Fast view

Fast view FAST VIEW NEWS

15/04/2026

பிழையாக புரியப்பட்ட பதிவுக்கான விளக்கத்தை தருகிறார் அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் (நழீமி)

ஈரான் vs அமெரிக்கா–இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக நான் எழுதிய பதிவில் எந்தத் தவறான நோக்கமோ அல்லது மயக்கமோ இல்லை என்பதை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்.

படித்தவர்களில் சிலர் கருத்து வேறுபாட்டுடன் எதிர்த்துள்ளனர். ஆனால், சிலர் புரிதலின்றி கீழ்த்தரமாக விமர்சிப்பது கவலைக்குரியது.

ஈரான் வெற்றி பெற்றால் அது உண்மையில் ஈரானின் வெற்றி தான். நாங்கள் சமூக வலைதளங்களில் எழுதுவதால் வெற்றி கிடைக்காது. அந்தப் போராட்டத்திற்காக நாங்கள் போதுமானளவில் பிரார்த்தனை செய்யாதது கவலையாக உள்ளது. மேலும், பிரார்த்தனை செய்யவேண்டும் என்று சமூகத்தை வழிநடத்தும் தலைமைத்துவமும் பெரிதாக முன்வரவில்லை.

முகநூலில் ஆதரவு தெரிவித்தோம். அதேநேரத்தில் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளை கடுமையாக விமர்சித்தோம். சிலர் அந்த நாடுகளுக்கே அழிவு வேண்டி பிரார்த்தனை செய்தனர். இது முற்றிலும் தவறு.

உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு பேசுவதால் சமூகம் சீரழியும் அபாயம் உள்ளது.
இஸ்ரேல் மேற்கொண்ட அநீதிகளுக்கும், அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுக்கும் எதிராக பிரார்த்திப்பது நமது கடமை. சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பது இயல்பானது. ஆனால் அதில் அளவுகோல் இருக்க வேண்டும்.

நாங்கள் நேரடியாக களத்தில் போராட முடியாத நிலையில், கருத்துகளை பகிர்ந்து மன ஆறுதல் பெறுகிறோம். அந்தளவில் ஆதரவு வழங்குவது புரிந்துகொள்ளத்தக்கது.
முஸ்லிம்கள் என்ற அடிப்படையில், ஷியாக்களை முழுமையாக மறுப்பதில்லை. அவர்கள் இஸ்ரேலுக்கும் அமெரிக்க ஆதிக்கத்துக்கும் எதிராக நடத்தும்.

போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதில் தவறு இல்லை. ஆனால் கருத்து வேறுபாடுகளை முன்வைக்கும் போது வெறுப்பும் வன்முறையும் இடம் பெறக்கூடாது.

நான் தெளிவாகச் சொன்னது,
நான் “ஈரானியன்” அல்ல. “ஈமானின்” மனிதன்.
ஈரான் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. தோல்வியடைந்தால் அது கவலைக்குரியது. சமாதானம் ஏற்பட்டாலும் அது நீடிக்காது என்ற சந்தேகத்தையும் நான் முன்வைத்தேன். இருப்பினும், சர்வதேச அழுத்தங்களால் சமாதானம் நோக்கி நகர்ந்துள்ளனர்.

ஒரு முக்கியமான விஷயம்,
ஈரான் தோல்வியடைந்தால் அது முஸ்லிம்களின் தோல்வி அல்ல. மாறாக அது ஈரானின் தோல்வியாகும். வெற்றியும், தோல்வியும் அவர்களுக்கே சொந்தமானது.

அதேநேரத்தில், இந்த அநீதிக்கு எதிராக ஈரான் மட்டும் அல்ல, பிற சக்திவாய்ந்த நாடுகளும் (உதாரணமாக துருக்கி, ரஷ்யா, சீனா போன்றவை) நடைமுறை ஆதரவுடன் செயல்பட வேண்டும் என்பது என் கருத்தாகும்.

இலங்கையில் சில இஸ்லாமிய இயக்கங்கள், ஈரானை ஈமானின் ஒரு பகுதியாக உயர்த்தி, மஹ்தி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பாரசீகத்தில் தோன்றுவார்கள் என்று கூறுகின்றனர். இந்தக் கருத்துடன் நான் ஒருபோதும் உடன்படவில்லை.

