Ceylon Flash News

Ceylon Flash News Fast | Accurate | Trusted

யார் இந்த துவான்கள்?කවුද මේ තුවාන්ලා?___________________________________துவான் முகமட் டில்ஷான் ஆடும்போது, அந்தா முஸ்லீம்...
06/13/2026

யார் இந்த துவான்கள்?

කවුද මේ තුවාන්ලා?
___________________________________
துவான் முகமட் டில்ஷான் ஆடும்போது, அந்தா முஸ்லீம் பொடியன் அடிக்கிறான், ப்ரிலியன்ட் கேட்ச் எடுக்கிறான், செம ஓல்ரவுண்ட் ப்ளே பண்றான்னு ஒருத்தரும் சொல்லிக் கேள்விப்படவில்லை. அவர் கிரிக்கெட் டீம்ல வரணும்னா முஸ்லீமாக அடையாளப்படுத்திக்க கூடாது னு அவர் சமயத்தை துறந்திருந்தார்னு கேள்விப்பட்டபோதிலும், இதோ இவன் இஸ்லாத்துக்கு மாறு செஞ்சிட்டான் இவன் பிராகாசிக்க கூடாதுன்னு எவரும் பிரார்த்திக்கவில்லை.

துவான் சுரேஷ் சலே என்பவர் ஆர்மியிலே நாட்டிற்காக போராடி உயர்தரங்களை அடைந்த போது, அவர் என்ன இனம் எந்த சமூகத்தார் என்று எவரும் தேடவில்லை.

ஒரு நாட்டிற்காக ஒருவர் தனது பணியை ஆற்றும்போது, ஒருவர் தனது தொழிலில் வளர்ச்சி பெறும்போது அவரது சமூக அடையாளங்களை வைத்து புகழப்படுவது தெற்காசியாவில்தான் பழக்கதோசமாக காணப்படுகின்றது.
அமேரிக்காவில் உப சனாதிபதியானாலும் மேயரானாலும் அவர் எங்கள் வம்சாவழி எங்கள் மதம் என மார்தட்டிக் கொள்கிறோம்.

மேலே நான் உதாரணம் காட்டிய இரண்டு துவான்களும் முஸ்லீம்களல்ல என்பதை தாண்டி உங்களுக்கு ஒரு விளக்கம் செல்கிறேன்.

துவான் சுரேஸ் சலே என்பவரது பெயரை வைத்து அவரது மதத்தை எடைபோடுவது மிகக் கடினமானது. மேலும் சலே என்பது சாலி என்பதன் மருவிய பெயர் என்று வாதிட்டால் சுரேஷ் என்பது அப்பட்டமான தமிழினப் பெயரல்லவா?

அதைவிட பிரதான விடயம்,
ஒருவர் பலனாய்வுத்துறையிலே (நிரந்தர) பணியிலே ஈடுபடுத்தப்படுகின்றபோது, அவரது தனிப்பட்ட அடையாளங்களை அழித்துவிடுவது வழமை. இதனை இந்திய மற்றும் ஹாலிவுட் சினிமாக்களில்கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அதையும் தாண்டி, அவர் முஸ்லீம் என்று வாதிட்டால், ஒன்றை வைத்து அவ்வாறிருக்க முடியாது என்று நான் வாதிடுவேன்.

இலங்கை வரலாற்றில் எவ்வாறு ஒரு முஸ்லீம் சனாதிபதி /பிரதமர் /பாதுகாப்பு அமைச்சர் /இராணுவத்தளபதியாக வரமுடியாதோ அதைவிட கடினமான விஷயம்தான் புலனா‌ய்வு பிரிவு தலைவராக வர முடியாது.

