Mushfiq Roohullah

Mushfiq Roohullah 📖اِنْ اُرِيْدُ اِلَّاالْاِصْلَاحَ مَااسْتَطَعْتُ‌ وَمَا تَوْفِيْقِىْۤ اِلَّا بِاللّٰهِ‌ القرآن 11:88

💙 ❤️My page is a continuous charity for me, my family, and everyone who follows me. May God accept our good deeds. 💙 ❤
صفحتي صدقه جاريه لي ولاهلي ولكل من تابعني ربنا يتقبل منا صالح الأعمال💙 ❤️

إِن تُبْدُوا۟ ٱلصَّدَقَـٰتِ فَنِعِمَّا هِىَ ۖ وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا ٱلْفُقَرَآءَ فَهُوَ خَيْرٌۭ لَّكُمْ ۚ وَيُك...
01/05/2025

إِن تُبْدُوا۟ ٱلصَّدَقَـٰتِ فَنِعِمَّا هِىَ ۖ وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا ٱلْفُقَرَآءَ فَهُوَ خَيْرٌۭ لَّكُمْ ۚ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّـَٔاتِكُمْ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌۭ ٢ : ٢٧١

To give charity publicly is good, but to give to the poor privately is better for you, and will absolve you of your sins. And Allah is All-Aware of what you do.
Al Quran 2 : 271

Footnote -
Donations for a public cause may be done openly to encourage others to donate, whereas it is recommended to give charity to the poor secretly.

🥏WhatsApp Community : https://chat.whatsapp.com/KbmHeK8apH1JDdxSW7bDdt

♡ ㅤ ⎙ㅤ ⌲
ˡᶦᵏᵉ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ

┈┉┅━❥︎🤍❥︎━┅┉┈

゚viral

 #ஈத்_முபாரக்,  #பெருநாள்_வாழ்த்து_சொல்லலாமா?பெருநாள் தினத்தில் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் என்று சொல்லும் வழக்கம் சமுதா...
31/03/2025

#ஈத்_முபாரக், #பெருநாள்_வாழ்த்து_சொல்லலாமா?

பெருநாள் தினத்தில் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் என்று சொல்லும் வழக்கம் சமுதாயத்தில் பரவி வருகிறது. இது இஸ்லாத்தின் முக்கியமான ஒரு நபிவழி என்பது போல் மக்களால் கருதப்படுகிறது.

ஒருவர் தனது தாய்மொழியில் குர்ஆன், ஹதீஸுக்கு முரணில்லாத தனக்கு விருப்பமான சொற்களைப் பயன்படுத்தி துஆச் செய்யும் வகையில் வாழ்த்துவது தவறில்லை.

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்; மகிழ்ச்சியைத் தரட்டும் என்றெல்லாம் கூறுவதில் தவறு இல்லை.

ஆனால் குறிப்பிட்ட ஒரு சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துவது என்றால் அது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மட்டும் உள்ள அதிகாரமாகும்.

ஈத் முபாரக் என்ற சொல்லை நபி ﷺ அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட பயன்படுத்தியதில்லை. அவர்கள் பயன்படுத்தாத இச்சொல்லை அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதை ஒரு சுன்னத் போல் ஆக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

நபி ﷺ சொல்லித் தந்தவைகளை மட்டும் தான் அனைவரும் சுன்னத் என்ற அடிப்படையில் சொல்ல முடியும்.

ஒரு முஸ்லிமுக்காக துஆச் செய்யலாம் என்ற பொது அனுமதியின் அடிப்படையில் பெருநாள் தினத்திலும் துஆச் செய்யலாம். துஆச் செய்தல் என்பதை மனதில் கொண்டு வாழ்த்துக்கள் என்றோ வாழ்த்துகிறேன் என்றோ அல்லது மார்க்கத்துக்கு முரணில்லாத விருப்பமான சொற்களைக் கூறலாம்.

ஆனால் இது பித்அத்தாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு செயல் எப்போது பித்அத் என்ற நிலையை அடையும் என்பதை விளங்கிக் கொண்டால் தான் இதில் நாம் கவனமாக இருக்கலாம்.

