Bible speaks

Bible speaks சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்

19/09/2025
18/09/2025
17/09/2025

கிறிஸ்தவம் இந்திய தேசத்திற்கு வந்து 2000 ஆண்டுகள் ஆகின்றது.
இந்த சரித்திரம் தெரியாமல், "வெள்ளைக்காரன் கொண்டு வந்த மதம்" என்று சொல்லுகிறவர்கள், முதலில் போய் இந்திய வரலாற்றைப் படியுங்கள்.....

✝ *கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே என்னுடைய சிறுவயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் என்னுடைய பள்ளி அற...
19/07/2025

✝ *கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே என்னுடைய சிறுவயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் என்னுடைய பள்ளி அறையில் நான் கடந்து போகும் போது ஒரு அழகான விலை உயர்ந்த பேனா கீழே கிடந்தது.*

*சுற்றுமுற்றும் பார்த்தேன் யாரும் அங்கு இல்லை. அந்த பேனா வேற அழகா இருந்தது.எனவே நான் என்ன செய்கிறேன் அதை எடுத்து என் பையில் வைத்துக் கொண்டேன். யாருக்கு தெரிய போகுது இங்கதான் ஒருத்தரும் இல்லையே? என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.*

*எனக்கு அருமையானவர்களே யாருமே இல்லையே என்ற உடனே ஒரு தவறு செய்ய என்மனம் தூண்டப்படுகிறது. ஆனால் வேதத்தில் யோசேப்புக்கும் இப்படி ஒரு சோதனை வந்தது.யாரும் பார்க்காத இடத்தில் ஒரு தவறை செய்ய தூண்டுதல் வந்தது அன்று அவர் போத்திபார் வீட்டுக்கு கடந்து போய் இருக்கும்போது அந்த வீட்டில் ஒருவரும் இல்லை. போத்திபார் மனைவி மாத்திரம் இருக்கிறாள். இப்பொழுது தவறு செய்வதற்கு அருமையான வாய்ப்பு உருவாகிறது. ஏனா அங்க வேறயாரும் இல்லை.ஆனால் யோசேப்பு அந்தத் தவறை செய்யாமல் அங்கிருந்து ஓடியே விட்டார்.*

*ஏன் தெரியுமா? யாரும் பார்க்காத இடத்திலும் கர்த்தர் தன்னை பார்த்துக் கொண்டே இருக்கிறார் என்பதை யோசேப்பு அறிந்திருந்தார். அவருடைய கண்கள் தம்மை கூர்மையாக கவனிக்கிறது என்பதையும் அறிந்திருந்தார். எனவேதான் யாரும் இல்லா விட்டாலும் கூட, கர்த்தர் பார்க்கிறார் என்ற உணர்வோடு அந்த மாபெரும் தவறை செய்யாமல் தன்னைக் காத்துக் கொண்டார்.*

*இன்று அநேகருடைய வாழ்க்கையில் அநேக தவறுகள் ஏற்படுவதற்கு காரணம் இங்கு யாருமில்லை,இங்கு நாம் செய்கிற தவறை யாரும் பார்க்க வாய்ப்பில்லை,அது யாருக்கும் தெரியாது நமக்கு மாத்திரம் தானே தெரியும்.என்று துணிகரமாக சில காரியங்களில் ஈடுபட்டு தேவன் நமக்கு வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை இழந்து போகிறோம்.*

*"தேவ பிள்ளைகளே நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் கர்த்தர் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் என் இருதயத்தின் நினைவுகளை கூட அறிந்து வைத்திருக்கிறார் என்ற சிந்தனையோடு வாழும்போது எந்த தவறும் செய்யாத படி நம்மை காத்துக் கொள்ளலாம். கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக 🛐சத்திய வார்த்தை ஊழியங்கள் Chennai Newperungalathur🙏ஆதியாகமம் 39:7-12*🙏