இது இந்திய, பாக்கிஸ்தானிய, சீன அமேரிக்க புலனா‌ய்வு அமைப்புகளுடன் தொடர்பை பேணுகிற மிகப்பெரிய பொறுப்பு. இந்த பதவியில் இலங்கையில் ஒரு முஸ்லீம் இருப்பதை இந்தியா சகித்துக்கொள்ளாது.
அதுவும் இப்படிப்பட்ட சதிகளை செய்கிறதாக நம்பப்பட்ட ஒருத்தர் பாக்கிஸ்தானுக்கு விலைப்போக கூடும் என்று "ரோ" அறியாதிருக்காது. ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிவித்த அமைப்பு ரோ ஆகும்.

அதே நேரம் இலங்கை நாடு இன்னும் சிறுபான்மையினரை உச்ச பதவிகளில் நம்பும் அளவுக்கு வளரவில்லை. அந்த நம்பிக்கை இந்த அநுர அரசாங்கத்தில்கூட இன்னும் இல்லையென்றால், இனவாதக் கப்பல் கோட்டா, மஹிந்த முஸ்லீமை நம்பியிருக்க வாய்ப்பிருக்கிறதா?

இல்லவே இல்லை.

ஆக இதுவரை காலும் முஸ்லீம்கள் நாட்டிற்கு பெரும் சாபமாக காண்பித்த அதே இனவாதக் கும்பல் இப்போது,
இர‌ண்டு விதமாக தெற்கையும் முஸ்லீம்களையும் சீண்டிவிடுகிறார்கள்.

1. ஒன்று - சலே முஸ்லீம் என்பதால் அநுர அரசு அவரை குறிவைக்கிறது
2. இரண்டு - சலேயும் முஸ்லீம்தான் சஹ்ரானும் முஸ்லீம்தான். ஆக இது ஒட்டுமொத்த முஸ்லீம்சார் நாசகார வேலை.

எம்மைப் பொருத்த வரை ஒரு துவான் (டில்சான்) நாட்டுக்கு பெயர்பெற்று தந்தவர்.
மற்றைய துவான் (சுரேஷ் சலே) நாட்டில் மனிதப்பேரவலத்தை ஏற்படுத்த துணை போனவராக குற்றஞ்சாட்டப்பட்டவர்.

அவ்வளவுதான்!

இவர்களிடம் மதம் சார்பாக பீற்றிக்கொள்ள எந்த ஆன்மீக சாதனைகளோ மானுட பண்புகளோ இருப்பதாக தகவல்களில்லை.

எனவே,

ஒருவரின் சமூக/மத அடையாளத்தை வைத்து அவரை புகழவும் குற்றம்சாட்டவும் கூடாது. நாட்டுக்கு சேவை செய்தவரும், நாட்டுக்கு தீங்கு செய்ததாக குற்றஞ்சாட்டப்படுபவரும் அவர்களின் செயல் அடிப்படையில்தான் மதிப்பிடப்பட வேண்டும்; மதம் அல்லது இன அடையாளத்தின் அடிப்படையில் அல்ல.”


