Deepam Network

  • Home
  • Deepam Network

Deepam Network www.deepamnetwork.com

Due to its independent editorial stance it became extremely popular in Pondic Today, we are at the dawn of a new millennium.

The Deepam Network was started in 2007 to provide wholesome entertainment for the entire family. With programmes targeted at young and old, male and female alike, the Network has positioned itself as The People's Channel. Through its Two channels – Deepam tv, Neyam New Music (N Tv) the network presents its viewers a smorgasbord of some of the best shows in South Indian entertainment today. Due to

its close interaction with the local market, the Network has come to understand not just the South Indian entertainment industry, but also the needs of the South Indian audience, their culture and aesthetic sense. This understanding when combined with a strong commitment to content development has resulted in a combination of programmes appealing not just to South Indian viewers in urban and rural India but also to those outside India. Any television channel is only as popular as its shows and at the Deepam Network, there is every effort being taken to ensure the audience gets just the right mix of music and dance, entertainment and information, film and fantasy. The Network runs a number of popular serials presented by some of the best names in South Indian films today. These in combination with a number of popular chat shows and game shows give the network an edge with the viewers. In addition the Network has built up a library of some of the best in Tamil And Telungu films from the nostalgic old favourites to the box office hits of today. In today's world, information is the catch word and the Deepam Network has capitalised on the increasing demand for news that is unbiased, timely and accurate. Today, the Network is equipped to give you the news the moment it happens and has often been the first to air the news. But speed while important, has never been at the expense of sensitive and accurate reporting. News and entertainment are more important than they have ever been before. But with the growing competition, it is the people who will choose, who will decide what they want and what they do not. The Deepam Network understands this. A lot of effort is being taken to ensure that the programming mix appeals to people of all ages, of all backgrounds making it truly a People's Channel.

27/10/2025
27/10/2025

📿 காரைக்கால் கந்த சஷ்டி விழா – 5ம் நாள் சிறப்பு! 🌺

பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் ஐந்தாம் நாள் ஆனந்தமாக நடைபெற்றது.

முருகப்பெருமான் சதாசிவம் (மகேஸ்வரர்) அம்சத்தில் சொர்ண வர்ண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 💫
பின்னர் லட்சார்ச்சனை, மகா தீபாராதனை விழாக்கள் நடைபெற்றன.

உற்சவர் வள்ளி, தெய்வானை சமேதராக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பிரகார வலம் வந்தபோது ஏராளமான பக்தர்கள் “வெற்றிவேல் முருகன்” என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். 🔱

🗞️ நாளை 27.10.2025 புதுச்சேரியில் புதிய கட்சி உதயம்! 🇮🇳✨புதுச்சேரி அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது.சட்டமன்ற உறுப...
26/10/2025

🗞️ நாளை 27.10.2025 புதுச்சேரியில் புதிய கட்சி உதயம்! 🇮🇳✨

புதுச்சேரி அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
சட்டமன்ற உறுப்பினர் நேரு (எ) குப்புசாமி அவர்கள் புதிய அரசியல் கட்சியை அறிவிக்கிறார்.

📅 நாள்: திங்கட்கிழமை, 27.10.2025
🕓 நேரம்: மாலை 4.00 மணி
📍 இடம்: அபிராமி ரெசிடென்சி, ராஜா தியேட்டர் அருகில்

இந்த நிகழ்வு புதுவை அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

26/10/2025

📍கரிக்கலாம்பாக்கம்
கரிக்கலாம்பாக்கம் புற காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் தலைமையில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காவல்துறை தலைமையகம் வழிகாட்டுதலின்படி வாரந்தோறும் நடைபெறும் இந்த மக்கள் குறை கேட்பு கூட்டத்தில், மேற்கு காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் முன்னிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் பிரச்சினைகளை முன்வைத்தனர்.

காவல்துறை உயர் அதிகாரிகள் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதில் வில்லியனூர், மங்கலம், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், திருபுவனை, நெட்டப்பாக்கம், மடுகரை உள்ளிட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், குற்றப்பிரிவு காவலர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, கலைவாணன் பொதுமக்களிடம் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினார். மேலும், பொதுமக்களிடமிருந்து முன்பு பெறப்பட்ட புகார்களின் பேரில் 2 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 10-க்கும் மேற்பட்ட தொலைந்த செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களுக்கு நேரில் ஒப்படைக்கப்பட்டன.

#கரிக்கலாம்பாக்கம் #புதுச்சேரிபோலீஸ் #மக்கள்குறைகேட்புக்கூட்டம் ைவாணன் #விழிப்புணர்வு #புதியகுற்றவியல்சட்டம் #புதுச்சேரிசெய்திகள்

26/10/2025

📍திண்டிவனம்
விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை துவங்கியதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்ததால் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை நீர் தேங்கி பல இடங்களில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்தது.

