Arasy media

Arasy media இயற்கை விவசாய செய்தி ஊடகம்

01/12/2024

அரசமரம் மருத்துவ குணங்கள்

சித்திரை, வைகாசி மாதங்களில் மதிய வேளையில் அரசமர நிழலில் இளைப்பாறினால், தோல் சம்பந்தமான நோய்கள் தீரும்’ என்கிறது, சித்த மருத்துவம். மேலும் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் தூண்டப்படவும் உதவுகின்றது. எனவே இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் ஆரோக்கியம் கிட்டும் என்பதும் நிரூபணமாகிறது
யாக சாலைகளில் வளர்க்கும்போது, அரச மரக்குச்சிகளையே அதிகம் பயன்படுத்துவார்கள். அரசமர குச்சியினை எரிக்கும்போது வரக்கூடிய புகை, மூச்சுத் திணறலையும் சளித்தொந்தரவு, சோர்வு, நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றையும் போக்கக்கூடியது.

மிக முக்கியமாக ’அரச மரத்தின் பழத்தை உண்டால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்’ என்கிறது, சித்த மருத்துவம். அரச மரத்தின் அடிப்பகுதியில் கீறினால் வடியும் பாலை, பித்த வெடிப்புகளில் தடவினால் குணமாகும். அரச மரத்தின் பட்டை, வேர், விதை ஆகியவற்றைப் பாலில் கொதிக்க வைத்து, ஆறிய பிறகு, அதில் தேன் கலந்து 48 நாட்கள் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும். ஆனால் இதை முறையாக சித்த மருத்துவர்களிடம் ஆலோசித்து பின் பயன்படுத்தலாம்
பயன்கள்
அரச இலை துளிரை அரைத்துக்கட்டினால் புண்கள் ஆறும். அரச வேர்பட்டையை 3 கிராம் எடுத்து 300 மிலி நீருடன் கொதிக்க வைத்து 100 மில்லியாக சுண்டிப்பருகினால் வெட்டைச் சூடு, சொறி , திணவு , சிரங்கு போன்ற தோல் நோய்கள் நீங்கும்.
மரப்படை தூளை தேங்காய் எண்ணெயில் கலந்து தோலின் மேல் பூசி வந்தால் தினவு புண்கள் ஆறும்.
அரச விதைத்தூளை அரைத்து 5லிருந்து 10 கிராம் பாலில் அருந்தி வந்தால் ஆண் மலடு நீங்கி தாது விருத்தி உண்டாகும். மலச்சிக்கலும் போக்கும்.
அரசு கொழுந்து காய்ச்சிக்குடி நீராக பருகினால் கடுமையான சுரம் நீங்கும்
அரசம் பழத்தை உலர்த்தி பொடி செய்து 5 கிராம் வீதம் ஒரு மாதம் உண்டுவந்தால் சுவாச நோய்களான ஆஸ்துமா கட்டுப்படும்
பெண்களும், அரச விதை அல்லது கொழுந்தை உண்டு வந்தால் பெண் மலடு நீங்கும். உடல் வன்மை பெருகும்.
உடல் உஷ்ணத்தினைப்போக்கும்
விஷக்கடிகள் பூசி வந்தால் பாதுகாப்பு கவசமாக இருக்கும். இளஞ்சிவன்னாப அரச மர இலையை கஷாயமாக காய்ச்சி குடித்து வந்தால் மஞ்சள் காமலை நோய் நீங்கும்.
கல்லீரலை பாதுகாக்கிறது. எனவே குடிப்பழக்கம் உள்ளவர்கள் இதை பயன்படுத்தினால் கல்லீரல் பலப்படும். இரவு நேரத்தில் தண்ணீரில் உறவைத்த இலையை நீரைப்பருகி வந்தால் இருதயம் ஆரோக்கியம் பெரும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அரச மர காயின் பொடியையும், கடுக்காய் பொடியையும் சமஅளவு கலந்து 5 கிராம் வீதம் காலை மாலை எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
அரச விதையை தேனுடன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தியடையும்

💁 What do people say about our life, our situation, our country???No mic, 🎤🎤🎤 no device,💻💻  no cross-examination, 🙆    💁...
15/11/2024

💁 What do people say about our life, our situation, our country???

