Thamizha

Thamizha தமிழா™ http://www.worldtamizha.com/?m=1© Powered by Thamizha Media

அம்பாறை சேனநாயக்க சமுத்திரம் தொடர்பாக வெளியான விசேட அறிவித்தல்!அம்பாறை சேனநாயக்க சமுத்திர அணைக்கட்டின் வான்கதவு எந்நேரமு...
26/11/2025

அம்பாறை சேனநாயக்க சமுத்திரம் தொடர்பாக வெளியான விசேட அறிவித்தல்!

அம்பாறை சேனநாயக்க சமுத்திர அணைக்கட்டின் வான்கதவு எந்நேரமும் திறக்கப்படலாம். எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். என்று நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் பொறியாளர் அஜித் கணசேகர எச்சரிக்கை அறிக்கையில் விடுத்துள்ளார். இவ் அறிக்கை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மாத்திரமே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது கல்ஒயா ஆற்றின் மேல்பகுதி மற்றும் நடுப்பகுதியில் ஏற்பட்ட கனமழையால் இங்கினியாகல, அமைந்துள்ள சேனநாயக்க சமுத்திரம் அணையின் நீர்மட்டம் அதிகபட்ச கொள்ளளவிற்கு அருகில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பெய்த கடும் மழையால் அணையின் வான் கதவுகளை திறக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அவ்வாறு திறக்கப்பட்டால் கல்ஒயா ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம் உருவாகும்.

எனவே ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அந்தப் பகுதிகளால் பயணம் செய்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக பின்வரும் பிரதேசங்களில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்:
தமன, அம்பாறை, இறக்காமம், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு சாய்ந்தமருது, கல்முனை நாவிதன்வெளி, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் (ஒலுவில்) அருகிலுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

தொடர்புடைய அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உடனடி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

https://worldtamizha.com/archives/17275

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை!நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு ...
26/11/2025

மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (26) காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், நாளை (27) காலை 8 மணி வரையான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இது செல்லுபடியாகும்.

அதற்கமைய கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நிலதண்டாஹின்ன மற்றும் மத்துரட ஆகிய பிரதேசங்களுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை செல்லுபடியாகும்.

இதேவேளை, மேலும் 7 மாவட்டங்களுக்கு அவதானத்துடன் இருக்குமாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 12 மாவட்டங்களுக்கு விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

எச்சரிக்கை மட்டம் 2 – அவதானத்துடன் இருக்கவும் (Amber)

பதுளை மாவட்டம்:

ஹல்துமுல்ல பசறை

களுத்துறை மாவட்டம்:

வலல்லாவிட்ட புளத்சிங்கள இங்கிரிய

மாத்தறை மாவட்டம்:

பிட்டபெத்தர கொட்டபொல

நுவரெலியா மாவட்டம்:

நுவரெலியா

கண்டி மாவட்டம்:

யட்டிநுவர பாதஹேவாஹெட்ட கங்கவட்ட கோறளை

கேகாலை மாவட்டம்:

மாவனெல்லை

இரத்தினபுரி மாவட்டம்:

கொலன்ன எலபத்த இரத்தினபுரி அயகம பலாங்கொடை கலவானை இம்புல்பே கஹவத்தை நிவித்திகலை

எச்சரிக்கை மட்டம் 1 – விழிப்புடன் இருக்கவும் (மஞ்சள்)

பதுளை மாவட்டம்:

பண்டாரவளை

ஹப்புத்தளை

எல்லை

ஹாலியெல

லுணுகலை பதுளை

கொழும்பு மாவட்டம்:

பாதுக்கை

காலி மாவட்டம்:

நாகொட

அம்பாந்தோட்டை மாவட்டம்:

கட்டுவன

களுத்துறை மாவட்டம்:

மத்துகம ஹொரணை

கண்டி மாவட்டம்:

உடுநுவர

உடபலாத்த

தும்பனை

கங்கையிஹல கோறளை

பஸ்பாகே கோறளை

பாததும்பர

பன்வில

தொழுவ

மெததும்பர

மினிப்பே

கேகாலை மாவட்டம்:

ரம்புக்கனை

ருவன்வெல்ல

தெரணியகலை

யட்டியாந்தோட்டை

கலிகமுவ

அரநாயக்க

கேகாலை

வரகாபொல

குருநாகல் மாவட்டம்:

ரிதிகம

மாவத்தகம

மல்லவப்பிட்டிய

மாத்தளை மாவட்டம்:

நாவுல

யட்டவத்தை

ரத்தோட்டை

அம்பகங்க கோறளை

உக்குவளை

மாத்தறை மாவட்டம்:

பஸ்கொட

நுவரெலியா மாவட்டம்:

அம்பகமுவ கொத்மலை

இரத்தினபுரி மாவட்டம்:

எம்பிலிப்பிட்டிய

ஓப்பநாயக்க

வெலிகெபொல

கிரியெல்ல

https://worldtamizha.com/archives/17272

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

தாய்லாந்தில் வரலாறு காணாத வெள்ளம்!தாய்லாந்தின் பல பகுதிகள் வரலாறு காணாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.தெற்கு தாய்லாந்தி...
26/11/2025

தாய்லாந்தில் வரலாறு காணாத வெள்ளம்!

