Breaking Erode News

  • Home
  • Breaking Erode News

Breaking Erode News Breaking Erode News provides News, happenings, places to visit, eat and shop in Erode.

31/08/2024

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள திம்பம் மலைப்பகுதி தொடர் மழையால் பச்சை பசுமையாகக் காட்சியளிக்கிறது. சத்தி புலிகள் காப்பகம் திம்பம் மலைப்பாதை கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ளது. தமிழக - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திம்பம் மலை பாதை 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது.

புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான புலி, சிறுத்தை, யானை, மான், காட்டு எருமை உள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகள் வாழ்கின்றன. வனப்பகுதி முழுவதும் அரிய வகை மரங்கள், மூலிகை செடி கொடிகள் உள்ளன. கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மரங்களில் இலைகள் துளிர்த்து வனப்பகுதி பச்சை பசுமையாக மாறிக் காட்சியளிக்கின்றது.

பசுமையான தாவரங்கள் நிறைந்த அழகான மலைகளும், பள்ளத்தாக்குகளும் அங்கு அவ்வப்போது பெய்யும் சாரல் மழையும் அதிகாலை, மாலை நேரங்களில் பனித்துளிகள் விழுவதும் என இதமான சூழல் காணப்படுகிறது. மாலை வேளையில் சொல்ல முடியாத அளவுக்கு அற்புதமான சூழல் நிலவுகிறது. இவ்வளவு இயற்கைகளுக்கும் இடையே வனப்பகுதி வழியாக செல்லும் ரோட்டில் வாகன ஓட்டிகள் பார்த்து ரசித்து செல்வதோடு ஆங்காங்கெ நின்று போட்டோ, செல்பி வீடியோ எடுத்து நண்பர்கள், உறவினர்களுக்கு சோஷியல் மீடியாவில் பரப்பி வருகின்றனர்.

31/08/2024

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புது மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் விவசாய நிலத்தில் கிடந்த தென்னை மட்டைக்குள் நாகப் பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்ததை அங்கிருந்த விவசாயத் தொழிலாளர்கள் கண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பாம்பு பிடி வீரரான செந்தில்குமார் என்பவர் அங்கு விரைந்து வந்து சுமார் 6 அடி நீளமிருந்த அந்த பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் விட்டு விட்டார்

31/08/2024

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2, 50, 000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன,

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வந்தது. இதே போல் மாவட்டத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணையில் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது.

இன்று (ஆக.31) காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3079 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 96. 85 அடியாக உள்ளது குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 650 கன அடி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2300 கன அடி காளிங்கராயன் பாசனத்திற்கு 0 கன அடி என மொத்தம் 3050 கன அடி தண்ணீர் பவானிசாகர் அணையின் திறந்து விடப்பட்டு வருகிறது

31/08/2024

பவானி ஆற்றின் தெற்கு பகுதியில் வறண்டு கிடக்கும் பெருந்துறை, குன்னத்தூர், நம்பியூர், அவிநாசி, அன்னூர், காரமடை பகுதியில் மக்கள் குடிநீர் தேவைக்காகவும், பாசன நிலப்பகுதியை அதிகரிக்கச் செய்யவும் இந்த பகுதியில் வறண்டு கிடக்கும் குளம் குட்டைகளுக்கு தண்ணீர் நிரப்பும் வகையில் அத்திக்கடவு- அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அர்ப்பணித்தார்.

தற்போது இத்திட்டத்தின் கீழ் 1, 045 ஏரி, குளம், குட்டைகளுக்கு பவானி ஆற்றின் உபரி நீர் சென்று கொண்டிருக்கிறது. திட்டத்தை நிறைவேற்ற கடந்த 65 ஆண்டுகளாக பல்வேறு மக்கள் போராட்டங்களையும் சட்டப் போராட்டங்களையும் முன்னெடுத்து பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள், போராடி வந்தன.
இத்திட்டத்தை நிறைவேற்ற போராடியவர்களில் முக்கிய அமைப்பான அத்திக்கடவு- அவினாசி குளம் குட்டைகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் அத்திக்கடவு- அவிநாசி திட்ட இயக்க கூட்டமைப்பு நிர்வாகிகளை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அத்திக்கடவு- அவினாசி குளம் குட்டைகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் டி. கே. பெரியசாமி, ஒருங்கிணைப்பாளர் முருகபூபதி மற்றும் அதன் நிர்வாகிகளை பெருந்துறை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே. பி. சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் பால் சின்னசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

