CUT PASTE

CUT PASTE Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CUT PASTE, News & Media Website, .

End of an Era 💔
08/09/2022

End of an Era 💔

30/03/2021

ஏன்டா நீ தானே பெரியார் தன் மகளையே கல்யாணம் பண்ணிக்கிட்டார்னு சொன்ன, கலைஞருக்கு மூனு பொண்டாட்டினு சொன்ன, ராஜா-கனிமொழிய பத்தி தப்பா பேசின..

இப்ப திடீர்னு வந்து.. பெண்மை, தாய்மைனு பேசிட்டு இருக்கியே..
ஓட்டு வேணும்னா இப்படியாடா? எப்பா டேய்..

டேய் பெரிய கொய்யா! வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு 1987ல் நீங்க போராடியது எந்த ஆட்சியில ?எம்ஜியார் ஆட்சில..துப்பாக்க...
02/12/2020

டேய் பெரிய கொய்யா!
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு 1987ல் நீங்க போராடியது எந்த ஆட்சியில ?

எம்ஜியார் ஆட்சில..

துப்பாக்கிச்சூடு நடத்திய பலர் கொல்லப்பட்டது எந்த ஆட்சியில ?

எம்ஜியார் ஆட்சில

1989ல் உங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது யாரு ?

கலைஞர்

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகை கொடுத்து, போராட்டம் நடத்தியவர்கள் மீதிருந்த வழக்குகளை வாபஸ் வாங்கியது யாரு ?

கலைஞர்

கடந்த மூன்று தேர்தலில் யாரு கூட கூட்டணி வெச்சிருக்க ?

பாஜக அதிமுக கூட

மத்திய மாநிலத்தில் யாரு ஆட்சியில் இருக்கா ?

பாஜக அதிமுக..

வர்ர சட்டமன்ற தேர்தலில் யாருகூட கூட்டணி ?

பாஜக அதிமுக கூட..

இப்ப இட ஒதுக்கீடு போராட்டம் யாருக்கு எதிரா பண்ற ?

யாருக்கோ..

😜
15/11/2020

😜

  #சனாதனத்தின்_நேர்எதிரி_drதிருமா #பெண்ணுரிமை_போராளி_திருமா
24/10/2020



#சனாதனத்தின்_நேர்எதிரி_drதிருமா

#பெண்ணுரிமை_போராளி_திருமா

நான் ஏன் புத்தரை நோக்கிப் போகிறேன் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். (அம்பேத்கர் புத்த மதத்துக்கு மாறியபோது ஆற்றிய உரை. தி இந்...
17/10/2020

நான் ஏன் புத்தரை நோக்கிப் போகிறேன் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.

(அம்பேத்கர் புத்த மதத்துக்கு மாறியபோது ஆற்றிய உரை. தி இந்து நாளிதழில் வெளியானது)

“மதம்மாறுவதற்கு நாக்பூரைத்தேர்ந்தெடுத்த
காரணம் என்ன? ஆர்.எஸ்.எஸ். தலைமையகம்இருப்பதாலா?” என்று நிறைய பேர்என்னைக் கேட்கிறார்கள். இந்தநகரத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு உண்மையான காரணம் அதுவல்ல. ஆரியர்களை எதிர்த்துப் போராடியநாகர்களின் பூமி இது என்றுபுராணங்கள் கூறுகின்றன. ஆரியர்களிடமிருந்து ஒரே ஒரு நாகர்மட்டும் தப்பிக்க அகஸ்திய முனிவர்உதவி செய்தாராம்.
நாமெல்லாம் அந்தமனிதரின் வழித்தோன்றல்கள்தான்.அந்த நாகர்கள் பெரும் துயரத்தைஅனுபவித்தார்கள். துயரத்திலிருந்துதங்களை மீட்க ஒரு மாமனிதனைத்தேடினார்கள். பகவான் புத்தருக்குள் அந்த மாமனிதனைக் கண்டுகொண்டார்கள்.

நாமும் நாகர்கள்போலத்தான்.
ஆகவே, நாகர்களின்பூமியாகிய இந்த இடத்தை நான்தேர்ந்தெடுத்தேனே தவிர யாரையும்கோபப்படுத்துவதற்காக அல்ல. ஆர்.எஸ்.எஸ்-பற்றியெல்லாம் சற்றும்நான் யோசித்துப் பார்க்கவில்லை.