தாய்லாந்தின் பல பகுதிகள் வரலாறு காணாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.

தெற்கு தாய்லாந்தில் ஒன்பது மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 33க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும், கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இடர் முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வார இறுதியில், நவம்பர் 22ஆம் திகதி முதல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சுராட் தனி, நக்ஹொன் சி தம்மாரட், த்ராங், பட்டாலுங், சோங்க்லா, பத்தாணி, யலா மற்றும் நாரதிவத் உள்ளிட்ட மாகாணங்களில் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ளது.

கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சேதங்களைக் குறைக்க, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்ற உள்ளூர் அதிகாரிகள் உத்தரவிடப்பட்டுள்ளனர்.

நேற்றுமுதல் மீண்டும் வெள்ள நீர் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஹட்யாய் நகரில் உள்ள அதிக ஆபத்துள்ள அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்களை வெளியேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடுமையான வெள்ளத்தைக் கையாளும் முயற்சிகளில் ஒன்றாக சோங்க்லாவில் ஒரு கட்டளை மையத்தை நிறுவ தாய்லாந்துப் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை கடந்த ஒருவார காலமாக ஏற்பட்டுள்ள வௌ்ளம் காரணமாகத் தாய்லாந்தின் அண்டை நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வியட்நாமில் ஒரு வாரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.

மலேசியாவில் 19,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தின்படி, சுமார் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட மண்சரிவில் மேலும் ஏழு பேர் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

https://worldtamizha.com/archives/17269

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையைச் சுற்றியுள்ள பிரதேசங்களுக்கான அறிவிப்பு!மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையைச் சுற்றியுள்ள சில...
26/11/2025

மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையைச் சுற்றியுள்ள பிரதேசங்களுக்கான அறிவிப்பு!

மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையைச் சுற்றியுள்ள சில பிரதேசங்களுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மகாவலி ஆற்றின் சில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று (25) இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக, மகாவலி ஆற்றுப் படுக்கையைச் சேர்ந்த கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிகந்த, மெதிரிகிரிய, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மகாவலி கங்கை சார்ந்த தாழ்வான பகுதிகளுக்கு இவ்வாறு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் கல்லெல்ல பகுதியும், சோமாவதி ரஜமஹா விகாரைக்கான நுழைவு வீதியும், சோமாவதி ரஜமஹா விகாரையைச் சுற்றியுள்ள பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால், அடுத்த சில நாட்கள் வரை சோமாவதிய ரஜமஹா விகாரைக்குச் செல்லும் பக்தர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், அப்பிரதேசங்களில் மகாவலி கங்கைக்கு அண்மையில் வசிக்கும் பொதுமக்களும் வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

https://worldtamizha.com/archives/17266

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை கிழக்கு ம...
26/11/2025

கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

கிழக்கு மாகாணத்தில் நிலவும் அசாதாரண காலநிலையினைக் கருத்திற் கொண்டு 26 இம் திகதி முதல் 30 வரை முன்பள்ளி பாாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்பள்ளிப் பணியகத்தின் பொது முகாமையாளர் கே.ஜெயவதனன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண பணிப்பாளர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், பிரதேச செயலகங்களின் முன்பள்ளி செயற்றிட்ட உத்தியோகத்தர்களுக்கும் இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://worldtamizha.com/archives/17263

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

தாழமுக்கமாக மாறும் குறைந்த அழுத்தம் – வானிலை தொடர்பாக வெளியான அறிவிப்பு!இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்...
26/11/2025

தாழமுக்கமாக மாறும் குறைந்த அழுத்தம் – வானிலை தொடர்பாக வெளியான அறிவிப்பு!

இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மற்றும் காற்று நிலைமை அடுத்த சில நாட்களில் (நவம்பர் 25 – 29) மேலும் தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ வரையான மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

ஏனைய பிரதேசங்களில் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

மீனவர்கள் மற்றும் கடலில் பயணம் செய்வோர் நாளை (நவம்பர் 26) முதல் மறு அறிவித்தல் வரும் வரை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நவம்பர் 25 முதல் 29 வரை நிலவவுள்ள இந்த மோசமான வானிலை குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், அவசர உதவிகளுக்கு உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://worldtamizha.com/archives/17260

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறப்பு!மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந...
26/11/2025

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறப்பு!

மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த தினம் இப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இவ்வீதி முழுமையாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://worldtamizha.com/archives/17256

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு!நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் கட...
25/11/2025

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது.

நீர்ப்பாசனப் பிரதேசங்களில் பெய்யும் தொடர் மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு இன்று (25) காலை முதல் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், நீர்த்தேக்கத்திற்குக் கீழ் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என, நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தத் தொடர் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடைமழை பெய்து வருவதால், பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மலைகள், மண்மேடுகள் அருகே வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் சில இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்துள்ளன. இந்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்கள் வாகனங்களை ஓட்ட வேண்டும் எனப் போக்குவரத்துப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

மேலும், மழையுடன் இடையிடையே ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கலுகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவல, தியகல, வட்டவளை, ஹட்டன் ஆகிய பகுதிகளிலும், ஹட்டன் – நுவரெலியா வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளையார், தலவாக்கலை, ரதல்ல, நானுஓயா ஆகிய பகுதிகளிலும் அடிக்கடி பனிமூட்டம் காணப்படுகிறது.

வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளில், தங்களுக்கு உரிய பக்கத்தில் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து, அவதானமாக வாகனம் ஓட்டுவதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கலாம் என, வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீர்ப்பாசனப் பிரதேசங்களில் அதிக மழைவீழ்ச்சி கிடைப்பதால், காசல்ரி, கெனியோன், விமலசுரேந்திர, லக்ஸபான, நவலக்ஸபான, மவுசாக்கலை, பொல்பிட்டிய ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் சடுதியாக உயர்ந்து வருகின்றன.

எனவே, இந்நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் எவ்வேளையிலும் திறக்கப்படலாம் என்பதால், குறித்த நீர்த்தேக்கங்களுக்குக் கீழ்ப்பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கங்களுக்குக் கிடைக்கும் நீரைப் பயன்படுத்தி, உச்ச அளவு நீர்மின் உற்பத்தி இடம்பெற்று வருவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://worldtamizha.com/archives/17252

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

அனர்த்த அவசர முன்னெச்சரிக்கை!இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும் தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் இன்று இர...
25/11/2025

அனர்த்த அவசர முன்னெச்சரிக்கை!

இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும் தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் இன்று இரவு ஒருங்கிணைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றம் பெறும்.

இது நாளைய தினம்(26.11.2025) இலங்கையின் தென்பகுதியூடாக ( அம்பாந்தோட்டைக்கு அண்மையாக) வடக்கு திசை நோக்கி நகரத் தொடங்கும்.

இந்த தாழமுக்கம் எதிர்வரும் 27.11.2025 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்று அன்றைய தினம் அல்லது 28.11.2025 அன்று புயலாக மாற்றம் பெறும்.

இலங்கையின் காலநிலை வரலாற்றில் இரண்டு காற்றுச் சுழற்சிகள் ஒன்றாகி தென் பகுதியூடாக ஊடறுத்து கிழக்கு மற்றும் வடக்கு மாகாணத்தை நோக்கி வருவது இதுவே முதல் முறையாகும்.

வங்காள விரிகுடாவின் வரலாற்றிலும் மேற்கு நோக்கி நகர்ந்த காற்றுச் சுழற்சி மீண்டும் கிழக்கு நோக்கி நகர்ந்து இன்னுமொரு காற்றுச் சுழற்சியுடன் இணைந்து பலமடைவதும் இதுவே முதல் முறை.

இதனால் நாடு முழுவதும் மிகக் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. இந்தக் காற்றுச் சுழற்சியின் செல்வாக்கினுள் இலங்கை முழுவதும் உள்ளடங்கியுள்ளது.

ஒரு தாழ்வுநிலை/தாழமுக்கம்/ காற்றழுத்த தாழ்வு நிலை/ தாழ்வு மண்டலம்/ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்/ புயல்/ சூறாவளி/ சூப்பர் சூறாவளி எந்த திசை நோக்கி நகர்கின்றதோ அந்த பகுதியே அதன் காற்றுக் குவிப்பு மையமும் மழை வலயமும் ஆகும்.

அந்த வகையில் இந்த தாழமுக்கம் நகரும் போது இந்த காற்றுக் குவிப்பு மற்றும் மழை வலயத்தினுள் தென் மாகாணம், ஊவா மாகாணம்,

மிக முக்கியமாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் அடங்குகின்றன.

