29/04/2024
✍🏼🌞🔥
இன்னும் பத்து வருடங்களில் வெயில் இப்பொழுதுள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும் அப்பொழுது நம்மால் அதி வெப்பத்தை தாங்க இயலாது. பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கு சிரமம்
இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் வெயிலால் கோடை கொப்பளம் வந்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது.
நம் வீட்டைச் சுற்றி இடமிருப்பின், முடிந்த அளவிற்கு மரங்களை நடுவோம்.
*மரம் நடுவோம் இயற்கையை காப்போம்*
😇
வரும் ஆவணி மாதம் மழை காலம் துவங்கும். அப்பொழுது தமிழகத்தில் 10 கோடி மரக் கன்றுகள் நட இப்பொழுதே திட்டமிடுவோம்!
மரக் கன்றுகள் உற்பத்தியாளர்கள்,
வனத் துறை,
பள்ளித் தாளாளர்கள்,
உயர் பதவிகளில் இருப்போர்,
பிரபலங்கள்,
ஆன்மீக தலைவர்கள்,
அனைத்து மதங்களின் குருமார்கள்,
கிராமத் தலைவர்கள்,
ஊர் தலைவர்கள்,
அனைத்துக் கட்சி தலைவர்கள் ஒன்று கூடி செயல்படுவோம்.
அதற்கு இப்போதிருந்தே தயார் ஆகி கொள்ளுங்கள். உங்களுக்கான ஒரு குழுவை இப்போதே உருவாக்கி கொள்ளுங்கள்.
_1 கோடி குடும்பமும்_ தலா *10 மரக் கன்றுகள்* நட்டு சாதிக்க முடியும். ஒவ்வொரு மரக் கன்றிற்கும் அடுத்த 1 வருடம் தினமும் 1 லிட்டர் நீர் விட்டால் போதும்.
இதே போல் சில வருடங்கள் தொடர்ந்து செய்தால், வரும் 2030 க்குள் தமிழகமும் குளிர்ந்து போகும்!
அவரவர் ஊர்களில் சிறு சிறு குழுக்களாக இன்றே ஆயத்தம் ஆகுங்கள். கிராமங்களில் இன்னும் அதிக மரக் கன்றுகள் நடுவதற்கு திட்டமிடுங்கள்.
✍🏼
இதற்கான வாட்ஸ்அப் குழுக்கள் அந்தந்த ஊர்களில், கிராமங்களில் இன்றே துவங்குங்கள்.
👌🏼
மரக் கன்றுகள் நடுங்கள்
அல்லது மரக் கன்றுகள் வாங்கி கொடுங்கள் அல்லது நட உதவுங்கள்.
😇
மரக் கன்றுகள் தேவைக்கு உங்களுக்கு அருகாமையில் உள்ள நாற்றுப் பண்ணைகளில், நர்சரிகளில் இப்பொழுதே முன் பதிவு செய்து வைக்கவும். ✍🏼
_பொது இடங்களில்_ :-
1. புங்கன் மரம்
2. வெப்ப மரம்
3. ஆவி மரம்
4. அரச மரம்
5. குருவி பழம் என்ற சர்க்கரை பழம், லட்டு பழம்
இவைகளை நன்கு வளர்ந்த கன்றுகளாகப் பார்த்து வாங்கி நடுவது நன்று. இதில் _புங்கன்_ மரத்தை ஆடு மாடுகள் மேயாது.
_நீர் வழித் தடங்கள்_ அருகில்:-
1. பூவரசு மரம்
2. பனை மரம்
பாதுகாப்பு உள்ள வீட்டுக்கு அருகிலுள்ள இடங்களில் அவரவர் விருப்ப மர கன்றுகள் நடலாம்.
1. கறுவேப்பிலை
2. லட்சக் கொட்டைக் கீரை
3. தேக்கு
4. நாட்டு மா மரம்
5. நாட்டு பலா
6. நாட்டு அத்தி
7. குமிழ்
8. மகா கனி
9. மலை வேம்பு
போன்ற மரங்கள் நடலாம்
*வழிபாட்டுத் தலங்கள்*-
1. மர மல்லி
2. மகிழம் மரம்
3. மனோரஞ்சிதம்
4. பாரிஜாதம்
5. புன்னை மரம்
6. செண்பக மரம்
7. மருதாணி போன்றவற்றை நடலாம்
*2030 இல் பச்சைப் பசேல் என்ற தமிழகத்தை உருவாக்குவோம்!*
👌🏼
இனி வரும் காலங்களில் உண்டாக இருக்கும் கோடை கால கடும் சூரிய வெப்ப அலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம்.
😇🫣😇
மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
✍🏼
மர கன்றுகள் நடுவதற்கு ஆவணி மாதத்தில் முதல் மழை பெய்ததும் 1 நாள் பொது விடுமுறை அறிவிக்க வேண்டுகிறோம்!
🙏🏼
வெப்ப அலைகளுக்கு எதிரான ஒரு போர் போல் தான் இதுவும்!
🌳🌳🌳🌳🌳🌳
ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்!
💪🏼
நன்றே செய்வோம்!
அதனை இன்றே துவங்குவோம்!!
🌱🪴🌱🪴🌱🪴🌱
பிடித்திருந்தால் காப்பி செய்து பதிவிட்டு இயற்கையைக் காக்க உதவுங்கள்...
🌱🌱🌱🌱🌱🌱
🌳🌳🌳🌳🌳🌳