கெளரவம்தான் முக்கியம், சுயலாபங்கள்அல்ல!

நேற்று ஒரு பிராமணப் பையன்
என்னிடம் வந்து, “நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உங்கள் மக்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் உதறிவிட்டு செல்கிறீர்களே?” என்று கேட்டான். நான்அவனிடம் சொன்னேன்,|
“நீ மஹராக (அம்பேத்கர் பிறந்த குலம்) மாறி நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் நாங்கள் விட்டுச்செல்லும் இடைவெளியை நிரப்பிக்கொள்!... அந்தஇடங்களுக்காக பிராமணர்களிடமிருந்தும்
பிறரிடமிருந்தும் எவ்வளவு மனுக்கள்வருகிறதென்று பார்ப்போம்!...”

“நாங்கள் ஏதாவது இழப்பைச் சந்தித்தால் நீங்கள் ஏன் கண்ணீர் விடுகிறீர்கள்?” என்பதுதான் அவர்களுக்கு என்னுடையகேள்வி. உண்மையில், கெளரவம் தான் மனிதகுலத்துக்கு இன்றியமையாதது, பொருள் சார்ந்த லாபங்கள்அப்படிப்பட்டவையல்ல. நல்லஇயல்புகளைக் கொண்ட ஒருபெண்ணுக்குத் தெரியும் பாலியல் தொழிலில் லாபம் கிடைக்குமென்று. ஆனால், அவர் அப்படிச் செய்வாரா? தாழ்த்தப்பட்ட என்னுடைய சகோதரிகளுக்குச் சாதாரண சப்பாத்தி, சட்னி கூட கிடைப்பதில்லை. ஆனாலும், அவர்கள் கண்ணியத்துடன்வாழ்கிறார்கள். நாங்கள் எங்கள் கெளரவத்துக்காகப் போராடுகிறோம். மனிதகுலத்தைப் பூரண நிலையைநோக்கி வழி நடத்தத்தயாராகிக் கொண்டிருக்கிறோம். தேவைப்பட்டால், இதற்காக நாங்கள் எந்த தியாகத்தையும் செய்யத் தயாராகஇருக்கிறோம்.

புத்த மதம் ஏன்?

“புத்த மதத்தை நீங்கள் தழுவியதற்குக்காரணம் என்ன?”
என்று ஒருவரும் என்னைக் கேட்காதது ஆச்சரியமாகஇருக்கிறது. எல்லா மரங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு
இந்த மதத்தைமட்டும் ஏன் ஏற்றுக்கொண்டேன்? இந்துமதத்தை
விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவு 1935-ல் எங்களால் இயோலாநகரில் எடுக்கப்பட்டது. “நான்இந்துவாகப் பிறந்திருந்தாலும்இறக்கும்போது ஒரு இந்துவாக இறக்கமாட்டேன்” என்று நான் முன்பு சபதம் எடுத்திருந்தேன். நேற்று அதை நான் நிறைவேற்றிவிட்டேன்.
நான் மிகவும்சந்தோஷமாக இருக்கிறேன்; மிகவும் பரவசமாக இருக்கிறேன்! நரகத்தைவிட்டு வெளியேறிவிட்டேன்- இதுதான்இப்போது எனக்கு ஏற்படும் எண்ணம். குருட்டுத்தனமாக என்னைப் பின்பற்றும் தொண்டர்கள் தேவையில்லை. புத்தமதத்தைப் பற்றிய முழு உணர்வுடன்வந்திருப்பவர்கள் மட்டுமே முழுமனதுடன் இந்த மதத்தைத் தழுவிக்கொள்ளவேண்டும்.