திண்டிவனம் கிடங்கல் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் நாகலாபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் சேதமடைந்தது. அதேபோல் வகாப் நகர், மரக்காணம் சாலை, சென்னை–திருச்சி புறவழிச்சாலை உள்ளிட்ட இடங்களிலும் வெள்ளநீர் புகுந்தது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் டி.எஸ்.பி பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் நேற்று மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்போது, தொடர்ந்து மழை பெய்தால் மழை நீர் வடிகால்களில் சரியாக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என குடியிருப்பு நல சங்கத்தினருடன் ஆலோசனை நடத்தினர். மேலும், மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

#திண்டிவனம் #விழுப்புரம்மாவட்டம் #மழைநீர் #வெள்ளநீர் #முன்னெச்சரிக்கை #விழுப்புரம்போலீஸ் ிரகாஷ் ் #மழைக்காலநடவடிக்கை

https://youtu.be/MdNfLb8V4_w?si=EJoXaW5Zs36sRR0Z
26/10/2025

https://youtu.be/MdNfLb8V4_w?si=EJoXaW5Zs36sRR0Z

DEEPAM NEWS, புதுப்பிக்கப்பட்ட மற்றும் நம்பகமான தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த ஊடகம். உங்கள் தினசரி செய்திகளை எளிதாகப் ....

26/10/2025

அரியாங்குப்பத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – ஒப்பந்த பணியாளர்களுக்கு நிரந்தர பணி, காலியிடங்கள் நிரப்பு, பதவி உயர்வு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல் – குறைந்த பங்கேற்பால் மனவேதனை அடைந்த தலைவர் மயக்கம் – போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர் – சிலநேரம் பரபரப்பு நிலை...

📍அரியாங்குப்பம், அக்.25
புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களும், அகில இந்திய அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சம்மேளத்துடன் இணைந்த புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கமும் இணைந்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட வாயிற் கூட்டம் அரியாங்குப்பம் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை திட்ட அலுவலகம்-3 முன்பு நேற்று மாலை நடைபெற்றது.

✊ முக்கிய கோரிக்கைகள்:
• ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வரும் 175 அங்கன்வாடி பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும்.
• மீதமுள்ள 443 காலி பணியிடங்களை நிரப்ப பணி நியமன அறிவிப்பை மாற்றி அமைக்க வேண்டும்.
• உதவியாளர்களுக்கான ஒர்க்கர் பதவி உயர்வு மற்றும் ஒர்க்கர்களுக்கான மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
• ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அங்கன்வாடி பணியாளர்களுக்கு அமல்படுத்த வேண்டும்.

இந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவி ராஜலட்சுமி தலைமை தாங்கினார். சம்மேளனத் தலைவர் ரவிச்சந்திரன், செயல் தலைவர் ராதாகிருஷ்ணன், பொது செயலாளர் முனுசாமி, அமைப்புச் செயலாளர் சிவஞானம் ஆகியோர் உரையாற்றினர்.

முன்னதாக, திட்டத் தலைவர் மைதிலி தலைமையில் ஊழியர்கள் திரண்டபோது, குறைந்த அளவே பணியாளர்கள் வந்ததால் மனவேதனை அடைந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே போலீசார் அவரை மீட்டு அரியாங்குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பாதுகாப்பு பணியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், ஆறுமுகம், கணபதி மற்றும் பெண் போலீசார் ஏராளமானோர் ஈடுபட்டனர்.

#அரியாங்குப்பம் #அங்கன்வாடிஊழியர்கள் #புதுச்சேரி #கண்டனஆர்ப்பாட்டம் #அங்கன்வாடிசங்கம் #புதுச்சேரிஅரசுஊழியர்கள்

25/10/2025

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரிப்பு — காரைக்கால் போராளிகள் குழு கவலை

காரைக்கால் மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் தொடர்ந்து சாலை விபத்துக்கள் நடைபெறுவதால் மக்கள் உயிர் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், நகராட்சி, காவல்துறை ஆகியவை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் போராளிகள் குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற காவல்துறையின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், குழுவின் தலைவர் வழக்கறிஞர் கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டு, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களைச் சந்தித்து மனு அளித்தனர்.

