DESAM TV Malaysia

  • Home
  • DESAM TV Malaysia

DESAM TV Malaysia Welcome to Desam4u official fb page
தேசம் ஊடகத்தின் முகநூல் பக்கதிற்கு வருக வருகவென்று வரவேற்கிறோம்.

26/04/2025
இசைநிகழ்ச்சிகள் ஏற்பாட்டுக்கு சிறுநீர் சோதனை திட்டங்கள் இல்லை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பை வரவேற்றார் திலகன் ராமசா...
10/03/2025

இசைநிகழ்ச்சிகள் ஏற்பாட்டுக்கு சிறுநீர் சோதனை திட்டங்கள் இல்லை
அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பை வரவேற்றார் திலகன் ராமசாமி

கோலாலம்பூர், மார்ச் 8- இசைநிகழ்ச்சி நடத்துவதற்கு சிறுநீர் சோதனை நடத்தும் திட்டத்தை மலேசிய அரசு இந்த நேரத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடவில்லை என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஜில் கூறியிருப்பது இசைநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தடையாக இருக்காது என்று சிலாங்கூர் மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் தகவல் பிரிவு தலைவர் திலகன் ராமசாமி கூறினார்.

எனினும், "பொது பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்ய SOP-களை தொடர்ந்து மதிப்பாய்வு செய்ய தயாராக உள்ளோம்" என்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபஹ்மி பட்சில் கூறியுள்ளார்.

இசை நிகழ்ச்சி இடங்களில் போதைப்பொருள், மது மற்றும் புகைபிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டு கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கான அனுமதி செயல்முறையை PUSPAL ஒருங்கிணைக்கிறது.
இசை நிகழ்வு முன், அது நடைபெறும் போது மற்றும் நடைபெற்ற பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.

இசைநிகழ்ச்ணி பார்வையாளர்களுக்கு கட்டாய சிறுநீர் சோதனை செய்ய வேண்டும் என சிலாங்கூர் மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
AADK-இன் எதிர்ப்புக்கு ஏற்ப தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு முகமை (AADK), "சிறுநீர் மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வு செய்ய நீண்ட நேரம் தேவை. இது நடைமுறைக்கு ஏற்றதல்ல" என்று கருத்து தெரிவித்தது வரவேற்கதக்கதை என்றார் ஜெயராமன்.

இது போன்ற கலைநிகழ்ச்சிகள் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கின்றன. ஆனால், போதைப்பொருள் தடுக்க கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்" என்று கூறுகின்றனர்.

"பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும். முரண்பாடான நடத்தை கண்டறியப்பட்டால், உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெளிவுபடுத்தியிருந்த்து பாராட்டத்தக்கது என்று மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் தகவல் பிரிவு தலைவர் திலகன் ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

இணைய பாதுகாப்பு  பெற்றோர்களின் கண்காணிப்பு அவசியம் MCMCயின் நடவடிக்கை பாராட்டதக்கதுஜெயராமன் பிள்ளை வரவேற்புகோலாலம்பூர், ...
10/03/2025

இணைய பாதுகாப்பு பெற்றோர்களின் கண்காணிப்பு அவசியம்
MCMCயின் நடவடிக்கை பாராட்டதக்கது
ஜெயராமன் பிள்ளை வரவேற்பு

கோலாலம்பூர், மார்ச் 8- திண்டர், கிரிண்டர், ஓமி போன்ற சமூக டேட்டிங் பயன்பாடுகளுக்கான ஒழுங்கற்ற இணைய தளங்களை மலேசிய அரசு தடைசெய்துள்ளது சிறந்த அணுகுமுறையாகும் என்று சிலாங்கூர் மலேசிய இந்திய இளைஞர் மன்ற முன்னாள் உறுப்பினர்கள் சங்கத்தின் செயலாளர் ஜெயராமன் பிள்ளை வரவேற்றுள்ளார்.

இந்த முடிவு, இந்த பயன்பாடுகள் சமூக ஒழுக்கத்தை பாதிக்கும் செயல்பாடுகளுடன் இருப்பதால் எடுக்கப்பட்டது என்று தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) தெரிவித்திருந்தது.

கூகுள் ப்ளே, ஆப்பிள் ஸ்டோர் போன்ற தலங்களில் இவை இன்னும் கிடைப்பதால், உள்ளடக்க கண்காணிப்பு மூலம் விதிமுறை மீறல்களைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று MCMC மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் சிறந்த ஒன்று என்று ஜெயராமன் பிள்ளை தெரிவித்தார்.

