Qaima Tv Qatar-Sri Lanka

Qaima Tv Qatar-Sri Lanka Public News Media Channel

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தேசிய  #இளைஞர்_அமைப்பாளராக பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.எம். #முஷாரப்_நிய...
15/07/2025

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய #இளைஞர்_அமைப்பாளராக பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.எம். #முஷாரப்_நியமனம்!

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம்.எம்.முஷாரப் கட்சியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் உயர்பீடக் கூட்டம் (10), "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில் நடைபெற்றபோது இந் நியமனம் உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.

இதில் கட்சியின் செயலாளர் ,பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உட்பட உயர்பீட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் சவுதி மேம்பாட்டு நிதியத்தின் (SFD) தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுல்தான் பின் அப்த...
15/07/2025

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் சவுதி மேம்பாட்டு நிதியத்தின் (SFD) தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுல்தான் பின் அப்துல்ரஹ்மான் அல்மர்ஷாத் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

இதன் போது இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களில் சவூதி அரேபியாவின் பங்களிப்பு பற்றி கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களும் கலந்து கொண்டார்.

27 ரன்களுக்கு ஆல் அவுட் - வரலாற்றில் இரண்டாவது மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோர்.🚨 வரலாற்றில் மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோர்கள் 🚨...
15/07/2025

27 ரன்களுக்கு ஆல் அவுட் - வரலாற்றில் இரண்டாவது மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோர்.

🚨 வரலாற்றில் மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோர்கள் 🚨

26: நியூசிலாந்து, v தென்னாப்பிரிக்கா @ ஆக்லாந்து, 1955

👉 27: மேற்கிந்திய தீவுகள், v ஆஸ்திரேலியா @ கிங்ஸ்டன், 2025 👈

30: தென்னாப்பிரிக்கா, v இங்கிலாந்து @ க்வெபெரா, 1896

30: தென்னாப்பிரிக்கா, v இங்கிலாந்து @ பர்மிங்காம், 1924

35: தென்னாப்பிரிக்கா, v இங்கிலாந்து @ கேப் டவுன், 1899

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர் சம்மாந்துறை பொலிசாரினால் கைது!தில்சாத் பர்வீஸ் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொ...
15/07/2025

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர் சம்மாந்துறை பொலிசாரினால் கைது!

தில்சாத் பர்வீஸ்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 01 பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) மாலை 1.00 மணியளவில் சம்மாந்துறை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரினால் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கையடக்க தொலைபேசியின் உட்பகுதியில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை புளக் ஜே 02 பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும், கல்லரிச்சல் 03 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சந்தேக நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து 2 கிராம் 631 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும், கையடக்க தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டதுடன், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 330 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டுதலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் தலைமையிலான குழுவினரினால் குறித்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 #ஏமனில் நாளை  #மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள  #நிமிஷாவை காப்பாற்ற மத்திய அரசு தீவிர முயற்சி.!!கேரளா​வின் பாலக்​காட்டை ச...
15/07/2025

#ஏமனில் நாளை #மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள #நிமிஷாவை காப்பாற்ற மத்திய அரசு தீவிர முயற்சி.!!

கேரளா​வின் பாலக்​காட்டை சேர்ந்​தவர் நிமிஷா பிரியா (38). இவர் #ஏமன் நாட்டை சேர்ந்த ஜவுளி வியா​பாரி தலால் அய்டோ #மெஹ்​தி​யுடன் இணைந்து புதிய மருத்​து​வ​மனையை தொடங்​கி​னார். பின்னர் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை​யில் மெஹ்​திக்​கு,நிமிஷா மயக்க ஊசியை செலுத்​தி​னார். இதில் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் #நிமிஷாவுக்கு நாளை (16) மரண #தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த சூழலில் அவரை காப்​பாற்ற #இந்திய மத்​திய அரசு நடவடிக்கை எடுக்க உத்​தர​விடக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. நீதிப​தி​கள் விக்​ரம் நாத், சந்​தீப் மேத்தா அமர்வு முன்பு வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மத்​திய அரசு சார்​பில் அட்​டர்னி ஜெனரல் வெங்​கடரமணி ஆஜராகி, ‘‘ஏமனில் நிமிஷா பிரி​யாவை காப்​பாற்ற மத்​திய அரசு சார்​பில் அனைத்து முயற்​சிகளும் மேற்​கொள்​ளப்​பட்​டன. நிமிஷா​வின் குடும்​பத்​தினர் ஏமனில் முகாமிட்டு உள்​ளனர். அவர்​களுக்கு மத்​திய அரசு உறு​துணை​யாக இருக்​கும்’’ என்றார்.