நான் முஹர்ரம் மாதம் முதல் நாள் அன்று நோன்பு நோற்பதால் அனைவரும் அந்த நாளில் நோற்க வேண்டும் என்று ஒருவர் கூறினாலோ, அதை மற்றவர்கள் ஏற்றுச் செயல்படுத்தினாலோ அது பித்அத் ஆகி விடும்.

ஒருவர் தன்னளவில் தானாக விரும்பிச் செய்ய அனுமதி கொடுக்கப்பட்ட காரியத்தை தன்னோடு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். தான் செய்வதையே அனைவரும் செய்ய வேண்டும் என்று ஒருவர் கூறினால் அல்லாஹ்வின் தூதருடைய அதிகாரத்தைக் கையில் எடுத்தவராவார்.

ஒருவர் தான் விரும்பும் நாளில் நோன்பு நோற்கலாம் என்பதை ஒப்புக் கொள்ளும் நாம் மிஃராஜ், பராஅத் இரவுகளில் நோன்பு வைக்கக் கூடாது என்று கூறுகிறோம்.

இதற்குக் காரணம் என்ன? அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏற்படுத்தாமல் யாரோ ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வழக்கம் அனைவரும் செய்ய வேண்டும் என்ற நிலையை அடைந்து விட்டது தான் இதை பித்அத் என்று நாம் கூறுவதற்கான காரணம்.

அனைவரும் ஒரு காரியத்தை ஒரு குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டும் என்றால் அது வஹீயின் மூலம் மட்டுமே முடிவு செய்யப்பட வேண்டும்.

ஈத் முபாரக் என்பது எப்படி உள்ளது? அது பெருநாள் அன்று சொல்ல வேண்டிய ஒரு வார்த்தை. அது மார்க்கத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முகமன் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஒருவர் தானாக விரும்பி அந்த வார்த்தையின் அர்த்தத்துக்காகச் சொன்னால் அது பித்அத் ஆகாது. ஆனால் ஒவ்வொரு முஸ்லிமும் சொல்ல வேண்டியதாக அது மாறினால் அதுதான் பித்அத்.

எவரோ ஒருவர் உருவாக்கிய சொல் அல்லாஹ்வின் தூதர் கூறிய சொல்லுக்கு நிகரான இடத்தைப் பெற்று விடுகிறது. அல்லாஹ்வின் தூதருடைய இடத்தை மற்றவர்களுக்கு வழங்கும் இந்தப் போக்கு தான் அனைத்து பித்அத்துகளுக்கும் அடிப்படையாக உள்ளது.

ஈத் முபாரக் மட்டுமின்றி இன்னும் பல ஜும்ஆ முபாரக் போன்ற எந்தச் சொல்லுக்கும் இது தான் நிலை.

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுகிறோம் என்றால் அது அனைவராலும் ஒரே மாதிரியாகச் சொல்லப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் அப்படிக் கூறியதால் இது ஸுன்னத் ஆகிறது.

ஈத் முபாரக் என்று எவரோ வழக்கப்படுத்திய சொல்லை அனைவரும் குறிப்பிட்ட நாளில் சொல்ல வேண்டும் என்பது பித்அத் ஆகிவிடும்.

ஈத் முபாரக் என்பது பெருநாளுக்கான வாழ்த்து முறை என்று ஆக்கியது அல்லாஹ்வின் தூதர் அல்ல. நோன்பு வைப்பது நல்லது என்றாலும் மிஃராஜ் அன்று நோன்பு வைக்கச் சொன்னது அல்லாஹ்வின் தூதர் அல்ல. வேறு யாரோ ஏற்படுத்தியது என்பதால் தான் அது பித்அத் ஆகிறது. அது போல் தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

حدثنا يعقوب حدثنا إبراهيم بن سعد عن أبيه عن القاسم بن محمد عن عائشة رضي الله عنها قالت قال رسول الله ﷺ *من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد* رواه عبد الله بن جعفر المخرمي وعبد الواحد بن أبي عون عن سعد بن إبراهيم 2697

#இம்மார்க்கத்தில்_இல்லாத_ஒன்றை_யாரேனும்_உருவாக்கினால்_அது_ரத்துச்_செய்யப்படும்* என்பது நபிமொழி-

நூல் : புகாரி 2697

குறிப்பிட்ட சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்றில்லாமல் குறிப்பிட்ட நாளில் அதைச் சொல்லித் தான் ஆக வேண்டும் என்றில்லாமல் மார்க்கம் அனுமதித்துள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி பெருநாளிலோ மற்ற நாட்களிலோ துஆச் செய்தால் அது தவறில்லை.

