Qaima Tv Qatar-Sri Lanka

Qaima Tv Qatar-Sri Lanka Public News Media Channel

இலங்கை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா பரிந்துரை!கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதிய...
04/06/2026

இலங்கை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா பரிந்துரை!

கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்யவும், அதனை நடைமுறைப்படுத்தவும் தவறிய குற்றச்சாட்டில், இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (USTR) அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.

சீனா, இந்தியா மற்றும் தென் கொரியாவுடன் இலங்கையும் 12.5% ​​என்ற உயர்வான வரி விதிப்புக்கு முன்மொழியப்பட்ட நாடுகளில் அடங்கும்.

அதேசமயம் பங்களாதேஷ் மற்றும் கம்போடியா ஆகியவை 10% என்ற குறைந்த விகிதத்திற்கு முன்மொழியப்பட்ட நாடுகளில் அடங்கும்.

மரம் முறிந்து வீழ்ந்ததில் தாய், மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு..!நாவலப்பிட்டிய, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய ந...
04/06/2026

மரம் முறிந்து வீழ்ந்ததில் தாய், மகன் உட்பட
3 பேர் உயிரிழப்பு..!

நாவலப்பிட்டிய, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மூன்று சக்கர வண்டி மீது பிரதான வீதிக்கு அருகில் இருந்த #பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், பாடசாலை மாணவனும் அவனது தாயும் உட்பட மூவர் #உயிரிழந்துள்ளனர்.

இன்று (04) காலை இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், விபத்தில் ஒரு பாடசாலை மாணவனும் இரண்டு பெண்களும் #உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த விபத்திலிருந்து முச்சக்கரவண்டியின் சாரதி அதிர்ஷ்டவசமாக #உயிர் தப்பியுள்ளார்.

🛑பலத்த காற்று அல்லது மழை பெய்யும் போது, பிரதான வீதியோரங்களில் உள்ள பெரிய மரங்கள், பழைய கட்டடங்கள் அல்லது விளம்பரப் பலகைகளின் (Billboards) கீழ் வாகனங்களை நிறுத்துவதையோ அல்லது தற்காலிகமாக ஒதுங்குவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

🛑மழைக்காலங்களில் வீதியோரங்களில் உள்ள மரங்களின் கிளைகள் தாழ்வாகக் காணப்படலாம் அல்லது வேர்கள் பலவீனமடைந்து மரம் சாயும் நிலையில் இருக்கலாம். எனவே, சாரதிகள் வீதியின் இருபுறமும் உள்ள மரங்களை அவதானித்தவாறு, மிதமான வேகத்தில் வாகனங்களைச் செலுத்த வேண்டும்.

🛑"பள்ளிக்குச் சென்ற பிள்ளை பிணமாக மீண்டுள்ள சோகம் எமது நெஞ்சைப் பிளக்கிறது. இயற்கைச் சீற்றங்களை நாம் தடுக்க முடியாவிட்டாலும், எமது விழிப்புணர்வின் மூலம் இவ்வாறான விபத்துகளில் இருந்து உயிர்களைக் காக்க முடியும்!"

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்...
04/06/2026

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 2026 க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்களின் தேசிய அடையாள அட்டைகளைத் தயாரித்துக் கொள்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறிப்பிட்ட பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னர், தங்களது தேசிய அடையாள அட்டையைத் தயாரித்துக் கொள்வது அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களின் பொறுப்பாகும் என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

04/06/2026
வவுனியாவை அதிரவைத்த 'சிறுவர் பாதாளக் குழு': மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய 7 பேர் கைது; நீதிமன்ற உத்தரவால் சிற...
04/06/2026

வவுனியாவை அதிரவைத்த 'சிறுவர் பாதாளக் குழு': மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய 7 பேர் கைது; நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!

வவுனியா விசேட நிருபர்
சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'வவுனியா சிறுவர் பாதாளக் குழு' தாக்குதல் சம்பவம் தொடர்பாக 7 மாணவர்களை ஈரட்டைப்பெரியகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான இரு மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் அண்மையில் ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளி பரவலாகப் பகிரப்பட்டது. அதில், வவுனியா பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், மற்றுமொரு தரப்பைச் சேர்ந்த இரு மாணவர்களை மனிதாபிமானமற்ற முறையில் மிகக் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இக்காணொளி தொடர்பாக தீவிர விசாரணைகளில் இறங்கிய ஈரட்டைப்பெரியகுளம் பொலிஸார், தாக்குதலில் ஈடுபட்ட வவுனியா, ஈரட்டைப்பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 7 மாணவர்களை அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கொ0டூரத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த 15 வயதுடைய இரு மாணவர்கள், தற்போது வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் இன்று (03.06.2026) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான், சந்தேக நபர்களான 7 மாணவர்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை கெபித்திகொல்லாவ சிறுவர் பராமரிப்பு (பரோல்) இல்லத்தில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஈரட்டைப்பெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் சிறுவர்கள் மத்தியில் இத்தகைய வன்முறைப் போக்கு அதிகரித்திருப்பது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பலத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் உள்ள தற்போதைய இஸ்லாமியக் குடியரசு ஆட்சியின் அடித்தளங்கள் முற்றிலும் விரிசல் விட்டுள்ளதாகவும், அந்த பயங்கரவாத ஆட்...
04/06/2026

