CNTV Stay tuned 🎥 📌fast update here📩

ஆட்டோ சாரதி எம் எம். இக்பாலினால் முகைதீன் அப்துல் காதர்  வித்தியாலயத்திற்கு உதவி சமூக சேவகர் ஆட்டோ சாரதி எம் .எம். இக்பா...
12/05/2026

ஆட்டோ சாரதி எம் எம். இக்பாலினால் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலயத்திற்கு உதவி

சமூக சேவகர் ஆட்டோ சாரதி எம் .எம். இக்பால் அவர்களினால் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலய அதிபர், பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கமைவாக தரம் ஒன்று மற்றும் இரண்டு வகுப்பறைகள் அமைந்துள்ள கட்டடம் முழுமையான வர்ணம் பூசி கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தரம் ஐந்து வகுப்பறைக்கான இரண்டு மின் குமிழ்கள், இரண்டு பூட்டுக்கள் என்பனவற்றை பெற்று த்தந்த ஆட்டோ சாரதி சமூக சேவகர் சகோதரர் எம்.எம். இக்பால் அவர்களுக்கு பாடசாலையின் அதிபர் அவர்களினால் நன்றியினை தெரிவிப்பதோடு குறித்த உதவிகளை அவருக்கு செய்யுமாறு உதவிகளை வழங்கிய சகோதரர்களுக்கும் அதிபர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற காலை ஆராதனை போது குறித்த உதவியை செய்த சகோதரர் எம் எம் இக்பால் அவர்களை வரவழைத்து அவர்களுக்கான நன்றியினை அதிபர் தெரிவித்ததோடு அதிபர் காரியாலத்தில் வைத்து அதற்கான நன்றிக்கடிதமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.எச். எம். முஸ்தபா சகோதரர் எம். முஸம்மில் பாடசாலையின் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

12.05.2026

வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தின் மாணவர் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் பாராட்டுத் திட்டம்வாழைச்சேனை வை. அஹமட் வித்த...
11/05/2026

வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தின் மாணவர் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் பாராட்டுத் திட்டம்

வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தின் கல்வித் தர முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட முன்னோடி பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் சல்மானுல் ஹரீஸ் .அவர்களின் தலைமையில் இன்று காலை ஆராதனையின் போது சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதல் ஆறு இடங்களைப் பெற்ற மாணவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர். மாணவர்களின் முயற்சியையும் கல்விசார் அர்ப்பணிப்பையும் ஊக்குவிக்கும் நோக்கில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினரும் வாழைச்சேனை எல்.பி. பினான்ஸ் நிறுவனத்தின் முகாமையாளருமான திரு. முஹம்மது ரிஸ்வி அவர்கள் தனது தனிப்பட்ட நிதியிலிருந்து அன்பளிப்பு பொருட்களை வழங்கி வைத்தார்.

மேலும் அபிவிருத்திச் சங்கத்தின் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

இவ்வாறான பாராட்டு நிகழ்வுகள் மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை உருவாக்குவதோடு மட்டுமல்லாது, தொடர்ச்சியான முயற்சி, ஒழுக்கம் மற்றும் கல்வி மீதான ஈடுபாட்டையும் வளர்க்கின்றன.

குறிப்பாக ஆரம்பக் கல்வி நிலையிலேயே மாணவர்களின் திறமைகள் பொதுமக்கள் முன்னிலையில் அங்கீகரிக்கப்படுவது, அவர்களுக்குள் தன்னம்பிக்கையையும் உயர்ந்த இலக்குகளை அடையும் மனோபலத்தையும் ஏற்படுத்துகிறது.

மேலும் பெற்றோர், ஆசிரியர்கள், பாடசாலை நிர்வாகம் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்படும் போது கல்வி வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் உருவாகிறது என்பதை இந்நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

கல்வி முன்னேற்றம் என்பது பாடசாலையின் பொறுப்பாக மட்டுமல்லாது, சமூகத்தின் கூட்டு பொறுப்பாகவும் அமைகின்றது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இந்நிகழ்வு திகழ்கிறது.

