Kinniyan News

Kinniyan News கிண்ணியன் செய்திகள்

 #எல்லையில் பஸ் மோதிய ரேஞ்ச் ரோவர் காரில் சென்றவரின் விளக்கம்.அந்த மரண விபத்து நிகழ்வதற்கு முன் நடந்த தமது அனுபவத்தை விள...
12/09/2025

#எல்லையில் பஸ் மோதிய ரேஞ்ச் ரோவர் காரில் சென்றவரின் விளக்கம்.

அந்த மரண விபத்து நிகழ்வதற்கு முன் நடந்த தமது அனுபவத்தை விளக்கிய வமிது தேஷான் (22) கூறியது👇

நான் புத்தளையில் வணிக நிலையம் நடத்தி அங்கே வேலை செய்கிறேன். நாங்கள் புத்தளையில் நின்று, வார இறுதியில் பண்டாரவெல புனாகல சாலையில் உள்ள வீட்டுக்கு போகிறோம்.

இந்த ஜீப் (ரேஞ்ச் ரோவர்) காரில்தான் நாங்கள் வீட்டுக்கு செல்கிறோம். அடிக்கடி இந்த எல்ல-வெள்ளவாய முக்கிய சாலையில் பயணம் செய்வதால், அந்தப் பாதையை நான் நன்றாக அறிவேன். மலைப் பகுதிகள், ஆபத்தான வளைவுகள் இருப்பதை நன்றாக தெரிந்துகொண்டுள்ளேன்.

அன்று (4ம் திகதி) வணிகச் செயல்கள் முடித்து, இரவு நேரத்தில் நான் என் இரண்டு தம்பிகளுடன் புத்தளையிலிருந்து பண்டாரவெல வீட்டுக்கு கிளம்பினேன். காரை ஓட்டியது நான்தான். முன் இருக்கையில் என் சிறிய தம்பி இருந்தான். என் பின்புறம், ஜன்னல் பக்கத்தில் மற்றொரு தம்பி (19) அமர்ந்திருந்தான்.

நாங்கள் ராவணா நீர்வீழ்ச்சி கடந்து எல்ல பக்கம் மலைப் பாதையில் செல்லும்போது, 15ஆம் வளைவின் அருகே ஆபத்தான திருப்பத்தில், எல்ல பக்கம் இருந்து வெல்லவாய பக்கம் வந்த பஸ் ஒன்று, வண்ணமயமான விளக்குகள் போட்டுக்கொண்டு மிக வேகமாக வந்தது. அது நேராக என் முன்னால் வந்தது.

உடனே நான் காரை சாலையின் இடப்பக்கம் எவ்வளவு முடியுமோ அத்தனை மாற்றினேன். அந்த பஸ் என் காரின் வலப்புறத்தில் மோதியவுடன் அதிவேகமாக சென்றது. அப்போதே கார் நின்றுவிட்டது.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. பஸ் எங்கு போனது என்பதையும் அறிய முடியவில்லை. பின்னால் வந்த ஒரு கார் என் அருகே நின்று, ‘தம்பி, பஸ் மோதிச்சும் நிற்காமல் போயிருச்சே?’ என்று கேட்டார்கள்.

என் தம்பி, ‘நான் அந்த பஸ்ஸை பிடித்து வருகிறேன்’ என்று கூறி, தனது தொலைபேசி எண்ணையும் கொடுத்து, வெல்லவாய பக்கம் காரை செலுத்திச் சென்றார். அந்த நேரம் இரவு 9 மணி.

பிறகு நாங்கள் மூவரும் காரிலிருந்து இறங்கி, காரின் சேதத்தை பார்த்தோம். காரின் வலப்புறம் சேதமடைந்திருந்தது. பின்புறம் வலப்புறம் ஜன்னல் பக்கம் அமர்ந்திருந்த தம்பிக்கும், மற்ற தம்பிக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்கள் மூவரும் உயிர் தப்பினோம். உடனே நான் அப்பாவுக்கு அழைத்து விபரத்தைச் சொன்னேன்.