ஈரானில் உள்ள தற்போதைய இஸ்லாமியக் குடியரசு ஆட்சியின் அடித்தளங்கள் முற்றிலும் விரிசல் விட்டுள்ளதாகவும், அந்த பயங்கரவாத ஆட்சி மிக விரைவில் வீழ்வது உறுதி என்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இருவர் மீது வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்...
04/06/2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இருவர் மீது வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமை, தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகவே அமைகின்றது என
சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காகவே அந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சித்தரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முற்படுகின்றது.

இது ஒரு இழிவான முயற்சியாகும். சுரேஷ் சலே போன்ற ஒரு அதிகாரியை 180 நாட்கள் தடுத்து வைத்து, போதிய வசதியற்ற அறையில் வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்குவது அநீதியாகும்.

சிங்கள பௌத்த தலைவரான கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டு வர, ஸஹ்ரான் மற்றும் இப்றாஹிம் குடும்பத்தினர் தங்களின் உயிரைத் தியாகம் செய்தார்கள் என்பதை நிரூபிக்க முற்படும் இவர்களின் சிந்தனை குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்.

இது வெளிப்படையான அரசியல் பழிவாங்கல் அன்றி வேறொன்றுமில்லை. கோட்டாபய ராஜபக்ஷ தற்போது நாட்டில்தான் இருக்கின்றார்.

டெல்லி ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழப்பு..!இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் மால்வியா நகர் பகுதியில் அமைந்த...
04/06/2026

டெல்லி ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில்
21 பேர் உயிரிழப்பு..!

இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் மால்வியா நகர் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறுகலான வீதிகள் நிறைந்த பகுதியில் அமைந்திருந்த இந்த ஹோட்டலின் அடித்தளத்தில் (Basement) திடீரெனப் பற்றிய தீ, ஏனைய தளங்களுக்கும் வேகமாகப் பரவியுள்ளது.

தீயில் சிக்கிய சிலர் மாடிகளிலிருந்து குதித்துக் காயமடைந்ததுடன், பலர் அபயக்குரல் எழுப்பியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் முன்னெடுத்த மீட்பு நடவடிக்கைகளின் போது 21 உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், காயமடைந்த
40 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் இந்திய ரூபா நிதியுதவி அறிவித்துள்ளார்.

நாட்டின் சுகாதாரத் துறையில் காணப்படும் ஊழியர் பற்றாக்குறைக்குத் தீர்வுகாணும் நோக்கில், முதற்கட்டமாக 3,000 மாணவத் தாதியர்...
04/06/2026

நாட்டின் சுகாதாரத் துறையில் காணப்படும் ஊழியர் பற்றாக்குறைக்குத் தீர்வுகாணும் நோக்கில், முதற்கட்டமாக 3,000 மாணவத் தாதியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு முதல் 2029 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள், தாதிகள் சேவைக்கு 13,600 பணியாளர்களைப் புதிதாக இணைத்துக் கொள்ளும் ஐந்து வருடத் திட்டத்தின் ஆரம்ப கட்டமாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதன்படி 2021, 2022, 2023 அல்லது 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானம் அல்லது கணிதப் பிரிவுகளில் சித்தியடைந்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.health.gov.lk ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். கடந்த மே மாதம் 29 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விண்ணப்பங் கோரல், ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சைகளின் பின்னர் தாதிகள் சேவைக்காகத் தெரிவு செய்யப்படவுள்ளனர். தெரிவு செய்யப்படும் மாணவத் தாதிகளுக்கான தொழில்முறைப் பயிற்சிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலின் கீழ், 2025 முதல் 2029 ஆம் ஆண்டு வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த 13,600 தாதிகள் நியமனக் கொள்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டிருப்பதை வரவேற்கின்றோம்- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்!பாராளுமன்ற உற...
04/06/2026

சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டிருப்பதை வரவேற்கின்றோம்- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்!

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் ஒரு இனவாதி இல்லை என்ற கருத்தினை மறுக்கின்றோம்.

எமது மக்களை புலி சாயம் பூசி இன்னும் எம்மக்களை பிரித்தாளக் கூடாது. சில அரசியல்வாதிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்திவருவதை இட்டு நாங்கள் மனவேதனை அடைகின்றோம்.இந்த நாட்டில் உள்ள சகலரும் ஒரு நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் தான் எல்லோருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதன் ஊடாகவே கல்முனையினை நாங்கள் பார்க்கின்றோம் என அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

சமகால அரசியல் தொடர்பில் புதன்கிழமை (03) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் பங்கேற்புடன் இரவு கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது!