துரதிர்ஷ்டத்தின் ஆயிரம் ஆண்டுகள்
ஆயிரம், ஆண்டுகள் ஆனாலும் நம்நிலைமை மாறாது என்ற சூழலில்தான் இந்த நாட்டில் தற்போது காணப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்துவைப்பதற்கு சாத்தியமே கிடையாது. இந்து மதத்தில் இருந்து கொண்டு நம்மால் எதையும் செய்ய முடியவில்லை. மனுஸ்மிருதி சொல்லும் நான்கு வர்ணங்கள் மனிதகுல முன்னேற்றத்துக்குப் பெரும் ஆபத்து விளைவிப்பவை. சூத்திரர்கள் இழிவானவேலைகளை மட்டுமே செய்ய வேண்டும்என்று மனுஸ்மிருதி சொல்கிறது. அவர்களுக்குக் கல்வி எதற்காக? பிராமணர்களெல்லாம் கல்வி கற்கவேண்டும்; சத்திரியர்கள் போரிடவேண்டும்; வைசியர்கள் வணிகம் செய்யவேண்டும்; சூத்திரர்கள் தொண்டூழியம்புரிய வேண்டும்- நுட்பமான இந்த ஏற்பாட்டை யாரால்தான் குலைக்கமுடியும்? பிராமணர், சத்திரியர், வைசியர்ஆகிய சாதியினருக்கு இதில் பலன்கள்உண்டு. ஆனால், சூத்திரர்களுக்கு? இந்த அடுக்கில் கீழ்நிலையில் உள்ள சாதியினர் ஊக்கம் கொள்ள ஏதும்இருக்கிறதா? இந்து மதத்தில் சமத்துவத்துக்கு இடமேயில்லை. இந்தமதத்தின் பெயரால் எங்களைஅழித்தவர்கள் அதே மதத்தால் அழிந்து போவார்கள்.

ஒரு பிராமணப் பெண் குழந்தைபெறுகிறாள் என்றுவைத்துக்கொள்வோம்; அப்போதிருந்தேஅவள் தனது குழந்தைக்காக, வரும்காலத்தில் காலியாகக் கூடிய நீதிபதியின் பணியிடத்தைக்கனவுகாண்பாள்.
ஆனால், நமதுதுப்புரவுப் பணியாளர் சமூகத்தைச்சேர்ந்த பெண்ணொருத்தி குழந்தை பெறுகிறாள் என்றால், ஒரு துப்புரவுப்பணியைத்தான் தனது குழந்தைக்காக கனவுகாண முடியும். இப்படிப்பட்டவிசித்திரமான அமைப்பைத்தான் இந்துமதம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அமைப்பில் இருந்துகொண்டு எந்த முன்னேற்றத்தை அடைய முடியும்? முன்னேற்றம் என்பதை புத்த மதத்தின்மூலமாகத்தான் அடைய முடியும்.

கடலில் கலந்த பின்…

புத்த பிட்சுகளில் 75 சதவீதத்தினர்பிராமணச் சமூகத்திலிருந்துவந்தவர்கள்;
25 சதவீதத்தினர் மட்டுமேசூத்திர இனத்தையும் பிற இனத்தையும்சேர்ந்தவர்கள். |
ஆனால், புத்த பகவான்சொல்கிறார், “பிட்சுகளே, நீங்களெல்லாம்வெவ்வேறு நாடுகளிலிருந்தும் வெவ்வேறு சாதிகளிலிருந்தும் வந்திருக்கிறீர்கள். நதிகளெல்லாம் அவரவர் நாடுகளில் தனித்தனியாக ஓடுகின்றன. ஆனால், கடலில் கலந்தபிறகு அவற்றை நாம் வேறுபடுத்திப்பார்க்கவே முடியாது. நீங்களெல்லாம் இரண்டறக் கலந்துவிட்டிருக்கிறீர்கள்.

புத்த மத பிட்சுகளெல்லாம் கடலைப்போன்றவர்கள். இந்தச் சங்கத்தில் எல்லோரும் சமமே. கடலில் கலந்த பிறகு கங்கையையும் மகாநதியையும்பிரித்தறிய முடியாது.
அதே போன்றுதான்இந்த புத்த சங்கத்தில் வந்துகலப்பதன்மூலம் உங்கள்
சாதி மறைகிறது, அனைவரும் சரிநிகர்சமானமாகிறீர்கள்.” சமத்துவத்தைப்பற்றி ஒரே ஒரு
மாமனிதர் மட்டுமேபேசியிருக்கிறார்.
அந்த மாமனிதர் தான் புத்தர்.

