Osisnews

Osisnews உண்மைகள் தோற்பதில்லை. அவைகள் நிரூபிக்கப்படுகின்றன. Facts never fail. They are proven.

ஓட்டமாவடி B/2யில் தாய் சேய் பராமரிப்பு நிலையம்.கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட ஓட்டமாவடி ...
05/09/2026

ஓட்டமாவடி B/2யில் தாய் சேய் பராமரிப்பு நிலையம்.

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட ஓட்டமாவடி வடக்கு - B/2 கிராம சேவகர் பிரிவில் நீண்டகாலத் தேவையாக இருந்து வரும் தாய் சேய் பராமரிப்பு நிலையத்தினை தற்காலிகமாக ஆரம்பிப்பதென பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் நேற்று 04.09.2026ம் திகதி இடம்பெற்ற ஓட்டமாவடி பிரதேச செயலக அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி வடக்கு B/2 பிரிவிற்கான பிரஜாசக்தி தவிசாளர் அஹமட் இர்ஷாடினால் முன்மொழியப்பட்ட குறித்த பிரேரணையின் தேவையினை மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதாகர் ஏ.எல்.நெளபர் மேலும் சுட்டிக்காட்டியதைத்தொடர்ந்து ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எம்.ஹலால்தீன் மற்றும் பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் ஆகியோர்களின் விருப்பத்துக்கமைவாக பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்தி ஒழுங்கமைப்புக்குழுத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபுவினால் மிக விரைவில் தற்காலிகமாக நிலையத்தினை ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பபட்டது.

குறித்த ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவில் அதிக மக்கள் தொகையினைக்கொண்ட ஓட்டமாவடி வடக்கு B/2 கிராம சேவகர் பிரிவானது குறித்த நிலையத்தினை ஆரம்பிபப்பதற்கான நிலையான கட்டடமொன்று இன்மையால் நீண்டகாலமாக தடைப்பட்டு வந்த நிலையிலேயே ஓட்டமாவடி பிரதேச செயலக பழைய கட்டடத்தொகுதியில் பிரதேச செயலாளர் சிகிச்சை நிலையத்தினை தற்காலிகமாக ஆரம்பிப்பபதற்கான விருப்பத்தினைத் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் , ஓட்டமாவடி வடக்கு B/2 பிரதேச கர்ப்பிணி தாய்மார்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் நிலையத்தை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப வேலைகள் அனைத்தும் சில நாட்களுக்குள் இடம்பெறுமென மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நெளபர் தெரிவித்தார்.

அத்தோடு, குறித்த தாய் சேய் நிலையத்திற்கான நிலையான கட்டடமொன்றினை அமைப்பதற்கான பொருத்தமான இடமொன்றினை பிரதேச செயலகம் மிக விரைவில் அடையாளப்படுத்தி தரும் பட்சத்தில் கட்டடத்துக்கான அனுமதியை மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் கலந்தாலோசித்து பெற்றுத்தருவாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மேலும் தெரிவித்தார்.

(සිංහල පරිවර්තනය සමග) இன-மத அடையாளங்களுக்கு அப்பால்: NPP அரசின் சமத்துவ கொள்கையும்,முஸ்லிம்களின் எதிர்காலமும். இலங்கை மு...
04/09/2026

(සිංහල පරිවර්තනය සමග) இன-மத அடையாளங்களுக்கு அப்பால்: NPP அரசின் சமத்துவ கொள்கையும்,முஸ்லிம்களின் எதிர்காலமும்.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பிழைத்துப்போன இடமும், தேசிய நீரோட்டத்தில் தகுதி அடிப்படையிலான அணுகு முறையும்.

முஸ்லிம் தனித்துவ கட்சிகள் முன்னெடுத்த அடையாள அரசியலைக் கைவிட்டு, பொதுவான தேசிய அரசியல் நீரோட்டத்தினூடாகவே முஸ்லிம்களின் உரிமைகளுக்கும், கலாச்சாரப் பாதுகாப்பிற்கும் தீர்வு காண முடியும் என்ற யதார்த்தத்தை நோக்கி முஸ்லிம் சமூகம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

தகுதி மற்றும் திறமையின் (Merit-based) அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படுவதாகவும், இன-மத அடிப்படையில் பதவிகளைப் பிரிப்பது பிளவுகளை உருவாக்கும் என்பதே உண்மை.

தற்போதைய அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் போதியளவில் இல்லை என்ற விமர்சனங்களை மக்களால் நிராகரிக்கப்பட்ட பாரம்பரிய அரசியல் தலைவர்கள் எழுப்பி வருகின்றனர்.
++++++++++++++++++++++

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் என்பது, கொள்கைசார் அரசியல் என்ற நிலையிலிருந்து மாறி, சந்தர்ப்பவாத மற்றும் அமைச்சுப் பதவிசார் அரசியலாக சுருங்கிய இடத்திலேயே பிழைத்துப்போனது என்ற பொதுவான கருத்து அரசியல் அவதானிகளிடம் இருக்கின்றது.

மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் மரணத்திற்குப் பிறகு, இலங்கை முஸ்லிம் அரசியலில் ஏற்பட்ட பாரிய தலைமைத்துவ வெற்றிடமும், அதற்குப் பின்னர் வந்த தலைமைகளின் சுயநலப் போக்குகளுமே இந்த வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணங்களில் ஒன்று என்பது அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்ற விடயமாகவும் உள்ளது.

முன்னர் முஸ்லிம் கட்சிகள் சமூகத்தின் உரிமைகளைப் பெற பேரம்பேசும் சக்தியாக உருவெடுத்தன. ஆனால் காலப்போக்கில், அது வெறும் அமைச்சுப் பதவிகள், சலுகைகள் மற்றும் தனிப்பட்ட நன்மைகளைப் பெறுவதற்கான பேரம் பேசலாக மாறியது. அரசாங்கங்கள் மாறும் போதெல்லாம் தங்களின் சுயலாபத்திற்காக ஆளுங்கட்சியுடன் இணைந்து கொள்ளும் போக்கு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது.

முஸ்லிம் அரசியல் தலைமைகள் பிராந்திய வாதத்திலும், மத அடையாள அரசியலிலும் அதிக கவனம் செலுத்தியதால், அவர்கள் பேரினவாத சக்திகளின் விமர்சனங்களுக்கு உள்ளாகினர். ஏனைய சிறுபான்மை சமூகங்களான தமிழ் மக்களுடனோ அல்லது பெரும்பான்மை சிங்கள முற்போக்கு சக்திகளுடனோ இணைந்து பயணிக்கத் தவறியமை முஸ்லிம்களை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தியது என்ற பார்வை அரசியலை உண்ணிப்பாக அவதானிப்பவர்களிடம் உள்ளது.

இக்கருத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் படியாக, 2014 அளுத்கம வன்முறை, 2018 திகன கலவரம், மற்றும் குறிப்பாக 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் போன்ற நெருக்கடி காலங்களில், முஸ்லிம் அரசியல்வாதிகளால் சமூகத்திற்கு முறையான பாதுகாப்பையோ அல்லது தற்காப்பையோ வழங்க முடியவில்லை. கொவிட்-19 பேரிடர் காலத்தில் கட்டாய ஜனாஸா எரிப்பு போன்ற உணர்வு பூர்வமான விவகாரங்களில் கூட முஸ்லிம் அரசியல் தலைமைகளின் பலவீனமான நிலைப்பாடு அம்பலமானது.

