Thuraiyoor News

Thuraiyoor News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thuraiyoor News, News & Media Website, Police Road, Sammanthurai.

இது துறையூரின் தனித்துவமான அடையாளமாகவும், ஊரின் முக்கியமான அனைத்துச் செய்திகளையும் எந்த பக்கச்சார்பும் இல்லாமல் பகிரும் பொதுத் தகவல் மையமாக இயங்குவதையே எங்களின் முக்கிய நோக்காகும்!

#துறையூர்செய்தித்தளம்

16 வயதுக்குட்பட்ட சிறுமி கற்பழிப்பு செய்த குற்றவாளிக்கு 32 வருட கடூழிய சிறைத் தண்டனை; திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்ப...
03/10/2025

16 வயதுக்குட்பட்ட சிறுமி கற்பழிப்பு செய்த குற்றவாளிக்கு 32 வருட கடூழிய சிறைத் தண்டனை; திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

அபு அலா

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கற்பழித்த குற்றவாளிக்கு 32 ஆண்டு கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பினை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் நேற்று (02) வழங்கினார்.

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரையான காலப் பகுதியிலும் 2022 பெப்ரவரி மாத்ததிலும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரினால் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தண்டனைச் சட்டக் கோவை 364 (02) உப பிரிவு மற்றும் 436 பிரிவுகளின் அடிப்படையில் குறித்த நபருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு வந்தன.

இதனடிப்படையில் குறித்த வழக்கின் சந்தேக நபரான சேருநுவர - தெஹிவத்தை பகுதியில் வசித்து வரும் ரன்கொத் பேடிகே உதார பெதும் (26 வயது) என்ற சந்தேக நபர் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில் ஐந்து குற்றச்சாட்டுகளும் வழக்கு விசாரணையின்போது உறுதி செய்யப்பட்டது.

குறித்த வழக்கில் திருகோணமலை மேல் நீதிமன்ற அரச சட்டவாதி தர்ஷிகா திருக்குமாரநாதன் ஆஜராகி இருந்தார். இதேவேளை குறித்த வழக்கின் தீர்ப்பினை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டியதுடன் மொத்தமாக 8 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் 60 ஆயிரம் செலுத்தவேண்டும் இல்லையேல் மேலும் இரு வருட சாதாரண சிறை தண்டனை வழங்கப்படும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதுடன் இத்தண்டனை ஏக காலத்தில் நிறைவேற்றப்படும் என்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற
நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் கட்டளை பிறப்பித்தார்.

வியாபாரத்திற்கு கை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தத்தடை - ஒலிபெருக்கிகள் பறிமுதல் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம், சம்மாந்துற...
02/10/2025

வியாபாரத்திற்கு கை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தத்தடை - ஒலிபெருக்கிகள் பறிமுதல்

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கை ஒலிபெருக்கிகளைப்பயன்படுத்தி வியாபாரம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய செயற்பாடுகள் மதஸ்தலங்களில் நடைபெறும் வணக்க வழிபாடுகள் மற்றும் பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், சத்தமூட்டலால் பொதுமக்கள் அசௌகரியமடைவதாகக் கூறப்படுகிறது.

இதனடிப்படையில், சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 2025.09.04 முதல் 2025.09.23 வரையான காலப்பகுதியில் 11 ஒலி பெருக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபை தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பதோடு, அனைத்து வியாபாரிகளும் சம்மாந்துறை பிரதேச சபையின் விதிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

⭕️அன்மைகாலமாக ஊரில் ரேஸ் ஓடும் இளைஞர்கள் கூட்டத்தை காணும் போது எனது மனதில் ஒரு கேள்வி எழும் அதவது இந்த சிறியவர்களுக்கு இ...
02/10/2025

