில் இடம் பெற்ற நிழ்வுக்கு வாழைச்சேனை தென்னை அபிவிருத்தி நிலையத்தின் அதிகாரி சன்முகநாதன் கலந்து கொண்டதோடு, தேசிய மக்கள் சக்தியின் பிரதேச ஒருங்கிணைப்பாளர் சேகு இஸ்மாயில் பாரூக்,பிரதேச சபை உறுப்பினர் லத்தீப் ஹாபிஸ், முன்னாள் பாராளுமன்ற வேட்பாளர் எம் ஏ.சி.நியாஜ்தீன், பிரஜாசக்தி தவிசாளர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் பிரசன்மாயிருந்தார்கள்.

மேலும்,தென்னை அபிவிருத்திச் சபையின் (Coconut Cultivation Board) ஊடாக மாகாண ரீதியில் தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கவும், நாட்டின் தென்னை உற்பத்தியை பெருக்கவும் அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கையானது, பிராந்தியங்களில் உள்ள விவசாயிகளுக்கு, மாற்று வருமான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், நீண்டகால அடிப்படையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இது வழங்கப்பட்டது.

அத்தோடு, காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து, பல்லாண்டுப் பயிர்களை வளர்ப்பதன் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான இலக்காக இருக்கின்ற அதே இடத்தில், ஒவ்வொரு குடும்பமும் தங்களின் அன்றாட சமையல் மற்றும் நுகர்வுத் தேவைகளுக்கான தேங்காயைத் தங்கள் சொந்த வீட்டுத் தோட்டங்களிலேயே உற்பத்தி செய்து கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் மக்களின் மாதாந்த உணவுச் செலவு கணிசமாகக் குறையும் என்பதுதேசிய மக்கள் சக்தி அரசின் எதிர்பாப்பாகும்.

அஹமட் இர்ஷாட்.

கிழக்கில் மீண்டும் மலரும் 'பிட்டும் தேங்காய்ப் பூவும்' யுகம்නැඟෙනහිර නැවතත් මල් පිපෙයි 'බිට් සහ පොල් මල්' යුගයඒ සඳහා ප්‍...
02/06/2026

கிழக்கில் மீண்டும் மலரும்
'பிட்டும் தேங்காய்ப் பூவும்' யுகம்
නැඟෙනහිර නැවතත් මල් පිපෙයි
'බිට් සහ පොල් මල්' යුගය
ඒ සඳහා ප්‍රාදේශීය ව්‍යුහයන් ඇති කිරීමට ජාතික ජන බලය.

තම පටු දේශපාලන අවශ්‍යතා වෙනුවෙන් සහ තම ඡන්ද බැංකුව තහවුරු කර ගැනීම සඳහා ජාතීන් දෙක අතර භේද ඇතිකර ලාභ ලැබීමේ පුරුද්දක් දකුණු මැද ජාතිකවාදී පක්ෂවලට තිබේ

அதற்கான பிராந்திய கட்டமைப்புக்களை உருவாக்கும் தேசிய மக்கள் சக்தி.

தென்னிலங்கை மையத் தேசிய கட்சிகள் தமது குறுகிய அரசியல் தேவைகளுக்காகவும்,வாக்கு வங்கியை உறுதிப்படுத்தவும் இரு சமூகங்களிடையேயும் பிளவுகளை ஏற்படுத்தி ஆதாயம் தேடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளன.
+++++++++++++++++++++++

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் மொழியாலும், பண்பாட்டாலும் ஒன்றிணைந்து, 'பிட்டுக்குள் இருக்கும் தேங்காய்ப்பூ' போல பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த வரலாறு பொண் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டியவை.

இலங்கையின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு (மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை) வந்த அரபு வணிகர்கள், இங்குள்ள பூர்வீககுடித் தமிழர்களுடன் இணைந்து வா்த்தகத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம்களின் தாய்மொழி தமிழாகவே இருந்து வந்துள்ளது. தமிழர்களின் கலாச்சாரக் கூறுகளான 'தாய்வழிக்குடி' முறை கிழக்கு மாகாண முஸ்லிம்களிடமும் இன்றும் வழக்கில் உள்ளது.

