Dindigul Seithigal - திண்டுக்கல் செய்திகள்

  • Home
  • Dindigul Seithigal - திண்டுக்கல் செய்திகள்

Dindigul Seithigal - திண்டுக்கல் செய்திகள் This page about india cinema news

Diwali Ads / Offer
17/09/2024

Diwali Ads / Offer

Digital Poster IN 365 DaysIncrease Your Business Feedback ReviewsGet Your Card Design : 080126 26222
26/06/2024

Digital Poster IN 365 Days
Increase Your Business Feedback Reviews
Get Your Card Design : 080126 26222

Google Review Card For Your BusinessIncrease Your Business Feedback ReviewsGet Your Card Design : 080126 26222
26/06/2024

Google Review Card For Your Business
Increase Your Business Feedback Reviews
Get Your Card Design : 080126 26222

The most excited   is set to grace the screens on Mar 15th. Get ready to witness an interesting content in Big Screens  ...
02/03/2024

The most excited is set to grace the screens on Mar 15th. Get ready to witness an interesting content in Big Screens



Dir by N.A. Rajendra Chakravarthi

.prabhuthilaak

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தது.ஆந்திர மாநிலம் விசாகப...
30/10/2023

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று இரவு பயணிகள் ரெயில் பாலசாவுக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயில் அலமந்தா - கன்கடப்பள்ளி இடையேயான தண்டவாளத்தில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்தது.அப்போது, அதே தண்டவாளத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசாவின் ராயகடா நோக்கி மற்றொரு பயணிகள் ரெயில் வேகமாக வந்தது. இரு ரெயில்களும் ஒரே தண்டவாளத்தில் பயணித்த நிலையில் வேகமாக வந்த விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரெயில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்த விசாகப்பட்டினம் - பாலசாவு பயணிகள் ரெயில் மீது பின்புறத்தில் இருந்து மோதியது. இந்த கோர விபத்தில் 2 ரெயில்களின் பெட்டிகள் தடம்புரண்டன.இந்நிலையில், இந்த ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 39 பேர் விசாகப்பட்டினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மனித தவறே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ",
#அமராவதி #ஆந்திரா #ரெயில்
News from Dailythanthi.

கேரளாவில் மதவழிபாட்டு கூட்டரங்கில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன.கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் உள்ள...
30/10/2023

கேரளாவில் மதவழிபாட்டு கூட்டரங்கில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் உள்ள ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையத்தில் நேற்று காலை யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கு நடைபெற்றது. இந்த கூட்டரங்கில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.கூட்டரங்கில் காலை 9.45 மணியளவில் பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அரங்கின் மையப்பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதை சற்றும் எதிர்பாராத மக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது சில வினாடிகளில் அரங்கின் பக்கவாட்டு பகுதிகளில் இருந்து மேலும் 2 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதனால் கூட்டரங்கில் தீ பற்றி எரிந்தது. இந்த தொடர் குண்டுவெடிப்பில் சம்பவ இடத்திலேயே லிபினா என்ற பெண் உடல்கருகி உயிரிழந்தார். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் குமாரி என்ற பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.இந்நிலையில், தொடர் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் கேரளா தொடர் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.இந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியதாக திரிச்சூர் மாவட்ட போலீஸ் நிலையத்தில் டொமினிக் மார்டின் என்ற நபர் சரணடைந்துள்ளார். யெகோவாவின் சாட்சிகள் அமைப்பின் செயல்பாடுகள் நாட்டுக்கு ஆபத்தானது மற்றும் இளைய தலைமுறையினர் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் உள்ளதால் இந்த தாக்குதல் நடத்தியதாக டொமினிக் மார்டின் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட மார்டினிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.",
#திருவனந்தபுரம் #கேரள #எர்ணாகுளம் #குண்டு
News From Dailythanthi

தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பசும்பொன் முத்துராமலிங்க தேவரி...
30/10/2023

தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வருகை தந்துள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதையடுத்து மதுரையில் அமையவுள்ள இரண்டு உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் மதுரை தெப்பக்குளம் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்த நிலையில் பசும்பொன் சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.",
#பசும்பொன் #முத்துராமலிங்கதேவர் #முதல்அமைச்சர்

news from Dailythanthi

ஹமூன் புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று...
24/10/2023

ஹமூன் புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும்.புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (25-ந்தேதி) அதிகாலை வங்காளதேசம் டிங்கோனா தீவு-சந்திவிப் இடையே கரையை கடக்கும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 27-ந்தேதி வரை 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.மேலும் தென் கிழக்கு, மத்திய கிழக்கு வங்க கடல், ஒடிசா, மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவித்தது.இந்த சூழலில், ஹமூன் புயல் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்து உள்ளது. இந்த புயல் ஒடிசாவிற்கு கிழக்கு, தென்கிழக்கே 210 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. நாளை நண்பகலில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கதேசத்தில் கெபுரா - சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ",
#ஹமூன் #சென்னை #புயல் #வானிலைஆய்வுமையம்
FROM Dailythanthi

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.86 அடியாக உயர்ந்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-...
24/10/2023

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.86 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை சரிவர பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் குறைந்தது.இதையடுத்து கடந்த 10-ந் தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வாரமாக பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 10-ந் தேதி அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் நீர்வரத்தின் காரணமாக இன்று காலை 48.86 அடியாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. கடந்த 2 வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் 18 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 138 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.",
#மேட்டூர் #டெல்டா #மேட்டூர்அணை
News from Dailythanthi

அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை,இன...
24/10/2023

அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை,இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் என தென்மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில்,தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் திரும்ப வசதியாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகள் இயங்கும். மக்கள் பீதியடைய வேண்டாம். 90 சதவீத பேருந்துகள் எங்கள் சங்கத்தில் உள்ளன. எங்கள் சங்கத்தில் 1.500 பேருந்துகள் உள்ளன. அவை அனைத்தும் இயங்கும். வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
#சென்னை #வேலைநிறுத்தம் #ஆம்னி #பேருந்து

news from Dailythanthi

ஆண்களுக்கான  உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்.ஹாங்சோ, பாரா ஆசிய விளைய...
23/10/2023

ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஹாங்சோ, பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டி தொடரில் இன்று நடைப்பெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர்கள் சைலேஷ் குமார் தங்கப்பதக்கம், மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினர். மேலும், மகளிருக்கான படகுப்போட்டியில் இந்திய வீராங்கனை பிராச்சி யாதவ் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். தற்போது வரை இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் வென்று 7 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. ",
#வெள்ளிப்பதக்கம் #ஆசியவிளையாட்டுபோட்டி
News from Dailythanthi

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணி இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது....
23/10/2023

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணி இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, மற்றொரு ஆசிய அணியான ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும் (நெதர்லாந்து, இலங்கைக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) சந்தித்துள்ளது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 367 ரன்களை வாரி வழங்கிய பாகிஸ்தான், அந்த இலக்கை நோக்கி ஆடிய போது 305 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தந்தும் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் நிலைக்காததால் இலக்கை நெருங்க முடியவில்லை. குறிப்பாக உலகின் 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேனான கேப்டன் பாபர் அசாம் தடுமாறுவது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கிறது. அவர் 4 இன்னிங்சில் வெறும் 83 ரன்களே எடுத்துள்ளார். அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். முகமது ரிஸ்வான் (ஒரு சதம் உள்பட 294 ரன்) மட்டுமே அந்த அணியில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். 'புதிய பாகிஸ்தான் அணி'இதே போல் வேகப்பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி (9 விக்கெட்) வலு சேர்க்கிறார். அதே சமயம் சுழற்பந்து வீச்சில் பலவீனம் தெரிகிறது. கடந்த ஆட்டத்தில் ஷதப் கானுக்கு பதிலாக இடம் பிடித்த சுழற்பந்து வீச்சாளர் உஸ்மா மிர் 9 ஓவரில் 82 ரன்களை விட்டுக்கொடுத்து வள்ளலாக மாறினார். முகமது நவாசும் (2 விக்கெட்) சொதப்புகிறார். சென்னை ஆடுகளம் வேகம் குறைந்தது. சுழற்பந்துவீச்சுக்கு அனுகூலமானது. எனவே சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது முக்கியம். அத்துடன் அரைஇறுதி வாய்ப்பில் சிக்கலின்றி நீடிக்க பாகிஸ்தான் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும்.நேற்று நிருபர்களை சந்தித்த பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் கூறுகையில், 'நாங்கள் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 2-2 என்று இருக்கிறோம். கடைசி இரு ஆட்டங்களில் நாங்கள் நன்றாக ஆடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். குறிப்பிட்ட நாளில் நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதே முக்கியம். அது குறித்து நிறைய பேசியுள்ளோம். நாளை (இன்று) புதிய பாகிஸ்தான் அணியை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். ஆப்கானிஸ்தான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. அதை சமாளிக்கக்கூடிய திறமை எங்களிடம் உண்டு. அண்மையில் ஒரு நாள் தொடரில் அவர்களை 3-0 என்ற கணக்கில் நாங்கள் வீழ்த்தியதை மறந்து விடக்கூடாது. சென்னையில் இருந்து கிளம்பும் போது 4-2 என்று (சென்னையில் நடக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெறும் பட்சத்தில்) இருப்போம் என்று நம்புகிறேன்' என்றார். ஆப்கானிஸ்தான் எப்படி?ஆப்கானிஸ்தான் அணி 4 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் வெற்றியும் (இங்கிலாந்துக்கு எதிராக), 3-ல் தோல்வியும் (வங்காளதேசம், இந்தியா, நியூசிலாந்துக்கு எதிராக) தழுவியுள்ளது. கடந்த ஆட்டத்தில் இதே மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 139 ரன்னில் சுருண்ட ஆப்கானிஸ்தான் சரிவில் இருந்து மீளும் முனைப்புடன் உள்ளது. ஏதுவான இந்த ஆடுகளத்தில் முகமது நபி, முஜீப் ரகுமான், ரஷித்கான் ஆகியோர் சுழல் ஜாலத்தில் மிரட்டினால், இங்கிலாந்தை போன்று பாகிஸ்தானுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்கலாம். இது தான் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கப்போகிறது.ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் நிருபர்களிடம் கூறுகையில், 'பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் என்றாலே தற்போது கடும்போட்டி நிலவுவதால் இது விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும். சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுடன் ஆடிய ஒரு நாள் தொடரில் ஒன்றிரண்டு ஆட்டங்களில் வென்றிருக்க வேண்டியது. நெருங்கி வந்து தோற்றோம். இந்த முறை அவர்களின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவோம் என்று நம்புகிறேன்' என்றார்.சர்வதேச ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகள் இதுவரை 7 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. 7 ஆட்டத்திலும் பாகிஸ்தானே வென்று இருக்கிறது.பிற்பகல் 2 மணிக்கு...போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், அப்துல்லா ஷபிக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், இப்திகர் அகமது, முகமது நவாஸ், ஷதப் கான் அல்லது உஸ்மான் மிர், ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, ஹாரிஸ் ரவுப்.ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், ரமத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், இக்ரம் அலிகில், முகமது நபி, ரஷித்கான், முஜீப் ரகுமான் அல்லது நூர் அகமது, நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.",
#உலகக்கோப்பை #கிரிக்கெட் #சென்னை #பாகிஸ்தான்

Address


Telephone

8012626222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dindigul Seithigal - திண்டுக்கல் செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share