DESAM TV Malaysia

  • Home
  • DESAM TV Malaysia

DESAM TV Malaysia Welcome to Desam4u official fb page
தேசம் ஊடகத்தின் முகநூல் பக்கதிற்கு வருக வருகவென்று வரவேற்கிறோம்.

12/09/2025

மலேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து விலகுகிறேன்!
16 ஆண்டுகள் உழைத்தற்கு மதிப்பில்லை- எம்.எல்.மணிவண்ணன் அறிவிப்பு

அரசு பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்படுவதற்கான ஆதாரங்கள் மஇகாவிடம் உள்ளதுஎல்.சிவசுப்ரமணியம் தகவல்கோலாலம்ப...
11/09/2025

அரசு பல்கலைக்கழகங்களில்
இந்திய மாணவர்கள் புறக்கணிப்படுவதற்கான ஆதாரங்கள் மஇகாவிடம் உள்ளது
எல்.சிவசுப்ரமணியம் தகவல்

கோலாலம்பூர், செப்.11-
அரசு பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்படுவதற்கான ஆதாரங்கள் மஇகாவிடம் உள்ளதாக ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் திரு.எல். சிவசுப்பிரமணியம் கூறினார்.

எஸ்டிபிஎம், மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசு பல்கலைக்கழகங்களில் இடம் கிடைப்பது இல்லை. குறிப்பாக கேட்கும் துறையில் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என மஇகா உதவித் தலைவர் டத்தோ நெல்சன் கூறியிருந்தார்.

இது தொடர்பில் அரசாங்கத் தரப்பில் இருந்து பல விளக்கங்கள் வந்து கொண்டிருக்கிறது. உயர் கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடிரும் இது தொடர்பில் பேசியுள்ளார்.

அரசாங்க தரப்பில் இருந்து எத்தனை விளக்கங்கள் வந்தாலும் தகுதியான மாணவர்களுக்கு இடம் கிடைப்பது இல்லை என்பது தான் உண்மை.

அதே வேளையில் விண்ணப்பித்த துறைக்கு பதிலாக வேறு துறை கிடைத்த மாணவர்களின் பட்டியலும் மஇகாவிடம் உள்ளது.

ஆக ஒவ்வொரு ஆண்டும் இப்பிரச்சினைக்கு விளக்கம் கொடுக்காமல் அதற்கு தீர்வு கானும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

குறிப்பாக அரசு பல்கலைக்கழகங்களுக்கான மாணவர்கள் தேர்வுக் குழுவில் அனைத்து இனமும் இருக்க வேண்டும்.

இதற்காக யூபியூவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் வாய்ப்பு கிடைக்கும் என்று சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.

சிறந்த மாணவர்களுக்கு சமமான வாய்ந்த வாய்ப்புபிபிபி சத்தியா சுதாகரன் வலியுறுத்துகோலாலம்பூர்,செப்.11-சிறந்த மாணவர்களுக்கு ச...
11/09/2025

சிறந்த மாணவர்களுக்கு சமமான வாய்ந்த வாய்ப்பு
பிபிபி சத்தியா சுதாகரன் வலியுறுத்து

கோலாலம்பூர்,செப்.11-
சிறந்த மாணவர்களுக்கு சமமான மற்றும் நீதி வாய்ந்த வாய்ப்புகளை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பி.பி.பி. இளைஞர் அமைப்பு வலியுறுத்துகிறது

பினாங்கைச் சேர்ந்த எட்வர்ட் வோங் யி சியான் என்ற சிறந்த மாணவரின் நிலைமை குறித்து மக்களின் முன்னேற்றக் கட்சி (PPP) இளைஞர் பிரிவு ஆழ்ந்த கவலை வெளியிடுகிறது. அவர் STPM தேர்வில் 4.0 CGPA மற்றும் இணைப் பாடப்பிரிவுகளில் 99.9% மதிப்பெண் பெற்று மிகச் சிறந்த சாதனை செய்திருந்தாலும், மலாயா பல்கலைக்கழகத்தில் அவர் விரும்பிய கணக்கியல் (Accountancy) பாடப்பிரிவில் சேர அனுமதி மறுக்கப்பட்டதாக பி.பி.பி இளைஞர் தலைவர் சத்யா சுதாகரன் கூறினார்.

