12/05/2026
ஆட்டோ சாரதி எம் எம். இக்பாலினால் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலயத்திற்கு உதவி
சமூக சேவகர் ஆட்டோ சாரதி எம் .எம். இக்பால் அவர்களினால் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலய அதிபர், பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கமைவாக தரம் ஒன்று மற்றும் இரண்டு வகுப்பறைகள் அமைந்துள்ள கட்டடம் முழுமையான வர்ணம் பூசி கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தரம் ஐந்து வகுப்பறைக்கான இரண்டு மின் குமிழ்கள், இரண்டு பூட்டுக்கள் என்பனவற்றை பெற்று த்தந்த ஆட்டோ சாரதி சமூக சேவகர் சகோதரர் எம்.எம். இக்பால் அவர்களுக்கு பாடசாலையின் அதிபர் அவர்களினால் நன்றியினை தெரிவிப்பதோடு குறித்த உதவிகளை அவருக்கு செய்யுமாறு உதவிகளை வழங்கிய சகோதரர்களுக்கும் அதிபர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற காலை ஆராதனை போது குறித்த உதவியை செய்த சகோதரர் எம் எம் இக்பால் அவர்களை வரவழைத்து அவர்களுக்கான நன்றியினை அதிபர் தெரிவித்ததோடு அதிபர் காரியாலத்தில் வைத்து அதற்கான நன்றிக்கடிதமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.எச். எம். முஸ்தபா சகோதரர் எம். முஸம்மில் பாடசாலையின் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
12.05.2026