ஒரே சந்தையைப் பகிர்ந்து கொள்ளுதல், விவசாயத்தில் கூட்டுறவு, மற்றும் பண்டமாற்று முறைகளில் இரு சமூகங்களும் பரஸ்பரம் கலந்து வாழ்ந்துள்ளார்கள். ஒரே பாடசாலைகளில் கல்வி கற்றும், கிராமிய விளையாட்டுகள், கலைகள் ஆகியவற்றைப் பகிர்ந்துள்ளதோடு, கலாச்சார ரீதியிலும் இரண்ரக் கலந்த வாழ்வியலே இரண்டு சமூகங்களுக்கு மத்தியிலும் இருந்துள்ளது.

இரு சமூகங்களுக்கும் இடையே முரண்பாடுகள் எழும்போது, அந்தந்த ஊர் மூத்தோர்கள் மற்றும் தலைவர்கள் ஒன்று கூடி மிக விரைவாகச் சுமூகமான தீர்வுகளை கண்டுள்ளார்கள். இலங்கை வரலாற்றில், இரு சமூகங்களின் தலைவர்களும் இணைந்து அரசியல், சமூக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த பல பொற்கால நிகழ்வுகள் எல்லாம் கிழக்கின் பாரம்பரிய அடையாளங்களாகவும், என்றும் மறைக்க முடியாத வரலாறுகளாகவும் எழுதப்பட்டுள்ளன.

இவ்வாறு சகோதரத்துவத்துடன் வாழ்ந்த சமூகங்களுக்கு மத்தியில் சுயலாப அரசியலுக்காவும், ஆட்சி அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவுமே இரண்டு சமூகங்களையும் பிரித்தாளும் திட்டங்கள் திரைமறைவில் தீட்டப்பட்டு மிகக் கச்சிதமாக சமூகங்களுக்குள் சிலீப்பர் செல்களாக ஊடுறவச் செய்யப்படுகின்றன.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், 1888 இல் சேர் பொன்னம்பலம் இராமநாதன் போன்ற தமிழ் தலைவர்கள் இலங்கையிலுள்ள முஸ்லிம்களை "தமிழ் பேசும் இனம்" என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டுவர முயன்றனர். ஆனால், முஸ்லிம்கள் தங்களை மத அடிப்படையிலான தனித்துவமான அரபு வழிவந்த தேசிய இனமாக (Moors) அடையாளப்படுத்த விரும்பியதால், அரசியல் ரீதியாக இரு தரப்பினருக்கும் இடையே முதல் அடையாள முரண்பாடு தோன்றம் பெருகின்றது.

மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரபினால் 1986 இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் அரசியல் கட்சியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இது முஸ்லிம்களைத் தனி அரசியல் சக்தியாக மாற்றிய அதேவேளை, தமிழர்களின் 'தாயகக் கோட்பாட்டில்' இருந்து முஸ்லிம்களைத் தனியாகப் பிரித்தது. அதற்கு பிற்பாடு 1990 களில் ஏற்பட்ட மிகக் கடுமையான உள்நாட்டு போர் இரு சமூகங்களுக்கு மத்தியில் பெரும் வேறுபாட்டையும் ஆறாத வடுக்களையும் ஏற்படுத்தவும் காரணமாக அமைந்திருந்தது. அதனால் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையே மிக ஆழமான அரசியல், சமூக மற்றும் புவியியல் ரீதியான பிரிவினையையும் தோற்றுவித்தது.

மீண்டும் கிழக்கில் தமிழ்-முஸ்லிம் உறவுகளை வலுப்படுத்த, இனவாத அரசியலைத் தவிர்த்து 'ஒரே இலங்கை மக்கள்' (Sri Lankan Nation) என்ற சிந்தனை அடிப்படையில் அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுக்க தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கமும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் தூர நோக்கு சிந்தறையுடன் செயற்பட்டு வருகின்றார்கள்.