பிறகு கீழே உள்ள வளைவு பக்கம் யாரோ உதவி கேட்டு கதறி அழும் சத்தம் கேட்டது. இருட்டு காரணமாக எதுவும் தெரியவில்லை. அப்போது பஸ்ஸின் எண் பலகையும், பஸ்களில் பொருத்தியிருக்கும் வெள்ளை இரும்புக் கம்பியொன்றும் தரையில் விழுந்திருந்தது.

அந்த சமயம் வெல்லவாய பக்கம் இருந்து எல்ல பக்கம் வந்த இராணுவ லாரி ஒன்றைக் கண்டோம். நாங்கள் அதை நிறுத்தி விபரத்தைச் சொன்னோம். அவர்கள் லாரியிலிருந்த பெரிய கயிறை எடுத்துக்கொண்டு, மின்விளக்குகளை ஏற்றி, கீழே இறங்கி, பள்ளத்தில் சிக்கியிருந்த இரண்டு சிறு பிள்ளைகள், இரண்டு பெண்கள், ஒருவரை மீட்டனர்.

நாங்கள் மூவரும் உதவி செய்தோம். அப்போதுதான் எங்கள் காரை மோதிய பஸ் ராவணா நீர்வீழ்ச்சிப் பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது என்று தெரிந்தது.

இதற்கிடையில் பஸ்ஸைத் தேடி வெல்லவாய பக்கம் சென்ற கார் மக்கள் எனக்கு அழைத்து, ‘தம்பி, பஸ் எங்கேயும் இல்லை. மிக வேகமாக சென்றது’ என்றார்கள். நான் சொன்னேன், “ஐயா, அந்த பஸ் ராவணா நீர்வீழ்ச்சிப் பள்ளத்தில் விழுந்திருக்கும்.”

அப்போதே எல்ல பொலிஸார் வந்தார்கள். அவர்கள் சாலையை இருபுறமும் மூடினர். ஆம்புலன்ஸ்கள் வந்தன. முதலில் மீட்ட ஐந்து பேரை ஆம்புலன்ஸில் ஏற்றி, பதுளை போதனா மருத்துவமனைக்கு அனுப்பினோம்.

பின்னர் இராணுவ அதிகாரிகள், கிராம மக்கள், பொலிஸார், வைத்தியர்கள் மின்விளக்குகள், ஜெனரேட்டர், கயிறுகள் கொண்டு பள்ளத்திற்குள் இறங்கி, பஸ்ஸில் இருந்த காயமடைந்தவர்களை மிகக் கடினமாக மேலே தூக்கி, ஆம்புலன்ஸ்களில் வைத்து மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பெரிய மக்கள் கூட்டம் ஒன்று கூடியிருந்தது. பின்னர் அங்கே இருந்த உடல்களையும் மேலே கொண்டுவந்தனர்.

அதிகாலை பொலிஸார் எனது விளக்கத்தை கேட்டார்கள். காலை 6 மணிக்கு எல்ல பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே வாக்குமூலம் எடுத்து, பண்டாரவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் ரூபா. 10 இலட்சம் ரூபாய் பிணையில் என்னை விடுவித்தனர்.

காருக்கு சேதம் ஏற்பட்டிருந்தது. நாங்கள் மூவரும் உயிர் தப்பினோம். ஆனால் பலர் உயிரிழந்து, பலர் மோசமாக காயமடைந்தமை மிகவும் கவலையாக இருக்கிறது.

கத்தார் மீதான இஸ்ரேலிய குண்டுவீச்சில் உயிரிழந்தவர்களின் ஜனாஸா தொழுகை  இன்று (11) தோஹாவில் நடைபெற்றது. இதில் அந்நாட்டு அம...
11/09/2025

கத்தார் மீதான இஸ்ரேலிய குண்டுவீச்சில் உயிரிழந்தவர்களின் ஜனாஸா தொழுகை இன்று (11) தோஹாவில் நடைபெற்றது.