"நாட்டின் மதிப்புகளுக்கு எதிரான உள்ளடக்கங்களை கண்டறிய AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். ஆனால், பெற்றோர்களின் பங்களிப்பு இல்லாமல் இந்த பிரச்சினையை முழுமையாக தீர்க்க முடியாது" என்ற கூற்று சரியானது என்று ஜெயராமன் சொன்னார்.

சமூக ஊடக அபாயங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் "டேட்டிங் பயன்பாடுகள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் திறந்த உரையாடல் நடத்த வேண்டும்" என்று அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறியிருந்தார். இது பெற்றோர்களுக்கு சிறந்த அறிவுரை என்று ஜெயராமன் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி மட்டத்தில் டிஜிட்டல் எழுத்தறிவு வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது."ஆன்லைன் பாதுகாப்பு" தகவல் மூலம் பொது விழிப்புணர்வை ஊக்குவிக்கலாம். குழந்தைகளின் சமூக ஊடக செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

தவறான உள்ளடக்கத்தை MCMC-க்கு உடனடியாக புகாரளிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.இது போன்ற சமூக ஆராய்ச்சியாளர்கள், "தடை மட்டுமே தீர்வு அல்ல. இளைஞர்களுக்கு நேர்மறையான டிஜிட்டல் நடத்தை கற்பிக்க வேண்டும்" என்று வலியுறுத்துகின்றனர்.

கடந்த 2024-இல் 18+ தவறான உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.
இது வரை
70% புகார்கள் இளைஞர்களின் பாதுகாப்பு தொடர்பானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"டிஜிட்டல் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு இடையே சமநிலை அவசியம். இதற்கு அரசு, பெற்றோர் மற்றும் பள்ளிகள் கூட்டாக செயல்பட வேண்டும்" என்று சிலாங்கூர் மலேசிய இந்திய இளைஞர் மன்ற முன்னாள் உறுப்பினர்கள் சங்க தலைவர் ஜெயராமன் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

5,026 இணைய சூதாட்ட தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளனMCMCயின் நடவடிக்கை வரவேற்கதக்கதுசிலாங்கூர் மலேசிய இந்திய இளைஞர் மன்ற முன்ன...
10/03/2025

5,026 இணைய சூதாட்ட தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன
MCMCயின் நடவடிக்கை வரவேற்கதக்கது
சிலாங்கூர் மலேசிய இந்திய இளைஞர் மன்ற முன்னாள் உறுப்பினர் சங்கம் வரவேற்பு

கோலாலம்பூர், மார்ச் 8-
நாட்டில் 2022 தொடங்கி 1 பிப்ரவரி 2025 வரை 5,026 இணைய சூதாட்ட தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) தெரிவித்துள்ளது வரவேற்கதக்கது என்று சிலாங்கூர் மலேசிய இந்திய இளைஞர் மன்ற முன்னாள் உறுப்பினர் சங்கத்தின் ஆலோசகர் ஆறுமுகம் செல்லப்பா கூறினார்.

இந்த காலகட்டத்தில் இணைய சேவை வழங்குநர்களுடன் இணைந்து செயல்பட்ட MCMC, சமூக ஊடகங்களில் இருந்த 224,403 சட்டவிரோத சூதாட்ட உள்ளடக்கங்களை நீக்கியது என்றும் அறிவித்துள்ளதானது சட்டவிரோத சூதாட்டங்களை அழிக்க உதவும் என்று ஆறுமுகம் செல்லப்பா தெரிவித்தார்.

இது குறித்து தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஜில் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் நீக்கப்பட்ட உள்ளடக்கங்களில் 93.14% (209,006) பேஸ்புக் தளத்தில் இருந்ததாகக் கூறப்பட்டது.

"பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான இணைய சூழலை உருவாக்க, MCMC புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது" என்று அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஜில் சொன்னார்.

1 ஜனவரி 2025 முதல், மலேசியாவில் 80 லட்சம் பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்ட அனைத்து சமூக ஊடக மற்றும் மெசேஜிங் சேவைகளும், தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998-ன் கீழ் "விண்ணப்ப சேவை வழங்குநர் வகை உரிமம்" பெற கட்டாயப்படுத்தப்படும் நடவடிக்கையும் சிறந்த ஒன்று என்று ஆறுமுகம் செல்லப்பா கூறினார்.

இந்த நடவடிக்கை, சட்டம் 588 மற்றும் MCMC வெளியிட்ட நடத்தை விதிமுறைகளுக்கு (சிறந்த நடைமுறைகள்) அத்தளங்கள் இணங்குவதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் தொடர்பாக பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கேப்டன் அஜஹரி ஹாசான் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போது அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஜில் அவ்வாறு வ
விளக்கமளித்திருந்தார்.