பின்னர் நீதிப​தி​கள் கூறும்​போது, “ஏமன் சிறை​யில் நிமிஷா பிரியா உள்​ளார். நாங்​கள் எந்த உத்​தரவு பிறப்​பித்​தா​லும் அதனால் எந்த பலனும் இல்​லை. நிமிஷாவுக்கு மரண தண்​டனை நிறைவேற்​றப்​படக்​கூ​டாது என்று விரும்​பு​கிறோம். வழக்​கின் அடுத்த விசா​ரணை ஜூலை 18-க்கு ஒத்​திவைக்​கப்​படு​கிறது" என்று தெரி​வித்​தனர்.

ஷரியா என்​றழைக்​கப்​படும் இஸ்​லாமிய சட்​டத்​தில் குரு​திப் பணம் என்​பது ஒரு வகை​யான நீதி​யாக கருதப்​படு​கிறது. எனவே, பிரியா குடும்​பத்​தினர் சார்​பில் உயி​ரிழந்த மெஹ்தி குடும்​பத்​தினருக்கு ரூ.8.6 கோடியை வழங்க முன்​வந்​துள்​ளனர்.
அதை மெஹ்தி குடும்​பத்​தினர்​ ஏற்பார்களா என்​பதற்​கு இதுவரை விடை கிடைக்​கவில்​லை.

இதேவேளை, கேரளத்தில் இஸ்லாமிய சமூகத்தில் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படும் மூத்த தலைவர் காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் மஸ்லியார், யேமனில் மரண தண்டனைக்கு ஆளாகியுள்ள செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்றும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

அவர் யேமனில் உள்ள இஸ்லாமிய தலைவர்களை தொடர்புகொண்டு நிமிஷாவுக்கான தண்டனையை மாற்ற சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார் என்று கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யேமனில் நிமிஷா பிரியாவால் கொல்லப்பட்ட தலால் அப்தோ மஹ்தியின் குடும்பத்தினருடன் தொடர்பிலுள்ள யேமன் தலைவர்களுடன் கேரளத்தின் மஸ்லியார் பேச்சு நடத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள முடிவுகள் குறித்து செவிலியரின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் விதிக்கும் பணத்தை செலுத்தினால் தண்டனையிலிருந்து குற்றவாளி தப்பிக்க வாய்ப்புள்ளது. மேற்கண்ட விவரங்கள் நிமிஷாவின் குடும்பத்தினரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்று கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், மஸ்லியார் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக இவ்விவகாரம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
செவிலியரை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற மத்திய அரசு தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடருவதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் பலனிக்காமல் பொனால், அதைத்தாண்டி வேறெந்த முயற்சிகளையும் அரசால் செய்ய இயலாத சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

நாளை ஜூலை 16-இல் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று யேமன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் 48 மணி நேரத்துக்கும் குறைவான கால அவகாசமே இருப்பதால், முஸ்லிம் தலைவர்கள் அளவிலான பேச்சு பலனளிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது....

தோண்டப்படும் வரலாறு:-பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், ஹஜ்ஜிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என 168 முஸ்லிம்கள...
15/07/2025

தோண்டப்படும் வரலாறு:-

பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், ஹஜ்ஜிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என 168 முஸ்லிம்கள் கடத்திச் செல்லப்பட்டு கொன்று புதைக்கப்பட்ட குருக்கள்மடம் படுகொலைக்கு நேற்றுடன் 35 ஆண்டுகள்.

🇮🇳 IND vs ENG 🏏கத்துவதல்ல வெற்றி...!கற்பதே வெற்றி..!எதிரியைக் கூட தோழில் தட்டி ஆறுதலளிப்பதைவெள்ளையன்களிடம் கற்க வேண்டும்...
15/07/2025

🇮🇳 IND vs ENG 🏏

கத்துவதல்ல வெற்றி...!
கற்பதே வெற்றி..!
எதிரியைக் கூட தோழில் தட்டி ஆறுதலளிப்பதை
வெள்ளையன்களிடம் கற்க வேண்டும்...

இவைகள்தான் கிரிக்கெட்டின் மிகப் பெரும் அழகு! ❤️🏏

#

Pink ball magician Mitchell Starc🔥🔥🔥15 பந்து வீசி 5 விக்கெட்...வெஸ்ட் இண்டீஸ் அணியை வெறும் 27 ரன்களில் ஆல் அவுட் ஆக்கி ச...
15/07/2025

Pink ball magician Mitchell Starc🔥🔥🔥15 பந்து வீசி 5 விக்கெட்...

வெஸ்ட் இண்டீஸ் அணியை வெறும் 27 ரன்களில் ஆல் அவுட் ஆக்கி சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலியா அணி.....

100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஸ்டார்க் முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் எடுத்துள்ளார்....

இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணியை கதற விட்டுடாங்க ரெண்டே ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள்....

