Qaima Tv Qatar-Sri Lanka

Qaima Tv Qatar-Sri Lanka Public News Media Channel

8,500 போத்தல் போலி குடிநீர் கைப்பற்றி அழிப்பு: நிறுவனத்திற்கும் பணிப்பாளருக்கும் அபராதம்!போலி இலங்கை தரச்சான்றிதழ் (SLS)...
07/09/2026

8,500 போத்தல் போலி குடிநீர் கைப்பற்றி அழிப்பு: நிறுவனத்திற்கும் பணிப்பாளருக்கும் அபராதம்!

போலி இலங்கை தரச்சான்றிதழ் (SLS) முத்திரை மற்றும் போலி பிராண்ட் பெயரைப் பயன்படுத்தி போத்தல் குடிநீர் உற்பத்தி செய்து விநியோகித்த அவிசாவளை - சீதாவக்க பகுதியில் உள்ள நிறுவனம் மற்றும் அதன் பணிப்பாளருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட “Lanka Premium” என்ற பெயருக்குப் பதிலாக “Aquachill” என்ற பெயரில் லேபிள் ஒட்டப்பட்ட 8,500 க்கும் மேற்பட்ட குடிநீர் போத்தல்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

செப்டம்பர் 04 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து நிறுவனத்திற்கும் அதன் பணிப்பாளருக்கும் 40,000 ரூபா தண்டப்பணம் விதித்த நீதிமன்றம், கைப்பற்றப்பட்ட அனைத்துக் குடிநீர் போத்தல்களையும் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து அழிக்குமாறு உத்தரவிட்டது.

போத்தல் குடிநீர்களைக் கொள்முதல் செய்யும் போது சரியான பிராண்ட் பெயர், தயாரிப்பு திகதி, காலாவதி திகதி மற்றும் உத்தியோகபூர்வ SLS முத்திரையைச் சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 5 பேர் கைது!முல்லைத்தீவு  கடற்கரை பகுதியில் முல்லைத்தீவு பொலீசார் மேற...
07/09/2026

முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 5 பேர் கைது!

முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் இயந்திரம் ஒன்றுடன் 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

06.09.2026 நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்றில் ஸ்கானர் இயந்திரம் காணப்பட்டுள்ளமையினை தொடர்ந்து வாகனத்தில் இருந்து 5 பேரும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் வவுனியா, முள்ளிவாய்க்கால், கொழும்பு, தம்புள்ள பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் மீதான விசாரணை மற்றும்
சட்ட நடவடிக்கையினை முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

🔴 BREAKING NEWS:- #அம்பிட்டிய_சுமண_ரத்ன  #தேரர்_கைது!07 Sep 2026 அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தல...
07/09/2026

🔴 BREAKING NEWS:-
#அம்பிட்டிய_சுமண_ரத்ன #தேரர்_கைது!

07 Sep 2026 அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று கடந்த 31 ஆம் திகதி அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்!இலங்கையில் பதிவு செய்யப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் (Electric ...
07/09/2026

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்!

இலங்கையில் பதிவு செய்யப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் (Electric Vehicles) இனி பச்சை நிறப் பின்னணியைக் கொண்ட புதிய இலக்கத் தகடுகள் (Number Plates) வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களை ஏனைய எரிபொருள் வாகனங்களில் இருந்து எளிதாக அடையாளம் காணும் நோக்கிலேயே
இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அவற்றுக்கான சிறப்பு சலுகைகள் மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்தும் நிலையங்களில் முன்னுரிமை அளிக்கவும் இந்த இலக்கத் தகடுகள் பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகளுக்கு மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள மின்சார வாகனங்களுக்கும் இந்த இலக்கத் தகட்டைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்படவுள்ளது.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை! விடைத்தாள் மீள்பரிசீலனைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!2026ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலம...
07/09/2026

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை! விடைத்தாள் மீள்பரிசீலனைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

2026ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மீள்பரிசீலனைக்கான மேன்முறையீடுகளை இன்று (செப்டம்பர் 07) முதல் செப்டம்பர் 21ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணையத்தளம் ஊடாக மாத்திரம் மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளலாம்.

