Thamizha

Thamizha தமிழா™ http://www.worldtamizha.com/?m=1© Powered by Thamizha Media

முதல் முறையாக முஸ்லிம் மேயராக சொஹ்ரான் மம்தானி தெரிவு!முற்போக்கான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும், நியூயார்க் நகர மேயர் ...
25/06/2025

முதல் முறையாக முஸ்லிம் மேயராக சொஹ்ரான் மம்தானி தெரிவு!

முற்போக்கான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும், நியூயார்க் நகர மேயர் பதவிக்குப் போட்டியிட்ட முதல் முஸ்லிம் என்ற பெருமையும் கொண்ட 33 வயதான Zohran Mamdani சொஹ்ரான் மம்தானி, போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்த வாக்குகளில் 93% எண்ணப்பட்ட நிலையில்:

Mamdani – 43.5%
முன்னாள் ஆளுநர் Andrew Cuomo – 36.4%

🛑 பல ஆண்டுகள் அனுபவமுள்ள Cuomo, சமீபத்திய ஊழல் குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்ட நிலையில்,
புதிய தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் Mamdani, எதிர்பாராத வகையில் பெரும் ஆதரவை பெற்றுள்ளார்.

வெற்றிக்கூட்டத்தில் Mamdani உரையில் கூறியதாவது: > “இன்று இரவு நாம் வரலாறு படைத்தோம்.நான் நியூயார்க் நகரின் டெமோகிரடிக் மேயர் வேட்பாளராக இருக்கிறேன்.”

📌 முக்கியத் தகவல்:
Zi**nist வட்டாரங்களின் நன்கு நிதியூட்டப்பட்ட எதிர்ப்பு பிரச்சாரங்கள்,
மற்றும் நியூயார்க் நகரில் வசிக்கும் மில்லியனுக்கும் அதிகமான யூதர்களின் இருப்பு போன்ற சவால்களை மீறி,
Zohran Mamdani இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

https://worldtamizha.com/archives/15210

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!ஈரான் – இஸ்ரேல் மோதல் குறித்த கவலைகள் இருந்த போதிலும், அடுத்த இரண்டு மா...
25/06/2025

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!

ஈரான் – இஸ்ரேல் மோதல் குறித்த கவலைகள் இருந்த போதிலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு போதுமான எரிபொருளை இலங்கை பெற்றுள்ளதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர், இதன் காரணமாக நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கான எரிபொருள் மலேசியா, சிங்கப்பூர், ஓமான் மற்றும் இந்தியா போன்ற பாதிக்கப்படாத நாடுகளிலிருந்து பெறப்படுகின்றன.

லங்கா ஐஓசி, சினோபெக் மற்றும் ஆர்.எம் பார்க் போன்ற பிற விநியோகஸ்தர்களும் தடையற்ற விநியோகங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மசகு எண்ணெய் இறக்குமதி நிலையானதாக உள்ளதுடன், முழு ஆண்டுக்குமான கொள்வனவு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், எரிபொருள் பற்றாக்குறை அல்லது விலை உயர்வு குறித்த சமூக ஊடக வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச சந்தையில் விலை நிலையானதாக இருப்பதாகவும், அடுத்த மாதம் விலை உயர்வுக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.

https://worldtamizha.com/archives/15207

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டன – டொனால்ட் ட்ரம்ப்!இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பட...
24/06/2025

இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டன – டொனால்ட் ட்ரம்ப்!

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாகக் கூறியிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தற்போது இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இருநாடுகள் மீதும் தனக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய டிரம்ப், குறிப்பாக இஸ்ரேல் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் ஆதங்கப்பட்டுள்ளார்.

குண்டுவீச்சை நிறுத்திவிட்டு “உங்கள் விமானிகளை இப்போதே அழைத்து வாருங்கள்” என்று அவர் வலியுறுத்தியுள்ளதாக வௌிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலுக்குக் கடுமையான எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.

“குண்டு வீச வேண்டாம்” அது ஒரு “பெரிய மீறல்” என்று டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://worldtamizha.com/archives/15204

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைப் பதிவு!இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் அமலுக்கு வந்துள்ளதாகவும் அதை தயவுசெய்து மீறவேண்டாம் ...
24/06/2025

டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைப் பதிவு!

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் அமலுக்கு வந்துள்ளதாகவும் அதை தயவுசெய்து மீறவேண்டாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஈரானின் மூன்று அணு ஆயுத தளவாடங்கள் மீது பஸ்டர் பங்கர் குண்டுகளைப் போட்டு அமெரிக்கா அதிரடியாகத் தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து, நேற்றிரவு கட்டாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் அதிரடியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், இருநாடுகளுக்கு இடையே எந்த போர் நிறுத்தமும் இல்லை என ஈரான் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், 12 நாள்கள் தொடர்ந்து இடைவிடாமல் நடைபெற்றுவந்த இஸ்ரேல் உடனான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சண்டை நிறுத்தத்தை ஈரான் அறிவித்திருப்பதாகவும், இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனாட் டிரம்ப் ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இப்போது முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துவிட்டது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

https://worldtamizha.com/archives/15201

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்புகள் திறப்பு!கட்டார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்புகள் தற்காலிகமாக மூடப்...
24/06/2025

மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்புகள் திறப்பு!

கட்டார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஈரான், கட்டாரில் உள்ள அல் உதெய்த் அமெரிக்க இராணுவ தளத்தையும், ஈராக்கில் உள்ள மற்றொரு அமெரிக்க தளத்தையும் குறிவைத்து நேற்று (ஜூன் 23, 2025) ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, பல மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான்பரப்புகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தன.

