Thamizha

Thamizha தமிழா™ http://www.worldtamizha.com/?m=1© Powered by Thamizha Media

பொலிஸ் திணைக்களத்தின் அறிவித்தல்!இலங்கை பொலிஸின் பெயர் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நு...
09/09/2026

பொலிஸ் திணைக்களத்தின் அறிவித்தல்!

இலங்கை பொலிஸின் பெயர் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி விளம்பரங்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான விளம்பரங்கள் மற்றும் தகவல்கள் உத்தியோகபூர்வமானவை அல்ல எனத் தெரிவித்துள்ள பொலிஸார், பொதுமக்கள் அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கை பொலிஸின் பெயர், இலச்சினை மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் விளம்பரங்கள் அல்லது அறிவித்தல்கள் உண்மையானவை அல்ல எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இலச்சினையுடன் கூடிய உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் தகவல்கள் மற்றும் அறிவித்தல்களை மட்டுமே பொதுமக்கள் நம்புமாறு பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

https://worldtamizha.com/archives/19786

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

ரஷ்யா – வடகொரியா இடையே புதிய பாலம் திறப்பு!ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான முதலாவது புதிய சாலைப் பாலம் அதிகாரப்ப...
09/09/2026

ரஷ்யா – வடகொரியா இடையே புதிய பாலம் திறப்பு!

ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான முதலாவது புதிய சாலைப் பாலம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.

துமேன் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இந்த 1 கிலோமீட்டர் நீளமுள்ள இருவழிப் பாலம், ரஷ்யாவின் காசான் மற்றும் வடகொரியாவின் ராசான் பகுதிகளை இணைக்கிறது.

தினசரி 300 வாகனங்கள் வரை இந்தப் பாலத்தின் ஊடாக பயணிக்க முடியும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

யாகோவ் நோவிசென்கோ என்ற சோவியத் இராணுவ அதிகாரியின் பெயர் இந்தப் பாலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.

1946ஆம் ஆண்டு வடகொரியாவின் முன்னாள் தலைவர் கிம் இல் சுங்கை படுகொலை முயற்சியிலிருந்து காப்பாற்றியதாகக் கூறப்படும் நபர் இவர்.

பாலத்தின் திறப்பு விழாவில் ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் மற்றும் வடகொரிய பிரதமர் பாக் தே சோங் ஆகியோர் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.

புதிய பாலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் போக்குவரத்து தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் என இரு தரப்பும் தெரிவித்துள்ளன.

ரஷ்யா–வடகொரியா இடையிலான உறவு உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் மேலும் நெருக்கமடைந்துள்ள நிலையில், இந்தப் புதிய சாலை இணைப்பு இரு நாடுகளின் மூலோபாய ஒத்துழைப்பில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

வடகொரியா ரஷ்யாவுக்கு இராணுவ ஆதரவு வழங்கி வருவதாக பல நாடுகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், புதிய பாலம் எதிர்காலத்தில் இராணுவ தளவாடப் போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்படலாம் என சில நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்தப் பாலத்தின் முக்கிய நோக்கம் வர்த்தகம் மற்றும் பொதுப் போக்குவரத்தை அதிகரிப்பதாக ரஷ்யா மற்றும் வடகொரியா தெரிவித்துள்ளன.

https://worldtamizha.com/archives/19783

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

ஜப்பானில் வரலாறு காணாத கனமழை!ஜப்பானின் உவேடா ஆற்றின் நீர்மட்டம் உயர்வு.ஜப்பானின் பல பகுதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்து...
08/09/2026

ஜப்பானில் வரலாறு காணாத கனமழை!

ஜப்பானின் உவேடா ஆற்றின் நீர்மட்டம் உயர்வு.

ஜப்பானின் பல பகுதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது, மேலும் இசு தீவுகளுக்கு மிக உயர்ந்த அளவிலான நிலச்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஃபுகுஷிமா பகுதியில் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அதிவேக ரயில் (ஷின்கான்சென்) மற்றும் நகர்ப்புற ரயில்/மெட்ரோ சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

https://worldtamizha.com/archives/19778

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் சிறப்பு தள்ளுபடி!இலங்கையின் முன்னணி சர்வதேச வர்த்தகக் கண்காட்சியான...
08/09/2026

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் சிறப்பு தள்ளுபடி!

இலங்கையின் முன்னணி சர்வதேச வர்த்தகக் கண்காட்சியான “Sri Lanka Expo 2027” விளம்பரப்படுத்துவதற்காக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் Airbus A321 Neo விமானம் சிறப்பு வர்த்தக முத்திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையால் (EDB) ஏற்பாடு செய்யப்படும் இக்கண்காட்சி, 2027 ஜனவரி 14 முதல் 17 வரை கொழும்பு BMICH இல் நடைபெறவுள்ளது.

இலங்கையை தெற்காசியாவின் முக்கிய வர்த்தக மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்நிகழ்வில் 750க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், 1,500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களும் பங்கேற்பர்.

இந்த விமானம் இந்தியா, கட்டார், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சேவை வழங்கி சர்வதேசப் பிரசாரத்தை மேற்கொள்ளும். மேலும், வருகை தரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விமானக் கட்டணத்தில் 20% வரை சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.

https://worldtamizha.com/archives/19775

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்!புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு, பதிவு செய்யப்பட்ட ஒரு வாரத்த...
07/09/2026

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்!

புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு, பதிவு செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் இலக்கத் தகடுகள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜூன் 10 முதல் ஓகஸ்ட் 31 வரை பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் தயாரிப்பு முடிவடைந்துள்ளதாகவும், இனி விநியோகம் விரைவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும், மின்சார வாகனங்களை (EV) பொலிஸார் இலகுவாக அடையாளம் காணும் வகையில், அவற்றிற்கு முன் மற்றும் பின் பக்கங்களில் பச்சை நிற இலக்கத் தகடுகள் வழங்கப்படும்.

ஏனைய வாகனங்களுக்கு முன்பக்கம் வெள்ளையும், பின்பக்கம் மஞ்சளும் வழங்கப்படும். அத்துடன் 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் நிலுவையிலுள்ள இலக்கத் தகடுகள் அனைத்தும் அடுத்த 6 மாதங்களுக்குள் வழங்கி முடிக்கப்படும்.

https://worldtamizha.com/archives/19772

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

தாய்லாந்திற்கு பயணம் செய்யும் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு!தாய்லாந்திற்கு பயணம் செய்யும் இல...
07/09/2026

தாய்லாந்திற்கு பயணம் செய்யும் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு!

தாய்லாந்திற்கு பயணம் செய்யும் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தாய்லாந்து அரசாங்கத்தின் புதிய தீர்மானத்தின்படி, எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி முதல் இலங்கையர்கள் விசா இன்றி தாய்லாந்திற்குள் பிரவேசிக்கும் நடைமுறை நிறுத்தப்படவுள்ளது.

ஆகஸ்ட் 31ஆம் திகதி தாய்லாந்து வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில், இலங்கை உள்ளிட்ட 21 நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த விசா இல்லா நுழைவு அனுமதி இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, செப்டம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் தாய்லாந்திற்கு பயணம் செய்ய விரும்பும் இலங்கையர்கள், இணையவழி E-Visa முறையின் மூலம் முன்கூட்டியே விசா பெற்றிருக்க வேண்டும். மேலும், கொழும்பிலுள்ள தாய்லாந்து தூதரகம் நேரடி விசா விண்ணப்பங்களை ஏற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, செப்டம்பர் 14ஆம் திகதிக்கு முன்னர் தாய்லாந்திற்குள் நுழையும் இலங்கைப் பயணிகள், தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின் அடிப்படையில் 60 நாட்கள் வரை தங்கியிருக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://worldtamizha.com/archives/19769

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்!இலங்கையில் பதிவு செய்யப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் (Electric ...
07/09/2026

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்!

இலங்கையில் பதிவு செய்யப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் (Electric Vehicles) இனி பச்சை நிறப் பின்னணியைக் கொண்ட புதிய இலக்கத் தகடுகள் (Number Plates) வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களை ஏனைய எரிபொருள் வாகனங்களில் இருந்து எளிதாக அடையாளம் காணும் நோக்கிலேயே இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அவற்றுக்கான சிறப்பு சலுகைகள் மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்தும் நிலையங்களில் முன்னுரிமை அளிக்கவும் இந்த இலக்கத் தகடுகள் பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பதிவுகளுக்கு மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள மின்சார வாகனங்களுக்கும் இந்த இலக்கத் தகட்டைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்படவுள்ளது.

https://worldtamizha.com/archives/19766

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்த்ரி மோலா (Joheirry Mola) உலக அழகி பட்டம் வென்றார்!வியட்நாமின் நா திராங் நகரில் செப...
06/09/2026

டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்த்ரி மோலா (Joheirry Mola) உலக அழகி பட்டம் வென்றார்!

வியட்நாமின் நா திராங் நகரில் செப்டம்பர் 5, 2026 அன்று நடைபெற்ற 73-வது உலக அழகிப் போட்டி (Miss World 2026) இறுதிப்போட்டியில், டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 24 வயதான ஜோஹெய்த்ரி மோலா (Joheirry Mola) உலக அழகி பட்டத்தை வென்றார்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், தனது திறமை, அறிவுத்திறன் மற்றும் மேடை வெளிப்பாட்டால் நடுவர்களைக் கவர்ந்த ஜோஹெய்த்ரி மோலா, இறுதியில் உலக அழகி மகுடத்தைச் சூடினார்.

இந்த வெற்றியின் மூலம் டொமினிக்கன் குடியரசுக்கு சர்வதேச அழகிப் போட்டியில் மேலும் ஒரு முக்கியமான பெருமையை அவர் பெற்றுத் தந்துள்ளார்.

https://worldtamizha.com/archives/19752

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக வெளியான அறிவித்தல்!கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்...
06/09/2026

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக வெளியான அறிவித்தல்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இந்த மதிப்பீட்டுச் செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதிக்குள் மதிப்பீட்டுப் பணிகளை முழுமையாக நிறைவுசெய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், உயர்தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நேற்றைய தினத்துடன் (05) நிறைவடைந்தன.

இந்தமுறை நடைபெற்ற பரீட்சையில் மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

https://worldtamizha.com/archives/19749

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு!லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இன்று (05.09.2026) முதல் உடன் அமுலுக...
05/09/2026

லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இன்று (05.09.2026) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🔥 புதிய விலை விபரம்:

🔹 12.5 kg சிலிண்டர்
ரூ.100 குறைப்பு
➡️ புதிய விலை – ரூ.4,365

🔹 5 kg சிலிண்டர்
ரூ.42 குறைப்பு
➡️ புதிய விலை – ரூ.1,750

🔹 2.3 kg சிலிண்டர்
ரூ.20 குறைப்பு
➡️ புதிய விலை – ரூ.815

இந்த புதிய விலைத் திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது!

https://worldtamizha.com/archives/19746

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

Address

Sammanthurai
32200

Alerts

Be the first to know and let us send you an email when Thamizha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thamizha:

Shortcuts

Share