තුවාන් මොහොමඩ් ඩිල්ෂාන් ක්‍රීඩා කරන විට, "අන්න අර මුස්ලිම් කොල්ලා ගහනවා, සුපිරි කැච් එකක් ගත්තා, නියම ඕල්රවුන්ඩ් ප්ලේ එකක් දානවා" කියලා කවුරුවත් කියනවා අහලා නැහැ. ඔහුට ක්‍රිකට් කණ්ඩායමට එන්න නම් තමන්ව මුස්ලිම්වරයෙකු ලෙස හඳුන්වා නොගත යුතු යැයි පවසමින් ඔහු ආගම අතහැර දැමූ බවට කටකතා ඇසුණද, "මෙන්න මෙයා ඉස්ලාම් දහමට ද්‍රෝහී වුණා, මෙයාට බැබළෙන්න ලැබෙන්න එපා" කියලා කවුරුවත් ප්‍රාර්ථනා කළෙත් නැහැ.
තුවාන් සුරේෂ් සාලේ නමැත්තා හමුදාවේ සිට රට වෙනුවෙන් සටන් කර ඉහළ තනතුරුවලට පත්වන විට, ඔහු කවුද, කුමන ජාතියකද, කුමන සමාජයකද කියා කිසිවෙක් සෙව්වේ නැහැ.
කෙනෙකු රටක් වෙනුවෙන් තම සේවය ඉටුකරන විට හෝ තමාගේ වෘත්තියේ දියුණුවක් ලබන විට, ඔහුව සමාජ අනන්‍යතාවය මත පදනම්ව අගය කිරීම දකුණු ආසියාවේ දක්නට ලැබෙන සුපුරුදු පුරුද්දකි.
ඇමරිකාවේ උප ජනාධිපතිවරයෙකු හෝ නගරාධිපතිවරයෙකු වුවද, ඔහු අපේ වංශයේ, අපේ ආගමේ කියා අපි පපුවට ගසා ගනිමු.
මා ඉහත උදාහරණ ලෙස දැක්වූ තුවාන්ලා දෙදෙනාම මුස්ලිම්වරුන් නොවන බවට එහා ගිය පැහැදිලි කිරීමක් මම ඔබට දෙන්නෙමි.
තුවාන් සුරේෂ් සාලේ යන නම දෙස බලා ඔහුගේ ආගම තීරණය කිරීම ඉතා අපහසුය. තවද 'සාලේ' යන්න 'සාලි' යන්නෙන් බිඳී ආවක් යැයි තර්ක කළහොත්, 'සුරේෂ්' යනු පැහැදිලිවම දෙමළ නමක් නොවේද?
ඊටත් වඩා ප්‍රධානම කරුණ නම්,
කෙනෙකු බුද්ධි අංශයේ (ස්ථිර) සේවයේ යොදවන විට, ඔහුගේ පෞද්ගලික අනන්‍යතාවයන් මකා දැමීම සාමාන්‍ය සිරිතකි. මෙය ඔබ ඉන්දියානු සහ හොලිවුඩ් සිනමාපටවල පවා දැක ඇතිවාට සැක නැත.
එයින් එහාට ගොස් ඔහු මුස්ලිම්වරයෙකු යැයි කවුරුන් හෝ තර්ක කරන්නේ නම්, එක් කරුණක් මුල් කරගෙන එය එසේ විය නොහැකි බව මම තර්ක කරමි.
ලංකා ඉතිහාසයේ මුස්ලිම්වරයෙකුට ජනාධිපති / අගමැති / ආරක්ෂක ඇමති / හමුදාපති විය නොහැක්කා සේම, ඊටත් වඩා අපහසු කාර්යයක් වන්නේ බුද්ධි අංශ ප්‍රධානියා වීමයි.
මෙය ඉන්දියානු, පකිස්ථානු, චීන සහ ඇමරිකානු බුද්ධි ආයතන සමඟ සබඳතා පවත්වන විශාල වගකීමකි. මෙම තනතුරේ ලංකාවේ මුස්ලිම්වරයෙකු සිටීම ඉන්දියාව කිසිසේත් ඉවසන්නේ නැත.
එසේම මෙවැනි කුමන්ත්‍රණ සිදුකරන බවට විශ්වාස කෙරෙන අයෙකු පකිස්ථානයට මුදලට ගැති විය හැකි බව "රෝ" (RAW) සංවිධානය නොදැන සිටින්නේ නැත. පාස්කු ප්‍රහාරය පිළිබඳව කල්තියා අනතුරු ඇඟවූයේද 'රෝ' සංවිධානයයි.
එමෙන්ම ලංකාව තවමත් සුළුතර ජාතීන්ව මෙවැනි ඉහළම තනතුරුවලට පත් කර විශ්වාස කරන තරමට දියුණු වී නැත. එම විශ්වාසය මේ අනුර රජය තුළ පවා තවමත් නොමැති නම්, ජාතිවාදී නැවක් වූ ගෝඨාභය හෝ මහින්ද මුස්ලිම්වරයෙකුව විශ්වාස කිරීමට ඉඩක් තිබේද?
කොහෙත්ම නැත.
එසේ නම්, මෙතෙක් කල් මුස්ලිම්වරුන් රටට මහා ශාපයක් ලෙස පෙන්වූ එම ජාතිවාදී කල්ලියම දැන් දෙයාකාරයකින් දකුණේ ජනතාව සහ මුස්ලිම්වරුන්ව කුලප්පු කරමින් සිටිති.
1. **පළමුවැන්න -** සාලේ මුස්ලිම් නිසා අනුර රජය ඔහුව ඉලක්ක කරන බව පැවසීම.
2. **දෙවැන්න -** සාලේත් මුස්ලිම්, සහ්රානුත් මුස්ලිම්. එබැවින් මෙය සමස්ත මුස්ලිම්වරුන්ගේම විනාශකාරී ක්‍රියාවක් බව පැවසීම.
අපට අනුව, එක් තුවාන් කෙනෙකු (ඩිල්ෂාන්) රටට කීර්තියක් අත්කර දුන් අයෙකි.
අනෙක් තුවාන් (සුරේෂ් සාලේ) රට තුළ මහා මිනිස් ඛේදවාචකයක් ඇති කිරීමට අනුබල දුන් බවට චෝදනා ලැබූ අයෙකි.
එපමණයි!
ඔවුන් සතුව ආගමික වශයෙන් උදම් ඇනීමට තරම් කිසිදු අධ්‍යාත්මික ජයග්‍රහණයක් හෝ මානුෂීය ගුණාංගයක් ඇති බවට තොරතුරු නැත.
එබැවින්,
> "කෙනෙකුගේ සමාජ හෝ ආගමික අනන්‍යතාවය දෙස බලා ඔහුව අගය කිරීමට හෝ ඔහුට චෝදනා කිරීමට නොකළ යුතුය. රටට සේවය කළ තැනැත්තා සහ රටට හානි කළ බවට චෝදනා ලැබූ තැනැත්තා ඇගයිය යුත්තේ ඔවුන්ගේ ක්‍රියාවන් මත පදනම්ව මිස, ආගමික හෝ ජාතික අනන්‍යතාවය මත පදනම්ව නොවේ."