எதிர்காலத்திலும் மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் இத்தகைய முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் அதிரடி நடவடிக்கை!வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை 206 A ஸம் ஸம் வீதியில் அனுமதியின்றி வீதி...
10/05/2026

கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் அதிரடி நடவடிக்கை!

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை 206 A ஸம் ஸம் வீதியில் அனுமதியின்றி வீதிகளுக்கு வீட்டு கேட்டுடன் சேர்த்து வீதிகளுக்கும் படி போட்டு பாதசாரிகளுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தும் வகையில் இருந்த படிகளை தவிசாளர் சு சுதாகரன் தலைமையில் இன்று உடனடியாக அகற்றப்பட்டு வீதிகளை செப்பனிடும் வேலைத் திட்டம் தவிசாளரினால் ஆரம்பிக்கப்பட்டது.

இனிவரும் காலங்களில் பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் இவ்வாறான அனுமதியற்ற வேலைகளை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். தங்களது எல்லைக்குள் பாதசாரிகளுக்கு அசெளகரியம் இல்லாமல் செய்து கொள்ளுமாறு தவிசாளர் கேட்டுக் கொண்டார்.

கடந்த வாரம் தரம் 5 மாணவர்களுக்கு நடைபெற்ற மாகாணமட்ட கணிப்பீட்டுப் பரீட்சையில்  150 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 07 மாணவர்களு...
05/05/2026

கடந்த வாரம் தரம் 5 மாணவர்களுக்கு நடைபெற்ற மாகாணமட்ட கணிப்பீட்டுப் பரீட்சையில் 150 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 07 மாணவர்களுக்கும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 15 மாணவர்களுக்கும் பாடசாலை அதிபரினால் பாராட்டி பசிரில் வழங்கும் நிகழ்வு இன்று காலை ஆராதனையின் போது இடம்பெற்றது .

இதில் அதிபர் AUM.நளீம்(ஸலாமி) மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதற்கான ஒழுங்குபடுத்தல்களை தரம் ஐந்தில் கற்பிக்கும் சிரேஷ்ட ஆசிரியர் நண்பர் HM.கலாபிர் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கான பரிசில்களை எமது பாடசாலையில் மேலதிக கற்பித்தலை தரம் ஐந்து வகுப்புகளை நடாத்துகின்ற ஆசிரியர் AL.சனூஸ் அவர்களினால் செய்து தரப்பட்டமை விசேட அம்சமாகும்...

05.04.2026

🇱🇰🇮🇳 •தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..!உங்களது முதல் தேர்தலிலேயே வலுவான மக்...
04/05/2026

🇱🇰🇮🇳 •தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

உங்களது முதல் தேர்தலிலேயே வலுவான மக்கள் ஆதரவைப் பெற்று, தனித்துவமான அரசியல் சக்தியாக உருவெடுத்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க சாதனையாகும். மக்கள் மையப்படுத்தப்பட்ட அரசியல் பயணத்தைத் தொடங்கும் இந்த முக்கிய தருணத்தில், உங்களுக்குத் தேவையான மனவலிமை, தெளிவான நோக்கம் மற்றும் தொடர்ந்த வெற்றிகள் கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது..,

இலங்கை மற்றும் தமிழக மக்களுக்கிடையேயான வரலாற்று, கலாச்சார மற்றும் மனிதாபிமான உறவுகள் பல தசாப்தங்களாக வலுவாக இருந்து வருகின்றன. குறிப்பாக இலங்கை எதிர்நோக்கிய பல்வேறு சவாலான காலகட்டங்களில், தமிழக அரசு மற்றும் அதன் மக்கள் வழங்கிய ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதும் நினைவுகூரத்தக்கதாகும்.

இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக நான், இந்தியாவின் முக்கியமான மாநிலமான தமிழகத்தின் அரசியல் முன்னேற்றத்தை கவனமாகக் கண்காணித்து வருகிறேன். அந்த வகையில், நீங்கள் உருவாக்கி வரும் புதிய அரசியல் பாதை, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஒன்றாக அமையும் என்பதில் நம்பிக்கை உள்ளது.

