I Channel

I Channel A presentation delivered to a client to help explain the various forms of online rich media.

Alternative to the media sources present - television, radio and newspapers. What gave online media such popularity was the abundant sources of the Internet.

Zakat போன்று இந்தியர்களுக்கு MIA; டாக்டர் சத்தியா பிரகாஷ் பரிந்துரை(ரா.தங்கமணி, கோ.பத்மஜோதி)கோலாலம்பூர், ஜூன் 14-இந்தியர...
14/06/2025

Zakat போன்று இந்தியர்களுக்கு MIA; டாக்டர் சத்தியா பிரகாஷ் பரிந்துரை

(ரா.தங்கமணி, கோ.பத்மஜோதி)

கோலாலம்பூர், ஜூன் 14-

இந்தியர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிடும் வகையில் Zakat போன்று MIA எனப்படும் மலேசிய இந்தியர் பொருளாதார அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் இந்தியர் நிர்வாக இயக்கத்தின் தலைவர் டாக்டர் சத்தியா பிரகாஷ் தெரிவித்தார்.

அரசாங்கத்தையே முழுமையாக நம்பி கொண்டிருக்காமல் இந்தியர்களுக்கு இந்தியர்களே உதவிடும் வகையில் MIA- வின் செயலாக்கத் திறன் வடிவமைக்கப்படும்.

இந்திய சமுதாயத்தில் உள்ள வணிகர்கள், தொழிலதிபர்கள் தாங்கள் செலுத்தும் வரி பணத்தை MIA-வில் பங்ளிக்கச் செய்வதன் வழி இந்தியர்களுக்கு உதவிடும் ஓர் நிதிவளமாக MIA உருவாக்கப்படும்.

நாடு தழுவிய நிலையில் இதன் செயலாக்கம் விரிவுப்படுத்தி அதன் மூலம் MIA செயல்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று நேற்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் டாக்டர் சத்தியா பிரகாஷ் தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்திற்காக அரசாங்கம் ஒதுக்கும் மானியம் தொடர்பில் தொடர்ந்து கேள்விகளை எழுப்புவதை விடுத்து நமக்கு நாமே என்ன செய்து கொள்ள முடியும் என்பதை சாத்தியமாக்கவே MIA திட்டத்தை முன்மொழிந்துள்ளேன்.

இது தொடர்பான பரிந்துரை முழுமையாக தயாரிக்கப்பட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் பார்வைக்குக் கொண்டுச் செல்லப்படும்.

பிரதமர் இதனை அங்கீகரித்தால் நிச்சயம் அது இந்திய சமுதாயத்திற்கு பயனுள்ளதாக அமையும் என்று டாக்டர் சத்தியா பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், நெகிரி செம்பிலான் மாநில முன்னாள் துணை சபாநாயகர் டத்தோ ரவி உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மித்ராவின் ஏற்பாட்டில்  பள்ளி மாணவ்ரகளுக்கு இணைய பாதுகாப்பு பயிற்சி(ரா.தங்கமணி)கோலாலம்பூர்-பள்ளி மாணவர்களிடையே இணைய பாது...
12/06/2025

மித்ராவின் ஏற்பாட்டில் பள்ளி மாணவ்ரகளுக்கு இணைய பாதுகாப்பு பயிற்சி

(ரா.தங்கமணி)

கோலாலம்பூர்-

பள்ளி மாணவர்களிடையே இணைய பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிலைபெற்றிருக்க மித்ரா இணைய பாதுகாப்பு தொடர்பான திட்டத்தை தொடங்கியுள்ளது.

500 பள்ளிகளிலிருந்து 80,000 மாணவர்களை உள்ளடக்கிய இணைய பாதுகாப்பு பயிற்சி திட்டத்தை பிரதமர் துறை அமைச்சர் (கூட்டரசு பிரதேசம்) டத்தோஸ்ரீ சலேஹா முஸ்தாபா இன்று செந்தூல் தம்புசாமிபிள்ளை தமிழ்ப்பள்ளியில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இளையோர், மாணவர்களை உள்ளடக்கிய இணைய குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

பாலியல் அத்துமீறல், இணைய மோசடி, இணைய பகடிவதை போன்ற பல்வேறு குற்றங்கள் மாணவர்களை எளிதில் நெருங்குகின்றன

இணைய குற்றங்களில் இருந்து மாணவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு மாணவர்களிடையே ஏற்பட வேண்டும்.

அதனை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருக்கும் மித்ராவையும் அதன் தலைவர் பி.பிரபாகரனையும் வெகுவாக பாராட்டுவதாக டத்தோஸ்ரீ சலேஹா குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பிரபாகரன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று ஈப்போவில் உள்ள HRPB பொது மருத்துவமனையில் குருதிக் கொடை மையத்தில் குருதி ஈந்த அனைவருக்கும் நன்றி.உங்கள் பங்களிப்பு...
12/06/2025

நேற்று ஈப்போவில் உள்ள HRPB பொது மருத்துவமனையில் குருதிக் கொடை மையத்தில் குருதி ஈந்த அனைவருக்கும் நன்றி.