Thanks to the rightful owner. ✍🏻

06/12/2026

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வழக்கம்போல் செயல்படுகிறதா, அல்லது தற்போது ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் பதிவாகியுள்ளனவா?

அக்கரைப்பற்று பிரதேச சபையில்  #ஈஸ்டர் தாக்குதல் விசாரணை குறித்து வலியுறுத்தல்அக்கரைப்பற்று பிரதேச சபையின் மாதாந்த சபைக் ...
06/12/2026

அக்கரைப்பற்று பிரதேச சபையில் #ஈஸ்டர் தாக்குதல் விசாரணை குறித்து வலியுறுத்தல்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் மாதாந்த சபைக் கூட்டம் நேற்று ( 11/06/2026) புதன் கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் L. Muzadiq, #ஈஸ்டர் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்க்கப்பட்ட இனவெறி தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்பாக முழுமையான மற்றும் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அண்மையில் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முன்னாள் மாநில புலனாய்வு சேவை (SIS) தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட விசாரணை முன்னேற்றங்களை வரவேற்ற அவர், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அனைத்து பிரதான சூத்திரதாரிகளையும் அடையாளம் கண்டு கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், உண்மையை வெளிக்கொணரும் நோக்கில் அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளுக்காக நாட்டின் ஜனாதிபதிக்கும் அவரது குழுவினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் வரையில் விசாரணைகள் தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் அப்பாவி முஸ்லிம் மக்கள்மீது முன்னெடுக்கப்பட்ட இனவெறி மற்றும் மதவெறி தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்பிலும் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு, பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இன, மத வேறுபாடுகளைத் தாண்டி உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டும் செயற்பாடுகளே நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியமானவை எனவும் அவர் தெரிவித்தார்.