உயர் கல்வித் துறை வழங்கிய விளக்கம் — 2,291 தகுதியான விண்ணப்பதாரர்களில் எட்வர்ட் 1,129-ஆம் இடத்தில் இருந்ததால், அங்கு 85 இடங்கள் மட்டுமே உள்ளன — என்பதைக் காரணமாக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கல்வி மற்றும் இணைப் பாடப்பிரிவுகளில் இரண்டிலும் சிறந்து விளங்கும் மாணவர்கள், கடினமான ஒதுக்கீட்டு முறைமைக்குள் எண்களாகக் குறைக்கப்படக்கூடாது.

இந்தச் சம்பவம் ஒரு பெரிய பிரச்சினையை வெளிச்சமிடுகிறது. பல தசாப்தங்களாக மலேசியா, குறிப்பாக சிங்கப்பூருக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான சிறந்த மாணவர்கள் மூலமாக “மூளை வடிகால்” (brain drain) பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. எட்வர்ட் வோங் போன்ற மேம்பட்ட திறமையாளர்களுக்கு தாய்நாட்டிலேயே தங்கள் கனவுகளை நிறைவேற்ற வாய்ப்பு தரப்படாவிட்டால், அவர்கள் எதிர்காலத்தில் மலேசியாவுக்குச் συμβ συμβ συμβ உழைக்கும்படி எவ்வாறு நாங்கள் எதிர்பார்க்க முடியும்?

PPP இளைஞர் பிரிவு உறுதியாக நம்புவது, அனைத்து சிறந்த மாணவர்களும், அவர்கள் எந்த பின்னணியிலிருந்தாலும், தங்களின் விருப்பமான துறையைத் தொடர நியாயமான மற்றும் சம வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதே. அவர்களுக்கு மறுப்பு தெரிவித்தல் அநீதி மட்டுமல்லாமல், நாட்டின் நீண்டகால முன்னேற்றத்துக்கும் கேடு விளைவிக்கும்.

நியாயமான மாணவர்கள் புறக்கணிக்கப்படாத வகையில், தற்போதைய பல்கலைக்கழக சேர்க்கை முறையை அவசரமாக ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என அரசையும் உயர் கல்வி அமைச்சையும் வலியுறுத்துகிறோம். மலேசியா தனது சிறந்த திறமைகளை வீணடிக்க முடியாது. ஒவ்வொரு சிறந்த மாணவரும் தமது கனவுகளை அடைய ஆதரவு பெறுவதை உறுதி செய்ய உடனடியாகவும் உறுதியான நடவடிக்கையும் அவசியம்.

இந்தச் சம்பவம் ஒரு விழிப்புணர்வுச் சத்தமாக இருக்க வேண்டும். மலேசியா தன்னுடைய சிறந்த திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை மறுத்துக் கொண்டே சென்றால், திறமையான நபர்கள் வெளிநாடு செல்லும் நிலை தொடரும் — அதன் விலை இறுதியில் நாட்டுக்கே பெரும் சுமையாக மாறும்.

“மலேசியா தனது சிறந்த மாணவர்களின் பக்கத்தில் நிற்க வேண்டும். அவர்களை ஆதரிப்பது ஒரு சிறப்புரிமை அல்ல, தேசியப் பொறுப்பு,” என பி.பி.பி. இளைஞர் தலைவர் சத்யா சுதாகரன் தெரிவித்துள்ளார்.

ம.இ.கா. பேரா மாநில மூத்த மகளிர் தலைவிகளைக் கௌரவிக்கும் விழாவுக்கான ஆலோசனைக் கூட்டம்சுங்கை சிப்புட்,செப்.10-சுங்கை சிப்பு...
10/09/2025

ம.இ.கா. பேரா மாநில மூத்த மகளிர் தலைவிகளைக் கௌரவிக்கும் விழாவுக்கான ஆலோசனைக் கூட்டம்

சுங்கை சிப்புட்,செப்.10-
சுங்கை சிப்புட் துன் சாமி வேலு மாநாட்டு மையத்தில் இன்று, ம.இ.கா. பேரா மாநில மூத்த மகளிர் தலைவிகளை கௌரவிக்க விரைவில் நடைபெற உள்ள விழாவை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தான் ஸ்ரீ எம். ராமசாமி தலைமையிலான இந்தக் கூட்டத்தில், விநியோகஸ்தர்கள் மற்றும் நிகழ்ச்சி நடத்துநர்கள் கலந்து கொண்டு, தயார்நிலை முன்னேற்றம் குறித்து கலந்துரையாடினர்.