இன, மத பேதங்களைக் கடந்து பொதுவான பொருளாதார மற்றும் ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை மையப்படுத்தி இரு சமூகங்களையும் ஒன்றிணைத்தலே அரசங்கம் கிழக்கில் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் கையாளும் மென்மையான அரசியல் முன்னெடுப்பாக உள்ளது.

இந்த நிலையில், பின் புறத்திலிருந்து அரசியல் அதிகார கதிரைகளுக்காக உருவாக்கப்பட்ட பிரச்சனைகளாக இருக்கும் நிர்வாக எல்லைகள் மற்றும் பிரதேச செயலகப் பிரிப்பு ( கல்முனை வடக்கு, தெற்கு விவகாரம், கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று தெற்கு ) இழந்த காணிகள், பெற்றுக்கொள்ள வேண்டிய காணிகள் தொடர்பான முரண்பாடுகள் இரு சமூகங்களுக்கும் இடையே தேவையற்ற பதற்றங்களை உருவாக்குகின்றன.

இரு சமூகங்களும் தனித்தனியான அரசியல் கட்சிகளை நம்பியிருப்பதும், அதிகாரப் பகிர்வில் சுயநல நோக்கங்கள் முன்னிறுத்தப்படுவதும் ஒற்றுமைக்கு தடையாக அமைகிறது. உள்நாட்டு யுத்த காலத்தில் இடம்பெற்ற கட்டாய வெளியேற்றங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பொருளாதார இழப்புகள் போன்றவை முஸ்லிம் மக்களிடம் ஒருவித அச்சத்தையும் அவ நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், அதற்கு எதிர்வினைத் தாக்குதல்களை கொடுக்கும் வகையில் முஸ்லிம் தரப்பு அரச படைகளுன் சேர்ந்து செயபட்டமை தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியிலான புவியல் சார்ந்த அரசியல் பிரச்சனைளையும், விரிசலையும் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

வடக்கு-கிழக்கு இணைப்பு தொடர்பாக தமிழ் தலைமைகள் முன்வைக்கும் கோரிக்கைகள், முஸ்லிம்களின் தனித்துவமான அரசியல் மற்றும் நிர்வாக இருப்பிற்கு ஆபத்தாக முடியுமோ என்ற சந்தேகம் முஸ்லிம் சமூகத்தில் நிலவுகிறது.

தமிழ் பேசும் மக்களாக இருந்தாலும், மத அடிப்படையிலும், 80க்கு பிந்திய கலாச்சார ரீதியிலும் இரு சமூகங்களும் தங்களை தனித்துவமாக அடையாளப்படுத்துவதும், நிகழ்கால தீவிர மதவாதப் போக்குகளும் இடைவெளியை இன்னும் அதிகப்படுதுகின்றன.

அத்தோடு, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்கள், வெறுப்புப் பேச்சுக்கள் (Hate Speech) மற்றும் ஒரு தலைப்பட்சமான செய்திகள் இரு சமூகங்களிடையே உள்ள சிறு விரிசல்களையும் பெரிதாக்குகிறது. இவற்றை எல்லாம் பின்புலத்தில் இருந்து செயற்படுவது அரசியல் அதிகார கதிரைகளுக்காக போராடுபவர்களே என்ற உண்மையை கிழக்கு மக்களுக்கு புரிய வைக்க வேண்டிய தேவையும், கடப்பாடும் நிகழ்கால இளைஞர் சமூகத்தின் கைககளிலே உள்ளது.

வட-கிழக்கு இணைப்பு இடம்பெறும் பட்சத்தில், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை ஒன்றிணைத்து, நிலத்தொடர்பற்ற தனி முஸ்லிம் நிர்வாக அலகை உருவாக்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது. இதனை நிர்வாக ரீதியான புதிய கரையோர மாவட்டத்தை (District Secretariat) பெற்றுத் தருவேன் என்ற உணர்ச்சியூட்டும் பிரச்சாரங்கள் அவ்வப்போது தனித்துவக் கட்சிகளால் தேர்தல் காலங்களில் முடுக்கி விடப்படும்.

