17/11/2025
களவு பிடிப்பது கொழும்பில்தானா?
மாகாணங்களில் இல்லையா?
××××××××××××××××××××××××××××
ஊழலும், இலஞ்சமும், கள்ளன்பிடிக்கிறதும்
, கைது செய்றதும் எல்லாமண்ணங்கட்டியும்
கொழும்பிலதான் நடக்குது.
ஆனால் மாகாண மட்டத்தில உலகத்தை திண்டு கைகழுவின பச்சக்கள்ளனுகள்
இன்னமும் இருக்கிறானுகள். வாகனங்கள
மோசடி செய்தவனுகள், கொந்தராத்துகள
மோசடி செய்தவனுகள், பாதுகாப்புச் சேவை
என்ற பெயரில் திருவிளையாடல் நடத்தின
திருட்டு ஆசாமிகள், சொந்த தேவைக்கு அரச பணத்தை செலவழித்தவனுகள்,
மக்கள்ற கலியாணம் காட்சிகளுக்கு அரச
வாகனத்தை பயன்படுத்தியவனுகள், தான்
வாகனத்தை ஓட்டி புரட்டி றைவர்ட பேரில
போட்டவனுகள் இப்படி பல பல ரகம்.
இதையெல்லாம் ஜனாதிபதி அனுர குமார, இலஞ்சஊழல்ஆணைக்குழு,CID,ஜனாதிபதி
ஊழல் ஒழிப்பு பிரிவு என்பன இவற்றை
இன்னும் கண்டு கொள்ளவே இல்லை.
மாகாண சபையில் உள்ளவனுகள் உத்தம
இராசாக்கள் என்ற நினைப்பு இன்னும்
தொய்ந்து போன ஆளுனர்கள் அவர்களை
பாதுகாத்தல் இப்படிபல்வேறுகாவலரன்கள்.
ஏனைய மாகாணங்களை விட இவை வட,
கிழக்கு மாகாணங்களில் தாராளமாகவே
கடந்த காலங்களில் தலைவிரித்தாடியது.
இன்னமும் தலை விரித்தாடுகிறது.வரும்
ஆளுனரோடு ஒட்டி உறவாடி தொடர்ந்தும்
தாராளமாக களவெடுக்கிறார்கள். திமிர்
தனத்தில் நடக்கிறார்கள்.
களவுகள், ஊழல்கள் கண்டு பிடிக்கப்படும்
என எதிர்பார்த்தசோணங்கிகளுக்குவெறும்
ஏமாற்றம் தான்மிச்சம்.இந்தஇலட்சணத்தில
சிஸ்டம் சேஞ்வேற.
வடக்கிற்கு வேதம் ஒதும் ஆளுனர் ஒருவன்.
அவரைக்காப்பாற்ற அமைச்சரான நியூ
டக்ளஸ் , கிழக்கில் ஜெயங்கொண்டான்
பேராசிரியர்.அவரை வழிநடாத்த அருண்
தம்பி.
எல்லாம் கடந்து போகும் அடுத்த தேர்தல்
வரும்வரை.