~Admin ~

உலக மேடையில் கெத்து காட்டிய மாத்தளை சிறுவன்! 12 நாடுகளை அதிரவைத்து இலங்கைக்கு மகுடம்! 🏆🇱🇰நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு வரலாற...
06/12/2026

உலக மேடையில் கெத்து காட்டிய மாத்தளை சிறுவன்! 12 நாடுகளை அதிரவைத்து இலங்கைக்கு மகுடம்! 🏆🇱🇰

நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு வரலாற்றுச் சாதனை! தடைகளையும் சவால்களையும் உடைத்தெறிந்து, மலேசிய மண்ணில் நமது இலங்கைச் சிறுவன் உலக அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்! 💥

மலேசியாவின் புகழ்பெற்ற ஜென்டிங் (Genting) நகரில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டியில் (Abacus & Mental Arithmetic Competition), இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி களம் இறங்கிய மாத்தளை மண்ணின் மைந்தன் செல்வன் எஸ். லபிஷாசன் இரண்டு வெவ்வேறு போட்டி நிகழ்வுகளிலும் உலக அளவில் 2-ஆம் இடத்தைப் பிடித்து தாயகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்! 🥈✨

வறுமைக்கும் சவால்களுக்கும் கொடுத்த ‘சாட்டையடி’ பதில்!

"மலையக மக்கள், கூலித் தொழிலாளர்கள், உரிமையற்றவர்கள், உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ்பவர்கள்..." - இப்படிச் சுற்றியிருந்த அத்தனை வலிகளையும், தடைகளையும் உடைப்பதற்கான ஒரு ஆயுதமாகத்தான் கல்வி அமைந்திருக்கிறது. எங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சிறிய வாய்ப்பும், உலகிற்கு எங்களை நிரூபிக்கக் கிடைக்கும் மாபெரும் யுத்தக் களம்!

அதைத்தான் இன்று லபிஷாசன் செய்து காட்டியுள்ளார். இந்த வெற்றி வெறும் ஒரு பதக்கம் மட்டுமல்ல; நாளை மலையகச் சமூகம் அடையப்போகும் பேராற்றலின் மற்றும் எழுச்சியின் ஆகச்சிறந்த அடையாளம்!

🧠 யார் இந்த ‘சூப்பர் கிட்’ லபிஷாசன்? 👇
⭕சொந்த ஊர் - மாத்தளை, மண்டந்தாவெல பகுதி.
👨‍👩‍👦 பெற்றோர் - சுகந்தன் – சசிரேகா தம்பதியினரின் அருமைப் புதல்வர்.
🏫 கல்வி - மாத்தளை ஹார்வர்ட் சர்வதேச பாடசாலையின் (Harvard International School) தரம் 4 மாணவன்.
⭐ விசேஷம் - மிகக் குறுகிய காலப் பயிற்சியிலேயே, கணினியையும் மிஞ்சும் வேகத்தில் கணக்குகளைப் போட்டு 12 உலக நாடுகளின் மாணவர்களைப் பின்னுக்குத் தள்ளி இந்த இமாலய சாதனையைப் படைத்துள்ளார்! 💥

மாத்தளை மாவட்டத்திற்கும், மத்திய மாகாணத்திற்கும் மட்டுமன்றி, ஒட்டுமொத்த இலங்கைக்கே முன்மாதிரியாகத் திகழும் தம்பி லபிஷாசனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்!

நீங்களும் உங்களது வாழ்த்துகளை கமெண்ட்டில் பதிவு செய்து, இந்தச் சாதனைச் செய்தியை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்குப் பகிருங்கள்!

🔥

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையும் முஸ்லிம் சமூகமும்...•எம். ஐ. ஸாஹிர்•ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பது பலர...
06/11/2026

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையும் முஸ்லிம் சமூகமும்...