📌 விண்ணப்ப காலம்:-
செப்டம்பர் 07 – செப்டம்பர் 21, 2026
📌 முறை: Online மூலம் மாத்திரம்.


🔴 எல்நினோ தாக்கம்!மன்னாருக்கு வரப்போகும் ஆபத்து என்ன?வறட்சி, கடும் மழை, சூறாவளி மற்றும் வெள்ள அபாயங்களுக்கு மக்கள் தயாரா...
07/09/2026

🔴 எல்நினோ தாக்கம்!
மன்னாருக்கு வரப்போகும் ஆபத்து என்ன?

வறட்சி, கடும் மழை, சூறாவளி மற்றும் வெள்ள அபாயங்களுக்கு மக்கள் தயாராக வேண்டும் என ஆய்வாளர் சின்கிலேயர் பீற்றர் எச்சரிக்கை

எல்நினோ காலநிலையின் தாக்கம் இலங்கையின் காலநிலை, விவசாயம், நீர்வளம் உள்ளிட்ட பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில், மன்னார் மாவட்ட மக்கள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் கடும் மழை உள்ளிட்ட காலநிலை மாற்றங்களுக்கு முன்கூட்டியே தயாராக வேண்டும் என ஆய்வாளர் திரு. சின்கிலேயர் பீற்றர் தெரிவித்துள்ளார்.

எல்நினோ என்பது பசுபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டுப் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழமையைவிட அதிகரிக்கும் ஒரு காலநிலை நிகழ்வாகும். இதன் தாக்கம் உலகின் பல பகுதிகளில் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

🔴 மன்னாருக்கு ஏற்படக்கூடிய தாக்கம்.

மன்னார் மாவட்டம் விவசாயம் மற்றும் கடற்றொழிலை கணிசமாக நம்பியுள்ள நிலையில், நீர்ப்பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றங்கள் இத்துறைகளுக்கு சவாலாக அமையக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மன்னார் தீவு மற்றும் பெருநிலப்பரப்பில் உள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைவடையும் பட்சத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் ஏற்கனவே நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளதுடன், மன்னார் மாவட்டத்தின் நான்கு முக்கிய நீர்த்தேக்கங்களிலும் மொத்த கொள்ளளவு சுமார் 34 வீதமாக இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

🔴 வறட்சிக்குப் பின்னர் கடும் மழைக்கும் வாய்ப்பு.

எல்நினோ தாக்கம் என்பது வறட்சியை மட்டும் ஏற்படுத்தும் ஒன்றல்ல. பிராந்தியத்துக்கு ஏற்ப கடும் மழை, வெள்ளம் மற்றும் ஏனைய தீவிர காலநிலை நிகழ்வுகளுக்கான அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும் என உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில், எதிர்வரும் காலப்பகுதியில் மழைப்பொழிவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என வானிலைத் திணைக்களமும் எச்சரித்துள்ளது. குறிப்பாக 2027ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் வெப்பநிலை அதிகரித்து, சில பகுதிகளில் வழமையைவிட குறைவான மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மன்னார் மக்கள் வறட்சி மட்டுமன்றி, அதனைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய கடும் மழை, வெள்ளம் மற்றும் பலத்த காற்று போன்ற நிலைமைகளுக்கும் முன்கூட்டியே தயாராக வேண்டும் என ஆய்வாளர் சின்கிலேயர் பீற்றர் தெரிவித்துள்ளார்.

🔴 விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தல்.

