Vaiharai Media

Vaiharai Media இது உங்கள் உணர்வுகளின் அடையாளம்

கல்முனை பிராந்தியத்தின் முதலாவது கடற்படை அதிகாரியாக மருதமுனையைச் சேர்ந்த சப் லெப்டினன் மொஹம்மட் சமி நியமனம்.✍️ஏ.எல்.எம்....
30/06/2025

கல்முனை பிராந்தியத்தின் முதலாவது கடற்படை அதிகாரியாக மருதமுனையைச் சேர்ந்த சப் லெப்டினன் மொஹம்மட் சமி நியமனம்.

✍️ஏ.எல்.எம்.ஷினாஸ்

கல்முனை பிராந்தியத்தின் முதலாவது கடற்படை அதிகாரியாக மருதமுனையைச் சேர்ந்த சப் லெப்டினன் மொஹம்மட் சமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மர்ஹூம் முகம்மட் சுபையிர் ஆசிரியரினதும் இப்ரா லப்பை பதிலா ஆகியோரின் புதல்வராவார் மற்றும் இலங்கையின் இராணுவ உயர் அதிகாரியான மேஜர் உஷாம் சுபையிரின் இளைய சகோதரரும் ஆவார்.

இவர் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் பட்டம் பெற்றவரும் ஆவார். இவர் கடல் சார்ந்த பல திறமைகளைக் கொண்டு இலங்கை கடற்படை கல்லூரியில் பயிற்சியை பெற்று தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

சப் லெப்டினன் மொஹம்மட் சமி, கடற்ப்படையில் பல உயர்வுகளை பெற்று மண்ணுக்கும் தாய் நாட்டுக்கும் சேவையாற்ற வேண்டும் என்று மருதமுனை மண் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

🇮🇷 ஈரானின் தீவிர பதிலடி — 14 மிசைல்கள், 14 அமெரிக்க குண்டுகளுக்கு பதிலாக!அல்-உதெயித் (கத்தார்) உள்ள அமெரிக்க விமானத் தளத...
23/06/2025

🇮🇷 ஈரானின் தீவிர பதிலடி — 14 மிசைல்கள், 14 அமெரிக்க குண்டுகளுக்கு பதிலாக!

அல்-உதெயித் (கத்தார்) உள்ள அமெரிக்க விமானத் தளத்தை நோக்கி 14 பாலிஸ்டிக் மிசைல்கள் ஏவப்பட்டதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது — இது அமெரிக்கா ஈரானின் ஃபோர்டோவ் அணு நிலையத்தை தாக்கிய அதே எண்ணிக்கையிலான குண்டுகள்!

இது ஒரு சாதாரண தாக்குதல் அல்ல — இது ஒரு கணிக்கப்பட்ட எச்சரிக்கை:

🔁 "நீங்கள் எங்களைத் தாக்கினீர்கள்; நாங்களும் சமமாகத் திருப்பித் தாக்குகிறோம்!"

🔥 ஈரானை நீங்கள் வெறும் விளையாட்டு மைதானம் என நினைக்க வேண்டாம்,
ஈரான் ஒரு சிவப்புக் கோடு!

ஈரானின் ‘எவின்’ சிறைச்சாலை மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்!ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ‘எவின்’ சிறைச்சாலை மீது இஸ்ரேலிய ...
23/06/2025

ஈரானின் ‘எவின்’ சிறைச்சாலை மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ‘எவின்’ சிறைச்சாலை மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுகளை வீசி கடும் தாக்குதல் நடத்தின.

அமெரிக்க போர் விமானங்கள் சக்திவாய்ந்த குண்டுகளை வீசி ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 அணுசக்தி தளங்களை அழித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, “இஸ்ரேல் மிகப்பெரிய தவறை இழைத்திருக்கிறது. அந்த நாட்டுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, ரிசோன் லெசியொன், பீர்சேபா, சாபத், ஆஸ்கெலான், ஆஸ்டோட், பெய்சன் உட்பட பல்வேறு நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி வருகிறது. தெற்கு இஸ்ரேலில் உள்ள மின் நிலையம் மீது ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் மின் நிலையம் முழுமையாக சேதமடைந்து, அந்த பகுதியில் உள்ள பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளன.

“இஸ்ரேலின் பல்வேறு நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறோம். குறிப்பாக டெல் அவிவ் மீது தீவிர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது” என்று ஈரான் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ஈரான் இராணுவ தாக்குதல்களில் இஸ்ரேலில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். 900 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் இன்றைய தாக்குதல்களுக்கு பதிலடியாக, இஸ்ரேல் விமானப்படை கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான், மஸ்சாத், அமாதான், தசுபூல், ஷாகித் பக்தியாரி, தப்ரீசு ஆகிய பகுதிகளில் உள்ள 6 ஈரான் விமானப்படை தளங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் 6 விமானப்படை தளங்களும் அழிக்கப்பட்டன. அங்கு நிறுத்தப்பட்டிருந்த எப்14, எப்5, ஏஎச்1 ரகங்களை சேர்ந்த 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின என்று தகவல்கள் வெளியாகின.

