Kky Newsalert

  • Home
  • Kky Newsalert

Kky Newsalert செய்திச்சேவை

24/04/2025

30 வருடங்களாக பல்வேறு ஆட்சிகளில் ஆட்சியின் அதிகார கதிரைகளில் பல்வேறு பதவிகளில் அங்கம் வகித்த போது தீர்க்கப்பட முடியாத காத்தான்குடி காணி பிரச்சினை இப்போது எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஜனாதிபதி மூலம் தீர்க்க முற்படுவதாக படம் காட்டுவது வேடிக்கையானது.

#காத்தான்குடிஅரசியல்

காத்தான்குடி நகரசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் நாகரீமான கருத்துரை..
07/04/2025

காத்தான்குடி நகரசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் நாகரீமான கருத்துரை..

கார்பெட் வீதியாக அபிவிருத்தி கானும் பூநொச்சிமுனை சுனாமி விடமைப்பு( பச்சை வீட்டு) வீதி முன்னாள் சுற்றாடல் அமைச்சரும் வடமே...
06/03/2025

கார்பெட் வீதியாக அபிவிருத்தி கானும் பூநொச்சிமுனை சுனாமி விடமைப்பு( பச்சை வீட்டு) வீதி

முன்னாள் சுற்றாடல் அமைச்சரும் வடமேல் மாகாண ஆளுநருமாகிய அல்ஹாபீழ் நசீர் அஹமத் அவர்களினால் கடந்த 2021/2022 காலப்பகுதியில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு லட்சம் கிலோமீட்டர் வீதி அபிவிருத்தி திட்டத்தில் மேற்படி வீதி கொங்கிரிட் வீதியாக அபிவிருத்தி செய்ய உள்வாங்கப்பட்டிருந்தது சுமார் 50 வீதமான வீதி கான்கிரீட் வீதியாக நிருமாணிக்கப்பட்டு இருந்தபோது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலினால் இடையில் தடைப்பட்டு இருந்தது

இதனைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முன்னாள் அமைச்சர் அவர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட உலக வங்கியின் நிதி அளிப்பிலான ICDP வீதி அபிவிருத்தி திட்டத்தில் இவ்விதியும் எம்மால் உள்ளாங்க பட்டிருந்தது அதாவது அல்அக்ஸா (முகைதீன் மஸ்ஜித் வீதி) வீதி என்னும் பெயரில் 2.75 கிலோ மீட்டர் நீளமான வீதி மேற்படி திட்டத்தில் உள்வாங்கப்பட்டது. இதில் முகைதீன் பள்ளி வீதி, பதிரியா வீதி, மஞ்சந்தொடுவாய் புதிய பாலமுனை வீதி அத்துடன் பூநொச்சிமுனை பச்சை வீட்டு திட்ட வீதியும் உள்ளடங்கியதாக இருந்தது.

இதன் அடிப்படையில் இன்றைய தினம் 06.03.2025 மேற்படி வீதிக்கு காப்பற் இடும் பணிகள் ஒப்பந்ததாரரினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் பணிக்காக மேற்கொண்டஎமது முயற்சிக்கு கிடைத்த பெரு வெற்றியாக கருதுகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்பிரதேசத்தில் அரசியல் அதிகாரம் பெற்று விளங்கிய அபிவிருத்தி என்று பொய்யாக முழங்கிய அரசியல்வாதிகளினால் செய்ய முடியாமல் போன பெரும் வீதி அபிவிருத்தி பணியினை முன்னாள் அமைச்சர் அல்ஹாபிழ் நசீர் அஹமத் அவர்களின் இப்பிரதேச இனைப்பாளராக இருந்து நிறைவேற்ற முடிந்தமையினையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

தனது குறுகிய பதவிக்காலத்தில் காத்தான்குடி மற்றும் அதன் அயல் கிராம மக்கள் பல தசாப்தங்களாக ஏங்கித் தவித்த இப் பாரிய வீதி (சுமார் 9 Km. காபற் வீதி)அபிவிருத்தி பணியினை நிறைவேற்றித் தந்துள்ள முன்னாள் அமைச்சர் அல்ஹாபிழ் நசீர் அஹமத் அவர்களுக்கு இப் பிரதேச மக்கள் மிகுந்த நன்றியறிதலை தெரிவிக்கின்றனர்

ஆதம் எஹ்யா
அரசியல் சமூக செயற்பாட்டாளர்

வீதி அபிவிருத்திக்கு அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகை..ஆக 2015 2018 கதைகள் அளக்க இங்கே இடமில்லை.2023ம் ஆண்டு ந...
25/02/2025

வீதி அபிவிருத்திக்கு அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகை..