மேலும், முஸ்லிம் தலைவர்கள் தேர்தலை மட்டுமே இலக்காகக் கொண்டு, உணர்ச்சிப்பூர்வமான கோஷங்களை எழுப்பி வாக்குகளைப் பெற்றனரே தவிர, சமூகத்தின் நீண்ட காலப் பிரச்சினைகளான காணி விவகாரம், வேலைவாய்ப்பு, கலாசாரப் பாதுகாப்பு போன்றவற்றிற்கு முறையான வியூகங்களை வகுக்கவில்லை.

இலங்கை முஸ்லிம்களின் ஆரம்ப கால அரசியல் வரலாறு தேசிய அளவில் பெறும்மதிப்பை பெற்றிருந்தது அகில இலங்கை முஸ்லிம் லீக், இஸ்லாமிய ஐக்கிய முன்னணி போன்ற இயக்கங்களின் தலைவர்கள் ஏனைய இனங்களுடன் இன நல்லுரவை பேணிசெயபட்டனர். முஸ்லிம் சமூகத்தின் சமூகத்தின் இருப்பு, உரிமைகள், கல்வி மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் வலுவான பேசும் சக்தியாக (Bargaining Power) அவர்கள் தமது அரசியலை முன்னெடுத்தனர்.

பிற்காலத்தில் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் தலைமையில் உருவான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதே
நோக்கத்தை முதன்மைப்படுத்தியதாக இருந்தாலும், அவருடைய மறைவுக்கு பின்னர் சமூக நலன்களை விட நாடாளுமன்றப் பதவிகள், அமைச்சுப் பொறுப்புகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பதில் சில தலைவர்கள் முட்டி மோதிக் கொண்டதுடன், பதவிகள் அவர்களின் முக்கிய இலக்காகவும் மாறியது.

கொள்கை ரீதியான உடன்பாடுகளின்றி, ஆட்சியில் இருக்கும் எந்தவொரு அரசாங்கத்துடனும் தங்களை இணைத்துக் கொள்ளும் போக்கு அதிகரித்தது. இது சமூகத்தின் பேரம் பேசும் சக்தியை பலவீனப்படுத்தியது. இங்கேதான், இலங்கை முஸ்லிம்களின் அரசியல் என்பது "சமூக நலனுக்கான பேரம் பேசும் சக்தி" என்ற நிலையிலிருந்து மாறி, "தலைவர்களின் சுய பாதுகாப்புக்கான அரண்" என்ற இடத்திற்குத் தள்ளப்பட்டதுடன், அது முற்றாகப் தடம்மாறிப் போனது என்பது முஸ்லிம் புத்திஜீவிகளின் பார்வையாக உள்ளது.

கடந்த கால அரசியல் ஏமாற்றங்களால், குறிப்பாக 2024 மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில், முஸ்லிம் சமூகம் (குறிப்பாக இளைஞர்கள்) பாரம்பரிய முஸ்லிம் கட்சிகளை நிராகரிக்கத் தொடங்கியுள்ளனர். ஒற்றை மத அடையாள அரசியல் தமக்கு உதவாது என்பதை உணர்ந்து, தேசிய அரசியல் மாற்றங்களிலும் மாற்று அரசியல் கொள்கைகளிலும் தங்களை இணைத்துக் கொள்ளும் புதியதொரு அரசியல் போக்கை நோக்கிய சமூகமாக நகரத் தொடங்கியுள்ளார்கள்.

பாரம்பரிய முஸ்லிம் கட்சிகள் மற்றும் "முகநூல்/அரசியல் வியாபாரிகளாக" மாறும் தலைவர்கள் மீது விரக்தியடைந்த மக்கள், தற்காலத்தில் புதிய எழுச்சியுடன் தூய அரசியல் கலாச்சாரத்தை நோக்கி நகரும் தேசிய மக்கள் சக்தியுடன் தேசிய அரசியலில் இணைந்து பயனிக்கின்றமையானது, முஸ்லிம் கட்சிகளின் தனித்துவ அரசியல் தளத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.

அந்த வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், இலங்கையிலுள்ள முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தை நாட்டின் சமத்துவமுள்ள, பிரிக்க முடியாத ஒரு அங்கமாகப் பார்க்கிறது. இன, மத அடிப்படையிலான பிரிவினைகளுக்குப் பதிலாக, அனைத்து மக்களையும் "இலங்கையர்" என்ற ஒரே அடையாளத்தின் கீழ் ஒன்றிணைப்பதே தங்களது முதன்மைக் கொள்கை என அவர்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத் தேவைகளுக்காகவே இனவாதத்தையும், மதவாதத்தையும் பயன்படுத்தினர் என்ற கடுமையாக விமர்ச னங்களுக்கு மத்தியில், நாட்டில் இனி எந்தவொரு இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

சொத்து,செல்வம், அதிகாரம், மதம் அல்லது கலாச்சாரத்தின் அடிப்படையில் சட்டம் வேறுபட்டு நிலை நாட்டப்பட்ட காலம் மாறி, நாட்டில் உள்ள அனைத்துப் பிரஜைகளும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவார்கள் என்பதை NPP அரசாங்கம் உறுதி செய்யும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கட்டாயமாக எரிக்கப்பட்ட பொழுது வாய் மூடி மெளனிகளாக இருந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு மத்தியில் அதற்கு எதிராகவும், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் (MMDA) சீர்திருத்தத் தாமதங்களுக்கு எதிராகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முஸ்லிம் சமூகத்தின் சார்பாக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் கொடுத்திருந்தார்.

அத்தோடு அண்மைய நீர் கொழும்பு மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்திகளில் கூட, ஜனாதிபதி முஹம்மது நபியின் தியாகங்கள் மற்றும் போதனைகளை நினைவு கூர்ந்து, சமூகத்தில் வெறுப்புணர்வை நீக்கி, பன்முகத்தன்மையை அங்கீகரித்து ஒன்றிணைந்து வாழ முஸ்லிம் மக்களுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

இருந்தும், தேசிய மக்கள் சக்தி சமத்துவக் கொள்கையைப் பேசினாலும், நடைமுறையில் தற்போதைய அமைச்சரவையில் அல்லது முக்கிய அரச உயர் மட்டப் பதவிகளில் முஸ்லிம்களுக்கான நேரடிப் பிரதிநிதித்துவம் போதியளவில் இல்லை என்ற விமர்சனம் நிலவி வருகின்றது. மக்களால் நிராகரிக்கப்பட்ட முஸ்லிம் அரசியல் தலைவர்களும், எதிர்க்கட்சியினருமே இவ்விவகாரத்தை ஒருபிரதான பிரச்சனையாக முன்வைத்து வருகின்றனர்.

அண்மையில் நியமிக்கப்பட்ட தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் (National Delimitation Commission) முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் எவரும் உள்வாங்கப்படவில்லை என்பதும் இவர்களின் NPP அரசுக்கு எதிரான வாதமாகவும் மாறியுள்ளது.

ஆனால், தகுதி மற்றும் திறமையின் அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்கப்படுகின்றன என்றும், மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் பதவிகளைப் பிரித்துக் கொடுப்பது தேவையற்ற பிளவுகளை மீண்டும் ஏற்படுத்தும் என்றும், நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னரான கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் NPP அரசாங்கம் இதற்கான பூரண விளக்கத்தை அளித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது முஸ்லிம் சமூகத்தை எவ்விதப் பாகுபாடுமின்றி சமத்துவமாக நடத்தப்பட வேண்டிய பிரஜைகளாகவே பார்க்கிறது. எனினும், கடந்த காலங்களில் முஸ்லிம் தனிக்கட்சிகள் முன்னெடுத்த "மத அடையாள அரசியல் அல்லது பிராந்திய அரசியல்" முறைமையை நிராகரித்து, பொதுவான தேசிய அரசியல் நீரோட்டத்தினூடாகவே முஸ்லிம்களின் மொழி, கலாச்சார மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற அரசின் கொள்கை நடைமுறை உண்மையானது என்பது நிரூபிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அஹமட் இர்ஷாட்.
தினகரன் பத்திரிகைக்காக,
03-04-2026.