(அக்டோபர் 14, 1956-ல் நாக்பூரில்
இலட்சக் கணக்கான மக்களுடன் அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவினார். அதற்கு மறுநாள் அவர் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள் இங்கேகொடுக்கப்பட்டிருக்கின்றன.,)

கயத்தார்  எல்லாம் சாதி வெறி உச்சத்தில் இருக்கும் பகுதி. அங்கு தேவர்கள் மட்டுமில்லை, தெலுங்கர்கள் கூட  அதீத சாதி வெறியில்...
13/10/2020

கயத்தார் எல்லாம் சாதி வெறி உச்சத்தில் இருக்கும் பகுதி. அங்கு தேவர்கள் மட்டுமில்லை, தெலுங்கர்கள் கூட அதீத சாதி வெறியில் அலைவார்கள். அவர்கள் மட்டுமா ? தன்னை சாதி இந்துவாக கருதும் அத்தனை பேருமே அப்படித்தான் அலைவான்கள்.

பேச்சில், உடல்மொழியில், நடத்தையில், இவ்வளவு ஏன், நம்மை அளக்கும் அளவுகோல்களே சாதியை அடிப்படையாகக் கொண்டதாகத்தான் இருக்கும்.

சாதி இந்துக்களுக்கு நான் சொல்வதன், அடிப்படை பிரச்சனை கூட புரியாது. இதெல்லாம் கதை என்ற அளவில், நக்கலுக்கு சிரிப்பு ஸ்மைலியை கூட அழுத்தி செல்வார்கள். ஆனால், இந்த சிரிப்பு ஸ்மைலிகளுக்கெல்லாம் உண்மை அடங்காதுதானே.

கயத்தார் அருகே வசிக்கும் அறுபது வயது பால்ராஜ் என்பவரின் ஆடு, சங்குத்தேவர் என்பவற்றின் வயலுக்குள் சென்றுவிடுகிறது. சங்குத் தேவர், பால்ராஜை வழக்கம் போல சாதிப் பெயர் சொல்லித் திட்டுகிறார். (பள்ளர் என்கிறார்கள். பள்ளரென்றால் எனக்கு சந்தோஷமே. தேவேந்திரர் தேவேந்திரர் என்று ஊருக்கு நடுவில் கூவிக்கொண்டிருந்தாலும் சாதி இந்துக்கள் உன்னை என்னவாக பார்க்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த உதா ) வாய்ததகராறு கைகலப்பாக மாறி, பால்ராஜ், சங்குத்தேவரை அடித்து விட்டதாக செய்திகளில் சொல்லப்படுகிறது. சிறிது நேரத்தில் அவர்களிருவரும் சமாதானத்திற்கு வந்துவிடுகிறார்கள்.

ஆனால், சங்குத்தேவரின் மகன்கள் (எல்லாம் 19 / 24 / 20 வயது இளம் பய்யன்கள் ) உறவினர்கள் எல்லாம் சேர்ந்து, பால்ராஜை அழைத்து வந்து, சங்குத்தேவரின் காலில் விழவைத்து வீடியோ எடுக்கிறார்கள்.

வீடியோவில் குரல்களைக் கேட்டுப்பாருங்க 'நல்லா வீடியோ எடுல / கொதவளையை அறுத்துருவேன்' என்றெல்லாம் சங்குத்தேவரின் ஆட்கள், பால்ராஜை வசைபாடுவதை தெளிவாக கேட்கலாம்.

கிராமங்களில் ஆடு வயலுக்குள் சென்றதற்கும், மாடு வைக்கலை தின்றதற்கும் சாதி சண்டைகள் சுளுவில் நடக்கும். அப்படியொன்றும் அன்பு பொழியும் இடம் கிடையாது இந்தக் கிராமங்கள்.

ஆனால், வேறு எந்த இரண்டு சாதிகளுக்குள் இது நடந்தாலும், பரஸ்பர அடிதடியாக / காவல்துறை புகாராக / பெரிய ஆட்கள் வைத்து மத்தியஸ்தம் / மட்டும்தான் இருக்குமே தவிர, சாதிப் பெயரை சொல்லி இழிவுபடுத்துவது, வீட்டிலிருந்து அழைத்து வந்து காலில் விழ வைப்பது, வீடியோ எடுத்து பரப்புவது எல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை.