இஸ்ரேல் தேசத்தின் நீண்ட நெடுங்கால வரலாறு மற்றும் அதை ஆட்சி செய்த ராஜாக்கள் பற்றி பரிசுத்த வேதாகமம் சொல்வதோடு மட்டுமல்லாம...
09/07/2025

இஸ்ரேல் தேசத்தின் நீண்ட நெடுங்கால வரலாறு மற்றும் அதை ஆட்சி செய்த ராஜாக்கள் பற்றி பரிசுத்த வேதாகமம் சொல்வதோடு மட்டுமல்லாமல் தொல்லியல் துறையால் அந்த செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டது.

☘️ *கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ஒருசமயம் நான் ஊழியத்திற்காக ஒரு திருச்சபையில் அழைக்கப் பட்டிருந்தேன். அதுவாலிபர் கூட...
30/04/2025

☘️ *கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ஒருசமயம் நான் ஊழியத்திற்காக ஒரு திருச்சபையில் அழைக்கப் பட்டிருந்தேன். அதுவாலிபர் கூடுகை.*

*கூட்டம் முடிந்தவுடன் ஒரு தங்கை என்னிடம் ஜெபிக்க வந்தாங்க. அந்த பெண் என்னிடம் கூறும் போது, அண்ணன் நான் வேலை பார்க்கிற இடத்தில் ஒருவரை விரும்புகிறேன். அவரையே திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன். ஆனால் வீட்டில் யாரும் ஒத்து கொள்ள மாட்டுக்காங்க என்றாள்.*

*நான் ஏன் என்று கேட்டேன்? அந்த பெண் சொன்னது அவர் ஆண்டவரை அறியாதவர் அதனால எங்க வீட்டார் ஏற்றுக்கொள்ள மாட்டுக்காங்க. ஆனால் ஆண்டவர் எனக்கு சொப்பனத்தில் அவரை காட்டினார். அதுமாத்திரமல் ஒரு ஊழியரிடம் ஜெபிக்க போனேன் அவர் சொன்னார் கர்த்தர் உன் மனவிருப்பத்தை நிறைவேற்றுவார் என்றார்.எனவே இது தேவ சித்தம் என்று அறிந்து கொண்டேன்.நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்டாங்க?*

*எனக்கு அருமையானவர்களே இன்று அநேகர் தங்களுக்கு ஏற்பட்ட கனவை அல்லது சொப்பனத்தை அல்லது அந்த நேரத்தில் தரப்படுகிற வசனத்தை வைத்து இது தான் தேவசித்தம் என்று முடிவு செய்து விடுகிறார்கள்.நான் உங்களுக்கு ஒரு காரியத்தை சொல்ல விரும்புகிறேன்.*

*வேத வார்த்தைகள் மூலம் தேவனுடைய விருப்பங்களை முழுமையாக அறிய வாய்ப்பில்லாத பழைய ஏற்பாட்டுக் காலங்களில் சொப்பனங்கள், தரிசனங்கள், தீர்க்கதரிசனங்கள் வாயிலாக தேவசித்தம் வெளிப்பட்டது என்பது உண்மை.ஆனால் இன்று முழுவேதாகமம் தரப்பட்டு விட்டது.தேவன் எதை விரும்புவார்.எதை விரும்ப மாட்டார் என்பது தெளிவாக வேதத்தில் தரப்பட்டுள்ளது.*

*இக் காலங்களில் சொப்பனங்களையும், தரிசனங்களையும் நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்கும் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதை தேவை.பலருடைய சொப்பனங்களும், தரிசனங்களும் அவர்களை தவறாக வழிநடத்தி வேதனைகளை உண்டு பண்ணுகின்றன. பலருடைய தீர்க்கதரிசனங்கள் அநேகரை இடறிப் போகச் செய்கின்றன.*