වාර්ගික-ආගමික අනන්‍යතාවයෙන් ඔබ්බට: NPP රජයේ සමානාත්මතාවය සහ මුස්ලිම්වරුන්ගේ අනාගතය පිළිබඳ ප්‍රතිපත්තිය.

ශ්‍රී ලංකාව ද මුස්ලිම්වරුන්ගේ දේශපාලනය අවුල් වූ ස්ථානයකි, කුසලතා පදනම් කරගත් ජාතික ප්‍රවාහයට ඇතුළත් වීමේ ක්‍රමය.

මුස්ලිම් පුද්ගලවාදී පක්‍ෂ විසින් ඉදිරිපත් කරන අනන්‍යතා දේශපාලනය අතහැර පොදු ජාතික දේශපාලන ධාරාවක් තුළින් මුස්ලිම් අයිතීන් සහ සංස්කෘතික ආරක්‍ෂාව විසඳාගත හැකිය යන යථාර්ථය වෙත මුස්ලිම් ප්‍රජාව වේගයෙන් ගමන් කරමින් සිටිති.

කුසලතා පදනම මත පත්වීම් සිදුකරන අතර කුල ආගම් වශයෙන් තනතුරු වෙන් කිරීම බෙදීම් ඇති කරන බව සැබෑය.

වත්මන් කැබිනට් මණ්ඩලය තුළ ප්‍රමාණවත් තරම් මුස්ලිම් නියෝජනයක් නොමැති බවට ජනතාව විසින් ප්‍රතික්ෂේප කරන ලද සම්ප්‍රදායික දේශපාලන නායකයින් විවේචන එල්ල කරමින් සිටියි.
+++++++++++++++++

ශ්‍රී ලාංකේය මුස්ලිම්වරුන්ගේ දේශපාලනය ප්‍රතිපත්තිමය දේශපාලනයේ සිට අවස්ථාවාදී සහ ඇමති දේශපාලනයක් දක්වා වෙනස් වී ඇති බවට දේශපාලන නිරීක්ෂකයින් අතර පොදු මතයක් පවතී.

එම්.එච්.එම්. අෂ්රෆ්ගේ මරණයෙන් පසු ශ්‍රී ලාංකේය මුස්ලිම් දේශපාලනයේ ඇති වූ දැවැන්ත නායකත්ව රික්තකය සහ ඉන් පසුව පැමිණි නායකයන්ගේ ආත්මාර්ථකාමී ප්‍රවණතා මෙම කඩා වැටීමට මූලික හේතුවක් ලෙස දේශපාලන විශ්ලේෂකයින් පෙන්වා දී ඇත.

මීට පෙර මුස්ලිම් පක්‍ෂ ප්‍රජාවගේ අයිතීන් සුරක්ෂිත කිරීම සඳහා කේවල් කිරීමේ බලයක් ලෙස මතුවිය. නමුත් කාලයාගේ ඇවෑමෙන් එය ඇමතිකම්, වරප්‍රසාද සහ පුද්ගලික වාසි සඳහා හුදු කේවල් කිරීමක් බවට පත් විය. ආණ්ඩු වෙනස් වන සෑම අවස්ථාවකම තම වාසිය තකා ආණ්ඩු පක්ෂය සමඟ පෙළ ගැසෙන ප්‍රවණතාව මුස්ලිම් ප්‍රජාව තුළ දැඩි අප්‍රසාදයක් ඇති කර තිබේ.

මුස්ලිම් දේශපාලන නායකයන් ප්‍රාදේශීයවාදය සහ ආගමික අනන්‍යතා දේශපාලනය කෙරෙහි වැඩි අවධානයක් යොමු කිරීම නිසා ස්වෝත්තමවාදී බලවේගවල විවේචනයට ලක් විය. දෙමළ වැනි අනෙකුත් සුළුතර ප්‍රජාවන් සමඟ හෝ බහුතර සිංහල ප්‍රගතිශීලී බලවේග සමඟ ගමන් කිරීමට අපොහොසත් වීම මුස්ලිම් ජනතාව දේශපාලනිකව හුදකලා කිරීමට හේතු වූ බව දේශපාලන විචාරකයන්ගේ අදහසයි.

මේ කාරණය තව තවත් තහවුරු කරමින් 2014 අලුත්ගම් ප්‍රචණ්ඩත්වය, 2018 දිගන කෝලාහල, විශේෂයෙන්ම 2019 පාස්කු ඉරිදා බෝම්බ ප්‍රහාර වැනි අර්බුදකාරී කාලවලදී, ප්‍රජාවට නිසි ආරක්ෂාවක් හෝ ආරක්ෂාවක් සැපයීමට මුස්ලිම් දේශපාලනඥයන්ට නොහැකි විය. කොවිඩ්-19 ව්‍යසනයේදී බලහත්කාරයෙන් ජනාසා ගිනි තැබීම වැනි සංවේදී කාරණාවලදී පවා මුස්ලිම් දේශපාලන නායකත්වයේ දුර්වල තත්ත්වය හෙළිදරව් වී ඇත.

එපමණක් නොව මුස්ලිම් නායකයින් ඡන්ද ඉලක්ක කර හැගීම්බර සටන් පාඨ නඟා ඡන්ද ලබා ගත්තා මිස ඉඩම් ප්‍රශ්න, රැකියා, සංස්කෘතික සංරක්ෂණය ආදී ප්‍රජාවගේ දිගුකාලීන ගැටලු සඳහා නිසි උපාය මාර්ග සකස් කළේ නැත.

සමස්ත ශ්‍රී ලංකා මුස්ලිම් ලීගය සහ ඉස්ලාමීය එක්සත් පෙරමුණ වැනි ව්‍යාපාරවල නායකයින් අනෙකුත් ජනවාර්ගික කණ්ඩායම් සමඟ වාර්ගික සහජීවනය පවත්වාගෙන යාම හේතුවෙන් ශ්‍රී ලාංකීය මුස්ලිම්වරුන්ගේ මුල් දේශපාලන ඉතිහාසය ජාතික පිළිගැනීමට ලක් විය. මුස්ලිම් ප්‍රජාවගේ සමාජ පැවැත්ම, අයිතිවාසිකම්, අධ්‍යාපනය සහ ආර්ථික අවශ්‍යතා ආරක්ෂා කර ගැනීම සඳහා කේවල් කිරීමේ බලයක් ලෙස ඔවුහු තම දේශපාලනය ඉදිරියට ගෙන ගියහ.

පසුව එම්.එච්.එම්. අෂ්රෆ්ගේ නායකත්වයෙන් ගොඩනැගුණු ශ්‍රී ලංකා මුස්ලිම් කොංග්‍රසයත් එහෙමයි
පරමාර්ථය ප්‍රමුඛ වුවද, ඔහුගේ මරණයෙන් පසු සමාජ ප්‍රතිලාභවලට වඩා පාර්ලිමේන්තු තනතුරු, ඇමැතිකම් සහ වරප්‍රසාද ලබා ගැනීමේදී ඇතැම් නායකයන් ගැටුණු අතර තනතුරු ඔවුන්ගේ ප්‍රධාන ඉලක්කය බවට පත්විය.