ஆக 2015 2018 கதைகள் அளக்க இங்கே இடமில்லை.

2023ம் ஆண்டு நஸீர் அஹமட் கொண்டுவந்த வேலைத்திட்டம் மௌலானாவினால் துரிதப்படுத்தப்பட்டு நடைவபறுகிறது

21/01/2025
தெளிவுக்காக மீள் பதிவு
27/12/2024

தெளிவுக்காக மீள் பதிவு

நன்றி தெரிவிப்போம்மேதகு ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்களின் பொருளாதார கொள்கைக்கு கிடைத்த வெற்றியின்  பயனாக காபெட் வீத...
18/09/2024

நன்றி தெரிவிப்போம்

மேதகு ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்களின் பொருளாதார கொள்கைக்கு கிடைத்த வெற்றியின் பயனாக காபெட் வீதிகளாக அபிவிருத்தி காணும் காத்தான்குடி பிரதேச மிக முக்கிய பெரு வீதிகள்.

பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைந்திருந்த நாட்டினை பொறுப்பேற்றக எல்லோரும் பயந்து ஒளிந்திருந்த நிலையில் நாட்டு மக்களின் அவலத்தை போக்குமுகமாக ஜனாதிபதி பொறுப்பினை அச்சமின்றி ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி அவர்கள் பொருளாதார மேம்பாட்டினை இலக்காகக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் IMF ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அதன் பயனாக உலக வங்கியானது இலங்கையின் பல மாவட்டங்களில் வீதி அபிவிருத்தியினை மேற்கொள்வதற்காக "இனைப்பாக்கம் உள்ளடங்களான வீதி அபிவிருத்தி திட்டம்(Inclusive Connectivity and Development) ICDP" ஊடாக நிதியினை இலங்கை அரசுக்கு பெற்றுக் கொள்ள முடிந்தது

இந்தத் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டமும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனாதிபதி அவர்களினால் சேர்த்துக் கொள்ளப்பட்டது

அதற்கு இணங்க முன்னால் சுற்றாடல் அமைச்சரும் இந்நாள் வடமேல் மாகாண ஆளுநருமான கௌரவ அல் ஹாபிழ் Z.A.நசீர் அஹமத் அவர்களினால் காத்தான்குடி பிரதேசத்தில் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டிய வீதிகளின் விவரங்களை கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில் எங்களிடம் கோரியிருந்தார்கள். அதற்கு அமைவாக காத்தான்குடியிலும் பூநொச்சுமுனை மஞ்சந்தொடுவாய் பாலமுனை கர்பலா ஆகிய பிரதேசங்களில் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தியே காணாது மக்கள் ஏங்கித் தவித்த வீதிகளின் விபரங்கள் என்னால் ஆளுநர் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது

இதற்கு அமைவாக கடந்த 2023.02.21ஆம் தேதி இத்திட்டத்திற்கு பொறுப்பான கொழும்பு திட்ட அலுவலக பொறியியலாளர்கள் மற்றும் மட்டக்களப்பு RDA பொறியியலாளர் குழுவினரால் முன்வைக்கப்பட்ட வீதிகள் ஆய்வு செய்யப்பட்டன. இவ்வாய்வின் அடிப்படையில் எமது பிரதேசத்தை சேர்ந்த 8.15Km நீளமான வீதிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தது

இதனைத் தொடர்ந்து கடந்த 2023.03.09 ஆம் தேதி மட்டக்களப்பு RDA பொறியியலாளரான திரு கலாதரன் சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஜனாப் எம் எம் பைசல் ஆகியோர்களால் தெரிவு செய்யப்பட்ட வீதிகளுக்கான மதிப்பீட்டு அறிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கொழும்பு ICDP திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைவாக குறித்த வீதிகளுக்கான ஒப்பந்ததாரரை தெரிவு செய்யும் கேள்வி இவ்வருட கடந்த ஏப்ரல் , மே மாதத்தில் கோரப்பட்டிருந்தது. அதன்படி ஈபோர்ட் சன்ஸ் எனும் நிறுவனம் எமது பிரதேச வீதிகளின் நிர்மாணதாரராக ஆகஸ்ட் மாதத்தில் ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.

இந்த வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் யாவும் அவ்வப்போது என்னால் சமூக வலைத்தளங்களின் ஊடாக மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்ததை ஞாபகமூட்டுகின்றேன்.