No mic, 🎤🎤🎤 no device,💻💻 no cross-examination, 🙆 💁💁casual conversation,💁💁 a lot can be learned

💁 இந்த அழகிய நாட்டின் வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழர் வாழும் பகுதி இதில் தமிழ் தேசியம் தமிழர் அரசியல் என்றால் என்ன?

தமிழர் நாட்டை தமிழர்களே ஆள்வது தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமை.
Fundamental Political Rights.

தமிழர்களின் அரசியல், மொழி , கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி, வேளாண்மை, மருத்துவம், அறிவியல், சுற்றுச்சூழல், கனிமவளம், பொருளாதாரம், நீர் மேலாண்மை, உரிமை, வாழ்வாதாரம், சமுதாயம், சமூக அமைப்பு, சமூகநீதி, மெய்யியல், தொன்மை என இவற்றையெல்லாம் காக்க பாதுகாக்க ஒரு அரசியல் உண்டென்றால் அது தமிழ்த்தேச அரசியல்.

தமிழ்த்தேசியம் என்றால் தமிழர்களின் பகை சக்தியையும் இன்ன பிற பகை சக்திகளையும் முறியடித்து தமிழர் உரிமைகளை இறையாண்மையை நிலைநாட்டுவது!

தமிழர்களுக்கான ஒரு அரசியல் அது தமிழ்த்தேசிய அரசியல்!

அனேகமாக அரசியல், மொழி , கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி, வேளாண்மை, மருத்துவம், அறிவியல், சுற்றுச்சூழல், கனிமவளம், பொருளாதாரம், நீர் மேலாண்மை, உரிமை, வாழ்வாதாரம், சமுதாயம், சமூக அமைப்பு, சமூக நீதி, மெய்யியல், தொன்மை என இவற்றையெல்லாம் காக்க பாதுகாக்க இதற்கான ஒரு முப்பது வருட போர் இந்த அழகிய தீவை சிதைத்து விட்டிருந்தது. இதில் மூவின மக்களும் பாதிப்பினை எதிர்கொண்டார்கள்.
இருப்பினும்.யுத்தம் 2009ல் முடிவுற்றதும் ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் அரசியல். என்ற நிலை வந்துவிட்டது.

💁 What do people say about our life, our situation, our country???

No mic, 🎤🎤🎤 no device,💻💻 no cross-examination, 🙆 💁💁casual conversation,💁💁 a lot can be learned

💁 தமிழரின் தமிழீழ போராட்டமும் தலைவரின் ஒரு வழி பாதையும் சர்வதேச பேச்சு வார்த்தை தோல்வியும் 2009ல் முடிவுக்கு வந்த போராட்டமும். அந்த போராட்ட இரத்த கரைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திய தமிழ்தேசிய கூட்டமைப்பும் ஏனைய தமிழ் அரசியல் தலைமைகளும். 22 ஆசனங்களும் ஏனைய தமிழரின் ஆசனங்களும் தமிழர்களுக்கு ஆன (உரிமை வேண்டாம் ) அபிவிருத்தி என்ற ரீதியில் போரின் பின்னதான தமிழரின் வாழ்வில் எதையும் செய்யவில்லை மாறாக அவர்களின் குடும்பம் அவர்களின் சுற்றம் அவர்களுக்கு வசதியை ஏற்படுத்த கூடிய முதலாளித்துவத்தின் அரவணைப்புக்கும் ஆட்பட்டு அவர்கள் நடத்திய தமிழ்தேசிய அரசியல்
தமிழ் தேச தேசிய கொள்கையை பின்பற்றிய ஒன்றல்ல

👉 ஆனால் தமிழ் தேசியம் காக்க மக்கள் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். புலம் பெயர் தேச மக்களும் இவர்களுக்கு உதவ வேண்டும்.