பின்னர், டான் ஸ்ரீ அவர்கள் நேரடியாக அரங்கத்திற்கு சென்று, நடைபெறவிருக்கின்ற நிகழ்வினை தெளிவாக விளக்கி, ஒவ்வொருவரும் தங்களுடைய பொறுப்புக்களை நேர்த்தியாக நிர்வகிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்தால் வேறு துறையை கொடுப்பதா?அரசாங்கம் உரிய தீர்வை வழங்க  டத்தோ நெல்சன் கோரிக்கைகோலாலம்பூர...
10/09/2025

மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்தால் வேறு துறையை கொடுப்பதா?
அரசாங்கம் உரிய தீர்வை வழங்க டத்தோ நெல்சன் கோரிக்கை

கோலாலம்பூர், செப்.10-
ஏழை இந்திய மாணவர்களின் உயர் கல்வி பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்க வேண்டும்.

மஇகா உதவித் தலைவரும், கல்வி குழுத் தலைவருமான டத்தோ நெல்சன் ரெங்கநாதன் கூறினார்.

மஇகா கல்வி குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

குறிப்பாக எஸ்டிபிஎம், மெட்ரிகுலேசன் முடித்த மாணவர்கள் அரசு பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காத புகார்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இம்முறை எஸ்டிபிஎம், மெட்ரிகுலேசனில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கே அரசாங்க பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கவில்லை.

அப்படியே கிடைத்தாலும் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்தால் வேறு துறையில் பயில வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

ஏன் அவர்களே தற்போது தனியார் பல்கலைக்கழகங்களை அடையாளம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது நமது இந்திய மாணவர்களுக்கு பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

காரணம் பணம் இல்லாத பட்சத்தில் தான் மாணவர்கள் சிரமப்பட்டு படித்து அரசு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பம் செய்கின்றனர்.

அங்கும் தங்கள் கனவை அடைவதற்கு முட்டுக் கட்டை போட்டால் அம்மாணவர்கள் என்ன செய்வார்கள் என்பது தான் மிகப் பெரிய கேள்விக் குறியாக உள்ளது.

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் வாயிலாக மஇகா பல மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு தருகிறது.

ஆனால் இது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்.

ஆக அரசாங்க பல்கலைக்கழகங்கள் தகுதியுள்ள மாணவர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்க வேண்டும்.

தேர்வு செய்யும் துறைகள் அம்மாணவர்களுக்கு
வழங்கப்பட வேண்டும். இதற்கு மடானி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் யூபியூ மாணவர்கள் தேர்வு குழுவில் இன அடிப்படையிலான உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்.

இதன் மூலம் எந்தவொரு பாராபட்சமும் இன்றி தகுதியான மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த உயர் கல்வி பிரச்சினை குறித்து பல ஆண்டுகளாக நாங்கள் குரல் கொடுத்து தான் வருகிறோம்.

ஆனால் இதற்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்காதது பெரும் ஏமாற்றமாக உள்ளது என்று மஇகா உதவித் தலைவருமான டத்தோ நெல்சன் கூறினார்.

துன் சாமிவேலு மாநாட்டு மையம் சுங்கை சிப்புட் பகுதி பி40 குடும்பங்களுக்கு தான்ஸ்ரீ எம். ராமசாமி YPU உணவுப் பொட்டலங்கள் வழ...
10/09/2025

துன் சாமிவேலு மாநாட்டு மையம் சுங்கை சிப்புட் பகுதி பி40 குடும்பங்களுக்கு தான்ஸ்ரீ எம். ராமசாமி YPU உணவுப் பொட்டலங்கள் வழங்கினார்.

சுங்கை சிப்புட்,செப்.10-
சுங்கை சிப்புட் பகுதியிலுள்ள பி40 குடும்பங்களுக்கு Yayasan Bina Upaya (YBU) உணவுப் போட்டலங்களை பேராக் மாநில ம.இ.கா தலைவர் தான்ஸ்ரீ எம்.ராமசாமி வழங்கினார்.

இந்த அன்பளிப்பானது, பி40 பிரிவை சார்ந்தவர்களின் சுமையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் இந்திய சமூகத்தின் நலன்களிலும் அவரது அக்கறையை பிரதிபலிப்பதாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கமு.

