Mulli Page

Mulli Page Magazine and Miracle

23/11/2025
17/11/2025

களவு பிடிப்பது கொழும்பில்தானா?
மாகாணங்களில் இல்லையா?
××××××××××××××××××××××××××××

ஊழலும், இலஞ்சமும், கள்ளன்பிடிக்கிறதும்
, கைது செய்றதும் எல்லாமண்ணங்கட்டியும்
கொழும்பிலதான் நடக்குது.

ஆனால் மாகாண மட்டத்தில உலகத்தை திண்டு கைகழுவின பச்சக்கள்ளனுகள்
இன்னமும் இருக்கிறானுகள். வாகனங்கள
மோசடி செய்தவனுகள், கொந்தராத்துகள
மோசடி செய்தவனுகள், பாதுகாப்புச் சேவை
என்ற பெயரில் திருவிளையாடல் நடத்தின
திருட்டு ஆசாமிகள், சொந்த தேவைக்கு அரச பணத்தை செலவழித்தவனுகள்,
மக்கள்ற கலியாணம் காட்சிகளுக்கு அரச
வாகனத்தை பயன்படுத்தியவனுகள், தான்
வாகனத்தை ஓட்டி புரட்டி றைவர்ட பேரில
போட்டவனுகள் இப்படி பல பல ரகம்.

இதையெல்லாம் ஜனாதிபதி அனுர குமார, இலஞ்சஊழல்ஆணைக்குழு,CID,ஜனாதிபதி
ஊழல் ஒழிப்பு பிரிவு என்பன இவற்றை
இன்னும் கண்டு கொள்ளவே இல்லை.

மாகாண சபையில் உள்ளவனுகள் உத்தம
இராசாக்கள் என்ற நினைப்பு இன்னும்
தொய்ந்து போன ஆளுனர்கள் அவர்களை
பாதுகாத்தல் இப்படிபல்வேறுகாவலரன்கள்.

ஏனைய மாகாணங்களை விட இவை வட,
கிழக்கு மாகாணங்களில் தாராளமாகவே
கடந்த காலங்களில் தலைவிரித்தாடியது.
இன்னமும் தலை விரித்தாடுகிறது.வரும்
ஆளுனரோடு ஒட்டி உறவாடி தொடர்ந்தும்
தாராளமாக களவெடுக்கிறார்கள். திமிர்
தனத்தில் நடக்கிறார்கள்.

களவுகள், ஊழல்கள் கண்டு பிடிக்கப்படும்
என எதிர்பார்த்தசோணங்கிகளுக்குவெறும்
ஏமாற்றம் தான்மிச்சம்.இந்தஇலட்சணத்தில
சிஸ்டம் சேஞ்வேற.

வடக்கிற்கு வேதம் ஒதும் ஆளுனர் ஒருவன்.
அவரைக்காப்பாற்ற அமைச்சரான நியூ
டக்ளஸ் , கிழக்கில் ஜெயங்கொண்டான்
பேராசிரியர்.அவரை வழிநடாத்த அருண்
தம்பி.

எல்லாம் கடந்து போகும் அடுத்த தேர்தல்
வரும்வரை.

இலஞ்சம் பெற்ற தவிசாளர் கைது                      *******************திருமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாள...
31/10/2025

இலஞ்சம் பெற்ற தவிசாளர் கைது
*******************
திருமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் 5 லட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முனைந்தபோது கைது செய்யப்பட்டார்.

31/10/2025

2024 குடிசன மதிப்பீட்டு அறிக்கையின் படி இலங்கையில் முஸ்லிம்கள் அதிகமாக
வாழும் முதல் மாவட்டமாக திருகோணமலை விளங்குகின்றது - 46.5 வீதம்

29/10/2025

கிழக்கு மாகாண பாடசாலைகளில் கடமை
புரியும்இலங்கை அதிபர் சேவையினருக்கு இடமாற்றம். ஒரே பாடசாலையில் ஆகக் குறைந்தது 05 வருடங்களுக்கு மேல் கடமை புரியும் சகல அதிபர் சேவையினரும்இதற்கு
விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்காதோருக்கு கட்டாய முறை இடமாற்றம்.

விணணப்ப இறுதி தினம் 2025.நவம்பர் 07.
NPP Kinniya

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் ...
09/10/2025

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.

அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்

“உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது” என்று

பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார் .

எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்

இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்……

அதில் இப்படி எழுதியிருந்தது

“மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்பவேண்டாம்” என்று……

“இதைப்படித்த எடிசன் கதறி அழுதார்” பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்

மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது “தாயாலேயே” மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்” என்று.

தன்பிள்ளைகள் மீதான “உயர்வான எண்ணங்கள்” அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும்..!

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம் நன்றி,!

_.... படித்ததில் பிடித்தது ...._

Address

Trincomalee
31000

Alerts

Be the first to know and let us send you an email when Mulli Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mulli Page:

Share