Qaima Tv Qatar-Sri Lanka

Qaima Tv Qatar-Sri Lanka Public News Media Channel

"முஸ்லிம்களின் முன்மாதிரிகளுக்கு முஹர்ரம்  வழித்தடமாய் விளங்கட்டும்" - இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்தில் தலைவர் ரிஷாட்!MP.ம...
27/06/2025

"முஸ்லிம்களின் முன்மாதிரிகளுக்கு முஹர்ரம் வழித்தடமாய் விளங்கட்டும்" - இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்தில் தலைவர் ரிஷாட்!MP.

முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள் ஈடேறுவதற்கு, பிறந்துள்ள முஹர்ரம் வழி திறக்குமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய புதுவருடத்தை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

"இஸ்லாமிய உறவுகள் சகலருக்கும் முஹர்ரம் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். பிறந்துள்ள இஸ்லாமிய புதுவருடத்திலிருந்து ஈமானைப் பலப்படுத்தும் நல்லமல்களுடன் நெருக்கமாகுவோம். சில்லறைச் சமாச்சாரங்களுக்காக உடைந்துபோன நமது உறவுகளை புதுப்பிக்க இப்புத்தாண்டில் உறுதிபூண வேண்டும்.

நாடு உட்பட சர்வதேசத்தின் நாலாபுறங்களிலிருந்தும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களை தோற்கடிக்க ஈமானிய உள்ளங்கள் ஒன்றுபடட்டும்.

ஏகாதிபத்தியம் எம்மை அடக்கியாள முடியாது. ஈமானின் பலத்துக்கு முன்னால், எந்த சக்தியாலும் வெற்றி பெறவும் இயலாது. இறைவனின் நம்பிக்கையில், இறைதூதரின் முன்மாதிரியில் வாழ்ந்தால் வெற்றி நிச்சயம். ஈருலகிலும் இந்த வெற்றிகளையடைய இதுவே வழியாகும்.

இஸ்லாமிய உறவுகளின் ஹலாலான தேவைகள் அனைத்தையும் "அல்லாஹ்" அருள்பாலிக்கட்டும்..!" என்று குறிப்பிட்டுள்ளார்.

 #கத்தார்_வான்வெளி  #தற்காலிகமாக  #மூடப்பட்டது_தொடர்பாக  #கத்தார்_ஏர்வேஸ்_ஒரு  ்சரிக்கையை  #வெளியிட்டுள்ளது,27 June 2025...
27/06/2025

#கத்தார்_வான்வெளி #தற்காலிகமாக #மூடப்பட்டது_தொடர்பாக #கத்தார்_ஏர்வேஸ்_ஒரு ்சரிக்கையை #வெளியிட்டுள்ளது,

27 June 2025 ஜூன் 23, 2025 அன்று கத்தார் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது தொடர்பாக கத்தார் ஏர்வேஸ் ஒரு பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது, ஜூன் 26, 2025 வரை சாத்தியமான இடையூறுகளுடன் விமான நிறுவனம் அதன் அட்டவணையை மீட்டெடுப்பதில் முன்னேற்றம் அடைந்து வருவதாக பயணிகளுக்கு உறுதியளித்துள்ளது.

ஜூன் 30, 2025 வரை விமான திகதிகளை கொண்ட பயணிகள் பின்வருவனவற்றைச் செய்யலாம் என்று விமான நிறுவனம் கூறுகிறது:

எந்த கட்டணமும் செலுத்தாமல் ஜூலை 15, 2025 வரை செல்லுபடியாகும் தங்கள் விமான திகதிகளை மாற்றலாம்.

பயன்படுத்தப்படாத எந்தவொரு விமான டிக்கெட்டிற்கும், குறிப்பிட்ட காலத்திற்குள், எந்த ரத்து கட்டணமும் செலுத்தாமல் பணத்தைத் திரும்பப் பெறலாம்.

மேலும், அனைத்து பயணிகளும், அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது மொபைல் செயலி மூலம் இந்த விஷயத்தில் ஏதேனும் புதுப்பிப்புகளை எப்போதும் கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

27/06/2025
டொலரை அடித்து வீழ்த்தி உலகை அதிர வைத்த BRICS வர்த்தகம்:-புடின் அறிவிப்பு!இந்தியா (India), சீனா (China), ரஷ்யா (Russia) உ...
27/06/2025

டொலரை அடித்து வீழ்த்தி உலகை அதிர வைத்த BRICS வர்த்தகம்:-

புடின் அறிவிப்பு!