10/09/2025

உயர்கல்வி நிலையங்களில் இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது வருத்தமளிக்கிறது-டத்தோ Dr நெல்சன்

10/09/2025

ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசாங்கம் நிதி உதவிகள் தொடரும்
சிவநேசன் உறுதி

ஈப்போ,செப்.10-
பேரா மாநிலத்தில் இந்து சமய வளர்ச்சிக்கு ஆலயங்கள் , தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு மாநில அரசாகம் தொடர்ந்து உதவிகள் வழங்கி வருவதாக என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் கூறினார்.

இம்மாநிலத்தில் சில இடங்களில் தனியார் மற்றும் அரசாங்க நிலங்களில் உள்ள அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயங்கள் அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

உடைபடும் அபாயத்தைக் எதிர்நோக்கும் ஆலயங்களுக்கு மாற்று இடங்களை பெற நடவடிக்கை எடுத்து வருகிறது.

சில நேரங்களில ஆலயங்களில அதற்கு ஆலய பொறுப்பாளர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினார்

பேரா மாநிலத்தில் தம்முடைய அனுமதியின்றி எந்த ஆலயமும் உடைபடாது, அவைகளுக்கு பிரச்சனை எழுந்தால் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று குறிப்பிட்ட அவர் மாநில இந்து சங்க நடவடிக்கைக்கு 10 ஆயிரம் ரிங்கிட் உதவி வழங்கப்படும் என்றார்.

ஈப்போ மகா மாரியம்மன் ஆலயத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபுற்ற பேரா மாநில இந்து சங்க 47 ஆவது திரு முறை விழாவை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் சிவநேசன் இவ்வாறு பேசினார்

இந்த நிகழ்வை நிறைவு செய்ய பிரதமரின் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி சண்முகன் மூக்கன்
கலந்துக்கொண்டார்.

அவர் ஆற்றிய உரையில் , சமய வளர்ச்சிக்கு, பிரதமர் இந்து சமய வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதை அவர் சுட்டிக்காட்டிப பேசினார்.

ஈப்போ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற திருமுறை ஓதும் விழாவில் 760 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

இதில் தேர்வுப் பெறும் மாணவர்கள் தலை நகரில. நடைபெற விருக்கும் தேசிய நிலை திரு முறை ஓதும் போட்டியில் பங்கேற்பர் என்று மாநில இந்து சங்க தலைவர் தலைவர் பொன். சந்திரன் கூறினார்.

மாநிலத்தில் இந்து சமய வளர்ச்சிக்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்
அ. சிவநேசன் வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இதில் சிறப்பு வருகை புரிந்த தேசிய இந்து சங்க உதவித் தலைவர் டத்தோ மோகன் ஷான் , இந்து சமயம் இந்த நாட்டில் தொடர்ந்து வலுவுடன் இருக்க இந்துகள் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்...

----

10/09/2025

அடிப்படை இந்து சமய நூல் வெளியீட்டு விழா ஈப்போ மகா மாரியம்மன் ஆலய திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது

ஈப்போ,செப்.10-
ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் ஏற்பாட்டில் வெளியீடு காணப்பட்ட து.

இந்த நிகழ்வில் சிறப்பு வருகை புரிந்த ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ. எம். சரவணன் இந்த சமய நூலினை வெளியீடு செய்து 10 ஆயிரம் நிதியையும் வழங்கினார்.

மத நம்பிக்கைக்கு புறம்பான செயல்களில ஈடுபடக் கூடாது. அடிப்படை சமய அறிவைத் தெரிந்துக்
கொள்ள இந்த அடைப்படை சமய நூல் பெரும் உதவியாக இருக்கும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

இந்து சமயம் நல்ல தத்துவங்களை கொண்டது சமயமாகவும் விளங்கி வருகிறது . அதனை புரிந்துகொண்டால் , இந்து சமயத்தவர்கள் பல்வேறு மூட நம்பிக்கையில் ஈடுபடுவதை தவிரக்கலாம் என்றார்.

ஆலயங்களில் சமய வகுப்புகளை நடத்தவேண்டும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்து சமய அறிவை புகுட்டபடவேண்டும்..அவர்களை சமய வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும் .

இதற்கு ஆலயங்கள் பங்கினை ஆற்றிடவேணடும் , பல ஆலயங்களில் சமய் வகுப்புகள் நடத்தப்படுகிறது. அவைகளை அனைத்து ஆலயங்களிலும் நடத்தப் படவேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

இந்த நூலினை தயார் படுத்த 5 ஆண்டுகள் பிடித்ததாக நூலாசரியரும் ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவி்ன் செயலவை உறுப்பினருமான டாக்டர் சசிதரன் கூறினார்.

