CNTV Stay turned 🎥 📌fast update here📩

பாசிக்குடா கடலில் மூழ்கிய 7 வயது குழந்தையை இலங்கை கடலோர காவல்படையின் உயிர்காப்பாளர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.கடலில் பலர் ...
20/09/2025

பாசிக்குடா கடலில் மூழ்கிய 7 வயது குழந்தையை இலங்கை கடலோர காவல்படையின் உயிர்காப்பாளர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

கடலில் பலர் குளித்துக் கொண்டிருந்தபோது, ஒரு குழந்தை ஆபத்தில் இருப்பதைக் கவனித்த காவல்படையின் உயிர்காப்பாளர்கள், உடனடியாகச் செயல்பட்டு கடலில் குதித்து, குழந்தையை நீர்நிலை புதைகுழியிலிருந்து மீட்டனர்.

கண்டியைச் சேர்ந்த குழந்தை என அடையாளம் காணப்பட்ட குழந்தை, கரைக்குக் கொண்டுவரப்பட்டபோது அடிப்படை முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் அவரது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.

உலகமே வியக்கும் தமிழரின் கண்டுபிடிப்புவெறும் 5 லிட்டர் நீரில் 6 மாதம் எரியும் அதிசய அடுப்பு...உலகமே வியக்கும் தமிழரின் க...
20/09/2025

உலகமே வியக்கும் தமிழரின் கண்டுபிடிப்பு

வெறும் 5 லிட்டர் நீரில் 6 மாதம் எரியும் அதிசய அடுப்பு...உலகமே வியக்கும் தமிழரின் கண்டுபிடிப்பு

உலகிலேயே முதல்முறையாக தண்ணீரில் எரியும் அடுப்பினை கண்டுபிடித்து, தமிழர் ஒருவர் அசத்தி இருக்கிறார். இதன் சிறப்பம்சங்கள் பற்றி சிறப்பு விரிவாக பார்க்கலாம்...

நீரில் உள்ள ஹைட்ரஜன் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி, நீரில் எரியும் அடுப்பினைக் கண்டுபிடித்துள்ள HONC நிறுவனத்தின் நிறுவனர், தமிழ்நாட்டச் சேர்ந்த சேலம் பேளூரைச் சேர்ந்த தமிழர், இராமலிங்கம் கார்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தியாகச் சுத்தமான நீரினைப் பயன்டுத்தி, இயற்கை வளங்களை அழிக்காமல், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், விபத்துகள் ஏற்படா வண்ணம், பாமர மக்களும் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வகையில், மிகக்குறைந்த மின் பயன்பாட்டுச் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நீரில் எரியும் அடுப்பினை, தம்முடைய 20 ஆண்டுகால ஹைட்ரஜன் குறித்த ஆராய்ச்சியின் விளைவாக அன்புச்சகோதரர் இராமலிங்கம் கார்த்தி அவர்கள் கண்டுபிடித்துச் சாதனை புரிந்துள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது.

நீரினை எரிபொருளாகக் கொண்ட சமையல் அடுப்பினைப் பயன்படுத்துவதன் மூலம், இனிவருங்காலங்களில் எரிபொருள் தேவைக்காக நிலம், நீர், காற்றினை மாசுபடுத்தும் கொடுமைகள் வெகுவாகக் குறைந்துவிடும். அந்த வகையில் இந்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் இந்த அரிய கண்டுபிடிப்பு செயற்பாட்டிற்கு வந்தால், அந்நிகழ்வு புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தித்துறையில் மிகப்பெரிய புரட்சியாகவும், அறிவியல் வளர்ச்சியில் மாபெரும் சாதனையாகவும் திகழும்!

| || |

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இ...
20/09/2025

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

அதே ஆண்டில், 375 பெண்கள் இத்தகைய துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர் கூறினார்.

இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 114 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்

ஐக்கிய தேசியக் கட்சி இன்று (20) அதன் 79ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாத...
20/09/2025

ஐக்கிய தேசியக் கட்சி இன்று (20) அதன் 79ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

இதனை முன்னிட்டு கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

'உங்கள் கருத்தைப் பேசுங்கள், அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிக்க ஒன்றாக நில்லுங்கள்' எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓய்வுபெறுகிறார் ஐநாவின் சமாதானப்படை வீரர் ரெஜிமெண்ட் சார்ஜன்ட் மேஜர் (RSM) எஸ்.ஐ.எம்.புஹாரிஓட்டமாவடியை0பிறப்பிடமாகவும் ப...
20/09/2025

ஓய்வுபெறுகிறார் ஐநாவின் சமாதானப்படை வீரர்
ரெஜிமெண்ட் சார்ஜன்ட் மேஜர் (RSM) எஸ்.ஐ.எம்.புஹாரி

ஓட்டமாவடியை0பிறப்பிடமாகவும் பிறைந்துரைச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட,
எல்லோரோடும் இன்முகத்தோடு பழகும் அருமையான இராணுவ வீரர் சேகு இஸ்மாயில் முஹம்மது புகாரி எதிர்வரும் 28ம் திகதியுடன் தனது 22 வருட சேவையிலிருந்து ஓய்வுபெறுகிறார்.