⭕️அன்மைகாலமாக ஊரில் ரேஸ் ஓடும் இளைஞர்கள் கூட்டத்தை காணும் போது எனது மனதில் ஒரு கேள்வி எழும்
அதவது இந்த சிறியவர்களுக்கு இவ்வாறான பெரிய மோட்டார் சைக்கிள் களை வாங்கி கொடுக்கும் பெற்றோர்களது தலைக்க களிமண்ணா என்று.
விசாரித்து பார்தால்தான் விளங்குது வாப்பாமார் வெளிநாட்டு பாலைவனத்தில் சோறு 🍛 தண்ணி இல்லாமல் தான் குடும்ப கஷ்டம் தீரும் என்று நினைத்து அவர்கள் உழைத்து அனுப்பும் காசில நாலு நாதாரிகளுடன் சேர்ந்து கொண்டு வெளியூருக்கு வகுப்புக்கு போய் படித்து பெரிய வேலைக்கு சேர்ந்து விடுவார்கள் என்று சொல்லி படிப்பறிவு அற்ற பெற்றோர்களை ஏமாற்றி விட்டு இந்த நாதாரிகள் வகுப்புக்கு போற பெண் பிள்ளைகளுக்கு பின்னால முறிக்கிக்கி திரிந்து தானும் கெட்டு சமுகத்தையும் சீரழிக்கின்றனர்
இந்த சமூக விரோத செயல் இல்லாமல் செய்ய வேண்டும் என்றால் ஊர் முற்சபை, பிரதேச சபை, பள்ளிவாசல்கள், பாடசாலைகள், டியூசன் வகுப்பு நிர்வாகம் எல்லாம் சேர்ந்து பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

1. எந்த ஒரு கல்வி நிறுவனமும் மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வர அனுமதிக்க கூடாது

2.யாராவது ரேஸ் ஓடுவதை கண்டால் அவர்களை பிடித்து பொலிசில் ஒப்படைத்து விட வேண்டும்

3.இவ்வாறான மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் மூலம் பள்ளி ஓலிபெருக்கி மூலம் எச்சரிக்கை ‼️ விடுக்க வேண்டும்

4. மாணவர்கள் யாராவது பாதைகளில் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிவதைக்கண்டால் உடனடியாக அவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்

5. ஒவ்வொரு நாளும் பாடசாலைகள் ஆரம்பிக்கும் போது மற்றும் கலையும் போதும் முறிக்கிக்கி திரியிற தருதலைகளுக்கு எதிராக பொலிசாரின் உதவியுடன் சட்ட நடவடிக்கை எடுக்க ஊர் தலைவர்கள் தயாராக வேண்டும்

இந்த முறிக்கிக்கி திரியிற தருதலைகளுக்கு எதிராக நாம் சமூகமாக விழித்துக் கொள்ளா விட்டால் இவர்கள் தானும் கெட்டு இந்த சமூகத்தையும் சீரழித்து விடுவார்கள்

📌✍️Sabri Isma 👷

02/10/2025

🚨 Breaking News :
சவளக்கடையில் வீதி விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் மரணம் !

எல்லா புகழும் இறைவனுக்கே...💜இம்முறை வெளியாகிய AAT ( 2025 July ) பரீட்சையில் எமது Bright Minds Academy இல் கல்வி கற்ற மாண...
02/10/2025

எல்லா புகழும் இறைவனுக்கே...💜
இம்முறை வெளியாகிய AAT ( 2025 July ) பரீட்சையில் எமது Bright Minds Academy இல் கல்வி கற்ற மாணவர்கள் அதி சிறந்த பெறுபேற்றினை பெற்றிருப்பதை எண்ணி எமது நிறுவனம் பெருமிதம் கொள்கின்றது.

விசேடமாக எமது கல்வி நிறுவனத்தில் இம் முறை கல்வி கற்ற மாணவர்களில் 70 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் தமது AAT மட்டங்களை பூர்த்தி செய்துள்ளனர். இது எமது நிறுவனத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்.

சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டலோடு, மாணவர்களின் வெற்றிக்காக எமது மண்ணில் வலம் வரும் எமது Bright Minds Academy கல்வி நிறுவனத்தோடு இணைந்து நீங்களும் வெற்றி அடையுங்கள்.

Note:- 2026 January Batch இன் AAT கற்கை நெறிக்கான புதிய வகுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன இன்றே எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

👉 Online மூலம் கல்வி கற்க விருப்புவோருக்காக மற்றுமொரு நேர ஒதுக்கீடு வழங்கப்பட்டு Zoom Classes களும் இடம்பெறும்

Location >> 📍Sammanthurai- MUFO Nenasala
📍Sainthamaruthu - Musthafa Lanka Filling Station முன்பாக.