இதன் விளைவாக, ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பறந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஐந்து விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்தது. இந்த விமானங்கள் மஸ்கட், டுபாய் மற்றும் ரியாத் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக அந்த சபை உறுதிப்படுத்தியது.

தாக்குதல்களைத் தொடர்ந்து, கட்டார் தனது வான்பரப்பை மீண்டும் திறந்துவிட்டதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. மேலும், நாட்டின் பாதுகாப்பு நிலைமை தற்போது சீரடைந்துள்ளதாக கட்டார் அரசு தெரிவித்துள்ளது.

குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும் தங்கள் வான்பரப்புகளை மீண்டும் திறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://worldtamizha.com/archives/15198

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

23/06/2025

கட்டார் வான்பரப்பு!
(கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதாக தகவல்)

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

பச்சை மிளகாயின் விலை அதிகரிப்பு!பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராமின் சில்லறை விலை 1000 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்க...
23/06/2025

பச்சை மிளகாயின் விலை அதிகரிப்பு!

பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராமின் சில்லறை விலை 1000 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாயின் மொத்த விலை 500 தொடக்கம் 600 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

விலை சடுதியாக அதிகரிப்பு
இந்தநிலையில், சந்தைகளில் பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராமின் சில்லறை விலை 1000 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளது.

பச்சை மிகளகாயின் அறுவடை குறைந்துள்ளதுடன், சந்தை வரத்தும் வெகுவாக குறைந்துள்ளமையின் காரணமாக இவ்வாறு விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தக்காளி ஒரு கிலோகிராமின் விலையும் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தக்காளி ஒரு கிலோ கிராமின் மொத்த விலை 200 ரூபாவாகவும் சில்லறை விலை 500 ரூபாவாகவும் அதிகரித்து காணப்படுகின்றது.

https://worldtamizha.com/archives/15195

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

நிதி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமனம்!நிதி அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பிரதி அமைச்சர்...
23/06/2025

நிதி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமனம்!

நிதி அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சின் செயலாளராக இருந்த மஹிந்த சிறிவர்தன குறித்த பதவியை சமீபத்தில் இராஜினாமா செய்ததோடு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) மாற்று நிர்வாக இயக்குனராகப் பதவியேற்கவுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷன சூரியப்பெரும, தற்போதைய அரசாங்கத்தில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகப் பணியாற்றியதோடு, மஹிந்த சிறிவர்தன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள நிதி அமைச்சின் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்பதற்காகக் கடந்த வாரம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://worldtamizha.com/archives/15191

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

நாட்டின் சிறைச்சாலை உயர் அதிகாரிகள் அவசரக் கூட்டம்!நாடு முழுவதிலுமுள்ள அனைத்துச் சிறைச்சாலை உயர் அதிகாரிகளும் கொழும்புக்...
23/06/2025

நாட்டின் சிறைச்சாலை உயர் அதிகாரிகள் அவசரக் கூட்டம்!

நாடு முழுவதிலுமுள்ள அனைத்துச் சிறைச்சாலை உயர் அதிகாரிகளும் கொழும்புக்கு அழைக்கப்பட்டு, இன்று (ஜூன் 23) காலை 8:30 மணிக்கு நீதி அமைச்சரின் தலைமையில் நீதி அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதிலுமிருந்து வந்த அனைத்து சிறைச்சாலை அத்தியட்சகர்கள், ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் பங்கேற்றனர்.

முக்கியமாகப் பேசப்பட்டவை,

🔷 சிறைச்சாலைகளில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

🔷சிறைச்சாலைகள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்.

இந்தக் கலந்துரையாடல் சிறைச்சாலை அமைப்பில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://worldtamizha.com/archives/15188

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் விசேட வேலைத்திட்டம்!தென்னைச் செய்கையில் வெள்ளை ஈ சேதம் உள்ளிட்ட பூச்சிகளால் ஏற்பட்ட பாதிப...
23/06/2025

தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் விசேட வேலைத்திட்டம்!

தென்னைச் செய்கையில் வெள்ளை ஈ சேதம் உள்ளிட்ட பூச்சிகளால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கட்டுப்படுத்த தென்னைப் பயிர்ச்செய்கை சபை விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

முதல் கட்டம் அடுத்த மாதம் 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயகொடி தெரிவித்தார்.

https://worldtamizha.com/archives/15185

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு!சுமார் 15 ஆயிரம் வாகனங்களுக்கு வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கான ...
22/06/2025

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு!

சுமார் 15 ஆயிரம் வாகனங்களுக்கு வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் பணிகள் ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையால், இவ்வாறு வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் நிறுவனத்துக்கு பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கு புதிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,இதுவரை 15 நிறுவனங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

https://worldtamizha.com/archives/15182

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

ஐரோப்பிய ஒன்றியத்தின் வலியுறுத்தல்!ஈரானுடனான இஸ்ரேலின் போரில் அமெரிக்கா இணைந்ததையடுத்து, பதற்றத்தைத் தணித்து பேச்சுவார்த...
22/06/2025

ஐரோப்பிய ஒன்றியத்தின் வலியுறுத்தல்!

ஈரானுடனான இஸ்ரேலின் போரில் அமெரிக்கா இணைந்ததையடுத்து, பதற்றத்தைத் தணித்து பேச்சுவார்த்தைக்குத் திரும்ப ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரி காஜா கல்லாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க அனுமதிக்கக்கூடாது, இது “சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்” என்று கூறியுள்ளார். இதேவேளை அனைத்து தரப்பினரும் பின்வாங்கி, பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும், என்பதோடு நிலைமை மோசமடைவதைத் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் நாளை (23) இந் நிலைமை குறித்து விவாதிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

https://worldtamizha.com/archives/15179

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

Address

Sammanthurai
32200

Alerts

Be the first to know and let us send you an email when Thamizha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thamizha:

Share