13/01/2025

Al Quran
اَلَمْ يَرَوْا كَمْ اَهْلَـكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنْ قَرْنٍ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ مَا لَمْ نُمَكِّنْ لَّـكُمْ وَاَرْسَلْنَا السَّمَآءَ عَلَيْهِمْ مِّدْرَارًا وَّجَعَلْنَا الْاَنْهٰرَ تَجْرِىْ مِنْ تَحْتِهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَنْشَاْنَا مِنْ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِيْنَ‏

Have they not seen how many generations We destroyed before them which We had established upon the earth as We have not established you? And We sent [rain from] the sky upon them in showers and made rivers flow beneath them; then We destroyed them for their sins and brought forth after them a generation of others.
(Al Quran : 6:6)

அவர்களுக்கு, முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம், என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் உங்களுக்கு நாம் செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்கு நாம் செய்து தந்திருந்தோம், மேலும், அவர்களின் மீது தொடாச்சியாக மழை பொழியுமாறு நாம் செய்தோம், இன்னும், ஆறுகளை அவர்களுக்குக் கீழ் ஓடிக் கொண்டிருக்கும்படியாக நாம் ஆக்கினோம், ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை நாம் அழித்து விட்டோம், மேலும், அவர்களுக்குப் பின்னர் வேறு தலைமுறையினரை நாம் உண்டாக்கினோம்.
(அல்குர்ஆன் : 6:6)

🥏WhatsApp Community : https://chat.whatsapp.com/KbmHeK8apH1JDdxSW7bDdt

♡ ㅤ ⎙ㅤ ⌲
ˡᶦᵏᵉ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ

┈┉┅━❥︎🤍❥︎━┅┉┈
゚viral

இஸ்லாத்தின் பார்வையில் புத்தாண்டு கொண்டாட்டம்!புத்தாண்டுக் கொண்டாடுவதை இஸ்லாம் அனுமதித்துள்ளதா? என்பதை நாம் சிந்தித்துப்...
31/12/2024

இஸ்லாத்தின் பார்வையில் புத்தாண்டு கொண்டாட்டம்!

புத்தாண்டுக் கொண்டாடுவதை இஸ்லாம் அனுமதித்துள்ளதா? என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். கிரிஸ்தவர்கள் ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்த நாளை ஆண்டின் துவக்கமாக கருதுகிறார்கள். கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரமே உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மூலக் காரணியாக கிரிஸ்தவர்களின் இணைவைப்புக்கொள்கையே காரணமாக உள்ளது. எனவே புத்தாண்டு கொண்டாட்டம் கிரிஸ்தவர்களின் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால் இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஒப்ப நாம் நடக்கக்கூடாது.

حَدَّثَ نَا عُثْمَانُ بْنُ أَبِ شَيْبَة حَدَّثَ نَا أَبُو النَّضْرِ حَدَّثَ نَا عَبْدُ الرَّحَْْنِ بْنُ ثَابِتٍ حَدَّثَ نَا حَسَّانُ بْنُ عَطِيَّة عَنْ أَبِ مُنِيبٍ الُْْرَشِ ي عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّوِ صَلَّى اللَّو عَلَيْوِ وَسَلَّمَ مَنْ تَشَبَّو بِقَوْمٍ فَ هُوَ مِنْ هُمْ رواه أبو داود 3512

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு | நூல் : அபூதாவுத் (3512)

யூதர்களையும் கிரிஸ்தவர்களையும் பின்பற்றுவது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு எச்சரித்தார்கள்.