👉 இந்த தமிழ் அரசியல் வாதிகள் பாராளுமன்றம் சென்று தங்கள் வீராப்பையும் தாங்கள் சேர்த்த சொத்து மணல் ஏற்றியது கல் மண் ஏற்றியது போதை வஸ்து கடத்தியது என சண்டை போட்டார்களே தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை. யாரும் இவர்களை ஒரு பொருட்டாக கருதுவது இல்லை.

👉 ஜனாதிபதி கோத்தபாயவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர தென்பகுதி மக்கள் போராடிய போது வட கிழக்கு மக்களே வாருங்கள் நாம் ஒன்றாக இந்த ஆட்சியை விரட்டி நாம் புதிய தேசத்தை உருவாக்குவோம் என தென்பகுதி மக்கள் அறைகூவல் விடுத்தார்களோ??? அன்றே இந்த தேசத்தின் இனவாதம் எரிந்து போய் விட்டது எனலாம்.

👉 அன்று ஏற்பட்ட தற்காலிக ஆட்சி மாற்றத்தை கூட ஏற்காத மக்கள் பொறுமையாக ஒரு தேர்தலை எதிர்பார்த்து தக்க தண்டனை வழங்கினார்கள். அதில் தமிழர்களாகிய நாம் பூரண பங்கேற்காவிட்டாலும் இரண்டாம் பாராளுமன்ற தேர்தலில் நமது ஆதரவை கொடுத்து தென்பகுதி மக்களின் கரங்களை பற்றிக்கொண்டுவிட்டார்கள்..

👉 இரண்டாம் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களும் தமிழ் தேசியத்தை ஒரு பக்கம் போட்டுவிட்டு பெருமளவில் தமது பங்களிப்பு வழங்கியதன் நோக்கம். இந்த நாட்டிலும் குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் தலைவிரித்தாடிய லஞ்சமும் ஊழலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதேயாகும்.

👉 தமிழர் தேசியம் என்ற ரீதியில் தமிழ் அரசியல்வாதிகளின் சுயநல அரசியல், சுயலாப அரசியல் பாதைகளையும் புதைத்து விட்ட தமிழ் மக்களின் ஒரு பகுதியினர் இந்த நாட்டின் மீதும் தங்கள் பிள்ளைகளின் தங்கள் சந்ததியின் எதிர்காலம் குறித்தும் சிந்தித்தவர்களாவர். மொழி , கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி, வேளாண்மை, மருத்துவம், அறிவியல், சுற்றுச்சூழல், கனிமவளம், பொருளாதாரம், நீர் மேலாண்மை, உரிமை, வாழ்வாதாரம், சமுதாயம், சமூக அமைப்பு, என ஒரு ஒன்றுபட்ட ஒரு அரசியல் சக்திக்குள் சென்றுள்ளார்கள். அரசியல் உரிமையை காரணமாக பயன்படுத்தி இலங்கை தீவை தமது கட்டுக்குள் வைக்கலாம் என்ற சர்வதேச கனவையும் கலைத்து விட்டார்கள்.

👉 இங்குதான் இலங்கை மக்களின் புத்திசாலித்தனத்தை சர்வதேச அரசியல் உணரும் நிலையையும் உருவாக்கி விட்டார்கள். ஒன்றுபட்ட இலங்கையில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வோம் எங்களுக்கு பிரச்சனை வேண்டாம் என எஞ்சிய தமிழ் தேசிய அரசியல் வாதிகளையும் தூக்கி வீசி போகும் நாளும் தொலைவில் இல்லை . இதற்கான பச்சைகொடியை தென்பகுதி அரசியல் தலைமைக்கு காட்டிவிட்டார்கள்.