ප්‍රතිපත්තිමය එකඟතාවයකින් තොරව බලයේ සිටින ඕනෑම රජයක් සමඟ සන්ධානගත වීමේ ප්‍රවණතාව වැඩි විය. මෙය සමාජයේ කේවල් කිරීමේ හැකියාව දුර්වල කළේය. මුස්ලිම් බුද්ධිමතුන්ගේ අදහසට අනුව ශ්‍රී ලාංකේය මුස්ලිම් දේශපාලනය "සමාජ සුබසාධනය සඳහා කේවල් කිරීමේ බලයේ" සිට "නායකයින්ගේ ආත්මාරක්ෂාව ආරක්ෂා කිරීමේ පවුරක්" දක්වා මාරු වී සම්පූර්ණයෙන්ම පීලිපැනීමට ලක්ව ඇත්තේ මෙතැනදීය.

පසුගිය දේශපාලන කලකිරීම් නිසා විශේෂයෙන්ම 2024 සහ ඉන් ඔබ්බට මුස්ලිම් ප්‍රජාව (විශේෂයෙන් තරුණයන්) සාම්ප්‍රදායික මුස්ලිම් පක්ෂ ප්‍රතික්ෂේප කිරීමට පටන් ගෙන ඇත. ඒක ආගමික අනන්‍යතා දේශපාලනය තමන්ට අත්වැලක් නොවන බව වටහාගත් ඔවුන් ජාතික දේශපාලන වෙනස්කම් හා විකල්ප දේශපාලන මූලධර්මවලට සම්බන්ධ වන නව දේශපාලන ප්‍රවණතාවක් කරා සමාජයක් ලෙස ගමන් කිරීමට පටන් ගෙන තිබේ.

“ෆේස්බුක්/දේශපාලන වෙළෙන්දෝ” බවට පත්වන සාම්ප්‍රදායික මුස්ලිම් පක්‍ෂ හා නායකයින් ගැන කලකිරී, ජාතික දේශපාලනය හා මුසු වූ ජාතික ජන බලයේ නූතන පුනර්ජීවනය පිරිසිදු දේශපාලන සංස්කෘතියක් කරා ගමන් කිරීම මුස්ලිම් පක්ෂවල සුවිශේෂී දේශපාලන වේදිකාව හෙළිදරව් කර ඇත.

එනිසා, ජනාධිපති අනුරකුමාර් දිසානායක සහ ඔහුගේ ජාතික ජන බලය (NPP) ආණ්ඩුව ශ්‍රී ලංකාවේ මුස්ලිම් සුළුතර ප්‍රජාව දකින්නේ රටේ සමාන හා නොබෙදිය හැකි කොටසක් ලෙසය. වාර්ගික සහ ආගම් භේද වෙනුවට "ශ්‍රී ලාංකික" යන තනි අනන්‍යතාවය යටතේ සියලු ජනතාව ඒකරාශී කිරීමේ මූලික ප්‍රතිපත්තිය ඔවුන් ප්‍රකාශ කර ඇත.

දේශපාලකයින් පසුගිය කාලයේ කුලවාදය සහ කල්ලිවාදය තම බල අවශ්‍යතා සඳහා යොදාගත් බවට දැඩි විවේචන මධ්‍යයේ ඔහු පොරොන්දු වී ඇත්තේ මින් ඉදිරියට රට තුළ කිසිදු කුල හෝ ආගම් ගැටුමකට ඉඩක් නොතබන බවයි.

දේපළ, ධනය, බලය, ආගම හෝ සංස්කෘතිය පදනම් කර ගනිමින් විවිධ නීති පැනවූ යුගය අවසන් වී ඇති බවත්, නීතිය ඉදිරියේ රටේ සියලු පුරවැසියන්ට එක හා සමානව සැලකීමට NPP රජය සහතික වන බව ජනාධිපති අනුරකුමාර දිසානායක මහතා පැවසීය.

එසේම කොවිඩ් 19 ව්‍යසනයේදී මුස්ලිම් ජනාසා අනිවාර්යයෙන් පුළුස්සා දමන විට නිහඬව සිටි මුස්ලිම් දේශපාලන නායකයන්ට එරෙහිව සහ මුස්ලිම් විවාහ හා දික්කසාද පනත (MMDA) ප්‍රතිසංස්කරණය කිරීම ප්‍රමාද කිරීමට එරෙහිව මුස්ලිම් ප්‍රජාව වෙනුවෙන් පාර්ලිමේන්තුවේදී සහ මුස්ලිම් ප්‍රජාවෙන් පිටත මුස්ලිම් ප්‍රජාව වෙනුවෙන් ජනාධිපති අනුරකුමාර් දිසානායක හඬ නැගුවා.

එමෙන්ම පසුගියදා පැවති නේ කලම්බු මිලාදුන් නබි දින සුබපැතුම්වලදී මුහම්මද් නබිතුමාගේ පරිත්‍යාගයන් සහ ඉගැන්වීම් සිහිපත් කර සමාජය තුළ වෛරය තුරන් කර විවිධත්වය හඳුනාගෙන එකට ජීවත් වන ලෙස ජනාධිපතිවරයා ප්‍රසිද්ධියේ මුස්ලිම් ජනතාවගෙන් ඉල්ලා සිටියේය.

කෙසේ වෙතත් සමානාත්මතාවය පිළිබඳ ජාතික ජනබල ප්‍රතිපත්තිය තිබියදීත්, ප්‍රායෝගිකව වත්මන් කැබිනට් මණ්ඩලයේ හෝ රජයේ ප්‍රධාන ඉහළ පෙළේ තනතුරුවල මුස්ලිම් ජනතාව සඳහා ප්‍රමාණවත් සෘජු නියෝජනයක් නොමැති බවට විවේචන පවතී. ජනතාව විසින් ප්‍රතික්ෂේප කරන ලද මුස්ලිම් දේශපාලන නායකයන් සහ විරුද්ධ පක්ෂ මෙම ප්‍රශ්නය ප්‍රධාන ගැටලුවක් ලෙස ඉදිරිපත් කරනවා.

පසුගියදා පත්කළ ජාතික සීමා නිර්ණය කොමිසමට මුස්ලිම් ප්‍රජාව නියෝජනය කරන කිසිඳු සාමාජිකයෙකු ඇතුළත් නොවීම ඔවුන්ගේ NPP ආණ්ඩුවට එරෙහි තර්කයක් බවට පත්ව තිබේ.

නමුත් රට නිදහස ලැබූ දා සිට උගත් පාඩම් පදනම් කරගෙන NPP ආණ්ඩුව මේ සඳහා පුළුල් පැහැදිලි කිරීමක් කර ඇති අතර, පත්වීම් ලබා දෙන්නේ කුසලතාව සහ හැකියාව මත බවත්, ආගම හෝ කුලය මත තනතුරු ලබාදීමෙන් නැවත අනවශ්‍ය බෙදීම් ඇති වන බවත් පවසමින්.

ජනාධිපති අනුරකුමාර් දිසානායක මහතා ප්‍රමුඛ ජාතික ජන බලවේගය රජය මුස්ලිම් ප්‍රජාව දකින්නේ කිසිදු භේදයකින් තොරව සමාන සැලකිලි ලැබිය යුතු පුරවැසියන් ලෙසය. කෙසේ වෙතත් පසුගිය කාලයේ වෙන වෙනම මුස්ලිම් පක්ෂ ගෙන ගිය "ආගමික අනන්‍යතා දේශපාලනය හෝ ප්‍රාදේශීය දේශපාලනය" ප්‍රතික්ෂේප කරමින් මුස්ලිම් ජනතාවගේ භාෂාමය, සංස්කෘතික හා පරිපාලන ගැටලු විසඳීමේ රජයේ ප්‍රතිපත්තිය පොදු ජාතික දේශපාලන ධාරාවකින් විසඳිය හැකි බව ඔප්පු කිරීමට කාලය වැඩි ඈතක නොවේ.

අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් සඟරාව සඳහා,
03-04-2026.





#கந்தசாமிபிரபு




#தேசியமக்கள்சக்தி

(සිංහල පරිවර්තනය සමග)தேசியப் பட்டியல் ஆசனங்களின் உருவாக்கத்தின் பின்னணி என்ன? அந்த நோக்கம் சுயநல அரசியலுக்கு பலியிடப்படு...
01/09/2026

(සිංහල පරිවර්තනය සමග)தேசியப் பட்டியல் ஆசனங்களின் உருவாக்கத்தின் பின்னணி என்ன? அந்த நோக்கம் சுயநல அரசியலுக்கு பலியிடப்படுகின்றதா?
ජාතික ආසන ලැයිස්තුව නිර්මාණය කිරීමේ පසුබිම කුමක්ද? ඒ අරමුණ ආත්මාර්ථකාමී දේශපාලනයට බිල්ලට දෙනවාද?

தேசியப்பட்டியல் என்பது தங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் அல்ல, அது ஒட்டுமொத்த சமூகத்தினதும், தேசத்தினதும் முன்னேற்றத்திற்கான ஒரு பொறுப்பு என்பதை அரசியல் தலைமைகள் உணரும் போதே சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பலமடைய வாய்பேற்படும்.

சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள் தங்களின் சுயநல அரசியல் பிழைப்புக்காகவும், பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தேசியப்பட்டியல் ஆசனங்களை "நரி அப்பம் பிரித்தது போல்" மாதக்கணக்கில் சுழற்சி முறை ஒப்பந்தங்களாகப் பகிர்ந்தளித்து வருகின்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் எழுச்சிக்குப் பிறகு, சமூக ஊடகங்கள் மற்றும் பொது விவாதங்கள் வாயிலாக இளைஞர்கள் இத்தகைய ஏமாற்று அரசியலையும் பசப்பு வார்த்தைகளையும் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.
+++++++++++++++++++

இலங்கையின் தேர்தல் முறையில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் (National List MP) பதவி உருவாக்கப் பட்டதற்கான முக்கிய நோக்கம், தேர்தல் அரசியலில் நேரடியாகப் போட்டியிட விரும்பாத அல்லது மக்கள் செல்வாக்குத் திரட்ட முடியாத அறிஞர்கள், நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்களை நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வருவதாகும்.

சட்டம், பொருளாதாரம், மருத்துவம், பொறியியல், கல்வி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் அறிஞர்கள், பேராசிரியர்கள், தொழில்முறை வல்லுநர்கள் போன்றோரின் ஆலோசனைகளும் அறிவும் நாட்டின் கொள்கை வகுப்பிற்கும் பாராளுமன்ற விவாதங்களுக்கும் அவசியம். அவர்கள் நேரடியாகத் தேர்தலில் நின்று வாக்குக் கேட்கும் அரசியல் பின்னணி இல்லாததால், அவர்களை நேரடியாக பாராளுமன்றத்திற்கு நியமிக்க தேசியப்பட்டியலானது வழிவகுக்கிறது.

மேலும், நாட்டின் சில பகுதிகளில் மக்கள் தொகை அடிப்படையில் நேரடியாகத் தேர்வாவதில் சிரம எதிர்கொள்ளும் சிறுபான்மை சமூகங்கள், பெண்கள் மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு பாரளுமன்றத்தில் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி அரசியலைமைப்பில் ஒதுக்கப்ப.டுள்ள தேசிய பட்டியல் ஆசனங்கள் உதவுகிறது.

இலங்கையில் 1971-ஆம் ஆண்டுக்கு முன்னர் 'செனட் சபை' என்ற மேல்சபை இருந்தது, அதில் இத்தகைய நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர். அச்சபை ஒழிக்கப்பட்ட பின்னர், அந்த வெற்றிடத்தை நிரப்பவே இந்த தேசியப்பட்டியல் முறை கொண்டு வரப்பட்டது.

இலங்கையின் மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற ஆசனங்களில் 29 இடங்கள் தேசியப் பட்டியலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழு தேசிய அளவில் பெறும் மொத்த வாக்குகளின் சதவீதத்திற்கு விகிதாசாரமாக இந்த 29 இடங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. மக்கள் நேரடியாக இந்த உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதில்லை எற்றாலும், கட்சித் தலைமைகளே தங்களுக்குக் கிடைக்கும் இடங்களுக்குத் தகுதியானவர்களை நியமிக்கின்றன.

இருந்தும், இலங்கையில் தற்பொழுது பகிந்தளிக்கப்படும் தேசியப்பட்டியல் ஆசனங்களானது, தற்போதைய அரசியல் சூழலில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்களின் சுயலாபங்களுக்காகவும், பதவிகளைப் பகிர்ந்து கொள்ளும் விடயமாக மாறியுள்ளது. அதற்கான கால எல்லைகளைத் தீர்மானிப்பதில் வழங்கப்படும் வாக்குறுதிகளை பார்க்கின்ற பொழுது "நரி அப்பம் பிரித்த கதை"யை போன்ற சம்வமாகிவிட்டது கட்சித் தலைவர்களின் அரசியல் நாடகம். இன்னும் சொல்வதாயின், குரங்கின் கைககளில் பூமாலை கிடைத்தைப் போன்று நிரந்தமாக ஒருவரின் கைகளில் இல்லாமல் அங்கிமிங்குமாக அலை மோதுவதையும் காணக்கிடைக்கின்றது.

"நரி அப்பம் பிரித்த கதை" என்ற உவமை, சிறுபான்மைக் கட்சிகளுக்குள் நிலவும் அதிகாரப் போட்டியையும், தேசியப்பட்டியல் ஆனத்தை பிரித்து வழங்குகின்ற காலத்தையும் மிகவும் துல்லியமாக காட்டுகின்றது. கட்சிகளின் கொள்கைகளுக்கோ அல்லது சமூகத்தின் நீண்டகால நலன்களுக்கோ முக்கியத்துவம் கொடுப்பதை விட, தங்களது பதவிக்காலத்தை எவ்வாறு நீடிப்பது அல்லது தங்களுக்கு சாதகமாக மாற்றுவது என்பதில் கட்சித் தலைவர்கள் காட்டும் தீவிரமும், அதில் அவர்கள் அடையும் தற்காலிக வெற்றியும் தற்பொழுது அம்பலமாகவும் தொடங்கியுள்ளது.

முக்கியமாக தனித்துவம் பேசுகின்ற சிறுபான்மை முஸ்லிம் கட்சிகளுக்கு கிடைக்கும் ஒரு சில ஆசனங்களை ஒரு வருக்கு ஆறுமாதம், இன்னொருவருக்கு ஒரு வருடம் என்றும், ஏறாவூருக்கு மூன்று மாதம் பொத்துவிலுக்கு, புத்தளத்திற்கும் என பந்தாடப்படுவது அரசியல் தலைமைகளின் சுயநல அரசியல் வெற்றிக்காக பிரதேச சமூகங்களை ஏமாற்றி விற்றுப் பிழைக்கும் அரசியல் சித்து விளையாட்டாகவே புத்திஜீவிகளினால் பார்க்கப்படுகின்றது.

தேர்தலின் காலங்களின் போது கிழக்கு மாகாணத்தில் பிரித்தாளும் அரசியலுக்காக குறிப்பிட்ட பிரதேச மக்களுக்கு ( ஏறாவூர், பொத்துவில், கல்குடா,அட்டாளைச்சேனை, நிந்தவூர், மூதூர், கின்னியா, புத்தளம்) வாக்குறுதிகளை வழங்கி, வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு கருவியாக தேசியப்பட்டியல் எனும் சமாச்சாரம் பயன்படுத்தப்படுகின்றன.