حَدَّ ث نََا سَعِيدُ بْنُ أَبِ مَرْيَ حَدَّث نََا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنِ زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِ سَعِيدٍ رَضِيَ اللَّو عَنْو أَنَّ النَّبَِّ صَلَّى اللَّو عَلَيْوِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَ بْ لَكُمْ شِبْ رًا بِشِبٍْ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّّ لَوْ سَلَكُوا جُحْرَ ضَ ب لَسَلَكْتُمُوه قُ لْنَا يَا رَسُولَ اللَّوِ الْيَ هُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ رواه البخاري 3456

அபூசயீத் அல்குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
“உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கள் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “வேறெவரை?” என்று பதிலளித்தார்கள்.
புகாரி (3456)

இஸ்லாத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உட்பட யாருடைய பிறந்த நாளுக்கும் எந்த மகத்துவமும் இல்லை. பிறந்தநாள் கொண்டாடுவதற்கு அனுமதி இல்லை. ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

மேலும் புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?
ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற மூட நம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.

இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களை தடைசெய்கின்றது.

மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக கருதிவந்தனர். இதை கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளக ஆக்கிக்கொள்ளுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

حَدَّثَ نَا مُوسَى بْنُ إِسَْْعِيلَ حَدَّثَ نَا حََّْادٌ عَنْ حَُْيْدٍ عَنْ أَنَسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللَّوِ صَلَّى اللَّو عَلَيْوِ وَسَلَّمَ الْمَدِينَة وَلََمُْ يَ وْمَانِ يَ لْعَبُونَ فِيهِمَا فَ قَالَ مَا ىَذَانِ الْيَ وْمَانِ قَالُوا كُنَّا نَ لْعَبُ فِيهِمَا فِ الَْْاىِلِيَّةِ فَ قَالَ رَسُولُ اللَّوِ صَلَّى اللَّو عَلَيْوِ وَسَلَّمَ إِنَّ اللَّو قَدْ أَبْدَلَكُمْ بِِِمَا خَيْ رًا مِنْ هُمَا يَ وْمَ الَْْضْحَى وَيَ وْمَ الْفِطْرِ رواه أبو داود 959

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள். (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன. அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களும் என்ன? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான். அவை ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்” என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (959)

புத்தாண்டு என்ற மேலைநாட்டுக் கலாச்சாரம் நம் நாட்டில் ஊடுறுவியதன் விளைவு அன்றைய நள்ளிரவில் விபச்சாரமும் மதுவும் தலைவிரித்து ஆடுகின்றது. பெண்கள் ஒழுக்கம் கெட்டு நடக்கின்ற கேவலமும் இந்நாளில் அரங்கேறுகின்றது. வானவெடிகள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நாசமாக்கப்படுகின்றது. இவ்வளவு அநாச்சாரங்களும் புத்தாண்டு என்ற பெயரிலேயே நடக்கின்றன. எனவே புத்தாண்டை நாம் புறக்கணிக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டம் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் என்பதால் அதற்காக வாழ்த்துச் சொல்வதும் கூடாது. புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறினால் புத்தாண்டை நாம் ஆதரித்த ஆகிவிடும்.

எனவே இஸ்லாத்திற்கு முரணான இதுபோன்ற கொண்டாட்டங்களை புறக்கணிப்போமாக.

#புத்தாண்டு

 #புத்தாண்டு                                      ゚viral
31/12/2024

#புத்தாண்டு ゚viral

28/10/2024

ஷஹாதத் கலிமாவை சரியாக நடைமுறைப் படுத்துவோர் யார்?

கலிமாவை எப்படி? எந்த சந்தர்ப்பத்தில் சொல்ல வேண்டும்?

(PART - 03)

நிகழ்த்துபவர் :
அமீர் அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) அவர்கள்

காலம் : 27. 07. 2024

இடம் : மஸ்ஜிதுல் முஸ்லிமீன், ஏத்தாளை

🥏WhatsApp Community ⛓️: https://chat.whatsapp.com/KbmHeK8apH1JDdxSW7bDdt

♡ ㅤ ⎙ㅤ ⌲
ˡᶦᵏᵉ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ

┈┉┅━❥︎🔊❥︎━┅┉┈

#கலிமாவை_சரியாக_நடைமுறைப்_படுத்துவோர்_யார் ゚viral #பைஅத்
Highlight

16/10/2024

#கலிமாவை_சரியாக_நடைமுறைப்_படுத்துவோர்_யார்?