👉 சில அரசியல்வாதிகள் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் வெளிப்படை தன்மையாக மக்கள் முன் வந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்கள் தண்டிக்க பட வேண்டும் என உறுதி கொண்டுள்ளார்கள்

👉 இது போலவே சுய லாப அரசியலின் பின் நின்ற ஊது குழல் அரச அதிகாரிகளுக்கும் விடை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கும் தார்மீக கடமையுடன் ஒட்டு மொத்த நாட்டின் லஞ்சம் ஊழல் மோசடிகளை இல்லாது செய்யும் ஆணையை மக்கள் சட்ட ரீதியான அங்கிகாரத்தை 150+ தங்கள் வாக்குகளால் வழங்கிவிட்டார்கள். அனைத்து அரசியல் குற்றவாளிகளும். சட்ட ரீதியாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். இதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு

👉 தமிழர்கள் அரசியலில் அரசியல் சுயலாப சிந்தனை போக்கில் சிதைவடைந்து சர்வதேச அரசியல் ஸ்தீர தன்மையில் தேவையான உறுதிப்பாடு உடைந்து போகின்ற நிலை மேலும் வலுவடைந்து செல்கின்றமையே காணப்படுகின்றது.

👉 "பருவத்தே பயிர் செய்" பயிர் மட்டுமல்ல நமது தமிழர் போராட்டம் ஆகினும் தமிழர் அரசியல் ஆகினும் பருவத்தே பயனற்று போனதால் அதன் தாக்கத்தில் வரலாற்று தடங்களிலும் அவர்களின் வாழ்வியல் கண்டு வந்த வழித்தடங்கள் அழிவு நிலை நோக்கி போய்விட்டது. தமிழர் ஒரு குடையின் கீழ் ஒன்றினையும் நிலை ஒரு போவதும் வரப்போவது இல்லை இந்த நினைவோடும் கண்ணீரோடும் வாழ்வில் வயது போய்விட்டது இண்டைக்கோ!!! நாளைக்கோ!!!
சலிப்போடு கூறும் பெரியவர்கள்.

புதிய திசை நோக்கி போகும் இளைய சமுதாயம்.

🙏🙏🙏🙏🙏 ஜனாதிபதி அவர்களுக்கும் புதிய அரசுக்கும் எமது வாழ்த்துக்கள்

இன்றைய நாள் இலங்கையில் மக்கள் தங்கள் நாட்டை புதுப்பித்தார்கள்

👉👉👉👉👉👉👉👉 நாளை என்ன??? Wait and see 👳👳👳👱👱👵👨👩👦🙆💆💇💑👫🏃🚶👼🙇👮👮

💁 What do people say about our life, our situation, our country???No mic, 🎤🎤🎤 no device,💻💻  no cross-examination, 🙆    💁...
14/11/2024

💁 What do people say about our life, our situation, our country???

No mic, 🎤🎤🎤 no device,💻💻 no cross-examination, 🙆 💁💁casual conversation,💁💁 a lot can be learned

💁 இலங்கை பல்லின மக்கள் ஒன்றாக வாழும் நாடாகும். பொதுவாக அனைத்தின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்த போதும், கடந்த இரு தசாப்தங்களாக15.37% மான தமிழர் சிறுபான்மை இனத்தவரின் அரசியல் உரிமை பிரச்சனைகள் சர்வதேச அரசியல் ரீதியில் செல்வாக்கு செலுத்துவதன் காரணமாக பல அரசியல், சமூக பிரச்சினைகள் மற்றும் கடந்த அரசுகளின் ஆட்சிக்காலங்களில் ஏற்பட்ட லஞ்சம் மற்றும் ஊழல் என்பன இலங்கை எதிர்கொண்டதால் அதன் வளர்ச்சி போக்கின் தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

💁இலங்கையின் மக்கள்தொகை 20 மில்லியன் ஆகும் பெரும்பான்மை இனத்தவர் சிங்களவர்கள் ஆவார். இவர்கள் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 74.88% ஆக உள்ளனர். நாட்டின் அடுத்த முக்கிய இனத்தவராக தமிழர் உள்ளார்கள். நாட்டின் மக்கள் தொகையில் 15.37% ஆன இவர்கள், இலங்கையின் இதர இனங்களாக சோனகர் (அரபிய வழிதோன்றல்கள் 9.23%), இலங்கை மலாயர் 0.2%, பறங்கியர் (ஐரோப்பிய வழிதோன்றல்கள் 0.18%), வேடர்கள்(காட்டு வாசிகள்) மற்றும் ஏனையோர் (0.14%) உள்ளனர்.