எனவே நாளை முதல் (26.11.2025)கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு கனமழை கிடைக்கத் தொடங்கும்.

எதிர்வரும் 27.11.2025 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மிகக் கனமழையும், வேகமான காற்று வீசுகையும் நிகழும்.

இந்த நிலைமை எதிர்வரும் 29.11.2025 வரை தொடரும்.

இந்த நாட்களில் அதாவது எதிர்வரும் 28.11.2025 முதல் 29.11.2025 வரை பல பகுதிகளில் திரட்டிய மழைவீழ்ச்சியாக 350 மி.மீ. க்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே இன்று கிடைத்துக் கொண்டிருக்கும் மழையினால் கிழக்கு மாகாணத்தின் கணிசமான பகுதிகள் வெள்ள பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

எனவே எதிர்வரும் நாட்களில் கிடைக்கும் கன மழையும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் தீவிரமான வெள்ள நிகழ்வுகளை ஏற்படுத்தும்.

எதிர்வரும் நாட்கள் வானிலை ரீதியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மிக நெருக்கடியான நாட்களாகும்.

ஆகவே பொதுமக்கள் இந்த எச்சரிக்கையை புறந்தள்ளாமல், போதுமான தயார்ப்படுத்தல் மற்றும் முன்னேற்பாடுகளை மேற் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கணிசமான அளவு தவிர்க்கலாம்.

புயல்/ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல காற்று வீசும்போது...

1. சகல இலத்திரனியல் பொருட்களினதும் மின் இணைப்பைத் துண்டித்து தகவல்களை அறிய தொலைபேசியை மட்டும் பயன்படுத்தி தகவல்களை அறிய வேண்டும்.

2. பாதுகாப்பான உறைவிடத்தின் உள்ளே இருக்கவும்.

3. பாதுகாப்பான இடம் தூரத்தில் உள்ளதாயின் முன்னரே சென்று போக்குவரத்து நெரிசல், வெள்ள அனர்த்தம், காற்றுப் பாதிப்பு என்பவற்றை தவிர்த்துக் கொள்ளவும்.

4. வீடு அல்லது குடிசை உடைய அல்லது சரிய ஆரம்பித்தால் மெத்தைகள் மற்றும் போர்வைகளுடன் உறுதியான கட்டில் அல்லது மேசைக்கு கீழே சென்று உங்களைப் பாதுகாக்கவும்.

5. புயலின் அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் கண்பகுதி தொடர்பாக அவதானத்துடன் இருத்தல் வேண்டும். காற்று வீழ்ச்சியடைந்ததும் சூறாவளி முடிவடைந்தது என முடிவெடுக்க வேண்டாம். வலிமையான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய காற்று வேறு திசையில் இருந்து வீசலாம். உத்தியோக பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கவும்.

6. வாகனம் செலுத்திக் கொண்டிருந்தால் வாகனத்தை நிறுத்தும்போது கடலுக்கு தூரமாகவும் மரங்கள், மின்கம்பங்கள், மின் கம்பிகள் இல்லாத இடத்தில் நிறுத்தவும் வாகனத்துள்ளே இருக்கலாம்.

புயல்/ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல காற்று வீசிய பின்...

1. பாதுகாப்பானது என அறிவிக்கும் வரை வெளியே செல்ல வேண்டாம்.

2. சமையல் வாயு வெளியேற்றத்தினைச் சரிபார்க்கவும். ஈரமாக இருப்பின் மின்சார சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்.

3. ஆலோசனைக்காகவும், எச்சரிக்கைக்காகவும் புதிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்

4. சேதமடைந்த மின்சார இணைப்புக்கள், பாலங்கள், கட்டிடங்கள், மரங்கள், தொடர்பாக அவதானத்துடன் இருங்கள். வெள்ளநீர்ப்பகுதிக்குள் செல்ல வேண்டாம்.

5. தேவையற்ற தொலைபேசி அழைப்புக்களைத் தவிருங்கள்.

வெள்ளப்பெருக்கு நிகழ்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய தயார்ப்படுத்தல் முறைகள்.

1. வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய இடங்களை அறிந்து வைத்திருத்தல்.

2. வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலப்பகுதிகளில் பாதுகாப்பாக தங்குவதற்குரிய இடங்களை அறிந்து வைத்திருத்தல்.

3. முடிந்தால் உங்கள் பிரதேசங்களில் நாளை மாலைக்குள் இயற்கையான மற்றும் செயற்கையான வடிகால்களைத் துப்புரவாக்குதல்.