(PART - 02)

நிகழ்த்துபவர் :
அமீர் அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) அவர்கள்

காலம் : 27. 07. 2024

இடம் : மஸ்ஜிதுல் முஸ்லிமீன், ஏத்தாளை

🥏WhatsApp Community ⛓️: https://chat.whatsapp.com/KbmHeK8apH1JDdxSW7bDdt

♡ ㅤ ⎙ㅤ ⌲
ˡᶦᵏᵉ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ

┈┉┅━❥︎🔊❥︎━┅┉┈
Highlight

16/10/2024

#கலிமாவை_சரியாக_நடைமுறைப்_படுத்துவோர்_யார்?

(PART - 01)

நிகழ்த்துபவர் :
அமீர் அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) அவர்கள்

காலம் : 27. 07. 2024

இடம் : மஸ்ஜிதுல் முஸ்லிமீன், ஏத்தாளை

🥏WhatsApp Community ⛓️: https://chat.whatsapp.com/KbmHeK8apH1JDdxSW7bDdt

♡ ㅤ ⎙ㅤ ⌲
ˡᶦᵏᵉ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ

┈┉┅━❥︎🔊❥︎━┅┉┈
゚viral

Highlight

 #மீலாது_விழாவும்,  #மீளாத_வழிகேடும்.அல்லாஹுத்தஆலா தனது திருமறைக் குர்ஆனில்: ''நம்முடைய தூதர் உங்களுக்கு கொடுத்ததை நீங்க...
16/09/2024

#மீலாது_விழாவும், #மீளாத_வழிகேடும்.

அல்லாஹுத்தஆலா தனது திருமறைக் குர்ஆனில்:

''நம்முடைய தூதர் உங்களுக்கு கொடுத்ததை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதைவிட்டும் உங்களை தடுத்தாரோ, அதைவிட்டும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (இவ்விஷயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவன்.''

(அல் குர்ஆன் - 59 : 07)

என்று அல்லாஹ், நபி ﷺ
அவர்கள் ஏவியதை மட்டும் எடுத்து செயல்படுத்த வேண்டும் என்றும். ஏவாத காரியங்கள் எதனையும்
புதிதாக ஏற்படுத்த கூடாது எனவும் எச்சரிக்கை செய்கிறான்.

ஆனால், இன்று நமது சமூகத்தில் பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையை
தகர்க்கக்கூடிய 'பித்அத்' (புதியசெயல்) மற்றும் 'ஷிர்க்' (இணைவைத்தல்) போன்ற காரியங்களை சர்வ சாதாரணமாகச் செய்து வருவதைக் காணமுடிகிறது.

நபி ﷺ அவர்களை கண்ணியப்படுத்துகிறோம் என்ற பெயரில் அவர்கள் பிறந்த மாதமான
ரபீஉல் அவ்வல் முதல் நாளிலிருந்து பள்ளிவாசல்கள் தோறும் மவ்லீது திரை இசை மெட்டில் பாடுவதும்
அம்மாதத்தின் 12-வது நாளை நபி ﷺ அவர்களின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுவதும், மார்க்கம்
தடுத்த காரியங்களாகும். பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது பிற மதத்தவர்களின் பழக்கமாகும்.

''யார் பிற மதத்தவரை பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல'' என நபி ﷺ அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

கிறித்துவர்கள் இறைத்தூதர் ஈஸா ﷺ அவர்களின் பிறந்த தினத்தை கிறிஸ்மஸ்ஸாகவும், பௌத்தர்கள் புத்தரின் பிறந்த தினத்தை புத்த பூர்ணிமாவாகவும், மகாவீரர் பிறந்த தினம் மகாவீரர் ஜெயந்தியாகவும், கிருஷ்ணன் பிறந்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி என்றும் கொண்டாடுவது போல உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று நிருபிக்கும் விதமாக 'மீலாது விழா' கொண்டாடுகிறார்கள்.

''உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாய
மக்களின் நடைமுறையை நீங்கள் பின்பற்றிகொண்டேயிருப்பீர்கள், அவர்கள் உடும்பின் பொந்தில் நுழைந்தால், அவ்வாறே நீங்களும் செய்வீர்கள் என நபி அவர்கள் கூறியதும், நபித்தோழர்கள் யூத, கிறிஸ்தவர்களையா? என்று கேட்டதற்கு வேறு யார்? என நபி ﷺ அவர்கள் பதிலளித்தார்கள். (முஸ்லிம்)

இது போன்ற செயல்களிலிருந்து ஒரு முஸ்லிம் விலகி இருக்க வேண்டும்
என நபி ﷺ அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

''நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை ஒருவன் புதிதாக உருவாக்கினால், அது
நிராகரிக்கப்பட வேண்டியதாகும்'' என நபியவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹ் புகாரி : 2697, ஸஹீஹ் முஸ்லிம் :1713)

''நம் கட்டளை இல்லாத ஒரு செயலை ஒருவன் செய்தால் அது நிராகரிக்கப்பட வேண்டும்'' (முஸ்லிம்)

இத்தகைய நபிமொழிகளுக்கு மாற்றமாக மார்க்கம் அனுமதிக்காத காரியங்களை ஒவ்வொரு
பள்ளிவாசல் நிர்வாகிகள், ஆலிம்கள் முன்னின்று நடத்துகிறார்கள்.

இதற்காக பொருளாதாரத்தையும்
செலவிடுகிறார்கள். இத்தகைய காரியங்களை செய்பவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்குகிறது.
இத்தகைய விழாக்களை கொண்டாடுபவர்களில் பலர் நபி ﷺ அவர்களின் நடைமுறைகளைப்
பின்பற்றுவதில்லை.
செய்தியில் சிறந்தது குர்ஆன், வழிகாட்டுதலில் சிறந்தது முஹம்மது நபியவர்களின் வழியாகும். மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உண்டுபண்ணுவது மிக மோசமான காரியமாகும்.
மார்க்கத்தில் இல்லாத எல்லா காரியங்களும் வழிகேடாகும், வழிகேடுகள் நம்மை நரகத்தின்பால் சேர்க்கும். அத்தகைய நிலையிலிருந்து விலகி யாரெல்லாம் நேர்வழியில் பயணிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் பாதுகாப்பானாக.

🥏WhatsApp : https://chat.whatsapp.com/KbmHeK8apH1JDdxSW7bDdt

Www.jmslk.com

♡ ㅤ ⎙ㅤ ⌲
ˡᶦᵏᵉ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ

┈┉┅━❥︎⚪️❥︎━┅┉┈

26/07/2024

என்ன mo ஷிஹாப்தீன் ஹாமி இப்படி செஞ்சிடியலே! "ஜமா அத்துல் முஸ்லிமீன் இல்லாவிட்டால் தான் எந்த பிரிவோடும் சேராமல் மரணம் வரும் வரை மரத்தின் வேரை கடித்து கொண்டாவது தனித்து இரு" என்று உங்க வாயாலயே ஹதீஸ் ஐ சொல்லிட்டு இப்ப பிரிவுகளோட போய் சேந்துடியலே! இது நியாயமா?? ஏன் இந்த போக்கு?? 💸

Follow us on:👇
YouTube
Channel : https://youtube.com/-channel
Facebook
page: https://www.facebook.com/ALFURQAAN?mibextid=ZbWKwL
Group: https://www.facebook.com/groups/499239927727742/?ref=share_group_link
Tiktok:
https://www.tiktok.com/?_t=8a9SEYHRPLF&_r=1

゚viral #நேர்வழி #இஸ்லாம் #பயான் #சத்தியம் ゚ Highlight
Mtm Live Telecast Jamaathul Muslimeen Hammadhmohamed Hammadh

 #தர்பிய்யா_மாநாடு. #இந்நிகழ்விற்கு_அனைவரையும்_அன்போடு_அழைக்கின்றோம்.🥏WhatsApp : https://chat.whatsapp.com/KbmHeK8apH1JD...
21/07/2024

#தர்பிய்யா_மாநாடு.
#இந்நிகழ்விற்கு_அனைவரையும்_அன்போடு_அழைக்கின்றோம்.

🥏WhatsApp : https://chat.whatsapp.com/KbmHeK8apH1JDdxSW7bDdt

♡ ㅤ ⎙ㅤ ⌲
ˡᶦᵏᵉ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when Mushfiq Roohullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share