Thagadur

Thagadur News and Media
Computer Sales & Services

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருக்கும் முந்த்வா என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தின்...
07/11/2025

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருக்கும் முந்த்வா என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். இந்த நிலம் சமீபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் மகன் பார்த் பவார் பங்குதாரராக இருக்கும் அமேடியா எண்டர்பிரசைசஸ் என்ற நிறுவனத்திற்கு ரூ.300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் நிலம் விற்பனை செய்யப்பட்டபோது அதற்கு முத்திரை தீர்வையாக ரூ.21 கோடி செலுத்தி இருக்க வேண்டும். அந்த 21 கோடியும் அஜித்பவார் மகனிடம் வாங்கவில்லை. அந்த தொகையை பதிவாளர் தள்ளுபடி செய்துள்ளார். 300 கோடிக்கு பதிவு செய்ததற்கு முத்திரை தீர்வையாக வெறும் ரூ.500 மட்டுமே பெறப்பட்டுள்ளது....

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருக்கும் முந்த்வா என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த ....

‘கட்சியில் எனக்கும் மன வருத்தம் உண்டு’ என்கிற பொருள்பட, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது, கட்சிக்குள் சலசலப...
07/11/2025

‘கட்சியில் எனக்கும் மன வருத்தம் உண்டு’ என்கிற பொருள்பட, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது! எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தேவர் ஜெயந்தி அன்று ஓ.பி.எஸ் - டி.டி.வி தினகரனுடன் இணைந்து சென்று எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க-விலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதாக அறிவித்தார் கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி. இது குறித்து 3-11-2025 அன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “யாராக இருந்தாலும் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். எனக்கும் மன வருத்தங்கள் உண்டு......

‘கட்சியில் எனக்கும் மன வருத்தம் உண்டு’ என்கிற பொருள்பட, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது, கட்சிக....

EPS-க்கு எதிராக திரளும் முன்னாள் அமைச்சர்கள் | Pugazhenthi Interview | ADMK
07/11/2025

EPS-க்கு எதிராக திரளும் முன்னாள் அமைச்சர்கள் | Pugazhenthi Interview | ADMK

Visit the post for more.

சமீபத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் மகளிர் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. அணியின் முக்கிய வீர...
07/11/2025

சமீபத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் மகளிர் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. அணியின் முக்கிய வீரரான சென்னை, கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா இந்தச் சாதனைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார். திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்தியும் பரிசுகளை வழங்கியும் வருகின்றனர். கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா அந்த வகையில் நேற்றைய தினம் (நவம்பர் 6) இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கண்ணகி நகர் சென்று கார்த்திகா மற்றும் குழுவினரை வாழ்த்தியுள்ளார். ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியதாகக் கூறப்படுகிறது....

சமீபத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் மகளிர் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. அணியின் ம...

கடந்த சில நாள்களுக்கு முன்பு செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் , அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி. ...
07/11/2025

கடந்த சில நாள்களுக்கு முன்பு செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் , அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்டோரும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையத்தில் இன்று( நவ.7) செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். ``பழனிசாமியின் குடும்பத்தினரே கட்சியை நடத்துகிறார்கள். அதிமுக ஆட்சியை பாதுகாத்த பாஜகவுடனான கூட்டணியை எடப்பாடி முறியடித்தார். அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக பேசத்தான் பாஜக என்னை அழைத்தது. ஒருங்கிணைப்பு குறித்து பேசியபோது பழனிசாமி என்ன வார்த்தைகள் கூறினார் என்று எனக்கு தெரியும்....

கடந்த சில நாள்களுக்கு முன்பு செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் , அவரது ஆதரவாளர்களான முன்ன.....

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் வசித்து வருபவர் விசாலாட்சி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். விசாலாட்சியின் கணவர் சரவணன் ர...
07/11/2025

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் வசித்து வருபவர் விசாலாட்சி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். விசாலாட்சியின் கணவர் சரவணன் ரெங்கநாதன், தனியார் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான பாலிசியை கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி எடுத்திருந்தார். அதற்கான முதல் ஆண்டு பிரீமியமாக ரூ.7,425-ஐ அவர் செலுத்தியிருந்தார். இந்த பாலிசி 2015, ஜூலை 1-ம் தேதி முதல் 2016, ஜூலை 1-ம் தேதி வரை அமலில் இருந்தது. இந்த நிலையில், சரவணன் ரெங்கநாதன் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனது காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார்....

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் வசித்து வருபவர் விசாலாட்சி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். விசாலாட்சியின் கணவர...

Vijay-ன் முடிவு, EPS-டம் வருத்தப்பட்ட மாஜிக்கள், Stalin-ன் ‘நெல்லை’ பிளான்! | Elangovan Explains
07/11/2025

Vijay-ன் முடிவு, EPS-டம் வருத்தப்பட்ட மாஜிக்கள், Stalin-ன் ‘நெல்லை’ பிளான்! | Elangovan Explains

Visit the post for more.