மேலும், இதனை விரிவாக பார்க்கின்ற பொழுது கிழக்கு மாகாணம் தனியானதொரு நிர்வாக அலகாகவே நீடிக்க வேண்டும். மக்களின் விருப்பமின்றி வடக்குடன் கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்பதில் கிழக்கு முஸ்லிம் அமைப்புகள் உறுதியாக உள்ளன. இதற்கு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் சுமார் 37% வாழ்கின்றனர். ஆனால், வடக்கும் கிழக்கும் நிரந்தரமாக இணைக்கப்பட்டால் ஒட்டுமொத்தப் பிராந்தியத்திலும் முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் 17% ஆகக் குறைந்துவிடும் என்ற அச்சம் நிலவுகிறது.

முஸ்லிம்களுக்கான தனியான கல்வி வலயம், தனியான பிரதேச சபை, தனியான பிரதேச செயலகம் போன்ற கோசங்களும், கோறிக்கைகளும் எதனால் தோற்றம் பெற்றுள்ளன? அதற்கு பின்னால் எவ்வாறான அரசியல் சதிகள் விளையாடுகின்றன? தனித்துவ கட்சிகளின் தோற்றங்களுக்கு பின்னாலிருந்து யார் செயற்பட்டாளர்கள்.? என்பதில் பூரணமாக தெளிவடைவதிலும், எதில்கால சந்ததியினரின் நிம்மதியான வாழ்வுக்காகவும் இரண்டு சமூகங்களும் நல்லிணக்கதுடன் செயலாற்ற வேண்டும்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால்! கிழக்கில் தமிழ்-முஸ்லிம் அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்துதல் மிகவும் அவசியமான ஒன்றாகும். குறுகிய கட்சி அரசியலைக் கடந்து 'மொழிவழி உறவு' மற்றும் 'பிராந்திய நலன்' ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கூட்டுத் தலைமை உருவாக்கப்பட வேண்டும். இதற்கு பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும் செயற் திட்டங்கள் மிக அவசியமாகும்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான அனுபவங்களை மறந்து, சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மாவட்ட மற்றும் பிரதேச சபைகளில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் நடைமுறைகளை மேலும் பலப்படுத்தி, அடிமட்ட மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சிகளில் இரு சமூகங்களும் வெற்றியடைய வேண்டும்

தென்னிலங்கை மைய தேசிய கட்சிகள் தமது குறுகிய அரசியல் தேவைகளுக்காகவும், வாக்கு வங்கிகளை உறுதிப்படுத்தவும் இரு சமூகங்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி ஆதாயம் தேடுவதே தலைநகர் அரசியலில் இடம்பெறும் ஒரங்க நாடகமாகும். இவ்விடயத்தில் இரு சமூகங்களிலும் உள்ள அரசியல் தலைமைகள் காலத்துக் காலம் தாங்கள் பிரதி நிதித்துவப்படுத்தும் சமூகங்கங்களை மறந்து செயற்படுபவர்களாகவே உள்ளார்கள். சமூகம் எப்படிப்போனாலும் அவர்களுக்கு கவலையில்லை. அனால், அவர்களுடைய நோக்கமெல்லாம் அரசியல் அதிகாரம் உடைய கதிரையை கைப்பற்றுவதுதான்.

இவ்விரு சமூகங்களும் தங்களின் நீண்டகால நலன்களைக் கருத்திற்கொண்டு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் விட்டுக்கொடுப்புகளுடன் செயற்படுவதன் மூலமே இந்தத் தடைகளைத் தகர்த்தெறிய முடியும் என்ற புதிய அரசியல் கலாச்சரத்தினை கிழக்கில் ஏற்படுத்துவதே தேசிய மக்கள் சக்தியின் பிரதான செயற்பாடாகவும், நோக்கமாகவும் உள்ளது. அதற்காக கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களை ஒன்றிணைத்து, பரஸ்பர நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான செயலமர்வுகள் மற்றும் சிவில் சமூகக் கலந்துரையாடல்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முற்னெடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை போன்ற மாவட்டங்களில் இரு சமூகங்களையும் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டு NPP தனது பிராந்தியக் கட்டமைப்புக்களை உருவாக்கியுள்ளது. நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினைகளை இனவாதக் கண்ணோட்டம் இன்றித் தீர்த்து வைப்பதற்கான முயற்ச்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சமமான பொருளாதார அபிவிருத்தியை உறுதி செய்வதோடு, இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க முன்னெடுப்புகளில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. கடந்த ஆட்சியாளர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையான பகையுணர்வை முடிவுக்குக் கொண்டு வருவதே தேசிய மக்கள் சக்திக்கு கிழக்கு பிராந்தியத்தில் இருக்கும் பெரும் சவாலாகவும் உள்ளது.