சுழற்சி முறை ஒப்பந்தங்கள் எனும் கண்கட்டி ஏமாற்று அரசியல் வித்தையில் ஒருவருக்கு 6 மாதங்கள் என்றும், இன்னொருவருக்கு ஒரு வருடம் எனப் பிரித்துக் கொடுக்கப்படுவதால், பாராளுமன்றத்திற்குச் செல்லும் பிரதிநிதியால் பாராளூமன்றத்தை வாழ்நாளில் பார்த்ததை தவிர எவ்வித நீண்டகால திட்டங்களையோ அல்லது நிலையான மக்கள் சேவையையோ செய முடியாமல் போனதுதான் வரலாறாக அமையும்.

தனித்துவம் பேசுகின்ற கட்சித் தலைமைகின் தலைமைகளின் சுயநல அரசியல் வெற்றிக்காக தங்களது கட்சிக்குள்ளும், பிரதேசங்களுக்கு இடையிலும் ஏற்படும் முரண்பாடுகளைத் தற்காலிகமாகத் தீர்ப்பதற்கும், அரசியல் தலைமைகள் தங்களின் பதவிகளைத் தக்கவைப்பதற்கும் இது ஒரு "கொடுக்கல் வாங்கல்" அரசியல் சித்து விளையாட்டாகவே கிழக்கு பிராந்தியத்தில் மாறியுள்ளது.

இதனால், ஒட்டுமொத்தமாக சமூகத்தின் குரலாக ஒலிக்க வேண்டிய தேசியப்பட்டியலின் உன்னத நோக்கம் சிதைக்கப்பட்டு, சமூகம் சார்ந்த ஒருமித்த முடிவுகளை எடுக்க முடியாமல், தங்களுக்குள் ஆசனத்தினை பெறுவதற்காக முரண்பட்டுக் கொள்ளும் வெறும் "பிராந்திய சமரசக் கருவியாக" அது தரம் தாழ்த்தப்பட்டுள்ளது.

முக்கியமாக தேர்தல் காலங்களில் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தின் வாக்குகளை ஒட்டுமொத்தமாகப் பெற்றுக் கொள்வதற்காக, "வெற்றி பெற்றால் உங்கள் பிரதேசத்திற்கு தேசிய பட்டியல் எம்பி (MP) பதவி வழங்கப்படும்" என்ற வாக்குறுதி தனித்துவக் கட்சிகளின் தலைவர்களால் பரவலாக வழங்கப்படுகிறது.

தேர்தலுக்குப் பின், கட்சித் தலைமைகள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கோ அல்லது வேறு பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களுக்கோ அந்தப் பதவிகளை வழங்குவதும், இதனால் ஏமாற்றமடைந்த பிரதேச மக்கள் ஏமாற்றத்துடன் தங்களை ஆறுதல்படுத்திக் கொள்வதும் காலங்காலமாக நடக்கும் ஒரு சடங்காகவே மாறியுள்ளது.

இதன் மூலம் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களுக்கு இடையிலும், மாவட்டங்களுக்குள் இருக்கும் வெவ்வேறு ஊர்களுக்கு இடையிலும் தேவையற்ற பிராந்தியவாதப் போட்டிகள் வளர்க்கப்பட்டு விடப்பட்டுள்ளன.

பாமர மக்கள் நீண்டகாலமாக "சமூக அரசியல்", "தனித்துவ அரசியல்" என்ற பசப்பு வார்த்தைகளால் உணர்ச்சிவசப்பட்டு வாக்களித்து வந்த நிலைமை தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியின் பின்னர்,
இன்றைய இளைஞர் சமூகத்தினால் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது.

தேர்தல் மேடைகளில் வழங்கப்படும் வாக்குறுதிகளின் நம்பகத்தன்மை என்ன? கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஏன் நிறைவேற்றப்படவில்லை? போன்ற நேரடி கேள்விகளை இளைஞர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் பொது விவாதங்கள் வாயிலாக எழுப்பி வருகின்றனர்.

வாக்கு என்பது தங்களின் உரிமை மற்றும் எதிர்காலம் என்பதைப் பாமர மக்களுக்குப் புரிய வைக்கும் விழிப்புணர்வுச் செயற்திட்டங்களை இளைஞர்கள் முன்னெடுக்க தொடங்கியுள்ளனர். அரசியலுக்குப் பின்னால் ஓடாமல், கொள்கை மற்றும் தகுதி அடிப்படையிலான, சமூகத்திற்கு உண்மையாகப் பங்காற்றக்கூடிய மாற்று அரசியல் சக்திகள் மற்றும் தலைமைகளை நோக்கி மக்களை வழி நடத்த இளைஞர்கள் களமிறங்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த விழிப்புணர்வு, கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியலில் நீண்டகாலமாக இருந்து வரும் ஏமாற்று அரசியலுக்கும், "தேசிய பட்டியல் வியாபாரத்திற்கும்" முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு ஆரோக்கியமான ஆரம்பம் என்பதே புத்திஜீவிகளினதும், நடுநிலை சிந்தனையாளர்களினதும் பார்வையாக உள்ளது.

தற்போதைய அரசியல் சூழலில் பல தலைவர்கள் இதனைப் பொதுநல நோக்குடன் அணுகாமல், தமது சொந்த அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவும், "நரி அப்பத்தைப் பிரிப்பது போல" தங்களுக்குள் மாதக்கணக்கில் பங்கிட்டுக் கொள்ளவும் பயன்படுத்துவது வேதனைக்குரிய விடயமாக அரசியல் அவதானிகளால் பார்க்கப்படுகின்றது.

தேசியப்பட்டியல் என்பது தங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் அல்ல, அது ஒட்டுமொத்த சமூகத்தினதும், தேசத்தினதும் முன்னேற்றத்திற்கான ஒரு பொறுப்பு என்பதை அரசியல் தலைமைகள் உணரும் போதே சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பலமடைய வாய்பேற்படும்.

அல்லது சமூகத்தில் உள்ள துறைசார் வல்லுநர்கள், பொருளாதார மேதைகள் அல்லது சட்ட நிபுணர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி, நாட்டின் கொள்கை வகுப்பில் செல்வாக்கு செலுத்த வைக்க வேண்டும். பிரதிநிதித்துவம் கிடைக்காத அல்லது பின்தங்கிய பிரதேசங்களின் குரலாக ஒருவரைத் தெரிவு செய்து, அப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு வழிவகுக்க வேண்டும்.

ஆகவே, சிறுபான்மை கட்சித் தலைவர்களுக்கு கிடைக்கு ஒருசில தேசியப்பட்டியல் ஆசனத்தை தமது சுயநல அரசியலுக்காக நரி அப்பத்தினை பிரித்துக் கொடுப்பதை போன்று மாதக்கணக்கில் பங்கிடாமல் சமூகத்தின் அபிவிருத்திக்காக அல்லது பிரதேசத்தினதும், ஒட்டு மொத்த நாட்டினதும் நன்மைக்காக வழங்குவதே உண்மையான அரசியல் தலைமைக்கு உள்ள பன்பாக அமையும்.

அஹமட் இர்ஷாட்.
தினகரன் பத்திரிகைக்காக,
01-09-2026

ජාතික ආසන ලැයිස්තුව නිර්මාණය කිරීමේ පසුබිම කුමක්ද? ඒ අරමුණ ආත්මාර්ථකාමී දේශපාලනයට බිල්ලට දෙනවාද?