* இந்திய வாக்காளர் பட்டியலில் 22 முறை இடம்பெற்ற தனது படத்தால் அதிர்ச்சி அடைந்த பிரேசிலிய மாடல் லாரிசா * வாக்குத் திருட்ட...
07/11/2025

* இந்திய வாக்காளர் பட்டியலில் 22 முறை இடம்பெற்ற தனது படத்தால் அதிர்ச்சி அடைந்த பிரேசிலிய மாடல் லாரிசா * வாக்குத் திருட்டு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன? * "ஹரியானா தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெரும் முறைகேடு; இதுவே ஆதாரம்'' - காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி * பீகார் தேர்தல் அப்டேட்ஸ்? * நாளை வாக்குப்பதிவு.. பாஜகவில் இணைந்த ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்! * மகளிர் உதவித்தொகை: ரூ. 1.68 லட்சம் கோடி கொடுக்கும் 12 மாநிலங்கள் - எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி …...

* இந்திய வாக்காளர் பட்டியலில் 22 முறை இடம்பெற்ற தனது படத்தால் அதிர்ச்சி அடைந்த பிரேசிலிய மாடல் லாரிசா* வாக்குத் .....

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசின் அனுமதி பெறா...
07/11/2025

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசின் அனுமதி பெறாமல் ஒரு செங்கலைக்கூட மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசு எடுத்து வைக்க முடியாது. கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சம்பவ இடத்தில் ஒரு நிமிடம் கூட நிற்காமல், அவரது வீட்டில் போய் அமர்ந்து கொண்டவர் நடிகர் விஜய். இதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு முதல்வரிடம் குறுகிய எண்ணம் கிடையாது.தொலைநோக்குப் பார்வை உள்ளது. ஒருவரை தண்டிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்திருந்தால், அன்றே அவரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்....

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசின் அ...

சீன அதிபர் ஜி ஜின்பிங் வாய்விட்டு சிரிப்பது மிகவும் அரிதானது. ஏனெனில், கடினமான மற்றும் தீவிரமான அரசியல் தலைவர் என்ற நற்ப...
07/11/2025

சீன அதிபர் ஜி ஜின்பிங் வாய்விட்டு சிரிப்பது மிகவும் அரிதானது. ஏனெனில், கடினமான மற்றும் தீவிரமான அரசியல் தலைவர் என்ற நற்பெயரை உருவாக்க, சீன அரசு மற்றும் அதன் ஊடகங்கள் கடுமையாக செயல்பட்டுள்ளன. தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்தார். இந்த இருதரப்பு சந்திப்பில் சோயாபீன்கள், ஃபெண்டானில், அரிய தாதுக்கள் மற்றும் கணினி சிப்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. Xi Jinping - Trump Meeting இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட புகைப்படங்கள், ஜி ஜின்பிங்கின் ஒரு புதிய முகத்தை வெளிப்படுத்தியுள்ளன....

சீன அதிபர் ஜி ஜின்பிங் வாய்விட்டு சிரிப்பது மிகவும் அரிதானது. ஏனெனில், கடினமான மற்றும் தீவிரமான அரசியல் தலைவர்...

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த பெரியம்மா மற்றும் பாவாயி ஆகிய இரண்டு பேரையும் ...
07/11/2025

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த பெரியம்மா மற்றும் பாவாயி ஆகிய இரண்டு பேரையும் கடந்த 03.11.2025 தேதியில் இருந்து காணவில்லை என மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், 04.11.2025 அன்று காலை தூதனூர் காட்டுளவில் உள்ள கல் குவாரியில் சடலம் மிதப்பதாக அந்தப் பக்கம் சென்றவர்கள் மகுடஞ்சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்த பின்னர் ஆட்டையாம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கல்குவாரியில் மிதந்த சடலத்தை மீட்டு பார்த்தபோது ஆடு மேய்க்கும் பெரியம்மா என்பது தெரிய வந்தது....

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த பெரியம்மா மற்றும் பாவாயி ஆகிய இரண்.....

கோவை விமான நிலையம் அருகே இளம் பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சிய...
07/11/2025

கோவை விமான நிலையம் அருகே இளம் பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை இருகூர் அருகே அத்தப்பகவுண்டன்புதூரில் தீபம் நகர் என்ற பகுதி உள்ளது. கார் கடத்தல் அங்கு நேற்று மாலை 6.30 மணியளவில் ஹூண்டாய் i20 கார் நின்றிருந்தது. அந்த வழியாக இரண்டு பெண்கள் நடந்து வந்தனர். அவர்களை பின்தொடர்ந்த கார், அதில் இருந்த இளம் பெண்ணை அடித்து துன்புறுத்தி, வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பெண்ணை அலறல் சத்தத்துடன் ஏற்றி கார் புறப்பட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

கோவை விமான நிலையம் அருகே இளம் பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் ...

Address

Dharmapuri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thagadur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share