தமிழ் - முஸ்லிம் உறவின் எதிர்காலம் சிறப்பானதாகவும், பிராந்திய ஒருமைப்பாட்டின் கீழ் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து ஒரே இலங்கையர் எனும் வட்டத்திற்குள் எல்லோரும் சம அந்தஸ்த்துடன் வாழ வேண்டும். அதற்கு வேறுபாடுகளை மறந்து ஒட்டுமொத்த கிழக்கு மக்களும் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது கட்டாயமானது.

அஹமட் இர்ஷாட்.
இன்றைய தினகரன்,
02-06-2026

ஆயிரம் கிராமங்களை நோக்கி... வறுமையற்ற புதிய இலங்கைக்கான  தொடக்கத்தின் ஒர் அங்கம் ஓட்டமாவடியில்.—————————————————————வளமா...
02/06/2026

ஆயிரம் கிராமங்களை நோக்கி...
வறுமையற்ற புதிய இலங்கைக்கான தொடக்கத்தின் ஒர் அங்கம் ஓட்டமாவடியில்.
—————————————————————

வளமான நாடு – அழகான வாழ்க்கை என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் பிரஜாசக்தியின் “ஆயிரம் கிராமங்கள் – ஆயிரம் கருத்திட்டங்கள்” திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி 01 வடக்கு B/2 ஆழ் கடல் மீன்பிடி படைக்குககளை பைபர் மூலமாக திருத்தும் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு இன்று 02-06-2026 செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி வடக்கு B/2 பிரஜாசக்தி தவிசாளர் அஹமட் இர்ஷாட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக பிரதேச செயலாளர் அபூபக்கர் தாஹிர் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சேகு அலி றியாஸ் பிரதேச சபை உறுப்பினர் லத்தீப் ஹாபிஸ், ஓட்டமாவடிக்கான கிளீன் சிறீலங்கா அமைப்பாளர் புக்கான் மெளலவி, தேசிய மக்கள் சக்தியின் பிரதேச ஒருங்கிணைப்பாளர் சேகு இஸ்மாயில் பாரூக்,பிரஜா சக்தி தவிசாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், படகு திருத்துனர் சங்க பயனாளிகள், பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

இத்திட்டத்தின் 700 க்கும் அதிகமான படகு உரிமையாளர்கள் பழுந்தடையும் படகுகளை மிக விரைவாக திருத்திக்கொள்வதற்கான வாய்ப்புகக்கள் ஏற்படுவதோடு, படகுதிருத்துனர் சங்கத்தில் இருக்கும் ஐம்பதுக்கும் அதிகமான உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்பட இருப்பதூம் முக்கிய விடயமாகும்.

ஒலுவில் துறைமுக விவகாரம்.இழந்த முகவரியைத் தேடும் 'முதலைக் கண்ணீர்' அரசியல்! ඔලුවිල් වරායේ ප්‍රශ්නය.නැතිවූ ලිපිනය සොයා 'ක...
01/06/2026

ஒலுவில் துறைமுக விவகாரம்.
இழந்த முகவரியைத் தேடும் 'முதலைக் கண்ணீர்' அரசியல்! ඔලුවිල් වරායේ ප්‍රශ්නය.
නැතිවූ ලිපිනය සොයා 'කිඹුල් කඳුළු' දේශපාලනය!

අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමා දේශපාලන හිතාමතා චෝදනාවක් කළා නම්! වසර ගණනාවක් අතහැර දමා ඇති අෂ්රෆ්ගේ සංස්කෘතික ශාලාවට රුපියල් මිලියන තුන්සීයක් වෙන්කර සංවර්ධන කටයුතු ඔහු පෞද්ගලිකව ගොස් ආරම්භ කළ යුත්තේ ඇයි?

අද දිනකරන් පත්‍රයේ පළවූ මගේ ලිපිය. 01-06-2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசியல் ரீதியாக வேண்டுமென்றே குற்றம் சுமர்த்தியிருப்பாரானால்! நிந்தவூரில் பல வருடங்களாகக் கைவிடப்பட்டுக் கிடந்த, அஷ்ரப்பின் பெயரிலான கலாச்சார மண்டபத்திற்கு முன்னூறு மில்லியன் ரூபாயை ஒதுக்கி, அதன் அபிவிருத்தி பணிகளை அவரே ஏன் நேரில் சென்று ஆரம்பித்து வைக்க வேண்டும்?
+++++++++++++++++++++++++

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை தலைமை ஏற்று நடத்திய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் “அப்பகுதியைச் சேர்ந்த ஒரு அமைச்சரால் விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் இல்லாமல் ஒலுவில் துறைமுகம் கொண்டு வரப்பட்டது. அதன் விளைவாக கடலரிப்பு அதிகரித்துள்ளது” என்ற கருத்தினை தெறிவித்திருந்தார்.

குறித்த துறைமுகம் மற்றும் அண்டிய பிரதேசங்களில் ஏற்படும் கடலறிப்பு விவகாரத்துடன் தொடர்புபடுத்தி ஜனாதிபதி தெரிவித்த கருத்து மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரப்பை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. இது முஸ்லிம் சமூகத்தினரிடையே பெரும் கவலையையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, மக்கள் மத்தியில் அரசியல் முகவரி இழந்துள்ள சிலர் முகநூல்களில முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியுள்ளதை அவதானிக்கவும் முடிகின்றது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒலுவில் துறைமுகம் (Oluvil Port) அமைக்கப்பட்டதன் பின்னணியில் மிக முக்கியமான அரசியல் மற்றும் பிராந்திய அதிகார சமநிலை நோக்கங்கள் காணப்பட்டன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். முன்னாள் துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) ஸ்தாபகருமான மர்ஹும் எம். எச். எம். அஷ்ரப்பின் அரசியல் பார்வையின் கீழ் இத்திட்டம் முதன்முதலாக கருக்கொண்டது

ஒலுவில் துறைமுகம் என்பது முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் கால மேடைகளில் முழங்கப்படும் கிழக்கு முஸ்லிம்களுக்காக தனியான கரையோர மாவட்டத்தை போன்றது. முஸ்லிம் சமூகத்திற்காக முஸ்லிம் காங்கிரஸ் ஏற்படுத்திய மிகப்பெரும் அபிவிருத்திகளில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தையும், ஒலுவில் துறை முகத்தினையும் குறிப்பிடுகின்றார்கள். அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்காக SLMC கட்சியானது தான் சாத்தித்தைவைகளில் ஒலுவில் துறைமுகத்தை அன்று தொடக்கம் இன்று வரைக்கும் தேர்தல் மேடைகளில் மார்தட்டிக்கொள்வது வழக்கமானதாக இருந்து வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பகுதியில் அமைந்துள்ள இத்துறைமுகம், மறைந்த அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் முன்மொழிவின்படி, டென்மார்க் அரசின் 46.1 மில்லியன் யூரோ வட்டியில்லாக் கடனுதவியுடன் 2008 இல் நிர்மாணப் பணிகள் தொடங்கப்பட்டு, 2013 செப்டம்பரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அதிகார பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இது வர்த்தக மற்றும் மீன்பிடித் துறைமுகம் என இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. திறக்கப்பட்ட காலம் முதலே வர்த்தகத் துறைமுகப் பகுதி செயற்பாடின்றி காணப்படுவதால், இங்கு இதுவரை எந்தவொரு வர்த்தகக் கப்பலும் வருகை தரவில்லை என்பது முக்கிய விடயமாகும்.