👉 ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முனைந்த இலங்கை மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். இந்த ஆட்சி மாற்றம் பெரும்பான்மை சிங்கள மக்களால் ஏற்படுத்தப்பட்டது. இதில் தமிழர்களின் பங்களிப்பு மிக. குறைவானதேயாகும்.

👉 225 ஆசனம் 172 தெரிவு 22 மாவட்ட தெரிவு 29 தேசிய பட்டியல் ஆகும். இம்முறை 8821 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 5564 பேர் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்தும் ஏனையவை சுயேச்சை குழுக்களாகவும் உள்ளனர். 3/2 பெரும்பான்மை அரசு பெறவேண்டும். ஆனால் 150+ என்பதே ஆரோக்கியம் நிறைந்த அரசியல் பாதைக்கு உறியதாகும்.

👉 இங்குதான் இலங்கை மக்களின் புத்திசாலித்தனத்தை சர்வதேச அரசியல் நாளை அளவிடப்போகிறது.

What do people say about our life, our situation, our country???

No mic, 🎤🎤🎤 no device,💻💻 no cross-examination, 🙆 💁💁casual conversation,💁💁 a lot can be learned

👉 மக்கள் சொல்வது என்ன???

🌹🌻🌻🌻 👉👉 இம்முறை தெளிவான வாக்கு பதிவு சீட்டு தெளிவான சின்னங்கள் அடையாளம் இட இலகுவான தன்மை இலங்கை தேர்தல் திணைக்களத்தினருக்கு 🙏🙏🙏 மிக்க நன்றி.

👉 ஒரு இளம் சமுதாயம் இலஞ்சம் ஊழல் அற்ற தேசமாக இலங்கை இருக்க வேண்டும் என்பதில் கூடிய அக்கறை கொண்டுள்ளது. அதன் பார்வை தற்போதைய ஜனாதிபதி மீது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரிய நிலையை தோற்றுவித்துள்ளதை காட்டுகிறது.

👉 இடை நிலை மக்கள் உண்மையில் இரண்டும் கெட்டான் நிலை இதற்கு காரணமாக ஒன்றித்த அரசியல் தமிழ் கட்சிகளின் உடைவு அவர்களின் சுயநல சுயலாப அரசியல் போக்கு தன்மை காரணமாக அமைந்துள்ளது. இதனால் புதிய கட்சிகளுடனான இணைவு பற்றி கூறுகின்ற நிலை.

👉 இது வரை எதுவித லஞ்ச ஊழலிலும் சிக்காத அரசியல் கட்சிகளின் நேர்மைத்தன்மையுடனான அரசியல் பிரச்சாரம் இதற்கான மக்களின் வரவேற்பு

👉 சில அரசியல்வாதிகள் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் வெளிப்படை தன்மையாக மக்கள் முன்வந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்கள் தண்டிக்க பட வேண்டும் என உறுதி கொண்டுள்ளமை.

👉 தமிழர்கள் அரசியலில் அரசியல் சுயலாப சிந்தனை போக்கில் சிதைவடைந்து சர்வதேச அரசியல் ஸ்தீர தன்மையில் தேவையான உறுதிப்பாடு உடைந்து போகின்ற நிலை மேலும் வலுவடைந்து செல்கின்றமையே காணப்படுகின்றது.

👉 "பருவத்தே பயிர் செய்" பயிர் மட்டுமல்ல நமது தமிழர் போராட்டம் ஆகினும் தமிழர் அரசியல் ஆகினும் பருவத்தே பயனற்று போனதால் அதன் தாக்கத்தில் வரலாற்று தடங்களிலும் அவர்களின் வாழ்வியல் கண்டு வந்த வழித்தடங்கள் அழிவு நிலை நோக்கி போய்விட்டது. தமிழர் ஒரு குடையின் கீழ் ஒன்றினையும் நிலை ஒரு போவதும் வரப்போவது இல்லை இந்த நினைவோடும் கண்ணீரோடும் வாழ்வில் வயது போய்விட்டது இண்டைக்கோ!!! நாளைக்கோ!!!
சலிப்போடு கூறும் பெரியவர்கள்.