யார் அநீதியை எதிர்த்தாலும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது சரி. ஆனால் அப்பாவி மக்களை கொல்வதை “ஜிஹாத்” என்று கூறுவது முற்றிலும் தவறு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நாம் உணர்ச்சியால் அல்ல, நிதானத்தால் பேச வேண்டும்.

அநீதிக்கு எதிராக நிற்க வேண்டும். ஆனால் நமது சொற்களாலும், செயல்களாலும் சமுதாயத்தை தவறாக வழிநடத்தக் கூடாது.

அநுராதபுரத்தில் புத்தாண்டு மகிழ்ச்சியில் இணைந்த ஜனாதிபதிஅநுராதபுரம் – கல்நேவ பகுதியைச் சேர்ந்த டித்வா சூறாவளியால் பாதிக்...
14/04/2026

அநுராதபுரத்தில் புத்தாண்டு மகிழ்ச்சியில் இணைந்த ஜனாதிபதி
அநுராதபுரம் – கல்நேவ பகுதியைச் சேர்ந்த டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் இணைந்து சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜனாதிபதி Ranil Wickremesinghe இன்று (14) கலந்து கொண்டார்.
கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட ‘டித்வா’ அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த இந்திரஜித் சம்பத் சேனாரத்னவின் இல்லம், அரசாங்கம் வழங்கிய இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வீட்டில் நடைபெற்ற புத்தாண்டு சுபநேரச் சடங்குகளில் ஜனாதிபதி கலந்து கொண்டு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
கல்நேவ பிரதேச செயலாளர் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக நிர்மாணிக்கப்படும் ஆறு புதிய வீடுகளில் இதுவும் ஒன்றாகும். மேலும், பகுதியளவில் சேதமடைந்த 66 வீடுகளுக்கான இழப்பீடுகளும் வழங்கி முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டதன் மூலம், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு போன்ற மகிழ்ச்சியான தருணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களும் கொண்டாடும் வாய்ப்பு பெற்றுள்ளனர் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
பல சவால்களையும் உலகளாவிய நெருக்கடிகளையும் எதிர்கொண்ட பின்னரும், மீண்டும் எழுந்து நிற்கும் இலங்கை மக்களின் உறுதியை பாராட்டிய ஜனாதிபதி, ஒரே சுபநேரத்தில் மக்கள் அனைவருடனும் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

14/04/2026

சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உள்ளூர் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நிலாவெளி
சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று (14-04-2026) நிலாவெளி கடற்கரை பகுதிக்கு அதிகமான உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். விடுமுறை நாளை பயன்படுத்தி குடும்பத்தினருடன் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்க பலர் இங்கு கூடினர்.
இயற்கை அழகால் கவரும் நிலாவெளி, புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஆனந்த சூழலில் இன்னும் உயிர்ப்புடன் காட்சியளிக்கிறது. இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு வருகை தந்த அனைத்து உள்ளூர் சுற்றுலா பயணிகளையும் நிலாவெளி அன்புடன் வரவேற்கிறது.

සිංහල දෙමළ අලුත් අවුරුද්ද වෙනුවෙන් නිලාවේලි නගරය දේශීය සංචාරකයින් පිළිගනී
සිංහල දෙමළ අලුත් අවුරුද්ද වෙනුවෙන් අද (2026-04-14) දින නිලාවේලි වෙරළ තීරයට දේශීය සංචාරකයින් විශාල පිරිසක් පැමිණ තිබේ. නිවාඩුව භාවිතා කරමින් පවුලේ අය සහ මිතුරන් සමඟ සතුටින් කාලය ගත කිරීමට බොහෝ දෙනෙක් මෙහි රැස්ව සිටියහ.
ස්වභාවික සුන්දරත්වයෙන් ආකර්ෂණය වන නිලාවේලි, අලුත් අවුරුදු සැමරුමේ ප්‍රීතිමත් වාතාවරණය තුළ ඊටත් වඩා සජීවී ලෙස පෙනේ. මෙම තත්වය තුළ, නව වසර වෙනුවෙන් සංචාරය කළ සියලුම දේශීය සංචාරකයින් නිලාවේලි උණුසුම් ලෙස පිළිගනී.