மேலும், உங்கள் தலைமையில் தமிழக அரசு இலங்கை மக்களுடன் கொண்டுள்ள நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் பொருளாதார, கல்வி மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்புகளை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக மக்கள் உங்கள்மீது வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில், நல்லாட்சியும் மக்கள் நலக் கொள்கைகளும் முன்னிலைப்படுத்தப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. - எனவும் குறிப்பிட்டுள்ளார்.

__________________________
-- ஊடகப்பிரிவு

வாழைச்சேனை - நாவலடியில் வீடொன்றில் திருட்டு(எச்.எம்.எம்.பர்ஸான்)வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதீனா பள்ளிவாசல் வீதி...
04/05/2026

வாழைச்சேனை - நாவலடியில் வீடொன்றில் திருட்டு

(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதீனா பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றில் திருடர்கள் தங்களது கைவரிசையினை காட்டியுள்ளனர்.

குறித்த வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் ஓட்டமாவடி பகுதியிலுள்ள அவர்களின் மகளின் வீட்டில் தங்கியிருந்து மீண்டும் தங்களது வீட்டிற்கு சென்ற போது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

வீட்டில் யாரும் இல்லாத விடயத்தை அறிந்து கொண்ட திருடர்கள் வீட்டின் கதவினை உடைத்து மின் இணைப்பு வேலைக்காக இருந்த வயர் மற்றும் வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் நேற்று (3) அல்லது நேற்று முன்தினம் (2) ஆகிய தினங்களில் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விஜய் ஆட்சி அமைப்பாரா ? வெளியாகியுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து 110 ஆசனங்கள...
04/05/2026

விஜய் ஆட்சி அமைப்பாரா ?

வெளியாகியுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து 110 ஆசனங்களுடன் வெற்றி பெற்றுள்ளது.

அவ்வாறு விஜய் வற்றி பெற்றுள்ளார் என்பதற்காக அவருக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் ஆட்சி அமைப்பார் என்று உறுதியாக கூற முடியாது.

விஜய் ஆட்சி அமைக்கலாம் அல்லது அ.தி.மு.க ஆட்சி அமைக்கலாம். அரசியலில் எதுவும் நடக்கலாம்.

தமிழக முதலமைச்சரை தீர்மானிக்கும் பலம் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க விடம் உள்ளது.

அத்துடன் தி.மு.க விடம் பாராளுமன்ற பலமும் உள்ளது. இது அரசியல் அறிவு உள்ளவர்களுக்கு புரியும்.

அரசியலில் நிரந்தர பகைமை என்ற ஒன்றில்லை. அதிகாரத்தை பெறுவதற்காக பரம எதிரிகள் நண்பர்கலாகலாம். நண்பர்கள் எதிரிகலாகலாம்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

முகம்மத் இக்பால்

🇮🇳 தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு.. - தொடர்ந்து முன்னிலையில் த.வெ.க..!
04/05/2026

🇮🇳 தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு.. - தொடர்ந்து முன்னிலையில் த.வெ.க..!

அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் நௌபீஸ் ஜேர்மன் பயணம்.!(அஸ்லம் எஸ்.மௌலானா)அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம்.நௌபீஸ் இரு வா...
02/05/2026

அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் நௌபீஸ் ஜேர்மன் பயணம்.!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம்.நௌபீஸ் இரு வாரகால ஜேர்மன் நாட்டுக்கு (02) பயணமாகிறார்.

ஜேர்மனில் இடம்பெறவுள்ள Workshop on Connective Cities Deep Dive on Water Resilience Municipalities எனும் பயிற்சி செயலமர்வில் பங்குபற்றுவதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.