*பிசானவன் கூட சொப்பனங்கள் தரிசனங்கள் மூலமாக நம்மைத் தந்திரமாக ஏமாற்றி தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டலாம்.எனவே நமக்கு அதிக விழிப்புணர்வு தேவை.ஒரு காரியம் வேதத்தின் படி சரியா என்றும்,அது தேவனுக்கு உகந்ததா என்றும் பார்க்க வேண்டும்.*

*நாம் தேவசித்தம் என நம்புவது சரிதானா என்பதைப் பலமுறை தேவ சமூகத்தில் வைத்து ஆராய வேண்டும்.தேவ சித்தம் என்றால் அங்கே தேவசமாதானமும், முழு நம்பிக்கையும்,அது சரி என வெளிப்படுத்தும் சில சூழ்நிலைகளும் இருக்கும்.*

*எனவே தேவபிள்ளைகளே தேவ சித்தத்தின் படி முடிவெடுப்பதில் ஜாக்கிரதையாக இருப்போம். கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதீப்பாராக💐
Credits: Bro. Senthil David சத்திய வார்த்தை ஊழியங்கள் Chennai Newperungalathur👍 உபாகமம் 13 :1-18*🙏

Happy Resurrection Day. Although God doesn't need to die, He did so in order to atone for our sins. Although God didn't ...
20/04/2025

Happy Resurrection Day.

Although God doesn't need to die, He did so in order to atone for our sins.

Although God didn't need to prove His might through resurrection, He did so so that we would have a great hope of our bodily resurrection.

4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்ப...
18/04/2025

4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

ஏசாயா 53

☘️ *கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே வேதத்தில் யாக்கோபு என்ற தேவ மனிதனை தேவன் மிகுதியாய் ஆசீர்வதிக்க விரும்பினார்.* *அவரு...
11/04/2025

☘️ *கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே வேதத்தில் யாக்கோபு என்ற தேவ மனிதனை தேவன் மிகுதியாய் ஆசீர்வதிக்க விரும்பினார்.*

*அவருக்காக ஏராளமான நன்மைகளை ஆண்டவர் ஆயத்தமாக வைத்திருந்தார்.*

*ஆனால் யாக்கோபோ அதை அறியவில்லை. அவரோ மற்றவர்களை ஏமாற்றி முன்னுக்கு வர விரும்பினார்.*

*உண்மைக்கு பதிலாகப் பொய் சொல்லி நன்மைகளை பெற விரும்பினார்.எனவே அவர் பல கஷ்டங்களை அடைய நேர்ந்தது.பல இன்னல்கள் வழியாக கடந்து போனார்.*

*இன்று கர்த்தர் நம்மையும் ஆசீர்வதிக்க விரும்புகின்றார் அவர் நமக்காக பல நன்மைகளை ஆயத்தமாக வைத்திருக்கின்றார். எனவே நாம் பொய் சொல்லவோ, யாரையும் ஏமாற்றவோ, குறுக்கு வழியில் செல்லவோ தேவையில்லை. நாமும் உண்மையாக வாழப் பிரயாசப்படுவோம்.*

*இன்று நம்முடைய வாழ்க்கையில் நாம் தவறான வழிகளில் நன்மையைத் தேடக்கூடாது. உண்மையான வழியில் தேவனை தேட வேண்டும்.*

*அப்போது தேவன் நம்மோடிருந்து நம்மை நன்றாக ஆசீர்வதிப்பார். நமக்கு எல்லா நன்மைகளையும் தேவன் தருவார்.*

*எனக்கு அருமையான தேவனுடைய பிள்ளைகளே நம்மால் முடிந்த அளவு உண்மையாக இருப்போம்.அதில் உறுதியாய் இருப்போம். கர்த்தர் நிச்சயம் நம்மை ஆசீர்வதிப்பார்.*🤝

💐 *சத்திய வார்த்தை ஊழியங்கள் Chennai Newperungalathur* 🙏

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bible speaks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bible speaks:

  • Want your business to be the top-listed Media Company?

Share