இதில் அந்நாட்டு அமீரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த பலஸ்தீனர்களின் உடல்கள் பலஸ்தீனக் கொடியினாலும், கத்தார் பாதுகாப்பு அதிகாரியின் உடல் கத்தார் கொடியினாலும் கபனிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Doha வில் நடந்த  இஸ்ரேலிய குண்டுவெடிப்பில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு இறுதிப் பயணம் .
11/09/2025

Doha வில் நடந்த இஸ்ரேலிய குண்டுவெடிப்பில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு இறுதிப் பயணம் .

🛑இரட்டை கோபுர தாக்குதல் நடந்த நாளில் கொழும்பை விட்டு வெளியேறிய மஹிந்த 🛑 மஹிந்தவின் அரசியல் பயணம்: கொழும்பில் இருந்து தங்...
11/09/2025

🛑இரட்டை கோபுர தாக்குதல் நடந்த நாளில் கொழும்பை விட்டு வெளியேறிய மஹிந்த

🛑 மஹிந்தவின் அரசியல் பயணம்: கொழும்பில் இருந்து தங்காலைவரை

இலங்கையின் 5 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச, கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள அரச அதிகாரப்பூர்வ வதிவிடத்தில் இருந்து இன்று பிற்பகல் வெளியேறினார். தங்காலை, கால்டன் இல்லத்தில் அவர் குடியேறுவதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து இன்று பிற்பகல் அவர் வெளியேறும்போது, அப்பகுதியில் மொட்டு கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் ஒன்றுகூடி இருந்தனர்.அத்துடன், மஹிந்த ராஜபக்ச வெளியேறுவதற்கு முன்னர் அவரை வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலரும் சந்தித்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகள் அனைத்தும் நீக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருந்தது. இதற்கமைய அரச மாளிகையில் இருந்து வெளியேறுமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு ஊடக சந்திப்புகள்மூலம் வலியுறுத்தப்பட்டது.

எனினும், தனக்கு சட்டப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே அது பற்றி பரிசீலிக்க முடியும் என மஹிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார். இதனால் இவ்வீடு விவகாரம் அரசியல் ரீதியிலும் பேசுபொருளானது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை நீக்குவதற்குரிய சட்டமூலம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் சான்றுரை படுத்தியுள்ளதால் சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதனையடுத்தே அரச மாளிகையில் இருந்து இன்று மஹிந்த வெளியேறினார்.

மஹிந்தவின் வெளியேற்றம் குறித்து கருத்து வெளியிட்ட மொட்டு கட்சி பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன,

" செப்டம்பர் 11 என்பது உலகில் பலம்பொருந்திய நாட்டுக்கும் பயங்கரவாதத்தின் அச்சம் தென்பட்ட நாளாகும். செப்டம்பர் 11 தாக்குதல் நடந்த நாளாகும்.

பயங்கரவாதிகளிடம் இருந்து இலங்கையை பாதுகாத்த தலைவர் இப்படியானதொரு நாளில் அதிகாரப்பூர்வ வதிவிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஓய்வுபெற்ற பின்னர் அவருக்கு இந்த வீட்டை (விஜேராம) வழங்குமாறு நான் யோசனை முன்வைக்கின்றேன்.

மஹிந்த ராஜபக்ச என்பவர் அநுரவுக்கு பயந்தவர் அல்லர்." - என்று குறிப்பிட்டார்.

மஹிந்தவின் அரசியல் பயணம்

🛑 1970 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்ட அவர், 23 ஆயிரத்து 103 வாக்குகளைப்பெற்று நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். நாடாளுமன்றத்துக்கு இளம் வயதில் (25) தெரிவான உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்றார்.

🛑 1977 - பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தார்.