14/04/2026

யானைக்கல் பகுதியில் அதிரடி சோதனை – கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் முற்றுகை
கந்தளாய் குளத்துப்பகுதி
கந்தளாய் குளத்துப்பகுதியைச் சேர்ந்த யானைக்கல் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை கந்தளாய் பொலிஸார் நேற்று (12) மாலை அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர்.
கந்தளாய் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி லக்மல் விஜேவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையின் போது கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஐந்து பரல் ‘கோடா’களும், அதற்குத் தேவையான உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் ஐந்து இலட்சம் ரூபாவை கடந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நேரத்தில், பொலிஸார் சுற்றிவளைப்பு மேற்கொண்ட போது அங்கிருந்த சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் கந்தளாய் பொலிஸாரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சட்டவிரோத செயல்களுக்கு எதிராக தொடரும் கடும் நடவடிக்கைகள் – கந்தளாய் பகுதியில் பரபரப்பு

சர்வதேச அரங்கில் தடம் பதிக்கும் கிண்ணியாவின் நடுவர் – N.M. ரூமி பெருமை சேர்த்த சாதனை! திருகோணமலை / கிண்ணியாஆசிய அளவில் த...
14/04/2026

சர்வதேச அரங்கில் தடம் பதிக்கும் கிண்ணியாவின் நடுவர் – N.M. ரூமி பெருமை சேர்த்த சாதனை!
திருகோணமலை / கிண்ணியா
ஆசிய அளவில் திறமையான உதைப்பந்தாட்ட நடுவர்களை உருவாக்கும் நோக்கில் Asian Football Confederation (AFC) வழங்கும் சிறப்பு பயிற்சி நெறிக்காக இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இரு நடுவர்களில் ஒருவராக, திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த N.M. ரூமி அவர்கள் தெரிவாகியிருப்பது நாட்டிற்கும், குறிப்பாக வடகிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
மூன்று ஆண்டுகள் நீடிக்கும் AFC Referees Academy பயிற்சி திட்டம், ஆசிய நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் திறமையான நடுவர்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் முக்கிய நோக்கத்தைக் கொண்டதாகும்.
தற்போது இலங்கையில் நடைபெறும் உயர்மட்ட உதைப்பந்தாட்ட போட்டிகளில் தேசிய நடுவராக பணியாற்றி வரும் ரூமி அவர்கள், தி/கிண்/அல் அக்ஸா தேசிய பாடசாலையில் விளையாட்டு பயிற்றுவிப்பாளராகவும், கிண்ணியா உதைப்பந்தாட்ட நடுவர் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
மேலும், தற்போது மலேசியாவில் நடைபெறும் இந்த பயிற்சியின் இரண்டாம் கட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற முதல் கட்டப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் தொடர்ச்சியாக, அவர் மீண்டும் இந்த உயரிய வாய்ப்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனை, அவரது விடாமுயற்சிக்கும் திறமைக்கும் சான்றாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல சர்வதேச மேடைகளில் சாதிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.
✨ ஃபாஸ்ட் வீவ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்!

14/04/2026

சற்றுமுன் வெளியான பரபரப்பு காணொளி – ஈரானின் அதிரடி வெளிப்பாடு
தெஹ்ரான்
ஈரான் அரசு இன்று வெளியிட்டுள்ள காணொளி உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க போர்க் கப்பல்கள் ஈரானைச் சுற்றி முற்றுகை நிலைப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் சூழ்நிலையில், தனது இராணுவ திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த காணொளியில், நிலத்தடி பகுதியில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் மிகப்பெரிய இராணுவ தளம் ஒன்று காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான வேகமான இராணுவ படகுகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், அவை கடல் நடவடிக்கைகளுக்காக தயாராக உள்ளன என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த “நிலத்தடி கடற்படை நகரம்” (Underground Naval Base) என அழைக்கப்படும் அமைப்பு, எதிரிகளின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்கவும் திடீர் தாக்குதல்களுக்கு தயாராக இருக்கவும் வடிவமைக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
சமீப நாட்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த காணொளி இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மற்றும் அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், சர்வதேச சமூகம் அமைதியை பேண வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்தி வருகின்றது.

ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: ஈரான் எச்சரிக்கைக்கு அமெரிக்கப் போர்க்கப்பல் பாதை மாற்றியதா?ஹார்முஸ் ஜலசந்திஹார்முஸ் ஜலசந்...
14/04/2026

ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: ஈரான் எச்சரிக்கைக்கு அமெரிக்கப் போர்க்கப்பல் பாதை மாற்றியதா?
ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையே பதற்றமான நேருக்கு நேர் மோதல் ஒன்று ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோவில், ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகரக் காவற்படை (IRGC) மற்றும் அமெரிக்க போர்க்கப்பலுக்கு இடையே கடுமையான வானொலி எச்சரிக்கை பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “பாதையை மாற்றுங்கள், இல்லையெனில் தாக்குதல் நடத்தப்படும்” என ஈரான் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஈரான் தங்களது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் அமெரிக்கக் கப்பலை குறிவைத்து ‘லாக்’ செய்யப்பட்டதாகவும், பாதுகாப்பு ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதாகவும் வீடியோவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், அமெரிக்கக் கப்பல் தனது பயண திசையை மாற்றியதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்கா இதுவரை அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை.
இச்சம்பவம் வளைகுடா பகுதியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளதுடன், இது உளவியல் தாக்கமா அல்லது உண்மையான பின்வாங்கலா என்பது குறித்து சர்வதேச கவனம் திரும்பியுள்ளது.

14/04/2026

பந்தர் அப்பாஸ் அருகே பதற்றம் – அமெரிக்க போர்க்கப்பல் மூழ்கியது என தகவல்
ஈரான் – பந்தர் அப்பாஸ் கடற்பகுதி
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்ற நிலை மேலும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை அணுக முயன்றதாக கூறப்படும் அமெரிக்க போர்க்கப்பல் ஒன்றை, ஈரானிய கடற்படை தாக்கி மூழ்கடித்ததாக சர்வதேச வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன.
இதேவேளை, “ஈரானின் கடற்படை சக்தி முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது” என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் என்று கூறப்படும் சூழலில், இந்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆனால், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அல்லது ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. எனவே, தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகங்களும் நிலவுகின்றன.
சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள், இந்த செய்தி உண்மையானதாக இருந்தால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகப்பெரிய ராணுவ மோதலுக்கான முன்னோட்டமாக இருக்கலாம் என எச்சரிக்கின்றனர்.
மேலதிக தகவல்கள் வெளிவரும் வரை, இந்த சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்களை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

13/04/2026

புத்தளம் பகுதியில் இடி தாக்கி தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது
புத்தளம் பகுதியில் இன்று (13) பிற்பகல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து கொண்டிருந்த வேளையில், தென்னை மரம் ஒன்றில் இடி விழுந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீரென ஏற்பட்ட இடி தாக்கத்தால் தென்னை மரத்தின் மேற்பகுதி தீப்பற்றி எரிந்ததுடன், சில நிமிடங்களில் தீ வேகமாக பரவியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தின்போது உயிர் சேதமோ அல்லது பெரும் சொத்து சேதமோ எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எனினும், மின்னல் தாக்கம் காரணமாக அருகிலுள்ள மக்களிடம் அச்சம் நிலவியது.
மழைக்காலங்களில் இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் வெளியில் நிற்காமல் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