துறைமுகம் பல பிரதானமான மற்றும் தொடர்ச்சியான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. இதனால் இது முறையாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. துறைமுக நுழைவாயிலில் அளவுக்கு அதிகமாக மணல் தேங்குவதால், மீன்பிடிப் படகுகள் மற்றும் கப்பல்கள் துறைமுகத்திற்குள் நுழைய முடியாத நிலை உள்ளது. துறைமுகம் கட்டப்பட்ட விதம் காரணமாக அப்பகுதியில் கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கடலில் அழிந்துள்ளன.

துறைமுகத்தின் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட வணிக இலக்குகளை அடைய முடியாததால் இது பாரிய நிதி இழப்பை சந்தித்துள்ளது. படகுகள் செல்ல முடியாத நிலை மற்றும் கடல் சூழல் மாற்றம் காரணமாக அப்பகுதி மீனவர்களின் நாளாந்த மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

புவியியல் மற்றும் கடல் நீரோட்டங்கள் தொடர்பான முறையான விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப அணுகுமுறைகள் இன்றி துறைமுகம் வடிவமைக்கப்பட்டதே இதற்கு அடிப்படை காரணம் என துறைசார் நிபுணர்கள் கருதுகின்றனர். துறைமுக திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு முன்னர் மிக முக்கியமாக இருக்க வேண்டிய பூரண சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுகள் மற்றும் வணிகத் திட்டங்கள் (Business Plans) போதியளவில் மேற்கொள்ளப்படவில்லை என துறைமுக அமைச்சகம் மற்றும் தணிக்கை அறிக்கை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அத்தோடு, துறைமுகம் கொண்டு வரப்படுவதற்கு காரணகர்த்தாவாக பார்க்கப்படும் மறைந்த அமைச்சர் ஒரு பலமிக்க அரசியல் தலைவராக இருந்ததால், முறையான விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் இன்றி இத்திட்டம் கொண்டுவரப்பட்டது என்ற விமர்சனம் ஒரு தரப்பினரால் முன்வைக்கப்படுகிறது.

எனினும், ஆரம்பகட்ட சாத்தியவள ஆய்வுகளின் போது (Lanka Hydraulics Institute போன்ற நிறுவனங்களால் செய்யப்பட்டவை) கடலரிப்பு மற்றும் மணல் தேக்கம் போன்ற புவியியல் தாக்கங்கள் முழுமையாகக் கணிக்கப்படவில்லை அல்லது கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதே தொழில்நுட்ப ரீதியாக மேலோங்கி இருக்கும் விவாதங்களாகும்.

இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியிலே ஒலுவில் துறைமுகத்தை எவ்வாறு பயனுள்ள முறையில் பயன்படுத்தலாம் என்பது குறித்து, நாரா (NARA) நிறுவனத்தின் உதவியுடன் புதிய சாத்திய வள ஆய்வினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒலுவில் துறைமுக அபிவிருத்தி சம்பந்தமான வேண்டுகோள்களை முன் வைத்த பொழுதே, குறித்த துறைமுகம் சம்பந்தமாக பேசிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, துறைமுக அமைப்பால் கரையோரம் எதிர்கொள்ளும் பாதிப்புகளுக்கு உடனடி மற்றும் அவசர அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

கற்களை அடுக்கி வைப்பது நீண்டகாலத் தீர்வாகாது என்றும், துறைமுகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உட்கட்டமைப்புகளை உள்ளடக்கிய நிலையான திட்டத்தை உருவாக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

மறைந்த அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், அவரது காலத்து அபிவிருத்தித் திட்டத்தைச் சாடி ஜனாதிபதி பேசியதாக சில முஸ்லிம் அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றார்கள். ஜனாதிபதி தெளிவுபடுத்திய விடயமானது மக்கள் மத்தியில் தற்சமயம் பெரும் அதிருப்தியை ஏற்படுதியுள்ளது எனக் காண்பித்து, அதனை விவாதப் பொருளாகவும் மாற்றியுள்ளனர்.