🙆🙆🙆🙆 What do people say about our life, our situation, our country???

No mic, 🎤🎤🎤 no device,💻💻 no cross-examination, 🙆 💁💁casual conversation,💁💁 a lot can be learned

நாளை நாள் இலங்கையில் மக்கள் எவ்வாறு தங்கள் நாட்டை புதுப்பிக்க போகின்றார்கள்

👉👉👉👉👉👉👉👉 Wait and see 👳👳👳👱👱👵👨👩👦🙆💆💇💑👫🏃🚶👼🙇👮👮

10/11/2024

இயற்கை செழிப்பு மர நடுகை திட்டம்

💁 Arasy media இயற்கை பொருளாதார வளத்தை அதன் அபிவிருத்தி தொடர்பான பதிவுகளை கொண்ட இணையதளம். 👉👉👉  No mic, No  device, no cro...
10/11/2024

💁 Arasy media இயற்கை பொருளாதார வளத்தை அதன் அபிவிருத்தி தொடர்பான பதிவுகளை கொண்ட இணையதளம். 👉👉👉 No mic, No device, no cross-examination, just casual conversation, learn a lot Arasy media

இயற்கை வள ஆய்வின் நோக்கமாக இவ்வருட ஆறாம் மாதம் நான்கு கட்டங்களாக மீன் பாடும் தேன் நாடு. எங்களின் இயற்கை தேடலுக்குள் அகப்பட்டது. நாம் வெகு சாதாரணமாக சுற்றுலா பயணிகள் போல மிக நீண்ட பயணம்.

💁 அப்படி என்னதான் அந்த மீன்பாடும் தேன் நாடு. தமிழாகினும் பைந்தமிழாக அழகாக புதிய பாஷையாக புதிய மனிதர்களாக பொதுமக்கள் அரச அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியர்கள் சமூக சேவையாளர்கள் என பல்வேறு பட்டவர்களை சந்தித்தோம். ஆனால் நாம் அங்கே ஒரு வித்தியாசமான ஒரு அரசியல் வாதியையும் சந்தித்தோம்.

💁 இரவில் வாவியில் எழும் மீன்களின் ஓசையும் தேன் கிடைக்ககூடிய இயற்கையான வன பிரதேசங்களை கொண்டுள்ளதால் மீன் பாடும் தேன் நாடு இயற்கை பெயருடன் அமைந்த மட்டக்களப்பு மாவட்டம். 2610 சதுர km காணிப்பரப்பு, 244 சதுர Km நீர்வளம், 229.19 சதுரKm,
மிக நீண்ட 8.70% நன்னீர் மீன்பிடி களப்பு ஆற்று பகுதி
துறைநீலாவனை முதல் வெருகல் ஆறு வரை 130 Km கடல் கரை பரந்து கிடக்கிறது.

💁 நெற்செய்கைக்கு உகந்த வன்டல் மண் தொகுதி மாவட்ட மேற்கு பகுதியில் உணவு உற்பத்திக்கும் அரிசி தன்னிறைவுக்கும் குறைவில்லாத வளம்.

💁 இங்கு மாவட்ட செயலக கூற்றுப்படி 608003 மக்கள் தொகையில் வியாபாரிகள் 15252 மேசன் 4302 தச்சு 2745 மீன்பிடி 20026 விவசாயம் 24882அரச உத்தியோகம் 23246 கூலி 64320. உள்ளார்கள்
14 பிரதேச செயலக பிரிவு 345 கிராம சேவகர் பிரிவு 1036 கிராமங்கள் வடக்கு வெருகல் ஆறு
கிழக்கு வங்காளவிரிகுடா தெற்கு அம்பாறை மாவட்டம். மேற்கு அம்பாறை பொலநறுவை மாவட்டம்.