🛑 1989 - அம்பாந்தோட்டை மாவட்டத்தில் களமிறங்கி, 13 ஆயிரத்து 73 வாக்குகளைப்பெற்று மீண்டும் நாடாளுமன்றம் தெரிவானார்.

🛑 1994 - இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், 78 ஆயிரத்து 77 வாக்குகளுடன் சபைக்கு தெரிவானார். இத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றிநடை போட்டது.

🛑 1994 சந்திரிக்கா தலைமையிலான அமைச்சரவையில் தொழில் அமைச்சு பதவி வழங்கப்பட்டது. 1997 வரை அப்பதவியில் நீடித்தார்.

🛑 1997 - மீன்பிடித்துறை அமைச்சு பதவி ஒப்படைக்கப்பட்டது. 2001 வரை அப்பதவியை முன்னெடுத்தார்.

🛑 2001 - பொதுத்தேர்தலில் 109 ஆசனங்களை வென்று ஐ.தே.க. ஆட்சி அமைத்தது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றம் தெரிவானார்.

🛑 2004 - பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி. சபைக்கு தெரிவான மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது. 2002 முதல் 2004 வரை அவர் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

🛑 2005 - இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச களமிறங்கினார். 48 லட்சத்து 87 ஆயிரத்து 152 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

🛑 2010 - ஜனாதிபதித் தேர்தலில் 2ஆவது முறையும் போட்டியிட்டார். 60 லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

🛑1978 அரசமைப்பின் பிரகாரம் நபரொருவர் இரு தடவைகள் மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 18 ஆவது திருத்தச்சட்டம்மூலம் இந்த ஏற்பாட்டை மஹிந்த - கடும் எதிர்பபுக்கு மத்தியில் மாற்றினார்.

🛑 2015 - மூன்றாவது முறையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். எனினும், அவரால் வெற்றிபெறமுடியவில்லை.

🛑 2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் களமிறங்கிய மஹிந்த ராஜபக்ச 4 லட்சத்து 23 ஆயிரத்து 529 வாக்குகளைப் பெற்றார்.

🛑 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமராக பதவியேற்றார். (ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி)

🛑 2018 டிசம்பர் 15 ஆம் திகதி பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச இராஜினாமா செய்தார்.

🛑 2018 டிசம்பர் 18 இல் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

🛑 2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச
வெற்றிபெற்றதையடுத்து, நவம்பர் 21 ஆம் திகதி பிரதமராக பதவியேற்றார் மஹிந்த.
🛑2020 பொதுத்தேர்தலில் குருணாகலையில் போட்டியிட்டு 527,364 வாக்குகளைப் பெற்றார். இலங்கை அரசியல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாகும். மீண்டும் பிரதமராக பதவியேற்பு.

🛑 2022 மே 09 ஆம் திகதி, பிரதமர் பதவியில் இருந்து விலகும் அறிவிப்பு விடுப்பு. (அறகலய)
2024 பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை.

2025 செப்டம்பர் 11 ஆம் திகதி அன்று அரசியலை ஆரம்பித்த இடத்துக்கே குடியேறுவதற்கு சென்றுவிட்டார்.

ஆர்.சனத்

மஹிந்த ராஜபக்‌ஷ கொழும்பிலிருந்து வெளியேறினார்.இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ரஜபக்‌ஷ தமக்கு வழங்கப்பட்டிருந்த வீட்டில...
11/09/2025

மஹிந்த ராஜபக்‌ஷ கொழும்பிலிருந்து வெளியேறினார்.

இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ரஜபக்‌ஷ தமக்கு வழங்கப்பட்டிருந்த வீட்டிலிருந்து இன்று உத்தியோகபூர்மாக வெளியேறி சென்றார்.