1983ல் பிறந்த இவர், ஆரம்பக்கல்வியை பிறைந்துரைச்சேனை அஸ்கர் வித்யாலயத்திலும் அதன்பின் மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்திலும் கற்றார்.

2003ல் சாதாரண இராணுவ வீரனாக இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட இவர், தனது திறமையாலும், சிறப்பான சேவையாலும்

Private
Lance corporal
Corporal
Sargent
Staff Sargent
Warrant officer ll
Warrant officer l
ரெஜிமெண்ட் சாஜன் மேஜர் (RSM) வரை என பல்வேறு பதவியுயர்வு பெற்றுள்ளார்.

இந்தியாவில் 28வது ஜூனியர் போர் இராணுவ தலைமைப்பயிற்சியைப் பெற்றுக்கொண்ட இவர், பல வெளிநாடுகளிலும் விசேட பயிற்சிகளையும் பெற்றுள்ளார்.

லெபனானில் ஐக்கிய நாட்டு சபையின்
அமைதிகாக்கும் சமாதானப்படையணியில் (34 சர்வதேச நாட்டுப்படையணியுடன்) சிறப்பாக சேவையாற்றி தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவரின் சிறப்பான சேவைக்காக இலங்கை இராணுவத்தால் 13 பதக்கங்களை வழங்கி கெளரவித்துள்ளது.

கிடைக்கப்பெற்ற பதக்கம்
01. ரணாசூர பதக்கம்
02. உத்தம சேவா பதக்கம்
03. கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம்
04. வடக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம்
05. பூர்ண பூமி பதக்கம்
06. வடக்கு மற்றும் கிழக்கு செயல்பாட்டு பதக்கம்
07. இலங்கை ஆயுத சேவைகள் நீண்ட சேவை பதக்கம் 1968
08. 75வது சுதந்திர ஆண்டு நினைவு பதக்கம்
09. 75வது இராணுவ ஆண்டு பதக்கம்
10. சேவாபிமானி பதக்கம்
11. சேவை பதக்கம்
12. விதேஷ சேவா பதக்கம்
13. ஐக்கிய நாடுகள் பதக்கம் (லெபனான்)

சிறந்த இராணுவ வீரனாக நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி, எமது மண்ணுக்கு பெருமை சேர்த்து எதிர்வரும் 2025.09.28ம் திகதியுடன் பதவி ஓய்வுபெறும் எஸ்.ஐ.எம்.புஹாரி அவர்களை எமது மண் சார்பில் வாழ்த்துவோம்.

கொரோனா உடலங்கள் அடக்கத்தின் போதும் தன்னாலான முழுப்பங்களிப்பினையும் வழங்கியிருந்தமையும் இங்கு நன்றியோடு நினைவுகூறத்தக்கது.

-றியோ மஹ்றூப்

மிகச் சிறப்பாக இடம்பெற்ற பிறைந்துரைச்சேனை சாதுலியாவின் கௌரவிப்பு நிகழ்வு(எச்.எம்.எம்.பர்ஸான்)கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவ...
20/09/2025

மிகச் சிறப்பாக இடம்பெற்ற பிறைந்துரைச்சேனை சாதுலியாவின் கௌரவிப்பு நிகழ்வு

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (19) வெள்ளிக்கிழமை பாசிக்குடா Laya Waves இல் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எல்.நிஜாம்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய அனைத்து மாணவர்கள் அத்துடன், சென்ஞ்ஜோன்ஸ் அம்புயூலன்ஸ் கிட்டி அங்கத்தவர்கள், சிறுவர் விளையாட்டு போட்டியில் மாகாண மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், ஓட்டப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவன் என பலரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பள்ளிவாசல் தலைவர்கள் பாடசாலை நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கு நினைவுப் பதக்கங்கள், சான்றிதழ்கள், பரிசில்கள் நினைவுச் சின்னங்கள் போன்றவை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காசாவில் நடந்த இனப்படுகொலையை தனது நாட்டு அரசாங்கம் ஒப்புக்கொள்ள மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, டச்சு எம்.பி., பாராளும...
19/09/2025

காசாவில் நடந்த இனப்படுகொலையை தனது நாட்டு அரசாங்கம் ஒப்புக்கொள்ள மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, டச்சு எம்.பி., பாராளுமன்றத்திற்குள் பாலஸ்தீனக் கொடியை பெருமையுடன் அணிந்துள்ளார். பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், காசா பகுதியில் நடந்து வரும் இனப்படுகொலையை ஒப்புக்கொள்ள மறுக்கும் தனது நாட்டு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சவால் செய்யவும், டச்சு எம்.பி., எஸ்தர் ஓவர்ஹான்ட், நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு அமர்வின் போது பாலஸ்தீனக் கொடியை அணிந்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
jaffnamuslim.

மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் ப...
19/09/2025

மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் 35ஆம் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை (18) மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் துறைநீலாவணை கிராமத்தினை சேர்ந்த 41 வயதான வினாசித்தம்பி – தியாகராசா என்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

35ஆம் கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டில் உள்ள மின்சாரத்தினை எடுத்து அயலில் உள்ள வீட்டுக்கு வழங்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மின்சாரம் தாக்கியவர் உறவினர்களின் உதவியுடன் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொன்டு செல்லும் போது உயிழந்துள்ளார்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள்  MP கனகசபை காலமானார்மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்கள...
19/09/2025

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் MP கனகசபை காலமானார்

மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
அமரர். தன்மன்பிள்ளை கனகசபை அவர்கள் தனது 86 வது வயதில் இன்று (19/09/2025) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்

1939/03/20 ம்திகதி பிறந்த இவர் ஓய்வுநிலை விவசாயத் திணைக்கள உத்தியோகத்தராவார். 2004 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்தேசியத்தின் தீவிர பற்றாளராய் இருந்து தமிழ்த் தேசியப் பரப்பில் பயணித்த அன்னாரது இழப்பு பலரையும் கவலைகொள்ளச் செய்துள்ளது

இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணய கடன் மதிப்பீடு மேம்படுத்தப்பட்டுள்ளதாக ப்ளும்பேர்க் தெரிவித்துள்ளது.  இதனடிப்படையில்...
19/09/2025

இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணய கடன் மதிப்பீடு மேம்படுத்தப்பட்டுள்ளதாக ப்ளும்பேர்க் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் நீண்டகால உள்ளூர் நாணய கடன் மதிப்பீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ப்ளும்பேர்க் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் 2022 ஆண்டு எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை சீராக மீண்டுள்ளது, சில பெரிய பொருளாதார குறிகாட்டிகளும், இலங்கை ஏற்கனவே நெருக்கடிக்கு முன்னைய நிலையை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளன.

எனினும் பெரும்பாலான வெளிநாட்டுக் கடனை மறுசீரமைத்த பிறகும் கடன் சுமை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 9, 2025 வரை இணையவழி...
19/09/2025

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 9, 2025 வரை இணையவழியில் கோரப்படும் என கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அதன்படி, பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைப் பாடசாலை அதிபர்கள் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் இணையவழியாகவும் சமர்ப்பிக்க வேண்டும்.

தனியார் விண்ணப்பதாரர்கள் க.பொ.த. (சா.த.) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்போது தங்கள் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்த வேண்டும்.

தேசிய அடையாள அட்டை இல்லாத தனியார் விண்ணப்பதாரர்கள், தங்கள் பாதுகாவலர் (தாய் அல்லது தந்தை) இன் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பங்களைப் பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்களைச் சரியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடவலவ பகுதியில் கஞ்சா தோட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.உடவலவ தேசிய பூங்காவுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட, குறித்த கஞ்சா...
19/09/2025

உடவலவ பகுதியில் கஞ்சா தோட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

உடவலவ தேசிய பூங்காவுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட, குறித்த கஞ்சா தோட்டம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறுவடை நடவடிக்கை

திணைக்களத்தின் படி, பனஹடுவ தள பாதுகாப்பு அலுவலகத்தின் வனவிலங்கு அதிகாரிகள் நடத்திய ரோந்துப் பணியின் போது இந்த கஞ்சாத் தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கஞ்சா செடிகள் சுமார் மூன்று அடி உயரம் வரை வளர்ந்திருந்தன, மேலும் அந்த இடத்தில் அறுவடை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு நபர்களே காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது ஒரு சட்டவிரோத துப்பாக்கி, வெடிமருந்துகள், தோட்டத்திற்கு நீர்ப்பாசனம் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு தண்ணீர் பம்ப், பம்பிற்கு மின்சாரம் வழங்க பயன்படுத்தப்படும் ஒரு சூரிய பேனல் மற்றும் பிற உபகரணங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Address

Valaichchenai

Website

Alerts

Be the first to know and let us send you an email when CNTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CNTV:

Share