💁 இப்படித்தான் மீன்பாடும் தேனாட்டை அளந்து விட்டு ஊர் திரும்ப விருந்த போது நாம் இறுதியாக ஒரு அரசியல் வாதியை பார்க்க சென்றோம். மிக சாதாரணமான தோட்டம் அழகான விவசாயம் சாதாரணமான வீடு இயற்கை அழகுடைய கிராமம் போல மர நிழல்கள் அன்பான ஆஜானுபாகுவான ஒரு மனிதரை பார்த்தோம். அன்போடு வரவேற்று உபசரித்தார். அவரோடு கதைத்தபோது தான். அந்த மாவட்டத்தின் மீது அவர் கொண்டுள்ள நேசிப்பு வெளிப்பட்டது. நல்ல பல அபிவிருத்தி திட்டங்கள் இடைநின்று போனதைப்பற்றி கூறினார். மக்களுக்கு பயனளிக்க கூடிய மிக அவை இருந்ததை பற்றி கூறினார். சிறந்த திட்டங்களாக அந்த மாவட்ட பகுதி மக்களின் உற்பத்திகள் மேலும் அறுவடைக்கு பின்னதான தொழில்நுட்ப வசதிகள் இப்பிரதேச மக்களின் பெரும் குறைபாடு என்பதும். அவற்றை சரியான பயன்பாட்டுக்கு கொண்டு வருமிடத்து சிறந்த நன்மையை பெறமுடியும் என்பதும் தெரிய வந்தது.

👉 No mic, No device, no cross-examination, just casual conversation, learn a lot Arasy media
🙆 நாம் நான்கு முறை அவரோடு சகஜமாக உரையாடினோம்.

💁 ஆச்சரியமான விடயம் ஒவ்வொரு ஊரும் அதன் வளமும் அங்கு என்னவெல்லாம் அபிவிருத்தி செய்யமுடியும் என்பதும். அவர் மனதோடு பதிய வைத்திருக்கின்றார்.

💁 உண்மையில் அவரும் அவரின் துணைவியாரும் மிகச்சிறந்த விவசாயிகள். மரக்கறி தோட்டம் கால் நடை வளர்ப்பு நன்னீர் மீன் வளர்ப்பு என அப்பகுதியை அழாகாக அமைத்துள்ளார்கள். தன் சுற்றியுள்ள இயற்கையை அழகுபடுத்தும் ஒருவரால் மட்டுமே தனது ஊரையும் அழகு படுத்த முடியும் தனது தேசத்தை பற்றியும் சிந்திக்க முடியும்.

💁 அறிவு தரும் கல்வி, நீண்ட ஆயுள், உண்மையான, ஆபத்ததி்ல் உதவு்ம் நணபர்கள், அழியாத செல்வங்கள், முதுமையிலும் இளமையுடன் திகழும் வன்மையுடன் கூடிய உடல் நலம், நோயற்ற உடல், எப்பொழுதும் உற்சாகமாக சோர்வின்றி இயங்கும் மனம், என்றும் மாறாத அன்பைப் பொழியும் மனைவி, சொன்ன சொல் தவறாத குழந்தைகள், என்றும் குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் காக்கும் திறம், பிறருக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தடையில்லாத மனதும் வாழ்க்கை நிலையும், தர்ம நீதி தவறாத மனம், துன்பம் இல்லாத வாழ்க்கை, நல்லோர் சேர்க்கை இவை அனைத்தினையும் குறைவறத் தருபவள் அன்னை அபிராமியே.
அந்த அருளை அந்த குடும்பத்து வழங்கியுள்ளார் என்பதை என்னி பெருமிதமோடு விடைபெற்றோம்.

💁 கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் அவர்கள் மட்டக்களப்பின் பைந்தமிழ் பேசும் உறவுகளே உங்கள் கூடவே இருக்கின்றார். உங்கள் வாழ்க்கையின் வழிகாட்டலுக்கான வழிமுறையே அவர் தம் பாதை அவரின் கரம் பற்றி விவசாயமும் கடல்வளமும் ஒருங்கே வளம் பெற வழியமையுங்கள். நாளைய வெற்றி உங்களுடையதாக வளம்பெற வாழ்த்துக்கள் உடன் விடைபெறுகின்றோம்.