இந்தியா (India), சீனா (China), ரஷ்யா (Russia) உள்ளிட்ட நாடுகள் சேர்ந்துள்ள பிரிக்ஸ் அமைப்புக்குள் உள்ளக வர்த்தகம் ஒரு டிரில்லியனை கடந்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது அமெரிக்க (America) டொலருக்கு எதிரான ஒரு முதற்கட்ட வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது பத்திற்கும் மேற்பட்ட நாடுகள் உள்ள இந்த அமைப்பின் மக்கள் தொகை மற்றும் உலக ஜிடிபியில் பங்களிப்பு 40 வீதமாகவுள்ளது.

இந்நதிலையில், பிரிக்ஸ் நாடுகள் எதிர்காலத்தில் அணுசக்தி, ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் பெரும் திட்டங்களை செயல்படுத்த உள்ளன என்றும், உறவுகளை வலுப்படுத்தி, சமத்துவம் மற்றும் ஒற்றுமையை கடைபிடிக்கவுள்ளதாகவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

பிரிக்ஸ் நாடுகள் தங்களது சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்ய ஆரம்பித்துள்ளதை அமெரிக்கா கவலையுடன் கவனிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேரடி வர்த்தகம்:-

இந்தநிலையில், இந்த நாணய மாற்றமின்றி நேரடி வர்த்தகம் மூலம் வங்கி கட்டணச் செலவுகள் குறையும் மற்றும் இலாபம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, ரூபாய் போன்ற உள்ளூர் நாணயங்களின் பொருள் மதிப்பு உயரும் எனவும் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் டொலரின் ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படாமல் இருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

BRICS வர்த்தகம் அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தை குறைத்து, இந்தியாவுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறுத்தப்படும் அபாயத்தில் இதய அறுவை சிகிச்சைகள்!தேவையான அறுவை சிகிச்சைப் பொருட்கள் இல்லாத காரணத்தால் கொழும்பு தேசிய மருத...
27/06/2025

நிறுத்தப்படும் அபாயத்தில் இதய அறுவை சிகிச்சைகள்!

தேவையான அறுவை சிகிச்சைப் பொருட்கள் இல்லாத காரணத்தால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் (Colombo National Hospital) பைபாஸ் இதய அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் 6 முதல் 10 வரையான பைபாஸ் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்றும், ஒரு நோயாளி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய சுமார் 2 ஆண்டுகள் பட்டியலில் காத்திருப்பதாகவும் தெரியவருகிறது.

வைத்திய நிபுணர் மகேஷி விஜேரத்ன கைதால் ஏற்பட்ட தயக்கம்!

பல ஆண்டுகளாக, நோயாளிகள் மருத்துவ பரிந்துரையின் பேரில் சுமார் ரூ.70,000/- செலவில் பைபாஸ் அறுவை சிகிச்சைக்குத் தேவையான சில அறுவை சிகிச்சைப் பொருட்களை வெளியில் இருந்து கொண்டு வருவதாகவும், வைத்திய நிபுணர் மகேஷி விஜேரத்ன சம்பந்தப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, அறுவை சிகிச்சைப் பொருட்களை வெளியில் இருந்து கொண்டு வர மருத்துவர்கள் தயக்கம் காட்டுவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன் விளைவாக, எதிர்காலத்தில் நோயாளிகள் இந்த அறுவை சிகிச்சைப் பொருட்களின் உயிருக்கு ஆபத்தான பற்றாக்குறையை சந்திக்க நேரிடும், மேலும் இந்தப் பற்றாக்குறைக்கு தீர்வு காண சுகாதாரச் செயலாளர் அனில் ஜாசிங்கவுடன் கலந்துரையாட நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

பொத்துவில் பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசம் - தவிசாளராக சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷர்ரப்!பொத்துவில் பிரதேச சபையின் தவிச...
27/06/2025

பொத்துவில் பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசம் - தவிசாளராக சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷர்ரப்!

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் பொத்துவில் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (27.06.2025) நடைபெற்றது.