🔸 சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து பராமரிக்கும் செலவை குழுவே ஏற்றுக்கொள்ளும் எனவும்,
🔸 விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் மாடுகளின் கழுத்தில் ரிப்ளெக்டிங் ஸ்டிக்கர்கள் பொருத்தப்படும் எனவும்,
வழக்கறிஞர் கணேஷ் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, “மாவட்ட காவல்துறை இதை கவனித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும்” என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

24/10/2025

உருளையன்பேட்டை தொகுதியில் குப்பை அகற்றம் பிரச்சனை தீவிரம் — நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ நேரு (எ) குப்புசாமி தலைமையிலான போராட்டம்!

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை நாளிலிருந்து இன்று வரை நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைகள் சரிவர அகற்றப்படாததால், பல இடங்களில் குப்பைகள் தேங்கியுள்ளன. இதனால் மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையை கண்டித்து, உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவன தலைவருமான நேரு (எ) குப்புசாமி தலைமையில், புதுச்சேரி உள்ளாட்சித் துறை தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் “குப்பை அகற்றம் செய்யுங்கள் – மக்களின் சுகாதாரத்தை காக்குங்கள்” என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் நேரு, பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பது நகராட்சி நிர்வாகத்தின் கடமை என்றும், உடனடியாக குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் தீவிரமான போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.

#புதுச்சேரி #உருளையன்பேட்டை #நேரு_குப்புசாமி #மனிதநேயமக்கள்சேவையியக்கம் #முற்றுகைப்போராட்டம் #நகராட்சிநிர்வாகம் #குப்பைஅகற்றம் #சுகாதாரம்

23/10/2025

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 25 மின்சார பேருந்துகள் – ரூ.4 கோடி மதிப்பில் சார்ஜிங் ஸ்டேஷன், மகளிர் சுயஉதவி குழுவிற்கு 38 எலக்ட்ரிக் ஆட்டோக்கள், 15 புதிய பேருந்து நிறுத்தங்கள் – அக்டோபர் 24 முதல் சேவை தொடக்கம்! ⚡🚌

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் 25 மின்சார பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.4 கோடி மதிப்பில் சார்ஜிங் ஸ்டேஷன் மறைமலையடிகள் சாலையில் தாவரவியல் பூங்கா எதிரில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மின்சார பேருந்துகளின் முதலீடு, பராமரிப்பு, இயக்கம் ஆகியவை தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன. ஆனால், டிக்கெட் வசூல் பணியை புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் மேற்கொள்வார்கள்.

புதிய மின்சார பேருந்து சேவை அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் நகராட்சி சார்பில் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு 38 எலக்ட்ரிக் ஆட்டோக்கள் வழங்கப்படுவதோடு, 15 புதிய பேருந்து நிறுத்தங்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளன.

இந்த திட்டம் புதுச்சேரியின் போக்குவரத்து அமைப்பை நவீனமாகவும் சுற்றுச்சூழல் நட்பாகவும் மாற்றும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

22/10/2025

🌧️ புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி – சட்டமன்ற உறுப்பினர் நேரு @ குப்புசாமி உடன் இரவு நேர வெள்ள ஆய்வு 🌧️

21.10.2025 அன்று இரவு 11.30 மணியளவில் பெய்த கனமழையால், புதுச்சேரி உப்பனார் வாய்க்காலை பார்வையிட வந்தார் சட்டமன்ற உறுப்பினர் நேரு @ குப்புசாமி அவர்கள்.

அந்த நேரத்தில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்திருந்த புதுச்சேரி மாண்புமிகு முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி அவர்கள், சட்டமன்ற உறுப்பினரிடம் உப்பனார் வாய்க்காலை நிலைமை மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து விசாரித்தார்.

மேலும், இரவு நேர வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சட்டமன்ற உறுப்பினருடன் உருளையன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் மற்றும் காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ் ஆகியோரும் இணைந்து, அருகிலுள்ள பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் பாதிப்பு நிலைகளை நேரில் ஆய்வு செய்தனர்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

22/10/2025

🌧️ புதுச்சேரியில் கனமழையால் முன்னெச்சரிக்கை ஆய்வு – சட்டமன்ற உறுப்பினர் நேரு @ குப்புசாமி தலைமையில் இரவு நேர கண்காணிப்பு 🌧️

21.10.2025 அன்று இரவு 11.30 மணியளவில் பெய்த கனமழையால், புதுச்சேரி உப்பனார் வாய்க்காலை நேரில் பார்வையிட்டார் சட்டமன்ற உறுப்பினர் நேரு @ குப்புசாமி அவர்கள்.

வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவருடன் உருளையன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் மற்றும் காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ் ஆகியோரும் இணைந்து, அருகிலுள்ள பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் பாதிப்பு நிலையை ஆய்வு செய்தனர்.

மழை காரணமாக மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் அறிவுறுத்தினார்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Deepam Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share