அம்பாறை மாவட்டம் மூன்று இனங்கள் வாழும் சமூகமாக இருக்கின்றோம்.இந்த நாட்டில் இனரீதியான பிரச்சினைகள் இருந்தாலும் நாங்கள் வாழ வேண்டும் என்பதற்காக நாட்டில் உள்ள இரு இனங்களுடன் இணைந்து வாழ்கின்றோம்.இலங்கை தமிழரசுக் கட்சியானது சிறுபான்மை இன விடுதலைக்காக நீண்ட காலம் பயணித்த ஒரு கட்சியாகும்.

இதே வேளை கல்முனை பிரதேசம் சம்பந்தமாக இங்கு கூற வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.கல்முனை பிரதேசம் என்பது முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாகவும் தமிழ் மக்கள் சிறுபான்மையாகவும் வாழுகின்ற இடமாகும்.ஆனால் 1989 ஆண்டு முதல் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் யாவரும் அறிவீர்கள்.

இப்பிரதேச செயலகம் குறித்து எமது தமிழ் தேசிய தலைவர்களும் முஸ்லீம் தலைவர்களும் பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தோம்.

இந்த முயற்சி எமக்கு கை கூடாத சூழ்நிலையில் தான் நீதிமன்றத்தை நாடி இருந்தோம்.அந்த அடிப்படையில் தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக எமது பயணத்தை மேற்கொண்டிருக்கின்றோம்.இன்று இம்மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் பல கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.
அவரது அக்கருத்துக்களை பார்க்கின்றபோது இனவாதமாக கூறிவிட்டு அவர் தான் ஒரு இனவாதி இல்லை என்ற கருத்தினை முன்வைத்திருக்கின்றார். உண்மையில் நாங்கள் அதை மறுக்கின்றோம்.

நிச்சயமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை பொறுத்தவரை தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். அவர்களும் ஒரு நிர்வாக கட்டமைப்பினுள் சகல உரிமைகளையும் சகல சலுகைகளையும் பெற்று வாழ வேண்டும் என விரும்புகின்றார்கள்.

அண்மைக்காலத்தில் சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்திருப்பீர்கள்.தற்போது நீதிமன்ற தீர்ப்பின் படி தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.அந்த மக்களும் சகல உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும்.அதே போன்று தான் இப்பிரதேச செயலகத்திற்கும் ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும். அண்மைக்காலங்களில் இச்செயலகத்திற்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் அத்துமீறல்கள் இடம்பெறுவதை சகலரும் அறிவீர்கள்.

சில அரசியல்வாதிகள் அமைப்புகளினால் ஏற்பட்டுள்ள இவ்வாறான அச்சுறுத்தல்களுக்காக நீதிமன்றத்தை நாங்கள் தற்போது நாடி இருக்கின்றோம். அந்த நீதிமன்ற தீர்ப்பு கூட எவ்வாறு அமையப்போகின்றது என தெரியவில்லை. அதே போன்று இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்களும் பல கருத்துக்களை இவ்விடயம் தொடர்பில் தெரிவித்ததாக அறிகின்றோம். அதன் அடிப்படையில் இவ்விடயத்தில் எமது நியாயபூர்வமான உரிமைகளை முன்வைத்திருக்கின்றோம். கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் சிலர் அரசாங்கங்களுடன் பேரம் பேசி சில விடயங்களை சாதித்திருக்கின்றார்கள். நாங்கள் தொடர்ச்சியாக கொள்கையுடன் பயணித்ததன் காரணமாக எமது மக்கள் சொல்லொன்னா துயரங்களை அனுபவித்திருக்கின்றார்கள்.

அந்த துன்பங்களில் இருந்து மீண்டு வருவதற்காகவே நீதிமன்றத்தை நாங்கள் நாடி இருக்கின்றோம்.நாங்கள் நீதிமன்ற தீரப்பினை நம்பி இருக்கின்றோம்.அதன் அடிப்படையில் நாங்கள் செயற்படுவோம். அத்துடன் எமது மக்களை புலி சாயம் பூசி இன்னும் எம்மக்களை பிரித்தாளக் கூடாது.சில அரசியல்வாதிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்திவருவதை இட்டு நாங்கள் மனவேதனை அடைகின்றோம்.

இந்த நாட்டில் உள்ள சகலரும் ஒரு நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் தான் எல்லோருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதன் ஊடாகவே கல்முனையினை நாங்கள் பார்க்கின்றோம் என்றார்.

Address

Vavuniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qaima Tv Qatar-Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qaima Tv Qatar-Sri Lanka:

Share