Trinco Media TV

Trinco Media TV "தெரிவிப்பது நாங்கள்
தீர்மானிப்பது நீங்கள்"

02/06/2026

திருகோணமலை மாநகர சபைக்கு 25 குப்பை தொட்டிகள்!!


லங்கா இந்தியன் ஒயில் கம்பெனி (LANKA IOC)
ஜூன் 05 ஆம் திகதி உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, (02) கிழக்கு ஆளுநர் அலுவலகத்தில் திருகோணமலை மாநகர சபைக்கு 25 குப்பை தொட்டில்களை நன்கொடையாக வழங்கியது.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவின் வேண்டுகோளின் பேரில் லங்கா இந்தியன் ஒயில் கம்பெனி (LANKA IOC) இந்தக் குப்பைக் கொள்கலன்களை நன்கொடையாக வழங்கியது.

இந்நிகழ்வில் கிழக்கு ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, திருகோணமலை மாநக மேயர் கே. செல்வரசா, இந்தியன் ஒயில் கம்பெனியின் (IOC ) சிரேஷ்ட துணைத் தலைவர் நவீன் குமார் மற்றும் நிறுவன அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்
.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள்  திணைக்களத்தில்  தன்சல்!!கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் வெசாக் பௌர்ணமி தினத்...
02/06/2026

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் தன்சல்!!

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று (02) தன்சல்
(Fried Rice) வழங்கி வைக்கப்பட்டது.

மாகாண சுகாதார சேவைகள் பனிப்பாளர் DR.PSN.விமலரட்ண அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பேரில் மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள வளாகத்தில் இடம்பெற்றது.

மத அனுஷ்டானத்துடன் அனைத்து உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடனும் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் புவனேந்திரநாதன், மாகாண திட்டமிடல் வைத்திய அதிகாரி M.M.M.முனாஸ் மற்றும் பிரதம கணக்காளர் K.V.A.M.ஹஸன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் S.A.N.R.தேசப்பிரிய மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள்,சுகாதார உதவியாளர்கள்,பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

02/06/2026

கோமரங்கடவல பிரதேசத்தில் ரிதீகந்த என்ற பெயர் எவ்வாறு வந்தது

திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு ஏடு   திருடியவருக்கு விளக்கமறியல்!!திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு ...
01/06/2026

திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு ஏடு திருடியவருக்கு விளக்கமறியல்!!

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு ஏட்டினை திருடிய சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான்
எம். எஸ். எம். சம்சுதீன் முன்னிலையில் இன்று (01) எடுத்துக்கொள்ளப்பட்டபோது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 45 வயது உடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது-நிலம் தொடர்பிலான வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் மாவட்ட நீதிபதி கருப்பையா ஜீவராணி குறித்த வழக்கு ஏட்டினை மாவட்ட நீதிமன்ற பதிவாளரின் கண்காணிப்பில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதேவேளை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த நபர் பதிவாளர் உடன் காணப்பட்ட முரண்பாடு காரணமாக பதிவாளரை பழிவாங்கும் நோக்கில் குறித்த வழக்கு பதிவு ஏட்டினை திருடியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த சந்தேக நபருக்கு உடனடியாக இருந்த தட்டழுத்தாளரான 30 வயதுடைய பெண்ணை 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறும் அவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஆவணங்களை  திருடிய இருவருக்கு  விளக்கமறியல்திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசார...
31/05/2026

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஆவணங்களை திருடிய இருவருக்கு விளக்கமறியல்

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள ஒரு நில வழக்கு தொடர்பான ஆவணங்களை திருடியதாக குற்றச்சாட்டப்படும் இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எஸ்.எம். அன்பார் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை துறைமுக பொலிஸார் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பிலான ஆவணம் திருடப்பட்டமை தொடர்பாக மாவட்ட நீதிமன்ற பதிவாளர் ராயப்பு ஜோமெல் ராய் குரூஸ், திருகோணமலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து, பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரணை செய்த போது வழக்கு தொடர்பான ஆவணம் கிண்ணியாவில் உள்ள சந்தேக நபரது இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த ஆவணத்தை திருடுவதற்கு உதவிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக துறைமுக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

திருகோணமலை மாவட்ட நீதிபதி கருப்பையா ஜீவராணி, மாவட்ட நீதிமன்றத்தின் இரண்டு ஊழியர்களால் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டது குறித்து மேலும் விசாரணை நடத்துமாறு நீதித்துறை சேவை ஆணைக்குழுவிற்குத் தெரிவிக்குமாறு மாவட்ட நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

31/05/2026
மரண அறிவித்தல் මරණ දැන්වීම්!!திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான கந்தசாமி நிவேதனி (28வ...
30/05/2026

மரண அறிவித்தல்
මරණ දැන්වීම්!!

திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான கந்தசாமி நிவேதனி (28வயது) என்ற இளம் யுவதி மரணமானார்.

ත්‍රිකුණාමලය -නොච්චිකුලම පදිංච් කන්දසාමි නිවේන්දනී (වයස 28යි) මිය ගොස් ඇත.

(මෙම අය නොච්චිකුලම පදිංචි කුට්ටි තම්මි නොහොත් කේ.සුරේන්ද්‍ර මහතාගේ නැගණියයි)

30/05/2026

ரொட்டவெவ RPL கிரிக்கெட் போட்டி ஆரம்பம்!!

ரொட்டவெவ RPL போட்டி இன்று காலை (30) ஆரம்பமானது. அப்போது, ASMY முன்பள்ளிக் குழந்தைகளின் திறமையைக் காணும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

திருகோணமலையில் மக்கள் சந்திப்பு!!
29/05/2026

திருகோணமலையில் மக்கள் சந்திப்பு!!

ஆளும் கட்சி அரசியல் பிரமுகரின்  மைத்துனர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது!!திருகோணமலையைச் சேர்ந்த ஆளும் கட்சி அரசியல் பிரமுகரி...
29/05/2026

ஆளும் கட்சி அரசியல் பிரமுகரின் மைத்துனர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது!!

திருகோணமலையைச் சேர்ந்த ஆளும் கட்சி அரசியல் பிரமுகரின் மைத்துனன் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது குறித்த சந்தேக நபர் (28) நேற்றிரவு கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை சுமேதகம பகுதியைச் சேர்ந்த ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரின் மைத்துனனான 25 வயது உடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த நபரை சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 2045 மில்லிகிரேம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

Address

25, Rotawewa
Trincomalee

Alerts

Be the first to know and let us send you an email when Trinco Media TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share