ஜனாதிபதியின் சமீபத்திய மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கான விஜயமும், அங்கு அவருக்கு கிடைத்த அமோக மக்கள் வரவேற்பும்தான் சொந்தப் பிரதேசங்களிலே மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள இவர்களைப் போன்றவர்கள் இவ்வாறான அரசியல் நாடகங்களை அரங்கேற்றுவதற்குக் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மறைந்த எம்.எச்.எம்.அஸ்ரப் மீது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசியல் ரீதியாக வேண்டுமென்றே குற்றம் சுமத்தியிருப்பாரானால்; நிந்தவூரில் பல வருடங்களாக கைவிடப்பட்டிருந்த மறைந்த அஸ்ரப்பின் பெயரிலுள்ள கலாச்சார மண்டபத்திற்கு 300 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்து அதன் அபிவிருத்திப் பணிகளையும் அவரே ஏன் ஆரம்பித்து வைக்க வேண்டும்.?

அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஒருவருடைய காலத்தில்தான் விஞ்ஞான ஆய்வுகள் இல்லாமல் ஒலுவில் துறைமுகம் கொண்டு வரப்பட்டது என ஜனாதிபதி கூறியதில் என்ன பிழை இருக்கின்றது.?

அஸ்ரப்பினுடைய காலத்தில் துறைமுகத்திற்கான முன்மொழிவுகள் இடம் பெற்றமையும், பின் நாட்களில் விஞ்ஞான ஆய்வுகள் சரிவர மேற்கொள்ளப்படாமையும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஸ்ரபின் மரணத்திற்கு பின்னர் துண்டு துண்டாக உடைந்த அக்கட்சியின் உறுப்பினர்கள் பிரதேசவாத அரசியலை கையில் எடுத்ததோடு, பிரித்தாளும் தனிக்கொள்கை அரசியலுக்குள்ளும் தள்ளப்பட்டார்கள். அதன் விளைவே, 2008ம் ஆண்டு எவ்வித விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் தொழிலுட்ப ரீதியிலான அறிக்கைககளும் இன்றி ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச மூலமாக துறைமுகத்தின் கட்டடப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலே, பல சந்தர்ப்பங்களில் தலைவர் அஷ்ரப் அவர்களைப் பற்றி உயர்ந்த மதிப்புடன் பேசியதையும், குறிப்பாக பாராளுமன்ற தேர்தல் முறையில் 12 வீத வெட்டுப்புள்ளியை ஐந்து வீதமாக குறைத்ததில் அஷ்ரப் அவர்களின் பங்களிப்பை பாராட்டிய வரலாறுகளையும் இன்று ஜனாதிபதி துறைமுகம் சம்பந்தமாக வழங்கிய விளக்கத்தில் பிழை காண்பவர்கள் மறந்து விட்டார்கள்.

அத்துடன், அம்பாறை மட்டுமல்லாமல் கிழக்கிற்கு வருகை தருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதிபதி அநுர குமார திசாநாயக்க தலைவர் அஷ்ரப் தொடர்பான பல தகவல்களை கேட்டறிந்ததோடு, பொதுக்கூட்டங்களில் அவரது அரசியல் தொலைநோக்கு சமூகப்பணிகள் குறித்து பாராட்டி பேசியுள்ள சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன.

ஆகவே , இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசியல் பின்னணி, ஜே.வி.பி.யின் (JVP) வரலாற்றுப் போக்கு, இன நல்லிணக்கப் பார்வை, மற்றும் தற்கால அரசியல் யதார்த்தங்களைப் பற்றிய தெளிவில்லாத சிலர் மீண்டும் குட்டையை கிளறிவிட்டு இழந்த அரசியல் முகவரியினை பெற்றுக் கொள்ளலாம் என நினைக்கின்றார்கள். அது அவர்களுக்கு பகற் கனவாகவே அமையும்.

அஹமட் இர்ஷாட்.
இன்றைய தினகரன்,
01-06-2026

Address

Ex Chairman Road
Oddamavadi
0036

Alerts

Be the first to know and let us send you an email when Osisnews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share