உங்கள் பங்களிப்பு நோயாளிகளுக்கு, குறிப்பாக UPSI பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், பல்வேறு சமூகப் பின்னணிகளைக் கொண்ட 300 க்கும் மேற்பட்டவர்கள் உயிர்களைக் காப்பாற்ற ஒன்றுபட்டுள்ளனர்

04/06/2025

{காணொலி] இடைநிலைப்பள்ளியில் தத்தளிக்கும் தமிழ்க்கல்வி ! ஆய்வரங்கம் நடத்தியது மலேசிய மாந்தநேய திராவிடர்க் கழகம்

இடைநிலைப்பள்ளியில் தத்தளிக்கும் தமிழ்க்கல்வி ! ஆய்வரங்கம் நடத்தியது மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம் கோலாலம்பூர் , ஜூன் 4...
04/06/2025

இடைநிலைப்பள்ளியில் தத்தளிக்கும் தமிழ்க்கல்வி ! ஆய்வரங்கம் நடத்தியது மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம்

கோலாலம்பூர் , ஜூன் 4

மலேசிய மாந்த நேயத் திராவிடர்க் கழக ஏற்பாட்டில், கடந்த ஜூன் முதல் நாள் ஞாயிற்றுக் கிழமை, பிற்பகல் 3:00 மணியளவில், கோலாலம்பூர்; பிரிக்பீல்சு ருக்குன் தெத்தாங்கா மண்டபத்தில்,
தொடக்கப்பள்ளிகளிலும் இடை நிலைப் பள்ளிகளிலும் தமிழ்க்கல்வி நலன் கருதி ஆய்வரங்கம் ஒன்றினை கழகக் கல்விக் குழுவால் சிறப்பாக நடத்தப்பட்டது.

குறிப்பாக, பல்லினம் வாழும் மலேசிய சூழலில் தாய்மொழிக் கல்வி, தமிழ்ப்பள்ளிகள், இடைநிலைப் பள்ளியில் தமிழ்மொழியின் நிலை எஸ்பிஎம் தேர்வில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு, இவ்வாறு பல்வேறு தலைப்புகளில் கருத்துகள் பகிரப்பட்டன.

தற்போதைய கல்விக் கொள்கைகளால் நமக்குத் தெரியாமலேயே கல்வியில் தமிழ்மொழி சந்தித்து வரும் பல அறியப்படாத விவகாரங்களும் இங்கு விவாதிக்கப்பட்டது.

‘தொடக்கப்பள்ளிகளில் தமிழ்க் கல்வியின் நிலை’ என்ற தலைப்பில் முன்னாள் தலைமையாசிரியர் கெங்கம்மாள் மலையரசன் பேசினார்;
இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்க் கல்வியின் நிலை என்ற தலைப்பில் ‘முத்தமிழ் முரசு’ இரா. திருமாவளவன் உரை நிகழ்த்தினார்.

தமிழ்ச்சுடர்’ மன்னர் மன்னன் மருதை, ‘உயர்க்கல்விக் கூடங்களில் தமிழ்க் கல்வியும் அது சார்ந்த துறைகளும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்; உயர்க்கல்வி முடித்த மாணவர்களுக்கான வேலை சந்தை குறித்த தகவலையும் அவர் எடுத்துரைத்தார்,

தொடர்ந்து, இடைநிலைப் பள்ளியில் தத்தளிக்கும் தமிழ்க்கல்வி ஏன்ற தலைப்பில் முனைவர் இரா. குமரன் வேலு பேசினார்.
வழக்கறிஞர் இரா. கனல்வீரன், தமிழ்க்கல்வியும் அரசியலமைப்புச் சட்டமும் என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

உரையாற்றிய ஆய்வாளர்களோடு, தொடர்ந்து கலந்தாய்வு இடம்பெற்றது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்க்கல்வி நமது உரிமை மட்டும் அல்ல. பல்கலைக்கழக, வேலை வாய்ப்புகளுக்கு ஒரு கூடுதல் தகுதியாகும். மிக முக்கியமாக, எஸ்பிஎம் தேர்வில் ஒரு பாடமாக எடுத்து எழுதி தேர்ச்சி சான்றிதழ் பெறுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

தமிழ்க்கல்வியின் தொடர்ச்சி விவகாரத்தில், இடைநிலைப் பள்ளியில் தத்தளிக்கும் தமிழ்மொழி குறித்த முன்னெடுப்பை, தங்களால் இயன்ற அளவு மலேசிய மாந்தநேயத் திராவிடர்க் கழகம் முன்னெடுக்கும் என அதன் தலைவர் நாக. பஞ்சு உறுதியளித்தார்.

