Bible speaks

Bible speaks சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்

சங்கீதம் 78: 5-8நாட்கள் பொல்லாதவையாக இருப்பதால், பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் கர்த்தருக்குள் நிலைத்து நிற்கும்படி,  அவர...
08/10/2025

சங்கீதம் 78: 5-8

நாட்கள் பொல்லாதவையாக இருப்பதால், பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் கர்த்தருக்குள் நிலைத்து நிற்கும்படி, அவர்களுக்குப் பரிசுத்த வேதாகமத்தைக் கற்றுக்கொடுங்கள். அப்போது அவர்கள் உங்களுக்கும் உலகிற்கும், ஆசீர்வாதமாக இருப்பார்கள்.

07/10/2025
07/10/2025

கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான வேறுபாடுகள்.
கிறிஸ்தவம் தான் மெய்யான இறை மார்க்கம் என்பதை விளக்கும் அருமையான காணொளி....

Christianity is the only True religion of true God. It is the only religion of Peace

நைஜீரியா வில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்காக ஜெபம் செய்யவும்.... 2025 இல் மட்டும் தினமும் 30 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள...
03/10/2025

நைஜீரியா வில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்காக ஜெபம் செய்யவும்.... 2025 இல் மட்டும் தினமும் 30 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொலை செய்யப்படுகிறார்கள். 19,000 இற்கும் மேற்பட்ட சபைகள் அழிக்கப்பட்டன....

சங்கீதம் 78: 5- 8
28/09/2025

சங்கீதம் 78: 5- 8

☘️ *கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்த ஒருவருடைய பணம் திருடப்பட்டிருந்தது. யார் இதைச் செய்திருப...
24/09/2025

☘️ *கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்த ஒருவருடைய பணம் திருடப்பட்டிருந்தது. யார் இதைச் செய்திருப்பார்கள் என்ற சந்தேகக் கேள்வி எழும்பியது.அங்கே இருந்த கிறிஸ்தவ பியூன் செய்துதிருக்கலாம் என்ற சந்தேகம் பலப்பட்டது.*

*ஆனால் அதைக் கேள்விப்பட்ட மேனேஜர் அங்கு வந்தார்.அந்த மேனேஜர் ஒரு புறஜாதி மனிதராவார். ஆனால் கிறிஸ்தவ பியூன் சந்தேகிக்கப் படுவதை அறிந்து, அவனை வீணாகச் சந்தேகிக்கா திருங்கள்.அவன் ஒரு கிறிஸ்தவன். கிறிஸ்தவன் திருடியிருக்க முடியாது என்றார்.*

*இந்த வார்த்தை அந்தப் பியூனின் இருதயத்தை உடைத்தது. கிறிஸ்தவரல்லாத ஒருவர் கிறிஸ்தவர்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கைக்கு நான் துரோகம் செய்து விட்டேனே,என்று நொந்து போனான்.குற்ற மனசாட்சியினால் பாதிக்கப்பட்ட பியூன் மேனேஜரிடம் போய் ஐயா மன்னியுங்கள். உண்மையில் திருடியது நான்தான் என்றான்.*

*ஆயினும், அந்த மேனேஜர் கோபமடையாமல் நீ ஒரு கிறிஸ்தவனாக இருந்ததால் தவறை ஒத்துக் கொண்டாய். கிறிஸ்தவன் தவறை மறைக்க மாட்டான் என்றார்.*

*அன்பானவர்களே இன்று நாம் வாழ்கின்ற இவ்வுலகத்தில் அநேக மக்கள் கிறிஸ்தவர்கள் என்றால் பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். கிறிஸ்தவர்கள் எல்லாரையும் போல அல்ல என்றும், கிறிஸ்தவர்கள் நேர்மையானவர்கள், நல்லவர்கள், அன்பானவர்கள் என்று மக்கள் நினைப்பதுண்டு.*

*அங்குதான் நம்முடைய பொறுப்பு அதிகமாகிறது.ஒரு கிறிஸ்தவன் சாட்சியற்று நடக்கும்போது அது ஒரு நம்பிக்கை துரோகமாகிறது. தவறுகளை தவிர்க்க வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை.தவறிவிட்டால் தவறுகளுக்காக மனம் வருந்துவது கிறிஸ்தவர்களின் அடையாளம்.*