இந்த செயலமர்வில் ஜேர்மன் நாட்டிலுள்ள 03 மாநகர சபைகளினதும் மேலும் 05 நாடுகளில் இருந்து தலா ஒரு மாநகர சபை என்ற ரீதியிலும் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம்.நௌபீஸ் இரு வார காலத்திற்கான முழுமையான புலமைப் பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதுடன் அக்கரைப்பற்று மாநகர சபையின் பொறியியலாளர் ஹனீப் மொகமட் அவர்கள் முதல் ஒரு வார கால உத்தியோகபூர்வ செயலமர்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும், இந்த செயலமர்வைத் தொடர்ந்து சுவிஸ்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஒரு வார காலம் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பையும் ஆணையாளர் என்.எம்.நௌபீஸ் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆணையாளர் என்.எம்.நௌபீஸ் கடந்த காலங்களில் ஜப்பான், சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
News day

08 அணிகள் மோதும் மாபெரும் உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நாளை ஆரம்பம். ​வாழைச்சேனை 206-D கிராம அபிவிருத்திச் சங்கத்தினால...
02/05/2026

08 அணிகள் மோதும் மாபெரும் உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நாளை ஆரம்பம்.

​வாழைச்சேனை 206-D கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் காணி கொள்வனவினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 08 அணிகள் பங்குகொள்ளும் விலகல் முறை (Knock-out) உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நாளை(03.05.2026) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

​ஓட்டமாவடி உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் முறையான அனுமதியுடன் நடத்தப்படும் இச்சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு, நாளை மாலை 4.00 மணிக்கு வாழைச்சேனை VC பொதுமைதானத்தில் இடம்பெறவுள்ளது.

206-D கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் எம். எச். எம். நியாஸ் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓட்டமாவடி உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளருமான எம்.எம்.எம். ஹலால்தீன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இப்போட்டியினைக் காண்பதற்கான பார்வையாளர் நுழைவுக் கட்டணமாக 100 ரூபாய் அறவிடப்படும் என ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

​கிராம அபிவிருத்திச் சங்கத்தின் காணி கொள்வனவுத் திட்டத்திற்கு நிதி திரட்டும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் இந்த விளையாட்டுத் விழாவிற்கு விளையாட்டு ரசிகர்களையும் பொதுமக்களையும் வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

206-D கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 14 காலக் கனவு: நூரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயல் நிதியுதவி!​வாழைச்சேனை 206-D கிராம அபிவிர...
01/05/2026

206-D கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 14 காலக் கனவு: நூரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயல் நிதியுதவி!

​வாழைச்சேனை 206-D கிராம அபிவிருத்திச் சங்கத்தின் நீண்டகாலத் தேவையாக இருந்த சொந்தக் காணிக் கொள்வனவுத் திட்டத்திற்கு, பிறைந்துறைச்சேனை நூரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகம் நிதியுதவி வழங்கி கைகொடுத்துள்ளது.

​கடந்த 14 வருடங்களாகச் சொந்தக் காணி ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்காகக் கிராம அபிவிருத்திச் சங்கம் முன்னெடுத்து வந்த முயற்சிக்கு ஆதரவு கோரி, பள்ளிவாயல் நிருவாகத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

​இதனை ஏற்றுக்கொண்ட பள்ளிவாயல் நிருவாகம் இன்று வெள்ளிக்கிழமை (01.05.2026) ஜும்ஆத் தொழுகையின் போது மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 35,000/= (முப்பத்தி ஐயாயிரம்) ரூபா நிதியினை, கிராம அபிவிருத்திச் சங்க நிருவாகத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தது.

​சமூக நலன் கருதி முன்னெடுக்கப்பட்ட இந்த நிதியுதவிக்காக, கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் பள்ளிவாயல் நிருவாகத்திற்கு உத்தியோகபூர்வமாக நன்றி நவிலல் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன், இந்த நற்பணிக்குத் தாராளமாக நிதியுதவி வழங்கிய அனைத்து பொதுமக்களுக்கும் சங்கத்தினர் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Address

Valaichchenai

Website

Alerts

Be the first to know and let us send you an email when CNTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CNTV:

Share