பள்ளரோ / பறையரோ / அருந்ததியினரோ / சக்கிலியரோ / இப்படியான சாதி ஆட்களாக இருந்தால் மட்டுமே காலில் விழவைக்கப்படுவீர்கள். வெளியில் சொல்வதற்கு கூட உங்களுக்கு வாய்ப்பிருக்காது. அப்படியே சொன்னாலும், அதற்குப்பின்னான கலவரங்களுக்கு அதுதான் அடிநாதமாக இருக்ககூடும் என்பதால், அமைதியாகவே கடப்பார்கள். .

இந்த சம்பவம் கூட, சங்குத்தேவர் & கோ எடுத்த வீடியோ காரணமாகவே வெளி வந்திருக்கிறது. பால்ராஜை காலில் விழ வைத்து, வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, தங்களது ஆதிக்கத்தை சமூக ஊடகங்களில் பறைசாற்றியது சங்குத்தேவர் கம்பனியே.

தங்கள் தலையில் தாங்களே மண்ணள்ளிப் போட்டுக்கொண்டு, இப்போது வந்து 'ஆடு வந்து வயலை அழிச்சா பாத்துட்டு இருக்கனுமா' என்று கேட்கிறார்கள்.

அடிதடி சண்டை கூட நடக்கட்டும். அதுதானே நடந்திருக்கிறது. ஆனால் 60 வயது பால்ரஜை, அவரது வீட்டிலிருந்து அழைத்து வந்து, சங்குத்தேவரின் காலில் விழ வைக்கும் அந்த திமிர் எங்கிருந்து வருகிறது ? கொதவளையை அருத்துருவேன் என்று 20 வயது இளைஞன் ஒருவன், 60 வயது பால்ராஜை பார்த்து மிரட்டுவதற்கான அகங்காரம் எங்கிருந்து வருகிறது ?

மனசாட்சியிருந்தால், பால்ராஜிற்கு ஆதரவாக இருங்கள். இல்லையென்றால் பேசாமலாவது கடந்து செல்லுங்கள். ஆதிக்கத்திற்கும், ஆணவத்திற்கும், அகங்காரத்திற்கும் சப்பைக் கட்டு கட்டாதீர்கள்.

ps: உடனே 'பெரியார் மண்' என்று நக்கலடிக்க வராதீர்கள். பெரியார் மண்ணாக இருப்பதால்தான், வன்கொடுமை சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள். இல்லையென்றால் ஹத்ராஸ் போல, நள்ளிரவில் பால்ராஜை எரித்து சாமபலை கொடுத்திருப்பார்கள்.

#கவிதா_சொர்ணவல்லி..

  ❤️❤️❤️பிரின்சிபல்: "உனக்கு ஒரு விஷயம் தெரியுமா...? எங்க அப்பா ரோட்டுல செருப்பு தைக்குறவரு, அவர் புள்ள நான்... உனக்கு ப...
28/09/2020

❤️❤️❤️

பிரின்சிபல்: "உனக்கு ஒரு விஷயம் தெரியுமா...? எங்க அப்பா ரோட்டுல செருப்பு தைக்குறவரு, அவர் புள்ள நான்... உனக்கு பிரின்சிபல்.

பன்னி மாதிரி என்னைய அடிச்சு அடிச்சு விரட்டுவானுங்க... ஓடியா ஒளிஞ்சு போய்ட்டேன் நான்? அப்புறம் எது அவசியம்ன்னு புரிஞ்சுக்கிட்டு, பேய் மாதிரி படிச்சேன்... அன்னைக்கு என்னை அடக்க நினைச்சவன்லாம், இன்னைக்கு 'அய்யா சாமி'ன்னு கும்பிடுறான்.

உங்க அப்பாவை பார்த்த பிறகு, நான் சொல்றேன்... இங்கே நடக்குற எல்லாத்தையும் மீறி, நீயும் என்னை மாதிரி ஜெயிச்சு வருவேன்னு நான் நம்புறேன்.

இதை மனசுல வெச்சுக்கிட்டு, உனக்கு என்ன தோணுதோ செய்.... போ... போ..."