நடைபெற்ற தவிசாளர் வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முன்மொழியப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷர்ரப் ஏகமானதாக தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

உப தவிசாளர் பதவிக்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச்சேர்ந்த ஏ.மாபிர், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச்சேர்நத டீ.சுபோகரன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. வாக்கெடுப்பில் டீ.சுபோகரன் 3 வாக்குகளையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.மாபிர் ஆதரவாக 13 வாக்குகளையும் பெற்று சபையில் ஏகமனதாக உப தவிசாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, பொத்துவில் அமைப்பாளரும் முன்னாள் தவிசாளருமான எம்.எஸ்.வாசித்,
கட்சியின் மாவட்ட செயற்குழுச்செயலாளர் ஏ.சி.சமால்தீன், கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் சுற்றுலாத்துறை பிரதேசங்களில் இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்களை அமைப்பதற்கு சுற்றுலாத்துறை அமைச்சு அனுமதி வழங்கக...
26/06/2025

இலங்கையில் சுற்றுலாத்துறை பிரதேசங்களில் இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்களை அமைப்பதற்கு சுற்றுலாத்துறை அமைச்சு அனுமதி வழங்கக் கூடாது!

சுற்றுலாத்துறை அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை.

இலங்கையில் சுற்றுலாத்துறை பிரதேசங்களில் இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்கள் அமைக்கப்படுவதால் சுற்றுலாத்துறை வருமானங்களில் வீழ்ச்சி ஏற்படுவதுடன் அமைதியான சுற்றுலாத்துறை பிரதேசங்களில் பொதுமக்கள் அச்சம் அடையும் நிலைமையும் ஏற்பட்டு வருகின்றன. எனவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு இனிமேல் சுற்றுலாத்துறை அமைச்சு அனுமதி வழங்கக் கூடாது.

அம்பாறை மாவட்டத்தில் அருகம்பே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனத்தை அகற்றி சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யக்கூடிய நடவடிக்கைகளில் சுற்றுலாத்துறை அமைச்சு ஈடுபட வேண்டும் எனவும்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் தான் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. விஜித ஹேரத் தலைமையில் பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்….

அம்பாறை மாவட்டத்தில் அருகம்பே பிரதேசத்தில் இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்கள் தொடர்பாக பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளனர் என தெரிவித்தார். அத்துடன் இடைநிறுத்தப்பட்டுள்ள கொழும்பு - மட்டக்களப்பு விமான சேவை ஆரம்பிப்பதால் கிழக்கு மாகாண மக்கள் பயன் அடைவார்கள்.

எனவே கொழும்பு - மட்டக்களப்பு விமான சேவையினை ஆரம்பிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை….

கொழும்பிலிருந்து அம்பாறை விமான நிலையம், மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கான விமான சேவை நீண்டகாலமாக நடைபெற்று வந்தன. இதனால் கிழக்கு மாகாண மக்கள் நன்மை அடைந்தனர். ஆனால் தற்போது கொழும்பு – மட்டக்களப்பு, அம்பாறை விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனவே இச்சேவையினை மீண்டும் ஆரம்பிப்பதால் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெரும் நன்மை அடைவார்கள் எனத் தெரிவித்தார். இது தொடர்பாக இலங்கை விமானப்படை, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை ஒன்றை சமர்பபிக்குமாறு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. விஜித ஹேரத் பணிப்புரை விடுத்தார்.

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது போல, அதே வழியில் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று,  நான் டிரம...
26/06/2025

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது போல, அதே வழியில் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று, நான் டிரம்பிடம் சொன்னேன்.

- துருக்கிய அதிபர் ரஜப் தையூர் எர்டோகான் -

வரலாற்றில் முஸ்லிம் மக்கள் மன்னிக்கவே முடியாத முனாஃபிக்குகளே மக்கள் காங்கிரஸின் தாஹீர், மாஹீர், காதர் ஆகியோர்-நாவிதன்வெள...
26/06/2025

வரலாற்றில் முஸ்லிம் மக்கள் மன்னிக்கவே முடியாத முனாஃபிக்குகளே மக்கள் காங்கிரஸின் தாஹீர், மாஹீர், காதர் ஆகியோர்-நாவிதன்வெளி முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்தது மரமும், மயிலும். - அபூபக்கர் நளீர் காட்டம்!

-:நூருல் ஹுதா உமர்:-

நாவிதன்வெளி பிரதேச சபை ஆட்சியமைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.பி.நவாஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் நவாஸும் எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி முனாபிக் தனமாக நடந்து கொண்டார்கள்.

மட்டுமின்றி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரமுகர்களான எம்.ஏ.தாஹீர் எம்பி, உயர்பீட உறுப்பினர் எம்.ஐ.எம்.மாஹீர், மாவட்டத்தலைவர் காதர் ஆகியோரும் நாவிதன்வெளிக்கு முஸ்லிம் ஒருவர் உப தவிசாளராக வருவதைத்தடுத்து இப்பிரதேச முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்து முனாபிக்குகளாக நடந்து கொண்டார்கள் என நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.நளீர் தெரிவித்தார்.