09/09/2025

கத்தார் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

காஸா யுத்த நிறுத்தம் குறித்த முன்மொழிவினை ஆராய கத்தார் தலை நகர் டோஹாவில் ஒன்று கூடிய ஹமாஸ் தூதுக் குழுவை இலக்கு வைத்து இஸ்ரேல் இன்று மாலை வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

  கத்தார் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்காஸா யுத்த நிறுத்தம் குறித்த முன்மொழிவினை ஆராய கத்தார் தலை நகர் டோஹாவில்  ஒன்று ...
09/09/2025

கத்தார் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

காஸா யுத்த நிறுத்தம் குறித்த முன்மொழிவினை ஆராய கத்தார் தலை நகர் டோஹாவில் ஒன்று கூடிய ஹமாஸ் தூதுக் குழுவை இலக்கு வைத்து இஸ்ரேல் இன்று மாலை வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

ஹமாஸ் பிரதிநிதிகளின் வதிவிடங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொண்ட கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கத்தார் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு முன்னர் அமெரிக்க பிரித்தானிய உளவு விமானங்கள் கத்தார் வான் பரப்பில் காணப்பட்டதாகவும் இலக்கு தவறியதால் மேற்படி தாக்குதல் இஸ்ரேலின் தனிப்பட்ட நடவடிக்கையே என நெதன்யாகு தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோஹாவில் ஹமாஸ் பேச்சுவார்த்தைத் தலைவர்கள் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்திய பின்னர், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மத்தியஸ்தத்தை நிறுத்தி வைப்பதாக கத்தார் அறிவித்துள்ளது.

அதேவேளை கத்தாரின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை இஸ்ரேல் மீறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கத்தாரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் பக்கம் உலகின் கவனம் திரும்பி இருக்க காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோஹாவில் ஹமாஸ் பேச்சுவார்த்தைத் தலைவர்கள் மீது, இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்திய பின்னர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான ...
09/09/2025

தோஹாவில் ஹமாஸ் பேச்சுவார்த்தைத் தலைவர்கள் மீது, இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்திய பின்னர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மத்தியஸ்தத்தை நிறுத்தி வைப்பதாக கத்தார் அறிவிதுள்ளது.

அதேவேளை கத்தாரின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை இஸ்ரேல் மீறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

09/09/2025

#கத்தாரில் ஹமாஸ் தலைமையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 10க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய விமானப்படை போர் விமானங்கள் 10க்கும் மேற்பட்ட #வெடிகுண்டுகளை வீசியதாக #மொஸாட் தெரிவித்துள்ளது.

#ஹமாஸ் தலைவர்கள் கூடியிருந்ததாக நம்பப்படும் ஒரு #கட்டிடத்தை வெடிகுண்டுகள் அனைத்தும் #நொடிகளில் தாக்கின.

தாக்குதலை நடத்துவதற்கும் இஸ்ரேலுக்குத் திரும்புவதற்கும் செல்லும் வழியில், பல #வான்வழி #எரிபொருள் நிரப்புதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியாவில் IOC பவுஷரும் சுற்றுலா பஸ்ஸும் மோதி விபத்து.நல்லவேளை உயிர்ச்சேதம் எதுவும் இல்லை.
06/09/2025

கிண்ணியாவில் IOC பவுஷரும் சுற்றுலா பஸ்ஸும் மோதி விபத்து.

நல்லவேளை உயிர்ச்சேதம் எதுவும் இல்லை.

மாவட்ட ரீதியிலான வெட்டு புள்ளிகள்.!தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று இரவு (3) வெளியிடப்பட்டது.அறிய doe...
03/09/2025

மாவட்ட ரீதியிலான வெட்டு புள்ளிகள்.!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று இரவு (3) வெளியிடப்பட்டது.

அறிய doenets.lk

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றது.

நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் மொத்தமாக 307,951 பரீட்சார்த்திகள் குறித்த பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

03/09/2025

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியானது. அறிய doenets.lk இணையத்தை நாடவும்.

Address

Periya Kinniya
31100

Alerts

Be the first to know and let us send you an email when Kinniyan News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share