காணொளி விலைவில்....

மித்ரா மானியத்திற்காக 1.073 விண்ணப்பங்கள் நிராகரிப்பு - பிரபாகரன்(ரா.தங்கமணி)புத்ராஜெயா-PPSMI எனப்படும் மித்ராவின் மானிய...
31/05/2025

மித்ரா மானியத்திற்காக 1.073 விண்ணப்பங்கள் நிராகரிப்பு - பிரபாகரன்

(ரா.தங்கமணி)

புத்ராஜெயா-

PPSMI எனப்படும் மித்ராவின் மானியங்களுக்கு விண்ணப்பித்த 1.332 விண்ணப்பங்களில் 1,073 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக மித்ராவின் தலைவர் பி.பிரபாகரன் தெரிவித்தார்.

கடந்தாண்டு டிசம்பர் 2 முதல் இவ்வாண்டு ஜனவரி 5ஆம் தேதி வரை பெறப்பட்ட இவ்விண்ணப்பங்களில் முழுமையான ஆவணங்கள் பூர்த்தி செய்யப்படாடதது, கணக்கறிக்கை இணைக்கப்படாதது, முறையான செயலறிக்கை இல்லாதது, காலதாமதமாக விண்ணப்பங்களை சமர்ப்பித்தது உட்பட பல காரணங்களால் 1,073 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்களில் 45 விண்ணப்பங்கள் அங்கீகரிப்பட்டுள்ளதாகவும் அவை பிரதமரின் ஒப்பதலுக்காக காத்திருக்கிறோம்.

மேலும் பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்கள் ஜூன் மாதம் இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என்று செய்தியாளர் சந்திப்பில் பிரபாரகன் குறிப்பிட்டார்.

மித்ராவின் மானியங்கள் தொடர்பில் வெளிப்படையான, நேர்மையான போக்கு கடைபிடிக்கவே விண்ணப்பங்கள் யாவும் துரிதமாக தணிக்கை செய்யப்படுகின்றன. அதனாலேயே தகுதி இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

வெ.40 மில்லியன் ஒதுக்கீட்டை உள்ளடக்கிய 45 விண்ணப்பங்களும் பிரதமரின ஒப்புதலுக்கு பின்னர் பகிர்ந்தளிக்கப்படும் என்று பிரபாகரன் மேலும் சொன்னார்.

இந்த சந்திப்பின்போது மித்ராவின் செயற்குழு உறுப்பினர் ஆர்.யுவனேஸ்வரன், மித்ராவின் தலைமை இயக்குனர் ஆகியோரும் உடனிருந்தனர்

21/05/2025

[காணொலி] - எனது குரலுக்கான தகுதியை பெறவே உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்- டாக்டர் சத்தியா பிரகாஷ்

எனது குரலுக்கான தகுதியை பெறவே உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்- டாக்டர் சத்தியா பிரகாஷ்(ரா.தங்கமணி)கோலாலம்பூர், ம...
21/05/2025

எனது குரலுக்கான தகுதியை பெறவே உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்- டாக்டர் சத்தியா பிரகாஷ்

(ரா.தங்கமணி)

கோலாலம்பூர், மே 22-

பிகேஆர் கட்சியில் இந்தியர்களுக்கான குரல் ஒலிக்கப்பட வேண்டும். அதற்கு தகுதியானவனாக உருவெடுக்கவே உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக உலு சிலாவ்கூர் பிகேஆர் தொகுதித் தலைவர் டாக்டர் சத்தியா பிரகாஷ் தெரிவித்தார்.

ஆளும் அரசாங்கமாக பிகேஆர் கட்சி திகழ்ந்தாலும் இந்தியர்களின் எதிர்பார்ப்பும் அபிலாஷைகளும் இன்னமும் கானல் நீராகவே இருக்கிறது.

இந்திய சமுதாயத்தை பிரதிநிதித்து பதவியில் இருப்பவர்கள் இந்தியர்களுக்காக குரல் கொடுக்கிறார்களா என்பதை இந்திய சமுதாயமே அறியும்.

இந்தியர்களுக்காக அவர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை, ஏன் வாய் திறக்கவில்லை என்பது குறித்து நான் குறை சொல்லி கொண்டிருக்கவில்லை.

இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பிறரை எதிர்பார்ப்பதை விட தாமே களத்தில் இறங்கலாம் என்ற எண்ணத்திலேயே உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.

உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கட்சியில் எனது குரல் ஒலிக்கும். எனது குரலின் தகுதியாகவே இந்த பதவியை பாரக்கிறேன் என்று நேற்று தலைநகரிலுள்ள சிலாங்கூர் இந்தியர் நிர்வாக இயக்கத்தின் விருந்துபசரிப்பு நிகழ்வில் உரையாற்றியபோது டாக்டர் சத்தியா பிரகாஷ் இவ்வாறு கூறினார்.