விவசாயிகள் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும்போது எதிர்பார்க்கப்படும் காலநிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும் எனவும், நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் கடலுக்குச் செல்லும் முன்னர் அதிகாரப்பூர்வ காலநிலை அறிவிப்புகள் மற்றும் கடல் எச்சரிக்கைகளை அவதானித்து, உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

🔴 குளங்கள், வாய்க்கால்களை முன்கூட்டியே துப்பரவு செய்ய வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள குளங்கள், வாய்க்கால்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை முன்கூட்டியே துப்பரவு செய்து, மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை முறையாக சேமிப்பதற்கும், அதிகப்படியான நீரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குடிநீர், விவசாயம், சுகாதாரம், மின்சாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு அரசாங்க நிறுவனங்கள் முன்கூட்டியே திட்டங்களைத் தயாரிக்க வேண்டிய அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கமும் எல்நினோவினால் ஏற்படக்கூடிய நீர், மின்சாரம், உணவு மற்றும் அனர்த்த அபாயங்களை எதிர்கொள்ள தேசிய அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழுக்களை அமைத்துள்ளது.

“வரும் முன் காப்பது”

எல்நினோவின் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அனர்த்த முகாமைத்துவப் பயிற்சிகள் மற்றும் அவசரகாலத் தயார்நிலைகளை வலுப்படுத்த வேண்டும் என ஆய்வாளர் சின்கிலேயர் பீற்றர் தெரிவித்துள்ளார்.

“வரும் முன் காப்பது” என்ற அடிப்படையில், பெறுமதியான உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு மக்கள், அரச நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் ஒன்றிணைந்து முன்கூட்டியே தயாராக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

🔴 குறிப்பு:-
இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் துல்லியம் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிகழ்வுகளுக்கான பொறுப்பு, கருத்துகளை வழங்கியவரையே சாரும்.

 #தலவில் பகுதியில்  எட்டு மாத கர்ப்பிணிப் பெண் கணவரின் கத்திக்குத்துத் தாக்குதலில் உயிரிழப்பு கருவில் இருந்த பிறக்காத  #...
07/09/2026

#தலவில் பகுதியில் எட்டு மாத கர்ப்பிணிப் பெண் கணவரின் கத்திக்குத்துத் தாக்குதலில் உயிரிழப்பு கருவில் இருந்த பிறக்காத #குழந்தையும் உயிரிழந்தது.

கற்பிட்டி, தலவில பகுதியில் 8 மாத கர்ப்பிணியான 26 வயதுடைய பெண் ஒருவர் கணவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் இரண்டு குழந்தைகளின் தாயார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலவில, கெலே பள்ளிய பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், தலவில எஸ்.பி.ஆர். பிரதேசத்தில் வைத்து தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த அவசர தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், சுமார்
45 நிமிடங்களுக்குள் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நல்லூர் முருகன் (கந்தசுவாமி) கோயிலின் கருவறைக்குள்ளோ அல்லது தற்போதைய கோயில் வளாகத்திற்குள்ளோ எந்தவொரு முஸ்லிம் சமாதியும்...
07/09/2026

நல்லூர் முருகன் (கந்தசுவாமி) கோயிலின் கருவறைக்குள்ளோ அல்லது தற்போதைய கோயில் வளாகத்திற்குள்ளோ எந்தவொரு முஸ்லிம் சமாதியும் இல்லை என்பதே உண்மை.

சமூக ஊடகங்களிலும் சில அரசியல் வட்டாரங்களிலும் பரப்பப்படும் இத்தகைய தகவல்கள் வரலாற்றுத் தரவுகளைத் தவறாகப் புரிந்துகொண்டதால் எழுந்த வதந்திகளாகும். இருப்பினும், நல்லூர் கோயிலின் வரலாற்றுக்கும் இஸ்லாமிய சூஃபி துறவி ஒருவரின் தர்காவுக்கும் இடையே உள்ள உண்மையான வரலாற்றுப் பின்னணி பின்வருமாறு:

1. வரலாற்றுப் பின்னணி (1734 - 1749)1621 இல் போர்த்துக்கேய தளபதி பிலிப்பே டி ஒலிவேராவால் அசல் நல்லூர் கோயில் முற்றிலுமாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

அதன் பிறகு, பல தசாப்தங்கள் கழித்து ஒல்லாந்தர் (Dutch) ஆட்சிக்காலத்தில்,
1734 இல் டொன் ஜுவான் மாப்பாண முதலியாரால் தற்போதைய நல்லூர் கோயில் அமைந்திருக்கும் நிலத்தில் மீண்டும் கோயிலைக் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த இடைப்பட்ட காலத்தில், தற்போதைய கோயில் அமையப்பெற்ற நிலப்பரப்பில் இஸ்லாமிய சூஃபி துறவி (பாபா) ஒருவரின் தர்கா (Shrine) இருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