இந்த் நூல் எளிய முறையில் இந்து சமயத் தத்துங்களை படித்து தெரிந்துக்கொள்ள வாய்ப்பை வழங்குகிறது என்றார்.

இந்த புத்தங்கள் ஈப்போ சுற்றுவட்டாரத்தில்உள்ள தமிழ்பள்ளிகளின் பொறுப்பாளர்கள், ஆலய பொறுப்பாள்ரகள மற்றும் சமுகத் தலைவர்கள பொது மக்கள் ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.

இந்த

10/09/2025

ஆன்மீகத்தில. முக்கியத்துவம் வாய்ந்த குருந்த மரம் ஈப்போ கல்லுமலை சுப்பிரமணியர் ஆலயத்தில் நடப்பட்டது

ஈப்போ,செப்.10-
ஆன்மீகத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் குருந்த மரம் ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயதில் நடப்பட்டது.

இந்த மரத்தை ம.இ.கா. தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அன்பளிப்பு செய்ததுடன் ஆலயத்திற்கு வருகை அளித்து அதனை அவர் கையாலேயே நட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா தலைவர் ஆர். சீத்தாராமன் உட்பட அதன் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் பிரிவினர்களும் கலந்துக்கொண்டனர்.

குருந்த மரம் என்பது ஒரு வகையான காட்டுக் காடி மரம் (Wild Orange Tree), இதன் தாவரவியல் பெயர் அடலான்ஷியா மிசியோனிஸ் (Adansonia madagascariensis) ஆகும்,

இது ரூடேசி (Rutaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மரமானது, தமிழ் இலக்கியத்திலும் ஆன்மீகத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது,

மாணிக்கவாசகர் குருந்த மரத்தின் கீழ் நின்று இறைவனிடமிருந்து சிவஞானம் பெற்ற மரம் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த மரம், ஆற்றங்கரைகளில் வளரும் ஒருவகையான காட்டு நாரத்தை மரமாகும்.

பல சிவாலயங்களில் குருந்த மரங்கள் தல மரங்களாக உள்ளன,
மருத்துவ குணங்கள் நிறைந்தது எனவும், பல்வேறு நோய்களுக்குப் பயன்படும் என்றும் கூறப்படுகிறது.

காட்டு நாரத்தை, கடா நாரத்தை, காட்டு எலுமிச்சை, காட்டு நாரங்கம் மற்றும் காட்டு கொளுஞ்சி போன்ற பெயர்களாலும் இது அறியப்படுகிறது என்பது குறியப்படுகிறது .

----

Suami maut, isteri cedera dalam nahas kereta terbabasIPOH: Seorang lelaki maut manakala isterinya cedera selepas kereta ...
10/09/2025

Suami maut, isteri cedera dalam nahas kereta terbabas

IPOH: Seorang lelaki maut manakala isterinya cedera selepas kereta jenis Toyota Corolla Altis yang mereka naiki terbabas dan terbalik di Jalan Sultan Idris Shah, di sini hari ini.

Jurucakap Jabatan Bomba dan Penyelamat Malaysia (JBPM) Perak berkata, mangsa yang maut merupakan pemandu berusia 55 tahun dan wanita yang cedera itu 48 tahun.

Kemalangan itu berlaku sekitar jam 8.06 pagi sebelum seramai sembilan orang anggota dari Balai Bomba dan Penyelamat (BBP) Ipoh ke lokasi.

"Terdapat seorang mangsa lelaki tersepit di bahagian pemandu dan telah disahkan maut di lokasi oleh pihak Kementerian Kesihatan Malaysia (KKM).

"Manakala isteri mangsa hanya mengalami kecederaan ringan," katanya dalam kenyataan pada Rabu.

Katanya lagi, bomba melaksanakan kerja-kerja menyelamat menggunakan peralatan hidraulik sehingga mangsa berjaya dikeluarkan.

Mangsa yang maut diserahkan pada polis manakala yang cedera diserahkan kepada pihak KKM untuk tindakan lanjut.

09/09/2025

பகடிவதையை ஒழிப்போம்...

Address


Alerts

Be the first to know and let us send you an email when DESAM TV Malaysia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DESAM TV Malaysia:

  • Want your business to be the top-listed Media Company?

Share