ජාතිකවාදය තමන්ට ආශිර්වාදයක් නොවන බවත් එය සමස්ත සමාජයේත් ජාතියේත් ප්‍රගමනයට වගකීමක් බව දේශපාලන නායකයන් අවබෝධ කරගත් විට සුළු ජාතික ප්‍රජාවන්ගේ දේශපාලනය ශක්තිමත් වනු ඇත.

සුළු ජාතික පක්ෂ නායකයන් තම ආත්මාර්ථකාමී දේශපාලන පැවැත්ම සඳහා සහ තනතුරු රැකගැනීම සඳහා මාසයක චක්‍රීය කොන්ත්‍රාත්තුවලින් "නරි අප්පම් ප්‍රීති වැනි" ජාතික ලැයිස්තු මන්ත්‍රී ධුර බෙදමින් සිටිති.

ජාතික ජන බලය නැඟීමෙන් පසු සමාජ මාධ්‍ය සහ ප්‍රසිද්ධ වාද විවාද හරහා තරුණයින් මෙවැනි කපටි දේශපාලනය සහ වාචාල කතා ප්‍රශ්න කිරීමට පටන් ගෙන තිබේ.
+++++++++++++++++

ශ්‍රී ලංකාවේ මැතිවරණ ක්‍රමය තුළ ජාතික ලැයිස්තු මන්ත්‍රී ධුරය නිර්මාණය කිරීමේ ප්‍රධාන අරමුණ වන්නේ මැතිවරණ දේශපාලනයට සෘජුව තරග කිරීමට අකමැති හෝ ජනප්‍රිය බලපෑම් එකතු කර ගැනීමට නොහැකි උගතුන්, ප්‍රවීණයන් සහ විද්වතුන් පාර්ලිමේන්තුවට ගෙන ඒමයි.

නීතිය, ආර්ථික විද්‍යාව, වෛද්‍ය විද්‍යාව, ඉංජිනේරු විද්‍යාව, අධ්‍යාපනය ආදී විවිධ ක්ෂේත්‍රවල කීර්තිමත් උගතුන්ගේ, මහාචාර්යවරුන්ගේ සහ වෘත්තිකයන්ගේ උපදෙස් හා දැනුම රටේ ප්‍රතිපත්ති සම්පාදනය සහ පාර්ලිමේන්තු විවාද සඳහා අත්‍යවශ්‍ය වේ. ඍජු මැතිවරණයකට ඉදිරිපත් වීමට තරම් දේශපාලන පසුබිමක් ඔවුන්ට නොමැති නිසා ඔවුන් සෘජුවම පාර්ලිමේන්තුවට පත් කිරීමට ජාතික ලැයිස්තුව හේතු වේ.

එසේම, ව්‍යවස්ථාපිතව වෙන් කර ඇති ජාතික ලැයිස්තු මන්ත්‍රී ධූර රටේ ඇතැම් ප්‍රදේශවල ජනගහනය අනුව සෘජු මැතිවරණවලදී දුෂ්කරතාවන්ට මුහුණ දෙන සුළුතර ප්‍රජාවන්, කාන්තාවන් සහ පසුගාමී පන්ති සඳහා පාර්ලිමේන්තුවේ සමාන නියෝජනයක් සහතික කිරීමට උපකාරී වේ.

1971 ට පෙර ශ්‍රී ලංකාවේ ‘සෙනෙට් සභාව’ නමින් ඉහළ මන්ත්‍රී මණ්ඩලයක් පැවති අතර එම විශේෂඥයින් පත් කරන ලදී. අච්චාබා අහෝසි කිරීමෙන් පසු එම පුරප්පාඩුව පිරවීම සඳහා මෙම ජාතික ලැයිස්තු ක්‍රමය හඳුන්වා දෙන ලදී.

ශ්‍රී ලංකාවේ මුළු පාර්ලිමේන්තු ආසන 225 න් ආසන 29 ක් ජාතික ලැයිස්තුවට වෙන් කර ඇත. පාර්ලිමේන්තු මැතිවරණයේදී දේශපාලන පක්ෂයක් හෝ ස්වාධීන කණ්ඩායමක් ජාතික මට්ටමින් ලබාගන්නා මුළු ඡන්ද ප්‍රතිශතයට සමානුපාතිකව මෙම ආසන 29 බෙදී යයි. ජනතාව ඍජුව මේ මන්ත්‍රීවරුන්ට ඡන්දය නොදුන්නත් පක්ෂ නායකත්වය තමන්ට තිබෙන ආසනවලට සුදුස්සන් පත් කරනවා.

කෙසේ වෙතත් දැනට ශ්‍රී ලංකාවේ ජාතික ලැයිස්තු මන්ත්‍රී ධුර ලබාදීම වත්මන් දේශපාලන වාතාවරණය තුළ සුළු ජාතික පක්ෂ නායකයන්ගේ සහ ප්‍රධාන සාමාජිකයන්ගේ ආත්මාර්ථකාමීත්වය සඳහා තනතුරු බෙදාගැනීමේ ප්‍රශ්නයක් බවට පත්ව ඇත. කාල සීමා නිර්ණය කිරීමේදී දුන් පොරොන්දු දෙස බලන විට පක්ෂ නායකයන්ගේ දේශපාලන නාටකය "නරි අප්පම් ප්‍රීත කති" කතාව මෙන් වී ඇත. එනම් වඳුරෙකුගේ අතේ මල් මාලයක් සොයාගන්නවාක් මෙන් රැල්ල හැමවිටම අතේ නැති බවද පෙනේ.

"නරි අප්පම් ප්‍රිත්ත කති" උපමාව සුළු පක්ෂ අභ්‍යන්තරයේ පවතින බල අරගලය සහ ජාතික ලැයිස්තුව බෙදීයාම ඉතා නිවැරදි ලෙස නිරූපණය කරයි. පක්‍ෂ ප්‍රතිපත්තිවලට හෝ සමාජයේ දීර්ඝ කාලීන අවශ්‍යතාවලට වැදගත්කමක් ලබා දෙනවාට වඩා තම ධූර කාලය දීර්ඝ කර ගන්නේ කෙසේද නැතහොත් එය තම වාසියට හරවා ගන්නේ කෙසේද යන්න පිළිබඳව පක්‍ෂ නායකයන් පෙන්වා දෙන බරපතළකමත්, ඒ තුළින් ඔවුන් ලබන තාවකාලික ජයග්‍රහණයත් දැන් හෙළිදරව් වීමට පටන් ගෙන තිබේ.

ප්‍රධාන වශයෙන්ම පුද්ගලවාදය ගැන කතා කරන සුළු ජාතික මුස්ලිම් පක්‍ෂවලට හිමි ආසන කිහිපය එක් අයෙකුට මාස හයකට, තවත් අයෙකුට වසරක්, පොතුවිල් සහ පුත්තලමට අටවූර්ට මාස තුන බැගින් ලබා දීම බුද්ධිමතුන් දකින්නේ දේශපාලන නායකයන්ගේ ආත්මාර්ථකාමී දේශපාලන ජයග්‍රහණය සඳහා ප්‍රාදේශීය ජන කොටස් රවටා විකිණීමේ දේශපාලන සෙල්ලමක් ලෙසය.

මැතිවරණ කාලවලදී නැගෙනහිර පළාතේ බෙදුම්වාදී දේශපාලනය සඳහා ඇතැම් ප්‍රදේශවල (එබ්‍රාවුර්, පොතුවිල්, කල්කටා, අට්ටාලයිචේන, නින්දවුර්, මුදූර්, කින්නියා, පුත්තලම) ජනතාවට පොරොන්දු දී ඡන්ද ලබා ගැනීමේ මෙවලමක් ලෙස ජාතික ලැයිස්තුව භාවිත කරයි.