2022ஆம் ஆண்டு தேர்தலின்போது பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியமைக்க இந்தியர்கள் பெரும்பான்மை ஆதரவு வழங்கிய போதிலும் இந்தியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படாமல் இருக்கிறது.

மித்ராவின் செயலாக்கம், அதன் வெளிப்படத்தன்மை குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர். மித்ராவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியம் யாருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்ற கணக்குகள் வெளிப்படையாக அறிவிக்கப்படாதது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்திய சமுதாயத்தின் குரலாக எனது குரல் ஒலிக்க உதவித் தலைவராக தம்மையும் உயர்மட்ட குழு, இளைஞர், மகளிர் பிரிவு என போட்டியிடும் துடிப்புமிக்க இந்திய வேட்பாளர்களை கட்சி உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று டாக்டர் சத்தியா பிரகாஷ் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் பிகேஆர் கட்சித் தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவே திரட்டினர்.

Malaysia Integrity Generation அமைப்பின் 5ஆம் ஆண்டு நிறைவு விழா(தங்கமணி)கிள்ளான், ஏப்.8-இளைஞர்கள் என்றாலே தவறான கண்ணோட்டம...
08/04/2025

Malaysia Integrity Generation அமைப்பின் 5ஆம் ஆண்டு நிறைவு விழா

(தங்கமணி)

கிள்ளான், ஏப்.8-

இளைஞர்கள் என்றாலே தவறான கண்ணோட்டம் பார்க்கப்படும் இன்றைய காலகட்டத்தில் இளைஞர் பட்டாளமே ஒன்று சேர்ந்து பல்வேறு சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Malaysis Integrity Generation எனும் அமைப்பின் வழி பல்வேறு தரப்பினருக்கு வேண்டிய உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் டாக்டர் ரஜினி @ முரு தெரிவித்தார்.

இளைஞர்கள் ஒன்று சேர்ந்தாலே தீய பழக்கம், குண்டர் குமபல் என தவறான கண்ணோட்டமே பலரிடத்தில் மேலோங்கியுள்ளது.

அதனை தகர்க்கும் விதமாக இந்த அமைப்பில் உள்ள இளைஞர்களின் முயற்சியால் பல்வேறு நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

வசதிக் குறைந்தோருக்கான அடிப்படை தேவைகள், உடல் நலிவுற்றோருக்கான உதவிகள், மாணவர்களுக்கு உதவிகள் என அவை நீண்டுக் கொண்டிருக்கின்றன.

கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் சேவையில் களம் கண்டு வருகிறது இவ்வமைப்பு என்று அவர் சொன்னார்.

அண்மையில் இங்குள்ள ஹோக்கியான் மண்டபத்தில் நடைபெற்ற Malaysia Integrity Generation அமைப்பின் 5ஆம் ஆண்டு நிறைவு விழா விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமரின் அரசியல் செயலாளரின் சிறப்பு அதிகாரி ஜொனாதன் வேலு, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் ஆகியோர் இவ்வமைப்பின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டியதோடு அமைப்பின் பொறுப்பாளர்களையும் பாராட்டினர்.

இந்நிகழ்வில் காற்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கிய சுரேந்திரனுக்கு நிதியுதவியும் இரு மாணவர்களுக்கு மடிகணினியும் முன்னாள் காற்பந்து விளையாட்டாளர்களுக்கு காசோலையும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கோர் கலந்து கொண்டதோடு விருந்துபசரிப்போடு ஆடல் பாடல் நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

தாமான் செந்தோசா 'பண்டார் செந்தோசா' என உருமாற்றம் காண்கிறது- குணராஜ் பெருமிதம்
19/02/2025

தாமான் செந்தோசா 'பண்டார் செந்தோசா' என உருமாற்றம் காண்கிறது- குணராஜ் பெருமிதம்

ரா.தங்கமணி கிள்ளான்- தாமான் செந்தோசாவை உருமாற்றும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பின...

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினரின் தீபாவளி உபசரிப்பு
22/11/2024

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினரின் தீபாவளி உபசரிப்பு

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினரின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நாளை 23ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு சுங்கை சிப...

30/10/2024

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வீடு விளக்குகளால் குளிர்ச்சியாகி, உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியால் நிரம்பி, அனைத்து உறவுகளும் உள்ளக்களிப்போடு இருக்க வாழ்த்துவோம்.

தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔🎉

Happy Deepavali!
May your home be illuminated by lamps, your life filled with joy and happiness, and all your relationships be blessed with contentment.

Address

NO. 15, Jalan PENDAMAR INDAH 7, TAMAN PENDAMAR INDAH
Pelabuhan Klang

Alerts

Be the first to know and let us send you an email when I Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share