முதல் ஓவரில் 3 விக்கெட் எடுத்து ஆரம்பத்திலே அலறவிட்டார்.... ஸ்டார்க்
.W 0 0 0 W W (0 runs)

4 வது ஓவரில் 2 விக்கெட் எடுத்து போது மொத்தமாக 400 விக்கெட் எடுத்து சாதனை படைத்தார்....

வெறும் 15 பந்துகளே வீசி 5 விக்கெட் எடுத்தார் ....7.3-4-9-6

7 ஓவர் வீசி அதில் 4 ஓவர் மெய்டன் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் எடுத்து இருக்கான்.....

Man of the match award & man of the series award won by mitchell...

மறுமுனையில்
போலந்து ஹாட்ரிக் விக்கெட் எடுத்து மொத்த வெஸ்ட் இண்டீஸ் அணியும் 27 ரன்களில் ஆல் அவுட் ஆனது....

மனநல சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் வைத்தியர் - தேசிய வைத்தியசாலைக்குள் அடாவடி!கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப்...
15/07/2025

மனநல சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் வைத்தியர் - தேசிய வைத்தியசாலைக்குள் அடாவடி!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் அலுவலகத்திற்குள்
(14) காலை வலுக்கட்டாயமாக நுழைந்து அவரது நாற்காலியில் அமர்ந்த ஒரு பெண், மனநல சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு சுகாதார நிறுவனத்தில் பணிபுரியும் வைத்தியர் என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அச்சுறுத்திய பெண் வைத்தியர்!

இன்று காலை 10 மணியளவில் தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு வந்த அந்த பெண், பிரதிப் பணிப்பாளர் நாயகத்தை அச்சுறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

பிரதிப் பணிப்பாளர் நாயகம், தனது இருக்கையை விட்டு வெளியேறியவுடன், அந்த இருக்கையில் அமர்ந்த வைத்தியர் தனது கடமைகளை முறையாகச் செய்ய முடியாவிட்டால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூச்சலிட்டதாக வைத்தியசாலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை அதிகாரிகள் வந்து வைத்தியரை தேசிய வைத்தியசாலையின் மனநலப் பிரிவுக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.

அவருக்கு மனநலப் பிரச்சினை உள்ளதா என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருவதாக வைத்தியசாலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔴BREAKING 🔴MYANMAR 🇲🇲 (  ‼️    )புத்த மடாலயம் மீது  #ஜுண்டா குண்டு தாக்குதல்!30 பேர் பலி!மியான்மரில் புத்த மடாலயம் மீது ...
13/07/2025

🔴BREAKING 🔴MYANMAR 🇲🇲
( ‼️ )

புத்த மடாலயம் மீது #ஜுண்டா குண்டு தாக்குதல்!
30 பேர் பலி!

மியான்மரில் புத்த மடாலயம் மீது மியன்மார் விமானப்படை மேற்கொண்ட #வான்வழித் தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர்.

மியன்மாரின் #சாகிங் பிராந்தியத்தின் சாகிங் டவுன்ஷிப்பில் உள்ள #லிண்டலு கிராமத்தில் #இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு #அடைக்கலம் கொடுத்த #மடாலயத்தின் மீது மியான்மர் #இராணுவ ஆட்சிக்குழு குண்டுகளை வீசியதில், சுமார் 30 பேர் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது.

மடங்கள் போன்ற பொதுமக்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்கள் மீது இராணுவ ஆட்சிக்குழு மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துவது போர்க்குற்றமாகும்.

 #இலங்கையில் பேஸ்புக் பயனர்களுக்கு பொலிஸாரின் கடும் எச்சரிக்கை!  #முகநூல் பக்கத்தில் புண்படுத்தும் அல்லது தவறான மொழி பிர...
03/07/2025

#இலங்கையில் பேஸ்புக் பயனர்களுக்கு பொலிஸாரின் கடும் எச்சரிக்கை!



#முகநூல் பக்கத்தில் புண்படுத்தும் அல்லது தவறான மொழி பிரயோகங்களை பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

#பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை கவனத்தில் கொண்டு, இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் செயல்படுத்துவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

#கருத்துகள் மரியாதைக்குரிய மற்றும் பொருத்தமான முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

#கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்துவதால் உங்களின் குணங்கள் மட்டுமே சேதப்படுத்தும என்பதைச் சுட்டிக்காட்டிய பொலிஸார், எதிர்காலத்தில் அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

#எனவே, இலங்கை பொலிஸாரின் அதிகார பூர்வ முகநூல் பக்கத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள கண்ணியமான மொழியைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

03/07/2025

Address

Vavuniya Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qaima Tv Qatar-Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qaima Tv Qatar-Sri Lanka:

Share