31/08/2024

ஈரோடு மாநகராட்சியில் நேற்று(ஆக.30) மாமன்ற கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக, பிரகாஷ் எம்.பி பங்கேற்றார். அப்போது கவுன்சிலர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

இந்தியாவிலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிக கேன்சர் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. என்னிடம் மருத்துவ பரிந்துரைக்காக வந்த 60 பேரில், 40 பேர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இதில், 2 வயது குழந்தையும் உள்ளது. குறிப்பாக, மாநகராட்சியில் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
ஈரோடு ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்ட பிறகு, ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர் வரும் காலங்களிலாவது, மாநகராட்சியில் வளர்ச்சித் திட்டப்பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான மண்டலத்தலைவர், கவுன்சிலர்களுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் உரிய மரியாதை அளிக்க வேண்டும். வார்டுகளில் நிலவு குறைகளை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் ஒத்துழைத்தால் மட்டுமே, வருகிற 2026 தேர்தலின் போது, கவுன்சிலர்கள் வார்டுகளுக்குள் செல்ல முடியும் என அவர் பேசினார்.

31/08/2024

அறச்சலூர் நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் உடற்கல்வித்துறை சார்பில் தேசிய விளையாட்டு தினம் பாரம்பரிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை கல்லூரியின் தலைவர் தாமோதரன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் கனி எழில் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து விளையாட்டு தினத்தைக் கொண்டாடும் வகையில் தமிழகத்தின் பாராம்பரிய விளையாட்டுகளை ஊக்கும்விக்கும் பொருட்டு, பாண்டி, பல்லாங்குழி, பச்சை குதிரை, தாயம், பம்பரம், கிள்ளித்தாண்டு, கண்ணாம்பூச்சி, சாக்குப்பை, ஆடுபுலி ஆட்டம், குலை குலையா முந்திரிக்காய், பரமபதம், கிச்சுகிச்சு தாம்பலம், கயிறு இழுத்தல், பட்டம் விடுதல், நீர் நிரப்புதல், ராஜாராணி, நொண்டி, சதுரக்கல், அஞ்சாங்கல் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் விளையாடினர். இதில் மாணவிகளும், பேராசிரியர்களும் கலந்து கொண்டு மகிழ்வுடன் விளையாடினர். நிகழ்ச்சியின் இறுதியில் கல்லூரி துணை முதல்வர் சீனிவாசன் நன்றி கூறினார்.

31/08/2024

கொடுமுடி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளை சேர்ந்தவர்களுக்கு மக்களுடன் முதல்வர் முகாம் சிவகிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமிற்கு கொடுமுடி தாசில்தார் பாலமுருகாயி தலைமை தாங்கினார். கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா வரவேற்றார். ஊராட்சித் தலைவர்கள் அஞ்சூர் பிரகாஷ், கொந்தளம் நித்யாதேவி, கொளாநல்லி பேபி செந்தில்குமார், வள்ளிபுரம் கவிதா, கொங்குடையாம்பாளையம் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமை மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி தொடங்கி வைத்து பேசினார். இம்முகாமில் புதிய மின் இணப்பு, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ்கள், சொத்துவரி, குடிநீர் வரி மாற்றங்கள், உதவித்தொகை பெற விண்ணப்பித்தல், சமூகநலன் சார்ந்த பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களை பெற தகுதியானவர்கள் எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் தனித்தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது.

சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத், கொடுமுடி ஒன்றிய கவுன்சிலர் பழனிசாமி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து 248 மனுக்கள் பெறப்பட்டது. சமூக திட்ட தாசில்தார் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

31/08/2024

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 457 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 120.09 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ. 159.99 காசுக்கும், சராசரி விலையாக ரூ. 138.99 காசுக்கும், அதேபோல் சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 110.99 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ. 153.99 காசுக்கும், சராசரி விலையாக ரூ. 136.99 காசுக்கும், வெள்ளை ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 79.99 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ. 150.11 காசுக்கும், சராசரி விலையாக ரூ. 146.39 காசுக்கு ஏலம் போனது. மொத்தம் 34 ஆயிரத்து 121 கிலோ எடையுள்ள எள் ரூ. 47 லட்சத்து 54 ஆயிரத்து 759 ரூபாய்க்கு விற்பனையானது

31/08/2024

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு 86 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 97.69 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ. 105.39 காசுக்கும், சராசரி விலையாக ரூ. 104.39 காசுக்கும். இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ. 79.99 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ. 101.60 காசுக்கும், சராசரி விலையாக ரூ. 88.49 காசுக்கு ஏலம் போனது.
மொத்தமாக 2,811 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ. 2 லட்சத்து 73 ஆயிரத்து 340 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

30/08/2024

ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில், இரவு நேரங்களில் குளிர்ந்த காற்றும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.
நேற்று காலை, சுட்டெரித்த வெயில் மாலை 4 மணிக்குப் பின், வானில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென குளிர்ந்த காற்று வீசியது. மாலை 4. 15 மணியளவில் மிதமான மழை பெய்யத் தொடங்கி 8 மணி வரை நீடித்தது.
மத்திய பஸ் ஸ்டாண்ட், மீனாட்சி சுந்தரனார் சாலை, காந்திஜி ரோடு, பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, ஆர். வி. என் ரோடு, வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேட்டூர் சாலையில் வழக்கம் போல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மழையில் நனைந்தவாறு சென்றனர்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தப்படியும், குடை பிடித்தப்படியும் சென்றனர். மழை காரணமாக தாழ்வான இடங்கள் மற்றும் பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்தனர்.
கனிராவுத்தர் குளத்தில் நேற்று நடந்த வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சிலரே, மழையில் நனைந்தப்படி காய்கறிகளை வாங்கிச் சென்றனர். குறிப்பாக மழை காரணமாக, வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

30/08/2024

சத்தியமங்கலம் பகுதியில் மீன்கள் விற்பனை செய்யும் கடைகளில் சத்தியமங்கலம் நகர உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் மற்றும் மீன்வள ஆய்வாளர் ரமேஷ்பாபு ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் விற்பனைக்கு வைத்து இருந்த சுமார் 3 கிலோ எடையுள்ள கெட்டுப் போன மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

சுகாதாரம் இல்லாமல் விற்பனை செய்த ஒரு கடைக்கு ரூ 1000 ம், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்திய 2 கடைகளுக்கு ரூ. 4000 என மொத்தம் ரூ. 5000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ப்ரஸ் மீன்களை மட்டுமே பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். அழுகிப்போன, கெட்டுப்போன, நோய் வாய்ப்பட்ட மீன்களை விற்பனை செய்யக்கூடாது, கடையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், மீன் கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

30/08/2024

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் சார்பில், சத்தியமங்கலம் கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் உள்ள, பா. சுந்தரம் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா, கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவரும், திமுக பேரூர் கழக செயலாளருமான, கே. ரவிச்சந்திரன்தலைமையில் நடைபெற்றது. விழாவில், முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியர் டி. இளங்கோ வரவேற்புரையாற்றினார். சத்தி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஐ. ஏ. தேவராஜ் மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார். விழாவிற்கு, கெம்பநாயக்கன் பாளையம் பேரூர் கழக துணை செயலாளர் ரஜினி தம்பி முன்னிலை வகித்தார். விழாவில், வார்டு கவுன்சிலர் ஜோதி ரமேஷ், திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் டி நவீன் குமார் மற்றும் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Breaking Erode News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share