அதேபோல், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ‘எவின்’ சிறைச்சாலையை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்தன. இதில், அந்தச் சிறைச்சாலை கடும் சேதம் அடைந்துள்ளதாகவும், 15,000 இற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அந்த சிறையில் இருந்து கைதிகள் பலர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 950 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 3,450 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

🇺🇸ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பிறகு எண்ணெய் விலைகள் அதிகரிக்க உள்ளன🇮🇷🚨ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெ...
22/06/2025

🇺🇸ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பிறகு எண்ணெய் விலைகள் அதிகரிக்க உள்ளன🇮🇷🚨

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசியதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தைகள் மீண்டும் திறக்கப்படும்போது எண்ணெய் விலை பீப்பாய்க்கு $3–$5 வரை உயரும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் ஈரான் கடுமையாக பதிலடி கொடுத்து எண்ணெய் ஓட்டத்தை சீர்குலைத்தால், விலைகள் இன்னும் உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தெஹ்ரான் குழாய்களை மூட முடிவு செய்தால்,எரிவாயு மற்றும் பணப்பை இரண்டும் சிக்கலில் இருக்கும்.

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை கண்டித்துள்ள வடகொரியா, ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்கத் தயார் என அறிவிப்பு.
22/06/2025

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை கண்டித்துள்ள வடகொரியா, ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்கத் தயார் என அறிவிப்பு.

 #ஈரானின் மெஹர்இன்று காலை  #இஸ்ரேல் மீது கைபர் ஏவுகணைகள் முதல் முறையாக ஏவப்பட்டன புகைப்படம் வெளியானது..
22/06/2025

#ஈரானின் மெஹர்

இன்று காலை #இஸ்ரேல் மீது கைபர் ஏவுகணைகள் முதல் முறையாக ஏவப்பட்டன புகைப்படம் வெளியானது..

ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகரின் முக்கிய ஆலோசகர் மெஹ்தி முகமதி கூறியதாவது: நீண்ட காலத்திற்கு முன்பே அந்த இடங்கள் காலி ...
22/06/2025

ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகரின் முக்கிய ஆலோசகர் மெஹ்தி முகமதி கூறியதாவது:

நீண்ட காலத்திற்கு முன்பே அந்த இடங்கள் காலி செய்யப்பட்டன.! காலி செய்யப்பட்ட இடத்தின் கதவுகளுக்கு அடித்து விட்டு, உலக மக்களிடம் ஈரானின் அணு ஆலைகள் மூன்றையும் அழித்து விட்டதாக கதை கூறும் அளவில் ரம்பின் நிலையை ஏற்படுத்தியுள்ளோம்! இறைவன் போதுமானவன்!

ஆக்கிரமிப்பின் முதல் தருணங்களில் நாங்கள் அறிவித்ததை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இது, ஈரானில் இருந்து தளங்கள் சில காலத்திற்கு முன்பு காலி செய்யப்பட்டன.

டிரம்ப் நடத்திய தொடர் தாக்குதல்கள் ஈரானிய தலைமைக்கு தெரியாமல் இல்லை, ஆனால் அவர் செய்த காரியத்தின் விலை பிராந்தியம் முழுவதிலும் இருந்து நசுக்கப்படும்.

தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசதா சாங்ஸ்ரி (Opal Suchata Chuangsri ) 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக முடி சூடியுள்ளார். 🫅🏼...
31/05/2025

தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசதா சாங்ஸ்ரி (Opal Suchata Chuangsri ) 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக முடி சூடியுள்ளார். 🫅🏼

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் இன்று (...
26/05/2025

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் இன்று (26) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள பேருந்து விபத்து | 21 பேர் பலி
11/05/2025

முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள பேருந்து விபத்து | 21 பேர் பலி

🟤 வழமையான சிவப்பு வரவேற்பு கம்பளத்துக்கு பதிலாக சவூதி அரேபியா ஊதா நிற கம்பளங்களை தமது நாட்டிற்கு வருகை தரும் அதிதிகளை வர...
01/05/2025

🟤 வழமையான சிவப்பு வரவேற்பு கம்பளத்துக்கு பதிலாக சவூதி அரேபியா ஊதா நிற கம்பளங்களை தமது நாட்டிற்கு வருகை தரும் அதிதிகளை வரவேற்க பயன்படுத்துகிறது. தனித்துவமான இந்த நிறமும் புதிய கலாசாரமும் சவூதி நாட்டை விஷேடமாக குறிப்பதாக அமைகிறது.

“lavender flowers” எனப்படும் ஊதா நிற பூக்கள் சவூதியின் பாலை வனங்களில் பூக்கின்றன, இது இங்கே தனித்துவமானவை, இதனை அடிப்படையாக வைத்தே இந்த நிறப்பறிப்பாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஊதா கம்பளங்களின் விளிம்புகளில் ‘Al-Sadu,’ என்ற கலாசார வடிவமைப்பு சவூதியின் உட்சபட்சமான கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.

BREAKING NEWS⭕ 2024(2025)  க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது அதன்படி https://www.doenets.lk/ எனும் இணையத்தளத்த...
26/04/2025

BREAKING NEWS
⭕ 2024(2025) க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

அதன்படி https://www.doenets.lk/ எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.

Address

Oluvil
32360

Alerts

Be the first to know and let us send you an email when Vaiharai Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vaiharai Media:

Share