இந்த சட்டவிரோத இணைய சூதாட்டங்கள் தொடர்பில் MCMC பல்வேறு ஆக்ககரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சட்டவிரோத தளங்கள் அல்லது உள்ளடக்கங்கள் நீக்கப்படுவது சிறந்த நடவடிக்கையாகும் என்று சிலாங்கூர் மலேசிய இந்திய இளைஞர் மன்ற முன்னாள் உறுப்பினர் சங்கத்தின் ஆலோசகர் ஆறுமுகம் செல்லப்பா MCMCக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

MCMC உரிமம் இல்லாமல் செயல்படும் சமூக ஊடகங்களுக்கு 10 லட்சம் வெள்ளி அபராதம் அல்லது 10 வருட சிறைசிலாங்கூர் மலேசிய இந்திய இ...
10/03/2025

MCMC உரிமம் இல்லாமல் செயல்படும் சமூக ஊடகங்களுக்கு
10 லட்சம் வெள்ளி அபராதம் அல்லது 10 வருட சிறை
சிலாங்கூர் மலேசிய இந்திய இளைஞர் மன்ற முன்னாள் உறுப்பினர் சங்க தலைவர் சிவக்குமார் கோவிந்தசாமி பாராட்டு

கோலாலம்பூர், மார்ச் 8- தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தில் திருத்தம செய்யப்பட்டதன் அடிப்படையில் 2025இன் படி, உரிமம் இல்லாமல் இயங்கும் சமூக ஊடக சேவை நிறுவனங்களுக்கு 10 லட்சம் வெள்ளி வரை அபராதம் அல்லது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்ற தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஜில் தெரிவித்துள்ளது பாராட்டத்தக்கது என்று இந்திய இளைஞர் மன்ற முன்னாள் உறுப்பினர் சங்க தலைவர் சிவக்குமார் கோவிந்தசாமி பாராட்டியுள்ளார்.

இந்த புதிய சட்ட கடந்த 11 பிப்ரவரி 2025-ல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ், சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு ஒரு நாளுக்கு 1 லட்சம் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஜில் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியிருந்தார். உண்மையில் இது வரவேற்கதக்க நடவடிக்கை என்று சிவக்குமார் கூறினார்.

"MCMC, சட்டத்தை மீறும் நிறுவனங்களின் முந்தைய புகார்கள், பொது தாக்கம் மற்றும் சட்ட முன்னெடுப்புகளை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்" என்று லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் சுஹைய்மி அப்துல்லா கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் அவ்வாறு விளக்கமளித்திருந்தார்.

இந்த தொடர்ச்சியான மீறல்களுக்கு எதிரான நடவடிக்கையானது இணையத்தில் நிகழும் பல்வேறு குற்றங்களை தடுக்க உதவும். உரிமம் பெறாத நிறுவனங்களின் சேவைகளை தடை செய்ய MCMC-க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் வழி அது தொடர்பான குற்றல்களை துடைத்தொழிக்க முடியும் என்று சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது வீசாட், டிக்டாக் (1 ஜனவரி 2025) மற்றும் டெலிகிராம் (2 ஜனவரி 2025) உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் மட்டுமே உரிமம் பெற்றுள்ளன.
பயனர் தரவுகள் மற்றும் தனியுரிமையை பாதுகாப்பதற்கான விதிமுறைகளை செயல்படுத்துதல் உரிமம் பெறுவதற்கான முக்கிய நோக்கமாகும்.
மேலும் வெறுப்புணர்வூட்டும் உள்ளடக்கம், போலி செய்திகள் மற்றும் சூதாட்டத்தை கண்காணித்தல் போன்றவையும் அடங்கும் என்பதால் இணைய குற்றங்கள் குறையும் வாய்ப்பு உள்ளது என்று சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வருவாய் ஈட்டுவது மிகவும் சிறந்த நடவடிக்கை.
அமைச்சர் ஃபஹ்மி பட்சில் விடுத்த எச்சரிக்கை பல்வேறு எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளது.
"சமூக ஊடக தளங்கள் நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்ற இலக்கானது மக்கள் பாதுகாப்பான டிஜிட்டல் முறையை பயன்படுத்த வேண்டும் என்பதுதான். மக்கள் நன்மைக்காகவே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறியிருப்பது வரவேற்கதக்கது என்று ர். சிலாங்கூர் மலேசிய இந்திய இளைஞர் மன்ற முன்னாள் உறுப்பினர் சங்க தலைவர் சிவக்குமார் கோவிந்தசாமி குறிப்பிட்டுள்ளார்.