💁 விவசாயத்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கித்துள் உறுகாமம் மிகப்பெரிய  நீரேந்து திட்டம்  ஆரம்பிக்கப்பட்டு இடை...
09/11/2024

💁 விவசாயத்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கித்துள் உறுகாமம் மிகப்பெரிய நீரேந்து திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டது இதைனை உறுதிப்படுத்தக்கூடிய செய்தி கீழே தரப்படுகிறது. தமிழர்களாக பிறந்து தமிழ் மண்ணில் வாழும் தமிழ்கட்சிகள் நல்ல செயல்திட்டங்கள் கிடைக்க விரும்புவது இல்லை ஒருவர் ஒரு திட்டத்தை கொண்டு வர படாதபாடு படுவதும் ஏனையோர் அதை தடுப்பதும் வேடிக்கையானது.

மட்டக்களப்பு மக்களே உங்களுக்கு நன்மை தரக்கூடிய நல்ல திட்டங்களை உருவாக்கி விவசாய மக்களின் வாழ்வு மிளிர முயற்சி செய்யும் நல்ல தலைமையை தெரிவு செய்யுங்கள். Good luck

கித்துள் உறுகாமம் இணைப்புத்திட்டம் தொடர்பாக ஆராய்வு
2013 ஒக்டோபர் 07 , மு.ப. 12:43

மட்டக்களப்பு மாவட்டத்தின் கித்துள் உறுகாமம் குளங்களின் இணைப்புத் திட்ட அமுல்படுத்தலின் போது ஏற்படவுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயும் உயர் மட்ட கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை பகல் மட்டக்களப்பு மாவட்ட செலயகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில், மீள்குடியேற்றப்பிரதி அமைச்சர் வி.முரளிதரன் கலந்துகொண்டார்.

அதேநேரம், நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் ஐவன் சில்வா, மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் காமினி ராஜகருணா, ஆசிய அபிவிருத்தி வங்கியின் சூழல் இயற்கை வழங்கள் விவசாயப்பிரிவு பிரதிநிதி மஞ்சுள அமரசிங்க, நீர்வழங்கல் சிறப்பு நிபுணர் லான்ஸ் டப்ளியூ கொரே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

கித்துள் மற்றும் உறுகாமம் ஆகிய இரு குளங்களையும் இணைக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி வழங்கவுள்ளது.

மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் எடுத்த முயற்சியின் பயனாக, கடந்த வருடத்தின் ஜுன் மாதத்தில் நீர்ப்பாசன அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டதனைத் தொடர்ந்து இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இத்திட்டத்திற்கென 2500 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முக்கிய குளங்களில் இரண்டான கித்துள் மற்றும் உறுகாமம் குளங்கள் இணைக்கப்படுவதன் மூலம் சுமார் 15ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மேலதிகமாக செய்கை பண்ணக்கூடிய வாய்ப்பு ஏற்படுவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்படும் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும் அமையும்.

இதனால், வெள்ளத்தால் பாதிக்கப்படும் வந்தாறுமூலை, சித்தாண்டி, கிரான், சந்திவெளி, மாவடிவேம்பு எனப் பல கிராமங்கள் பாதுகாக்கப்படும் சந்தர்ப்பம் உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பெரும் நன்மையடைவார்கள் என்ற வகையில் இத்திட்டம் எம்மால் முன்வைக்கப்பட்டது அதனை அமைச்சர் பார்வையிடுவது குறித்து மகிழ்ச்சியடைவதாக மிள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதிகமான நிலங்கள் இன்னமும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலைமையில் மாற்றம் ஏற்படும். என்பதுடன் உற்பத்தித் துறையும் மேம்படும்.

உறுகாமம் குளத்தின் கொள்ளளவு 18,600 ஏக்கர் அடியாகும். கித்துள் குளத்தின் கொள்ளளவு 4200 ஏக்கர் அடியாகும். இரண்டும் இணைக்கப்படும் போது 95 மில்லியன் கனஅடி கொள்ளளவு உருவாகும் என நீரப்பாசன திணைக்களம் தெரிவித்தது.

Address

No. 55 5t Lane ATharanikkulam Sasthirikulankulam Vavuniya
Vavuniya
43000

Telephone

+94773298835

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arasy media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share