லெக்சரர்:
"என்ன சார், இப்படி சொல்லி அனுப்பிட்டீங்க...
போய் சண்ட, கிண்ட போடப்போறான் சார்."

பிரின்சிபல்:
"போட்டா போடட்டும்.... ரூம்ல போய் தூக்கு மாட்டிட்டு சாகுறதை விட, சண்டை போட்டு சாவட்டுமே.

அவனுங்கள நம்மளால திருத்த முடியுமா?"

லெக்சரர்:
"முடியாது, சார்..."

பிரின்சிபல்:
"அப்புறம்...?
இவனை மட்டும் ஏன் நிறுத்தணும்னு நினைக்குறீங்க.."

- பரியேறும் பெருமாள் (2018)

எழுத்து - மாரி செல்வராஜ் ❤️

திரைப்பட நடிகர்கள் புகழும், செல்வமும், செல்வாக்கும் அடைவதற்கு காரணம் நாம்தான்.   ஆனால் இதை நினைத்துப்பார்க்கும் நடிகர்கள...
15/09/2020

திரைப்பட நடிகர்கள் புகழும், செல்வமும், செல்வாக்கும் அடைவதற்கு காரணம் நாம்தான்.

ஆனால் இதை நினைத்துப்பார்க்கும் நடிகர்கள் அரிது. "உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்" என்பதெல்லாம் வெறும் வாய்வார்த்தை.

2007ம் ஆண்டு, இறுதியில் நான் பேராசிரியர் கல்யாணியோடு நெருக்கமான தொடர்பில் இருந்தேன். இருளர்கள் வாழ்வின் முன்னேற்றத்துக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் தோழர் கல்யாணி. இருளர் கல்வி தொடர்பாக நடிகர் சூர்யா செய்து வரும் உதவிகளை அய்யா கல்யாணி என்னிடம் விளக்கினார்.

சூர்யா தனது அகரம் அறக்கட்டளை சார்பாக தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார். இது போல தமிழ்ச்சமூகத்துக்கு அர்ப்பணிப்போடு செயல்படும் நடிகர்களை நான் பார்த்தது இல்லை.

சிவக்குமார் பெற்றெடுத்த இரண்டு பிள்ளைகளும் மணிகள். மாணிக்கங்கள்.

அவர் மீது இன்று நீதித்துறை உட்பட சங்கிகள் தொடுக்கும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

நான் சூர்யாவோடு நிற்கிறேன். நீங்களும் நிற்பீர்கள் என்று நம்புகிறேன்.



I just love you man.

சவுக்கு சங்கர்
15 செப்டம்பர் 2020

 Unala ena pana mudiyumo pannu ntu block panitu odita  id
21/08/2020



Unala ena pana mudiyumo pannu ntu block panitu odita id

19/08/2020

எல்லா பெரிய படிப்புகளும் பார்ப்பனர்களுக்கே..

எல்லா பெரிய வேலைகளும் பார்ப்பனர்களுக்கே..

என்று இருந்தது..
திராவிடர் இயக்கம் தோன்றியது..

பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் அயராத உழைப்பால், ஆதிக்கத்தை எதிர்த்து புரிந்த போரால்..

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் கல்விப் பயின்றனர், பெரிய வேலைகளுக்கு சென்றனர்..

இப்போது ஆதிக்கவாதிகள் திராவிடர் இயக்கத்தை ஒழிக்காமல் விடமாட்டோம் என்கிறார்கள்..

திராவிடர் இயக்கத்தை இவர்கள் அழித்து ஒழித்தாலும் அவ்வியக்கம் தமிழ் மண்ணில் நிகழ்த்திய அற்புதத்தை வரலாறு ஆச்சரியத்துடன் பேசும்..

எவனும் எதிர்த்து நிற்க அஞ்சிய பார்ப்பனர்களின் ஆதிக்கக் கோட்டையை ஒரு புயலைப் போல் வந்து புரட்டிப் போட்டது திராவிடர் இயக்கம்..

நமது இயக்கம்..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் முனைவர் தொல்.திருமாவளவன்.என்னை கவர்ந்த அரசியல் ஆளுமைகளில் முக்கியமான ஒருவர்.அடங்கமறு !அத்...
17/08/2020

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் முனைவர் தொல்.திருமாவளவன்.

