09/06/2026
அனுமதியின்றி அமைக்கப்பட்டதாகக் கூறி கோட்டை ரயில் நிலைய விவகாரத்தில் எதிர்க்கட்சியின் சத்தியாகிரகக் கூடாரத்தை அதிரடியாக அகற்றினர் பொலிஸார்!
கொழும்பு:
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக எதிர்க்கட்சி குழுக்களினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரம் பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளது.
இன்று காலை எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இதன்போது போராட்டக்காரர்களின் பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் என தற்காலிகக் கூடாரமொன்றும் அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த பகுதியில் கூடாரம் அமைப்பதற்கு அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தலையிட்டு அதனை அதிரடியாக அகற்றினர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவிய போதிலும், தடையைத் தாண்டி போராட்டக்காரர்கள் அவ்விடத்திலேயே தமது சத்தியாகிரகத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.