இன்று அவரது அலுவலகத்தில் வேட்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் சகிதம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

அண்மையில் நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து எனது தலைமையிலான சுயேட்சைக்குழு காற்பந்து சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு ஆசனமுமாக மொத்தமாக நான்கு பிரதேச சபை உறுப்பினர்கள் முஸ்லிம்கள் சார்பில் தெரிவாகியிருந்தனர்.

கடந்த முறை ஏ.கே.சமட் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களைப்பெற்று இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்கி பிரதேச சபையின் உப தவிசாளர் பதவியைப்பெற்று முஸ்லிம் மக்களுக்கு பல சேவைகளைச்செய்தார். உப தவிசாளராகவும் சிறிது காலம் பதில் தவிசாளராகவும் பதவி வகித்து நாவிதன்வெளி பிரதேசத்தில் வாழும் சுமார் 35 விதமான முஸ்லிம் மக்களைக் கௌரவப்படுத்தினார்.

சிற்றூர்களுக்காக பெரிய ஊர்களை
காவு கொடுக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.தாகீர் தெரிவித்து எங்களின் ஊருக்கு அநியாயம் செய்துள்ளார்.

இது வரலாற்றுத்துரோகமாகும். இத்துரோகத்தை வரலாற்றில் எப்போதும் மன்னிக்க முடியாது. எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் சிற்றூர்கள் எல்லாம் இவர்கள் ஓரங்கட்டி தகுந்த பாடம் கற்பிக்க முன்வர வேண்டும்.

தமிழ் பிரதேச சபை உறுப்பினர்களை மட்டும் இணைத்து நாவிதன்வெளி பிரதேச சபையின் ஆட்சியை நிறுவ வேண்டுமென்ற நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள ஒரு முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இனவாத சிந்தனைக்கமைவாக தவிசாளரும், உப தவிசாளரும் தமிழர்களாகத்தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒருவர் உப தவிசாளராகத்தெரிவு செய்யப்படுவதைத்தடுக்கும் ஈனச் செயலுக்கு ஆதரவு வழங்கி முஸ்லிம் மக்களுக்கு வரலாற்றுத்துரோகத்தை இழைத்த குறித்த பிரதேச சபை உறுப்பினர்கள் இருவருக்கும் இவர்களின் கட்சிகளுக்கும் அதன் தலைமைகளுக்கும் இன்னும் இதனுடன் தொடர்புடைய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இந்த இஸ்லாமிய சமூகம் எக்காலத்திலும், எச்சந்தர்ப்பத்திலும் மன்னிப்பு வழங்கக்கூடாது

தமிழ் சமூகத்தைச்சார்ந்த முன்னாள் தவிசாளரும் தற்போதைய பிரதேச சபை உறுப்பினருமான கௌரவ அ.ஆனந்தன் தலைமையிலான மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆகியோர் இணைந்து நாவிதன்வெளி பிரதேசத்தில் காலாகாலமாக ஒற்றுமையுடன் செயல்படும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பிளவுகள், கசப்புணர்வுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நன்நோக்கத்தின் அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை உப தவிசாளராகத்தெரிவு செய்ய வேண்டுமென்ற நோக்கோடு மிகவும் அர்ப்பணிப்போடு செயற்பட்டு முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவால் வெற்றியீட்டிய என்னை உப தவிசாளர் பதவிக்கு பிரேரித்தார்கள்.

இத்தெரிவுக்காக நடாத்தப்பட்ட வாக்களிப்பில் போது சபையிலிருந்த நான்கு முஸ்லிம் பிரதேச சபை உறுப்பினர்களும் தமிழ்ப்பிரதேச சபை உறுப்பினர்கள் மூவருடன் இணைந்து எனக்கு வாக்களித்திருப்பார்களேயானால் இன்று முஸ்லிம் சமூகம் உப தவிசாளரைப்பெற்றிருக்கும்.

ஆனா, ல்மரம், மயில் கட்சிகளைச்சேர்ந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களும் மாற்று சமூகத்தைச்சார்ந்த ஒருவருக்கு தங்களுடைய வாக்குகளை வழங்கியதன் காரணமாக இன்று எமது சமூகம் உப தவிசாளர் பதவியை இழந்திருக்கின்றது.