>> Bright Minds Academy - AAT 2025 January (General Group)
🔗https://chat.whatsapp.com/CDb07mMnS1f4BTaOnzjLBj?mode=ems_copy_t

For more any clarification *contact us* via
📞 0752349854
📞 0758338334

மூன்று நாட்களுக்கு முன் அம்பாறை காரைதீவு பிரதான வீதியில் சம்மாந்துறையின் கிராம கோட்டிற்கு முன்னால் அதிவேக ரேஸ் ஒட்டக் கா...
02/10/2025

மூன்று நாட்களுக்கு முன் அம்பாறை காரைதீவு பிரதான வீதியில் சம்மாந்துறையின் கிராம கோட்டிற்கு முன்னால் அதிவேக ரேஸ் ஒட்டக் கார மாணவரினால் விபத்துக்குள்ளான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் அன்வர் சேர் அவர்கள் காலமானார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

இந்த ரேஸ் ஒட்டத்தை இந்த ஊரினால் பல வருடங்களாக நிறுத்த முடியாமல்தான் உள்ளது.... 🥺 ( What A Shame )

Ziyath

💥Breaking | ஆசிய கிரிக்கெட் கொமிட்டி தலைவர் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்...
29/09/2025

💥Breaking | ஆசிய கிரிக்கெட் கொமிட்டி தலைவர் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி அவர்களிடம் இருந்து வெற்றி கோப்பையை ஏற்க மறுத்ததால், துபாய் மைதானத்தில் இருந்து ஆசிய கோப்பையுடன் ACC தலைவர் வெளியேறினார்!

உலக வரலாற்றில் வெற்றிக்கிண்ணம் இல்லாமல் வெற்றியை கொண்டாடிய இந்திய அணி!!

Legend Sanga ❤️
26/09/2025

Legend Sanga ❤️

9 மாகாண மக்களுக்குமான முக்கிய அறிவித்தல் !போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி எண்களை காவல்த...
25/09/2025

9 மாகாண மக்களுக்குமான முக்கிய அறிவித்தல் !

போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி எண்களை காவல்துறை தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஹெராயின், ஐஸ், கொக்கைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பற்றிய தகவல்களை, சம்பந்தப்பட்ட மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி.யின் மொபைல் தொலைபேசி எண்ணை நேரடியாக அழைப்பதன் மூலம் பொதுமக்கள் இன்று முதல் வழங்கலாம்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க குடிமக்களாக நீங்கள் வழங்கும் ஆதரவை இலங்கை காவல்துறை பெரிதும் பாராட்டுகிறது, மேலும் சம்பந்தப்பட்ட மாகாணங்களுக்குப் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி.க்களின் பெயர்கள் மற்றும் மொபைல் தொலைபேசி எண்கள் பின்வருமாறு.

மேல் மாகாணம்
சஞ்சீவ தர்மரத்ன
கையடக்கத் தொலைபேசி - 071-8591991

தென் மாகாணம்
தகித்சிறி ஜெயலத் - 071-8591992

ஊவா மாகாணம்
மகேஷ் சேனநாயக்க - 071-8592642.

சப்ரகமுவ மாகாணம்
மஹிந்த குணரத்ன - 071-8592618

வடமேற்கு மாகாணம்
அஜித் ரோஹண - 071-8592600

மத்திய மாகாணம்
லலித் பத்திநாயக்க - 071-8591985

வடமத்திய மாகாணம்
புத்திக சிறிவர்தன - 071-8592645

வடக்கு மாகாணம்
டி.சி.ஏ. தனபால 071-8592644

கிழக்கு மாகாணம் .
வருண ஜெயசுந்தர - 071-8592640

25/09/2025

💥எனது நாட்டு மக்களை பற்றி எனக்கு கனவு உள்ளது!!

23/09/2025

சம்மாந்துறை கபூர் மௌலவி (உமைறா ஹஜ் ட்ரவல்ஸ்) அவர்கள் வபாத்தானார்கள் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்

21/09/2025

இன்று 21 ஆம் தேதி, NPP அரசாங்கத்தின் ஒரு வருட நிறைவு ஆண்டாக இருக்கும். அந்த ஆண்டின் ஆட்சி பற்றி:

மகிழ்ச்சி -❤️. சோகம் -😢

Address

Police Road
Sammanthurai
32200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thuraiyoor News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thuraiyoor News:

Share