4. வெள்ளப்பாதிப்பின் அபாய அறிவிப்புக்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளல்.

5. வெள்ளப்பாதிப்புக் காலங்களில் பாதுகாப்பாக தங்கலாம் என்று அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்கு வெள்ளம் குறைவாக இருக்கும் போது சென்றடைதல் வேண்டும்.

6. அவசரகால பொதியை எடுப்பதுடன் மிக முக்கியமான ஆவணங்களை வெள்ளத்தினின்றும் பாதுகாத்தல்.

7. வெள்ள அமைத்துள்ள பகுதிகளில் உள்ள மக்கள் சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளை மிக விரைவாக பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லல்.

8. மின்சார, தெலைத் தொடர்பு இணைப்புக்களை துண்டித்தல்.

9. இடம்பெயர்ந்தோர் முறையான அறிவிப்பு வரும் வரை வீடுகளுக்கு திரும்பாமை.

10.தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதனால் சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடித்தல்.

3. வெள்ள நீர்ப்பகுதிகளுக்கு செல்லாது இருத்தல்.

மேற்குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, வரவிருக்கும் அனர்த்தத்தினால் எமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்ப்போம்.

குறிப்பு: மாதிரிகளின் அடிப்படையிலேயே இந்த முன்னறிவிப்பு வழங்கப்படுகின்றது. தீவிர வானிலை தொடர்பான இந்த முன்னறிவிப்புக்களில் சில மாற்றங்கள் நிகழலாம் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

- நாகமுத்து பிரதீபராஜா -

https://worldtamizha.com/archives/17249

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு!2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 14.4 பில்லியன் அ...
25/11/2025

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 14.4 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் 6.0% நிலையான முன்னேற்றத்தையும் கண்டுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு சபை குறிப்பிடுகிறது.

இலங்கை சுங்கத்துறை வெளியிட்ட தரவுகளின்படி, இரத்தினக் கற்கள், நகைகள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களுடன் சேர்த்து, மொத்த ஏற்றுமதி வருவாய் 14,433.82 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட ஒப்பீட்டளவில் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஒரு வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஏற்றுமதி வருவாய் 14 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தக் காலகட்டத்தில், தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி முதல் முறையாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் தாண்டியுள்ளது.

https://worldtamizha.com/archives/17246

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

இன்றைய வானிலை தொடர்பான தகவல்!தெற்கு அந்தமான் கடல் பகுதியை அண்மித்து உருவாகி வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம்...
25/11/2025

இன்றைய வானிலை தொடர்பான தகவல்!

தெற்கு அந்தமான் கடல் பகுதியை அண்மித்து உருவாகி வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று முதல் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் நிலைகளில் நீர் மட்டம் மிக அதிகமாக இருப்பதால், திடீர் மழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று ( 25) முதல் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம் நிலவுவதால், நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிடும் முன் கூட்டிய வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்புகளின் மீது அனைத்து நீர்த்தேக்கங்களின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும், அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் மக்களும் மிகுந்த கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

https://worldtamizha.com/archives/17243

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை திறப்பு!பதுளை – கொழும்பு பிரதான வீதியின் ஹல்துமுல்லை பகுதியில் வாகன போக்க...
25/11/2025

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை திறப்பு!

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் ஹல்துமுல்லை பகுதியில் வாகன போக்குவரத்துக்காக தற்போது ஒரு வழிப்பாதை திறந்துவிடப்பட்டுள்ளது.

பெரகலைக்கும் ஹல்துமுல்லைக்கும் இடையேயான பகுதியில் நேற்று (24) இரவு மண்சரிவு ஏற்பட்ட நிலையில் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

எனினும், குறித்த பகுதியில் மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் தொடர்வதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை மண்சரிவு ஏற்பட்ட இடத்தை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.

இதேவேளை மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ள பஹல கடுகன்னாவ வீதியில் மழை பெய்யாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் வாகன போக்குவரத்துக்காக ஒரு வழிப் பாதையை திறப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த வீதியில் வாகனப் போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அதன் பதில் பணிப்பாளர் நாயகம் கே.எம். பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொடரும் மழையுடனான காலநிலை காரணமாக, களு, கிங் மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நில்வளா கங்கையின் தலகாகொட மற்றும் பாணதுகம ஆகிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கெடுக்கும் நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் 4 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டு, வினாடிக்கு 16,200 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://worldtamizha.com/archives/17239

https://chat.whatsapp.com/BQhLU2EpfJcDUdpu3X2wSg

Address

Sammanthurai
32200

Alerts

Be the first to know and let us send you an email when Thamizha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thamizha:

Share