இது முஸ்லிம் சமூகத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் இழைக்கப்பட்ட மிகப்பெரிய வரலாற்றுத்துரோகம்.

வழமையாகவே தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாவிதன்வெளி பிரதேச சபையில், தவிசாளராக ஒரு தமிழ் சமூகத்தவரும் உப தவிசாளராக ஓர் முஸ்லிமும் வருவது வழமை. ஆனால், இம்முறை அவ்வழமை முஸ்லிம் கயவர்களால் அப்பட்டமாக ஒழிக்கப்பட்டுள்ளது.

நாவிதன்வெளி முஸ்லிம் மக்கள் எமது உரிமைகளையும் அதிகாரங்களையும் பெற்றுத்தருவார்கள் என்று யாரை இவ்வளவு காலமும் நம்பி வாக்களித்தார்களோ அதற்குப் பிரதிபலனாக ஓட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்திற்கே இந்த முஸ்லிம் தலைவர்கள் துரோகமிழைத்துள்ளனர்.

எமது நாவிதன்வெளி முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அதியுச்ச அதிகாரம் இந்த உப தவிசாளர் பதவி அதுவும் இம்முஸ்லிம் தலைவர்களால் திட்டமிட்ட முறையில் இழக்கச்செய்யப்பட்டுள்ளது.

தனது சமூகத்தின் நியாயமான உரிமையை இன்னொரு சமூகத்திற்கு தாரை வார்த்த இவர்களை நாம் எப்படி நம்புவது.

நாவிதன்வெளி முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களின் நம்பிக்கையைச் சிதைத்த இந்தத் துரோகத்தை ஒரு போதும் மன்னிக்க முடியாது.

தங்களின் சுயநல அரசியல் இலாபங்களுக்காகச்செயற்படும் இந்தத் தலைவர்களையும் குறித்த பிரதேச சபை உறுப்பினர்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.

இவ்வூடக சந்திப்பில் நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஏ.கே.சமட் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

BRICS-அமைப்பு நாடுகள் கவலை தெரிவிப்பு.!ஜூன் 13 முதல் "ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள்" குறித்து "கடுமையான கவலையை ...
26/06/2025

BRICS-அமைப்பு நாடுகள் கவலை தெரிவிப்பு.!

ஜூன் 13 முதல் "ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள்" குறித்து "கடுமையான கவலையை வெளிப்படுத்த" இந்தியா பிரிக்ஸ் குழுவில் இணைந்துள்ளது,

மேலும் இது "சர்வதேச சட்டம் மற்றும்
ஐ.நா. சாசனத்தை மீறுவதாக" கூறியுள்ளது.

ஜூலை 5-6 திகதிகளில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி ரியோ டி ஜெனிரோவுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி மன்னர்.பைசல் அஹமது.1975. அமெரிக்கா படு கொலை செய்தது..பலஸ்தின் மன்னர்.யாசர் அராபத்.2004. அமெரிக்காகூலி படையினரால் ச...
26/06/2025

சவூதி மன்னர்.பைசல் அஹமது.
1975. அமெரிக்கா படு கொலை செய்தது..

பலஸ்தின் மன்னர்.யாசர் அராபத்.2004. அமெரிக்காகூலி படையினரால் சூழ்ச்சி செய்து படு கொலை செய்யப் பட்டார்..

ஈராக் அதிபர் சதாம் உசேன் டிசம்பர்
30, 2006
அமெரிக்கா படுகொலைசெய்தது..

லிபியா.அல் கடாபி.2011.அமெரிக்கா படு கொலை செய்தது..
அனைவரும் அமெரிக்காவை எதிர்த்து நின்று களமாடியவர்கள்.

அவனுகளை எதிர்த்தால் இதுதான் முடிவு என நினைத்து கொண்டிருந்தார்கள்..

இரான் கதையையும் இந்த பட்டியலில் சேர்க்க துடித்தது அமெரிக்கா

ஆனால் ஈரான் அடித்த அடியில் இஸ்ரேல் மட்டுமல்ல அமெரிக்காவும் சேர்ந்தே ஆடிப்போயிருக்கிறது..

முடிவு எதுவாகினும் பதிலடி நிச்சயம் என்று சூளுரைத்து அமெரிக்கா வையும், இஸ்ரேலையும், ஐயோப்பிய நாடுகளையும் எதிர்த்து போர் புரிந்த கொமைனியின் வீரத்திற்கு ஒரு ராயல் சல்யூட்..

Address

Vavuniya Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qaima Tv Qatar-Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qaima Tv Qatar-Sri Lanka:

Share