පාපැදි කොන්ත්‍රාත්තුවේ දර්ශනීය රැවටිලිකාර දේශපාලන උපක්‍රමය තුළ එක් අයකුට මාස 6ක් ද තවත් අයෙකුට වසරක් ද ලබා දෙන බැවින් පාර්ලිමේන්තුවට යන නියෝජිතයාට තම ජීවිත කාලය තුළ පාර්ලිමේන්තුව දැකීම හැර දීර්ඝ කාලීන ව්‍යාපෘති හෝ ස්ථාවර රාජ්‍ය සේවයක් කිරීමට නොහැකි වීම ඉතිහාසය වනු ඇත.

පුද්ගලවාදී පක්‍ෂ නායකත්වයේ නායකයන්ගේ ආත්මාර්ථකාමී දේශපාලන ජයග්‍රහණය වෙනුවෙන් තම පක්‍ෂය තුළ සහ ප්‍රදේශ අතර ගැටුම් තාවකාලිකව සමනය කර ගැනීමටත් දේශපාලන නායකයන්ට තම තනතුරු රැක ගැනීමටත් නැඟෙනහිර කලාපයේ “මිලදී ගන්නට” දේශපාලනයේ සෙල්ලමක් බවට පත්ව ඇත.

මේ අනුව සමස්ත සමාජයේම හඬක් විය යුතු ජාතික ලැයිස්තුවේ උදාර අරමුණ විනාශ වී ගොස් ප්‍රජාව මත පදනම් වූ සම්මුති තීරණ ගැනීමට නොහැකිව අසුනක් ලබාගැනීමට එකිනෙකා පරස්පර වන හුදු "ප්‍රාදේශීය සම්මුති මෙවලමක්" බවට එය පිරිහී ඇත.

ප්‍රධාන වශයෙන්ම මැතිවරණ කාලවලදී, "ඔබගේ මැතිවරණ කොට්ඨාශයට ජාතික ලැයිස්තු මන්ත්‍රී (මන්ත්‍රී) තනතුර" යන පොරොන්දුව පුද්ගලවාදී පක්‍ෂ නායකයින් විසින් පුලුල් ලෙස ඉදිරිපත් කරනුයේ කිසියම් මැතිවරණ කොට්ඨාශයක ඡන්ද ඩැහැගැනීමටය.

මැතිවරණයෙන් පසු පක්ෂ නායකයන් එම තනතුරු තම සමීපතම හිතවතුන්ට හෝ වෙනත් ප්‍රදේශවලින් පැමිණි පුද්ගලයන්ට ලබා දීම කාලානුරූපී චාරිත්‍රයක් බවට පත් වී ඇති අතර, කලකිරුණු ප්‍රාදේශීය ජනතාව බලාපොරොත්තු සුන්වීමෙන් සනසති.

මේ හරහා අම්පාර, මඩකලපුව, ත්‍රිකුණාමලය වැනි දිස්ත්‍රික්ක අතර සහ දිස්ත්‍රික්ක තුළ විවිධ නගර අතර අනවශ්‍ය ප්‍රාදේශීය එදිරිවාදිකම් ඇති කර ඇත.

ජාතික ජන බලය නැගීමෙන් පසු සාමාන්‍ය ජනතාව බොහෝ කලක සිට “ප්‍රජා දේශපාලනය” සහ “පුද්ගල දේශපාලනය” යන ඝෝෂාකාරී වචන සමඟ දැඩි ලෙස ඡන්දය ප්‍රකාශ කළ තත්ත්වයකි.
වර්තමාන තරුණ සමාජය විසින් පරිවර්තනය වෙමින් පවතී.

මැතිවරණ වේදිකාවල දෙන පොරොන්දුවල විශ්වසනීයත්වය කෙබඳුද? පසුගිය කාලයේ දුන් පොරොන්දු ඉටු නොකරන්නේ ඇයි? මෙවැනි සෘජු ප්‍රශ්න සමාජ මාධ්‍ය සහ ප්‍රසිද්ධ වාද විවාද හරහා තරුණ පරපුරෙන් මතුවෙමින් තිබේ.

ඡන්දය ප්‍රකාශ කිරීම ඔවුන්ගේ අයිතිය සහ අනාගතය බව සාමාන්‍ය ජනතාවට අවබෝධ කරදීම සඳහා තරුණ තරුණියන් දැනුවත් කිරීමේ වැඩසටහන් ආරම්භ කර තිබෙනවා. දේශපාලනය පිටුපස දුවනවා වෙනුවට ප්‍රතිපත්තිගරුක, කුසල් පදනම් කරගත්, සැබෑ ලෙසම සමාජයට දායක විය හැකි විකල්ප දේශපාලන බලවේග හා නායකත්වයන් කරා ජනතාව යොමු කිරීමට තරුණයන් පෙරට ඒමට පටන් ගෙන තිබේ.

නැඟෙනහිර පළාත් මුස්ලිම් දේශපාලනයේ දීර්ඝ කාලීන වංචනික දේශපාලනය සහ "ජාතික ලැයිස්තු ව්‍යාපාරය" නිමා කිරීමේ සෞඛ්‍ය සම්පන්න ආරම්භයක් ලෙස මෙම දැනුවත්භාවය බුද්ධිමතුන් සහ මධ්‍යස්ථ චින්තකයින් විසින් දකියි.

පවතින දේශපාලන වටපිටාව තුළ බොහෝ නායකයින් පොදු උවමනාවකින් මෙයට නොපැමිණ එය තම තමන්ගේ දේශපාලන පැවැත්ම පවත්වා ගෙන "නරියා පාන් බෙදන්නාක් මෙන්" මාස ගණන් තමන් අතරේ බෙදා හදා ගැනීම වේදනාකාරී දෙයක් ලෙස දේශපාලන නිරීක්ෂකයෝ දකිති.

ජාතිකවාදය තමන්ට ආශිර්වාදයක් නොවන බවත් එය සමස්ත සමාජයේත් ජාතියේත් ප්‍රගමනයට වගකීමක් බව දේශපාලන නායකයන් අවබෝධ කරගත් විට සුළු ජාතික ප්‍රජාවන්ගේ දේශපාලනය ශක්තිමත් වනු ඇත.

එසේත් නැතිනම් රටේ ප්‍රතිපත්ති සම්පාදනයට බලපෑම් කිරීමට සමාජයේ සිටින අංශ ප්‍රවීණයන්, ආර්ථික ප්‍රවීණයන් හෝ නීති විශාරදයන් පාර්ලිමේන්තුවට යවන්න. නියෝජනයක් නොමැති හෝ පසුගාමී ප්‍රදේශ වල හඬ ලෙස එක් පුද්ගලයෙකු තෝරාගෙන ප්‍රදේශයේ සංවර්ධනයට මග පෙන්විය යුතුයි.

ඒ නිසා තමන්ගේ ආත්මාර්ථකාමී දේශපාලනය වෙනුවෙන් ජාතික ලැයිස්තු මන්ත්‍රී ධුර කිහිපයක් සුළු ජාතික පක්ෂ නායකයන්ට ලබා දීම මිස සමාජයේ දියුණුව වෙනුවෙන් හෝ ප්‍රදේශයේ සහ රටේ සමස්ත යහපත වෙනුවෙන් මාස ගණන් බෙදීම සැබෑ දේශපාලන නායකත්වයේ භාග්‍යයක් වනු ඇත.

අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් සඟරාව සඳහා,
01-09-2026.

Address

Ex Chairman Road
Oddamavadi
0036

Alerts

Be the first to know and let us send you an email when Osisnews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share