Middle East Tamil

  • Home
  • Middle East Tamil

Middle East Tamil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Middle East Tamil, .

"Middle East Tamil" எனும் Page, அரபு நாட்டு செய்திகள்,பலஸ்தீன், காஸா நிகழ்வுகளை நம்பகமான அரபு மூலங்களிலிருந்து. உடனுக்குடன் பெற்று, தமிழில் வழங்குகிறது. இந்த Page ஐ Follow செய்து, முக்கியமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்!
ஏனையோருக்கும் பகிருங்கள்!!

05/11/2025

அல்-பாஷிர் இன அழிப்பில் 2,000 பொதுமக்கள் படுகொலை!

சூடான்: அல்-பாஷிர் மற்றும் அருகிலுள்ள ஸம்ஸம் முகாம் பகுதிகளில் தீப்பிடித்த கட்டிடங்களை செயற்கைக்கோள் படங்கள் காட்டியுள்ளன. இந்த படங்களில், தரையில் இரத்தக் கறைகள் காணப்படுவதாக பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். விண்வெளியில் இருந்து முதல் முறையாக இரத்தக் கறைகள் கண்டறியப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என்றும் கூறப்படுகிறது.

விரைவு ஆதரவு படைகள் (Rapid Support Forces - RSF) அல்-பாஷிரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து நடந்த கூட்டுப் படுகொலைகளின் காட்சிகளையே இந்த படங்கள் பதிவு செய்துள்ளன. இந்த தாக்குதல்களில் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனிதாபிமான கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏப்ரல் 2023 முதல் RSF மற்றும் சூடானிய இராணுவப் படைகளிடையே நடந்து வரும் இந்த மோதல்களில், இதுவரை 1,50,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 14 மில்லியன்களுக்கும் மேற்பட்டோர் வீடிழந்துள்ளனர். அல்-பாஷிர் மற்றும் அதன் முக்கியமான இராணுவத் தளத்தை RSF கைப்பற்றியமை இந்தப் போரில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

யேல் பல்கலைக்கழகத்தின் மனிதாபிமான ஆராய்ச்சி ஆய்வகம், இந்த வன்முறையை ருவாண்டா இனப்படுகொலையின் முதல் 24 மணி நேர அழிவுடன் ஒப்பிட்டுள்ளது.

RSF பிரதேசத்தைக் கைப்பற்றிய பின்னர், அங்குள்ள சவூதி மகப்பேற்று மருத்துவமனை ஒன்றில் மட்டும் கிட்டத்தட்ட 500 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

சூடான் போரில் பயங்கர படுகொலைகள்: விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட படங்களில் காணப்பட்ட இரத்தக் கறைகள்!அல்-பாஷிர் இன அழிப...
05/11/2025

சூடான் போரில் பயங்கர படுகொலைகள்: விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட படங்களில் காணப்பட்ட இரத்தக் கறைகள்!

அல்-பாஷிர் இன அழிப்பில் 2,000 பொதுமக்கள் படுகொலை!

சூடான்: அல்-பாஷிர் மற்றும் அருகிலுள்ள ஸம்ஸம் முகாம் பகுதிகளில் தீப்பிடித்த கட்டிடங்களை செயற்கைக்கோள் படங்கள் காட்டியுள்ளன. இந்த படங்களில், தரையில் இரத்தக் கறைகள் காணப்படுவதாக பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். விண்வெளியில் இருந்து முதல் முறையாக இரத்தக் கறைகள் கண்டறியப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என்றும் கூறப்படுகிறது.