என்னை கவர்ந்த அரசியல் ஆளுமைகளில் முக்கியமான ஒருவர்.

அடங்கமறு !
அத்துமீறு !
திமிறி எழு !
திருப்பி அடி !
என்ற வாசகம் அனைவராலும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க படுகிறது..

#அடங்கமறு : நீ கீழ் சாதி கோவிலுக்குள் செல்ல கூடாது என்று சொல்லும் இடத்தில் நானும் செல்லுவேன் என்று சொல்வதே அடங்கமறுப்பது..

#அத்துமீறு : நீ கீழ் சாதி இந்த ஆற்றில் இறங்க கூடாது இந்த குளத்தில் குளிக்க கூடாது என்று சொல்லும் சனாதன தர்மத்தை அத்துமீறி ஆற்றில் இறங்குவதும், குளத்தில் குளிப்பதும் அத்துமீறுவது.

#திமிறி_எழு : இது தலித்துகளுக்கு மட்டுமான வார்த்தை அல்ல எங்கெல்லாம் அநியாயம் நடக்கிறதோ அங்கெல்லாம் திமிறி எழு என்ற பொது வாசகம்.

#திருப்பி_அடி : உன்னை ஒருவன் அடிக்கும்போது திருப்பி அடிப்பதில் தவறில்லை.தேடி அடி என்று சொன்னால் தான் தவறே தவிர திருப்பி அடிப்பதில் தவறில்லை..

உங்கள் பயணம் இன்னும் ஆண்டாண்டு காலம் தொடர வாழ்த்துகள்..💙🖤💚

#தனிஒருவன்_திருமா

DrMuzamil

Picture speaks
10/08/2020

Picture speaks

படிக்க விடுவியா? மாட்டேன்  ஊருக்குள்ள விடுவியா? மாட்டேன்  தொட விடுவியா? மாட்டேன் கோயிலுக்குள் விடுவியா? மாட்டேன்  பிடிச்...
02/08/2020

படிக்க விடுவியா? மாட்டேன்
ஊருக்குள்ள விடுவியா? மாட்டேன்
தொட விடுவியா? மாட்டேன்
கோயிலுக்குள் விடுவியா? மாட்டேன்
பிடிச்ச வேலையை செய்ய விடவியா? மாட்டேன்
Atleast தண்ணி தருவியா? மாட்டேன்

" அடச்சி போ நாயே, நான் வேற மதத்துக்கு போறேன்"

இந்துக்கள்: "ஐயோ ஐயோ இந்த பாவாடைகள் மதமாற்றம் செய்து மக்களை எல்லாம் ஏமாற்றங்களே, நம்ம உயர்ந்த கலாச்சாரம் பாழாகுதே! என்ன செய்யறது?"

ஒரே மதம் என்று சொல்கிறாய்! நமக்குள் இத்தனை வித்தியாசம் ஏன்? புரிந்துகொள் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு! இந்தி...
26/07/2020

ஒரே மதம் என்று சொல்கிறாய்! நமக்குள் இத்தனை வித்தியாசம் ஏன்?

புரிந்துகொள் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு!

இந்தியாவில் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே கடவுள், ஒரே வழிபாட்டு முறை வரலாற்றிலும் கிடையாது, வருங்காலத்திலும் கிடையாது!!!

System No.1.முந்தா நாள் போனதுக்கு E Pass கேட்டா  இன்னைக்கு 23.07.2020 E  PAss காட்டறாரு. ( அப்ப முந்தா நாள் E PAss எடுக்...
23/07/2020

System No.1.முந்தா நாள் போனதுக்கு E Pass கேட்டா இன்னைக்கு 23.07.2020 E PAss காட்டறாரு. ( அப்ப முந்தா நாள் E PAss எடுக்கல அப்படித்தானே)

System No.2. Innova/SUV னு போட்டு TN 06 என்று மட்டும் இருக்கு.

System 3. Driver +1 னு இருக்கு. குடும்பத்தோடு போறாரு‌

சின்ன E PAss விஷயத்திலேயே System ம் சரி இல்லை. Income tax System அது தனி கதை.
🤔🤔🤔🤔🤔

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when CUT PASTE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share