•எம். ஐ. ஸாஹிர்•

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பது பலருக்கும் தெரிந்த ஒரு திறந்த இரகசியமாக (Open Secret) உள்ளது. ஆனால், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலமே நீதியை நிலைநாட்ட முடியும்.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை சட்டத்தின் முன் நிறுத்துவது எந்தளவு சாத்தியமானது என்ற சந்தேகம் இருந்தாலும், சுரேஷ் சாலேயின் கைது ஒரு வகை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கட்ட விசாரணைகள் உண்மையான குற்றவாளிகளை நோக்கிச் செல்லும் என்பதால், பல தரப்பினர் இந்த விசாரணைகளை குழப்பும் வகையில் செயற்படுவதாகத் தோன்றுகிறது.

இந்த நிலையில், முஸ்லிம் சமூகம் அமைதியாக இருந்து பார்வையாளராக இருக்காமல், ஈஸ்டர் தாக்குதலுக்கான நீதியைக் கோருவதில் முன்னணியில் நிற்க வேண்டும்.

நாம் கோர வேண்டிய நீதி மூன்று வகையானது:

✅ பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.

✅ குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டு, முழு சமூகமும் சந்தேகத்தின் கூண்டில் நிறுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கும் நீதி கிடைக்க வேண்டும்.

✅ அரசியல் அதிகாரத்திற்காக நாட்டின் பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் இன நல்லுறவை சீரழித்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

எனவே, முஸ்லிம் சமூகத்திற்கான நீதியை மட்டும் கோராமல், மேற்கண்ட மூன்று நீதிகளையும் ஒருசேர வலியுறுத்த வேண்டும்.

அனுர அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும். அதற்கான கலந்துரையாடல்களை முஸ்லிம் சிவில் சமூகமும், ஆன்மீகத் தலைமைகளும் அவர்களுடன் மேற்கொள்ள வேண்டும்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும், முஸ்லிம் சிவில் அமைப்புகளும் தேசிய ஊடகங்களில் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து ஊடக மாநாடுகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அதேபோன்று, முஸ்லிம் பிரதேசங்களில் ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் அமைதியான முறையில் துஆ பிரார்த்தனைகள் அல்லது அமைதிப் பேரணிகள் மூலம் ஈஸ்டர் தாக்குதலுக்கான நீதியை வலியுறுத்த வேண்டும்.

இந்தச் செய்தி, முஸ்லிம் சமூகம் எந்தவொரு பயங்கரவாதத்தையும் ஆதரிக்கவில்லை என்பதையும், உண்மை மற்றும் நீதியின் பக்கமே நிற்கிறது என்பதையும் இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் தெளிவாக எடுத்துச் செல்லும்.

நீதி இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது.

மக்கள் கருத்துக் கணிப்பு!அடுத்தது யாராக இருக்கும்?இன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சரணவிற்கு 16 வருடங்கள் கடூழிய சிறைத் ...
06/09/2026

மக்கள் கருத்துக் கணிப்பு!

அடுத்தது யாராக இருக்கும்?

இன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சரணவிற்கு 16 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தற்போது மொட்டு கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் நான்கு பேரும், தலைவர்களில் ஒருத்தரும் வெலிகடை சிறைச் சாலையை ஆட்சி செய்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  இலஞ்ச - ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தன குற்றவாளி என கொ...
06/09/2026



இலஞ்ச - ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்
தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு.!!

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தன மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில் அவர் குற்றவாளி என கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு, 2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்தபோது, நிறுவனத்திற்காக வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெறும் செயல்முறையில் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்
தாக்கல் செய்த வழக்காகும்.

தண்டனை பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

06/09/2026

வீடியோ: நிக்கவnரட்டியpல் உள்ள ரன் ஹிரு வன்பொருள் கிடங்கின் முன்பாக இடம்பெற்ற கோர விபத்து.

06/04/2026

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்தவர்களில் 03 இலங்கை பிரஜைகளும் அடங்குவதாக குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் தெரிவிப்பு

Address

Ottawa
Ontario, CA
K0G0A0

Alerts

Be the first to know and let us send you an email when Ceylon Flash News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ceylon Flash News:

Share