09/03/2025

TikTok | Make Your Day

*🚨 Big Reveal Coming Tonight! 🚨**📅 9th March | ⏰ 8:30 PM**  First Day First Show unveils a brand-new concept! Stay tuned...
09/03/2025

*🚨 Big Reveal Coming Tonight! 🚨*
*📅 9th March | ⏰ 8:30 PM*
* First Day First Show unveils a brand-new concept! Stay tuned for the surprise! 🔥❄️*

* *

19/02/2025

தூக்குகயிற்றில் இருந்து தற்காலிகமாக தப்பினார் பன்னீர்செல்வம் தூக்குதண்டனை ஒத்திவைப்பு

இன்று பிப்ரவரி 20 வியாழக்கிழமை காலையில் தூக்கிலிடப்படவிருந்த மலேசியரான பன்னீர்செல்வம் பரந்தாமன் மீதான தூக்கு தண்டனையை சிங்கப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி Woo Big Li தற்காலிகமாக ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளார்.

பிரவாசி மாநாட்டை அமைச்சர் கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்புவனேஸ்வர்,ஜன.10-18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை மாண்புமிகு...
10/01/2025

பிரவாசி மாநாட்டை அமைச்சர் கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்

புவனேஸ்வர்,ஜன.10-
18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை மாண்புமிகு மோடி அவர்கள் தொடக்கி வைத்தார். புலம்பெயர்ந்தோருடனான இந்தியாவின் நெருங்கிய உறவுகளை கொண்டாடும் வகையிலும், ஒரு மறக்க முடியாத நாளாகவும் இந்த மாநாடு அமைந்தது. புலம்பெயர் இந்தியர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையாக பிரதமர் மோடியின் உரை அமைந்திருந்தது.

இந்திய புலம்பெயர்ந்தோர் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர. இது பெருமைப்பட வேண்டிய சாதனையாகும், ஆனால் செய்ய வேண்டியது இன்னும் அதிகம் உள்ளது என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

உலகிற்குத் தேவைப்படும் தொழில்சார் வல்லுனர்களை இந்தியா எப்படி பூர்த்தி செய்யும் என்பதை மோடி தமதுரையில் விளக்கினார்.

என்னைப் பொறுத்தவரையில் இது அறிவுபூர்வமான ஒரு பயணமாகும். இந்தப் பயணத்தில் வழி மலேசியாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுபெறும். குறிப்பாக இலக்கவியல் துறையில் இரு நாடுகளுக்கிடையிலான இணக்கம் தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக இலக்கவியல் அமைச்சர் தெரிவித்தார்.

https://www.facebook.com/share/p/1Aw6zZCTXk/18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை மாண்புமிகு மோடி அவர்கள் தொடக்கி வைத்தார...
10/01/2025

https://www.facebook.com/share/p/1Aw6zZCTXk/

18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை மாண்புமிகு மோடி அவர்கள் தொடக்கி வைத்தார். புலம்பெயர்ந்தோருடனான இந்தியாவின் நெருங்கிய உறவுகளை கொண்டாடும் வகையிலும், ஒரு மறக்க முடியாத நாளாகவும் இந்த மாநாடு அமைந்தது. புலம்பெயர் இந்தியர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையாக பிரதமர் மோடியின் உரை அமைந்திருந்தது.

இந்திய புலம்பெயர்ந்தோர் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர. இது பெருமைப்பட வேண்டிய சாதனையாகும், ஆனால் செய்ய வேண்டியது இன்னும் அதிகம் உள்ளது என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

உலகிற்குத் தேவைப்படும் தொழில்சார் வல்லுனர்களை இந்தியா எப்படி பூர்த்தி செய்யும் என்பதை மோடி தமதுரையில் விளக்கினார்.

என்னைப் பொறுத்தவரையில் இது அறிவுபூர்வமான ஒரு பயணமாகும். இந்தப் பயணத்தில் வழி மலேசியாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுபெறும். குறிப்பாக இலக்கவியல் துறையில் இரு நாடுகளுக்கிடையிலான இணக்கம் தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக இலக்கவியல் அமைச்சர் தெரிவித்தார்.

28/05/2024

உண்மை...உண்மை...உண்மை...

Address


Alerts

Be the first to know and let us send you an email when DESAM TV Malaysia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DESAM TV Malaysia:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share