
30/04/2025
☘️ *கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ஒருசமயம் நான் ஊழியத்திற்காக ஒரு திருச்சபையில் அழைக்கப் பட்டிருந்தேன். அதுவாலிபர் கூடுகை.*
*கூட்டம் முடிந்தவுடன் ஒரு தங்கை என்னிடம் ஜெபிக்க வந்தாங்க. அந்த பெண் என்னிடம் கூறும் போது, அண்ணன் நான் வேலை பார்க்கிற இடத்தில் ஒருவரை விரும்புகிறேன். அவரையே திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன். ஆனால் வீட்டில் யாரும் ஒத்து கொள்ள மாட்டுக்காங்க என்றாள்.*
*நான் ஏன் என்று கேட்டேன்? அந்த பெண் சொன்னது அவர் ஆண்டவரை அறியாதவர் அதனால எங்க வீட்டார் ஏற்றுக்கொள்ள மாட்டுக்காங்க. ஆனால் ஆண்டவர் எனக்கு சொப்பனத்தில் அவரை காட்டினார். அதுமாத்திரமல் ஒரு ஊழியரிடம் ஜெபிக்க போனேன் அவர் சொன்னார் கர்த்தர் உன் மனவிருப்பத்தை நிறைவேற்றுவார் என்றார்.எனவே இது தேவ சித்தம் என்று அறிந்து கொண்டேன்.நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்டாங்க?*
*எனக்கு அருமையானவர்களே இன்று அநேகர் தங்களுக்கு ஏற்பட்ட கனவை அல்லது சொப்பனத்தை அல்லது அந்த நேரத்தில் தரப்படுகிற வசனத்தை வைத்து இது தான் தேவசித்தம் என்று முடிவு செய்து விடுகிறார்கள்.நான் உங்களுக்கு ஒரு காரியத்தை சொல்ல விரும்புகிறேன்.*
*வேத வார்த்தைகள் மூலம் தேவனுடைய விருப்பங்களை முழுமையாக அறிய வாய்ப்பில்லாத பழைய ஏற்பாட்டுக் காலங்களில் சொப்பனங்கள், தரிசனங்கள், தீர்க்கதரிசனங்கள் வாயிலாக தேவசித்தம் வெளிப்பட்டது என்பது உண்மை.ஆனால் இன்று முழுவேதாகமம் தரப்பட்டு விட்டது.தேவன் எதை விரும்புவார்.எதை விரும்ப மாட்டார் என்பது தெளிவாக வேதத்தில் தரப்பட்டுள்ளது.*
*இக் காலங்களில் சொப்பனங்களையும், தரிசனங்களையும் நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்கும் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதை தேவை.பலருடைய சொப்பனங்களும், தரிசனங்களும் அவர்களை தவறாக வழிநடத்தி வேதனைகளை உண்டு பண்ணுகின்றன. பலருடைய தீர்க்கதரிசனங்கள் அநேகரை இடறிப் போகச் செய்கின்றன.*
*பிசானவன் கூட சொப்பனங்கள் தரிசனங்கள் மூலமாக நம்மைத் தந்திரமாக ஏமாற்றி தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டலாம்.எனவே நமக்கு அதிக விழிப்புணர்வு தேவை.ஒரு காரியம் வேதத்தின் படி சரியா என்றும்,அது தேவனுக்கு உகந்ததா என்றும் பார்க்க வேண்டும்.*
*நாம் தேவசித்தம் என நம்புவது சரிதானா என்பதைப் பலமுறை தேவ சமூகத்தில் வைத்து ஆராய வேண்டும்.தேவ சித்தம் என்றால் அங்கே தேவசமாதானமும், முழு நம்பிக்கையும்,அது சரி என வெளிப்படுத்தும் சில சூழ்நிலைகளும் இருக்கும்.*
*எனவே தேவபிள்ளைகளே தேவ சித்தத்தின் படி முடிவெடுப்பதில் ஜாக்கிரதையாக இருப்போம். கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதீப்பாராக💐
Credits: Bro. Senthil David சத்திய வார்த்தை ஊழியங்கள் Chennai Newperungalathur👍 உபாகமம் 13 :1-18*🙏