02/06/2026
திருகோணமலை மாநகர சபைக்கு 25 குப்பை தொட்டிகள்!!
லங்கா இந்தியன் ஒயில் கம்பெனி (LANKA IOC)
ஜூன் 05 ஆம் திகதி உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, (02) கிழக்கு ஆளுநர் அலுவலகத்தில் திருகோணமலை மாநகர சபைக்கு 25 குப்பை தொட்டில்களை நன்கொடையாக வழங்கியது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவின் வேண்டுகோளின் பேரில் லங்கா இந்தியன் ஒயில் கம்பெனி (LANKA IOC) இந்தக் குப்பைக் கொள்கலன்களை நன்கொடையாக வழங்கியது.
இந்நிகழ்வில் கிழக்கு ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, திருகோணமலை மாநக மேயர் கே. செல்வரசா, இந்தியன் ஒயில் கம்பெனியின் (IOC ) சிரேஷ்ட துணைத் தலைவர் நவீன் குமார் மற்றும் நிறுவன அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்
.