விரைவு ஆதரவு படைகள் (Rapid Support Forces - RSF) அல்-பாஷிரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து நடந்த கூட்டுப் படுகொலைகளின் காட்சிகளையே இந்த படங்கள் பதிவு செய்துள்ளன. இந்த தாக்குதல்களில் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனிதாபிமான கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏப்ரல் 2023 முதல் RSF மற்றும் சூடானிய இராணுவப் படைகளிடையே நடந்து வரும் இந்த மோதல்களில், இதுவரை 1,50,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 14 மில்லியன்களுக்கும் மேற்பட்டோர் வீடிழந்துள்ளனர். அல்-பாஷிர் மற்றும் அதன் முக்கியமான இராணுவத் தளத்தை RSF கைப்பற்றியமை இந்தப் போரில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

யேல் பல்கலைக்கழகத்தின் மனிதாபிமான ஆராய்ச்சி ஆய்வகம், இந்த வன்முறையை ருவாண்டா இனப்படுகொலையின் முதல் 24 மணி நேர அழிவுடன் ஒப்பிட்டுள்ளது.

RSF பிரதேசத்தைக் கைப்பற்றிய பின்னர், அங்குள்ள சவூதி மகப்பேற்று மருத்துவமனை ஒன்றில் மட்டும் கிட்டத்தட்ட 500 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

💔
17/10/2025

💔

17/10/2025

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்த சமீபத்திய கைதிகள் பரிமாற்றத்தின் வீடியோ ஒளிப்பதிவுகள், இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட பலஸ்தீன கைதிகள் மற்றும் காஸாவில் இருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக் கைதிகளுக்கு இடையே பாரிய வேறுபாடுகளை எடுத்துக் காட்டுகின்றன.⁠

இஸ்ரேல் சிறைகளில் சித்திரவதை செய்யப்பட்ட பலஸ்தீன கைதிகள், விடுதலையானபோது மன அழுத்தத்தில் இருப்பதைக் காண முடிந்தது. இதற்கு மாறாக, குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்த இஸ்ரேலிய பணயக் கைதிகள் சுத்தமாக, மன அமைதியாக, ஆரோக்கியமான சிறந்த தோற்றத்தில் காணப்பட்டனர்.⁠

ஆகஸ்ட் 2025-ல் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை, இஸ்ரேல் சிறைகளில் மின்சாரம் பாய்ச்சுதல், அடித்தல், துன்புறுத்தல், உணவு, நீர் மற்றும் தூக்கம் முதலியவற்றை இல்லாமல் செய்தல் உள்ளிட்ட பரவலான சித்திரவதை, பாலியல் வன்முறை மற்றும் பிற மனிதாபிமானமற்ற நடத்தை என்பவற்றை ஆவணப்படுத்தியுள்ளது.

விகாரமான தோற்றத்தில் பலஸ்தீனக் கைதிகள்! 😳         https://youtube.com/shorts/RN9uiy_AMA4?feature=share✅Share this !!
16/10/2025

விகாரமான தோற்றத்தில் பலஸ்தீனக் கைதிகள்! 😳



https://youtube.com/shorts/RN9uiy_AMA4?feature=share

✅Share this !!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்த சமீபத்திய கைதிகள் பரிமாற்றத்தின் வீடியோ ஒளிப்பதிவுகள், இஸ்ரேல் சிறைகள....

😳
15/10/2025

😳

15/10/2025

உலகில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நடந்து வரும் நிலையில், படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்களின் உடல்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை இஸ்ரேல் ஒப்புக்கொண்ட சில மாதங்களின் பின், முதல் தொகுதி பலஸ்தீனர்களின் உடல்களை காஸாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது என காஸா உள்ளூர் சுகாதார அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ராய்ட்டர்ஸுக்கு தெரிவித்தனர்.

இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் இருந்த 45 பலஸ்தீனர்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை காஸாவிலுள்ள நாசர் மருத்துவ மனையில் ஒப்படைக்கப்பட்டன.

திங்கட்கிழமை, மூன்று இஸ்ரேலியர்கள் மற்றும் ஒரு நேபாளியின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது.

பெப்ரவரியில், காஸாவில் இருந்து குறைந்தது 350 உடல்களை இஸ்ரேலிய இராணுவம் இஸ்ரேலுக்கு கடத்திச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளது.