2. சமாதி இடமாற்றம் (1749)1734 முதல் 1749 வரை அந்த தர்கா வழிபாட்டுத் தலமாக அங்கு இருந்துள்ளது.பின்னர், 1749 ஆம் ஆண்டு நல்லூர் கோயிலின் நிரந்தரக் கட்டிடக் கட்டுமானப் பணிகள் தீவிரமடைந்தபோது, இரு தரப்பு உடன்பாட்டுடன் அல்லது சுமுகமான முறையில் அந்த சூஃபி துறவியின் தர்கா (சமாதி) அங்கிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டது.

3. தற்போதைய நிலைதற்போதைய நல்லூர் கந்தசுவாமி கோயிலின் கருவறையிலோ அல்லது உள் வீதியிலோ எந்தவொரு முஸ்லிம் சமாதியும் கிடையாது. கோயில் கட்டப்படுவதற்கு முன்பாக அந்த நிலத்தில் இருந்த தர்கா, 275 ஆண்டுகளுக்கும் முன்பே (1749 இல்) அங்கிருந்து பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டது.

எனவே, "கோயிலுக்குள் முஸ்லிம் சமாதி இருக்கிறது" என்று கூறப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை, அது வரலாற்று நிகழ்வுகளைத் திரித்து பரப்பப்படும் வதந்தியாகும்.

காதலனுடன் சோமாவதியா சென்ற 17 வயது யுவதி அடர்ந்த காட்டில் இரண்டு நாட்கள் தவிப்பு!புலத்திசிகம காவல்துறையினரால் மீட்பு!சோமா...
07/09/2026

காதலனுடன் சோமாவதியா சென்ற 17 வயது யுவதி அடர்ந்த காட்டில் இரண்டு நாட்கள் தவிப்பு!

புலத்திசிகம காவல்துறையினரால் மீட்பு!

சோமாவதியா புனிதத் தலத்திற்குத் தனது காதலனுடன் சென்று திரும்பும் வழியில் வனவிலங்குகள் நிறைந்த தம்பலா காட்டுப் பகுதியில் காணாமல் போன 17 வயது சிறுமி, காவல்துறையினரின் தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம் இரண்டு நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெலிகண்டா, மொனரதென்னப் பகுதியைச் சேர்ந்த இந்த ஜோடியினர் கடந்த மாதம் 2 ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் சோமாவதியா சென்றுவிட்டுத் திரும்பும்போது, ​​சுங்கவிலா-சோமாவதியா சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளனர்.

சாலையோரத்தில் நின்ற மோட்டார் சைக்கிளைக் கண்டு சந்தேகித்த ஒருவர் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்தனர். வயிற்று வலி காரணமாகவே காட்டுக்குள் சென்றதாக இளைஞர் கூறினாலும், காவல்துறையைக் கண்டதும் பயந்துபோன சிறுமி பிடிபடுவதைத் தவிர்க்கக் காட்டுக்குள் ஆழமாகச் சென்றுவிட்டார்.

காட்டு யானைகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகள் நடமாட்டம் மிகுந்த தம்பலா காட்டுப் பகுதியின் நடுவே ஒரு மரத்தடியில் அச்சிறுமி இரவு முழுவதும் தனியாகக் காலத்தைக் கழித்துள்ளார். பல காவல் நிலைய அதிகாரிகளும் பொதுமக்களும் இணைந்து மேற்கொண்ட இரண்டு நாள் தேடுதலுக்குப் பின்னர், நேற்று மாலை சுமார் 4:00 மணியளவில் அச்சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் இளைஞரும் சிறுமியும் காவல்துறையின் பாதுகாப்பில் உள்ளனர்.

07/09/2026

Address

Vavuniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qaima Tv Qatar-Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qaima Tv Qatar-Sri Lanka:

Shortcuts

Share