இதன் படி இவ்வேலைகளை துரித கதியில் ஆரம்பிப்பதற்காக இவ் ஒப்பந்ததாரரை விரைவுபடுத்தி கடந்த வாரம் (12.09.2024)எமது பிரதேசத்திற்கு தற்போதைய அபிவிருத்தி திட்ட அமைச்சர் கௌரவ அலி சாகிர் மௌலானா அவர்கள் அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான தங்குமிட மற்றும் களஞ்சிய வசதிகளை செய்து கொடுத்திருந்தார்கள்.

அத்தோடு இது தேர்தல் காலம் என்பதால் இவ் வீதி வேலைகளை இந்த நிறுவனம் ஆரம்ப வைபவங்கள் இன்றி ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும் அல்ஹம்துலில்லாஹ்.

இவ்வீதிகளின் அபிவிருத்தி பணிகளை நாம் மேற்கொள்ள ஆரம்பித்த கடந்த வருட ஆரம்பத்திலிருந்து இவ் வீதி அபிவிருத்தி பணியினை தடுப்பதற்கு அல்லது அவரது பெயரினை பின் கதவால் இதற்குள் சொருகிக் கொள்வதற்கும் பலதரப்பட்ட முயற்சிகளையும் தடைகளையும் அழுத்தங்களையும் காத்தான்குடி பிரதேசத்தின் அரசியல் வாதி என தம்பட்டம் அடிக்கும் முன்னாள் ஆளுநர் ஒருவர் மேற்கொண்டு இருந்தார் என்பதை பொதுமக்களாகிய உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இவரது இந்த கேவலமான செயற்பாட்டுக்கு வீதி அபிவிருத்திக்கான மதிப்பீட்டறிக்கைகளை மேற்கொள்ள வந்த பொறியியலாளர் மற்றும் சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் முக்கிய சாட்சிகளாகும். இவரது இந்த முயற்சிகள் அனைத்தும் அல்லாஹ்வின் துணையால் தற்போது வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.

நாடு பொருளாதார வீழ்ச்சியிலிருந்து உயற்சி பெற்று வரும் இந்த வேளையில் கடந்த இரண்டு வருடங்களுக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகோதர இனத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் தங்களது மக்கள் வாழும் பிரதேசத்தில் சுமார் 100Km மேற்பட்ட கார்பெட் வீதிகளை அமைத்துக் கொடுத்து தமது மக்களின் தேவைகளை நிறைவு செய்துள்ளார்கள் என்பது மிகவும் பாராட்டத்தக்க செயலாகும். இதனை நமது பிரதேச மக்களும் நன்கருவீர்கள்.

ஆனால் காத்தான்குடி பிரதேசத்தில் தன்னை மிஞ்ச அரசியல் அதிகாரம் உள்ளவர் எவருமில்லை என்று தம்பட்டம் அடிக்கும் இம் முன்னால் அரசியல்வாதி கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாக பல்வேறு அமைச்சராகவும் பிரதி அமைச்சராகவும் மேலும் பல பதவிகளையும் வகித்தவர். இவரது காலத்தில் நமது பிரதேசத்தில் உள்ள வீதிகளை இவர் பிரதி பலன் பாராது சேவை செய்பவராக இருந்திருந்தால் தங்கத்தினால் இந்த வீதிகளை அமைக்கக்கூடிய அளவில் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவராக இருந்தார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இவர் அவ்வாறு எண்ணாததே இதற்கு காரணம் ஆகும். நமது பிரதேசத்தின் அபிவிருத்தி வேலைகளை தானும் செய்யாது மற்றவர்களையும் செய்ய விடாது தடுத்து பிச்சைக்காரன் புண் போன்று வைத்துக் கொண்டிருந்தார் என்பதே உண்மையா கும்.

தற்போது நமது பிரதேசத்தில் மக்களின் மிக நீண்டகால "இரத்தக்கண்ணீர்" கோரிக்கையாக இருந்த இந்த வீதிகளை எந்தவித ஊர் வேறுபாடுகளும் பார்க்காது அபிவிருத்தி செய்து கொடுக்கும் கௌரவ ஆளுநர் அல் ஹாபீஸ் நசீர் அஹமத் அவர்களுக்கும் தற்போது இவ்வேலையை துரிதப்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் அபிவிருத்தி செயல்த்திட்ட அமைச்சர் கௌரவ அலி சாஹிர் மௌலானா அவர்களுக்கும் வல்ல அல்லாஹுவின் அருள் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

அதிகாரம் இருக்கும்போது தன்னால் வேண்டுமென்றே செய்யாது விடப்பட்ட அபிவிருத்திகளை எம் போன்ற சிலர் வேறு பிரதேச அரசியல் தலைவர்களை கொண்டு செய்திருக்கும் இவ்வாறான பணிகளை தான் செய்ததாக பொது வெளியில் வாய் கூசாது சொல்வது மிக கேவலமான செயலாகும். தனது பெயரினை பின் கதவால் சொருகுவதற்கு முயற்சிக்கும் பிற் போக்குத்தனமான கேவலம் கெட்ட இந்த அரசியல் வாதிகளை மக்களாகிய நீங்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.