மனிதாபிமான நிறுவனங்கள் மற்றும் உடல்களை திருப்பி அனுப்ப வேண்டும் என கோரி வரும் குடும்பங்களின் அதிகரித்து வரும் அழுத்தத்தின் காரணமாகவே இந்த உடல்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இந்த பரிமாற்றத்துடன் தொடர்புடைய பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் உடல்களில் இருந்து இதயம், கல்லீரல் போன்ற உள் உறுப்புகளை இஸ்ரேல் திருடியது தொடர்பான கடந்த கால குற்றச்சாட்டுக்கள் மீண்டும் எழுந்துள்ளன.

ஜெனிவாவைத் தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமான யூரோ-மெட் மனித உரிமைகள் மேலாண்மை அமைப்பு, இஸ்ரேலிய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பலஸ்தீனர்களின் உடல்களில் இருந்து "உள் உறுப்புகள் திருட்டு" மேற்கொள்ளப்பட்டதாக வெளியான அறிக்கைகள் குறித்து முன்னர் அச்சத்தை தெரிவித்தது. 2023 இன் இறுதியில், விடுவிக்கப்பட்ட உடல்களை பரிசோதித்த காஸா மருத்துவ வல்லுநர்களை மேற்கோள் காட்டிய அந்த அமைப்பு, இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் மற்றும் காக்ளியா மற்றும் கார்னியா போன்றவை காணாமல் போயிருப்பதாக தெரிவித்ததாக கூறியது.

வடக்கு காஸாவில் உள்ள அல்-ஷிஃபா மற்றும் இந்தோனேசியா மருத்துவமனைகளில் இருந்தும், தெற்கு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான உடல்களை 2023 இல் இஸ்ரேலிய படைகள் திருடியதை யூரோ-மெட் ஆவணப்படுத்தியுள்ளது. அல்-ஷிஃபா மருத்துவமனையின் வளாகத்தில் ஒரு பிரேத குழியில் இருந்து இஸ்ரேலிய படையினர் பிரேதங்களை தோண்டி எடுத்து சென்றதாகவும் இந்த அமைப்பு குற்றம் சாட்டியது.

எதிர்கால உடல் பரிமாற்றங்கள் மற்றும் இறந்த உடல் ஆய்வுகளை மேற்பார்வை செய்ய மனித உரிமை அமைப்புகள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழுவை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன.

பலஸ்தீனர்களின் உடல் உறுப்புக்களைத் திருடிய இஸ்ரேல்!😳         https://youtube.com/shorts/Qa_uo1emw-g?feature=share✅Share ...
15/10/2025

பலஸ்தீனர்களின் உடல் உறுப்புக்களைத் திருடிய இஸ்ரேல்!😳



https://youtube.com/shorts/Qa_uo1emw-g?feature=share

✅Share this!!

பலஸ்தீனர்களின் உடல் உறுப்புக்களைத் திருடிய இஸ்ரேல்! உலகில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பலஸ்தீன மக்களுக்கு ....

14/10/2025
14/10/2025

"எங்களை விடுவித்த விடுதலை போராட்டத்திற்கு நான் நன்றி கூறுகிறேன்".. 20 ஆண்டுகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சிறைகளில் கழித்த பின்னர், "மூன்றாம் சுதந்திரப் பெருவெள்ளம்" ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட காஸா கைதி நாஹித் அல்-குர்ரா விடுதலை செய்யப்பட்ட நேரம். அவரது இரு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.

❤️
14/10/2025

❤️

14/10/2025

"எங்களை விடுவித்த விடுதலை போராட்டத்திற்கு நான் நன்றி கூறுகிறேன்".. 20 ஆண்டுகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சிறைகளில் கழித்த பின்னர், "மூன்றாம் சுதந்திரப் பெருவெள்ளம்" ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட காஸா கைதி நாஹித் அல்-குர்ரா விடுதலை செய்யப்பட்ட நேரம். அவரது இரு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.

Address


Telephone

+94776494777

Website

Alerts

Be the first to know and let us send you an email when Middle East Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Middle East Tamil:

  • Want your business to be the top-listed Media Company?

Share