13/04/2026

நிலாவெளி கடற்கரையில் நீண்ட வரிசை – சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி
📍 நிலாவெளி
📅 13-04-2026
திருக்கோணமலை மாவட்டத்தின் நிலாவெளி கடற்கரை பகுதியில் இருந்து புறா தீவுக்கு செல்ல அனுமதி சீட்டுகளைப் பெற வந்திருந்த உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் இன்று (13) கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
பயணிகளின் தகவலின்படி, அனுமதி சீட்டு வழங்கும் மையத்தில் மிக நீண்ட வரிசை காணப்பட்டதுடன், ஒரு சீட்டை பெறுவதற்கே சிறுவர் உட்பட குடும்பத்தினர் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தாமதத்திற்கு முக்கிய காரணமாக அங்கு ஒரே ஒரு வனஜீவராசிகள் துறை அதிகாரி மட்டுமே பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடப்படுகிறது. இதனால் அதிகளவில் வருகை தரும் பயணிகளுக்கு சீட்டுகள் வழங்கும் செயற்பாடு மந்தமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுற்றுலாப் பயணி ஒருவர்,
“விசேஷ நாட்களில் அதிகமானோர் வருகை தருகின்றனர். அந்த நேரங்களில் கூடுதல் அதிகாரிகளை நியமித்து சேவையை விரைவுபடுத்த வேண்டும்,” எனக் கவலையுடன் தெரிவித்தார்.
மேலும், நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் பயணிகளின் நேரம் வீணாகின்றதுடன், சுற்றுலா அனுபவமும் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சிலர் நீண்ட நேரம் காத்திருக்க முடியாமல் புறா தீவு செல்லாமல் திரும்பிச் செல்லும் நிலையும் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இவ்வாறான சேவை குறைபாடுகள் தொடர்ந்தால் அரசாங்க வருமானத்திற்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை, வனஜீவராசிகள் துறை அலுவலகத்தின் திறப்பு மற்றும் மூடும் நேரங்களை தெளிவாகக் குறிப்பிடும் விளம்பரப் பலகைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், கூடுதல் பணியாளர்கள் நியமனம் மூலம் சேவையை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

13/04/2026

12-04-2026 நேற்று இரவு
🐊 கிராமத்திற்குள் புகுந்த முதலை பிடிப்பு
சாம்பல் தீவு மக்களின் துணிச்சல் செயல்பாடு!
திருகோணமலை மாவட்டத்தின் சாம்பல் தீவு பகுதியில் நேற்று (12) இரவு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சல்லி கோயில், வாட் எண் 02 பகுதியில் இரவு நேரத்தில் முதலை ஒன்று கிராமத்திற்குள் நுழைந்து, வீட்டுப்புறங்களில் இருந்த கோழிகளைத் தாக்கி தின்றதுடன், கிராம மக்களின் அமைதியையும் சீர்குலைத்துள்ளது.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக திருகோணமலை வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியிருந்தும், உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கிராம மக்கள் ஒன்றிணைந்து தைரியமாக செயல்பட்டு, நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் முதலையை கட்டுப்படுத்தி பிடித்துள்ளனர். பின்னர் அதை பாதுகாப்பாக கட்டுப்பாட்டில் வைத்து வைத்திருந்தனர்.
இன்று (13) காலை சுமார் 11.00 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த வனஜீவராசிகள் துறை அதிகாரிகள், அந்த முதலையை மீட்டு எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில், தாமதமான நடவடிக்கையால் மக்கள் தாங்களே ஆபத்தான சூழ்நிலையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
📍 மக்கள் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை!

யாழில் உலகத் தரம் வாய்ந்த ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் – சர்வதேச கவனம் ஈர்க்கும் சுற்றுப்பயணம்யாழ்ப்பாணம்: உலகி...
13/04/2026

யாழில் உலகத் தரம் வாய்ந்த ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் – சர்வதேச கவனம் ஈர்க்கும் சுற்றுப்பயணம்
யாழ்ப்பாணம்: உலகின் உயர்தர மற்றும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாகக் கருதப்படும் Harley-Davidson மோட்டார் சைக்கிள்களுடன் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் சகோதரர்கள் குழு ஒன்று யாழ்ப்பாணம் வந்துள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த தத்தோ ஆனந்த் தலைமையிலான இந்த குழுவில், 1700CC மற்றும் 1900CC திறன் கொண்ட சக்திவாய்ந்த ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் யாழ் நகரில் உள்ளூர் மக்களையும் ஆர்வலர்களையும் சந்தித்தனர்.
உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களை மேற்கொள்வது ஹார்லி டேவிட்சன் உரிமையாளர்களிடையே வழக்கமாக இருந்து வருகின்றது. அந்த வரிசையில், இக்குழுவும் யாழ்ப்பாணத்தை ஒரு சிறந்த உல்லாச சுற்றுலா தளமாக உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இருநாள் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளது.
இந்த பயணத்தின் போது சேகரிக்கப்படும் அனுபவங்கள் மற்றும் காட்சிகள் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் பல மோட்டார் சைக்கிள் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்தை நோக்கி வரக்கூடிய வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தின் இயற்கை அழகு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா வளங்களை உலகளவில் முன்னிறுத்தும் முயற்சியாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.

Address

Trincomalee
Trincomalee
31010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fast view posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share