*இன்றைக்கும் நம்முடைய கடமையையும், அடையாளத்தையும் மற்றவர்களுக்கு காண்பிப்போம்.அதன்மூலம் தேவ நாமம் மகிமைப்படுவதாக. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக*🙇‍♂️ 💐 *சத்திய வார்த்தை ஊழியங்கள் Chennai Newperungalathur🙏மத்தேயு 5:1-16*🤝

Luke 12: 4-7
23/09/2025

Luke 12: 4-7

19/09/2025
18/09/2025
17/09/2025

கிறிஸ்தவம் இந்திய தேசத்திற்கு வந்து 2000 ஆண்டுகள் ஆகின்றது.
இந்த சரித்திரம் தெரியாமல், "வெள்ளைக்காரன் கொண்டு வந்த மதம்" என்று சொல்லுகிறவர்கள், முதலில் போய் இந்திய வரலாற்றைப் படியுங்கள்.....

✝ *கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே என்னுடைய சிறுவயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் என்னுடைய பள்ளி அற...
19/07/2025

✝ *கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே என்னுடைய சிறுவயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் என்னுடைய பள்ளி அறையில் நான் கடந்து போகும் போது ஒரு அழகான விலை உயர்ந்த பேனா கீழே கிடந்தது.*

*சுற்றுமுற்றும் பார்த்தேன் யாரும் அங்கு இல்லை. அந்த பேனா வேற அழகா இருந்தது.எனவே நான் என்ன செய்கிறேன் அதை எடுத்து என் பையில் வைத்துக் கொண்டேன். யாருக்கு தெரிய போகுது இங்கதான் ஒருத்தரும் இல்லையே? என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.*

*எனக்கு அருமையானவர்களே யாருமே இல்லையே என்ற உடனே ஒரு தவறு செய்ய என்மனம் தூண்டப்படுகிறது. ஆனால் வேதத்தில் யோசேப்புக்கும் இப்படி ஒரு சோதனை வந்தது.யாரும் பார்க்காத இடத்தில் ஒரு தவறை செய்ய தூண்டுதல் வந்தது அன்று அவர் போத்திபார் வீட்டுக்கு கடந்து போய் இருக்கும்போது அந்த வீட்டில் ஒருவரும் இல்லை. போத்திபார் மனைவி மாத்திரம் இருக்கிறாள். இப்பொழுது தவறு செய்வதற்கு அருமையான வாய்ப்பு உருவாகிறது. ஏனா அங்க வேறயாரும் இல்லை.ஆனால் யோசேப்பு அந்தத் தவறை செய்யாமல் அங்கிருந்து ஓடியே விட்டார்.*

*ஏன் தெரியுமா? யாரும் பார்க்காத இடத்திலும் கர்த்தர் தன்னை பார்த்துக் கொண்டே இருக்கிறார் என்பதை யோசேப்பு அறிந்திருந்தார். அவருடைய கண்கள் தம்மை கூர்மையாக கவனிக்கிறது என்பதையும் அறிந்திருந்தார். எனவேதான் யாரும் இல்லா விட்டாலும் கூட, கர்த்தர் பார்க்கிறார் என்ற உணர்வோடு அந்த மாபெரும் தவறை செய்யாமல் தன்னைக் காத்துக் கொண்டார்.*

*இன்று அநேகருடைய வாழ்க்கையில் அநேக தவறுகள் ஏற்படுவதற்கு காரணம் இங்கு யாருமில்லை,இங்கு நாம் செய்கிற தவறை யாரும் பார்க்க வாய்ப்பில்லை,அது யாருக்கும் தெரியாது நமக்கு மாத்திரம் தானே தெரியும்.என்று துணிகரமாக சில காரியங்களில் ஈடுபட்டு தேவன் நமக்கு வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை இழந்து போகிறோம்.*

*"தேவ பிள்ளைகளே நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் கர்த்தர் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் என் இருதயத்தின் நினைவுகளை கூட அறிந்து வைத்திருக்கிறார் என்ற சிந்தனையோடு வாழும்போது எந்த தவறும் செய்யாத படி நம்மை காத்துக் கொள்ளலாம். கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக 🛐சத்திய வார்த்தை ஊழியங்கள் Chennai Newperungalathur🙏ஆதியாகமம் 39:7-12*🙏

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bible speaks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bible speaks:

  • Want your business to be the top-listed Media Company?

Share