இந்த வீதி அபிவிருத்தி பணியினை அடைந்து கொள்வதற்காக எம்மோடு ஒத்துழைப்பு நல்கி செயற்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் ULMN. முபீன் அவர்களுக்கும் இந்த வீதி அபிவிருத்தி திட்டத்தில் தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கோட்டாவான 25Km நீளத்தில் சுமார் 8Km க்கு மேற்பட்ட நீளத்தை எமது காத்தாங்குடி பிரதேசத்துக்கு எந்தவித வேறுபாடும் இன்றி அள்ளி வழங்கிய கௌரவ வடமேல் மாகாண ஆளுநர் அல்ஹாபில் ZA.நசீர் அகமத் அவர்களுக்கும் இவ்வேலையை தற்போது விரைவாக முன்னுரிமைப்படுத்தி செயல்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அபிவிருத்தி செயற்திட்ட அமைச்சர் கௌரவ அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கும் நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை மிகக் குறுகிய இரண்டு வருட காலத்துள் மீட்டு கொண்டு வந்து காத்தான்குடி மக்கள் நேரடியாக அபிவிருத்தியில் சுமார் 42 கோடி ரூபா நிதியினை பெற்று வீதி அபிவிருத்தியினை பெற்றுக்கொள்ளும் "இயலுமையை" நமது நாட்டுக்கு பெற்று தந்த அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு இப்பிரதேச மக்கள் எதிர்வரும் 21 ஆம் தேதி தமது நன்றிக்கடனை அளிக்க வேண்டியது எமது மக்களின் கடமையும் விசுவாசமும் ஆகும்.

அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதிகள் தொடர்பான விபரங்கள்

1. அல் அக்சா (முகைதீன் பள்ளி வீதி). அல் அக்சா பள்ளியடியில் தொடங்கி பதுரியா வீதி மஞ்சந்தொடுவாய் தொடுவாய் புதிய பாலமுனை வீதி ஊடாக சென்று பூநொச்சிமுனை பச்சை வீட்டு திட்ட வீதியில் நிறைவுறும் - 2.75Km 13 கோடி 20 லட்சம்
2. டீன் வீதி
காத்தான்குடி பிரதான வீதியில் ஆரம்பித்து நதியா கடற்கரையை அடைந்து கடற்கரை வீதியூடாக சென்று கடற்கரை கொங்கிரீட் வீதியில் நிறைவுறும் - 2.1Km 17 கோடி 80 லட்சம்

3. கர்பலா பாலமுனை வீதி.
டீன் வீதி அலியார் சந்தியில் ஆரம்பித்து கர்பலா வீதி ஊடாக சென்று பாலமுனை சந்தியில் நிறைவுறும் 2.2Km 13 கேடி 80 லட்சம்

4. பெண் சந்தை வீதி /மத்திய வீதி
இதில் பெண் சந்தை வீதி இரண்டாம் குறுக்கு வீதி பஸ் டிப்போ வீதி முகைதீன் பள்ளி மையவாடி வீதி என்பன உள்ளடங்கும் - 1.1Km 5 கோடி 10 லட்சம்

இயலும் ஸ்ரீலங்கா

MY. ஆதம் லெவ்வை
செயலாளர்
அல் பரக்கத் கிராமிய மீனவர் அமைப்பு

https://WeekendPayouts.com/?userid=468426
07/11/2022

https://WeekendPayouts.com/?userid=468426

WeekendPayouts.com - We have been around for years and have thousands of members worldwide. There is no fee to join this website. we paid thousands of dollars in payments to our members every month for their completed tasks.

Help needed !
29/04/2022

Help needed !

காணி விற்பனைக்குகாத்தான்குடி -03 மெத்தைப்பள்ளிவாயலுக்கு அருகில் ஹுதா வீதியில்அமைந்துள்ள ஒரு வீடு கட்டக்கூடியகாணி விற்பனை...
06/04/2022

காணி விற்பனைக்கு

காத்தான்குடி -03 மெத்தைப்பள்ளி
வாயலுக்கு அருகில் ஹுதா வீதியில்
அமைந்துள்ள ஒரு வீடு கட்டக்கூடிய
காணி விற்பனைக்கு உண்டு்.

தொடர்பு -
0755706391

Address


Alerts

Be the first to know and let us send you an email when Kky Newsalert posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share